அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, August 15, 2012

நோக்கியாவின் ஆஷா 305!!

இரண்டு சிம் இயக்கத்துடன் கூடிய ஆஷா வரிசையில், நோக்கியா ஆஷா 305 மாடல் போனை அண்மையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. நோக்கியா ஸ்டோரில் இதன் அதிக பட்ச விலை ரூ.4,668. 240 x 400 பிக்ஸெல் திறனுடன் கூடிய டிஸ்பிளே தரும் 3 அங்குல திரை, ரெசிஸ்டிவ் டச் ஸ்கிரீனாக உள்ளது.

46 மாடிகள் கொண்ட தென் இந்தியாவின் மிக உயர அபார்ட்மெண்ட்

பெங்களூரு: 46 மாடிகள் கொண்ட, தென் இந்தியாவிலேயே மிக உயரமான அபார்ட்மெண்ட் பெங்களூரில் கட்டப்பட்டு வருகிறது. பண்ணரகட்டா சாலையில் மீனாட்சி மால் கட்டடத்துக்கு அருகே கட்டப்படும் இந்தக் கட்டடம் தான் தென் இந்தியாவிலேயே மிக உயரமான வசிப்பிடமாகும். மந்த்ரி பினாக்கிள் என்ற இந்த கட்டடத்தில் ஒவ்வொரு அபார்ட்மெண்டும் 3 மாடிகளைக் கொண்டதாக இருக்குமாம்.

யாருக்கு சுதந்திரம்?



யாருக்கு சுதந்திரம்
66-வது சுதந்திர தினத்தை நமது தேசம் கொண்டாடி முடித்து இருக்கிறது. ஆங்கிலேயர்கள் நமது தேசத்தின் மீதான ஆக்கிரமிப்பை விட்டொழித்துவிட்டு சென்ற பிறகு நாம் ஏராளமானவற்றில் முன்னேறியிருக்கிறோம். சாதனைகள் நமது சுதந்திரத்திற்கு புகழ் சேர்க்கும் என்பதில் ஐயமில்லை. சுதந்திரத்தை விட மதிப்பான வேறெதுவும் இவ்வுலகில் மனிதனுக்கு இல்லை எனலாம்.
“சாரே ஜஹான்சே அச்சாஹ், ஹிந்துஸ்தான் ஹமாரா
ஹம் புல்புலேன் இஸ்கி, ஏ குல்ஸிதான் ஹமாரா…”
“பரந்த உலகில் சிறந்தது எங்கள் இந்தியா
இந்திய பூந்தோட்டத்தின் பறவைகள் நாங்கள்
அதன் மணமும் குணமும் எங்கள் உயிர் மூச்சு…..”

ஜனநாயக அமைப்புகள் மீதான தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது – குடியரசு தலைவர் உரை!



President, Pranab Mukherjee addressing the Nation on the eve of 66th Independence Day, in New Delhi on 14 August 2012
புதுடெல்லி:ஜனநாயக அமைப்புகள் மீதான தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், பாராளுமன்றம்தான் தேச மக்களின் ஆன்மா என்றும் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தனது சுதந்திர தின செய்தியில் தெரிவித்துள்ளார்.
இந்திய நாட்டின் 66-வது சுதந்திர தினத்தையொட்டி குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பது: ஊழலுக்கு எதிராகக் கோபம் கொள்வதும், போராட்டம் நடத்துவதும் நியாயமானதுதான்.
ஆனால், இந்தப் போராட்டங்களின் போது சில சமயங்களில் மக்கள் தங்கள் பொறுமையை இழந்து விடுகின்றனர். ஆனால், அதற்காக ஜனநாயக அமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

Friday, April 13, 2012

கல்வி உரிமைச் சட்டம் – மத்திய அரசு முடிவு சரியே: உச்சநீதிமன்றம்!


right_education11
புதுடெல்லி:மத்திய அரசின் கல்வி உரிமைச் சட்டம் சரியே என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால், அரசு உதவி பெறாத சிறுபான்மை பள்ளி நிறுவனங்களுக்கு இந்த சட்டம் பொருந்தாது என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.

கே.ஆர். ஸ்ரீதர்

அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்.

கே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது.

இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு,
அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர்.

Tuesday, April 10, 2012

ஆர்.எஸ்.எஸ் ற்கும் மொஸாதிற்கும் உள்ள கள்ள தொடர்பு!


காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதில் அவர் ஹேமந்த் கர்க்கரே 26/11 அன்று கொல்லப்பட்ட சம்பவத்தை பற்றிய சில குறிப்புகளை வெளியிட்டார். ஹேமந்த கர்கரே கொல்லப்படுவதற்கு முன் பாகிஸ்தான் தீவிரவாதிகளிடமிருந்தோ அல்லது இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினரிடமிருந்தோ எந்த மிரட்டலுக்கு ஆளாக்கப்படவில்லை மாறாக ஆர்.எஸ்.எஸ்ஸால் நடத்தப்படும் ஹிந்துத்துவ தீவிரவாதிகளிடமிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளார்.

Sunday, April 8, 2012

பேராசிரியர் ஹாஃபிஸ் ஸயீதின் தலைக்கு அமெரிக்கா பரிசு அறிவிப்பு: பாகிஸ்தானை உலுக்கிய கண்டனப் பேரணி!


Hafiz Saeed's supporters rally against US bounty
இஸ்லாமாபாத்:ஜமாஅத்து தஃவா அமைப்பின் தலைவர் பேராசிரியர் ஹாஃபிஸ் ஸயீதின் தலைக்கு ஒரு கோடி டாலர்(ரூ.50 கோடி) பரிசு அறிவித்துள்ள அமெரிக்காவின் அடாவடியை கண்டித்து பாகிஸ்தான் நகரங்களில் நடந்த பேரணியில் மக்கள் வெள்ளம் கரை புரண்டோடியது.

நிரபராதிகளான முஸ்லிம் இளைஞர்களை உ.பி அரசு விடுதலை செய்கிறது!


Sajjadur Rehman, Khalid Mujahid and Tariq Qasmi being taken to the court
புதுடெல்லி:தீவிரவாத முத்திரைக் குத்தி உத்தரபிரதேச சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள நிரபராதிகளான முஸ்லிம் இளைஞர்களின் விடுதலை சாத்தியமாகிறது.

விளைகின்ற நிலமெல்லாம், விலைபோகுது இங்கு!!!

விளைகின்ற நிலமெல்லாம்,
விலைபோகுது இங்கு !வெளிநாட்டில் ,
விதைக்கவே அடுக்குநிலம் !