அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, March 7, 2009

அமெரிக்கா மற்றும் கனடாவில் வசிக்கும் சகோதரர்களுக்கு.........

Locate Local Islamic Centers, Organizations, Stores
www.islamicfinder.org

Locate Halal Grocery Stores, etc.
www.zabihah.com

Islamic Circle of North America (ICNA)
166-26, 89th Avenue
Jamaica, NY 11432
Tel: (718)-658-1199
info@icna.org
http://www.icna.org
Convention: Independence Day Weekend (July 4th Weekend)

ICNA Relief
http://www.reliefonline.org/

Islamic Society of North America (ISNA)
6555 South 750 East
Plainfield, IN 46168
Tel: (317) 839-8157
info@isna.net
http://isna.net
Convention: Labor Day Weekend (Sept 1st Weekend)

Muslim American Society (MAS)
P.O. Box 1896
Falls Church, VA 22041
Tel: (703) 998-6525
http://www.masnet.org
Convention: Christmas Weekend (Dec 25th Weekend)

Council of Islamic Relations (CAIR)
453 New Jersey Avenue, S.E.
Washington, DC 20003
Tel: 202-488-8787
cair@cair-net.org
http://www.cair-net.org/

Islamicity.com
P.O. Box 3030
Culver City CA 90231, USA
Tel: 310-642-0006
info@IslamiCity.com
www.IslamiCity.com

Muslim Students Association
http://www.msa-natl.org/

Organizations that Donate Islamic Books and Da'wah Materials
http://www.msa-natl.org/resources/Donation_Books.html

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா...!

(நண்பர் அனுப்பிய கண்ணீர் கவிதை,பல பெண்மணிகளின் கணவுகவிதையும் கூட)!
ٌ ٌ சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்துவிட்டு ஓடுகிறாய்!
ٌ என் பசி மறந்து உனக்காக காத்திருக்கும்பொழுது காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு.. ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்!

ٌ ٌ மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்.... கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய்
கெஞ்சுவதும்... மிஞ்சுவதும்...
அழுவதும்... அணைப்பதும்...
கண்டிப்பதும்... கண்ணடிப்பதும்...
இடைகிள்ளி... நகை சொல்லி...
அந்நேரம் சொல்வாயடா "அடி கள்ளி "
ٌ இவையெல்லாம் இரண்டே மாதம் தந்துவிட்டு...
எனை தீ தள்ளி வாழ்வள்ளி சென்றுவிட்டாய்... என் துபாய் கணவா!
ٌ கணவா... - எல்லாமே கனவா.......?

கணவனோடு இரண்டு மாதம்... கனவுகளோடு இருபத்தி இரண்டு மாதமா...?
ٌ 12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ ... 5 வருடமொருமுறை ஒலிம்பிக்....

4 வருடமொருமுறை உலககோப்பை கிரிக்கெட்.... ...

2 வருடமொருமுறை கணவன் ...

நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்!
ٌ இது வரமா ..? சாபமா..?



அழகுக்காய் பிணத்தின் சாம்பலில்... முகம் பூசுவோர் உண்டோ ?
ٌ கண்களின் அழுகையை... கண்ணாடி தடுக்குமா கணவா?

நான் தாகத்தில் நிற்கிறேன் - நீ கிணறு வெட்டுகிறாய்
நான் மோகத்தில் நிற்கிறேன் - நீ விசாவை காட்டுகிறாய்

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா... வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்
ٌ விட்டுகொடுத்து... தொட்டு பிடித்து...
தேவை அறிந்து... சேவை புரிந்து...
உனக்காய் நான் விழித்து... எனக்காக நீ உழைத்து...
தாமதத்தில் வரும் தவிப்பு... தூங்குவதாய் உன் நடிப்பு...

வாரவிடுமுறையில் பிரியாணி... காசில்லா நேரத்தில் பட்டினி...
ٌ இப்படி காமம் மட்டுமன்றி எல்லா உணர்ச்சிகளையும் நாம் பரிமாறிக்கொள்ளவேண்டும்

ٌ இரண்டு மாதம்மட்டும் ஆடம்பரம் உறவு உல்லாச பயணம்..

பாசாங்கு வாழ்க்கை புளித்துவிட்டது கணவா!

ٌ தவணைமுறையில் வாழ்வதற்கு வாழ்க்கை என்ன வட்டிக்கடையா?
எப்பொழுதாவது வருவதற்கு நீ என்ன பாலை மழையா ?

இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா ?

ٌ விரைவுத் தபாலில் காசோலை வரும் காதல் வருமா ?
பணத்தை தரும்... பாரத வங்கி ! பாசம் தருமா?



ٌ நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம்
அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால் விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ என் இதயத்தை?


பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு... நீ தங்கம் தேடி துபாய் சென்றாயே?
ٌ பாலையில் நீ வறண்டது என் வாழ்வு!


வாழ்க்கை பட்டமரமாய் போன... பரிதாபம் புரியாமல் ஈச்சமரம் பக்கம் நின்று எடுத்த புகைப்படம் அனுப்புகிறாய்!

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா...

வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்!
உன் துபாய் தேடுதலில்... தொலைந்து போனது - என் வாழ்க்கையல்லவா..?
ٌ விழித்துவிடு கணவா! விழித்து விடு - அந்த கடவுச்சீட்டு வேண்டாம்... கிழித்துவிடு!

விசாரித்து விட்டு போகாதே கணவா விசா ரத்து செய்துவிட்டு வா!
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா... வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்

வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்

வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன.

வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.

பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.

வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?

1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.

3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.

4. வெங்காயத் தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.

5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.

7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

8. வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

9. வெங்காயப், வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.

10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.

11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்துவிடும்.

14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.

15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும்,
குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.

16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.

17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.

18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.

19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.

22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.

23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.

25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.

27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.

28. ஜலதோஷ நேரத்தில் வெங் காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.

29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில்பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.

30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.

31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.

32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம்.

33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.

34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.
35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.

36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.

37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.

38. காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.

39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.

40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.

41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.

42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.

43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.

44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்

45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.

46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.

47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.

48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.

49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி யும், மூளை பலமும் உண்டாகும்.

50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.

தேர்தல்:சுவர் விளம்பரங்களுக்கு தடை

திருச்சி, தஞ்சை, கரூர், புதுக்கோட்டை, நாகை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்ட கலெக்டர்களுடன் நாடாளுமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா திருச்சியில் ஆலோசனை நடத்தினார்.


கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம்,

’’தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விட்டது. பொது இடங்கள் மற்றும் தனியார் இடங்களில் கட்சி சின்னம் வரைந்து விளம்பரப்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.

சுவர் விளம்பரம் செய்யக்கூடாது என்ற விதி முன்பே இருந்தாலும், இந்த முறை கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும். சுவர் விளம்பரம் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.


அரசு தரப்பில் புதிய வேலைகள், திட்டங்கள் அறிவிக்க கூடாது. இலவச உதவி பொருட்கள் தரக்கூடாது. அமைச்சர்கள் அரசு முறை சுற்றுப்பயணம் செல்லக்கூடாது. தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்றால் அரசு வாகனம் பயன்படுத்தக்கூடாது.


தேர்தலில் பிரச்னை ஏற்பட்டாலோ, வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுது ஏற்பட்டாலோ உடனடியாக தகவல் தெரிவிக்க அலுவலர்களுக்கு செல்போன் தரப்படும். செல்போன் டவர் கிடைக்காத இடங்களில் வயர்லெஸ் பயன்படுத்தப்படும்.


வாக்குச்சாவடி அதிகாரிகளின் செயல்பாடு குறித்து பயிற்சி அளிக்க ஒரு சிடி தயாரித்துள்ளோம். இது அதிகாரிகளுக்கு தரப்படும்.


வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 15 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை கொண்டு வரலாம் என தேர்தல் ஆணையம் முன்பு அறிவித்திருந்தது. இந்த முறை இந்த ஆவணங்களின் எண்ணிக்கை குறைக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

அளவுக்கதிகமான விதிமுறைகளே ஊழலுக்கு காரணம்!

அளவுக்கதிகமான விதிமுறைகளே கல்வித் துறையில் ஊழலுக்கு வித்திடுகிறது என்று வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன் தெரிவித்தார்.
சென்னை சமூகப் பணி கல்லூரி ஏற்பாடு செய்திருந்த "வளரும் இந்தியாவில் உயர் கல்வி' குறித்த நிகழ்ச்சியில் வியாழக்கிழமை ஜி.விஸ்வநாதன் பேசியதாவது:
உயர் கல்வியை மேம்படுத்த வேண்டுமெனில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கென தனி கல்வி வாரியம் தொடங்கப்பட வேண்டும்.
சிவில் விமானங்கள், ராணுவ விமானங்களை இறக்குமதி செய்ய பல கோடிகளை செலவிடுகிறோம். போதிய தொழில்நுட்பம் இருந்தும் நாம் விமானங்களை உள்நாட்டிலேயே கட்டுவதில் முனைப்புக் காட்டாமல் இருக்கிறோம்.
தற்போது 7 லட்சம் டாக்டர்கள்தான் உள்ளனர். ஆனால், 8 லட்சம் டாக்டர்கள் தேவைப்படுகின்றனர். 15 லட்சம் செவிலியர்கள் தேவைப்படுகின்றனர். தற்போதைய நிலையில் 10 லட்சம் செவிலியர்களே உள்ளனர். அதிகமான மருத்துவ கல்வி நிறுவனங்கள், செவிலியர் நிறுவனங்கள் தொடங்கப்பட வேண்டும்.
ஒரு கல்வி நிறுவனம் தொடங்க வேண்டுமெனில் "தடையில்லா சான்றிதழ்' தேவைப்படுகிறது. இது 14 அரசு துறைகளில் இருந்து வழங்கப்பட வேண்டும். சில மாநிலங்களைத் தவிர இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் இம்முறைதான் நிலவுகிறது.
கல்வித் துறையில் உள்ள அளவுக்கதிகமான விதிமுறைகள், லஞ்ச லாவண்யத்துக்கு வித்திடுகிறது. இது மாற்றப்பட வேண்டும்.
இந்தியாவில் உள்ள 2,300 பொறியியல் கல்லூரிகளில் போதிய தரம் வாய்ந்த ஆசிரியர்கள் இல்லை. மாணவர்களின் கல்வித் தரத்தைக் கருத்தில் கொண்டு, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை, பல்கலைக்கழக மானியக் குழு ஆகியவை உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
.

இஸ்லாம் பார்வையில் "சபை ஒழுங்கு"

ஒரு நாள் அண்ணல் நபி அவர்கள் கையில் தடியை ஏந்தியவர்களாக எங்களிடம் வந்தனர். அப்பொழுது நாங்கள் அவர்களுக்(கு மரியாதை செய்வதற்)காக எழுந்துவிட்டோம். அதற்கு அவர்கள் 'அரபியல்லாதவர்களில் சிலர், சிலருக்கு மரியாதை செய்யும் பொருட்டு எழுந்துவிடுவது போன்று நீங்கள் எழுந்து விடாதீர்கள்' என்று கூறினர். அறிவிப்பவர்: அபூ உமாமா(ரலி) நூல்: அபூதாவூத்

நபி அவர்களைவிட (அவர்களின்) தோழர்களுக்கு எவரும் மிகவும் உவப்பானவராக இருக்கவில்லை. எனினும் நபி அவர்களை அவர்கள் பார்ப்பின் எழுந்திவிட மாட்டார்கள். காரணம் இதை நபி அவர்கள் விரும்பமாட்டார்கள் என்பதைத் தோழர்கள் அறிந்திருந்ததால்தான். அறிவிப்பவர்: அனஸ்(ரலி) திர்மிதீ

முஆவியா(ரலி) அவர்கள் ஜுபைர் (ரலி) அவர்களின் மகனாரிடமும், ஸஃப்வான் (ரலி) அவர்களின் மகனாரிடமும் வந்தனர். அப்பொழுது அவ்விருவரும் அவர்களுக்காக எழுந்து நின்றனர். அப்பொழுது முஆவியா(ரலி) அவர்கள் அவ்விருவரையும் 'நீங்கள் அமர்ந்து கொள்ளுங்கள். ஏனெனில் நிச்சயமாக எவருக்குத் தமக்காக மக்கள் எழுந்து நிற்பது மகிழ்ச்சியை நல்குகிறதோ அவர் நரகத்தை தம் இடமாக்கிக் கொள்ளவும் என்று நபி அவர்கள் கூற நான் கேட்டேன்' என்று கூறினர். அறிவிப்பவர்: அபூமிஜ்லஸ் நூல்: அபூதாவூத், திர்மிதீ

உங்களில் எவரும் சபையில் வீற்றிருப்பவரை எழுந்திருக்கச் செய்து அங்கு அமரவேண்டாம். எனினும் நீங்கள் நெருங்கி அமர்ந்து இடத்தை விசாலமாக்கி (அவருக்கு இடம்) அளியுங்கள். அல்லாஹ் உங்களுக்கு விசாலாமாக்கி வைப்பான் என்று நபி அவர்கள் கூறினர். அறிவிப்பாளர்: இப்னு உமர்(ரலி) நூல்: புகாரி,முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ

"ஒருவர் சபையிலுருந்து ஒரு வேலையாக எழுந்து சென்று பின்னர் திரும்பி வருவாரானால் அவரே அவ்விடத்திற்கு மிகவும் உரிமையுடையவராவார்" என்று நபி அவர்கள் கூறினர். அறிவிப்பவர்: ஹுதைஃபா(ரலி)வின் மகனார் வஹ்பு நூல்: திர்மிதீ

நபி அவர்களிடம் நாங்கள் சென்றால் எங்களில் ஒவ்வொருவருக்கும் எங்கு இடம் கிடைக்கிறதோ அங்கு நாங்கள் அமர்ந்து விடுவோம். அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு ஸமுரா(ரலி) நூல்: அபூதாவூத்

"இருவருக்கிடையில் அவ்விருவரின் அனுமதியின்றிப் பிறர் அமர்வது கூடாது" என்று நபி அவர்கள் கூறினர். அறிவிப்பவர்: அம்ருப்னு ஷுஐப் நூல்: அபூதாவூத், திர்மிதீ

பள்ளிவாயிலுக்குள் வந்த நபி அவர்கள் தோழர்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து அமர்ந்திருப்பதைக் கண்டு அவர்களை நோக்கி "உங்களுக்கு என்ன வந்துவிட்டது? நீங்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து அமர்ந்திருப்பதைக் காணுகிறேன் என்று வினவினர். அறிவிப்பாளர்: ஜாபிர் இப்னு ஸமுரா(ரலி) நூல்: முஸ்லிம், அபூதாவூத்

Thursday, March 5, 2009

அஜினமோட்டோவால் ஆபத்து - டாக்டர் கங்கா!


சாம்பார், மீன் குழம்பு, ஃபிரைடு ரைஸ் என்று எல்லா உணவுகளின் ருசியையும் வாசனையையும் அதிகரிக்கப் பயன்படும் ஒரு டேஸ்ட் மேக்கர் அஜினமோட்டோ. இன்று ஹோட்டல் உணவு மட்டுமல்லாமல் வீடுகளுக்குள்ளும் தன் ராஜ்ஜியத்தை விரித்திருக்கிறது அஜினமோட்டோ.

தொடர்ந்து அஜினமோட்டோ எடுத்துக்கொண்டால் உடல் நலம் பாதிக்கப்படும் என்று சொல்லப்படுகின்றது. இந்த அஜினமோட்டோவால் உடம்புக்கு நமக்கு அப்படி என்னதான் பிரச்னை?

* அதென்ன அஜினமோட்டோ?


உணவில் வாசனையை அதிகப்படுத்துவதற்காக நாம் பயன்படுத்தும் ஒருவித வேதிப்பொருள் தான் இந்த அஜினமோட்டோ (Ajinomoto). உங்களுக்கொன்று தெரியுமா? அந்தக் காலத்திலெல்லாம், சீனர்களும் ஜப்பானியர்களும் உணவில் வாசனையை அதிகப்படுத்திக் கொள்ள ஒரு வகையான கடல்பாசியை உபயோகித்தார்கள். இந்தக் கடல் பாசியில் தான் வாசனையை மேம்படுத்த உதவும் மோனோஸோடியம் குளுட்டோமேட் அதாவது M.S.G. என்ற வேதிப்பொருள் இருப்பது தெரியவந்தது. சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு அஜினமோட்டோ(Ajinomoto) என்ற கம்பெனி இதை வியாபார ரீதியாக தயாரிக்க ஆரம்பித்தது. நாளடைவில் அஜினமோட்டோ என்ற பெயரே இந்த வேதிப்பொருளுக்கும் நிலைத்து விட்டது.

* மோனோ சோடியம் குளுட்டோமேட்


இந்த குளுட்டோமேட்டை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். நமது மூளை வளர்ச்சிக்குத் தேவையான குளுட்டோதயான் மற்றும் காமா அமினோ புட்ரிக் அமிலம் போன்றவற்றைத் தயாரிக்க இது உதவுகிறது. அதே போல் இது, மூளை நரம்புகள் வேலை செய்யவும் ஓரளவு உதவுகிறது.


அப்புறம் என்ன? அஜினமோட்டோவிலும் இந்த மோனோ சோடியம் குளுட்டோமேட் இருக்கிறது. அது உடலுக்கும் நல்லதுதானே என்கிறீர்களா? அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே?. அதிக அளவில் இந்த எம்.எஸ்.ஜி. நம் உடலில் சேர்ந்தால் அது மூளையின் ஹைப்போ தலாமஸ் என்ற முக்கியமான ஒரு பகுதியைப் பாதித்து விடும்!

* வியாபார ரீதியான அஜினமோட்டோவில் என்னவெல்லாம் இருக்கிறது?


இதில் 78% குளுடாமிக் அமிலமும் 22% சோடியமும் உள்ளது. இந்த குளுடோமேட் என்பது பால், பால் பொருள்கள், கறி, மீன் மற்றும் காய்கறிகளில் காணப்படுகின்ற ஒரு அமினோ அமிலம். நமது உடலில் கூட இந்த அமினோ அமிலம் இயற்கையாகவே உற்பத்தி செய்யப்படுகிறது.

* MSG அதிகமானால் நம் உடலுக்கு என்னென்ன பிரச்னைகள் வரலாம்?


நமது உணவுப் பழக்க வழக்கங்களின் கட்டுப்பாடு நமது மூளையில் உள்ள ஹைபோ தாலமஸ் என்ற பகுதியில் உள்ளது.


MSGன் வாசனையால் ஹைபோதாலமஸ் தூண்டப்படுகிறது. இன்சுலின், அட்ரினலின் போன்றவை சுரப்பதையும் அதிகப்படுத்துகிறது. இவை அதிகமாக உணவு சாப்பிடத் தூண்டுபவை. எனவே அதிக உணவால் முதலில் நம் எடைதான் கூடும்!


மூளையில் சிரோடோனின் என்ற பொருளின் அளவு குறைந்து, தலைவலி, மனச்சோர்வு, டிப்ரஷன், உடல் சோர்வு, உணவுக்கு ஏங்குதல் போன்றவை ஏற்படுகிறது.


எம்.எஸ்.ஜி. நமது உணவில் உள்ள துத்தநாகம் நம் உடலில் சேர்வதைக்குறைக்கிறது. தூக்க குறைபாடு ஏற்படுகிறது.


தூக்கக் குறைவால்-மூளையில் டோபாமின் (Dopamine) அளவு குறைந்து, அதன் விளைவாக ஞாபக சக்தி குறைந்து, கவனக்குறைவும் திட்டமிட்டு செயல்படும் திறனும் குறைகிறது. அதிகமான குளுடாமிக் அமிலம் (Glutamic acid) உயிரின் முக்கிய அணுவான DNA (Deoxyribonucleic acid) என்ற மூலப் பொருளையே பாதிக்கிறது என்கிறார்கள்.


இது உடனடியாக நடப்பதில்லை. பாதிப்பின் அறிகுறிகளும் உடனே வெளிப்படுவதில்லை. மெது மெதுவாக தொடர் பாதிப்பு ஏற்படுகிறது.


உடல் எடை அதிகரிப்பு, நடத்தை விபரீதங்கள், கவனக்குறைவு போன்றவை அதிகரிப்பதே இதன் சில அறிகுறிகள்.


சோதனைச் சாலை எலி போன்றவற்றை விட MSG ஏற்படுத்தும் தாக்கம் மனிதர்களுக்கு சுமார் 5-மடங்கு அதிகம்! அதிலும் கருவில் உள்ள சிசுக்களுக்கும் சிறு குழந்தைகளுக்கும் பாதிப்பு மிக அதிகம். தாயின் ரத்தம் மூலம் கருவில் உள்ள குழந்தையின் மூளையைத் தாக்கி மூளை வளர்ச்சியைப் பாதிக்கிறது.


தீவிரவாதச் செயல்கள், உணர்ச்சிகள் நிலையில்லாமை, கவனக் குறைவு ஆகியவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இதன் பாதிப்பு வேறுபடுகிறது.
பாதிக்கும் அளவு, நேரம் போன்றவையும் வேறுபடுகிறது. MSG கலந்த உணவைச் சாப்பிட்ட சில நிமிடங்கள் முதல் 2-3 நாட்களுக்குப் பிறகு கூட அறிகுறிகள் ஏற்படலாம்.


உடனே தெரியும் அறிகுறிகள் எனில், வயிற்று வலி, மூட்டு வலி, நாக்கு வீங்குதல் போன்றவை நரம்பு செல்களும் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றன.


அமெரிக்காவின் உணவு மருந்து கட்டுப்பாடு நிறுவனம் தினம் 3 கிராம் வரை MSG பாதுகாப்பானது என்று நிர்ணயித்துள்ளது. ஆனால் சிலருக்கு ஒரு கிராமுக்கு குறைவாக உணவில் சேர்த்தாலே நச்சு அறிகுறிகள் வெளிப்படுகின்றன.


தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரத்தைப் பார்த்து குழந்தைகள் ஆசையாக வாங்கி சாப்பிடும் ரெடிகுக் நூடுல்ஸில் மிகவும் அதிகமாக MSG உள்ளது. எனவே குழந்தைகள்தான் இதன் தாக்கத்திற்கு மறைமுகமாக ஆளாகிறார்கள்.


ஃபாஸ்ட் புட் (Fast Food) மையங்களில் விற்பனையாகும் அனைத்து உணவு வகைகளிலும் MSG உள்ளது. வாசனை மற்றும் ருசிக்காக அந்த உணவு சாப்பிடும் இன்றைய டீன் ஏஜ் பருவத்தினர் தங்களுக்கு ஏற்படப் போகும் ஆபத்தை உணராமல் ஆடிப்பாடிக் கொண்டு உண்டு களித்துக் கொண்டிருப்பதுதான் வேதனைக்குரிய விஷயம்.

* எந்தெந்த பொருட்களில் எம்.எஸ்.ஜி. அதிகமிருக்கிறது?

1. பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள்

2. சோயா புரதத்தால் தயாரிக்கப்படும் பொருள்கள். (உதாரணத்திற்கு சோயா சாஸ்)

3. கார்ன் மால்ட், ஈஸ்ட், பார்லி மால்ட்.

4. சூப் பவுடர்கள்.

நன்றி: கூடல்.காம்

தொழுகையில் குர்ஆனைப் பார்த்து ஓதுவது


இறைவேதம்ஐயம்: தொழும் பொழுது குர்ஆனைத் திறந்துப் பார்த்து அல்லது கைகளில் ஏந்திக் கொண்டு அதைப் பார்த்து ஓத அனுமதி உள்ளதா?

மின்னஞ்சல் வழியாகச் சகோதரர் Mazlan Ameen

தெளிவு:

தொழும்போது குர்ஆனைத் திறந்து பார்ப்பதற்கோ அல்லது கைகளில் ஏந்தி அதைப் பார்த்து ஓதுவதற்கோ நாமறிந்தவரை மார்க்கத்தில் வழிகாட்டல் ஏதும் இல்லை.

(தொழுகையில்) ''உள்ளச்சத்துடன் - கட்டுப்பட்டு - நில்லுங்கள்'' (அல்குர்ஆன், 2:238)

(அவர்கள்) ''தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள்'' (அல்குர்ஆன், 23:2)

ஒருவர் தம்மைத் தொழுகைக்குத் ஆயத்தப்படுத்திக்கொண்டு, தொழுகையின் ஆரம்ப நிலையில் நின்று, தொழுகைக்குள் நுழையும் முதல் தக்பீர், ''தக்பீர் தஹ்ரீமா'' எனப்படும். இத்துவக்க தக்பீரைக் கூறியவுடன் தொழுகைக்கு வெளியே செயலாற்றும் உண்ணுதல், பருகுதல், பேசுதல் போன்ற உலகச் செயல்பாடுகள் விலக்கப் பட்டதாகிவிடும். தொழுகை என்பது வணக்கங்களின் சிகரமாகும். அந்நேரம் தொழுபவர் தன் கவனம் முழுமையும் இயன்றவரை தொழுகையில் மட்டுமே செலுத்த வேண்டும். தொழுகையில் இஸ்லாம் கற்பிக்கும் முறைகளை முடிந்த அளவுக்குக் கடைப்பிடித்து உள்ளச்சத்துடன் தொழ வேண்டும்; மற்றவற்றை ஒதுக்கிவிட வேண்டும்.

'முடிந்த அளவுக்கு' என்பதில் தொழுகையின்போது எதிர்பாராது நாம் எதிர் கொள்ளும் தும்மல், இருமல் போன்ற உபாதைகளின்போது சளியை உமிழ்தல் / துடைத்துக் கொள்ளுதல் ஆகியவையும் மனிதருக்குத் தொல்லை தரும் ஊர்வன / பறப்பனவற்றை அப்புறப் படுத்தலும் தொழுகைக்குக் குறைவை ஏற்படுத்தா என்பதற்கு நபிவழியில் சான்றுகள் உள்ளன.

மேற்சொன்னவை அனைத்தும் தொழுகையில் நமது கவனம் சிதறுவதற்குக் காரணமாக இருந்தாலும் அவை அனைத்தும் நமது விருப்பத்துக்கு மாற்றமாக, நாம் எதிர்பாராமல் நடப்பவை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தங்கள் கேள்வியில் கண்டவாறு தொழும்போது குர்ஆன் பிரதியைக் கையில் வைத்துக் கொண்டு ஓதும்போதும் ஒரு ஸ்டாண்டில் வைத்துப் பார்த்து ஓதும்போதும் அடுத்த பக்கத்தைத் திருப்புவதற்காக அடிக்கடி நமது கைகளைப் பயன் படுத்த வேண்டி வரும். அப்போதெல்லாம், "தொழுகையில் நிற்கும்போது நபி (ஸல்) அவர்கள் தங்கள் இடக்கையை நெஞ்சில் வைத்து அதற்குமேல் வலக்கையை வைத்திருப்பார்கள்" என்ற நபிவழிக்கு அடிக்கடி மாறு செய்ய வேண்டி வரும்.

[நபித்தோழர் வாஇல் இப்னு ஹுஜ்ரு (ரலி) அவர்களது ஆதாரப் பூர்வமான இந்த அறிவிப்பை இமாம் இப்னு ஹுஸைமா, பஸ்ஸார் ஆகிய இருவரும் பதிவு செய்திருக்கிறார்கள். நபித்தோழர் ஹல்புத் தாஇ (ரலி) அவர்களின் ஆதாரப் பூர்வமான அறிவிப்பை இமாம் அஹ்மது அவர்கள் தங்களது முஸ்னதில் பதிவு செய்திருக்கிறார்கள். இவ்வனைத்தையும் புகாரீ ஹதீஸ் எண் 698க்கு விரிவுரையாக ஃபத்ஹுல் பாரீயில் இமாம் அஸ்கலானீ அவர்கள் மேற்கோள் காட்டியுள்ளார்கள்.]

மேலும், கைகளிலோ ஸ்டாண்டிலோ குர் ஆன் பிரதிகளை வைத்துக் கொண்டு, அதில் பார்வையைச் செலுத்தி ஓதும்போது நமது கவனம் முழுவதும் காற்றடித்தால் குர்ஆனின் பக்கங்கள் மாறிவிடுமோ என்ற எண்ணத்திலும் அது கீழே விழுந்து விடாமல் இருப்பதிலும் குவிக்கப்படும். இதுவும் தொழுகையின் ஒழுங்குகளுக்கு மாற்றமானதாகும்.

"நல்லது, நன்மையானது" என்று நாமாக நினைத்துக் கொண்டு, வணக்க-வழிபாடுகளில் நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தராத எதையும் புகுத்தி விடக் கூடாது. "நீண்ட குர்ஆன் வசனங்கள் மனப்பாடம் இல்லையென்றால் குர்ஆன் பிரதிகளைப் பார்த்துத்தான் ஓதியாக வேண்டும்" என்று இஸ்லாம் நம்மைக் கட்டாயப் படுத்தவே இல்லை. மேலும் நீண்ட குர்ஆன் வசனங்கள் ஓதித்தான் தொழ வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. மாறாக, ஒரு இஷாத் தொழுகையில் நீண்ட அத்தியாயமான சூரத்துல் பகரா முழுவதையும் ஓதித் தொழ வைத்த முஆத் இபுனு ஜபல் (ரலி) அவர்களைப் பற்றி "தொழுகையை அளவுக்கதிகம் நீட்டுகிறார்" என்று புகார் சொல்லப் பட்டவேளை, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களைக் கடிந்து கொண்டார்கள். மேலும், "அவ்வாறு நீட்ட வேண்டாம்; அஷ்ஷம்ஸு, அல்-லைல், அல்-அஃலா, ஆகிய அத்தியாயங்களை ஓதிப் போதுமாக்கிக் கொள்க" என்று அறிவுரை கூறினார்கள். [புகாரீ ஹதீஸ் எண் 660] எனும்போது, இஸ்லாத்தில் இல்லாத வழிகளை நாமாக ஏற்படுத்திக் கொண்டு, அதன் மூலம் நமக்கு நாமே தொல்லைகளைச் சுமக்க வேண்டுவதில்லை.

"மார்க்கம் எளிமையானது; அதை (உங்களுக்கு நீங்களே) கடினமாக்கிக் கொள்ளாதீர்கள்" [புகாரீ ஹதீஸ் எண் 38] என்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கட்டளைப்படி, தொழும்போது குர்ஆன் பிரதிகளைப் பார்த்து ஓதுவதற்குக் கட்டாயப் படுத்தும் இஸ்லாமிய வழிகாட்டல் ஏதுமில்லாததால் அதைத் தவிர்த்துக் கொண்டு, எளிமையான இஸ்லாத்தைக் கடினமாக்காமல் நடைமுறைப் படுத்துவதே சரியான நபிவழியாகும்.

முற்றாக அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே!

வளைகுடாத் தொழிலாளர்களுக்கு வழியமைக்கும் கேரளம்


உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் பொருளாதாரப் பின்னடைவினால், "மத்தியக் கிழக்கு நாடுகளின் நிறுவனங்களில் மிகுந்து போனவர்களாகக் கருதப்பட்டுப் பணி நீக்கம் செய்து தாயகத்திற்குத் திருப்பி அனுப்பப்படும் பல்லாயிரக்கணக்கிலான இந்தியத் தொழிலாளிகளுக்குக் கடனுதவி வழங்கி அவர்கள் தமது வாழ்வாதாரத்தை அமைத்துக் கொள்ள வழிவகுக்கப்படும்" என்று கேரள அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவின் கணிப்புப்படி மத்தியக் கிழக்கு நாடுகளிலிருந்து இரண்டு இலட்சம் பேர் தற்போதய பொருளாதாரச் சரிவின் விளைவாக வருகிற ஜூன் மாத இறுதிக்குள் வேலையிழந்து திரும்புவார்கள். அவர்களுள் அதிகமானவர்கள் வளைகுடா நாடுகளில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த கேரளத் தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரள நிதியமைச்சர் டி. எம். தாமஸ் ஐஸக் கூறுகையில், "இவ்வகையில் நாடு திரும்பும் பணியாட்களுக்கு ஒரு பில்லியன் இந்திய ரூபாய்கள் (சுமார் 74 மில்லியன் அமீரக திர்ஹம்கள்) கடனுதவிநிதியாகக் கேரள மாநில வருட பட்ஜெட்டில் ஒதுக்கப்படும்" என்று கடந்த (27.2.2009) வெள்ளியன்று அறிவித்தார்.

ந்தப் பணம் வேலையிழந்து நாடு திரும்பியவர்களின் தேவைக்கு ஏற்ப, சிறுதொழில்கள் அமைத்துக் கொள்ளும் விதமாக முறையாக ஒதுக்கப்பட்டு (கடனாக) வழங்கப்படும் என்று அமீரகத்திலிருந்து வெளிவரும் 'தி நேஷனல்' எனும் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கும் மேலதிகமாக, "நூறு மில்லியன் ரூபாய்கள் (7.4 மில்லியன் அமீரக திர்ஹம்கள்) வேலையில் சேர்ந்து இரண்டு வருடத்திற்கும் குறைந்த காலத்தில் கட்டாயப் பணி நீக்கம் செய்யப்படவர்களுக்காக ஒதுக்கப்படும்" என்றும் ஐசக் கூறினார்.

இந்த அறிவிப்பினை வரவேற்கும் விதத்தில், "பிரச்சினையை இனங்கண்டு முறையான தீர்வுகாணும் பாதையில் இது நல்லதொரு துவக்கம்" என்று அமீரகத்தில் வாழும் இந்தியர்கள் தெரிவித்தனர்.

ஆயினும், "ஒதுக்கப்படுள்ள இந்த நிதித் தொகை உண்மையில் முறையான பலன்கள் விளைவித்திட மிகவும் குறைவானது" என்று சிலர் கருத்துக் கூறியுள்ளனர்.

"இது போன்றதொரு நடவடிக்கை மாநிலத்தின் மூலம் எடுக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகையால் இதை வரவேற்கிறேன். அதேநேரத்தில், இது ஒரு சிறிய தொகையாகவே நான் கருதுகிறேன்" என்று வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு ஆலோசனை, உதவி வழங்கிடும் அமைப்பான 'வெளிநாடு வாழ் உறவின் முறையினர் நல அறக்கட்டளை' (பிரவாஸி பந்து வெல்ஃபேர் டிரஸ்ட்)இன் தலைவர் கே. வி. ஷம்ஷுத்தீன் கூறினார்.

கேரளாவின் பொருளாதார நிலை மிகவும் மோசமாகி, அது தற்போது கடும் சிரமத்தில் போராடிடும் நிலைக்கு முக்கிய காரணம் வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் பண வரத்து குறைந்துள்ளதே ஆகும்.

இந்தியாவிற்கு வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்படும் மொத்தப் பணத்தில் 25 சதவீதம் கேரள மாநிலத்தின் கணக்கில் வருகிறது என்று திருவனந்தபுரத்தில் உள்ள 'சென்டர் ஃபார் டெவலப்மண்ட் ஸ்டடீஸ்' (Centre for development studies) எனும் மேம்பாட்டு ஆய்வு மையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின்படி 1.9 மில்லியன் மலையாளிகள் இந்தியாவுக்கு வெளியே வசிப்பதாகவும் அதில் 90 சதவீதம் மத்தியக் கிழக்கு நாடுகளில் குறிப்பாக (U A E) ஐக்கிய அரேபிய அமீரகத்திலும் சவூதி அரேபியாவிலும் வாழ்வதாகக் கூறப் படுகிறது.

"வெளிநாடு வாழ் இந்தியர்கள் பல மில்லியன்கள் ரூபாயை இந்தியாவிற்கு (அந்நியச் செலவாணியாக) வருடந்தோரும் அனுப்புகின்றனர். அதோடு ஒப்பிடும்போது அறிவிக்கப்பட்டுள்ள நிதியுதவி மிகவும் சொற்பமானதே" என்று துபையிலுள்ள இந்திய வெளிநாட்டு காங்கிரஸின் பொதுச் செயலாளர் என். பீ. இராமச்சந்திரன் கூறினார்.

"நாட்டிற்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருந்த பணத்தில் ஏற்பட்டுள்ள குறைவால் (கேரளா) பாதிக்கப் பட்டுள்ளதோடு, முந்திரிப் பருப்பு, மிளகு, இஞ்சி, ரப்பர் மற்றும் இதர கடற்பொருட்களின் ஏற்றுமதியிலும் சரிவு ஏற்பட்டு கேரளம் பாதிக்கப் பட்டுள்ளது" என்றும் ஷம்ஸுத்தீன் கூறினார்.

'அரேபியன் பிஸினஸ்' எனும் பத்திரிகை இரண்டு வாரத்திற்கு முன்னர் வெளியிட்ட செய்தியில் 20,000 தொழிலாளர்கள் மார்ச் மாத இறுதியில் துபையிலிருந்து நீண்ட விடுப்பில் அல்லது வளைகுடாவின் வேறொரு நாட்டில் வேலைகள் தேடி வெளியேறிட விமான முன்பதிவு செய்துள்ளதாகச் செய்தி வெளியிட்டிருந்தது இங்குக் குறிப்பிடத் தக்கது.

ஹஜ் பயணம் விண்ணப்பிக்க அரசு அழைப்பு


சென்னை:ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்பும் முஸ்லிம்கள், வரும் 5ம் தேதி முதல் தமிழக ஹஜ்குழு அலுவலகத்தில் விண்ணப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:இந்த ஆண்டில் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்பும் முஸ்லிம்களிடமிருந்து விண்ணப்பங்களை பெறுமாறு மும்பையில் உள்ள இந்திய ஹஜ்குழு தமிழக ஹஜ்குழுவிற்கு தெரிவித்துள்ளது. இப்பயணத்திற்கான விண்ணப்பங்கள் மூன்றாம் தளம், ரோஸிடவர், எண் 13, மகாத்மா காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை என்ற முகவரியில் உள்ள ஹஜ்குழுவின் நிர்வாக அலுவலரிடமிருந்து வரும் 5ம் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பயணி ஒருவருக்கு 200 ரூபாய் பரிசீலனைக் கட்டணமாக பாரத ஸ்டேட் வங்கியில், மத்திய ஹஜ் குழுவிற்கான நடப்புக் கணக்கு எண் 30683623887ல் செலுத்தி அதற்கான வங்கி ரசீதின் நகலுடன் தமிழக ஹஜ்குழுவிற்கு சமர்ப்பிக்க வேண்டும். பரிசீலனைக் கட்டணமாக நபர் ஒருவருக்கு செலுத்தப்படும் 200 ரூபாய் திருப்பி தரப்படாது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 31.3.09. குலுக்கலில் தேர்வு செய்யப்பட்ட புனிதப் பயணிகள், பின் அன்னியச் செலவாணி, விமானக் கட்டணம் மற்றும் பிற கட்டணங்களுக்கான 30 சதவீதம் தொகையுடன் முழுமையாக விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

மீதமுள்ள 70 சதவீதம் தொகையை ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
இவ்வறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மனித நேய மக்கள் கட்சி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது.


Jawahirullah

கோவை: தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் கட்சியான மனித நேய மக்கள் கட்சி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் ஹைதர்அலி, மனித நேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் சமத், பொருளாளர் ஹாரூண் ரஷீத் ஆகியோர் இது குறித்து கோவையில் நிருபர்களிடம் கூறுகையில்,

மனித நேய மக்கள் கட்சிக்கு இன்னும் ஓரிரு நாட்களில் 32 மாவட்டங்களுக்கும் நிர்வாகிகள் நியமிக்கப்படுவர்.

வரும் மக்களவைத் தேர்தலில் மத்திய சென்னை, வேலூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம், தஞ்சை, திருநெல்வேலி அல்லது தென்காசி ஆகிய தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளோம்.

ஏதேனும் அரசியல் கட்சிகள் சிறுபான்மை, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக எழுத்துப்பூர்வமாக வாக்குறுதி அளித்தால் அந்த கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவோம்.

இன்னும் ஓரிரு தினங்களில் கூட்டணி நிலவரம் மற்றும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

சென்னை உயர்நீதிமன்றம் மோதல் சம்பவம் துர்பாக்கியமான செயல். அப்பாவி மக்கள், காவல்துறையையும், நீதித்துறையையும் நம்பித்தான் இருக்கிறார்கள். அவர்களே பகிங்கரமாக மோதிக் கொள்வது வேதனையானது.

இலங்கைத் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு வழங்க மத்திய அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். ராணுவ நடவடிக்கையின் மூலம், இப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது என்றனர்.

பேட்டியின்போது மாநிலச் செயலாளர் கோவை உம்மர், மாவட்டத் தலைவர் பஷீர், மாவட்டச் செயலாளர் அமீர், மாவட்ட பொருளாளர் கபீர் ஆகியோர் உடனிருந்தனர்.

கலயத்தில் உறங்கும் சாம்பலும் ஒரு ஜோடி காலணிகளும்

மீண்டும் ஒருமுறை உலகளாவிய பயங்கரவாதம் பற்றி வாய் ஓயாது பேசிச் சலித்தாகிவிட்டது. கூடவே யாரும் சந்தேகப்பட்டுவிடாமல் இருக்க மறக்காமல் தேஷ்பக்தியைப் பற்றியும் உணர்ச்சிவசப்பட்டு முழங்கி, "அரசியல்வாதிகளையெல்லாம் சுட்டுக் கொல்லணும்பா, பாரு, வரி கட்டுறொம், ஆனா உசிருக்கு பாதிகாப்பு இல்லே, இனிமே எதுக்கு வரி கட்டணும்?" போன்ற தேஷ்பக்த வாதங்களை முன் வைத்த திருவாளர் மிடில்கிளாஷ், வழக்கம்போல் டி.வி. பார்த்து, "சூப்பரா பாலைத் தூக்குனாம் பாரு, நான் நினச்சமாரியே சிக்சர்... ஆனா அநியாயமா அவுட் டானாம்பா.."என்று சாராய வியாபாரி விஜய் மல்லையாவின் குதிரை லாயத்தில் புதிதாகக் கட்டப் பட்ட கிக்கெட் குதிரைகளின் இரண்டுகால் பாய்ச்சல் பற்றி சிலாகித்து புழகாங்கிதம் அடைந்து மல்லாக்கப் படுத்து தூங்கப் போய்விட்டார். சர்வதேச உயிர்க் கொல்லி விஷபானக் கம்பெனிகளுக்கு இந்தியாவில் விளம்பரப் பிராணியாக நடித்து லட்சக்கணக்கில் காசு சம்பாதிக்கும் சில கிரிக்கெட் குதிரைகள் "எனக்கு தேஷ்பக்திதான் முக்கியம்" என்று டி.வி.காமிராக்களின் முன் முழங்கியது வடிவேலுவே பொறாமைப் படக்கூடிய அளவுக்கு சூப்பர் காமெடி சீன். நான் சொல்ல வருவது 'இந்தியத்தொலைக்காட்சிகளில் முதல்முறையாக நேரடியாக ஒளிபரப்பப்பட்ட 66 மணிநேர பயங்கரவாதம்' பற்றித்தான் என்று நீங்கள் ஊகித்திருந்தால் அடுத்தமாத கேபிள் டி.வி.சந்தாவை உங்களுக்காக நான் கட்டுவேன். அது பயங்கரவாதமா கிக்கெட்டா என்று குழப்பம் வருகிற அளவுக்கு சி.என்.என்.நேரடி ஒளிபரப்பில் கீழ்மூலையில் ஸ்கோர் போடப்பட்டது. இறுதியாக 10 பயங்கரவாதிகள் சேர்ந்து 183 கொலைகள் செய்ததாக இறுதி ஸ்கோர் காட்டியது. இப்படி நான் சொல்வதால் பயங்கரவாதமும் கிக்கெட்டும் ஒன்றா என்று நீங்கள் கேள்வி கேட்டால், என் உறுதிமொழி வாபஸ், நான் கிரிக்கெட்டின் தாய்வீடான இங்கிலாந்தின் பிரதமரைக் கேட்டுத் தான் பதில் சொல்ல முடியும், அதுவரை நீங்கள் காத்திருக்கலாம்.

நவம்பர் 26ஆம் தேதி இரவு 1030 மணிக்கு மும்பை சத்ர பதி சிவாஜி ரயில்வே ஸ்டேஷனில் நுழைந்த இரண்டு தீவிரவாதிகள் சரமாரியாகச் சுட்டதாகவும் ஒரு ரவுண்ட் சுட்டபின் தீர்ந்துபோன மேகசனை மாற்றி மீண்டும் புது மேகசைன் போடும் அளவுக்கு கால அவகாசம் இருந்ததாக அனைத்தையும் நேரில் பார்த்துக் கொண்டிருந்த நேர அறிவிப்பாளரான விஷ்ணு தத்தாராம் ஜெண்டே கூறுகின்றார். அதன்பின் சாவகாசமாக டாக்சியைக் கைப் பற்றி தாஜ் ஓட்டலுக்கு சென்றதாகவும்... மீண்டும் மறு ஒளிபரப்பு அவசியமில்லை என்பதால் விசயத்துக்கு வருகின்றேன். இந்த பயங்கரவாதத் தாக்குதலால் பயனடைந்தவர்கள் என்று இரண்டுபேரைக் கூற முடியும்- மீண்டும் ஒருமுறை தங்கள் தேஷ்பக்தியை நாடெங்கும் ஓடவிட்டு சிறுபான்மை மக்களுக்கு எதிரான உள்நோக்க அரசியலைக் கட்டவிழ்த்துவிட்ட ஆர்.எஸ்.எஸ்., அதன் அரசியல் முகமூடியான பி.ஜே.பி.;உலகளாவிய பயங்கர வாதத்தை வேரொடு அறுக்க அவதாரம் எடுத்த உலக ரட்சகன் அமெரிக்காவும் அதன் ஆயுத உற்பத்தியாளர் களும். டி.வி, செய்தித்தாள், இணையதளம் போன்ற ஊடகங்கள் 'இழவு வீட்டில் காசு வைத்து சூதாடி' நேரடி ஒளிபரப்பு செய்து தங்கள் பாக்கெட்டை நிரப்பிக் கொண்டதுடன், மேற்படி ஆர்.எஸ்.எஸ். + அமொக்க கூட்டணிக்கு பிரச்சாரம் செய்து எஜமான விசுவாசத்தை யும் காட்டிக் கொண்டன, ஒரேகல்லில் ரெண்டு மாங்காய். அதற்கு அடுத்துவந்த நாட்களில் இங்கிலீஷ், டமில் என எல்லா சானல்களிலும் வெள்ளையும் சொள்ளையு மான நபர்களும், படப்பிடிப்பு தளத்துக்கு வெளியே போனால் ஒருத்தர் மீது ஒருத்தர் சேறு, நரகல் என ஒன்று மிச்சம் வைக்காமல் கையில் கிடைப்பதெல்லாம் அள்ளி வீசத் தயங்காத கரைவேட்டி ஆசாமிகளும் உட்கார்ந்து கொண்டு தேஷ்பக்தி என்ற ஒன்றுதான் தங்களை இணைத்திருக்கும் கண்ணி என்பதாக உணர்ச்சிவசப் பட்டு பயங்கரவாதம் பற்றிபேசிப்பேசி மாய்ந்து போனார்கள். மூக்கைச் சிந்தி அழவில்லை என்பதுதான் பாக்கி. இதை ஊடக பயங்கரவாதம் என்று ஏன் சொல்லக்கூடாது?

மும்பை பயங்கரங்கள் குறித்து விலாவரியாகப் பேசுவ தானால், அதற்கு முன் இரண்டு கேள்விகளைப் பற்றிப் பேச வேண்டும். விடுதலை பெற்ற இந்தியாவின் பயங்கர வாதத்தை எங்கே இருந்து தொடங்குவது? உலகளாவிய பயங்கரவாத்தை எங்கே இருந்து தொடங்குவது? இந்த இரண்டு கேள்விகளையும் பேசாமல் பயங்கரவாதம் பற்றியும் தேஷ்பக்தி பற்றியும் உணர்ச்சிவசப்பட்டு பேசினால் இரத்த அழுத்தம் ஏறுவதைத் தவிர வேறு ஒரு பிரயோசனமும் இல்லை.

1947க்குப் பின்னான இந்தியாவின் பயங்கரவாதம் என்பது ஆகஸ்ட் 15க்கு முன்னதாகவே தொடங்கிவிட்டது. அதன் உச்சகட்டம்தான் பிரிவினையின்போது வடக்கு, வட மேற்குப்பகுதிகளிலும் அதிகபட்சமாக பஞ்சாபிலும், கல்கத்தாவிலும் நடந்த கொடூரங்கள். இதைப்பற்றி தனியேதான் எழுத வேண்டும். இந்தப் படுகொலைகளில் ஈடுபட்டவர்கள் இந்து, முஸ்லிம், சீக்கியர் என்று அனைத்துத் தரப்பாரும் இருந்தார்கள். அநேகமாக இந்தப் படுகொலைகள் அனைத்தும் எந்தவிதமான திட்டமிட லும் இல்லாமல், அன்றைக்கு நிலவிய சூழ் நிலையில் உணர்ச்சிவசப்பட்ட நிலையிலும் ஒரு மதத்தவர் மேல் மற்றவர் கொண்ட எதிர்ப்பு உணர்வாலும் நிகழ்ந்தவை, தனிநபர்களாலும் கூட்டமாகவும் நடத்தப்பட்டவை என்று கூறலாம். ஆனால் முதன் முதலாக, சுதந்திர இந்தியா வின் நன்கு திட்டமிடப் பட்ட, தனிநபர் மீதான ஒரு படுகொலை என்பது ஆர்.எஸ்.எஸ்.ஆல் நடத்தப்பட்டது. அதன் இலக்கு மஹாத்மா காந்தியடிகள். படு கொலைக்கு ஒரே ஒரு காரணம் மட்டுமே இருந்தது: அவர் இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத் தினார். எனவே 1948 ஜனவரி 20லிருந்து பேசத் தொடங்குவதுதான் சரியாக இருக்கும். அன்றைக்கு பிர்லா மாளிகையில் காந்தியார் கூட்டத்தில் பேசும்போது, அதற்கு பத்தடிகள் பின்னால் உள்ள அறையிலிருந்து நாதுராம் கோட்சே வெடி குண்டை வீசவேண்டும், கூட்டத்தில் கலந்து விட்ட மதன்லால்பாவா காந்தியாரை துப்பாக்கியால் சுட வேண்டும் என்பதே திட்டம். ஆனால் அவர்களே எதிர்பாராத விதமாக, அந்த அறையின் ஜன்னல், தரையிலிருந்து எட்டு அடி உயரத்தில் இருந்ததால் அன்றைய முயற்சி வெறும் வெடிகுண்டு வீச்சோடு முடிந்தது, காந்தியார் இன்னும் ஒரு பத்துநாள் உயிரோடு இருந்தார். ஜனவரி 30 அன்று நாதுராம் கோட்சே அடுத்த முயற்சியில் காரியத்தை நிறைவேற்றினான். இந்து வைஸ்யரான மோஹன்தாஸ் கரம்சந்த் காந்தியை இந்து சித்பவன் பிராமணனான கோட்சே சுட்டுக் கொன்றான் (இந்துக்களே, ஒன்று படுவீர்! இந்துக்கடைகளிலேயே சாமான் வாங்குவீர், துப்பாக்கி வாங்குவீர்!) இப்படு கொலையைத் திட்ட மிட்ட அனைவரும் இந்துக்களே - கோபால் கோட்சே, அவன் தம்பி நாதுராம், மதன்லால் பாவா, கார்காரே, திகம்பர் பாட்கே, நாரயண் ஆப்தே, வீர சாவர்க்கார். (மாலேகாவ் குண்டுவெடிப்பில் ஈடுபட்ட இந்துத்துவா தீவிர வாதிகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த போலீஸ் அதிகாரி யின் பெயரும் ஹேமந்த் 'கார்காரே' என்பது வேடிக்கை!).

இந்தியாவில், ஒரு அரசியல் தலைவர் மீதான முதல் படு கொலையை நடத்தியது இந்துத்வா பயங்கரவாதம்தான் என்பதையும், "இந்து முஸ்லிம் ஒற்றுமையை" வலியுறுத் தியதற்கு எதிராகத்தான் அது நடத்தப்பட்டது என்பதையும் நாம் அழுத்தமாகப் பதிவு செய்ய வேண்டும். அன்றைக்கு கோட்சே செய்திருந்த ஆண்குறித் தோல்நீக்கமும் (இஸ்லா மிய மதச்சடங்கு), கையில் குத்தியிருந்த இஸ்மாயில் என்ற முஸ்லிம் பெயரும் எதிர்கால இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். என்ன செய்யப் போகின்றது என்பதை அறுதியிட்டுச் சொல்வனவாகவும் இரண்டு செய்திகளை விட்டுச் செல்வன வாகவும் இருந்தன. அவர்களது நோக்கம், ஒன்று: சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்ற, கால மெல்லாம் இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்திய தேசப்பிதா என்று அழைக்கப்பட்டவரை ஒரு முஸ்லிம் கொன்றுவிட்டான் என்ற செய்தியைப் பரப்புவதன் மூலம், இந்தியாவில் உள்ள முஸ்லிம் மக்களுக்கு எதிராக மட்டுமல்ல, சர்வதேச அளவில் முஸ்லிம் மக்க ளுக்கு எதிரான வெறுப்புணர்வைத் தூண்டிவிடுவது, அனைத்து மத மக்களையும் 'முஸ்லிம் பயங்கர வாதத்துக்கு' எதிராகத் தூண்டி விடுவது. இரண்டு: அவர்களது இந்துத்வா, அகண்ட பாரதம் குறித்த மதிப்பீடுகளுக்கு நம்மால் வர முடிந்தது: இந்துத்வா தத்துவம் என்பது சூப்பர் டூப் புரட்டு; அது உள்ளீடற்ற ஒரு வறட்டுத் தத்துவம், நியாயமான தர்க்கவாதம் செய்யத்தக்க அளவுக்கு அடிப்படை நியாயம் ஏதும் அற்றது. ஹிட்லரின் நாஜியிசத்துக்கு நூறு சதவீதம் ஈடானது. எனவேதான் ஒரு பரந்த வெகுஜன வெளியில் திறந்த விவாதத்தில், தர்க்க விவாதத்தில் தம்மால் ஜெயிக்க இயலாது என்று தெரிந்து கொண்ட ஆர்.எஸ்.எஸ். கும்பல், ஹிட்லர் கையில் எடுத்த "வன்முறை, அடாவடித்தனம், எதிர்ப்பவர்களைக் கொன்று விடுவது" என்ற அதே வழிமுறையைக் கையில் எடுத்தது. இன்றைய நிலையில் பயங்கரவாதத்தை அல்லது இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டி விட்டுத்தான் மறுவேலை என்று கங்கணம் கட்டிக் கொண்டு முதுகு வரை வாயைக் கிழித்துக்கொண்டு பேசும் ஊடகங்களும் ஆட்சியாளர்களும் கூட 1948 ஜனவரி 20, 30 பற்றியோ கோட்சேவின் முஸ்லிம் வேஷம் பற்றியோ பேசாமல் மிக ஜாக்கிரதையாக தவிர்த்தே வந்திருக்கின்றார்கள். அநேகமாக இனிமேல் பேசமாட்டார் களோ என்ற சந்தேகம் வருவதற்கு காரணம் உண்டு. காரணம், நமது பள்ளி, கல்லூரி பாடப் புத்தகங்களில்கூட "காந்தியாரை ஒருவன் சுட்டான்" என்ற ஒற்றை வரியோடு காந்தியாரின் வரலாறு அல்லது கதை முடிந்து போகின்றது என்பது தற்செய லான ஒன்றல்ல. மத்திய, மாநில கல்வித்திட்டங்களை இயற்றுகின்ற பொறுப்பில் உள்ளவர்களும், இந்திய வரலாற்றை எழுதுகின்ற அதிகாரிகளும், பல்கலைக்கழக மானியக் குழுவில் இருக்கின்ற கனவான்களும் கோட்சேவின் தம்பி களாகத்தான் இருக்கின்றார்கள் என்பதைச் சொல்ல யாரும் தயங்க வேண்டாம். காந்தியாருக்கு நமது அரசு அதிகாரிகள் பரிவோடு செய்கின்ற அதிகபட்ச மரியாதை என்பது, அக்டோ பர் 2 பொது விடுமுறை (அன்று டி.வி.யில் இந்தியத் தொலைக்காட்சியில் முதல்முறையாக சில தொடைகளைப் பார்க்கலாம்), ஜனவரி 30 அன்று 11 மணிக்கு ஒரு 'சங்கு'. அநேகமாக அடுத்த சம்பளக் கமிஷன் தலைவர், "எதுக்கு இதெல்லாம், வேஸ்ட்; உற்பத்தியப் பெருக்கணும்" என்று கேள்வி கேட்டு இதற்கும் சங்கு ஊதிவிடுவார் என்ற சந்தேகம் உள்ளது.

1948 ஜனவரி 20, 30 ஆகியவற்றின் தொடர்ச்சியாக, அடுத்த ஒருங்கிணைக்கப்பட்ட பயங்கரவாத நிகழ்வாக, 1984 இந்திரா காந்தி படுகொலையைத் தொடர்ந்து சீக்கிய இன மக்களுக்கு எதிரான காங்கிரசார் நடத்திய கொலை வெறித்தாண்டவத்தை சொல்லலாம். இன்று மத்திய ஆட்சியில் மந்திரிகளாக இருக்கின்ற, நுனிநாக்கு ஆங்கிலம் பேசுகின்ற பல கனவான்கள், அன்று டெல்லி வீதிகளில் கத்தியோடும் கட்டாரியோடும் பெட்ரோல் கேன்களோடும் பல சீக்கியர் களைக் கொன்று குவித்த பேர்வழிகள், கடைகளைச் சூறை யாடிக் கொள்ளை அடித்தவர்கள். இதன்பின் நிகழ்ந்த மிகப் பெரும் திட்டமிடப்பட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட பயங்கர வாதமாக 1992 டிசம்பர் 6 அயோத்தி பாபர் மசூதி இடிப்பும் அதனைத் தொடர்ந்த முஸ்லிம்களுக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ். பி.ஜே.பி.யின் கொலைவெறித்தாண்டவமும், இதற்கு எதிர் வினையாக நாடெங்கும் நடந்த குண்டுவெடிப்புக்களும். இந்த கொலைத்தாண்டவத்துக்கு தலைமை தாங்கி நடத்திய வர் பிற்காலத்தில் இந்தியாவின் உள்துறை அமைச்சராகவும், துணைப்பிரதமராகவும், அதன்பின் நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவருமாக அதிகபட்ச இசட் பிரிவு பாதுகாப்புடன் ஊர் சுற்றுகின்றார். இந்த ஆசாமி இப்போது தானே அடுத்த பிரதமர் என்ற கனவுடன் ஊர்ஊராக பிரச்சாரம் செய்து வருகின்றார். ஆனாலும் ஆச்சரியம் இல்லை. இந்திய ஜன நாயகம் இதை அனுமதித்துள்ளது. பாரத் மாதா கீ ஜே! தொடர்ச்சியாக, ஒரிசாவில் ஸ்டெயின்ஸ் பாதிரியாரையும் அவர் பிள்ளைகளையும் வைக்கோல் போரில் போட்டு உயிரோடு கொளுத்தியது, அதே ஒரிசாவிலும் குஜராத்திலும் கிறித்துவ, முஸ்லிம் மக்களை நடுவீதியில் கத்தியால் கிழிப்பது, அவர்கள் பெண்களை கூட்டாக வன்புணர்ச்சி செய்வது, நிர்வாணமாக ஊர்வலம் வரச்செய்வது, கர்ப்பிணி யாக இருந்தால் வயிற்றைக் கிழித்து சிசுவை தீயில் போட்டு வாட்டுவது, சிறுவர் சிறுமிகளை அறுத்து எறிவது எனத் தொடரும் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., பஜ்ரங் தள், விஷ்வ இந்து பரிஷத், சிவசேனா போன்ற பயங்கரவாத இயக்கங் களைப் பற்றிப் பேசாமல் இந்தியாவில் பயங்கரவாதம் பற்றிய விவாதம் முழுமை பெறாது.

ஆர்.எஸ்.எஸ். கும்பல் பி.ஜே.பி. என்ற பெயரில் ஆட்சியில் இருந்த போது, தான் ஆட்சியில் இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் இந்திய அரசு எந்திரத்தை தனது இந்துத்துவா ஆசாமிகள் நடத்தவேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன், பல்கலைக்கழக மானியக்குழு, இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐ.சி.ஹெச்.ஆர்), இந்திய தொல்லியல் துறை, உயர்கல்விக் கான பாடத்திட்டங்களை வடிவமைக்கின்ற குழுக்கள், நீதிபதிகள், ராணுவத்தின் உயரதிகாரிகள் என முக்கிய இடங்களில் இந்துத்துவா ஆர்.எஸ்.எஸ். வெறியர்களைக் கொண்டு திட்டமிட்டு நிரப்பியது. தேசத்தின் கல்வி, கலாச்சார, நீதி நிர்வாக, அறிவுசார் துறைகளைக் கைப்பற்று வதில் ஆர்.எஸ்.எஸ். கும்பல் வெற்றி பெற்றது. கடந்த பி.ஜே.பி. ஆட்சியில் இடதுசாரிகள் இதுபற்றி தொடர்ந்து பேசியும் எச்சரித்தும் வந்தார்கள். ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் ஆதரவுடன் இருந்த ஒரு ஆட்சியின் காலத்தில் இத்துறைகளைக் கைப்பற்றிய இந்துத்துவாவாதிகளை வெளியேற்ற குறிப்பிடத்தக்க வகையில் எதுவும் செய்ய இயலவில்லை. இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கவுன்சிலில் மட்டும் சில மாற்றங்களைப் பார்க்க முடிந்தது. எனவே இந்திய ஆட்சியை, அதாவது அரசு எந்திரத்தை நடத்தியதும் நடத்துவதும் ஆர்.எஸ்.எஸ்.இன் இந்துத் துவா ஆட்கள்தான் என்று சொன்னால் தவறில்லை, உரக்கவே சொல்லலாம். நாம் வாய் மூடி மவுனமாக இருந்தால் எதிர் காலத்திலும் அவர்கள்தான் நடத்துவார்கள்.

அமெரிக்க இந்திய அணுசக்தி ஒப்பந்தம் குறித்து எந்த அளவுக்கு தீவிர மாகப் பேசப்பட்டதோ அதே அளவுக்கு தொடர்ந்து பேசப்பட வேண்டிய, பிரச்சாரம் செய்யப்பட வேண்டிய விசயம் இது. மாலேகாவிலும், ஹைதராபாத் மெக்கா மசூதியிலும், தமிழகத்தின் தென் காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திலும் குண்டுவைத்தவர்கள் ஆர்.எஸ்.எஸ். பேர்வழிகளே என்று இப்போது தெரிகின்றது, பேசப்படுகின்றது. ஆனால், எங்கே யாவது தீபாவளி பட்டாசு வெடித்தாலும் உடனடியாக 'இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் இதன் பின்னால் இருப்பதாக' காவல்துறையினர் பேட்டி அளிப்பதும், சில இஸ்லாமிய இளைஞர்களை கைது செய்து டி.வி.க்களில் காட்டுவதும் சாதாரணமாக நடக்கின்றது. ராணுவமும் இதற்கு விதிவிலக்கு அல்ல. காஷ்மீரில் போலி என்கவுன்டர் களை நடத்தி அப்பாவி 16, 17 வயது முஸ்லிம் பையன்களை சுட்டு வீழ்த்தி தங்களது பதவி உயர்வுக்கு வழி செய்து கொண்ட இந்துத்துவா ராணுவ அதிகாரிகளைப் பற்றி சில காலம் முன்பு செய்தி வந்தது. ஆனால் இதுபற்றி அதன்பின் எந்தவிதமான தகவலும் இல்லை. மாலேகாவ், ஹைதராபாத், தென்காசி குண்டு வெடிப்புக்களைப் போலவே, இந்த போலி என்கவுன்டர்+பதவி உயர்வு குறித்தும், இதுவரை நிகழ்த்தப் பட்ட ராணுவ, போலீஸ் துப்பாக்கிச்சூடுகள், என்கவுன்டர் களில் எங்கேயெல்லாம் முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டார் களோ அவை அனைத்தையும் மீண்டும் விசாரணைக்கு உட் படுத்த வேண்டும் என்று கேட்பதிலும் நியாயம் உள்ளது.

இந்திய பயங்கரவாதத்தின் தொடக்கப்புள்ளி 1948 ஜனவரி 20 என்றால், நவீனகால உலகளாவிய பயங்கரவாதத்தை எங்கே இருந்து பேசத் தொடங்குவது? ஸ்பானிய மன்னனின் வேட்டை நாயான கொலம்பஸ், அமெரிக்க மண்ணில் கால் வைத்த நொடியில் இருந்து தொடங்க வேண்டும். அதை அமெரிக்க பயங்கரவாதம் என்று சொன்னால் தவறில்லை. வெள்ளையர்கள் குடியேற வெள்ளை மாளிகையைக் கட்டிய வர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து குடியேற்றப்பட்ட கறுப்பு மக்கள் என்பது வரலாறு. அந்த மாளிகையின் அஸ்திவாரமாக இருப்பது எது? கொலம்பசால் கொன்று குவிக்கப்பட்ட லட்சக்கணக்கான செவ்விந்திய மக்களின் ரத்தமும் சதையும். கரையில் இறங்கிய கொலம்பஸ் கும்பலைக் கண்டு ஓடிவந்த சூதுவாது ஏதும் அறியாத செவ்விந்திய மக்களை நோக்கி தன்னிடம் இருந்த துப்பாக்கியால் கொலம்பஸ் கண்மூடித் தனமாக சுடத் தொடங்கிய அந்த நொடியில் இருந்துதான் உலகளாவிய பயங்கரவாதம் பற்றிப் பேசத் தொடங்க வேண்டும். இயற்கையோடு இயைந்த சுகாதாரமான வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த செவ்விந்திய மக்க ளுக்கு கொலம்பசும் அவன் கும்பலும் கொடுத்த பரிசு, தாங்கள் எடுத்துச்சென்ற பால்வினை நோய்களும் துப்பாக்கிச்சூடும் தான். எனவே உலகளாவிய பயங்கர வாதத்தைத் தொடங்கி வைத்தது அமெரிக்காதான் என்றால் அது தவறு இல்லை. இது ஏதோ இன்றைய அரசியல் நிகழ்வுகளில் இருந்து பின்னோக்கி அமெரிக்காவின் மீது வீண்பழி போடும் முயற்சி அல்ல, நீண்ட நெடிய வரலாற்று உண்மை. தனது சுயநலனுக் காக எந்த நாட்டின் மீதும் ஆக்கிரமிப்பு நடத்தவும் உயிரியல், ரசாயன, பவுதீக, பொருளாதார.... என அனைத்து ஆயுதங் களையும் பிரயோகிக்க அமெரிக்கா என்றுமே தயங்கியது இல்லை. 1945 ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு வீச்சு என்பது உண்மையில் ஒரு சோதனைதான். அணுகுண்டு வீசினால் உயிருள்ள மக்களும், பிற உயிரினங்களும், ஜடப் பொருட்களும் என்ன ஆகின்றன என்று சோதித்துப் பார்க்க விரும்பிய அமெரிக்க பயங்கரவாதிகளுக்கு, சோதனை எலி களாகத்தான் அன்றைக்கு அப்பாவி ஜப்பானிய மக்கள் பயன்படுத்தப்பட்டார்கள். இது அமெரிக்காவின் உலகளாவிய பயங்கரவாதம் இல்லையா? இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவா கும்பல் கள் செய்கின்ற 'பயங்கரவாத' எதிர்ப்பு பிரச்சாரத்திலும், அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடர்ந்து செய்து வருகின்ற 'பயங்கரவாத' எதிர்ப்பு பிரச்சாரத்திலும் ஒரு குறிப்பிட்ட மதத்தவர் - இஸ்லாமிய மக்கள் - உலக மக்களின் எதிரியாக நிறுத்தப்படுவது, ஒரு 'பொது எதிரி' யாக அடையாளப் படுத்தப்படுவது தற்செயலானதா திட்டமிடப்பட்டதா என்ற கேள்விக்கான பதிலை வரலாறு திட்டவட்டமாக வைத்திருக்கின்றது.

1900த்தின் முற்பகுதியில், ஈரானில் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்ட பின் அமெரிக்க பயங்கரவாதத்தின் இலக்கு அரபுப் பிரதேசத்தின் மீது விழுந்தது. அதன் நாடு பிடிக்கும் கொள்கை, கூடவே லத்தீன் அமெரிக்க, மத்திய கிழக்கு, அரபு நாடுகளில் ஒரு ரவுடியைப் போல் நுழைந்து கத்தியை வீசுகின்ற பயங்கரவாதப்போக்கு, இந்த நாடுகளின் மக்கள் மத்தியில் அமெரிக்காவுக்கு எதிரான தீராத பகையுணர் வைத் தோற்றுவிக்க காரண மாக இருந்தது. அமெரிக்காவின் தந்திரமே அதுதான்! அடுத்தவன் வீட்டுக்குள் அதிரடியாக ஒரு நாய் போல நுழைவது, அவனை வலுக்கட்டாயமாக எதிரியாக் குவது, அவன் திருப்பி அடிக்கும்போது அவனை 'தீவிரவாதி' யாக முத்திரை குத்துவது, 'பயங்கரவாதம்' பற்றி பேசுவது, அதன்பின் தான் ஏற்கனவே திட்டமிட்டு வைத்திருக்கும் மறைமுக செயல்திட்டங்களை (அஜெண்டா) அதிவேகமாக நிறைவேற்றுவது!
இராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் நுழை வதற்கான திட்டம் ஏற்கனவே அமெரிக்காவிடம் இருந்த திட்டம்தான். ஆனால் நுழைவதற்கான வாய்ப்பை, காரணத்தை மட்டும் எதிர்பார்த்திருந்தபோது, அமெரிக்காவால் கொம்பு சீவி வளர்க்கப்பட்ட பின்லாடனும் அல்-காய்தாவும் வழி ஏற்படுத்திக்கொடுத்தார்கள். 9/11ஐ ஒரு காரணமாகச் சொல்லிக்கொண்டு இராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப் பதாக ஒரு பொய்க்காரணத்தைப் பரப்பி இராக்கில் நுழைந்தது, சதாம் உசேனையும் கொன்றது, இராக்கின் எண்ணெய் எடுக்கும் தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டது. 60 வருடங்களுக்கும் மேலாக பாலஸ்தீன மக்களைக் கொன்று குவிக்கும் இஸ்ரேல் என்ற வெறிநாய்க்கு கறிபோடும் எஜமானாக இருப்பது அமெரிக்காவே. அமெரிக்கா மட்டும் அல்ல, இதர ஐரோப்பிய நாடுகளையும் சொல்லலாம். எகிப்தில் நெப்போலியன் ஆக்கிரமிப்பும் அதனைத் தொடர்ந்த எகிப்திய கலாச்சார அழிவும் (கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய பழம்பெரும் சின்னமான ஸ்பிங்க்ஸ் சிலையின் முகத்தில் இப்போது நாம் பார்க்கும் வடுக்கள், குழிகள் யாவும் நெப்போலியனின் படைகளால் ஏற்படுத்தப்பட்டவை, தங்கள் பீரங்கிகளால் ஸ்பிங்க்சின் முகத்தை சுட்டார்கள்), அலெக்சான்ட்ரியாவின் புகழ்பெற்ற பண்டைய காலத்து நூலகத்தை அழித்தது, லிபியாவில் முசோலினி ஆக்கிரமிப்பும் அதன் பின் வந்த காலத்தில் ரொனால்ட் ரீகன், பெரிய ஜார்ஜ் புஷ், பில் கிளின்டன் ஆகியோரின் தொடர் தாக்குதல், முக்கியமாக லிபிய அதிபர் மும்மர் கடாபியின் மகளை குண்டு வீசிக் கொன்றது, அல்ஜீரியாவில் ப்ரான்ஸ் ஆக்கிரமிப்பு, இக்கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் சமயத்திலும் பாலஸ்தீனத்தில் தொடரும் இஸ்ரேலின் குண்டுவீச்சு அழிச் சாட்டியம், இரானையும் இராக்கையும் மோதவிட்டு ஆயுத விற்பனை செய்த தந்திரம் எனத் தொடர்கின்றது. அமெரிக் காவின் நோக்கம் பெட்ரோலியத்தை திருடுவதாக இருக் கலாம், ஆனால் பெட்ரோலிய வள நாடுகள் இயற்கையாகவே இஸ்லாமிய நாடுகளாக இருக்கும்போது, அங்கே மேற்கத்திய நாடுகளின் ஆக்கிரமிப்பும் அழித்தொழிப்பும் இஸ்லாமிய மண்ணின் கலாச்சார, மத அடையாளங்களுக்கு எதிரான ஆக்கிரமிப்பாகவும் அழிவு வேலையாகவும் அமைந்து விடு கின்றது. அரபு பிராந்திய இஸ்லாமிய மக்களின் கோபத்தைத் தூண்ட முக்கிய காரணமாக இருப்பது, அமெரிக்கா தங்கள் மண்ணில் உள்ள பெட்ரோலியத்தை சுரண்டி எடுப்பது மட்டும் அல்ல - தங்களின் நீண்ட பாரம்பரிய மத, கலாச்சார அடையாளங்களுடன் கூடிய அன்றாட வாழ்க்கையை சீரழித் ததையும், மத, கலாச்சார அடையாள சின்னங்களை அழித் ததையும், மொத்தத்தில் அமெரிக்காவின் படையெடுப்பை தங்கள் மதத்தின் மீதான, கலாச்சாரத்தின் மீதான படை யெடுப்பாக, இன அழிப்பாக அவர்கள் பார்த்தார்கள், பார்க்கின்றார்கள். பிட்டிஷ் பத்திரிகையாளரான ராபர்ட் பிஸ்க் இவ்வாறு கூறுகின்றார்: "இராக் நாட்டின் முக்கிய உற்பத்திப் பொருள் காலிப்ளவர் மட்டுமே என்றிருந்தால், நீங்கள் உங்களிடம் உள்ள கடைசி டாலர் நோட்டையும் வைத்து தைரியமாக பந்தயம் கட்டலாம் - புஷ் இராக்கின் மீது படையெடுத்திருக்க மாட்டார்" (டால் டி'மோன்டி எழுதிய கட்டுரை, தி ஹிண்டு, 2008 டிசம்பர் 7).

மும்பை தாக்குதலின் உச்சகட்ட துயரமே உலகளாவிய பயங் கரவாதத்தின் தாய்வீடான அமெரிக்காவின் மந்திரி காண்டோ லிசா ரைஸ் இந்தியாவுக்கு வந்ததுதான். அப்படியே பாகிஸ்தானுக்கும் போனார். நாயைக் காவலுக்கு வச்சா கிடைக்கு ரெண்டு ஆடு வேணும்னு கேக்குமாம். ஆக இஸ்லாமிய நாடுகளின் மீதான படையெடுப்புக்கான எதிர் வினை என்பது அமெரிக்காவுக்கும் பிற ஐரோப்பிய நாடு களுக்கும் எதிரான இஸ்லாமிய மக்களின் கோபம் என்ற புள்ளியில் தொடங்கி அதன் நீட்சியாக இன்று அமெரிக்கா வுக்கும் அதன் கூட்டாளிகளுக்கும் எதிரான 'இஸ்லாமிய' பயங்கரவாதமாக ஆக்கப்பட்டுள்ளது என்பதுதான் வரலாறு கூறும் உண்மை. இஸ்லாமிய மக்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதில் வெற்றி பெற்றுள்ள அமெரிக்க சார்பு ஊடகங்கள், "நீ ஏன் அவனை முதலில் அடித்தாய்?" என்ற எளிமையான கேள்வியை அமெரிக்காவிடம் கேட்பதில்லை, ஆனால் சர்வதேச சமுதாயத்துக்கு அந்தக் கடமை உள்ளது. தான் ஒரு உலக ரவுடி என்ற சுயரூபம் உலக சமுதாயத்தின் முன் அம்பலப்பட்டுப் போனதில் அமெரிக்காவுக்கு வருத்தம் உண்டு; 'உலகளாவிய பயங்கரவாதத்தின் மீது தாக்குதல்' என்ற தனது ஒற்றைத்திட்டத்தின் சதிவலையில் தான் மட்டும் தனித்து நிற்காமல் இந்தியாவையும் இணைப்பதன் மூலம், தனது செயலுக்கு நியாயம் கற்பிக்கலாம். இதற்காக தன்னைப் போலவே 'உலகளாவிய பயங்கரவாத'த்தின் மீது தாக்குதல் தொடுக்கக் கூடிய ஒரு கூட்டாளியாக இந்தியாவை மாற்ற அமெரிக்கா பெரும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றது. இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை இந்த நோக்கில் பார்த்தால் மட்டுமே புரியும். 'நான் மட்டுமா ரவுடி, அவனும் தான்'. இதற்கு அமெரிக்கா வைத்துள்ள குறிதான் இந்தியா. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, அதாவது மும்பை தாக்குதலை சாக்காக வைத்து, பக்கத்தில் உள்ள பாகிஸ்தான் மீது போர் தொடுக்குமானால், தனது பிரச்சாரத்துக்கு அது ஆதரவாக இருக்கும் என்று அமெரிக்கா கணக்குப் போடுகிறது. இதற்காக, இந்தியாவுக்குள் தனது அடிமைகளான ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவா அமைப்புக்கள் மூலம் "பாகிஸ் தான் மீது படையெடு!" என்று மக்களிடையே பொதுக் கருத்தை உருவாக்க முனைகின்றது; இந்துத்துவா பயங்கர வாதிகளைக் கொண்டு பத்திரிகைகளில் கட்டுரை, ஆசியருக்கு கடிதம் எழுதுவது, இன்டெர்நெட்டில் பிரச்சாரம் செய்வது, டி.வி.சானல்களில் வாக்கெடுப்பு நடத்துவது, செல்போனில் எஸ்.எம்.எஸ். பிரச்சாரம் என பல வகையிலும் பிரச்சாரம் செய்கின்றது.

மார்ச் 2003 தொடங்கி 2006 இறுதி வரை 6,50,000 இராக் மக்களை ஜார்ஜ் புஷ் கொன்று குவித்துள்ளான். ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ப்ளூம்பெர்க் பொதுசுகாதாரக் கல்வி மையத்தின் கணக்கோ இப்படிக் கூறுகின்றது: "...வருடத்திற்கு 1,43,000 மக்கள் செத்து மடிவார்கள் என மதிப்பிடப்பட்டிருந்தது (மார்ச் 2003க்கு முன்னால்). ஆனால் இன்றைய கணக்கு உண்மையில் இதை விடவும் அதிகம்". "பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக நாங்கள் பொய் சொன்னோம்" என அமெரிக்க கனவான்களே அருள்கூர்ந்து ஒத்துக்கொண்டபின் "அங்கி ருந்து வெளியேறு" என்று சொல்ல முடியாத அளவுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் நியாயவான்களும் பொதுச் செயலாளரும் இந்தியாவில் இருக்கின்ற அமெரிக்க விசுவாசிகளும் வாயில் என்ன வைத்திருக்கின்றார்கள் என் பதை திறந்துதான் பார்க்க வேண்டும். 9/11ஆல் உண்மையில் பயனடைந்தவர்கள் யார்? மூவர்தான். அல்-காய்தாவும் அமெரிக்க ஆயுத உற்பத்தி முதலாளிகளும் அவர்களது கூட்டாளிகளான குடியரசுக்கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி அரசியல் வாதிகள்தான். இந்த இடத்தில், ஜூலை மாதம் இந்திய நாடளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற ரிலையன்ஸ் முதலாளி அம்பானியின் பணத்தை காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சி என இரண்டு பேரும் பங்கு போட்டுப் பிரித்துக் கொண்டதும், இந்த இரண்டு தேஷ்பக்த கட்சிகளுக் கும் ஏஜெண்டாக ஆயுத வியாபாரியான சமாஜ்வாடி பொதுச் செயலாளர் அமர்சிங் இருந்ததும் உங்கள் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல.

உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய மக்களை இப்படி வலுக் கட்டாயமாக எதிரியாக்கியது அமெரிக்க பயங்கரவாதத்தின் வரலாறு எனில், இந்தியாவில் உள்ள இஸ்லாமிய மக்களை வலுக்கட்டாயமாக எதிரியாக்கியது ஆர்.எஸ்.எஸ்., ஜனசங் ஆகிய இந்துத்துவா பயங்கரவாதிகளைச் சாரும். ஹெட்கே ராம் பாலிவார், கோல்வாகர், வீரசவர்க்கார், நாதுராம் கோட்சே வழியாக, ஷ்யாம ப்ரஸாத் முகர்ஜி, சுதர்சன், வாஜ்பேயி, அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, ப்ரவீன் தொகாடியா, நரேந்திர மோடி, பால் தாக்கரே, ராஜ் தாக்கரே, ராம் கோபாலன், சோ ராமஸ்வாமி, இல.கணேசன் போன்ற தீவிர வாதிகளால் தொடர்ந்து இந்த "எதிரியாக்கல்" என்ற அஜெண்டா முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது பூட்டிக்கிடந்த பாபர் மசூதியைத் திறந்து இந்துத்துவா பயங்கரவாதிகள் பூஜை செய்ய அனுமதித்த அன்றைக்கு இவர்களின் வெற்றிப் பயணம் தொடங்கியது எனலாம். ஆனால் நாலுசுவருக்குள் வெறும் பூஜை மட்டுமே செய்து கொண்டிருந்தால் போதுமா? வி.பி.சிங் ஆட்சியின்போது அமலாக்கப்பட்ட மண்டல் கமிஷன் அறிக்கையை ஒரு ஆயுதமாகக் கையில் எடுத்தது ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. கும்பல். தொடர்ந்து அயோத்தியில் கோவில் கட்ட தனது ரத்தயாத்திரையை நடத்தினார் அத்வானி. பீஹாரில் முதல்வராக இருந்த லல்லு பிரசாத் யாதவ் அத்வானியைக் கைது செய்ய, வி.பி.சிங் அரசுக்கான தனது ஆதரவை அத்வானி விலக்கிக்கொள்ள, மானம் என்ற வேட்டியே பெரிது என பதவித்துண்டைத் தூக்கி வீசி எறிந்து விட்டு கம்பீரமாக வெளியேறினார் வி.பி.சிங் (வேறு யாராவது நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல). தொடர்ந்து வந்த தேர்தலில் பேசாமடந்தையும் ஒருகாலத்தில் ஆர்.எஸ்.எஸ்.இல் உறுப்பினராக இருந்தவருமான நரசிம்ம ராவ் பிரதமராக, 1992 டிசம்பர் 6ஆம் நாள் பாபர் மசூதி இடிக்கப்பட்டது, நாடெங்கும் கலவரம் மூண்டது. ஆயிரக் கணக்கானோர் மாண்டனர். மும்பையிலும் கோவையிலும் குண்டு வெடித்தது ("அத்வானியை ஆண்டவன் காப்பாற்றி னான்"-ரஜினிகாந்த்). இஸ்லாமியர்களை 'வலுக்கட்டாயமாக எதிரி'யாக்குவதில் ஆர்.எஸ்.எஸ். கும்பல் வெற்றி கண்டது. முதலில் 'சர்ச்சைக்குரிய இடம்' என்று சொல்லி வந்த பத்திரிகைகளும் டி.வி.சானல்களும் நாட்கள் ஓடஓட ராமர் கோவில் என்றே எழுதவும் பிரச்சாரம் செய்யவும் தொடங்கி னார்கள். இப்போது 'சர்ச்சைக்குரிய இடம்' என்ற சொல் ஊடகங்களில் மறைந்துவிட்டது. அடுத்துவந்த வருடங் களில், டிசம்பர் 6 தேதியில் வேண்டுமென்றே செய்யப்படும் போலீஸ் கெடுபிடிகளால் பொதுமக்கள் மத்தியில் இஸ்லாமிய மக்கள்மீது வெறுப்புணர்வு திட்டமிட்டு வளர்க்கப் பட்டது. பூட்டு ரிப்பேர், குடை ரிப்பேர், பீடி சுற்றுவது, கைத்தறி நெசவு, பாய் முடைவது, கத்தி சாணை தீட்டுவது, மீன், கருவாடு, மாமிச விற்பனை, மிஞ்சிப்போனால் பெட்டிக் கடை அல்லது வெளிநாட்டில் கூலிவேலை என்று இந்திய சமூகத்தின் விளிம்புநிலைத் தொழில்களைச் செய்து தமது அன்றாட உணவுக்கான வழியை ஏற்படுத்திக் கொண்டிருக் கும் ஒரு சமூகத்தின் மீது 'தீவிரவாதிகள்' என்ற முத்திரை குத்தப்படுவதற்கு ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத அமைப்பு வழியைக் காட்டியது எனில், அதன் சார்பு செய்தித்தாள்களும் டி.வி.சானல்களும், விஜயகாந்த், அர்ஜூன் போன்ற 'தேஷ் பக்த' நடிகர்களின் திரைப்படங்களும் பெருமளவு அந்த வழி யில் தொடர்ந்து ஜாக்கிரதையாக ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரத்தை முன்னெடுத்து சென்று கொண்டிருக்கின்றது.

இஸ்லாமிய சமூகத்தின் இன்றைய அவலமான நிலைமையையும் பொரு ளாதார நிலைமையையும் சொல்லும் ராஜீந்தர் சச்சார் கண்டறி தல்களையும் அவரது அறிக்கையையும் வெறுப்புடன் பார்க்கின்றார்கள். கட்டுரையின் ஒரு இடத்தில் சொன்னது போல, இந்திராகாந்தியோ, ராஜீவ்காந்தியோ, நரசிம்மராவோ, வாஜ்பேயியோ, இப்போதுள்ள மன்மோஹன்சிங்கோ, ஆட்சியில் யார் இருந்தாலும் உண்மையில் இந்திய அரசு எந்திரத்தை ஓட்டிக்கொண்டிருப்பது இந்துத்துவாவாதிகளே. இதையும் மீறி ஹேமந்த் கார்காரே போன்ற போலீஸ் அதிகாரிகள் உண்மையைத் தேடிப்போனால் அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தாருக்கும் கொடுக்கப்படும் தொல்லை மிகப் பயங் கரமானது, பைத்தியம் பிடிக்க வைப்பது. ஒட்டுமொத்த அரசு எந்திரமும் இந்துமயமாக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ்.இன் "ஒரு மதம், ஒரு தேசம், ஒரு கலாச்சாரம், ஒரு மொழி" என்ற கொள்கை இந்த இந்துத் துவாவாதிகளின் அரசு எந்திரத்தால் தீவிரமாக அமலாக்கப் பட்டு வருகின்றது. போலீசிலும் ராணுவத்திலும் முக்கிய அதிகாரிகளாக இருக்கின்ற பலர், பதவி ஓய்வு பெற்ற மறுநாளே பி.ஜே.பி. யில் சேர்ந்துவிடுகின்றார்கள் என்பது இந்த வாதத்தை வலு வாக்குகின்ற வெட்டவெளிச்சமான ஆதாரம். இதுபோன்ற அதிகாரிகள் தமது பதவிக்காலத்தில் யாருக்கு ஆதரவாக, யாருக்கு எதிராக இருந்திருப்பார்கள்? பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களில் ஓரிருவர் மட்டுமே இந்து மதத்தைச் சேர்ந்தவர்களென்பதும் மற்ற அனைவரும் முஸ்லிம்களே என்பதும் இத்தோடு இணைத்துப் பார்க்கப்பட வேண்டிய ஒன்று. இது முக்கியமான கேள்வி. ராணுவத்தின் முக்கிய ஆயுதங்கள், கருவிகள், போர்த்தளவாடங்கள், கட்டி டங்கள் அனைத்துக்கும் ராமாயண, மஹாபாரத பக்கங்களி லிருந்துதான் சம்ஸ்கிருதப் பெயர்கள் வைக்கப்படுகின்றன. பல உதாரணங்களைக் கூறமுடியும். ரஷ்யாவில் இருந்து ட்டீ-90 ரக போர் டாங்குகள் வாங்கி "பீஷ்மர்" என்று பெயர் வைத்தார்கள்! எங்கே இருக்கின்றது மதச்சார்பின்மை? அரசு அலுவலகங்களில் பஜனைகள் (தவறாமல் வெள்ளிக்கிழமை) ஒலிக்கின்றன. சமீப காலங்களில் ஆயுதபூஜை மிகத்தீவிர மாகக் கொண்டாடப்படுகிறது. இந்திய அரசு அலுவலகங்க ளில் பணியாற்றும் சிறுபான்மை மத மக்கள் (தலித்களையும் சேர்த்து) "நாம் பணி செய்வது ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக நாட்டின் அலுவலகத்தில்" என்று நம்ப வேண்டுமா? இது இந்திய அரசே சிறுபான்மை மத மக்கள் மீது நடத்தும் பயங்கர வாதம் என்று சொன்னால் என்ன தவறு? இந்திய மக்களின் பணத்தில் சம்பளம் வாங்குகின்ற ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி "பகவத் கீதைதான் இந்த நாட்டின் தர்ம நியாய சட்டமாக இருக்க வேண்டும்" என்று கொக்கரிக்கின்றார்; சேது சமுத்திர விவகாரத்தில் மத்திய சட்டஅமைச்சர் "கடவுள் ராமர் இருப் பது சந்தேகத்துக்கு இடமற்ற ஒன்று; ராமர், இந்திய கலாச் சாரத்தின் பிரிக்க முடியாத ஒரு பகுதி" என்று முழக்கமிடு கின்றார், இவர்கள்தான் சிறுபான்மை மத மக்களையும், இந்து மதத்திலேயே இருக்கின்ற தலித்துகளையும் காப்பாற்றுவார் கள் என்று நம்ப வேண்டுமா? ஒரு பந்த் நடந்தபோது "தமிழ் நாட்டில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்" என்று கூரைமீது ஏறி நின்று கோஷம் போட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஒரிசாவிலும் குஜராத்திலும் முஸ்லிம், கிறித்துவ மக்களின் கழுத்தும் வயிறும் அறுக்கப்பட்ட போதும், முஸ்லிம், கிறித்துவ பெண்கள் கூட்டமாக வன்புணர்ச்சிக்கு உள்ளானபோதும், கயர்லாஞ்சியில் போட்மாங்கே என்ற தலித் குடும்பத்தினர் உயர்சாதி இந்துக்களால் படுகொலை செய்யப்பட்டபோதும் எங்கே போனார்கள்.

2001 செப் 11 அமெரிக்காவில் அல்-காய்தா தாக்குதலுக்கு பின்பு "நியூஸ் வீக்" (24.9.2001) பத்திரிகை இப்படி எழுதியது: "சி.ஐ.ஏ. வின் மிக முக்கிய அதிகாரிகள் செப்.11 அன்று காலையில் திட்ட மிடப்பட்டிருந்த தமது பயணங்கள் அனைத்தையும் ரத்து செய்தார்கள். பாதுகாப்புக் காரணங்களுக்காக என்று மட்டும் கூறப்பட்டது". "வாஷிங்டன் போஸ்ட்" (மே 2002) இப்படி எழுதியது: "2001 கோடைகாலத்தில், அமெரிக்க அட்டர்னி ஜெனரல் ஜான் ஆஷ்க்ராப்ட், இனிமேல் பொதுவான பயணிகள் விமானத்தில் பயணம் செய்யக்கூடாது என அமெரிக்க அரசு முடிவு செய்தது - பாதுகாப்புக் காரணங்களுக்காக என்று மட்டும் கூறப்பட்டது". அவையன்றி, அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளிகளான இஸ்ரேல், ஜெர்மனி ஆகியவற்றுடன், எகிப்து, ரஷ்யா ஆகிய நாடுகளும், 2001 செப்டம்பர் மாதத்துக்கு வெகுமுன்பே, "அமெரிக்காவில் தீவிரவாதிகளின் தாக்குதல் நடத்தப்படலாம், ஒரு பயணிகள் விமானம் இதற்காகப் பயன் படுத்தப்படக்கூடும்"என்றே அமெரிக்க அரசை எச்சரிக்கை செய்திருந்தார்கள் (தகவல்: www.wsws.org) . அப்படியெனில், அல்-காய்தா தன் நாட்டின் மக்களைக் கொல்லட்டும் என்று ஜார்ஜ் புஷ் ஏன் காத்திருந்தார், உள்நோக்கம் என்ன என்ற மையமான கேள்விக்கு விடை கண்டால் மட்டுமே உலகளாவிய பயங்கரவாதம் குறித்து மேற்கொண்டு பேச முடியும்.

அதேபோல், மும்பை மீது தாக்குதல் நடத்தப்படும் என்ற உளவுத்துறை தகவல் கிடைத்த பின்னும் இந்திய ராணுவமோ போலீஸ் துறையோ, இன்று வெற்றுச்சவால்களை அள்ளி வீசும் டெல்லி சூரப்புலிகளோ ஏன் தற்காப்பு எச்சரிக்கை நடவடிக்கை களை மேற்கொள்ளவில்லை, உள்நோக்கம் என்ன என்ற மையமான கேள்விக்கு விடை கண்டால் மட்டுமே இந்தியாவில் பயங்கரவாதம் குறித்து மேற்கொண்டு பேச முடியும்.

புனாவில் உள்ள கோபால் கோட்சேவின் வீட்டில், நாதுராம் கோட்சேவின் சாம்பல் ஏன் இன்னும் கரைக்கப்படாமல் கலயத் தில் உறங்குகின்றது என்று பேச வேண்டியுள்ளது;'ராமருக்கு கோவில் கட்டுவதாக மசூதியை இடித்தவர்கள், ஐந்து வருடம் முழுமையாக ஆட்சியில் இருந்தபோதும் ஏன் கட்டவில்லை?' என்று கேட்க வேண்டியுள்ளது; கடந்த ஐந்து வருடங்களாக காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த பல தேசவிரோத, மக்கள் விரோத மசோதாக்களை நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் அப்படியே நிறைவேற்றும் வண்ணம் அவையில் கூச்சல் குழப்பத்தை உண்டுபண்ண பாரதீய ஜனதாக் கட்சி காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ஒவ்வொரு கூட்டத்தொடரிலும் எவ்வளவு அன்பளிப்பாகப் பெறுகின்றது என்பது பற்றியும், இரண்டு கட்சிகளுக்கும் இடையே திரைமறைவில் இருக்கின்ற கள்ள உறவு பற்றியும் பேச வேண்டியிருக்கின்றது. விடுதலை பெற்ற அடுத்த வருடமே,காங்கிரஸ்காரர்கள் காஷ்மீரில் ராணுவ ஜீப் வாங்கிய விசயத்தில் சுதந்திர இந்தியாவின் முதல் ஊழலைத் தொடங்கி வைத்து காந்தியடிகளுக்கு மகத்தானஅஞ்சலி செலுத் தினார்கள். பாரத் மாதாவின் நேரடி வாரீசுகளான ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. தீவிரவாதிகளோ கார்கில் போரில் இறந்துபோன இந்திய ராணுவ வீரர்களின் உடல்களை எடுத்து வர சவப்பெட்டி வாங்கியதில் செய்த ஊழலும், டெஹல்கா பத்திரிகையாளர் களால் கேமராவில் படம் பிடிக்கப்பட்ட, பி.ஜே.பி.தலைவர் பங்காரு லட்சுமணனும் பதவியில் இருக்கின்ற ராணுவ அதிகாரிகளும் கூட்டணி அமைத்து கட்டுக்கட்டாக பணத்தை அமுக்கியதைக் காட்டும் ஆயுதபேர ஊழலும் தெருவுக்கு தெரு நாறியது. இவர்களின் லஞ்சலாவண்யப் பட்டியல் பக்கம் பக்கமாகப் போகும். இது ஒரு பானைச் சோற்றில் ஒரு சோறு மட்டுமே. தனித்தனியே கொள்ளை அடித்தது போதாது என்று, 2008 ஜூலை மாதம் நாடாளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, காங்கிரஸ், பி.ஜே.பி. இரண்டு பேருமே ரிலையன்ஸ் முதலாளி அம்பானியின் பணத்தை நாட்டுமக்களுக்குத் தெரியும்படி பகிரங்கமாகப் பங்கு போட்டுக்கொண்ட நேரடி ஒளிபரப்பை இந்திய மக்கள் பார்த்து "இவங்க எவ்வளவு நல்லவங்க" என்று பரவசம் அடைந்தார்கள். ஆக இரண்டு பேருமே தேஷ்பக்தி வேஷம் போட்டுக்கொண்டே இந்தியக்குடிமகனின் ஒவ்வொரு பைசாவையும் கூச்சநாச்சமின்றி நக்கித் தின்கிறவர்கள் என்பது வெட்டவெளிச்சம். இந்த லட்சணத்தில் இவர்கள்தான் பயங் கரவாதத்தை ஒழித்துவிடுவோம் என்று தெருத்தெருவாக ஓலமிடுகின்றார்கள்! நாம் நம்ப வேண்டுமாம்!

நமது மக்கள் அப்பாவிகள். தீவிரவாதிகள் என்றால் கறுப்பு நிறத்துடன், சவரம் செய்யப்படாத முகத்துடன், முக்கியமாக தாடியுடன், அழுக்கு உடையுடன், கையில் ஏ.கே.47 துப்பாக்கி, மார்பில் சுற்றப்பட்ட தோட்டா மேகசைன், கழுத் தில் சயனைடு குப்பியுடன், உருது பேசுபவனாக இருப்ப தாகவே நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். தீவிரவாதிகள் வெள்ளைநிறத்துடன், சுத்தமாக சவரம் செய்யப்பட்டு அழகாக, லாஹூர் கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற வனாக, இலக்கணம் தப்பாமல் ஆங்கிலம் பேசுபவனாக, முன்னாள் துணைப்பிரதமர்களாக, நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவராக, எதிர்கால பிரதமர் கனவுகளுடன் அதிக பட்ச இசட் பிரிவு போலீஸ் பாதுகாப்புடன் வலம் வருபவர் களாகவும் இருக்கின்றார்கள் என்பதை நம் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியிருக்கின்றது.

இறுதியாக, தனது பதவிக்காலத்தின் இறுதியில் இராக் நாட்டிற்கு சென்ற அமெரிக்க பயங்கரவாதி ஜார்ஜ் புஷ் மீது, முன்டாசர் என்ற அந்த இராக் பத்திரிகையாளன் 'பத்திரிகை யாளன்' என்ற மரபு மீறி தனது ஒரு ஜோடி காலணிகளையும் ஏன் வீசி எறிந்தான் என்பது குறித்தும், அவன் பணி புரிந்த பத்திரிகையின் ஆசிரியர் "முன்டாசர் ஒரு வீரம் மிக்க அரபு தேச பக்தன்; அவன் தேச பக்த உணர்வில்தான் அத்தகைய காரியத்தை செய்தான்" என்று பெருமைப்பட்டதையும், அரபுப் பிராந்திய மக்கள் ஏன் உணர்ச்சிவசப்பட்டு முன்டாசரை வாழ்த்துகின்றார்கள் என்பது பற்றியும் நமது மக்களுக்கு, குறிப்பாக நமது இந்திய ஊடக முதலாளி களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் ஊடக நண்பர்களுக்கும் சொல்ல வேண்டியிருக்கின்றது.

இவை அனைத்தையும் பேசாமல், பொத்தாம் பொதுவாக பயங்கரவாதம் பற்றிப் பேசுவதும், மனிதாபிமானம், 'நாமெல்லாம் ஒற்றுமையா இருக்கணும்' என்று அடிச்சு விடு வதும், வெடிகுண்டுகள் வெடித்தபின் அந்த இடத்தைக் கழுவிவிட்டு, டி.வி.காமிராக்கள் வந்தவுடன் கையிலிருக் கின்ற மெழுகுவர்த்தியை ஏற்றுவதும், செத்துப்போன போலீஸ் அதிகாரிகள் 'தேஷ்பக்தர்'கள் என்று கோஷம் போடு வதும், அவர்கள் சாவில் சந்தேகம் இருப்பதாக யாராவது சொன்னால் உடனடியாக 'நீ தேச விரோதி' என்று கூச்சல் போடுவதும், ஒவ்வொரு முறை குண்டுவெடித்த பின்னாலும் டி.வி.சானல்களில் ஜாக்கிரதையாக காங்கிரஸ்-ஆர்.எஸ்.எஸ். வகையறா ஆட்களை உட்கார வைத்து பொத்தாம் பொதுவாக தேஷ்பக்தி பேசி "நாங்க வேற வேற கட்சின்னாலும் தேஷ் பக்தின்னா ஒண்ணா இருப்போம், பாருங்க" என்று பீத்திக் கொள்வதும், 'மீண்டும் அடுத்தவாரம் இதே நேரத்தில் மீண்டும் ஒரு குண்டுவெடிப்பின்போது சந்திப்போம்' என்று வணக்கம் கூறி விடை பெறுவதும் எதுக்கும் பிரயோசனப் படாது.

Wednesday, March 4, 2009

உறவை முறிப்பதாக சத்தியம் செய்தல்!

நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்களின் தாய்வழிச் சகோதரர் ஹாரிஸ் அவர்களின் புதல்வரான அவ்ஃப் இப்னு மாலிக் இப்னி துஃபைல்(ரஹ்) கூறினார்.

ஆயிஷா (ரலி) (தம் வீடு ஒன்றை) ‘விற்றது தொடர்பாக’ அல்லது ‘நன்கொடையாக வழங்கியது தொடர்பாக’ (அவர்களின் சகோதரி அஸ்மாவின் புதல்வர்) அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரலி) (அதிருப்தியடைந்து) ‘அல்லாஹ்வின் மீதாணையாக! ஆயிஷா (தம் முடிவைக்) கைவிடவேண்டும்; அல்லது தான் அவரைத் தடுத்து நிறுத்துவேன்’ என்று கூறினார்கள் என ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு ஆயிஷா (ரலி), ‘அவரா இப்படிக் கூறினார்?’ என்று கேட்டார்கள். மக்கள், ‘ஆம்’ என்றனர். அப்போது ஆயிஷா (ரலி), ‘இனி நான் இப்னு ஸுபைரிடம் ஒருபோதும் பேசமாட்டேன் என அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுச் சத்தியம் செய்கிறேன்’ என்று கூறிவிட்டார்கள். நீண்ட நாள்கள் பேச்சு வார்த்தை நின்றுபோனபோது ஆயிஷா (ரலி) அவர்களிடம் (தமக்காகப்) பரிந்து பேசுமாறு (முஹாஜிர்களை) இப்னு ஸுபைர் (ரலி) கேட்டுக்கொண்டார்கள். (அவ்வாறே அவர்கள் பரிந்து பேசியபோது) ஆயிஷா (ரலி), ‘முடியாது. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் விஷயத்தில் ஒருபோதும் நான் (எவருடைய) பரிந்துரையையும் ஏற்றுக்கொள்ளவுமாட்டேன். என் சத்தியத்தை நான் முறித்துக் கொள்ளவுமாட்டேன்’ என்று கூறிவிட்டார்கள்.

ஆயிஷா (ரலி) இப்னு ஸுபைர் அவர்களிடம் பேச்சை நிறுத்தி நீண்ட நாள்களாகிவிட்டபோது பனூ ஸுஹ்ரா குலத்தைச் சேர்ந்த மிஸ்வர் இப்னு மக்ரமா (ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு அஸ்வத் இப்னி அப்தி யகூஸ் (ரலி) ஆகிய இருவரிடமும் இப்னு ஸுபைர் (ரலி), ‘அல்லாஹ்வை முன்வைத்து உங்கள் இருவரிடமும நான் வேண்டுகிறேன். என்னை (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்களிடம் அழைத்துச் செல்லக்கூடாதா? என் உறவை முறித்துக் கொள்வதாக அவர்கள் செய்துள்ள சத்தியம் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டதல்லவே!’ என்று கூறினார்கள். எனவே, மிஸ்வர் (ரலி) அவர்களும் அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்களும் தம் மேலங்கிகளை அணிந்துகொண்டு இப்னு ஸுபைர் (ரலி) அவர்களுடன் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றார்கள்.

(அங்கு சென்ற) உடனே ‘அஸ்ஸலாமு அலைக்கி வ ரஹ்மத்துலலாஹி வ பரகாதுஹு’ என்று சலாம் சொல்லிவிட்டு, ‘நாங்கள் உள்ளே வரலாமா?’ என்று அனுமதி கேட்டனர்.

அதற்கு ஆயிஷா (ரலி), ‘உள்ளே வாருங்கள்’ என்று அனுமதி வழங்கினார்கள். அப்போது அவர்கள் (மூவரும்) ‘நாங்கள் அனைவரும் உள்ளே வரலாமா?’ என்று கேட்டனர்.

ஆயிஷா (ரலி), ‘ஆம்; அனைவரும் உள்ளே வாருங்கள்’ என்று அவர்கள் இருவருடனும் இப்னு ஸுபைர் (ரலி) இருப்பதை அறிந்து கொள்ளாமலேயே கூறினார்கள்.

அவர்கள் மூவரும் உள்ளே நுழைந்ததும், இப்னு ஸுபைர் (ரலி) (தம் சிறிய தாயாரான ஆயிஷா இருந்த) திரைக்குள் நுழைந்து அவர்களைத் தழுவிக்கொண்டு அவர்களிடம் முறையிட்டு அழத் தொடங்கினார்கள்.

மிஸ்வர் (ரலி) அவர்களும் அப்துர்ரஹ்மான் (ரலி) அவர்களும் (வெளியே இருந்தபடி) இப்னு ஸுபைர் (ரலி) அவர்களிடம் பேசியே தீரவேண்டும் என்றும் அவருக்காகத் தாங்கள் செய்யும் பரிந்துரையை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வேண்டிக் கொண்டிருந்தனர்.

-மேலும், அவர்கள் இருவரும், ‘ஒரு முஸ்லிம் தம் சகோதரிடம் மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று’ என்று நபி (ஸல்) அவர்கள் தடை விதித்துள்ளதை தாங்கள் அறிந்தே உள்ளீர்கள்’ என்று கூறினார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்களிடம் (உறவைப் பேணுவதன் சிறப்பு குறித்து) கசப்பூட்டியும் அவர்கள் அதிகமாகப் பேசியபோது (தாம் செய்த சத்தியத்தைப் பற்றி) அவர்கள் இருவருக்கும் நினைவூட்டியவாறு ஆயிஷா (ரலி) அழலானார்கள்.

மேலும், ‘(நான் அவரிடம் பேசமாட்டேன் என) சத்தியம் செய்து விட்டேன். சத்தியம் மிகவும் கடுமையானதாகும்’ என்று (அவர்கள் இருவரிடமும் திரும்பக் திரும்பக்) கூறிக் கொண்டிருந்தார்கள். அப்போது இருவரும் (தங்கள் கருத்தை)
வலியுறுத்திக்கொண்டேயிருந்தனர்.

இறுதியில் ஆயிஷா (ரலி) (தம் சகோதரியின் புதல்வர்) இப்னு ஸுபைரிடம் பேசிவிட்டார்கள். தம் சத்தியத்தை முறித்துவிட்டதற்குப் பரிகாரமாக நாற்பது அடிமைகளை விடுதலை செய்தார்கள். அதற்குப் பிறகும் கூடத் தம் சத்தியத்தை நினைவுகூர்ந்து தம் முகத்திரை நனையுமளவிற்கு அவர்கள் அழுவார்கள். (ஆதாரம் : புகாரி)

இந்த நபிமொழியிலிருந்து பெறும் படிப்பினைகள்: -

1) உறவை முறிப்பதாக சத்தியம் செய்யக் கூடாது.
2) ஒரு முஸ்லிம் தன் சகோதர முஸ்லிமுடன் மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருக்கக் கூடாது
3) முஸ்லிம் இருவருக்கிடையில் பினக்கு ஏற்பட்டால் மேற்கண்ட நபிமொழியை நினைவூட்டி அவர்களிடையே மீண்டும் இணக்கத்தை ஏற்படுத்த முயற்ச்சிக்க வேண்டும்.


அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் : பாகம்-1

இழப்புக்குள்ளாக்கப் படும் அருட் செல்வங்கள்: -

“மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட் செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாம் விடுகின்றனர். 1. ஆரோக்கியம். 2. ஓய்வு” என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார். (ஆதாரம் : புகாரி)

உலகத்தையும் அதிலிருப்பவற்றையும் விடச் சிறந்தது: -

‘சொர்க்கத்தில் ஒரு சாட்டை வைக்கும் அளவு இடம் (கிடைப்பது), உலகத்தையும் அதிலிருப்பவற்றையும் விடச் சிறந்ததாகும். காலையில் சிறிது நேரம் அல்லது மாலையில் சிறிது நேரம் இறைவழியில் செல்வது உலகத்தையும் அதிலிருப்பவற்றையும் விடச் சிறந்ததாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன். அறிவிப்பவர் : ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி), ஆதாரம் : புகாரி

வழிப்போக்கனைப் போல இவ்வுலகில் வாழ வேண்டும்: -

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்: இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என் தோளைப் பிடித்துக் கொண்டு ‘உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப் போக்கனைப் போன்று இரு’ என்றார்கள்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான முஜாஹித்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘நீ மாலை நேரத்தை அடைந்தால் காலைவேளையை எதிர்பார்க்காதே! நீ காலை வேளையை அடைந்தால் மாலை நேரத்தை எதிர்பார்க்காதே! நீ நோய்வாய்ப்படும் நாளுக்காக உன்னுடைய ஆரோக்கியத்தில் சிறி(து நேரத்)தைச் செலவிடு. உன்னுடைய இறப்பு(க் குப் பிந்திய நாளு)க்காக உன்னுடைய வாழ்நாளில் சிறி(து நேரத்)தைச் செலவிடு’ என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுவார்கள். (ஆதாரம் : புகாரி)

முதியவரின் இளமை: -

“முதியவரின் மனம் கூட இரண்டு விஷயங்களில் இளமையாகவே இருந்துவரும். 1. இம்மை வாழ்வின் (-செல்வத்தின்) மீதுள்ள பிரியம். 2. நீண்டநாள் வாழவேண்டும் என்ற ஆசை” என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி

மனிதர்களோடு வளரும் ஆசைகள்: -

“மனிதன் (வளர்ந்து) பெரியவனாக ஆக அவனுடன் இரண்டு ஆசைகளும் வளர்கின்றன: 1. பொருளாசை. 2. நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை” என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி), ஆதாரம் : புகாரி

நரகம் தடை செய்யப்படக் காரணமான வார்த்தை: -

இத்பான் இப்னு மாலிக் அல்அன்சாரி (ரலி) அவர்கள் (பின்வருமாறு) சொல்ல கேட்டேன். “(ஒருநாள்) அதிகாலையில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்திருந்தபோது ‘அல்லாஹ்வின் திருப்தியை நாடி ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (வணக்கத்திற்குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை) என்று கூறியவாறு மறுமை நாளில் ஓர் அடியார் வந்தால் அவரின் மீது நரகத்தை அல்லாஹ் தடை செய்யாமல் இருப்பதில்லை”‘ என்று கூறினார்கள். அறிவிப்பவர்: முஹ்மூத் இப்னு ரபீஉ (ரலி), ஆதாரம் : புகாரி

பொறுமைக்குப் பிரதிபலன் சொர்க்கம்: -

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் கூறினான்: இறைநம்பிக்கையுள்ள என் அடியார், அவருக்குப் பிரியமான ஒருவரின் உயிரை நான் கைப்பற்றிவிடும்போது நன்மையை நாடிப் பொறுமை காத்தால், சொர்க்கமே அவருக்கு நான் வழங்கும் பிரதிபலனாக இருக்கும்”. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி

மறுமையை மறக்கடிக்கும் உலகத்தின் செல்வம்: -

‘அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு வறுமை ஏற்பட்டுவிடும் என்று நான் அஞ்சவில்லை. ஆயினும், உங்களுக்கு முன்னிருந்தவர்களுக்கு உலகச் செல்வம் தாராளமாகக் கொடுக்கப்பட்டதைப் போன்று உங்களுக்கும் தாராளமாகக் கொடுக்கப்பட்டு, அதற்காக அவர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டதைப் போன்று நீங்களும் போட்டியிட, அது (மறுமையின் எண்ணத்திலிருந்து) அவர்களின் கவனத்தைத் திருப்பிவிட்டதைப் போன்று உங்களின் கவனத்தையும் அ(ந்த உலகாசையான)து திருப்பிவிடுமோ என்றே நான் அஞ்சுகிறேன்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: மிஸ்வர் இப்னு மக்ரமா (ரலி), ஆதாரம் : புகாரி

செல்வத்துக்கு அடிமையானவன் துர்பாக்கியவான் ஆவான்: -

“பொற்காசு, வெள்ளிக்காசு, குஞ்சம் உள்ள (ஆடம்பர) ஆடை, சதுரக் கம்பளி ஆடை ஆகியவற்றுக்கு அடிமையாகிவிட்டவன் துர்பாக்கியவான் ஆவான். அவனுக்கு (செல்வம்) வழங்கப்பட்டால் திருப்தியடைவான். (செல்வம்) வழங்கப்படாவிட்டால் அதிருப்தியடைவான்” என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி

“ஆதமின் மகனக்கு (மனிதனுக்கு) இரண்டு நீரோடைகள் (நிறைய) செல்வம் இருந்தாலும் மூன்றாவதையும் அவன் தேடுவான். ஆதமின் மகனுடைய வயிற்றை மண்ணை (மரணத்தை)த் தவிர வேறெதுவும் நிரப்பாது. (பாவங்களிலிருந்து) பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்” என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), ஆதாரம் : புகாரி

நம்முடைய செல்வம் எது?

“(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் ‘உங்களில் யாருக்காவது தம் செல்வத்தை விடத் தம் வாரிசுகளின் செல்வம் விருப்பமானதாக இருக்குமா?’ என்று கேட்டார்கள். தோழர்கள் ‘இறைத்தூதர் அவர்களே! எங்கள் அனைவருக்குமே (வாரிசுகளின் செல்வத்தை விட) எங்களின் செல்வமே விருப்பமானதாகும்’ என்று பதிலளித்தார்கள். ‘அவ்வாறாயின், ஒருவர் (இறப்பதற்கு முன் அறவழியில்) செலவிட்டதே அவரின் செல்வமாகும். (இறக்கும் போது) விட்டுச் செல்வது அவரின் வாரிசுகளின் செல்வமாகும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி), ஆதாரம் : புகாரி

மறுமையில் நற்பலன் குன்றியவர்கள்: -

‘(இம்மையில் செல்வம்) அதிகம் உள்ளவர்களே மறுமை நாளில் (நற்பலன்) குறைந்தவர்கள் ஆவர்; ஒரு சிலரைத் தவிர, அவர்களுக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கினான். அதை அவர்கள் தம் வலப் பக்கமும் இடப் பக்கமும் தம் முன் பக்கமும் பின் பக்கமும் வாரி வழங்கி அச்செல்வத்தால் நன்மை புரிகிறார்கள். (இவர்களைத் தவிர)’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதர் (ரலி), ஆதாரம் : புகாரி (நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி).

போதுமென்ற மனமே உண்மையான செல்வமாகும்: -

“(வாழ்க்கை) வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாகப் போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி

தொடர்ந்து செய்யப்படும் நற்செயலே அல்லாஹ்வுக்கு விருப்பமானது!

‘நற்செயல்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமானது எது?’ என்று நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள் ‘(எண்ணிக்கையில்) குறைவாக இருந்தாலும், (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலே’ என்று விடையளித்தார்கள். மேலும், ‘நற்செயல்கள் புரிவதில் இயன்றவரை அதன் எல்லையைத் தொடமுயலுங்கள்’ என்றும் கூறினார்கள். . அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம் : புகாரி

நன்றியுள்ள அடியாரின் செயல்: -

நபி(ஸல்) அவர்கள் தம் பாதங்கள் வீங்கும் அளவுக்கு அல்லது புடைக்கும் அளவுக்கு நின்று தொழுவார்கள். இது பற்றி அவர்களிடம் கேட்கப்படும்போது ‘நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா?’ என்று கேட்பார்கள். அறிவிப்பவர்: முஃகீரா இப்னு ஷ{அபா(ரலி), ஆதாரம் : புகாரி

விசாலமான அருட்கொடை எது?

அன்சாரிகளில் சிலர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் (பசிக்கு உணவும் செலவுக்குப் பணமும்) கேட்டார்கள். அவ்வாறு கேட்ட யாருக்குமே நபி(ஸல்) அவர்கள் கொடுக்காமல் இருக்கவில்லை. இறுதியாக, நபியவர்களிடம் இருந்த அனைத்தும் தீர்ந்துவிட்டது. தம் கரங்களால் செலவிட்டு எல்லாப் பொருட்களும் தீர்ந்து போன பின்பு அந்த அன்சாரிகளிடம் நபி(ஸல்)
அவர்கள் ‘என்னிடம் உள்ள எச்செல்வத்தையும் உங்களுக்கு வழங்காமல் நான் சேமித்து வைக்கப் போவதில்லை. (இருப்பினும்) சுயமரியாதையோடு நடப்பவரை அல்லாஹ் சுயமரியாதையுடன் வாழச் செய்வான். (இன்னல்களைச்) சம்ப்பவருக்கு அல்லாஹ் மேலும் சம்ப்புத் தன்மையை வழங்குவான். பிறரிடம் தேவையாகாமல் (தன்னிறைவுடன்) இருப்பவரை அல்லாஹ் தன்னிறைவு உள்ளவராக ஆக்குவான். பொறுமையைக் காட்டிலும் மேலான விசாலமானதோர் அருட்கொடை (வேறெதும்) உங்களுக்கு வழங்கப்படவில்லை’ என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி), ஆதாரம் : புகாரி

விசாரணை ஏதுமின்றி சொர்க்கம் செல்பவர்கள்!

“என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் விசாரணை ஏதுமின்றி சொர்க்கம் செல்வார்கள். அவர்கள் யாரெனில், ஓதிப்பார்க்க மாட்டார்கள். பறவை சகுனம் பார்க்கமாட்டார்கள். தம் இறைவ(ன் மீது முழு நம்பிக்கை கொண்டு அவ)னையே சார்ந்திருப்பார்கள்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி

சொர்க்கத்திற்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டவர்கள்!

“தம் இரண்டு தாடைகளுக்கு இடையே உள்ளத(hன நாவி)ற்கும், தம் இரண்டு கால்களுக்கு இடையே உள்ளத(hன மர்ம உறுப்பி)ற்கும் என்னிடம் உத்தரவாதம் அளிப்பவருககு நான் சொர்க்கத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறேன்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி) , ஆதாரம் : புகாரி

அண்டை வீட்டாருக்கு தொல்லை தராதே!

“அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும்; அல்லது வாய் மூடி இருக்கட்டும் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தர வேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:அபூஹ¤ரைரா (ரலி) , ஆதாரம் : புகாரி

விருந்தினரைக் கண்ணியப்படுத்துங்கள்!

நபி(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறியதை என் காதுகள் செவியேற்றன்; என் உள்ளம் அதை மனனமிட்டது. விருந்துபசாரம் மூன்று நாள்களாகும். (அவற்றில்) ‘அவரின் கொடையும் அடங்கும் அப்போது அவரின் கொடை என்ன?’ என்று கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், ‘(அவரின் கொடை) ஒரு பகல் ஓர் இரவு (உபசரிப்பு) ஆகும்’ என்று கூறிவிட்டு, ‘அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தினரைக் கண்ணியப்படுத்தட்டும். மேலும், அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும்; அல்லது வாய்மூடி இருக்கட்டும்’ என்றார்கள். அறிவிப்பவர்:அபூ ஷ{ரைஹ் அல்அதவீ அல்குஸாஈ(ரலி), ஆதாரம் : புகாரி

பின்விளைவைப் பற்றி யோசிக்காமல் பேசினால்?

“ஓர் அடியார் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல் ஒன்றைப் பேசிவிடுகிறார். அதன் காரணமாக அவர் (இரு) கிழக்குத் திசைகளுக்கிடையே உள்ள தொலைவைவிட அதிகமான தூரத்தில் நரகத்தில் விழுகிறார்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:அபூஹ¤ரைரா (ரலி), ஆதாரம் : புகாரி

“ஓர் அடியார் அல்லாஹ்வின் திருப்திக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பலனைப் பற்றிப் பெரிதாக யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அல்லாஹ் அவரின் அந்தஸ்துகளை உயர்த்திவிடுகிறான். ஓர் அடியார் அல்லாஹ்வின் கோபத்துக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அவர் நரகத்தில் போய் விழுகிறார்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹ¤ரைரா (ரலி), ஆதாரம் : புகாரி

மறுமையில் அல்லாஹ்வின் அர்ஷின் நிழல் யாருக்கு கிடைக்கும்?

“(தன்னுடைய நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மறுமை நாளில்) ஏழு போருக்கு அல்லாஹ் தன்னுடைய (அரியாசத்தின்) நிழலில் அடைக்கலம் அளிக்கிறான். (தனிமையில்) அல்லாஹ்வை நினைவு கூர்ந்து (அவனுடைய அச்சத்தால்) கண்ணீர் வடிப்பவர் (அவர்களில் ஒருவராவார்.). என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹ¤ரைரா (ரலி), ஆதாரம் : புகாரி

இறையச்சத்தால் குறைவாக சிரி! நிறைய அழு!

“நான் அறிவதை நீங்கள் அறிவீர்களாயின் நிச்சயம் குறைவாகச் சிரிப்பீர்கள். அதிகமாக அழுவீர்கள்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹ¤ரைரா (ரலி), ஆதாரம் : புகாரி

சொர்க்கம், நரகம்!

“மன இச்சைகளால் நரகம் மூடப்பட்டுள்ளது. சிரமங்களால் சொர்க்கம் மூடப்பட்டுள்ளது” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அறிவிப்பவர்: அபூஹ¤ரைரா (ரலி), ஆதாரம் : புகாரி

செல்வத்தில் கீழானவர்களை நினைத்துப்பார்: -

“செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழனாவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும்”என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹ¤ரைரா (ரலி), ஆதாரம் : புகாரி

நன்மையான காரியத்தை செய்ய நினைத்தாலே நன்மை எழுதப்படுகின்றது: -

“(ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள் தம் இறைவனைப் பற்றி அறிவிக்கையில் (பின்வருமாறு) கூறினார்கள்: அல்லாஹ் நன்மைகளையும் தீமைகளையும் (அவை இன்னின்னவை என நிர்ணயித்து) எழுதிவிட்டான். பிறகு அதனை விவரித்தான். அதாவது ஒருவர் ஒரு நன்மை செய்யவேண்டும் என (மனத்தில்) எண்ணிவிட்டாலே அதைச் செயல்படுத்தாவிட்டாலும் அவருக்காகத் தன்னிடம் அதை ஒரு முழு நன்மையாக அல்லாஹ் பதிவு செய்கிறான். அதை அவர் எண்ணியதுடன் செயல்படுத்தியும்விட்டால், அந்த ஒரு நன்மையைத் தன்னிடம் பத்து நன்மைகளாக, எழு நூறு மடங்காக, இன்னும் அதிகமாக அல்லாஹ் பதிவு செய்கிறான். ஆனால் ஒருவர் ஒரு தீமை செய்ய எண்ணி, (அல்லாஹ்வுக்கு அஞ்சி) அதைச் செய்யாமல் கைவிட்டால், அதற்காக அவருக்குத் தன்னிடம் ஒரு முழு நன்மையை அல்லாஹ் எழுதுகிறான். எண்ணியபடி அந்தத் தீமையை அவர் செய்து முடித்துவிட்டாலோ, அதற்காக ஒரேயொரு குற்றத்தையே அல்லாஹ் எழுதுகிறான்” அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), ஆதாரம் : புகாரி

சொர்க்க வாசியா அல்லது நரகவாசியா என தீர்மானிப்பது எது?

“(கைபர் போரின் போது) நபி(ஸல்) அவர்கள் (யூத) இணைவைப்பாளர்களிடம் போரிட்டுக் கொண்டிருந்த (குஸ்மான் என்றழைக்கப்பட்ட) ஒரு மனிதரைப் பார்த்தார்கள். அவர் எதிரிகளுக்கு பதிலடி கொடுப்பதில் முஸ்லிம்களிலேயே மகத்தான (பங்காற்றுப)வராக இருந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘நரகவாசிகளில் ஒருவரைப் பார்க்க விரும்புகிறவர் இவரைப் பார்த்துக் கொள்ளலாம்’) என்று (குஸ்மான் எனும் அந்த மனிதரைக் குறித்துக்) கூறினார்கள். (அவரைப் பற்றி நபியவர்கள் ஏன் அவ்வாறு கூறினார்கள் என்று அறிந்து கொள்வதற்காக) உடனே அவரை இன்னொரு மனிதர் பின்தொடர்ந்தார். (குஸ்மான் என்ற) அந்த மனிதரோ (எதிரிகளுடன் கடுமையாகப்) போராடிக் கொண்டு இருந்தார். இறுதியில் அந்த மனிதர் (எதிரிகளால் கடுமையாகக்) காயப்படுத்தப்பட்டார். அதனால் அவர் அவசரமாக இறந்துவிட விரும்பி, தன்னுடைய வாளின் (கீழ்ப் பகுதியைப் பூமியில் நட்டு வைத்து, (கீழ்ப் பகுதியைப் பூமியில் நட்டு வைத்து, அதன்) கூரான பகுதியைத் தம் மார்புகளுக்கிடையே வைத்து, அந்த வாளின் மீது உடலை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்து) கொண்டார். வாள் அவரின் தோள்களுக்கிடையே இருந்து வெளியேறியது.

அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘ஓர் அடியார் மக்களின் பார்வையில் சொர்க்கவாசிகளின் நற்செயலைச் செய்து வருவார். ஆனால், (உண்மையில்) அவர் நரகவாசிகளில் ஒருவராக இருப்பார். (இதைப் போன்றே) ஓர் அடியார் மக்களின் பார்வையில் நரகவாசிகளின் (தீய) செயலைச் செய்துவருவார். (உண்மையில்) அவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார். இறுதி முடிவுகளைக் கொண்டே செயல்கள் தீர்மானிக்கப்படுகின்றன’ என்றார்கள்” அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ்ஸாஇதீ (ரலி), ஆதாரம் : புகாரி