அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Sunday, February 19, 2012

பாபா ராம்தேவ் மீது பா.ஜ.க உறுப்பினர் கறுப்பு மை வீச்சு!

வெளிநாடுகளில்  பதுக்கி வைக்கப்பட்டு இருக்கும் இந்தியர்களின் கறுப்புப்பணம் மற்றும் ஊழல் எதிர்ப்பு' குறித்து டெல்லியில் நேற்று யோகாகுரு பாபா ராம்தேவ் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
இந்த செய்தியாளர் சந்திப்பு  முடிவடையும் தருணத்தில், திடீரென எதிர்பாராதவிதமாக அங்கு இருந்த நபர் ஒருவர் பாபா ராம்தேவ் முகத்தில் கறுப்பு மை-யை வீசினார்.


உடனடியாக, ராம்தேவ் ஆதரவாளர்கள் சிலர், ராம்தேவ் முகத்தில் `மை' வீசியவரை பிடித்து, அடித்துத் தாக்கினர். இதில் காயம் அடைந்த அந்த நபர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

'ரியல் காஸ்' என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்திவரும் காம்ரன் சித்திக் என்பது அவர் பெயராகும்.  இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்  என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்தச் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமியும் கலந்து கொண்டார்.

No comments: