அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, August 15, 2012

நோக்கியாவின் ஆஷா 305!!

இரண்டு சிம் இயக்கத்துடன் கூடிய ஆஷா வரிசையில், நோக்கியா ஆஷா 305 மாடல் போனை அண்மையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. நோக்கியா ஸ்டோரில் இதன் அதிக பட்ச விலை ரூ.4,668. 240 x 400 பிக்ஸெல் திறனுடன் கூடிய டிஸ்பிளே தரும் 3 அங்குல திரை, ரெசிஸ்டிவ் டச் ஸ்கிரீனாக உள்ளது.

46 மாடிகள் கொண்ட தென் இந்தியாவின் மிக உயர அபார்ட்மெண்ட்

பெங்களூரு: 46 மாடிகள் கொண்ட, தென் இந்தியாவிலேயே மிக உயரமான அபார்ட்மெண்ட் பெங்களூரில் கட்டப்பட்டு வருகிறது. பண்ணரகட்டா சாலையில் மீனாட்சி மால் கட்டடத்துக்கு அருகே கட்டப்படும் இந்தக் கட்டடம் தான் தென் இந்தியாவிலேயே மிக உயரமான வசிப்பிடமாகும். மந்த்ரி பினாக்கிள் என்ற இந்த கட்டடத்தில் ஒவ்வொரு அபார்ட்மெண்டும் 3 மாடிகளைக் கொண்டதாக இருக்குமாம்.

யாருக்கு சுதந்திரம்?



யாருக்கு சுதந்திரம்
66-வது சுதந்திர தினத்தை நமது தேசம் கொண்டாடி முடித்து இருக்கிறது. ஆங்கிலேயர்கள் நமது தேசத்தின் மீதான ஆக்கிரமிப்பை விட்டொழித்துவிட்டு சென்ற பிறகு நாம் ஏராளமானவற்றில் முன்னேறியிருக்கிறோம். சாதனைகள் நமது சுதந்திரத்திற்கு புகழ் சேர்க்கும் என்பதில் ஐயமில்லை. சுதந்திரத்தை விட மதிப்பான வேறெதுவும் இவ்வுலகில் மனிதனுக்கு இல்லை எனலாம்.
“சாரே ஜஹான்சே அச்சாஹ், ஹிந்துஸ்தான் ஹமாரா
ஹம் புல்புலேன் இஸ்கி, ஏ குல்ஸிதான் ஹமாரா…”
“பரந்த உலகில் சிறந்தது எங்கள் இந்தியா
இந்திய பூந்தோட்டத்தின் பறவைகள் நாங்கள்
அதன் மணமும் குணமும் எங்கள் உயிர் மூச்சு…..”

ஜனநாயக அமைப்புகள் மீதான தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது – குடியரசு தலைவர் உரை!



President, Pranab Mukherjee addressing the Nation on the eve of 66th Independence Day, in New Delhi on 14 August 2012
புதுடெல்லி:ஜனநாயக அமைப்புகள் மீதான தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், பாராளுமன்றம்தான் தேச மக்களின் ஆன்மா என்றும் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தனது சுதந்திர தின செய்தியில் தெரிவித்துள்ளார்.
இந்திய நாட்டின் 66-வது சுதந்திர தினத்தையொட்டி குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பது: ஊழலுக்கு எதிராகக் கோபம் கொள்வதும், போராட்டம் நடத்துவதும் நியாயமானதுதான்.
ஆனால், இந்தப் போராட்டங்களின் போது சில சமயங்களில் மக்கள் தங்கள் பொறுமையை இழந்து விடுகின்றனர். ஆனால், அதற்காக ஜனநாயக அமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

Friday, April 13, 2012

கல்வி உரிமைச் சட்டம் – மத்திய அரசு முடிவு சரியே: உச்சநீதிமன்றம்!


right_education11
புதுடெல்லி:மத்திய அரசின் கல்வி உரிமைச் சட்டம் சரியே என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால், அரசு உதவி பெறாத சிறுபான்மை பள்ளி நிறுவனங்களுக்கு இந்த சட்டம் பொருந்தாது என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.

கே.ஆர். ஸ்ரீதர்

அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்.

கே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது.

இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு,
அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர்.

Tuesday, April 10, 2012

ஆர்.எஸ்.எஸ் ற்கும் மொஸாதிற்கும் உள்ள கள்ள தொடர்பு!


காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதில் அவர் ஹேமந்த் கர்க்கரே 26/11 அன்று கொல்லப்பட்ட சம்பவத்தை பற்றிய சில குறிப்புகளை வெளியிட்டார். ஹேமந்த கர்கரே கொல்லப்படுவதற்கு முன் பாகிஸ்தான் தீவிரவாதிகளிடமிருந்தோ அல்லது இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினரிடமிருந்தோ எந்த மிரட்டலுக்கு ஆளாக்கப்படவில்லை மாறாக ஆர்.எஸ்.எஸ்ஸால் நடத்தப்படும் ஹிந்துத்துவ தீவிரவாதிகளிடமிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளார்.

Sunday, April 8, 2012

பேராசிரியர் ஹாஃபிஸ் ஸயீதின் தலைக்கு அமெரிக்கா பரிசு அறிவிப்பு: பாகிஸ்தானை உலுக்கிய கண்டனப் பேரணி!


Hafiz Saeed's supporters rally against US bounty
இஸ்லாமாபாத்:ஜமாஅத்து தஃவா அமைப்பின் தலைவர் பேராசிரியர் ஹாஃபிஸ் ஸயீதின் தலைக்கு ஒரு கோடி டாலர்(ரூ.50 கோடி) பரிசு அறிவித்துள்ள அமெரிக்காவின் அடாவடியை கண்டித்து பாகிஸ்தான் நகரங்களில் நடந்த பேரணியில் மக்கள் வெள்ளம் கரை புரண்டோடியது.

நிரபராதிகளான முஸ்லிம் இளைஞர்களை உ.பி அரசு விடுதலை செய்கிறது!


Sajjadur Rehman, Khalid Mujahid and Tariq Qasmi being taken to the court
புதுடெல்லி:தீவிரவாத முத்திரைக் குத்தி உத்தரபிரதேச சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள நிரபராதிகளான முஸ்லிம் இளைஞர்களின் விடுதலை சாத்தியமாகிறது.

விளைகின்ற நிலமெல்லாம், விலைபோகுது இங்கு!!!

விளைகின்ற நிலமெல்லாம்,
விலைபோகுது இங்கு !வெளிநாட்டில் ,
விதைக்கவே அடுக்குநிலம் !

எங்கள் மீது இஸ்ரேல் கைவைத்தால் அந்த நாடே இல்லாமல் போய் விடும்-ஈரான் எச்சரிக்கை...


டெஹரான்: ஈரான் மீது இஸ்ரேல் போர் தொடுத்தால், இஸ்ரேல் என்ற ஒரு நாடே இருந்தது என்று சொல்ல முடியாத அளவுக்கு அந்த நாட்டை பூண்டோடு அழித்து விடுவோம் என்று ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Thursday, April 5, 2012

பற்களில் காரை படிந்துள்ளதா? இனி கவலை எதற்கு?



என்னதான் டூத் பிரஷ் உபயோகித்து ஒரு முறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தாலும் நமது பற்களில் காரை (decay) கொஞ்சம் கொஞ்சமாக படிந்து விடுகிறது.

பல் மருத்துவக்கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு முதலில் சொல்லித் தருவதே அவர்களின் பற்களை சுத்தம் செய்து கொண்டு வரச் சொல்வது தான்..

பிஞ்சு குழந்தைகளின் மனதில் நஞ்சை விதைக்கும் ஆர் .எஸ். எஸ். !!!!



(அயோத்தியில் பஜ்ரங்தள் சிறார்களுக்கு ஆயுதப் பயிற்சி)

சிபிஐ வசம் இருக்கும் சில முக்கிய விடியோக்களை ஹெட்லைன்ஸ் டுடே என்ற செய்தித் தொலைக்காட்சி சேவை நிறுவனம் ஒலிஒளி பரப்பியது (6 விடியோக்கள்) . அவை அனைத்தும் பட்டாசு ரகங்கள். ஆர் எஸ் எஸ்ன் முக்கியத் தலைவர்கள் பயங்கரவாதிகள் என்ற உண்மை வெளிவந்தது. இந்தியாவின் குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரியை கொல்வதற்கான திட்டங்களையும் வகுத்துள்ளனர் ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகள்.
இந்த பயங்கரவாத கும்பலை இயக்கியவர்களில் ஒருவன்இந்திரேஸ் குமார். இவர் ஆர் எஸ் எஸ்ல் பல முக்கியப் பொறுப்புகள் வகிப்பவர். இவன் தான் காஷ்மீர் அமர்நாத் நிலப் பிரச்சினையை தூபம் போட்டு வளர்த்தவர்களில் ஒருவன். இவன் தான் நேபாள் மாவோயிஸ்டுகளுக்கு எதிராகவும் வேலை செய்துள்ளான். குறிப்பாக ஆர் எஸ் எஸ்ன் முஸ்லீம் பிரிவின் தலைவரே இவர்தான். என்னவொரு முரன்நகை? ஆர் எஸ் எஸ் கும்பல் முஸ்லீம் வேசம் போட்டு குண்டு வைக்கும் போது அதன் தலைவர்களோ முஸ்லீம்களுக்கு அமைப்பு ஏற்படுத்தி அதற்கு தலைமை வகிக்கிறார்கள்.

தினம் தினம் கிளியும் ஆர் எஸ் எஸ் டவுசர் பாண்டிகளின் முகத்திரை !!!




மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவ குற்றவாளிக்கு உதவியதாக விஜய் அகர்வால் என்பவர்கைது செய்யப்பட்டார்.

லக்னெüவில் பதுங்கியிருந்த தனியார் கல்வி நிறுவனத்தின் தலைவரான விஜய் அகர்வாலை மும்பை, உத்தரப்பிரதேச பயங்கரவாதத் தடுப்பு போலீஸôர் கைது செய்தனர்.

கடலுக்கடியில் பூம்புகார்..






பெங்களூர் மிதிக் சொசைடியில் நடைபெற்ற 9500 ஆண்டுகளுக்கு முன்னர் கடலில் மூழ்கிய நகரம் என்ற கண்காட்சியில் கடலில் மூழ்கிய நகரங்கள் பற்றிய வீடியோ படம் காண்பிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ படத்தை எடுத்த கிரகாம் குக...் கூறியதாவது:- கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் இந்த நகரங்கள் மூழ்கின.

கடலுக்கடியில் பூம்புகார்..





பெங்களூர் மிதிக் சொசைடியில் நடைபெற்ற 9500 ஆண்டுகளுக்கு முன்னர் கடலில் மூழ்கிய நகரம் என்ற கண்காட்சியில் கடலில் மூழ்கிய நகரங்கள் பற்றிய வீடியோ படம் காண்பிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ படத்தை எடுத்த கிரகாம் குக...் கூறியதாவது:- கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் இந்த நகரங்கள் மூழ்கின.


பூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடப் பழமையானவை ஆகும். கண்காட்சியில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக பூம்புகார், காம்பே நகரங்கள் பற்றிய வீடியோ காட்சிகள் காண்பிக்கப்பட்டது. கடலுக்கடியில் சென்று எடுக்கப்பட்ட முக்கியமான வீடியோ படங்கள் அவை. இந்திய நிலவியல் விஞ்ஞானிகள் மீனவர்கள் உதவியுடன் எடுக்கப்பட்டது. கடலுக்கடியில் நகரங்களின் சுவடுகள் ஆங்காங்கே உள்ளது. ஏறக்குறைய பூம்புகார், காம்பே நகரங்கள் ஒரே காலத்தவை. இரண்டும் ஒரே காலத்தில் தான் கடலில் மூழ்கி இருக்க வேண்டும் என்று கிரகாம் குக் கருதுகிறார்.



வீடியோ படத்தில் மண் கல்லான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச் சுவர்கள், பாத்திரங்கள், ஆபரணங்கள், வீட்டு முற்றங்கள் ஆகியவை காணப்படுகின்றன. பூம்புகார் அருகே மூழ்கிய நகரம் பற்றி எடுக்கப்பட்ட வீடியோ படத்தில் பெரிய குதிரை வடிவ பொம்மைகள் காணப்படுகின்றன. இதைப் பற்றி அறிய வந்ததும் விஞ்ஞானிகள் வியப்பில் மூழ்கிப் போயுள்ளனர். இதைப் பற்றி மேலும் ஆராய்ச்சி செய்தால் கூடுதல் விவரங்கள் கிடைக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்”



இதை படித்தவர்கள் என்ன செய்தீர்கள்? கிரகாம் குக் பற்றி நமது மேடைகளில் பள்ளி வகுப்புகளில் நீங்கள் பேசினீர்களா? அறிவியல் அடிப்படையில் பூம்புகார் 9500 ஆண்டு பழமை வாய்ந்தது என்று மெய்ப்பிக்கப்பட்ட பின்னராவது ஈராயிரம் ஆண்டுக ள் ஈராயிரம் ஆண்டுகள் என அடிக்கடி நமது பழமை பற்றிப் பேசுவதை நிறுத்திவிட்டு பத்தாயிரமாண்டு நாகரிகம் படைத்தவர்கள் என்று பேசத் துவங்கினீர்களா?



உங்கள் மூளை ஈராயிரமாண்டுகள் வரை மட்டுமே சிந்திக்கமா? உறைந்து போய் விட்டதா? புதிய உண்மை மெய்பிக்கப்பட்டவுடன் நமது பாட நூற்களில் எற்றப்பட்டிருக்க வேண்டாமா? காம்பே நகரம் கண்டுபிடிக்கவுடன் இந்தியாடுடே அட்டைப்படக்கட்டுரை வெளியிட்டது? பூம்புகார் பற்றிய உண்மைகள் வெளிவந்ததும் ஊடகங்கள் அதைப் பெரிதாக வெளியிடவில்லை. தமிழினம் பற்றிய அக்கறையுள்ள தொலைக்காட்சிகளுமில்லை.



தமிழறிஞர்கள் நடத்தும் சிற்றிதழ்களாவது பதிவு செய்ய வேண்டாமா? பூம்புகார் பற்றி மேலும் ஆய்வு தேவை என்று தமிழறிஞர்கள் குரல் எழுப்பியதுண்டா? சென்னையில் உள்ள தேசிய கடற்பொறியியல் ஆய்வு நிறுவனம் தானே இந்த ஆய்வில் ஈடுபட்டது? தமிழகத்தில் உள்ள அரசு அமைப்பு கடலில் மூழ்கிய தமிழக நகரங்களை, தமிழனின் பிறந்தகமாம் குமரிக் கண்டத்தை ஆய்வு செய்ய வேண்டும் என ஏன் எந்த அரசியல் கட்சியும் குரல் கொடுக்கவில்லை? நமது 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடுவணரசை வற்புறுத்திப் பாராளுமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் கொண்டு வந்திருக்க வேண்டாமா?



அறிவியல் அடிப்படையில் நம் நாகரிகச் சிறப்பு அவனியில் மெய்ப்பிக்கப்பட மாற்றார் முன் மறுக்க வொண்ணாச்சான்றுகளை நிறுத்த ஏன் நாம் துடிப்பதில்லை? கடற்கரை ஓரங்களில் மாறுதல் ஏற்படுவது இயற்கை இடையறாது நடத்தும் அழிவுச் செயல்களில் ஒன்றாகும். குமரிக்கண்டம்‘சோழர்களின் புகழ்பெற்ற பூம்புகார் துறைமுகம் தற்போது கடலுக்கடியில் உள்ளது. அதே சமயத்தில் முன்னொரு காலத்தில் கடற்கரையோரம் இருந்த சீர்காழி நகரம் தற்போது கடற்கரையிலிருந்து உள்ளடங்கி பல கி.மீ. துரத்தில் உள்ளது.



இவை தமிழகக் கடற்கரையோரத்தில் ஏற்பட்ட கடல் மட்ட மாறுதல்களைப் பற்றிய வரலாற்று ஆதாரங்களாகும். தவிர இது தொடர்பாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள புவி அறிவியல் பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வும் பல புதிய தகவல்களைக் கொணர்ந்துள்ளது”

1) சென்னையிலிருந்து சத்தியவேடு வரை காணப்படும் கடலால் உருவாக்கப்பட்ட மணல் திட்டுக்கள்



2) நேராகப் பாயும் பாலாறு நதியில் செங்கல்பட்டுக்கு அருகில் காணப்படும் திடீர் வளைவு



3) கடலைச் சந்திக்காமல் திருவெண்ணை நல்லூர் அருகில் புதையுறம் மலட்டாறு



4) வேதாரணியம் பகுதியில் திருத்துரைப்பூண்டி வரை காணப்படும் கடலால் ஏற்படுத்தப்பட்ட மணல் திட்டுகள்



5) வைகை நதியில் காணப்படும் மூன்று கழிமுகங்கள். இத்தகவல்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலானது சென்னை செங்கல்பட்டு, திருச்சி, மதுரை வரை பரவி இருந்தது என்பதைத் தௌ¤வாக விளக்குகிறது. தவிர தமிழகக் கடற்கரையோரம் காணப்படும் கோண்டுவானா பாறைகளும் (290 மில்லியன் வருடங்கள்), கிரிடேசியஸ் (Cretaceous) பாறைகளும் (70 மில்லியன் வருடங்கள்), டெர்சியரி (Tertiary) பாறைகளும் (7 மில்லியன் வருடங்கள்) மேற்கூறிய தகவல்களை உறுதி செய்வதோடு பல ஆண்டுகட்கு முன்பிருந்தே கடல் மட்டம் இப்பகுதியில் உயர்ந்தும் தாழ்ந்தும் இருந்து வந்துள்ளது. உறுதியாகிறது” என கடல்மட்ட மாறுதல்களும் தமிழகக் கடல் ஓரத்தின் எதிர்கால நிலையும் என்ற கட்டுரையில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தொலையுணர்வு மைய இயக்குநர் பதிவு செய்துள்ளார். ( தமிழக அறிவியல் பேரவை 3-வது கூட்டம் 1994 மலர் )



1) சுமார் 1.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மதுரை வரை பரவி இருந்தது.



2) சுமார் 90,000 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை, புதுச்சேரி, வேதாரண்யம் பகுதிகள் கடலால் சூழப்பட்டிருந்தன.



3) சுமார் 65000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்தால் இந்தியாவும் இலங்கையும் சேர்ந்தன.



4) சுமார் 27000 ஆண்டுகளுக்கு முன் கடல் மட்டம் உயர்ந்ததால் இலங்கையும் இந்தியாவும் பிரிந்தன.



5) சுமார் 17000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்ததால் இலங்கையும் இந்தியாவும் சேர்ந்து பின் கடல் மட்டம் உயர்ந்ததால் மீண்டும் பிரிந்தன” என்று சொல்லும் முனைவர் சோம. இராமசாமி கூற்றுப்படி “புவியமைப்பியல் வல்லுநர்களின் கூற்றுப்படி அண்டார்டிகா, கிரீன்லாந்து ஆசிய பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகி அதன்மூலம் கடல் உயர்ந்ததால் தாழ்வான கடற்கரையைக் கொண்டிருக்கும் தமிழகத்தின் பல கடலோரப் பகுதிகள் மூழ்கடிக்கப்படும்” என எச்சரிக்கிறார். இதுபற்றி ஆய்வுகளும் தேவை.



தமிழகக் கடற்கரையோரப் பாறைகள்-கோண்டுவானாய் பாறைகள் 290 மில்லியன் வருடம் பழைமை வாய்ந்தவை. இது அறிஞர் முடிவு. நம் கைவசமுள்ள மறுக்க முடியாத ஆதாரம். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்தகுடி எனப்புறப்பொருள் வெண்பாப் பாடலை இலக்கியச் சான்றாகச் சொல்லும்போது உலகம் ஏற்க மறுக்கும். அறிவியல் சான்றாக நமது பாறைகளை அவர்கள் முன் நிறுத்துங்கள். வாயடைத்துப் போகும் ஆரியம்! நம் வரலாறு உலகில் நிலை நாட்டப்படும். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில் உதித்த தமிழர்களிடம் கல்லைப் பற்றிய கலைக்களஞ்சியம் இல்லை.



ஆயின் என்சைக்ளோ பீடியா அப் ராக்சு அண்டு மினரல்சு என ஆங்கில மொழயில் கலைக்களஞ்சியம் உள்ளது. தமிழன் கல்லைப் பற்றிய கலைக்களஞ்சியத்தை உருவாக்க வேண்டாமா? அன்றி ஆங்கிலக் கலைக்களஞ்சியத்திலாவது பழமைமிகு தமிழகப் பாறைகள் பற்றிய உண்மைச் செய்திகளைச் சேர்க்க உழைக்க வேண்டாமா? தமிழ்க்குடியின் தொன்மை உலக அளவில் நிலைநாட்ட ஒரு சிறு துரும்பும் யார் ஆண்டாலும் தமிழகத்தில் அசைக்கப்படுவதில்லையே ஏன்? # பசுமைக்குடில் தாக்கம், பனிப்பாறை உருகுதல் இவற்றால் கடல் மட்டம் உயர்வது மட்டுமல்ல கடல் அலைகள் கொந்தளிப்பு எழுந்து பேரலையாகி நகரங்களை விழுங்கும் செயலை Tsunami என ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். சப்பானிய தீவுக்கூட்டங்களிலும் ஆசுதிரேலியத் தீவுக்கூட்டங்களிலும் ‘சுநாமி கண்காணிப்பு மையங்கள்’ ஏற்படுத்தப்பட்டு கடல் கண்காணிப்படுகிறது.



இதுபற்றி நேஷனல் ஜியாக்கிரபிக் சேனல் பல செய்திகளை வெளிக்கொணர்கிறது. தமிழகக் கடற்கரைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதில்லை. பிறநாடுகளில் நடக்கும் அறிவியல் செய்திகளை தமிழ் மக்களுக்குச் சொல்ல, தமிழில் சொல்ல ஒரு தொலைக்காட்சி அலைவரிசை வேண்டாமா? வரலாற்றுணர்வில்லாத தமிழர்களுக்கு உணர்வு ஊட்ட வரலாற்று அலைவரிசை தொடங்க உலகத் தமிழர் ஒருவர்கூட முன் வராதது ஏன்? தமிழக, புதுவை அரசுகளாவது முனைய வேண்டாமா?



# இலங்கையும் தமிழகமும் அடிக்கடி இணைந்து பிரிந்ததால் பாக் நீரிணைப்பகுதியில் கடலடியில் மணல்திட்டுகள் காணப்படுகின்றன. அதை அனுமன் கட்டிய பாலமென நம்மை முட்டாளாக்க நடந்த முயற்சியை முறியடிக்க அறிவியல் உண்மைகளை முன்நிறுத்தும் ஆற்றலை தமிழ்ச்சமுதாயம் பெற வேண்டாமா?



# புதுவை கடலால் சூழப்பட்டிருந்தது மெய்ப்பிக்கப்பட்ட நிலையில் புதுவையை ஓட்டியுள்ள கடலடியில் National Institute Of Oceano-Graphy மூலமும் பூம்புகாரை கண்டெடுத்த கிரகாம் குக் மூலமும் ஆய்வு நடத்த வேண்டியது புதுவை அரசின் கடமையாகும். தமிழகமாளும் அரசுகளையும் அவற்றின் குரலை மதிக்காத, நடுவணரசையும், குமரிக்கண்ட ஆய்வு நிகழ்த்துமாறு செய்விக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்

Thanks
Peter amalraj

Sunday, March 25, 2012

வன்புணர்வு வழக்கில் 'விந்து' தடயம் அவசியமில்லை : உயர்நீதிமன்றம்

வன்புணர்வை நிரூபிக்க விந்தின் தடயம் அவசியமில்லைவன்புணர்வை நிரூபிக்க விந்தின் தடயம் அவசியமில்லை என்று மும்பை உயர்நீதிமன்றத்தின் ஒளரங்காபாத் கிளை தீர்ப்பளித்துள்ளது. 
ஆறுவயதேயான சிறுமியை வன்புணர்ந்து கொன்ற குற்றத்திற்காக  பிரஷாந்த் கதே என்னும் 25 வயது நபருக்கு மும்பை-ஒஸ்மானாபாத் கீழ்நிலை நீதிமன்றம் மரணதண்டனை, ஆயுள்தண்டனை, மற்றும் 25,000 ரூபாய் அபராதம் ஆகியவற்றை ஒருசேர விதித்திருந்தது.இதை எதிர்த்து அந்நபர் செய்த மேல்முறையீட்டில், அந்தத் தண்டனைகளையும் உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

பிரிட்டன்: முஸ்லிம்களுக்கு எதிராக அரசியல் கட்சி தொடக்கம்

பிரிட்டன்: முஸ்லிம்களுக்கு எதிராக அரசியல் கட்சி தொடக்கம்ஆங்கிலேயர் தற்காப்பு இயக்கம் என்ற பெயரில் மூன்றாண்டுகளாக பிரிட்டனில் இயங்கிவந்த அமைப்பொன்று வலதுசாரி அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்த அமைப்பு முஸ்லிம்களுக்கு எதிரான கட்சியாக விடுதலைக் கட்சி Freedom Party என்ற பெயரில் ஓர் அரசியல் இயக்கமாக உருவெடுத்துள்ளது.
3 ஆண்டுகளுக்கு முன்னர் அடித்தள மக்களின் இயக்கம் என்ற தோற்றத்தில்  இந்த விடுதலைக் கட்சி இயக்கம் தொடங்கிக் கட்டமைக்கப்பட்டது. இலண்டனுக்கு வடக்கேயுள்ள லூட்டோன் நகரத்தில் விடுதலைக் கட்சி (Freedom Party) என்ற பெயரில் இது உதயமானது. இப்போது, இந்த அமைப்பு இஸ்லாமியருக்கு எதிரான அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ளது.

இஸ்ரேல் மீது தீர்மானம் : ஐ.நாவில் தனிமைப்படுத்தப்பட்ட அமெரிக்கா

ஜெனிவா : பாலஸ்தீன் பகுதியில் இஸ்ரேல் மேற்கொள்ளும் குடியேற்றங்கள் பலஸ்தீனர்களின் உரிமைகளை மீறுகிறதா என்பதை கண்காணிக்க சர்வதேச விசாரனை நடத்த வேண்டும் என்று கோரும் தீர்மானம் அமெரிக்காவை தவிர அனைத்து நாடுகளாலும் ஏற்கப்பட்டு ஐ.நாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆபாச பட சர்ச்சை - காங்கிரஸ் வெளியிட்டது புதிய வீடியோ !!

குஜராத் மாநிலத்தில் ஆளும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆபாச படம் பார்த்து சிக்கிய விவகாரத்தில் தடய அறிவியல் துறை சம்பந்தப்பட்டவர்களின் கைக்கணினியில் ஆபாசபடம் ஏதுமில்லை என்று கூறியதன் எதிர்வினையாக ஆபாச படம் பார்த்ததற்கான புதிய ஒளிப்பட ஆதாரத்தை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
கர்நாடகாவை தொடர்ந்து குஜராத் சட்டமன்றத்திலும் ஆளும் பாஜக சட்டசபை உறுப்பினர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆபாச படம் பார்த்ததாக சர்ச்சை வெடித்தது. சட்டசபை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்த போது, 2 பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்கள் தங்களது கைக்கணினி - ஐபேடில் ஆபாச படம் பார்த்ததாக சர்ச்சை எழுந்தது. இந்தப் பிரச்னையை எழுப்பி சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் அமளி துமளியில் ஈடுபட்டனர். இந்த புகார் குறித்து உரிமைக் குழு விசாரணைக்கு அவைத்தலைவர் உத்தரவிட்டார்.


தேச விரோத அமைப்புகளான சிவசேனா ,R S S ஆதரவாளர்களின் கள்ள நாணய அச்சடிப்பு !



மும்பையில் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் நாணயங்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. இதைப் பயன்படுத்தி சிலர் கள்ளமார்க்கெட்டில் நாணயங்களை விற்கிறார்கள். இவர்களிடம் நூறு ரூபாய்க்கு (சில்லரைக்கு) ரூ.120 வரை கொடுக்க வேண்டும். பண்டிகைக் காலங்களில் ரூ.125 வரை கொடுக்க வேண்டுமாம். தெற்கு மும்பை வி.எச்.பி, சிவசேனா வியாபாரிகள் நாணயங்களை அச்சிட்டு சந்தையில் வெளியிட்டுள்ளார்கள் எம்.கே.வி. என்ற வியாபாரிகள் சங்கத்தின் கீழ் செயல்படும். வி.எச்.பி., சிவசேனா வியாபாரிகள்தான் இந்த நாணய அச்சடிப்பு வேலையில் இறங்கியுள்ளனர். அவர்கள் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் மதிப்புள்ள சுமார் 50 ஆயிரம் நாணயங்களை வெளியிட்டுள்ளனர்.
நாணயத்தின் ஒரு பக்கத்தில் சங்கத்தின் பெயரான எம்.கே.வி.யின் சின்னமும் உள்ளது. அடுத்த பக்கத்தில் நாணயத்தின் மதிப்பு இடம்பெற்றுள்ளது. 

Wednesday, March 7, 2012

ஈரானிய பாராளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி அஹமத் நஜாதின் ஆதரவாளர்கள் தோல்வி!!!

iran electionஈரானில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் மதத் தலைவர் ஆயதுல்லா அலி கொமைனியின் ஆதரவாளர்கள் தான்75 சதவீத இடங்களைக் கைப்பற்றியுள்ளனர். இதன்மூலம் ஜனாதிபதி மஹ்மூத் அஹமத் நஜாதின் செல்வாக்கு குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் முக்கியமான கொள்கைகளை வகுப்பதில் ஜனாதிபதியும்நாடாளுமன்றமும் தான் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று கூறி வருபவர் ஜனாதிபதி அஹமத் நஜாத். ஆனால்தனது உத்தரவே நாட்டின் கொள்கையாக இருக்க வேண்டும் என்பதில் திட்டவட்டமாக உள்ளார் மதத் தலைவர் கொமைனி.

படுகொலைகளுக்கு ஈரானும் ரஷ்யாவும் சீனாவும் நேரடிப் பொறுப்பாளிகள் என்றும் குற்றச்சாட்டு

Syria
ஈரானும் ரஷ்யாவும் சீனாவும் டமஸ்கஸ் அரசாங்கம் மேற்கொள்ளும் படுகொலைகளுக்குத் துணைபோகின்றன. அதில் அவர்களும் பங்காளிகளாக உள்ளனர் என சிரிய இஹ்வான்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
"எமது மக்கள் மீது ஈவிரக்கமின்றி கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள படுகொலைகளுக்கு ஈரானும் ரஷ்யாவும் சீனாவும் நேரடிப் பொறுப்பாளிகள் என்றே நாங்கள் கருதுகிறோம்" என சிரிய இஹ்வான்களின் பேச்சாளர் ஸுஹைர் ஸாலிம் குற்றம்சாட்டியுள்ளார். அவர் இது தொடர்பாக அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளார்

சிரியா: உலக அதிகாரச் சமநிலையில் மாற்றம்!


சிரியா மத்திய தரைக்கடலில் லெபனான்,துருக்கிஈராக்ஜோர்தான்,இஸ்ரேல் ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்ட நாடு. உத்தியோகபூர்வ கணிப்பின்படி 74% சுன்னி முஸ்லிம்களும் 12% அலவி ஷீஆக்களும், 9%கிறிஸ்தவர்களும் வாழ்கின்றனர்.
1946 இல் சுதந்திரம் அடைந்ததிலிருந்து பல இராணுவப் புரட்சிகளை சந்தித்து வந்த சிரியாவில், 1971 ஆம் ஆண்டிலிருந்து2000 ஆம் ஆண்டு வரை ஹாபிஸ் அல் அஸத் என்பவர் ஜனாதிபதியாக இருந்தார். தற்போது அவரது மகன் பஷர் அல் அஸத் பதவி விலக வேண்டும் எனக் கோரி மில்லியன் கணக்கான மக்கள் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

காதர்அத்னான்:இஸ்ரேலிய பயங்கரவாதத்திற்கு இன்னொரு ஆதாரம்!


The father of Palestinian prisoner Khader Adnan holds a poster
ஃபலஸ்தீன் விடுதலை போராளி காதர் அத்னானின் சிறை உண்ணாவிரதம் 65 தினங்களை கடந்த வேளையில் இஸ்ரேலிய பயங்கரவாதத்தின் கோரமுகமும் மீண்டும் ஒரு முறை சர்வதேச சமூகத்தின் முன்னால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மரணம் வரை நீதிக்காக போராடுவேன்! – ஸாகியா ஜாஃப்ரி உறுதி!


zakia jafri
அஹ்மதாபாத்:குஜராத் இனப்படுகொலையின் போது கொடூரமாக கொலைச் செய்யப்பட்ட முன்னாள் காங்கிரஸ் கட்சியின் எம்.பி இஹ்ஸான் ஸாப்ரியின் மனைவி ஸாகியா ஜாஃப்ரி தனது 73-வது வயதிலும் நீதிக்கான போராட்டத்தை தொடர்கிறார். மரணம் வரை போராடுவேன் என்ற உறுதியான நிலைப்பாட்டில் அவர் உள்ளார்.
வழக்கை குறித்தும், நீதி கிடைப்பதற்கான முயற்சிகளை குறித்தும் மாத்யமம் நாளிதழுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான வழக்கில், மேலும் பல முக்கிய ஆவணங்களை, சிறப்பு கோர்ட்டில் நேற்று, சி.பி.ஐ., தாக்கல் செய்தது.




ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்த வழக்கு, டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் நீதிபதி ஓ.பி.சைனி முன்பாக நடக்கிறது. நேற்று விசாரணை துவங்கியதும், சி.பி.ஐ., சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.கே.சிங், இந்த வழக்கு தொடர்பான மேலும் சில முக்கிய ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்வது தொடர்பாக மனு அளித்தார். இதற்கு, எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

உ.பி.,யில் முலாயம்சிங் ஆட்சி; பஞ்சாப்- கோவாவில் பா.ஜ., ஆட்சி ; மணிப்பூர் காங்.,

புதுடில்லி: இந்தியாவின் மினி பொதுத்தேர்தல் என்றழைக்கப்படும் 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளி வந்த வண்ணம் உள்ளது. இதில் உ.பி., யில் முலாயம்சிங் கட்சி ஆட்சி அமைக்கு கிறது. மணிப்பூர், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா மாநிலங்களின் சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு துவங்கியது.இதில் பஞ்சாப், கோவா மாநிலங்களில் முழுமையாக வெளிவந்துள்ளது. மணிப்பூர், உத்தர்கண்ட், உ.பி., மாநிலங்களில் ஒரு சில தொகுதிகளுக்கு மட்டும் முடிவுகள் வெளி வர வேண்டியுள்ளது.
ஓட்டு எண்ணிக்கை துவங்கியது முதல் உ .பி.,மாநிலத்தில் ஆளும் கட்சியான பகுஜன்கட்சி ( மாயாவதி ) அதிக இடங்களில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் இந்த கட்சி ஆட்சியை இழந்துள்ளது. முலாயம் சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி 220 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.. ஆளும் மாயாவதி கட்சி ( 78 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதுது , பா.ஜ., 46 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 36 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

பெட்ரோல் விலை உயர்வு!!

புதுடில்லி:ஐந்து மாநில தேர்தல்கள் முடிந்த நிலையில் பெட்ரோல் விலையை 5 ரூபாய் வரை உயர்த்தும் படி, எண்ணெய் நிறுவனங்கள் மத்திய அரசைக் கோரி வருகின்றன.

தடையில்லா நிரந்தர இலவச மின்சாரம்!



அணுமின்சாரம் வேண்டுமா? வேண்டாமா? என காரசாரமாக விவாதித்து வரும் இவ்வேளையில் இந்த தடையில்லா நிரந்தர இலவச மின்சாரத்தை பற்றிய பதிவு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.

இன்று வருடத்தின் பெரும்பாலான நாட்கள் சூரிய ஒளியையே காண முடியாத ஐரோப்பிய நாடுகளில், சூரிய கதிர்களால் செயல்படும் மின்சார சக்தியை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார்கள். இங்கு இங்கிலாந்தில் இது பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. தமிழகமோ அனல் பறக்கும் சூரிய ஒளிக்கதிர்களை கொண்டிருந்தும் இந்த சூரிய ஒளிக்கதிர்களால் இயங்கும் மின்சாரத்தை அமல்படுத்தவில்லை. ஒரு சதுர மீட்டர் கொள்ளளவில் படுகின்ற சூரிய ஒளிக்கதிரால் ஒரு நாளைக்கு 1௦௦௦ வாட்ஸ் மின்சாரத்தை பெற முடியும். இதற்கு நாம் சோலார் பனல் எனப்படும் தகடுகளை நம் வீட்டின் கூரையிலோ அல்லது நன்கு சூரிய ஒளிக்கதிர்கள் படும் இடத்திலோ பொருத்தினால் போதும்.

இதனால் சாதாரணமாக ஒரு வீட்டிற்கு தேவைப்படும் மின்சாரத்தை பெற முடியும். ஆனால் Air conditioner போன்ற அதிக மின்சாரம் தேவைப்படும் இடங்களுக்கு இவையால் முழு மின்சாரத்தையும் வழங்க முடியாது. இங்கிலாந்தில் நம் வீட்டில் நாம் உற்பத்தி செய்யும் மின்சாரத்திற்கு அரசே பணம் தருகிறது. அதாவது நாம் பயன்படுத்தும் மின்சாரத்திற்கும் சேர்த்து.

இங்கிலாந்தில் இதன் வருமானத்தை கருத்தில் கொண்டு, பெரிய நிறுவனங்கள் வீட்டின் கூரைகளை ஒப்பந்தபடி பெற்று அதில் இந்த சோலார் பேனல்களை நிறுவி, அதிலிருந்து வரும் வருமானத்தை பெற்றுக் கொள்கிறார்கள். வீட்டின் உரிமையாளர் தேவையான மின்சாரத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.

நாமும் இத்திட்டத்தை அமல் படுத்தினால் அரசின் மின்சாரத்தையே சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. காற்றாலை மூலம் தயாரிக்கப் படும் மின்சாரம் நன்கு காற்று வீசினால்தான் நிறைய உற்பத்தியாகும். ஆனால் சூரிய ஒளிக்கதிர்கள் என்றுமே அடிப்பதால் தினமும் இது மின்சாரத்தை உற்பத்தி செய்யும். இதன் ஒரே பிரச்சினை என்னவென்றால், இதன் ஆரம்ப கட்ட முதலீடு அதிகமாக இருக்கும். இதற்கு இந்தியாவில் எவ்வளவு பணம் ஆகும் என தெரியவில்லை. இங்கிலாந்தில் சுமார் பத்து லட்சம் ரூபாயாகிறது.

இனி இது செயல்படும் விதத்தை பார்ப்போம்:

இந்த சோலார் தகடுகள் சூரிய ஒளியை DC கரண்ட்டாக மாற்றி விடும். பின்னர் இது நம் உபயோகத்திற்கு தேவையான AC கரண்ட்டாக மாற்றப்பட்டு நம் வீட்டில் ஏற்கனவே இருக்கிற Switch board இல் இணைக்கப்படும். இது உற்பத்தி செய்கின்றதைவிட அதிக மின்சாரம் தேவைப்பட்டால், அது அரசின் மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும். அதே சமயம் நம் தேவையைவிட அதிகமாக வரும் மின்சாரம், அரசின் மின் கம்பத்திற்கு மீட்டரின் வழியே சென்று விடும். இதனால் நாம் அரசிற்கு எவ்வளவு மின்சாரம் வழங்கியுள்ளோம் என தெரிந்து கொள்ளலாம். அதற்கான பணத்தை அரசு வழங்கிவிடும்.

தமிழகத்தில் எதையெல்லாமோ இலவசமாக வழங்குகிறார்கள். இப்படி உருப்படியானவற்றை இலவசமாக வழங்கலாம்! அல்லது மானியங்கள் கொடுக்கலாம். மிச்சி, கிரைண்டர் என கொடுத்து விட்டு மின்சாரத்தை சரியாக வழங்கமாட்டார்கள்! தமிழக முதல்வர் ஜெயலலிதா, என்ன புரட்சியை செய்து புரட்சி தலைவி என்ற பட்டத்தை பெற்றாரோ தெரியவில்லை. இந்த மின் திட்டத்தை அமல் படுத்தி உண்மையிலேயே புரட்சி தலைவி ஆவாரா?

பின்குறிப்பு: இந்த பதிவை யார் வேண்டுமானாலும் தங்கள் வலைத்தளத்தில் வெளியிடலாம். இது பலரையும் சென்றடையவேண்டும் என்பதே என் நோக்கம்.

வெளிநாடு செல்பவர் கவனத்திற்கு!




சமுதாயத்தில் கல்வி பயிலுபவர்களும் சரி அல்லது பாதியிலே நிறுத்திவிட்டு எனக்கு கல்வியே வேண்டாம்(?) என கூறுபவர்களும் சரி, இவர்கள் பதினெட்டு வயதை கடந்தவுடன் முதலில் ஆயத்தமாவது "பாஸ்போர்ட்" எடுப்பதற்கே ! 


"பாஸ்போர்ட்" எடுத்தவுடன் முதலில் அவர்கள் நாடிச்செல்வது நமது தரகர்களையே, இவர்கள் வளைகுடா நாடுகள், கிழக்காசிய நாடுகள், அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து ஆகிய நாடுகளுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி அவர்களிடம் கணிசமான தொகையை பேசிவைத்துக் கொண்டு அதில் அட்வான்ஸாக ஒரு குறிப்பிட்ட பணத்தையும் பெற்றுக்கொள்கிறார்கள். பணத்தைக் கொடுத்தவர்களோ வருட கணக்கில் காத்துக்கிடக்க வேண்டும்.