அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, February 11, 2011

பாப்புலர் ஃப்ரண்ட்டுக்கு நஷ்டஈடு வழங்கிய கர்நாடக உயர் நீதிமன்றம்.

பெங்களூர்,பிப்.11:கடந்த 2009 ஜூலை மாதம் மைசூரில் நடந்த அசம்பாவித சம்பவத்திற்க்காக சட்டத்திற்க்கு புறம்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர்களை கைது செய்தமைக்காக கர்நாடாக உயர் நீதிமன்றம் ரூபாய் ஐம்பதாயிரத்தை நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.

இப்படி சட்டத்திற்கு புறம்பாக காவல்துறை அதிகாரிகள் நடந்து கொள்வதை ஒரு போதும் நீதிமன்றம் அனுமதிக்காது ஆகையால் இந்த செயலில் ஈடுபட்ட காவல்துறையினரிடமிருந்தே இந்த தொகை வசூலிக்கப்படும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவைச் சேர்ந்த முஹம்மது வசீம் மற்றும் 164 நபர்கள் கர்நாடகா அரசாங்கத்தின் அராஜபோக்கை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர். அதில் அவர்களுக்கு ரூபாய் 10 லட்சத்தை அரசாங்கம் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.எஸ். பாட்டீல் மேற்கூறியவாரு தீர்ப்பளித்தார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆளும் பா.ஜ.க அரசாங்கத்தின் அராஜக போக்கை கண்டித்து சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்த இருந்தனர். ஆனால் காவல்துறையினரோ கண்மூடித்தனமாக தாக்குதலில் ஈடுபட்டு குழுமியிருந்த நூற்றுக்கணக்கான பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பல நபர்களை பெல்ஜியன் நகரில் உள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். இந்த விசாரணை கர்நாடகா உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் மஞ்சுளா செல்லூர் மற்றும் ஜாவித் ரஹீம் ஆகிய இருவர் முன்பு கொண்டுவரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் இருவரும் கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என தீர்ப்பளித்தனர். கைது நடவடிக்கையின் போது சட்டத்தை மீறி செயல்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.

மைசூரில் ஏற்ப்பட்ட சிறு பிரச்சனையை பெரிதாக்கி அதன் மூலம் சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் ஈடுபட்ட சங்கபரிவார கும்பல்களின் அட்டூழியத்தை எதிர்த்த பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்தது. இதை எதிர்த்து ஜனநாயக ரீதியில் போராடிய முஸ்லிம்கள் மீதும் அப்பாவி பொதுமக்கள் மீதும் தடியடி நடத்தி அராஜக போக்கை காவல்துறையினர் கையாண்டு உண்மை குற்றவாளிகளை வலம்வரவிட்டனர்.

ஜூலை 10 ஆம் தேதி வரை இருநூறுக்கும் மேற்ப்பட்ட அப்பாவிகளை கைது செய்தது காவல்துறை.

Source:popular front.

விடுதலைப் போராட்டத்தின் விழுமியங்கள்!

"வீடுகளிலிருந்தும், மக்களிலிருந்தும் அகற்றப்பட்டவர்கள் நாங்கள். இறைமார்க்கத்தில் யுத்தம் புரியாமலிருக்க எங்களுக்கு இனி என்ன நியாயமுள்ளது?"

ஊர்க்காரர்களின் பிரதிநிதிகள் ஷம்வீல்(சாமுவேல்) என்ற இறைத்தூதரிடம் கேட்ட கேள்விதான் இது.

தங்கள் நாட்டைக் கைப்பற்றி அக்கிரமங்கள் புரியும் ஜாலூத் (கோலியாத்) என்ற அரசனுக்கெதிராக உதவி தேடி வந்தவர்கள் இவர்கள். ஆக்கிரமிப்பாளர்களுக்கெதிராகப் போர் புரிய அவர்கள் தயாராக இருந்தார்கள்.

ஆனால் விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை தாங்குவதற்கு அனைவருக்கும் பொதுவான ஓர் ஆள் வேண்டும். இறைத் தூதர்கள்தான் பொதுவாக இஸ்ரவேலர்களுக்கு தலைவர்கள். ஆனால் இறைத்தூதர் ஷம்வீல் வயதானவராக இருந்தார்.

அவருக்கு ஆண் குழந்தைகளுமில்லை. இந்தக் குறையைப் போக்க வல்ல இறைவனிடம் இறைஞ்சும்படி ஊர்க்காரர்கள் இறைத்தூதர் ஷம்வீலிடம் கோரினர். இஸ்ரவேலர்களின் பரஸ்பர துவேஷத்தையும், ஒற்றுமையின்மையையும் நன்கறிந்திருந்த ஷம்வீல் அவர்களிடம் இவ்வாறு கேட்டார்:

"அல்லாஹ் உங்களுக்கு ஒரு தலைவரை நியமித்து, அவர் உங்களைப் போர் புரிய அழைத்தால் நீங்கள் அதற்கு தயாராகாமல் இருப்பீர்களா?"

இது கேட்டு இஸ்ரவேலர்கள் கொதித்தனர். கொடுங்கோன்மை அரசன் ஜாலூத்தின் கொடுமைகளுக்குப் பலியாகி குடும்பங்களும், சொத்துகளும் அழிந்துவிட்ட தங்களிடம் இனி இழப்பதற்கு ஒன்றும் இல்லை, அச்சப்படவும் ஒன்றும் இல்லை என்று அவர்கள் பதிலளித்தனர்.

ஊர்க்காரர்களின் இந்த ஆவேசத்தை அங்கீகரித்தே ஆக வேண்டிய சூழ்நிலை இறைத்தூதர் ஷம்வீலுக்கு ஏற்பட்டது. அவர்கள் செய்த பிரார்த்தனையின் பலனாய் தாலூத் என்பவரை அல்லாஹ் இஸ்ரவேலர்களுக்கு தலைவராக நியமித்தான்.

ஆனால் இதனை ஜீரணிக்க முடியாமல் இஸ்ரவேலர்கள் திணறினார்கள். தங்களுக்குள்ளேயே ஏகப்பட்ட தலைவர்களும், சமுதாயப் பிரமுகர்களும் இருக்க ஒன்றுமில்லா தாலூத்தைப் போய் அல்லாஹ் நமக்குத் தலைவராக ஆக்கியிருக்கின்றானே என்று அவர்கள் அதிருப்தியுற்றனர்.

அறிவிலும், பலத்திலும் முன்னில் நிற்பவர்தான் தாலூத் என்று அவர்களுக்கு விளக்கம் தரப்பட்டது. ஊர்க்காரர்களுக்குத் தெளிவு படுத்தும் விதமாக வேறு சில ஆதாரங்களையும் தாலூத்திற்கு அனுகூலமாக இறைத்தூதர் ஷம்வீல் கொண்டுவந்தார்கள்.

இருந்தாலும் சிலர் நக்கல் அடித்துக்கொண்டிருந்தனர். தன்னை அங்கீகரித்தவர்களை ஒருங்கிணைத்து தாலூத் ஜாலூத்தை எதிர்த்துப் போரிடப் புறப்பட்டார். மிக நீண்ட தூரம் பயணித்தது அந்தப் படை.

வழியில் ஒரு நதி குறுக்கிட்டது. அந்தச் சமயம் அவர்களின் குணநலன்கள் சோதிக்கப்பட்டன. நதியில் யாரும் தண்ணீர் குடிக்கக் கூடாது என்பது கட்டளை. பொறுக்க முடியாத தாகம் உள்ளவர்கள் ஒரு கையளவு மட்டும் நீர் அருந்தலாம். அதற்கு மேல் ஒரு சொட்டு நீர் கூட அருந்தக் கூடாது. இதுதான் சோதனை.

பெரும்பாலானவர்கள் இந்தச் சோதனையில் தோற்றுப் போயினர். மீதியுள்ளவர்களை மட்டும் அழைத்துக்கொண்டு தாலூத் ஜாலூத்துடன் போர் புரிய புறப்பட்டார்.

ஜாலூத்திடம் ஒரு பெரிய படை இருந்தது. பலஹீனமான மிகச் சொற்ப நபர்களுடன் தாலூத் மறுபக்கம். உறுதியான இறைநம்பிக்கையும், இறையுதவியும்தான் அவர்களின் முக்கிய ஆயுதங்கள்.

ஜாலூத்தின் பெரும் படையைப் பார்த்ததும் அந்தச் சொற்ப நபர்களிலும் சிலர் நம்பிக்கையிழந்து நின்றனர். "ஜாலூத்துடன் போரிடுவதற்கு நமக்குப் பலம் போதாது" என்று அவர்கள் கூறினர்.

ஆனால் இறைநம்பிக்கையில் உறுதியுடன் இருந்த மீதி நபர்கள் இவ்வாறு பதிலளித்தார்கள்: "எத்தனையோ சிறு படைகள் வல்ல இறைவனின் உதவியால் எத்தனையோ பெரும் படைகளை வெற்றி கொண்டிருக்கின்றன. நிலைகுலையாமல் கால்களை உறுதிப்படுத்தி நிற்பவர்களுடன் அல்லாஹ் இருக்கிறான்."

தீமைக்கெதிராக யுத்தம் புரிபவருக்கு அடிப்படைப் பாடத்தைக் கற்பித்துத் தரும் வகையில் அருள்மறை இந்த நிகழ்வைக் கூறிக் காட்டுகிறது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கெதிரான விடுதலைப் போராட்டம் இறைமார்க்கத்தில் நடத்தப்படும் போராக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட விடுதலைப் போராட்டங்கள் சமமான இரு படைகளுக்கிடையில் நடந்ததாக சரித்திரத்தில் நாம் எங்கும் காண முடியாது. மாறாக, பலஹீனமான சமூகங்கள் எத்தனையோ பலமான சமூகங்களைப் போராடி வெற்றி கொண்ட நிகழ்வுகள்தான் வரலாறு நெடுகிலும் வாகாய் மின்னிக்கொண்டிருக்கின்றன.

நன்றி : தேஜஸ் மலையாள நாளிதழ்

ஆர்.எஸ்.எஸ் ற்கும் மொஸாதிற்கும் உள்ள தொடர்பு!

கடந்த ஜனவரி மாதம் 14ஆம் தேதி அன்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதில் அவர் ஹேமந்த் கர்க்கரே 26/11 அன்று கொல்லப்பட்ட சம்பவத்தை பற்றிய சில குறிப்புகளை வெளியிட்டார். ஹேமந்த கர்கரே கொல்லப்படுவதற்கு முன் பாகிஸ்தான் தீவிரவாதிகளிடமிருந்தோ அல்லது இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினரிடமிருந்தோ எந்த மிரட்டலுக்கு ஆளாக்கப்படவில்லை மாறாக ஆர்.எஸ்.எஸ்ஸால் நடத்தப்படும் ஹிந்துத்துவ தீவிரவாதிகளிடமிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளார்.
இங்கே யார் மும்பை தாக்குதலை நடத்தினார்கள்? என்பதோ, அல்லது யார் கர்கரேயை கொன்றார்கள்? என்பதோ கேள்வி அல்ல, மாறாக பாகிஸ்தான் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில், ஹிந்துத்துவ தீவிரவாதத்தை அம்பலப்படுத்திய கர்கரே ஏன் கொலை செய்யப்பட்டார்? என்பது தான் கேள்வி.
பாட்லா ஹவுஸ் எண்கவுண்டர் விவகாரத்தில் ஆஜம்கரிலிருந்து பல அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீதி பொய் வழக்கு போட்ட வழக்கை விசாரித்த கர்கரே கைது செய்யப்பட்ட முஸ்லிம்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபித்தார். 26 ஜூலை 2008 முதல் 26 நவம்பர் 2008 வரை இந்தியாவில் நடந்த அனைத்து தீவிரவாத செயல்களிலும் ஆர்.எஸ்.எஸின் பங்கு உள்ளதை வெளிப்படுத்தியதற்காக கர்கரேயை கொலை செய்ய அவர்கள் முடிவெடுத்திருக்கலாம் என்று தெரிகிறது. அதே போன்று ஆர்.எஸ்.எஸ் இந்திய சுதந்திர போராட்டத்தை எதிர்த்தது. அதனுடைய சித்தாந்த கொள்கையும் அதனால் ஏற்படுத்தப்பட்ட பல முன்னனி அமைப்புகளின் உறுப்பினர்கள் தான் தேசப்பிதா மஹாத்மா காந்தியை கொலை செய்ய தூண்டியது. இந்தியாவின் சுதந்திரத்திற்கு பின் நேருவின் பாராளுமன்ற ஜனநாயகத்தை எதிர்த்தும், அம்பேத்கரின் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை எதிர்த்தும் மேலும் இந்தியாவில் முஸ்லிம்களுக்கெதிராக நடந்த இனக்கலவரம், தலித் மக்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கெல்லாம் முக்கிய காரணமாக ஆர்.எஸ்.எஸ் விளங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்.எஸ்.எஸ் வெறியர்கள் இந்திய அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடினார்கள்.
ஜவஹர்லால் நேரு தன்னுடைய ஆட்சி காலத்தில் ஆர்.எஸ்.எஸ்யை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கினார். ஒரு சமயம் டெல்லியில் அவர்கள் ஒரு கலவரத்தை ஏற்படுத்திய சமயத்தில் ஆர்.எஸ்.எஸ் கும்பல் மீது லத்தி சார்ஜ் தொடுத்து அவர்களை அடக்கினார்.
திக்விஜய்சிங்
அதே போன்று இந்திராகாந்தியும் தனது ஆட்சிகாலத்தில் இவர்களால் ஏற்பட்ட பல பிரச்சனைகளை முறையாக கையாண்டார். இவர்கள் சட்டபுரம்பாக உருவாக்கிய பல கட்டிடங்களை இடித்து தரைமட்டமாக்கினார் அதில் பனாரஸ் ஹிந்து பல்கழைக்கழகமும் அடங்கும்.

கடந்த ஜனவரி மாதம் 4ஆம் தேதி அன்று திக்விஜய்சிங் சி.என்.என் ஐ.பி,என் தொலைக்காட்சியில் பேட்டி ஒன்று அளித்தார். அவரை பேட்டி எடுத்த ராஜ்தீப் சர்தேசி வெளிப்படையாகவே ஆர்.எஸ்.எஸ் காரர்களுக்கு ஆதரவாக பேசினார். மேலும் திக்விஜய்சிங் பாகிஸ்தானிற்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று அவர் மீது குற்றம் சுமத்தினார். இதன் மூலம் ராஜ்தீப் தான் ஒரு பார்பனிய பத்திரிக்கையாளன் என்பதையும், தான் ஒரு ஆர்.எஸ்.எஸ்ன் அபிமானி என்பதை நிரூபித்துள்ளார்.

சி.என்.என் தொலைக்காட்சியில் பேட்டி எடுக்கும்போது மும்பை தாக்குதலில் ஆர்.எஸ்.எஸ் ற்கு தொடர்பு உண்டு என்று புத்தகம் ஒன்றை எழுதியதற்காக‌ அஜீஸ் புர்னேயை குற்றவாளி என்று ஒதுக்கி அவரை நாடு கடத்தவேண்டும் என்று வெளிப்படையாக தன்னுடைய பார்பன வெறிக்கொள்கையை வெளிப்படுத்தினார்.

தொலைக்காட்சியில் திக்விஜய்சிங்கை பேட்டி எடுக்கும்போது கர்கரே தன்னுடைய நண்பர்தான் என்று ராஜ்தீப் கூறினார். மும்பை தாக்குதலுக்கு பின் ராஜ்தீபை நேரடியாக சந்தித்து தாக்குதலைப்பற்றிப் பேசும்போது வழக்கமாக குற்றவாளியாக கைது செய்யப்பட்ட கஸாப் தான் காரணம் என்றும் ராகேஷ் மரியா கொடுத்த விசாரணை அறிக்கையின் மீது முழு நம்பிக்கை வைத்திருப்பதாகவும் அவர் கூறினார். ஆனால் இந்த ராகேஷ் மரியா என்பவர் யார்? என்று பார்த்தால் இஸ்ரேலிய உளவுப் பிரிவாம மொஸாத்தின் உழவாளியாக இருக்கலாம் என்ற சந்தேகப்படுபவர் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
பிரதீப் கவுஸல் என்பவர் கூறும்போது ஆர்.எஸ்.எஸ் உருவாக்கிய அதன் துணை அமைப்புகளை கட்டுப்படுத்த தவறிவிட்டது என்றும், அவர்களுக்கும் மொஸாத்திற்க்கும் ரகசிய தொடர்பு உண்டு என்பதையும் வெளிப்படையாக தெரிகிறது. பாகிஸ்தானிலும், ஆஃப்கானிஸ்தானிலும் மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் செயல்பட்டுவரும் அனைத்து ஜிஹாதிய அமைப்புகளும் மொஸாத் மற்றும் சி.ஐ.ஏ வினால் உருவாக்கப்பட்ட அமைப்புகள்தான் என்பதை நன்கு நினைவில் கொள்ளவேண்டும். சமீபத்தில் யேமன் நாட்டில் உள்ள ஒரு அமைப்பிற்க்கும் மொஸாத்திற்க்கும் தொடர்பு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது.

நான் ஒரு பிராமணன், மேலும் நான் ஹிந்து மதத்தை பின்பற்றக்கூடிய பக்தன் இருந்தும் நான் திக்விஜய்சிங்கின் கூற்றிற்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன். எல்லா தீவிரவாத அமைப்புகளைக்காட்டிலும் ஆர்.எஸ்.எஸ் இந்தியாவிற்க்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்க்குகிறது. மேலும் ஆர்.எஸ்.எஸ் கும் மொஸாதிற்க்கும் நெருங்கிய தொடர்பு உண்டு, மொஸாத் அமைப்போ இந்தியாவின் அழிவை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது

ராஜ்தீப்
, ஆனால் நான் ஒன்றை தெளிவாக கூற முடியும் அது என்னவென்றால் இந்தியாவில் வாழக்கூடிய கோடிக்கணக்கான் ஹிந்துக்கள் ஆர்.எஸ்.எஸ் என்ற அரக்கணை இல்லாமல் ஆக்க துணையாக இருப்பார்கள் என்று பிரதீப் கவுஸல் கூறினார்.

நன்றி: மில்லிகெஜட்

ஷொராபுதீன் ஷேக் போலி எண்கவுன்ட்டர் ரிப்போர்ட்!

புது டெல்லி: குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியை கொல்ல வந்ததாக கூறி ஷொராபுதீன் என்ற வாலிபர் சில வருடங்களுக்கு முன்னால் சுட்டுக்கொல்லப்பட்டார். அது போலியான என்கவுண்டர் என்ற உண்மை ஏற்க்கனவே வெளிவந்த நிலையில் இன்று அவருடைய பிரேத பரிசோதனை அறிக்கையை ஆர்.டி.ஐ வெளியிட்டுள்ளது. அவருடையை உடம்பில் 5 முறை குண்டு துளைக்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதில் 1 முறை அவரது மூளையிலும், 3 முறை கால்களிலும், மீதி ஒரு முறை உடம்பின் மேற்பகுதியிலும் துளைத்தது என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதிலே தலையில் சுடப்பட்டதால், குண்டு மூளையை துளைத்து பிடறி வழியாக வெளியேறியுள்ளது.
ஆர்.டி.ஐ யில் பணிபுரியும் அஃப்ரோஸ் ஆலம் ஷாஹில் என்பவர் இந்த பிரேத பரிசோதனை அறிக்கையை வெளியிட்டார். ஷொராபுதீன் மற்றும் அவரது மனைவி கவுஸர்பீ-யின் கொலை வழக்கில் எத்தனையோ கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் இக்கொலைக்குற்றத்தின் முக்கிய ஆவணாமாக கருதப்படும் பிரேத பரிசோதனை அறிக்கை முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ளது.
பீ.ஜே மருத்துவக்கல்லூரி, மற்றும் அகமதாபாதில் உள்ள சிவில் மருத்துவமனையைச்சேர்ந்த 5 மருத்துவர்கள் கொண்ட குழுவால் ஷொராபுதீனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. கடந்த வருடம் நவம்பர் மாதம் 26ஆம் தேதி மாலை 4.00 மணி அளவில் பரிசோதனை தொடங்கியதாக மருத்துவர் குழு தெரிவிக்கிறது. அம்மருத்துவர்கள் கூறும்போது ஷொராபுதீன் அவர்கள் பரிசோதனை செய்யபட்ட நேரத்திலிருந்து சமார் 12 மணி நேரத்திற்க்கு முன்பாகவே கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றனர்.
பிரேத பரிசோதனை அறிக்கை கூறும் மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், ஷொராபுதீன் மிக அருகாமையில் இருந்துதான் சடப்பட்டுள்ளார் என்றும், அப்படி சுடப்பட்டபொழுது அவர் படுத்து இருந்த நிலையிலோ அல்லது குனிந்து இருந்த நிலையிலோ இருந்திருக்கலாம் என்று கூறுகிறது. ஆனால் காவல் துறையின் அறிக்கையோ ஷொராபுதீன் தப்பி ஓட முயன்ற பொழுதுதான் சுட்டதாக தெரிவித்துள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் நடைப்பெற்ற பல எண்கவுன்ட்டர் வழக்குகளை விசாரித்து வரும் சுப்ரதீப் சக்ரவர்த்தி கூறும்போது தன்னுடைய விசாரனைக்கு சாதகமாக இந்த பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்துள்ளது என்றும், இது உண்மையிலேயே போலி எண்கவுன்ட்டர் தான் என்றும் நீரூபனமாகியுள்ளது என்றார்.
இந்த பரிசோதனை அறிக்கை மட்டும் முன்பே வெளியிடப்பட்டிருந்தால் காவல்துறையினர் கூறுவது படவர்த்தனமான் பொய் என்பது முன்பே தெரிந்திருக்கும் என்று கூறினார். காவல்துறையினர் கொடுத்த அறிக்கையையும் இந்த பிரேத பரிசோதனை அறிக்கையையும் ஒப்பிட்டு பார்த்தால் காவல்துறையினரால் எந்த அளவிற்க்கு பொய் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது என்பதை அறியலாம் என்று கூறினார்.
சகரவர்த்து கூறும்போடு வழக்கறிஞர் ஹுஜேஃபா அஹமதி கூறியதும், இந்த பிரேத பரிசோதனை அறிக்கையும் ஒன்றாகியுள்ளது. கொலை நடைப்பெற்று பல மாதங்களுக்கு பின்னால் இன்று அது போலியான எண்கவுன்ட்டர் என்ற உண்மை தெரியவந்துள்ளது என்றார்..
ஷொராபுதீன் அவர்கள் கடந்த 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் நாள் அகமதாபாதில் வைத்து குஜராத மற்றும் ராஜஸ்தான் காவல்துறையினரால் சுட்டு கொலை செய்யப்பட்டார். அந்த சமயத்தில் காவல்துறையினர் கூறியது ஷொராபுதீன் லக்ஸர்-இ‍-தொய்பா தீவிரவாத இயக்கத்தைச்சார்ந்தவர் என்றும் தப்பி ஓட முயன்ற போது சுட்டுக்கொன்றதாகவும் கூறினர்.

ஆனால் உண்மை என்னவெனில், ஷொராபுதீன் மற்றும் அவரது மனைவி கவுஸர்பீ குஜ்ராத மாநிலத்தின் தீவிரவாத எதிர்ப்பு படையைச்சேர்ந்த காவல்துறையினரால் 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் தேதி அன்று கடத்தப்பட்டனர். ஷொராபுதீன் ஒரு அரசு பேருந்திலே ஹைதராபாதிலிருந்து குஜராத் வந்து கொண்டிருந்த போது நவம்பர் மாதம் 26 தேதி அன்று அதிகாலையில் நெடுஞ்சாலையில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பின்னர் 2007 ஆண்டு ஷொராபுதீனின் மனைவி கவுஸர்பீயும் சுட்டுக்கொல்லப்பட்டுவிட்டதாக குஜராத் அரசாங்கம் கூறியது.
இதனைத்தொடர்ந்து சந்தேகத்திற்க்கு இடமான இந்த கொலை வழக்கை பிரசாந்த் தாயல் மற்றும் தாயினிக் பாஸ்க்கர் என்ற இருவர்களை நீதி மன்றத்தின் உத்தரவில் பேரில் இந்த வழக்கை விசாரித்து வந்தனர். பின்னர் இந்த கொலை ஒரு போலியான எண்கவுண்ட்டர் என்ற உண்மையை வெளிப்படுத்தி, டெபுடி கமிஷ்னர் டி.ஜி. வன்சாரா, ஐ.பி.எஸ் அதிகாரி அபே சுதசாமா, மற்றும் குஜராத் மாநிலத்தின் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

சிவ சேனாவின் மிரட்டல்!

சென்னை: பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த பாபரி மஸ்ஜித் கடந்த 1992 ஆம் ஆண்டு ஃபாஸிச வெறிபிடித்த ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகளால் சரியான திட்டமிடுதலுடன் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. பாபரி மஸ்ஜித் மீண்டும் அதே இடத்தில் கட்டித்தரப்படவேண்டும் என்று இந்திய முஸ்லிம்கள் ஜனநாயக முறையிலும், சட்டத்திற்க்கு உட்பட்டு பல அரப்போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.


பாபரி மஸ்ஜித் இடித்த தினத்தன்று இந்திய நாட்டின் பிரதமராக இருந்த நரசிம்ம ராவ் பாபரிமஸ்ஜித்தை அதே இடத்தில் முஸ்லிம்களுக்கு திருப்பி கட்டித்தரப்படும் என்று வாக்குறுதியளித்தார் அதனை நம்பிய முஸ்லிம் சமூகத்திற்க்கு ஏமாற்றமே மிஞ்சியது. இறுதியாக முஸ்லிம் சமூகம் நம்பி இருந்த நீதி மன்றத்தின் தீர்ப்போ கேலிக்கூத்தாய் போனது என்பது உலகம் அறிந்த விஷயம். முகலாய மன்னர பாபர் இராமர் கோயிலை இடித்துத்தான் மஸ்ஜிதை கட்டினார் என்ற பொய் பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் பரப்பி, சாதாரணமாக இருந்த இந்துக்கள் மனதில் விஷக்கருத்துக்களை பரப்பி நாட்டையே தலை குனிய வைத்த மாபெரும் ஒரு பாதகச்செயலை செய்தது இந்த ஃபாஸிச கும்பல்.

பாபரி மஸ்ஜிதை இடித்து, அதன் பிறகு மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் பல ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்து, பல‌ கோடிக்கணக்கான சொத்துக்கள் சூரையாடிய‌ இந்த வெறிபிடித்த காவித் தீவிரவாதிகள் தான். இதை ஒரு போதும் முஸ்லிம்கள் மறக்கவும் மாட்டார்கள், செய்தவர்களை மன்னிக்கவும் மாட்டார்கள். நீதிமன்றத்தின் தீர்ப்பு நியாயமானதுதானா? என்று நாம் அறிந்து கொள்ள மிகப் பெரும் சட்ட மேதையாகவோ அல்லது மூத்த வழக்கறிஞராகவோ இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை, மாறாக நடு நிலையாக சிந்திக்கும் பக்குவம் மட்டும் இருந்தால் போதுமானது இந்த தீர்ப்பு எப்படி பட்ட தீர்ப்பு என்று நாம் அறிந்து கொள்ளலாம்.

அயோத்தியில் அந்த குறிப்பிட்ட இடத்தில் இராமர் கோயில் இருந்ததாகவோ அல்லது இராமர் கொயிலை இடித்துத்தான் பாபரி மஸ்ஜிதை கட்டினார் என்றோ எந்த ஒரு ஆதாரத்தையும் நீதிமன்றத்திலே அவர்கள் நிரூபிக்கவில்லை. மேலும் அகழ்வாராய்ச்சியின் போதிலும் கூட பல தில்லு முல்லுகள் நடைப்பெற்று பல்வேறு ஆதாரபூரவமான விஷயங்களை மறைத்தனர்.. முஸ்லிம்களோ தங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்பி இருந்தனர். ஆனால் வந்த தீர்ப்போ கட்டப்பஞ்சாயத்து போன்றது என்று பல மூத்த வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.

விஷயத்திற்க்கு வருவோம், ஒரு வாதத்திற்க்காக பாபர் இராமர் கோயிலை இடித்துத்தான் பள்ளியை கட்டினார் என்று வைத்துக்கொள்வோம். அப்படியென்றால் தீர்ப்பு எவ்வாறாக இருந்திருக்க வேண்டும்? ஒன்று அது இராமர் கோயில் இல்லையென்றால் அது பாபரி மஸ்ஜித்திற்க்கு உண்டான இடம் என்றல்லவா தீர்ப்பு வந்திருக்கவேண்டும்.

பாபர் இராமர் கோயிலை இடித்துதுதான் பள்ளியை கட்டினார் என்றால் முஸ்லிம்களுக்கு ஏன் ஒரு பங்கு நிலத்தை ஒதுக்க வேண்டும்? அப்படி இல்லையென்றால் பாபரி மஸ்ஜிதி இருந்த இடத்தை மூன்று பங்காக பிரித்து அதில் 2 பங்கை இடித்தவர்களுக்கே கொடுத்தால் அதற்க்கு என்ன அர்த்தம்? யாரை திருப்தி படுத்துவதற்க்காக இந்த தீர்ப்பு?

ஆக இந்த முஸ்லிம் சமூகம் இருதிவரை சட்டத்திற்க்கு உட்பட்டு சட்டத்தை மதித்து தங்களுடைய போராட்டங்களை தொடரும். அதே வேலையில் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை கொஞ்சம்கூட மதிக்காத, இந்தியாவில் மத உணர்வுகளை தூண்டி அதன் மூலம் நாட்டை துண்டாட நினைக்கும் ஃபாஸிச ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு எதிராக இந்த தீர்ப்பு வந்திருந்தால் இந்த நாட்டின் நிலைமை என்னவாகியிருக்கும்? யோசித்துப் பார்க்கவேண்டும்.

முழுக்க முழுக்க ரவுடித்தனத்தையும், மொழி உணர்வை தூண்டி குளிர் காயும் சிவசேனா தீவிரவாதிகள் சென்னையில் ஒரு சுவரொட்டியை ஒட்டி உள்ளனர். அதில் இவர்கள் யார் இயற்றிய சட்டத்தை மதிக்கவில்லையோ அந்த டாக்டர் அம்பேத்கருடைய புகைப்படத்தை போட்டு தங்களை யோக்கியர்கள் என்று நிரூபிக்க முயல்கின்றனர்.

இதோ அவர்களது சுவரொட்டியின் வாசகம்:

"அயோத்தியில் இராமபிரான் பிறந்த மண்ணில் 3ல் ஒரு பகுதியை அலஹாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் பெற்றுக்கொண்டும் நீதி மன்ற தீர்ப்பையும், நீதிமன்றங்களையும், மாண்புமிகு நீதிபதிகளையு, சட்டங்களையும் அவமதிக்கும் வகையில் சுவரொட்டி, பேனர்கள் மூலம் அவதூறு செய்தும், மத‌ நல்லிணக்கத்தை குலைத்தும் நீதிமன்றங்கள் முற்றுகை போராட்டம் என கொக்கரித்துவரும் தேச விரோத முஸ்லிம் வெறியர்களின் செயல் சட்ட மரியாதை, அரசியலமைப்பு தந்தை டாக்ட. அம்பேத்கர் அவர்களின் அரசியலைமைப்பு சட்டத்திற்க்கு எதிரானதாகும். சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்ட‌ தேச விரோத முஸ்லிம் மத வெறியர்களை தேச பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடு!

இந்துக்களின் பொறுமையை சோதிக்காதீர்!"


மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு இவர்களை போன்ற தீய சக்திகளை எதிர்த்து போராட வேண்டும்.

பிரவீன் தொகாடியாவின் திமிர்!

தியோபந்த்: விஷ்வ ஹிந்து பரிஷதின் அகில இந்திய பொதுச்செயலாளர் பிரவீன் தொகாடியா தாருல் உலூம் மற்றும் தப்லிக் ஜமாத்திற்க்கு எதிரான தனது நச்சுக்கருத்துக்களை வெளியிட்டுள்ளான். தாலிபான்களையும், ஜிஹாதிகளையும் உருவாக்கக்கூடிய இடமாக தாருல் உலூம் விளங்குகிறது என்றும் இந்திய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்து அதை இழுத்து மூடவேண்டும் என்று தனது ஆதாரமற்ற விஷக்கருத்துக்களை கக்கியுள்ளான்.

ஹனுமந்த் சக்தி ஜகரன் மஹாயக்னா தர்ம சபா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய தொகாடியா, பாபரி மஸ்ஜிதை மீட்கவேண்டும் என்று தாருல் உலூம் தனது மதராஸாவில் படிக்கும் மாணவர்கள் மத்தியில் பரப்பி வருவதாகவும், தாலிபான்களையும், ஜிஹாதிய வாதிகளை உருவாக்குவதாகவும் கூறியுள்ளான். அயோத்தியில் மட்டும்மல்ல பாபர் உடைய பெயரில் இந்தியாவில் எந்த இடத்திலும் மஸ்ஜித் கட்டுவதற்க்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றான்.
ஷாவலியுல்லாஹ் அவர்கள் இந்தியாவை தாருல் இஸ்லாமாக மாற்றுவதற்க்குத்தான் தாருல் உலூமை தொடங்கினார்கள் என்றும், தப்லிக் ஜமாத் ஒரு தீவிரவாத அமைப்பு என்றும் வாந்தி எடுத்துள்ளான் தொகாடியா என்று அறைவேக்காடு.
பல வருடங்களுக்கு முன்னால் இந்திய விமானத்தை கடத்தியவர் ஜமாத்தே இஸ்லாமிய ஹிந்த் என்ற அமைப்பை சார்ந்தவர்தான் என்றும், அவர் தேவ்பந்தினால் உருவாக்கப்பட்ட தீவிரவாதி என்ற ஒரு அறிய கண்டுபிடிப்பை தனி அறையில் வைத்து நாள் முழுக்க இருந்து ஆராய்ந்து வெளியிட்டு உள்ளான். அவன் மேலும் கூறியதாவது ராமர் கோயிலை கட்டுவதற்க்காக எத்தகைய போராட்டத்தையும் செய்யத்தயாராக இருப்பதாகவும், இந்தியாவில் இருக்கும் 35,000 மஸ்ஜித்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்படும் என்று கூறியுள்ளான். இந்தியாவில் 85% சதவிகித இந்துக்கள் வாழ்வதாகவும் "ஹிந்து ராஷ்டிரா" அமைப்பதற்க்கு முஸ்லிம்களிடம் அனுமதி கேட்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும், யாருக்கெல்லாம் ஹிந்து ராஷ்டிராவில் வாழ்வதற்க்கு விருப்பம் இல்லையோ அவர்கள் தாராளமாக பாகிஸ்தானிற்க்கு செல்லலாம் என்று கூறியுள்ளான்.

ராமர் கோயில் கட்டுவதற்க்கான போராட்டம் இந்தியாவிற்க்காவோ அல்லது ஹிந்துக்களுக்காகவோ மட்டும் இல்லை, மாறாக இங்கே அயோத்தியில் ராமர் கோயில் கட்டிய பின்பு அதே போன்றதொரு கோயில்களை லாஹூரிலும், ராவல்பின்டியிலும் கட்டுவோம் என்றும் அதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று கூறியுள்ளான்.
சிறிது நாட்கள் கழித்து மத்திய பிரதேச மாநிலம் ஹர்தாவில் ஆயிரக்கணக்கான சாதுக்களுக்கு முன்னால் பேசிய தொகாடியா பல லட்சம் வருடங்களுக்கு முன்னால் அயோத்தியில் ராமர் கோயில் இருந்தது என்றும், நாம் இப்போது அதே இடத்தில் ராமர் கோயில் கட்டுவது என்பது அயோத்தியின் பிரச்சனை இல்லை மாறாக கொள்கைக்கான போராட்டம் என்று கூறியுள்ளான்.
இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்றான். மேலும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சனம் செய்து பேசியுள்ளான்.

Tuesday, February 8, 2011

உலகப்புகழ் வலைப்பதிவு 315 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டது.

உலகின் முன்னணி வலைப்பதிவாக கருத்தப்படும் அமெரிக்காவை சேர்ந்த ஹஃபிங்டன் போஸ்ட் 315 மில்லியன் டாலருக்கு ஏ.ஒ.எல்(AOL) கம்பெனிக்கு விற்கப்பட்டது. அதுவும் மூந்நூறு டாலர் உடனடியாக கையிலே கொடுக்கப்பட்டது. அமெரிக்காவில் மட்டும் பன்னிரண்டு கோடி வாசகர்களும் உலகம் முழுவதும் இருபத்தி ஏழு கோடி வாசகர்களையும் கொண்ட இந்த வலைபாதிவு இன்று விற்றதாக அறிவிக்கப்பட்டது. அதில் பணிபுரியும் முன்னணி இயக்குனர் மற்றும் சந்தாதாரர்கள் சம்மத்துடன் இந்த ஒப்பத்தம் முடிவானது.
நடுவடைந்து வரும் ஏ.ஒ.எல் நிறுவனம் இதன் மூலம் பெரிய அளவில் வெற்றி பெரும் என்று சொல்லப்படுகிறது. இணையத்தளங்களில் சொல்லப்படும் விளம்பர வருமானம் 2009′ஐ விட 2010′இல் 1.5 சதவீதம் குறைந்து உள்ளது. அதாவது: 6.8% – 2009, 5.3%- 2010. இதை உயர்த்தும் நோக்கமாகவே இந்த வலைப்பதிவை வாங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

2005 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த ஹஃபிங்டன் போஸ்ட்டில் எழுபது சம்பள பணியாளர்களும், ஆறாயிரம் வலைப்பதிவாளர்கள் சம்பளம் இன்றி இலவசமாக தினமும் எழுதி வந்தனர்.

பொய் சொல்லலாம்...



smile.jpg


பாசத்தைப் பிழிந்துச்;

சமையல் நீ செய்ய;

சொல்பேச்சிக் கேட்காமல்

புளிப்பும் உப்பும்;

சுவையைக் கூட்ட;

சினத்தை என் முகத்தில்

காட்டாமல்;

சிரித்துக்கொண்டேச்

சொல்லலாம் பொய்;

நல்லாயிருக்கு என்று!

பிடிக்காத வண்ணத்தில்;

உனக்குப் பிடித்த

எண்ணத்தில் சட்டையை

என் நெஞ்சில் ஒற்றி;

அழகாயிருக்குல்ல எனும்போது;

சிரித்துக்கொண்டேச்

சொல்லலாம் பொய்;

நல்லாயிருக்கு என்று!

முன்பே

முடிவெடுத்துவிட்டு;

ஒப்புக்காக என் பதிலை

நீ கேட்கும் போது;

சிரித்துக்கொண்டேச்

சொல்லலாம் பொய்;

சரிதான் என்று!

எனக்காகவே

என்னோடு நீ

ஒட்டியிருக்கும் போது;

உனக்காக;

உதடுகளைப் பிரிப்பதில்

தவறில்லை;

பொய்யென்றாலும்!


நோயாளிகள்!!!!!!

நோயாளிகள்!!!!!!



இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்கு பதிலாக அவரின் பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை. இதை அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்களும் அபூ ஹுரைரா(ரலி) அவர்களும் அறிவித்தார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இறை நம்பிக்கையாளரின் நிலை, இளம் தளிர்ப் பயிருக்கு ஒப்பானாதாகும். அதைக் காற்று ஒரு முறை சாய்த்து, மறுமுறை நிமிர்ந்து நிற்கச் செய்யும். நயவஞ்சகனின் நிலை தேவதாரு மரத்திற்கு ஒப்பானதாகும். அது ஒரேயடியாக வேரோடு சாயும்வரை (தலை சாயாமல்) நிமிர்ந்து நிற்கும். இதை கஅப் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர்வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை (சத்திய) சோதனைக்கு உள்ளாக்குகிறான் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஆயிஷா(ரலி) கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்களை விடக் கடுமையாக நோய்வாய்ப்பட்ட வேறெவரையும் நான் கண்டதில்லை. இந்த ஹதீஸ் இரண்டு வழிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார். நபி(ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டுக் கடும் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டிருந்தபோது நான் அவர்களிடம் சென்றேன். ‘தாங்கள் கடும் நோயால் சிரமப்படுகிறீர்களே (இறைத்தூதர் அவர்களே!), தங்களுக்கு இதனால் இரண்டு (மடங்கு) நன்மைகள் கிடைக்கும் என்பதாலா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆம்; எந்தவொரு முஸ்லிமுக்கு எந்தத் துன்பம் நேர்ந்தாலும் அதற்கு பதிலாக, மரத்தின் இலைகள் உதிர்வதைப் போன்று அவரின் பாவங்களை அல்லாஹ் உதிரச் செய்யாமல் இருப்பதில்லை’ என்று கூறினார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். பசித்தவருக்கு உணவளியுங்கள்; நோயாளியை(ச் சந்தித்து) உடல் நலம் விசாரியுங்கள்; (போர்க்) கைதியை (எதிரியிடமிருந்து விடுவியுங்கள் என அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.


ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) கூறினார். நான் கடுமையாக நோய் வாய்ப்பட்டிருந்தேன். என்னை உடல் நலம் விசாரிக்க நபி(ஸல்) அவர்களும் அபூ பக்ர்(ரலி) அவர்களும் நடந்தே என்னிடம் வந்தார்கள். அப்போது நான் மயக்கம் அடைந்திருக்கக் கண்டார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் அங்கசுத்தி (உளூ) செய்துவிட்டு அங்கசுத்தி செய்த தண்ணீரை என் மீது ஊற்றினார்கள். உடனே நான் மயக்கம் தெளிந்(து கண் விழித்)தேன். அங்கே (என் முன்னே) நபி(ஸல்) அவர்கள் இருந்தார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! என் செல்வத்தை நான் என்ன செய்ய வேண்டும்? என் செல்வத்தில் விஷயத்தில் என்ன முடிவு செய்ய வேண்டும்?’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள் எனக்கு பதிலேதும் கூறவில்லை. இறுதியில் வாரிசுரிமைச் சட்டம் தொடர்பான இறைவசனம் அருளப்பட்டது.


அதாஉ இப்னு அபீ ரபாஹ்(ரஹ்) கூறினார். இப்னு அப்பாஸ்(ரலி) என்னிடம், ‘சொர்க்கவாசியான ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?’ என்று கேட்டார்கள். நான், ‘ஆம்; (காட்டுங்கள்)’ என்று சொன்னேன். அவர்கள், இந்தக் கறுப்பு நிறப் பெண்மணிதாம் அவர். இவர் (ஒரு முறை) நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘நான் வலிப்பு நோயால் (அடிக்கடிப்) பாதிக்கப்படுகிறேன். அப்போது என் (உடலிலிருந்து ஆடை விலகி) உடல் திறந்து கொள்கிறது. எனவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்கு பதிலாக) உனக்கு சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன்’ என்று கூறினார்கள். இந்தப் பெண்மணி, ‘நான் பொறுமையாகவே இருந்து விடுகிறேன். ஆனால், (வலிப்பு வரும்போது ஆடை விலகி) என் உடல் திறந்து கொள்கிறது. அப்படித் திறந்து கொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்று கூறினார். அவ்வாறே நபி(ஸல்) அவர்கள் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.



எனவே நமக்கு நோய் வந்தால் இறைவனிடமே துவா செய்வோம் !!!!!!!1
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களின் நோய் அதிகமாம் அதனால் வேதனை கடுமையானபோது, என்னுடைய வீட்டில் தங்கிச் பெறுவதற்காக மற்ற மனைவியரிடம் அனுமதி கேட்டார்கள். அவர்களும் அனுமதி வழங்கினர். அவர்கள் வெளியில் வரும்பொழுது இரண்டு பேர்களுக்கிடைய...ில் தொங்கியவாறு வந்தார்கள். அப்போது அவர்களின் கால் விரல்கள் பூமியில் கோடிட்டுக் கொண்டிருந்தன. நபி(ஸல்) அவர்கள் அப்பாஸ்(ரலி) அவர்களுக்கும் வேறு ஒரு மனிதருக்கும் இடையில்தான் தொங்கிக் கொண்டு வந்தார்கள்.
இந்த விஷயத்தை உபைதுல்லாஹ், இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கூறியபோது, 'ஆயிஷா(ரலி) பெயர் குறிப்பிடாத அந்த இரண்டாவது மனிதர் யார் என்று உமக்குத் தெரியுமா?' என்று கேட்டார்கள். 'இல்லை' என உபைதுல்லாஹ் பதிலளித்தார். 'அவர் தாம் அலீ இப்னு அபீ தாலிப்' என இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்
அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் நோயுற்றார்கள். அவர்களின் நோய் கடுமையானபோது, 'அபூ பக்ரை மக்களுக்குத் தொழுகை நடத்தச் சொல்லுங்கள்" என்றார்கள். அப்போது ஆயிஷா(ரலி) 'அவர் இளகிய மனதுடையவர். நீங்கள் நின்ற இடத்தில் அவர் நின்றால், அ...வரால் மக்களுக்குத் தொழுகை நடத்த முடியாது' என்றார்கள். நபி(ஸல்) அவர்கள் மீண்டும் 'அபூ பக்ரை மக்களுக்குத் தொழுகை நடத்தச் சொல்லுங்கள்" என்றார்கள். ஆயிஷா(ரலி) தாம் கூறியதைத் திரும்பவும் கூறினார்கள். 'அபூ பக்ரை மக்களுக்குத் தொழுகை நடத்தச் சொல்! நிச்சயமாகப் பெண்களாகிய நீங்கள் யூஸுஃப் நபியின் தோழிகளாக இருக்கிறீர்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அபூ பக்ரிடம் ஒருவர் வந்து (சொன்னார்). நபி(ஸல்) அவர்கள் உயிருடனிருக்கும்போது அபூ பக்ர்(ரலி) (இமாமாக நின்று) தொழுகை நடத்தினார்கள்
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் தங்களின் நோயின்போது அபூ பக்ர்(ரலி) அவர்களை, தொழுகை நடத்தக் கட்டளையிட்டார்கள். அபுபக்ர்(ரலி) சில நாள்கள் தொழுகை நடத்தினார்கள். நபி(ஸல்) அவர்கள் தங்களின் நோய் சற்றுக் குறைந்ததை உணர்ந்து வெளியே வந்...தார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) மக்களுக்குத் தொழுகை நடத்திக் கொண்டிருந்தார்கள். நபி(ஸல்) அவர்களை அபூ பக்ர்(ரலி) பார்த்ததும் பின்வாங்கலானார்கள். 'அப்படியே இருங்கள்" என்று நபி(ஸல்) அவர்கள் சைகை செய்தார்கள். நபி(ஸல்) அவர்கள் அபூ பக்ர்(ரலி) உடைய விலாப் புறத்தை ஒட்டி அமர்ந்தார்கள். அபூ பக்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களையும் மக்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களையும் பின்பற்றித் தொழுதனர்



ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தபோது அவர்களின் மனைவியரில் ஒருவர் அபிஸினியாவில் தாம் பார்த்த மாரியா எனப்படும் ஒரு கிறிஸ்தவ ஆலயத்தைப் பற்றிக் கூறினார். அப்போது (ஏற்கெனவே) அபிஸினியா சென்றிருந்த உம்மு ஸலமா(ரலி) உ...ம்மு ஹபீபா(ரலி) ஆகிய இருவரும் அதன் அழகையும் அதிலுள்ள ஓவியங்களையும் பற்றி வர்ணிக்கலாயினர். உடனே தலையை உயர்த்திய நபி(ஸல்) அவர்கள், 'அவர்களில் நல்லவர் ஒருவர் இறந்துவிட்டால் அவரின் கப்ரின் மீது பள்ளிவாயில் எழுப்பி அதில் அவரின் உருவப்படங்களை வரைந்து வைப்பார்கள்; அல்லாஹ்விடம் படைப்பினங்களில் மிக மோசமானவர்கள் இவர்களே!" என்று கூறினார்கள்.

அனஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களுக்குப் பணி விடை செய்து கொண்டிருந்த ஒரு யூதச் சிறுவன் திடீரென நோயுற்றான். எனவே, அவனை நோய் விசாரிக்க நபி(ஸல்) அவர்கள் அவனிடம் வந்து, அவனுடைய தலை மாட்டில் அமர்ந்து, 'இஸ்லாதை ஏற்றுக் கொள்!' என்றார்கள்.... உடனே அவன் தன்னருகிலிருந்த தந்தையைப் பார்த்தான். அப்போது அவர், 'அபுல் காஸிம் (நபி(ஸல்) அவர்களின் கூற்றுக்குக் கட்டுப்படு" என்றதும் அவன் இஸ்லாத்தை ஏற்றான். உடனே நபி(ஸல்) அவர்கள், 'இவனை நரகத்திலிருந்து பாதுகாத்த அல்லாஹ்வுக்கே சகல புகழும்" எனக் கூறியவாறு அங்கிருந்து வெளியேறினார்கள்.
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
என் வீட்டில் என்னுடைய முறைக்குரிய நாளில் (வந்திருந்த போது) என் தொண்டைக்கும் என் மார்புக்குமிடையே (சாய்ந்திருந்த நிலையில்) நபி(ஸல்) அவர்கள் மரணித்தார்கள். அல்லாஹ் என்னுடைய எச்சிலையும் அவர்களின் எச்சிலையும் ஒன்று சேர...்த்திருந்தான். (எப்படியெனில்) நபி(ஸல்) அவர்கள் (கடுமையான நோய் வாய்ப்பட்டிருந்த நிலையில் என் சகோதரர்) அப்துர் ரஹ்மான், பல் துலக்கும் - மிஸ்வாக் - குச்சியைக் கொண்டு வந்தார். நபி(ஸல்) அவர்கள் அதைப் பயன்படுத்த முடியாத அளவிற்கு பலவீனமாக இருந்தார்கள். எனவே, நான் அந்தக் குச்சியை எடுத்துமென்று பிறகு அதனால் நபி(ஸல்) அவர்களுக்குப் பல் துலக்கி விட்டேன்


ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
ஃபாத்திமா(ரலி) (நோய் வாய்ப்பட்டிருந்த தம் தந்தை) நபி(ஸல்) அவர்களை நோக்கி வந்தார்கள். அவர்களின் நடை, நபி(ஸல்) அவர்களின் நடையைப் போன்றிருந்தது. அப்போது, நபி(ஸல்) அவர்கள், 'வருக! என் மகளே!" என்று அழைத்து தம் வலப்பக்...கம்... அல்லது இடப்பக்கம்... அமர்த்தினார்கள். பிறகு, அவர்களிடம் இரகசியமாக ஏதோ ஒரு விஷயத்தைக் கூறினார்கள். அதைக் கேட்டதும் ஃபாத்திமா(ரலி) அழுதார்கள். நான் அவர்களிடம், 'ஏன் அழுகிறீர்கள்?' என்று கேட்டேன். மீண்டும் நபி(ஸல்) அவர்கள் என்ன கூறினார்கள்" என்று ஃபாத்திமாவிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், 'இறைத்தூதர்(ஸல்) அவர்களின் இரகசியத்தை நான் பரப்பமாட்டேன்" என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் இறக்கும் வரை (ஃபாத்திமா ஒன்றும் கூறவில்லை. நபி - ஸல் அவர்கள் இறந்தபோது) ஃபாத்திமா(ரலி) அவர்களிடம் நான் (அந்த இரகசியம் பற்றிக் கேட்டேன்.


ஆயிஷா(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டால் பாதுகாப்புக் கோரும் வசனங்களை(க் கொண்ட குர்ஆனின் கடைசி மூன்று அத்தியாயங்களை) ஓதித் தம் மீது ஊதி, தம் கையை (தம் உடல் மீது) தடவிக் கொள்வார்கள். நபி(ஸல்) அவர்கள் எந்த நோயில் ...இறந்தார்களோ அந்த நோயின்போது, அவர்கள் (ஓதி) ஊதிக் கொள்ளும் பாதுகாப்பு வசனங்களை நான் அவர்களின் மீது (ஓதி) ஊதலானேன். அதை நபி(ஸல்) அவர்களின் (கையில் ஊதி அந்தக்) கையாலேயே அவர்களின் (உடல்) மீது தடவலானேன்.See More
இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்கள் 'மூன்றில் (நோய்க்கு) நிவாரணம் உண்டு. தேன் அருந்துவது, இரத்தம் வெளியேற்றும் கருவியால் (உடலில் கீறுவது, தீயால் சூடிட்டிக்கொள்வது ஆகியனவே அந்த மூன்றுமாகும். (ஆனால்,) தீயால் சூடிட்டுக் கொள்ள வேண்ட...ாமென என் சமுதாயத்தாருக்கு நான் தடை விதித்கிறேன்' என்று கூறினார்கள்.4
மற்றோர் அறிவிப்பில், 'தேனிலும் இரத்தம் வெளியேற்றுவதிலும் நிவாரணம் உள்ளது' என வந்துள்ளது.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அல்லாஹ் எந் நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை.2
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :6 Book :76

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) கூறினார்
நான் கடுமையாக நோய் வாய்ப்பட்டிருந்தேன். என்னை உடல் நலம் விசாரிக்க நபி(ஸல்) அவர்களும் அபூ பக்ர்(ரலி) அவர்களும் நடந்தே என்னிடம் வந்தார்கள். அப்போது நான் மயக்கம் அடைந்திருக்கக் கண்டார்கள். உடனே நபி(ஸல்)...அவர்கள் அங்கசுத்தி (உளூ) செய்துவிட்டு அங்கசுத்தி செய்த தண்ணீரை என் மீது ஊற்றினார்கள். உடனே நான் மயக்கம் தெளிந்(து கண் விழித்)தேன். அங்கே (என் முன்னே) நபி(ஸல்) அவர்கள் இருந்தார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! என் செல்வத்தை நான் என்ன செய்ய வேண்டும்? என் செல்வத்தில் விஷயத்தில் என்ன முடிவு செய்ய வேண்டும்?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள் எனக்கு பதிலேதும் கூறவில்லை. இறுதியில் வாரிசுரிமைச் சட்டம் தொடர்பான இறைவசனம் அருளப்பட்டது.10
Volume :6 Book :75
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அல்லாஹ் கூறினான்: நான் என் அடியானை, அவனுடைய பிரியத்திற்குரிய இரண்டு பொருட்களை(ப் பறித்து)க் கொண்டு சோதித்து, அவன் பொறுமை காப்பானேயானால், அவற்றுக்கு பதிலாக சொர்க்கத்தை நான் அவனுக்கு வழங்குவேன்.
('அவன...ுடைய பிரியத்திற்குரிய இரண்டு பொருள்கள்' என்பது) அவரின் இரண்டு கண்களைக் குறிக்கும்.
என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Volume :6 Book :75

ஜாபிர்(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்கள் (நான் நோயுற்றிருந்த போது) என்னை உடல் நலம் விசாரிக்க வந்தார்கள். அப்போது அவர்கள் கோவேறு கழுதையின் மீது பயணம் செய்தபடியும் வரவில்லை. குதிரையின் மீது பயணம் செய்தபடியும் வரவில்லை. (மாறாக, நடந்தே வந்தார்...கள்.)
Volume :6 Book :75

உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) கூறினார்
(என் சிறிய தாயார்) ஆயிஷா(ரலி) நோயாளிக்கும், இறந்தவரை எண்ணி வருந்துபவருக்கும் 'தல்பீனா' (பால் பாயசம்) தயாரித்துக் கொடுக்கும்படி பணித்துவந்தார்கள். மேலும், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'தல்பீனா நோயாளியின் உள்...ளத்திற்கு ஆறுதல் அளிக்கும். கவலைகளில் சிலவற்றைப் போக்கும்' என்று கூறக் கேட்டுள்ளேன்' என்பார்கள்.11
Volume :6 Book ,76

குறட்டையை தடுக்க வழிகள்!!!!

நாம் உறங்கியபின், நம் சுவாசக்குழாயில் உள்ள தசைகள் சற்றே சாவகாசமாக வேலை செய்ய ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் நம் தொண்டையானது சுருங்கத் தொடங்கும். சுருங்கும் தொண்டைவழியாக செல்லும் காற்றுக்கு இப்போது உள்சென்று வெளியேற போதிய இடம் இல்லை.
ஆக சுருங்கிய தொண்டை வழியாக செல்லும் காற்றானது அழுத்தத்துக்குட்படுகிறது. அழுத்தம் நிறைந்த காற்று தொண்டையின் பின்புற தசைகளை அதிரச் செய்கின்றன.
இந்த அதிர்வைத் தான் நாம் குறட்டை என்கிறோம் என்கிறார் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கே.கே.ஆர்.காதுமூக்கு தொண்டை மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரவிராமலிங்கம். அவர் கூறியதாவது:-
காரணங்கள்:
நாம் தூங்கும் போது தலைக்கு வைத்து கொள்ளும் தலையணையை மிகவும் பெரிதாக உயரமாக வைத்துக் கொள்வதால் ஏற்படும். சில வகையான ஒவ்வாமை காரணமாக சுவாசக் குழாயில் ஏற்படும் சளி, சிலருக்கு உடல் பருமன் காரணமாகவும் குறட்டை ஏற்படுகிறது.
முழு தூக்கம் இருக்காது:
யாராவது குறட்டை விட்டு தூங்கினால் அவனுக்கென்ன நிம்மதியாக தூங்குகிறான் என பலர் நினைப்பதுண்டு. ஆனால் அது தவறு. குறட்டை விடுபவர் நன்றாக தூங்க முடியாது என்பதுடன் பல பாதிப்பு நிலைக்கும் தள்ளப்படும் நிலையும் வரலாம். குறட்டை விடுபவர் மனம் தெளிவாக இருக்காது.
உடல் மிகவும் களைப்பாக இருக்கும் உடலில் சக்தி குறைவாக இருக்கும். தெளிவற்ற சிந்தனை வரும். அதிகமாக கோபம் வரும். இதுமட்டுமின்றி உடலுக்கு போதிய அளவு பிராணவாயு கிடைக்காது. இதனால் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இருதய நோய் பக்கவாதம் போன்ற நோய் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
அத்தோடு மிக தீவிரமாக குறட்டை விடுபவர்கள் உறக்கத்திலேயே இறந்து விடும் வாய்ப்பும் அதிகம் உள்ளது. அதனால் இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தவிர்க்க வேண்டியவை:
சுவாசப் பாதையில் தேவையின்றி சதை வளர்ந்தால் சீராக காற்று போக வழியின்றி குறட்டை ஏற்படலாம். எனவே சதை வளராமல் இருக்க உடல் எடையில் கவனம் வேண்டும். பக்க வாட்டில் படுக்க வேண்டும். 4 அங்குல உயரத்திற்கு மேல் தலையணை வைத்து தூங்க கூடாது.
சாப்பிட்ட உடன் படுக்க போக கூடாது. புகை பிடிக்க கூடாது. அளவுக்கு அதிகமான மருந்துகள் சாப்பிடக் கூடாது. மருந்து அருந்த கூடாது. அத்தோடு இதனால் பாதிக்கப்படுபவர்கள் தொண்டை மூக்கு, காது நிபுணரை அணுகி ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.
3 வகை நோயாளிகள்:
குறட்டையின் தீவிரத்தன்மையைப் பொறுத்து நோயாளிகளை 3 குழுக்களாக வகைப்படுத்தலாம்.
1. மெல்லிய குறட்டை- அடுத்திருக்கும் அறையில் ஒலியைக் கேட்க முடியும். மூச்செடுப்பதில் சிரமம் இல்லை.
2. உயரமான குறட்டை- கதவு மூடி இருந்தாலும் கூட அடுத்துள்ள அறையில் ஒலியைக் கேட்கலாம்.
3. உறங்கும் போது மூச்சுத் திணறுதல், நேரத்துக்கு நேரம், மூச்சு 10 வினாடிகளுக்கு மேலாக நிறுத்தப்படும்.
மாரடைப்பு அபாயம்:
7 மணி நேர நித்திரையின் போது 30 முறை மூச்சு திணறல் ஏற்பட்டால் இது ஆபத்தானதாக இருக்கலாம். பெருமூச்செடுத்த வண்ணம், நேரத்துக்கு நேரம் நோயாளி தூக்கம் கலையலாம்.
ரத்தத்தில் காணப்படும் குறைவான செறிவுடைய ஆக்சிஜன் இதயம், சுவாசப்பை மற்றும் மூளையை பாதிக்கலாம். ரத்த அழுத்தம் உயர்வடைவதால், மாரடைப்பு ஏற்படும்.
கட்டிலில் மரணம் கூட ஏற்படலாம். இந்த நோயாளிகள் பகலில் கூட நித்திரைத் தன்மையை, சோம்பேறித்தனத்தை உணர்வார்கள். டாக்டர் தூக்க வரலாற்றை சோதிக்கும் போது, இந்த பிரச்சினை பற்றி கூடுதலாக அறிந்த நோயாள ரின் துணையும் இருக்க வேண்டும்.
ஆபத்தான நோய்:
டான்சில் வீக்கம், அடினாய்டு பிரச்சினைகள் ஏற்படும் போதோ சளி பிடிக்கும் போதோ குறட்டை சத்தம் ஏற்படலாம். இந்தப் பிரச்சினைகளால் ஏற்படும் அடைப்பு நீங்கியவுடன், குறட்டை சத்தமும் நின்று விடும். அதிக உடல் எடை கொண்ட குழந்தைகள் மற்றும் இள வயதினருக்கு குறட்டை ஏற்படுகிறது.
கழுத்தைச் சுற்றி அளவுக்கு அதிகமான தசை வளர்வதால், சதை அடைப்பு உருவாகி, குறட்டை ஏற்படுகிறது. ஆபத்தான மருத்துவக் கோளாறாக இது கருதப்படுகிறது. ஆபத்தான, தூக்கத் தடை ஏற்படுத்தும் நோயாக இது கருதப் படுகிறது.
ஆழ்ந்த தூக்க நிலைக்குச் செல்லும் போது கண்கள் வேகமாக அசையும், அந்த நேரத்தில் நம் மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று வெளியேறும். இதற்கு `அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியே' என்று பெயர். அந்த நேரத்தில் குறட்டையும் அதிகரிக்கும். ஒரு நேரத்திற்கு 18-க்கும் மேற்பட்ட முறை நம் கண்கள் வேகமாக அசைந்து, மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று வெளிவருகிறது.
குறட்டை விடும் போது திடீரென நின்று திடீரென அதிகரிக்கும் சுவாசத்தால் நம் உடலில் ரத்த அழுத்தம் அதிகரித்து இதய அடைப்பு திடீர் மரணம் ஆகியவை ஏற்படலாம்.
இந்தியாவில் அதிகம் பேர் பாதிப்பு:
இந்தியர்களில் பெரும்பாலோர் இந்த நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் திடீர் மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. நம் வாழ்க்கை முறை மாறி விட்டதால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
குறட்டை ஏற்படுவதற்கான காரணத்தை அறிந்து `ஸ்லீப் அப்னியே' நோய் உருவாகி உள்ளதா என்பதைக் கண்டுபிடிக்க தமிழகத்தின் பெரிய நகரங்களில் மருத்துவமனைகள் உள்ளன.
உங்கள் தூக்க முறையை வைத்து, உங்களுக்கு நோய் உள்ளதாப என்பதை அவர்கள் கண்டறிந்து விடுவர். காரணத்தைக் கண்டறிந்து விட்டால், 30 சதவீதத்தினர் நோயைக் குணப்படுத் திக்கொள்ளலாம். டான்சில் அடினாய்டு, மூக்கினுள் வீக்கம் போன்ற பிரச்னைகளை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து கொள்ளலாம்.
குறட்டையை குறைக்க:
ஆக்சிஜனை உடலில் தேவையான இடத்திற்கு எடுத்து செல் லும் வகையில் புதிய கருவிகள் தற்போது கிடைக்கின்றன. அறையில் உள்ள ஆக்சிஜனை உள்ளிழுத்து நம் மூக்கின் வழியே உடலுக்குச் செலுத்தும் இவற்றை வீட்டிலும் வைத்துக் கொள்ளலாம்.
குறட்டையைக் குறைக்க மேலும் சில கருவிகள் விளம்பரப் படுத்தப்படுகின்றன. விசேஷ தலையணை, கழுத்துப் பட்டைகள், நாக்கை அழுத்திப் பிடிக்கும் கருவிகள் என பல வகைகள் உள்ளன. குறட்டை விடுபவரை, ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு திருப்பி படுக்க வைத்தாலே குறட்டை ஒலி குறையும்.
ஸ்பைரோ மீட்டர் கருவியால் மூச்சுப் பயிற்சி செய்தல், பலூன் ஊதுதல், புல்லாங்குழல் ஊதுதல், ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் 30 நிமிடம் மேற்கொண்டால் குறட்டை குறைகிறது என்பது ஆய்வில் கண்டறிந்த உண்மை.
யோகாவில் உள்ள மூச்சுப் பயிற்சியும் மிகச் சிறந்தது. தினமும் 45 நிமிடம் யோகா, மூச்சுப் பயிற்சியுடன் கூடிய நடை பயிற்சி போன்ற பழக்கங்களை, சிறு வயது முதலே கடைபிடிக்க வேண்டும். இதனால் இளவயது பருமனைக் குறைக்கலாம். திடீர் மரணத்தையும் தவிர்க்கலாம்.
சிகிச்சை முறை:
குறட்டை பிரச்சினையை அறுவை சிகிச்சை மூலம் குணப் படுத்தலாம். எல்.ஏ.யு.பி. என்னும் லேசர் சிகிச்சை மூலம் குறட்டையைக் குறைக்க முடியும். குறட்டைக்கு முதல் சிகிச்சை உடல் எடையை குறைப்பதுதான்.
அடுத்து காற்றுச் செல்லும் பாதையிலுள்ள அடைப்பு அதிகமாக இருந்தால் மூக்கு, உள்நாக்கு, தொண்டை போன்ற பகுதிகளை பரிசோதித்து அடைப்புள்ள இடத்தைக் கண்டறிந்து லேசர் கிச்சையின் மூலம் அடைப்பை சரி செய்யலாம்.
முற்றிய நிலையிலிருக்கும் நோயாளிக்கு ஆபரேஷன் செய்தாலும் சரியான தீர்வளிக்காது என்பதால் சிறிகிறி என்கிற மாஸ்க்கை ஒவ்வொரு நாளும் தூக்கத்தின்போதும் அணிந்துகொள்ளத் தருகிறோம். அதை அவர்கள் அணிவதால், அந்த மாஸ்க்கிலுள்ள ஆக்சிஜன் அடைப்புள்ள இடத்தில் வேகமாக அழுத்தம் கொடுத்து அடைப்பை விலக்கி, காற்று நன்கு செல்ல உதவுகிறது.
இதனால் அவர்கள் குறட்டை பிரச்சினையில்லாமல் ஆழமான தூக்கத்தை அனுபவிக்க முடிகிறது. காற்றடைப்பை கண்டறிய மருத்துவ மனையில் நவீனமான சிலிப்லேப் என்கிற முழுதும் கம்ப்ïட்டர் மயமாக்கப்பட்ட தூங்கும் அறையுள்ளது. நோயாளியை அந்த அறைக்குள்ளே ஒரு இரவு முழுவதும் தூங்க விடவேண்டும்.
அவரது உடலில் ஒன்பது இடங்களில் கம்ப்யூட்டரோடு இணைக்கப்பட்ட கேபிள்கள் பொருத்தப்படும். அது அன்று இரவு முழுவதும் அவர் தூங்குவது, குறட்டை விடுவது எத்தனை முறை விழிப்பு வந்து புரண்டு படுத்தார், எந்தப் பக்கமாக படுக்கும்போது குறட்டைகளின் தன்மை எப்படியிருந்தது.
ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு, மூளைக்கும், மார்புக்கும் காற்று சென்று வந்த நிலை, அடைப்பு எங்கேயிருக்கிறது என்பதை துல்லியமாகக் கண்டறிந்து விடலாம் என்கிறார் டாக்டர் ரவிராமலிங்கம்.

வெளிநாடுகளில் 32 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு? ஆ.ராசாவிடம் சிபிஐ தொடர்ந்து விசாரணை

புதுதில்லி,பிப்.4: 2ஜி அலைக்கற்றையை முதலில் வந்தவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் விற்றதன் மூலம் அரசுக்கு 22 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாகப் பதிவு செய்துள்ள வழக்குதொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவிடம் மத்தியப் புலனாய்வுக் கழக (சி.பி.ஐ.) அதிகாரிகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் விசாரணை நடத்தினர்.

அவரை விசாரித்தபோது அவருடன் முன்னர் பணியாற்றிய தனிச் செயலாளர் ஆர்.கே. சண்டோலியா, தொலைத்தொடர்புத்துறை முன்னாள் செயலர் சித்தார்த் பெஹுரா ஆகியோரையும் அருகில் வைத்துக்கொண்டனராம்.

இந்த விவகாரத்தில் லஞ்சமாகப் பெறப்பட்ட தொகை சில வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டுவிட்டதாகவும் அது தொடர்பான குறிப்புகள், ஆவணங்கள் ஆகியவற்றைக் கைப்பற்றிய அதிகாரிகள் அவற்றைக் காட்டி விவரங்கள் கேட்டதாகவும் தெரியவருகிறது.

சென்னையையும் வேறு சில நகரங்களையும் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சில நிறுவனங்கள் சார்பில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள் குறித்து அதிகாரிகள் ஆ. ராசாவிடம் கேட்டபோது அவர் மெüனம் சாதித்தார் என்றும் அரசின் கருவூலத்துக்கு வர வேண்டிய 22ஆயிரம் கோடி ரூபாயை சதி செய்து கொள்ளை அடித்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டபோது அவ்வாறு தான் செய்யவில்லை என்று அவர் மறுத்ததாகவும் தெரியவருகிறது.

மேலும் சில அதிகாரிகள் கைது? விசாரணையின்போது சில அதிகாரிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டதாகவும் அவர்களையும் கைது செய்ய உரிய தகவல்களும் சான்றுகளும் திரட்டப்படுவதாகவும் சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் துணைத் தலைமை இயக்குநர்: தொலைத்தகவல் தொடர்புத்துறையின் முன்னாள் துணைத் தலைமை இயக்குநர் ஏ.கே. ஸ்ரீவாஸ்தவா மற்றும் அதிகாரி ஆர். கே. குப்தா ஆகியோரிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்துள்ளனர்.

அதிகாரிகள் உடந்தை: 2008 ஜனவரி 10-ம் தேதி அலைக்கற்றை ஒதுக்கீடுக்கான அனுமதிக் கடிதம் வழங்கப்படவிருப்பதை ஒரு சில நிறுவனங்களுக்கு மட்டும் தொலைத்தகவல் தொடர்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதனால் ஒரு சில நிறுவனங்களால் மட்டும் துறை விதித்த நிபந்தனைப்படி உரிமக் கட்டணத்தைச் செலுத்த முடிந்திருக்கிறது.

வெளிநாடுகளில் முதலீடு: மோரிஷஸ், மடகாஸ்கர், ஐல் ஆஃப் மேன்,ஐக்கிய அரபு அமீரகம், சைப்ரஸ் ஆகிய நாடுகளில் ராசாவுடன் தொடர்புள்ளவர்களால் 32 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு முதலீடு செய்யப்பட்டிருப்பதாகவும் அது தொடர்பாகவே இப்போது விசாரணை நடப்பதாகவும் சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ராசாவுக்கும் மற்றவர்களுக்கும் லஞ்சமாக தரப்பட்ட தொகை எவ்வளவு என்பதைக் கணக்கிடும் பணியில் சி.பி.ஐ. இறங்கியிருக்கிறது. லஞ்சம் கொடுத்தவர்கள் யார், அவர்கள் அடைந்த பலன் என்ன என்றும் அது விசாரித்து வருகிறது.

ஸ்வான், யூனிடெக் என்ற இரு நிறுவனங்களும் சேர்ந்து கூட்டாக 7ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியிருக்கின்றன என்றும் ஸ்வான் நிறுவனம்தான் பின்னாளில் டிபி-எடிசலாட் ஆக மாறியது என்றும் சி.பி.ஐ. தெரிவிக்கிறது.

ஏ.கே. ஸ்ரீவாஸ்தவாவின் அலுவலகத்திலிருந்துகொண்டுதான் ஒரு சிலநிறுவனங்களுக்கு மட்டும் தொழில் அனுமதிக் கடிதத்தை சண்டோலியா அனுப்பினாராம்.

கைது செய்யப்பட்டுள்ள ஆ. ராசா, பெஹுரியா, சண்டோலியா ஆகியோருக்கு எதிராக சாட்சி சொல்ல தொலைத்தகவல் தொடர்புத்துறையைச் சேர்ந்த சில ஊழியர்களை சி.பி.ஐ. எதிர்பார்த்திருப்பதாகவும் தெரியவருகிறது

பெட்ரோலுக்கு மாற்றாக புதிய எரிபொருள்: லிட்டர் 14 ரூபாய்

ஹைட்ரஜனை வைத்து புதிய மூலக்கூறுகளுடன் கூடிய புதிய எரிபொருள் ஒன்றை இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.


பேரா. ஸ்டீபன் பென்னிங்டன் தலைமையிலான விஞ்ஞானிகள் இந்த ச்செயற்கை எரிபொருளைக் கண்டு பிடித்துள்ளனர். "இது சாதாரண பெட்ரோலை விட 3 மடங்கு சக்தி வாய்ந்தது. வாகனங்களில் அடைக்கப்பட்டு அடுத்த ஆண்டு சோதனை நடத்தப்படும். பின்னர் அது பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வழங்கப்படும்" என்றும்

"இந்த எரிபொருள் மூலம் கார்கள் மற்றும் எவ்வித எந்திரங்களையும் இயக்க முடியும். இதில் இருந்து வெளியாகும் புகையால் காற்றில் மாசு ஏற்படாது.சுற்றுச்சூழல் பாதிக்கப்படாது. வெளியாகும் வாயு கார்பனைப் போன்று மக்களின் உடல் நலத்துக்குத் தீங்கு இழைக்காது.

செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட இந்த எரிபொருள் ஒரு லிட்டர் 14 ரூபாய்க்கு விற்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் புதிய பெட்ரோலுக்கு மாற்றான எரிபொருள், பெட்ரோல் பங்க்குகள் மூலம் விற்பனையாக இன்னும் 3 ஆண்டுகளாகும்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2ஜி அலைக்கற்றை ஊழல் - ராசாவின் சிபிஐ காவல் நீடிக்கப்படுமா ?

சென்ற வாரம் கைது செய்யப்பட்டு சிபிஐ காவலில் இருந்து வரும் முன்னாள் அமைச்சர் ராசாவை மேலும் சில தினங்களுக்கு விசாரிக்க சிபிஐ முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
ராசாவின் 5நாள் சிபிஐ காவல் இன்றோடு முடிகிறது. சிபிஐ காவலில் வைத்து விசாரிப்பதன் மூலம் விசாரணையின் முன்னேற்றம் இருப்பதாக சிபிஐ கருதுகிறது. இன்னும் சில நாட்களில் உச்ச நீதிமன்றத்திற்கு சிபிஐ வழக்கு குறித்து இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யவேண்டியிருப்பதால் ராசா மற்றும் அவருடன் கைது செய்யப்பட்ட சொந்தாலி, சித்தார்த் பெஹூரா ஆகியோரின் காவல் நீட்டிப்பை நீடிக்க கோரி சிபிஐ இன்று மனு செய்யலாம் என எதிர்பார்க்கபடுகிறது

கப்ருக்குள்ளிருந்து பதில் வருமா?


மரணித்துப்போன நல்லடியார்கள் மகான்கள் என்பவர்களிடத்தில் உதவி தேடலாம் அவர்கள் கப்ருக்குள்ளே உயிரோடு இருக்கிறார்கள். பிராத்தனைகளுக்கு பதிலளிப்பார்கள் என்று கப்று வணக்கம் புரியும் சகோதரர்கள் வாதம் புரிகிறார்கள்.

மகான்களின் பெயரால் கப்ருகளை கட்டி புனிதப்படுத்தி பச்சைபோர்வை போர்த்தி ஊதுபத்தி பற்றவைத்து விளக்கேற்றி எண்ணெய் ஊற்றி அபிசேகம் பண்ணி வலம்வந்து சுஜூது செய்து தொட்டு முத்தமிட்டு முகத்தை தேய்த்து சாம்பளை வாயில் இட்டு எண்ணையை வாயிலும் நெற்றிலும் தடாவி கொண்டிருக்கிறார்கள். கொழும்பிலுள்ள தெவட கஹாதர்கா கப்ரு வணக்கத்திற்கு பெயர் போன இடம்!
மக்கள் தங்களது கஷ்ட நஷ்டங்களை முறையிடுவதற்கு அந்த கபுரடியில் ஒன்று கூடி தங்களது வேண்டுதல்களை முன்வைப்பார்கள். காரணம் அந்த மகான் கப்ரில் உயிரோடு இருக்கிறார். முன்வைக்கப்படும் கோரிக்கைகள் பிரார்த்தனைகளுக்கு பதிலளிப்பார் என்று நம்புகிறார்கள். திருமணம் முடித்த புதுதம்பதியினரும் தர்கா (கப்ருக்)கு வந்து நல்லாசி(!?) பெற்று செல்கிறார்கள்.
அது மட்டுமல்ல மாற்று மதத்தவர்களும் அங்கே வந்து பூஜிக்கும் காரியத்திலும் எண்ணை அபிஷேகத்திலும் அழுது பிரார்த்திக்கும் காரியத்திலும் ஈடுபடுகிறார்கள். நாட்டில் ஏதும் விசேஷம் என்றால் அல்லது அரசியல் தலைவர்களின் பிறந்த நாள் என்றால் அல்லது கோமாளிகளின் கொண்டாட்டம் என்றால் உடனே தர்காவுக்கு வந்து அபிசேகம் பண்ணுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இவர்களுக்காக துஆ(?) மற்றும் யாஸீன் ஓதி பணம் வசூலிக்கும் கூட்டமும் தயாராக இருக்கிறது.
இவர்களுடைய நம்பிக்கை படி முஸ்லிமல்லாதவர்களுக்கும் யாஸீன் ஓதி அவ்லியாவிடம் உதவி தேடமுடியும். அந்த அவ்லியாவுக்கு மதம் அல்லது மாரக்கம் முக்கியமில்லை?அங்கேயுள்ள உண்டியில் நிரம்புவது தான் முக்கியம். அதிலுள்ளவர்களுக்கு பணம்தான் முக்கியம்!
ஈமானை பாலடிக்கும் இக்காரியங்களை மக்கள் நன்மையான நல்ல காரியங்கள் என்று நம்பி செயல்படுகிறார்கள்.

எந்த மனிதன் மரணித்தாலும் அவருக்கும் உலகிற்குமுள்ள தொடர்பு மரணத் தோடு முடிந்து விடுகிறது. அவர் மகானாக இருந்தாலும் சாதாரண மனிதராக இருந்தாலும் சரியே! இந்த அடிப்படையை மக்கள் புரிந்து கொள்ளும் நேரம் வந்தால் கபுரடியில் மண்டியிட்டு கிடக்கும் செயலை கண்டிப்பாக தவிர்ப்பார்கள். இந்த உண்மையை அல்லாஹ் பின்வருமாறு திருமறை குர்ஆன் வசனங்களில் கூறுகிறான்.
அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மை யாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! உங்களுக்கு பதில் தரட்டும். (7:194)
அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர். அவர்கள் இறந்தவர்கள். உயிருடன் இருப்போர் அல்லர். எப்போது உயிர் பிக்கப்படுவார்கள் என்பதை அவர்கள் அறியமாட்டார்கள்.(16:20-21)
(நபியே!) அல்லாஹ்வையன்றி உமக்குப் பயனும், தீங்கும் தராதவற்றைப் பிரார்த்திக்காதீர் (அவ்வாறு) நீர் செய்தால் அநீதி இழைத்தவராவீர். அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத்தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. (10:106-107)
உண்மையான பிரார்த்தனை அல்லாஹ் வுக்கு உரியது அவனையின்றி இவர்கள் யாரைப் பிரார்த்திக்கிறார்களோ அவர்கள் சிறிதளவும் இவர்களுக்குப் பதிலளிக்க மாட்டார்கள். தண்ணீர் (தானாக) வாய்க்குள் செல்ல வேண்டும் என்பதற்காக இரு கைகளையும் அதை நோக்கி விரித்து வைத்துக் கொள்பவனைப் போலவே அவர் கள் உள்ளனர். அது (தானாக) அவனது வாய்க்குள் செல்லாது (ஏக இறைவனை) மறுப்போரின் பிரார்த்தனை வீணாகவே இருக்கும். (13:14)
அவர்களையும் அல்லாஹ்வையன்றி அவர்கள் வணங்கியவற்றையும் அவன் (அல்லாஹ்) ஒன்று திரட்டும் (மறுமை) நாளில் எனது அடியார்களை நீங்கள்தான் வழிகெடுத்தீர்களா? அவர்களாக வழிகெட் டார்களா? என்று கேட்பான்.
(அதற்கு அவர்கள் யாஅல்லாஹ்!) நீ தூயவன். உன்னையன்றி அவ்லியாக் களை ஏற்படுத்துவது எங்களுக்குத் தகாது. நீ அவர்களுக்கும் அவர்களின் முன்னோர்களுக்கும் வசதிகளை அளித்தாய். (உன்னை) நினைக்க மறந்தனர். (இவர்கள்) அழிந்துபோகும் கூட்டமாக ஆகி விட்டனர் என்று அவர்கள் கூறுவார்கள். (25:17-18)
நீங்கள் அவர்களை அழைத்தால் உங் கள் அழைப்பை அவர்கள் செவியேற்க மாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்கு பதில் தரமாட்டார்கள். கியாமத்து நாளில் நீங்கள் இணைகற்பித்ததைஅவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது. (35:14)
அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் பூமியில் எதைப் படைத்தனர் என்று எனக்குக் காட்டுங்கள் அல்லது வானங்களில் அவர்களுக்குப் பங்கு உண்டா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள். நீங்கள் உண்மையானவர்களாக இருந்தால் இதற்கு முன் சென்ற வேதத்தையோ அறிவுச் சான்றையோ என்னிடம் கொண்டு வாருங்கள் என்று நபியே கேட்பீராக.
கியாமத் நாள் வரை தமக்குப் பதில்தராத அல்லாஹ் அல்லாதோரை அழைப்பவரை விட மிகவும் வழிகெட்டவர் யார்? அவர்களோ தம்மை அழைப்பது பற்றி அறியாது உள்ளனர்.
மக்கள் ஒன்று திரட்டப்படும்போது அவர்கள் இவர்களுக்குப் பகைவர்களாக ஆவா ர்கள். இவர்கள் தம்மை வணங்கியதையும் மறுப்பார்கள். (46:4-6)

மரணித்துப்போன மனிதர்கள் அல்லது நல்லடியார்கள் மகான்கள் என்று சொல்லப்படக் கூடியவர்கள் கப்ரில் உயிரோடு இல்லை. நீங்கள் அவர்களை பிரார்தித்து அழைத்தாலும் பதில் தரமாட்டார்கள். நாளை மறுமையில் மகான்கள் என்று சொல்லப்படக் கூடிய அவர்களையும் அவர்களை அழைத்து பிரார்த்தித்தவர்களையும் அல்லாஹ் ஒன்று திரட்டி அல்லாஹ்வை விட்டு விட்டு உங்களிடம் பிரார்த்திக்கச் சொன்னீர்களா? என்று விசாரிப்பான். ஆனால், அவர்களோ நாங்கள் அப்படிச் சொல்லவில்லை. எங்களுக்கும் அவர்களது காரியங்களுக்கும் எந்த தொடர்புமில்லை என்று கூறுவார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். பல முறை இந்தக் குர்ஆன் வசனங்களை அமைதியாக படித்துப் பாருங்கள்.

ஒளியும் இருளும் சமமாக மாட்டாது
குருடனும் பார்வையுடையவனும் சமமாக மாட்டான்
உறங்குபவனும் விழித்திருப்பவனும் சமமாக மாட்டான்.
மரனித்தவரும் உயிருடன் உள்ளவரும் சமமாக மாட்டார்கள் (35;22)

மரனித்தவர்கள் அவர்களது செயலின் முடிவின் பால் சென்று விட்டார்கள். நல்லவர்களாக சாலிஹானவர்களாக வாழ்ந்தால்; புது மணமகன் தூங்கவது போல் கப்றில் உறங்கு என்ற நற் செய்தியுடன் உறங்குவார் என நபி (ஸல்) அவர்கள் தெளிவுப்படுத்துகிறாரகள்.
எனவே உயிருடன் இருப்பவர்கள் தாங்;கள் புரியும் செயல்களை நன்மையானதாக்கி வாழவேண்டியவர்களாக இருக்கிறார்கள்.
இதனை புரிந்து கொண்டால் உண்மையை விரைவாக புரிந்து கொள்ளலாம்.
மேலும் அல்லாஹ்விடம் தங்களது கஷ்ட துன்பங்களை முறையிட்டு பிராத்திக்காத வர்களை வழிகேடர்கள் என்று அல்லாஹ் கண்டிக்கிறான். வழிகேடர்கள் நரகத்திற்குரியவர்கள் என்று மேலும் பல குர்ஆன் வசனங்களில் அல்லாஹ் கண்டிக்கிறான்.
எனவே அன்புக்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! மரணித்துப் போனவர்க ளின் கப்ரடியில் மண்டியிட்டு கிடக்காமல் மண்ணறைக்கு சென்று அங்கு அடக்கம் செய்யப்பட்டவர்களுக்காக துஆ செய்யுங்கள். மரணத்தை நினையுங்கள். அடக்கம் செய்யப்பட்டவர்களிடம் மன்றாடாதீர்கள். அல்லாஹ் ஒருபோதும் மரணித்துவிடுபவனுமல்ல. தன் காரியத்தை இன்னுமொருவரிடம் கொடுத்து விட்டு ஓய்வெடுப்பவனுமல்ல.
உங்களை படைத்து இருபத்தி நான்கு மணித்தியாலங்களும் உங்களை கண்காணித்துக் கொண்டு உங்கள் பிரார்த்தனைகளுக்கு பதிலனித்துக் கொண்டும் என்றும் உயிரோடு இருக்கும் அல்லாஹ்விடம் கேளுங்கள் அவனிடமே சரணடையுங்கள். ஈமானைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
இந்த கட்டுரையை எழுதியவர்:---உஸ்தாத் இம்தியாஸ் ஸலபி