அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.
Showing posts with label Political. Show all posts
Showing posts with label Political. Show all posts

Sunday, March 25, 2012

ஆபாச பட சர்ச்சை - காங்கிரஸ் வெளியிட்டது புதிய வீடியோ !!

குஜராத் மாநிலத்தில் ஆளும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆபாச படம் பார்த்து சிக்கிய விவகாரத்தில் தடய அறிவியல் துறை சம்பந்தப்பட்டவர்களின் கைக்கணினியில் ஆபாசபடம் ஏதுமில்லை என்று கூறியதன் எதிர்வினையாக ஆபாச படம் பார்த்ததற்கான புதிய ஒளிப்பட ஆதாரத்தை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
கர்நாடகாவை தொடர்ந்து குஜராத் சட்டமன்றத்திலும் ஆளும் பாஜக சட்டசபை உறுப்பினர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆபாச படம் பார்த்ததாக சர்ச்சை வெடித்தது. சட்டசபை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்த போது, 2 பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்கள் தங்களது கைக்கணினி - ஐபேடில் ஆபாச படம் பார்த்ததாக சர்ச்சை எழுந்தது. இந்தப் பிரச்னையை எழுப்பி சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் அமளி துமளியில் ஈடுபட்டனர். இந்த புகார் குறித்து உரிமைக் குழு விசாரணைக்கு அவைத்தலைவர் உத்தரவிட்டார்.


Wednesday, March 7, 2012

உ.பி.,யில் முலாயம்சிங் ஆட்சி; பஞ்சாப்- கோவாவில் பா.ஜ., ஆட்சி ; மணிப்பூர் காங்.,

புதுடில்லி: இந்தியாவின் மினி பொதுத்தேர்தல் என்றழைக்கப்படும் 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளி வந்த வண்ணம் உள்ளது. இதில் உ.பி., யில் முலாயம்சிங் கட்சி ஆட்சி அமைக்கு கிறது. மணிப்பூர், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா மாநிலங்களின் சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு துவங்கியது.இதில் பஞ்சாப், கோவா மாநிலங்களில் முழுமையாக வெளிவந்துள்ளது. மணிப்பூர், உத்தர்கண்ட், உ.பி., மாநிலங்களில் ஒரு சில தொகுதிகளுக்கு மட்டும் முடிவுகள் வெளி வர வேண்டியுள்ளது.
ஓட்டு எண்ணிக்கை துவங்கியது முதல் உ .பி.,மாநிலத்தில் ஆளும் கட்சியான பகுஜன்கட்சி ( மாயாவதி ) அதிக இடங்களில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் இந்த கட்சி ஆட்சியை இழந்துள்ளது. முலாயம் சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி 220 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.. ஆளும் மாயாவதி கட்சி ( 78 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதுது , பா.ஜ., 46 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 36 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

Wednesday, October 26, 2011

உள்ளாட்சி தேர்தல்: பாஜக வாக்கு வங்கியில் சரிவு!

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் இரண்டு நகராட்சிகள், கணிசமாக பதிமூன்று பேரூராட்சிகள் என்று கைப் பற்றி இருந்த போதிலும்  தேசிய கட்சியான பாரதிய ஜனதாவின் வாக்குவங்கி   சரிந்துள்ளது தெரிய வந்துள்ளது.
தனித்துப் போட்டியிட்ட பாரதீய ஜனதா கட்சி 2006 சட்டசபை தேர்தலில் 2.02 சதவீத ஓட்டுக்களையும், 2009 நாடாளுமன்ற தேர்தலில் 2.34 சதவீத ஓட்டுக்களையும் பெற்றது. ஆனால் கடந்த உள்ளாட்சி தேர்தலில் 1.35 சதவீத வாக்குகளை மட்டும் அக்கட்சி பெற்றுள்ளது. இதன் மூலம் பாரதீய ஜனதாவுக்கு தமிழகத்தில் ஓட்டு சதவீதத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது.

Wednesday, August 24, 2011

ஜன் லோக்பாலை முழுவதுமாக ஏற்க முடியாது - பாஜக!

அண்ணா ஹசாரே குழுவினர் தயாரித்துள்ள ஜன் லோக்பாலை முழுவதுமாக ஏற்க முடியாது என்றும் அதிலும் குறைபாடுகள் உள்ளதாகவும் பாஜகவின் மாநிலங்களைவை துணைத் தலைவர் எஸ்.எஸ்.அலுவாலியா தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மாநிலங்களைவை துணைத் தலைவர் எஸ்.எஸ்.அலுவாலியா  மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ள லோக்பால் மசோதா பலவீனமானது என்றும் அதே நேரத்தில் அன்னா ஹசாரேவின் ஜன் லோக்பாலையும் முழுவதுமாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 30 க்குள் ஜன் லோக்பால் மசோதா நிறைவேற்றப் பட வேண்டும் என்ற அன்னா ஹசாரேவின் கோரிக்கையும் ஏற்கப் படக் கூடியது அல்ல என்றும் இந்த விவகாரத்தில் பாஜக அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு அளிக்காது என்றும் எஸ்.எஸ்.அலுவாலியா மேலும் தெரிவித்துள்ளார்.

சங்கர்ராமன் கொலை வழக்கு! நீதிபதியிடம் ஜெயேந்திரர் பண பேரம்!!

காஞ்சி சங்கர மட மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு சம்மந்தமாக குற்றம் சாட்டப்பட்டுள்ள காஞ்சி பீடாதிபதி சங்கராச்சார்யா மீதான விசாரணை புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை நீதிபதி ராமசாமி விசாரித்து வருகிறார்.
இந்த விசாரணைக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுந்தர்ராஜ் மனு தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில்,   ஜெயேந்திரர், அவரது பெண் உதவியாளர் 2 இடைத்தரகர்கள் மற்றும் நீதிபதி ஆகியோர் பேசிக்கொள்ளும் உரையாடல் குறித்து சி.டி. வெளியாகி உள்ளது. அந்த சி.டி.யில் சங்கரராமன் கொலை குறித்தும், பணம் பட்டு வாடா குறித்தும் பேசுவது போன்று அந்த உரையாடல் உள்ளது.

இது குறித்து பேசிய வழக்கறிஞர் சுந்தர்ராஜ் இந்த உரையாடல் சி.டி. உண்மைதானா? அவ்வாறு உண்மை என்றால் பேசியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று கோரி சென்னை உயர் நீதிமன்ற விஜிலென்ஸ் பதிவாளரிடம் புகார் மனு கொடுத்தேன்.

அந்த மனு மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். அதுவரை புதுச்சேரியில் நடைபெறும் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை தடைவிதிக்க வேண்டும்’’என்றும் அதில் கேட்டுக்கொள்ளபட்டுள்ளது.

Wednesday, August 10, 2011

சுவிஸ் வங்கியில் என் கணக்கில் ரூ. 35 ஆயிரம் கோடியா?: இல்லை என்கிறார் கருணாநிதி!

சுவிஸ் வங்கியில் 35 ஆயிரம் கோடி ரூபாய் பணம் போட்டு வைத்திருப்பதாக வெளியான செய்திக்கு திமுக தலைவர் கருணாநிதி மறுப்பு தெரிவித்துள்ளார்.

சுவிஸ் வங்கிகளில் உள்ள கறுப்புப் பணத்தில் அதிகமானவை இந்தியாவிலிருந்து வந்தவையே என்ற தலைப்பிட்டு விக்கிலீக்ஸில் வெளியானதாகக் கூறி கடந்த சில நாள்களாக மின்னஞ்சல்கள் மூலம் பட்டியல் ஒன்று உலா வந்து கொண்டுள்ளது. அதில், கருணாநிதிக்கு சுவிஸ் வங்கியில் 35 ஆயிரம் கோடி ரூபாய் இருப்பதாகவும் கலாநிதி மாறனுக்கு 15 ஆயிரம் கோடி ரூபாயும் சுவிஸ் வங்கியில் உள்ளதாகவும் கூறப்பட்டடிருந்தது. இந்த நிலையில் அதை மறுத்த கருணாநிதி, தவறான செய்தியை வெளியிட்ட பத்திரிகை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

ஒரு தமிழ் பத்திரிகை 35 ஆயிரம் கோடி சுவிஸ் வங்கியில் நான் போட்டு இருப்பதாக செய்தி வெளியிட்டு உள்ளது. எது பற்றியும் விசாரிக்காமல் செய்தி வெளியிட்டுள்ளது. அதை நிருபிக்க வேண்டும். தவறான செய்தியை வெளியிட்ட அந்த பத்திரிக்கை மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து வழக்கறிஞர்களுடன் பேசி முடிவு செய்வோம்.

புதிய தலைமை செயலகத்தை பற்றி ஒரு ஆங்கில பத்திரிகையில் ஒரு தகவல் வந்துள்ளது. யாரோ தவறான தகவலை கொடுத்து இருக்கிறார்கள். புதிய தலைமை செயலகத்தை தனியாகவோ, அதிகாரிகளுடனோ சென்று பார்த்து பலருடைய கருத்துக்களை வெளியிட வேண்டும்.

தனிப்பட்ட கருத்துக்களை வெளியிடக் கூடாது. புதிய தலைமை செயலகத்தில் ஆளுநர் உரை படிக்கப்பட்டு விவாதம் நடந்துள்ளது. இதே கட்டிடத்தில் தான் பலமுறை அமைச்சரவை கூட்டம் நடந்துள்ளது.   இந்த இடம் சட்டசபை நிகழ்வுகளுக்கு போதாது என்பதை ஏற்க கூடியதாக இல்லை.

இவ்வாறு கருணாநிதி தனது பேட்டியின்போது தெரிவித்தார்.

Monday, August 8, 2011

என் சொத்துகள் சட்டத்துக்குட்பட்டு வாங்கியவையே: மு.க.அழகிரி

நான் மற்றும் என் குடும்பத்தினர் வாங்கியுள்ள சொத்துகள் சட்டத்துக்குட்பட்டு வாங்கியவைதான் என மத்திய அமைச்சர். மு.க. அழகிரி கூறியுள்ளார். ஊடகங்கள் தன்னுடைய நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக மு.க. அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

தமிழகத்தில் இருந்து வெளிவரும் சில வாரப்பத்திரிக்கைகள் எனது நற்பெயரையும், புகழையும் கெடுக்கும் விதத்தில் பொய்ச்செய்திகளை வெளியிட்டு வீண் வதந்திகளை பரப்பி வருகின்றன. குறிப்பாக என் மனைவி மீதும் என் பிள்ளைகள் மீதும் அவதூறுகளை பரப்பும் வகையில் சமீப காலமாக அந்த பத்திரிகைகள் தொடர்ந்து பொய்ச்செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இந்த பொய்ச்செய்திகளை சில ஊடகங்களும் எடுத்து வெளியிடுகின்றன.

என் குடும்பத்தினர் வாங்கியுள்ள எந்த சொத்துக்களும் சட்டத்திற்கு உட்பட்டு நியாயமாக வாங்கப்பட்டவைதான். அதற்கு முறையப்படி உரிய கணக்கும் காட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த பத்திரிகைகள் பொய்ச்செய்திகளை வெளியிடுவது உள்நோக்கத்தோடு என் புகழை சீர் குலைக்க நடத்தப்படும் திட்டமிட்ட சதியாகவே நான் கருதுகிறேன். இப்படி என் குடும்பத்தினர் மீது அவதூறு பரப்பும் பொய்ச்செய்திகளை வெளியிடும் வாரப்பத்திரிக்கைகள் மற்றும் ஊடகங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்க உள்ளேன். ஆகவே இந்த பொய்ச்செய்திகளை பொதுமக்கள் யாரும் நம்பவேண்டாம்.

இவ்வாறு மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தன்னுடைய அறிக்கையில் கூறியுள்ளார்.

Thursday, August 4, 2011

தி.மு.க. கூட்டணியை விட்டு திருமாவளவனும் விலகுகிறார்!

தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளுடன் கூட்டணி சேராமல், மாற்று அணியை உருவாக்க வேண்டும் என்பது எங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய யோசனை. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவிடமும் அதுபற்றி பேசியிருக்கிறேன் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமா வளவன் கூறியுள்ளார்.

இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்கக்கோரி உலகத் தமிழர்களின் கையெழுத்து பெறும் இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கையெழுத்துகளை வாங்கி அவற்றை ஐ.நா. சபைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் இயக்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் இயக்கம், விடுதலை சிறுத்தை கட்சியின் தலைமை நிலைய செயலாளர் வழக்கறிஞர் பழனிமுத்து தலைமையில் வெள்ளிக் கிழமையன்று சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது கூறியது வருமாறு:

தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளுடன் கூட்டணி சேராமல், மாற்று அணியை உருவாக்க வேண்டும் என்பது எங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய யோசனை. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவிடமும் அதுபற்றி பேசியிருக்கிறேன்.

தற்போது என்னுடைய எண்ணத்தின்படி, பா.ம.க. தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. ராமதாசின் இந்த முடிவை வரவேற்கிறேன். ராமதாஸ் அழைப்பு விடுத்தால், எங்கள் கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை செய்து, பா.ம.க. அணியில் சேர்வது பற்றி முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Thursday, July 28, 2011

சிதம்பரம்! பதவி நிரந்தரம்?

  p.sithambaram
கெட்டிக்காரன் தோற்றம்-இதுதான் ப.சிதம்பரத்தின் சிறப்பே! வாய் மொழியும், உடல் மொழியும் அவ்வாறே!’ செய்வன திருந்தச்செய்!’ இது சிதம்பரத்திற்கு முற்றிலும் பொருந்தும் பழமொழி. கொள்கை சரியில்லை என ஆதங்கபடுவோர் உண்டு. ஆனால், எனது கொள்கையே இது தான் என்பது ப.சிதம்பரத்தின் பார்வையாகும். இவை இரண்டிலும் எது சரி ஆனாலும் சிதம்பரம் கூறுவதில் தெளிவு உண்டு.
அமைச்சர்களின் வழக்கமான அறிவு சூன்யத்திலிருந்து மாறுபட்டு காரியங்களை படிப்பார். சில நேரங்களில் படித்ததை விட படித்தவர் போல் நடிக்கவும் செய்வார். இத்தகைய கர்வத்துடன் கூடிய அமைச்சரை அணுகும் உயர் அதிகாரிகளுக்கு கூட படபடப்பு தொற்றிக்கொள்ளும். தனக்கு புரியாத எதனையும் செய்யமாட்டார். தனக்கு புரிந்ததை தான் அதிகாரிகளும் செய்ய வேண்டும் என கருதுவார். கோப்புகளை பார்க்காமல், விஷயங்களை ஆராயாமல் சென்றால் வார்த்தைகளால் வெளுத்துவாங்கும் அமைச்சரை கண்டு அதிகாரிகள் பயபடுவர்.
ஆனால் சிதம்பரத்திற்கு காங்கிரஸில் ஹைக்கமாண்டை தவிர வேறு எவருக்கும் பயமில்லை. அமெரிக்காவையும் பொருட்படுத்தமாட்டார். சொந்த கட்சிக்காரர்களும் அவருக்கு ஒரு பொருட்டே அல்ல. இதனால் கட்சியில் பலருக்கு இவர் மீது அலர்ஜி ஏற்படுவது சகஜமே! இளங்கோவன் போன்ற சிலர் ஜெ.வின் முகாமில் தஞ்சமடைய எதிர்பார்த்து துதிபாடும் வேளையில் அவரைக் குறித்து சற்றும் அலட்டிக்காதவர். இதன் விளைவு தான் அம்மாவின் சமீபத்திய டெல்லி பேட்டி.
முதல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் காலக்கட்டத்தில் நிகழ்ந்த மும்பை தாக்குதலின் போது  மத்திய உள்துறை அமைச்சகம் குப்புற கவிழ்ந்துவிட்டதா?என நாட்டில் பெரும்பாலோருக்கு சந்தேகம் ஏற்பட்ட வேளை. சிவராஜ் பாட்டீலின் கெட்டிக்காரத்தனம் ஆடை அணிவதில் மட்டும் தான் என்பதை காங்கிரஸாரும் புரிந்துக்கொண்டனர். அடுத்த உள்துறை அமைச்சர் யார்? என காங்கிரஸ் கட்சி நடத்திய குலுக்கலில் துண்டுச்சீட்டில் ப.சிதம்பரத்தின் பெயர் வந்தது. டெல்லி நார்த் ப்ளாக்கில் மத்திய உள்துறை அமைச்சகத்தை துப்புரவுச்செய்து அரசின் முகத்தை பாதுகாக்கும் நோக்கில் மேடம் சிதம்பரத்தை மத்திய உள்துறை அமைச்சராக நியமித்தார்!
மன்மோகன்-சிதம்பரம்-அலுவாலியா இந்த மும்மூர்த்திகள் தாம் இந்தியாவின் தாராளமயமாக்கல் கொள்கையின் சிற்பிகள் என்றாலும் முதல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் காலக்கட்டத்தில் நிதியமைச்சராக பணியாற்றிய ப.சிதம்பரத்திற்கு அக்கொள்கைக்கு தன்னால் இயன்ற நன்கொடைகளை அளிக்க சூழ்நிலைகள் அனுமதியளிக்கவில்லை. ஆனால், உள்துறை அமைச்சராக பதவியேற்ற பிறகு தமது தாராளமயமாக்கல் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான சுதந்திரத்தை பயன்படுத்தவும் சிதம்பரம் தவறவில்லை.
தேசத்தின் உள்நாட்டு பாதுகாப்பிற்கு முதல் எதிரி நக்ஸல்கள் என பிரகடனப்படுத்திய சிதம்பரம் அவர்களை ஒழித்துக்கட்ட பசுமை வேட்டைக்கு உத்தரவிட்டார். ஸல்வாஜுதூம் என்ற கொலைக்காரப்படையை உருவாக்கிய சட்டீஷ்கர் பா.ஜ.க அரசுக்கு சிதம்பரத்தின் உள்துறை அமைச்சகம் அனைத்து உதவிகளையும் அளித்தது. சொந்த குடிமக்களை நோக்கி துப்பாக்கியை தூக்கமாட்டோம் என்ற நல்லிணக்க வார்த்தை பின்னர் தாக்குதல் மொழியாக மாறிப்போனது.
முதல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை ஆதரித்த இடதுசாரிகளுக்கு புரிந்த, இரண்டாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணியை ஆதரிக்கும் மமதாவுக்கு புரியாது போன பழங்குடியின மக்களை வேட்டையாடுவதில் இருந்த ஆவேசமும், வேகமும் தற்பொழுது இல்லை எனலாம். அதற்காக கொள்கையை மாற்றிவிட்டார்கள் என்பது அர்த்தமல்ல!
தலை குப்புற வீழ்ந்துகிடந்த மத்திய உள்துறை அமைச்சகத்தை தூக்கி நிறுத்தியவர் ப.சிதம்பரம் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர். அதனால் தான் 3 ஆண்டுகால அமைதிக்கு பிறகு மும்பையில் மீண்டும் குண்டுகள் வெடித்த பிறகு ப.சிதம்பரத்தை குறைகூற யாருக்கும் மனசு வரவில்லை. ப.சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சகத்தில் நுழைந்த பொழுது அலட்சியத்தால் முடங்கிக்கிடந்த மின் விசிறி மட்டுமல்ல, அலுவலகத்தில் வேலை நேரத்திற்கு முன்பே வருகைதரும் அமைச்சருடன் பணியாளர்களும் ஓடத்துவங்கினர்.
குவிந்து கிடந்த கோப்புகள் நகரத்துவங்கின. காலையில் ஒரு தகவலை கேட்டால் ஒரு மாதம் கழித்து அதனைக்குறித்து சிந்திக்கத்துவங்கும் முறை மாறியது. மதிய வேளையில் உண்ட மயக்கத்தில் தூங்கி வழிந்து கனவில் தென்படுவதையெல்லாம் உளவுத்துறை செய்திகளாக அளித்து அரசையும், நாட்டு மக்களையும் பீதிவயப்படச்செய்யும் வழக்கமும் மாறியது.த கவல்கள் மட்டுமல்ல, அதன் உறைவிடத்தையும் சிதம்பரம் கேட்பார் என்றவுடன் கனவில் தோன்றுவதல்ல ரகசிய உளவு விபரங்கள் என்பது புலனாய்வு ஏஜன்சிகளுக்கு புரிந்து போனது.
ஏதேனும் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தால் இதனைக்குறித்து முன்பே எச்சரிக்கை விடுத்தோம் எனக்கூறும் புலனாய்வு ஏஜன்சிகளின் வீம்பான அறிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் என்ற பெயரில் இல்லாத அமைப்புகளின் பெயரால் பிரதமரையே பயமுறுத்தி உள்துறை அமைச்சகத்தின் செயல்பாடுகளில் தலையிட்டு வந்த மலையாள மாஃபியா எம்.கே.நாராயணனை மேற்குவங்காள மாநிலத்தின் ஆளுநராக ஓய்வெடுக்க அனுப்பியதில் ப.சிதம்பரத்திற்கும் பங்குண்டு என பேச்சு எழுந்தது.
ஏதேனும் ஒரு தாக்குதல் நடந்தவுடன் அரைமணிநேரத்திற்குள் வெளிநாட்டு அமைப்பு ஒன்றின் பெயரை ஊடக உலகில் பிரவீன் சுவாமிகளுக்கு ரகசியமாக அளித்து உடல் அசையாமல் தலை தப்புவதற்கு புலனாய்வு துறைகள் நடத்தும் முயற்சிகளும் முடிவுக்கு வந்தது எனலாம். மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையேயான இண்டலிஜன்ஸ் ஒருங்கிணைப்பை சிதம்பரம் உருவாக்கினார். இவற்றின் காரணமாகவோ அல்லது தீவிரவாதிகள் தாக்குதல்களை வேண்டாம் நின்று நிறுத்திவிட்டதாலோ என்னவோ குண்டு வெடிப்புகள் குறைந்தன.
அண்மையில் நடந்த மும்பை குண்டு வெடிப்பிலும் புலனாய்வு ஏஜன்சிகள் மற்றும் அரசின் அறிக்கைகளில் மேம்பட்ட அணுகுமுறை ஏற்பட்டுள்ளதை காணலாம். குண்டு வெடிப்பு நிகழ்ந்து ஒரு மணிநேரத்திற்குள் குற்றவாளிகள் மற்றும் அமைப்புகளின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. யாரோ இந்தியன் முஜாஹிதீன் என்ற வழக்கமான பெயரை கசியவிட அதனை பிடித்துக்கொண்டு பரபரப்புக்கு வேறு செய்தி இல்லாததால் ஊடகங்கள் பரப்புரை செய்துவருகின்றன. ஆனால், புலனாய்வு ஏஜன்சிகள் இருட்டில் துளாவுகின்றன என்பது தான் உண்மை.
சிதம்பரமும், உயர் அதிகாரிகளும் இதனை ஒப்புக்கொள்ளவும் தயங்கவில்லை. குண்டு வெடிப்பின் ஆதாரங்கள் கனத்த மழையில் அடித்து செல்ல கிடைத்த அம்மோனியம் நைட்ரேட்டும் வெளிநாட்டினரை விட உள்நாட்டினர் கைவசம் தான் உள்ளன என்பதை புலனாய்வு ஏஜன்சிகள் நம்புகின்றன. ஆகவே விசாரணையின் வரம்பில் நிழலுக குழுக்கள் உள்பட அனைத்து வாய்ப்புகளையும் புலனாய்வு ஏஜன்சிகள் ஆராய்கின்றன. எல்லைக்கடந்த அந்நிய நாட்டு தீவிரவாத பின்னணி இல்லை என வெளிப்படையாக அவர்கள் கூறுகின்றனர்.
நாளை வேறுவிதமான தகவல்கள் வெளிவரலாம். ஆனால் துவக்கத்திலேயே தீர்ப்பை வழங்கும் முறை மாறிவிட்டது எனலாம். இந்நிலையில் ‘முஸ்லிம்கள் எல்லாம் தீவிரவாதிகள் அல்லர்! ஆனால் தீவிரவாதிகளெல்லாம் முஸ்லிம்கள்!’ என்ற புலனாய்வு ஏஜன்சிகளின் மனோநிலையில் மாற்றத்தை மட்டும் சிதம்பரத்தால் ஏற்படுத்த முடியவில்லை. ஆனால், அவர்களின் மனோவியாதிக்கு சிதம்பரமும் பலியாகமாட்டார் என நம்புவோம்.ஏனெனில் முன்பு ஜிஹாது குறித்தும், புனே ஜெர்மன் பேக்கறி குண்டு வெடிப்புக் குறித்தும் சிதம்பரம் அவசரப்பட்டு வெளியிட்ட அறிக்கையில் தவறு என்று தெரிந்தவுடன் திருத்திக்கொண்டதை மறந்திருக்கமாட்டார்.
ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக பதவியேற்பதற்கு முன்பே மலேகான், அஜ்மீர், நந்தத் ஆகிய இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கு துவக்கத்திலேயே அறிவிக்கும் அமைப்புகள் காரணம் அல்ல என்பது தெரியவந்தது. மஹாராஷ்ட்ரா ஏ.டி.எஸ் தலைவர் ஹேமந்த் கர்காரே ஹிந்துத்துவா பயங்கரவாதத்தின் முகமூடியை கிழித்துக்கொண்டிருக்கும் வேளையில் தான் மர்மமான முறையில் கொல்லப்பட்டார். சிதம்பரம் வந்த பிறகு உருவாக்கப்பட்ட தேசிய புலனாய்வு ஏஜன்சியும் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பை நிகழ்த்தியது ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் தாம் என்பதை வெளிக்கொணர்ந்தது.
இதனால் அஸிமானாந்தா சிக்கினார். மர்மமான முறையில் கொல்லப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில் ஜோஷியின் பயங்கரவாத தொடர்பு நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசிய செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ் குமாரின் தீவிரவாத தொடர்பு குறித்த ஆதாரங்களை என்.ஐ.ஏ சேகரித்துவருகிறது. இவையெல்லாம், ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக பதவியேற்ற பிறகு தான் நடப்பதாக ஆர்.எஸ்.எஸ்-ஸின் அரசியல் முகமூடியான பா.ஜ.க கருதுவதால் அவர்களின் தாக்குதல் இப்பொழுது சிதம்பரத்தை நோக்கி திரும்பியுள்ளது.
முறைகேடுகளின் பாதையில் சிதம்பரம் சஞ்சரித்தாரா? என்பது உறுதியாக கூறவியலாது.2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிதம்பரத்திற்கு தி.மு.கவுடன் தமிழன் என்ற ரதியில் நல்லிணக்கம் ஏற்பட்டிருக்கலாம் என கருதுவோரும் உண்டு. ஆனால் இதனை ஆயுதமாக்கி சிதம்பரத்தை குறிவைத்து சங்க்பரிவார் எழுப்பும் கூக்குரல்கள் ஜனநாயகத்தை சுத்தப்படுத்த வேண்டும் என்ற அவர்களது அடங்காத ஆவலா? நிச்சயமாக இல்லை.
இருட்டில் நடத்திக்கொண்டிருந்த நாசவேலைகளை வெளிக்கொணர்ந்ததன் மூலம் தங்களது எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடுமோ என அஞ்சுவது தான் சங்க்பரிவாருக்கு ப.சிதம்பரத்தின் மீதான பழிவாங்கும் கேடுகெட்ட எண்ணம் ஏற்பட்டதற்கு காரணம். தேச பக்தியின் பெயரால் எழுப்பும் முழக்கங்கள், தீவிரவாதத்திற்கு எதிரான போராட்ட கர்ஜனைகள் ஆகியவற்றின் திரைமறைவில் நடத்திவந்த தேசவிரோத பயங்கரவாத செயல்பாடுகள் வெட்ட வெளிச்சமாகிக் கொண்டிருக்கும் வேளையில் அதற்கு காரணமான ப.சிதம்பரத்தின் மீது கொண்டுள்ள தீராத பகைதான் சங்க்பரிவாரின் தற்போதையை கூக்குரலும், கும்மாளமும் என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.
ப.சிதம்பரம் உள்துறை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு சிவராஜ் பாட்டீல் ஆளுநர் உடையை களைந்துவிட்டு மீண்டும் உள்துறை அமைச்சராக பதவி ஏற்பார் என மத்திய அமைச்சரவை மறு சீரமைப்பின் போது ஊகமான செய்திகள் உலாவியதன் பின்னணியில் யார் செயல்பட்டார்கள் என்பதை நாம் புரிந்துக்கொள்ள முடியும்.
2ஜி, மும்பை குண்டு வெடிப்புகளை காரணம் காட்டி ப.சிதம்பரம் பதவி விலக வேண்டும் என பா.ஜ.க முழங்கி வருகிறது. நாடு பாதுகாப்பான சூழலில் இல்லாத வேளையில் ப.சிதம்பரத்தால் எவ்வாறு அமைச்சர் பதவியில் அமர்ந்திருக்க முடிகிறது? என்பது தான் அவர்களது முக்கிய கேள்வி. இந்த கேள்விகளை கேட்பவர்களின் தகுதிதான் என்ன? கார்கில் போரில் வெளிநாட்டு ஊடுருவலை குறித்து அறியாதவர்கள்!  பாராளுமன்றத் தாக்குதல் நடக்கும்வரை கைக்கட்டி வாய்பொத்தி பார்த்து நின்றவர்கள்! கார்கில் போரில் இறந்த வீரர்களின் உடலை எடுத்துச்செல்லும் சவப்பெட்டியிலும் ஊழல் புரிந்து சர்வதேச அளவில் இந்தியாவின் மானத்தை இழக்கச்செய்தவர்கள்! லஞ்சம் வாங்கினாலும் அமெரிக்க டாலரில் தான் வாங்குவேன் என கூறிய தேசபக்திக்கு சொந்தக்காரர்கள்! லாபம் தரும் நிறுவனங்களையெல்லாம் தனியாருக்கு விற்றுத்தொலைக்க தனியாக அமைச்சரவையே உருவாக்கி நாட்டை ஒளிரச்செய்தவர்கள்! இத்தகைய கேடுகெட்ட கூட்டம்தான் ப.சிதம்பரத்தை பதவி விலக கோருகிறது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிதம்பரத்தின் பங்கினைக்குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கோரி பா.ஜ.கவினர் சி.பி.ஐ இயக்குநரை அணுகியுள்ளனர். அரசியல் ரீதியான அழுத்தம் கொடுப்பதையும் தாண்டி ஒரு அரசியல் கட்சி மத்திய புலனாய்வு ஏஜன்சி ஒன்றை அணுகுவது இதுவே முதல் முறையாகும். இத்தகைய நாடக கூத்துக்களால் ப.சிதம்பரம் ராஜினாமா செய்வார் என்றோ, சோனியாகாந்தி அவரை கைவிடுவார் என்றோ பா.ஜ.க கருதவில்லை. ஆனால், காவிப்படைக்கு எதிராக காய்களை நகர்த்தினால் கதி! அதோகதி தான்! என சிதம்பர உள் மனதில் அஞ்சினாலே ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க வகையறாக்களுக்கு வெற்றிதான். மறுபுறம் சிதம்பரத்திற்கு எதிராக அவருடைய நடவடிக்கைகளை கண்டு அஞ்சாமல் போராடுகிறோம் என்று ஹிந்துத்துவா ஆதரவாளர்களுக்கு தோன்றினாலும் வெற்றிதான். ஒரு கல்லில் இரண்டு மாங்காய். இதுதான் சங்க்பரிவாரின் உண்மையான நோக்கம்.
ஊளையிடும் சங்க்பரிவார குள்ள நரிகளுக்கெல்லாம் அஞ்சாமல் இருந்தால் சிதம்பரம் செட்டிநாட்டு சிங்கம்தான். இப்பொழுது நமக்கு முன்னால் எழுந்துள்ள கேள்வி என்னவெனில் காங்கிரஸ் கட்சி அஞ்சினால் சிதம்பரத்தின் பதவி நிரந்தரமா? என்பது தான்.

Source:Thoothu

Saturday, July 16, 2011

ஆ.ராசாவிடம் சிபிஐ மீண்டும் விசாரணை!

2ஜி முறைகேடுகள் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தொலைத்தொடர்பு முன்னாள் அமைச்சர் ஆ.ராசா மற்றும் இரண்டு நபர்களிடம் மீண்டும் விசாரணை செய்ய டில்லி நீதிமன்றம் சிபிஐக்கு அனுமதி வழங்கியுள்ளது.

ஆ. ராசா, தொலைத் தொடர்பு முன்னாள் செயலாளர் சித்தர்த பெருவா மற்றும் தொலைத் தொடர்பு நிறுவனம் ஒன்றின் அதிகாரி கெளதம் தோஷி ஆகியோரிடம் சிபிஐ மீண்டும் விசாரணை செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி அனுமதி அளித்துள்ளார்.

குற்றம்சாட்டப்பட்டுள்ளோரிடம் திங்கள் கிழமையன்று விசாரணை செய்ய சிபிஐக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என்று நீதிபதி தமது தீர்ப்பில் கூறியுள்ளார்.

சிபிஐ மீண்டும் எதுகுறித்து விசாரணை நடத்தப்படுகிறது என்பதை எங்களுக்கு அறியத் தர வேண்டும் என்ற தோஷியின் வழக்கறிஞரின் வேண்டுகோளை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

Sunday, July 3, 2011

அழகிரி, மம்தா மோசமான அமைச்சர்கள் ...

புது தில்லி : ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் உள்ள கேபினட் மந்திரிகளின் ஆலோசனை கூட்டம் நாட்டை பாதிக்கும் முக்கிய பிரச்னைகள், துறை சார்ந்த பிரச்னைகள் போன்றவற்றிக்காக கூடும். இத்தகைய மத்திய மந்திரிசபையின் கேபினட் கூட்டங்களில் மிக குறைவாக வருகை தந்த மத்திய அமைச்சர்கள் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியும் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன் அழகிரியும் ஆவார்கள் என தெரிய வந்துள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சமூக சேவகர் சுபாஷ் அகர்வால் இது குறித்து சேகரித்த தகவல்களின் அடிப்படையில் மத்திய மந்திரிசபையின் கூட்டங்களில் பெரும்பாலும் காங்கிரஸை சார்ந்த அமைச்சர்கள் தவறாமல் கலந்து கொள்வதாகவும் கூட்டணி கட்சிகளை சார்ந்த அமைச்சர்களோ அசட்டையாக இருந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
குறிப்பாக பிரதமர் மன்மோகன் சிங், ராணுவ அமைச்சர் அந்தோனி, நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி போன்றோர் அனைத்து கூட்டங்களிலும் பங்கேற்று உள்ளனர். அமைச்சர்கள் சிதம்பரம் மற்றும் கபில்சிபல் போன்றோரும் கிட்டத்தட்ட அனைத்து கூட்டங்களிலும் பங்கேற்று உள்ளனர். மற்ற காங்கிரஸ் அமைச்சர்களும் கிட்டத்தட்ட ஒப்பு கொள்ளும் அளவு கூட்டங்களில் பங்கேற்றுள்ளனர்.
ஆனால் கூட்டணியை சார்ந்த அமைச்சர்களோ இவ்விஷயத்தில் பொறுப்புணர்ச்சி அற்றவர்களாய் நடந்து கொண்டு உள்ளார்கள். 2010 – 2011 நிதி ஆண்டில் நடைபெற்ற 48 கூட்டங்களில் மம்தா பானர்ஜி வெறும் 6 கூட்டங்களில் மாத்திரம் பங்கேற்று உள்ளார். அழகிரியோ 40 கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் வெறும் 8 கூட்டங்களில் பங்கேற்று உள்ளார்.
புது தில்லி : ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் உள்ள கேபினட் மந்திரிகளின் ஆலோசனை கூட்டம் நாட்டை பாதிக்கும் முக்கிய பிரச்னைகள், துறை சார்ந்த பிரச்னைகள் போன்றவற்றிக்காக கூடும். இத்தகைய மத்திய மந்திரிசபையின் கேபினட் கூட்டங்களில் மிக குறைவாக வருகை தந்த மத்திய அமைச்சர்கள் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியும் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன் அழகிரியும் ஆவார்கள் என தெரிய வந்துள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சமூக சேவகர் சுபாஷ் அகர்வால் இது குறித்து சேகரித்த தகவல்களின் அடிப்படையில் மத்திய மந்திரிசபையின் கூட்டங்களில் பெரும்பாலும் காங்கிரஸை சார்ந்த அமைச்சர்கள் தவறாமல் கலந்து கொள்வதாகவும் கூட்டணி கட்சிகளை சார்ந்த அமைச்சர்களோ அசட்டையாக இருந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
குறிப்பாக பிரதமர் மன்மோகன் சிங், ராணுவ அமைச்சர் அந்தோனி, நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி போன்றோர் அனைத்து கூட்டங்களிலும் பங்கேற்று உள்ளனர். அமைச்சர்கள் சிதம்பரம் மற்றும் கபில்சிபல் போன்றோரும் கிட்டத்தட்ட அனைத்து கூட்டங்களிலும் பங்கேற்று உள்ளனர். மற்ற காங்கிரஸ் அமைச்சர்களும் கிட்டத்தட்ட ஒப்பு கொள்ளும் அளவு கூட்டங்களில் பங்கேற்றுள்ளனர்.
ஆனால் கூட்டணியை சார்ந்த அமைச்சர்களோ இவ்விஷயத்தில் பொறுப்புணர்ச்சி அற்றவர்களாய் நடந்து கொண்டு உள்ளார்கள். 2010 – 2011 நிதி ஆண்டில் நடைபெற்ற 48 கூட்டங்களில் மம்தா பானர்ஜி வெறும் 6 கூட்டங்களில் மாத்திரம் பங்கேற்று உள்ளார். அழகிரியோ 40 கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் வெறும் 8 கூட்டங்களில் பங்கேற்று உள்ளார்.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்..

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் காரணமாக கனிமொழி எம்.பி. கைதாகி, ஒரு மாதம் முடிந்த நிலையில்,  திகார் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள அவர் ஜாமீனில் விடக்கோரி தாக்கல் செய்த மனுக்கள்  சி.பி.ஐ. சிறப்புக் கோர்ட்டிலும், டெல்லி ஐகோர்ட்டிலும்  பின்னர் சுப்ரீம் கோர்ட்டிலும் தள்ளுபடி செய்யப்பட்டதால் கனிமொழியின் சிறைவாசம் தொடர்கதையாகியுள்ளது. இதையடுத்து அதிர்சியடைந்த திமுக தலைவரும் கனிமொழியின் தந்தையுமான கருணாநிதி ஓடோடி சென்று தனது மகளை பார்த்து வந்துள்ளார். தந்து மகளுடனான அவரது சந்திப்பு குறித்து கேட்கப்பட கேள்விக்கு,
 
'திகார் சிறைச்சாலையிலே எப்படி இருப்பார்களோ அந்த அளவுக்கு வாடிக் கொண்டிருக்கின்றார். சிறிதும் மனிதாபிமானமற்ற முறையில் கனிமொழியும், சரத்குமாரும் அந்தச் சிறையிலே அடைக்கப் பட்டிருக்கிறார்கள். கனிமொழி மீது போடப்பட்ட வழக்கு, குற்றச்சாட்டு இவைகள் எல்லாமே பத்திரிகைகளிலே எழுதிய அவதூறுச் செய்திகளின் அடிப்படையில் போடப்பட்ட வழக்குகள்தான். அப்படி அவதூறாக வெளியிடப்பட்ட செய்திகளை உண்மைதான் என்று நிரூபிப்பதுதான் இன்றைய தங்களுடைய கடமை என்று சி.பி.ஐ. அதிகாரிகள் கருதுகிறார்கள் என்று நினைக்கிறேன்.
திகார் சிறையில் கனிமொழிக்கு அந்தச்சூழல் ஒத்துவராமல் உடம்பெல்லாம் வீக்கங்களாகவும், கொப்பளங்களாகவும் வந்து மிகுந்த அவஸ்தையில் இருக்கிறார். அதேபோலத்தான் சரத்குமாரின் உடல் நிலையும் மிகவும் பலவீனமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
 
கனிமொழி கைது என்பது ஆதாரங்களின் அடிப்படையில் அமைந்ததல்ல. மாறாக பத்திரிக்கைகளில் எழுதிய அவதூறு செய்திகளின் அடிப்படையில்தான் கைது செய்யப்பட்டார் என்று கூறும் கலைஞர் அவர்களே! சற்று பின்னோக்கி திரும்பி பாருங்கள். இன்று உங்கள் ஒரு மகளின் சிறைவாசத்திற்கு உள்ளம் குமுறும் நீங்கள், ஒரு குண்டு வெடிப்பை காரணமாக வைத்து ஒரு சமுதாயத்தையே குற்றவாளியாக்கி குமுறச்  செய்தீர்களே! கோவை குண்டுவெடிப்பையொட்டி குற்றவாளிகள் என்று நீங்கள் கைது செய்த அனைவரையும் ஆதாரத்தின் அடிப்படையில் தான் கைது செய்தீர்களா? மதானி என்று ஒருவரை கைது செய்து பத்து ஆண்டுகள் அடைத்தீர்களே! அவரும் உங்கள் மகளை போன்று பலமுறை ஜாமீன் மனு தாக்கல் செய்தாரே! அப்போதெல்லாம் இன்றைக்கு சி.பி. ஐ. உங்கள் மகள் மீதான வழக்கில் ஜாமீன் மறுப்பதற்கு காரணமாக கூறும், ''அசல் ஆவணங்கள் உள்ளிட்ட ஆதாரங்களை அழித்து விடுவார். எனவே அவரை ஜாமீனில் விடுவிக்கக் கூடாது' என்ற இதே வாசகத்தை கொஞ்சம் மாற்றி, இவரை ஜாமீனில் விட்டால் சாட்சியை கலைத்து விடுவார் என்று கோர்ட்டில் உங்கள் அரசு   PP   சொல்லவில்லையா? மதானி ஒரு நிரபராதி என்று கோர்ட்டு தானாக விடுதலை செய்யும் வரை அவருக்கு ஜாமீன் கிடைக்காமல் பார்த்துக் கொண்டீர்களே! மதானி ஜாமீன்  விஷயத்தில் ஜெயலலிதாவின்  பாதையில்  பயனித்தீர்களே!
ஒரு மாத காலம்  சிறையில் உங்கள் மகள் இருப்பதால் துடிக்கும் உங்களுக்கு, பத்து வருடம் சிறையில் இருந்த மதானியின் குடும்பத்தின் வலி இப்போது புரிகிறதா கலைஞரே?
 
கனிமொழிக்கு அந்தச்சூழல் ஒத்துவராமல் உடம்பெல்லாம் வீக்கங்களாகவும், கொப்பளங்களாகவும் வந்து மிகுந்த அவஸ்தையில் இருக்கிறார் என்று உருகும் கலைஞரே! அன்று தனது உடல் நிலையை காரணம் காட்டி சிகிச்சைக்காக ஜாமீன் கேட்ட போதும் மதானிக்கு ஜெயலலிதாவும்-தொடர்ந்து நீங்களும் ஜாமீன் மறுத்தீர்களே! 
 
கனிமொழி தன் மகனை பிரிந்துள்ளார். எனவே கருணை அடிப்படையில் கனிமொழியை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் மூலம் வாதம் வைக்கும் கலைஞரே, ஆயிஷா என்ற பெண் தீவிரவாதியை தேடுகிறோம் என்ற பெயரில் முஸ்லிம்கள் வீட்டு படுக்கை அறைவரை வந்து சல்லடை போட்டார்களே, பெண்கள் மதரசாக்களில் சோதனை என்ற பெயரில் அத்துமீறினார்களே, பர்தா அணிந்தபெண்களெல்லாம் ஆயிசாவோ என சந்தேகத்தோடு சோதித்தார்களே உங்கள் காவல்துறையினர் அந்த ஆயிஷா ஞாபகமிருக்கிறதா.. கலைஞரே?
 
சங்கீதாவாக இருந்த அப்பெண்  ஆயிஷாவாக மாறி, ஒரு முஸ்லிம் வாலிபரை மணக்க, அவர்களுக்கு அல் உம்மா ரபீக்  என்ற சகோதரர்   அடைக்கலம் தந்து உதவி செய்ய, அதையே காரணமாக்கி அந்த தம்பதியை கோவை குண்டுவெடிப்பு வழக்கில் உங்கள் காவல்துறை உள்ளே தள்ள, மூன்று ஆண்டுகள பிணையில் கூட வரமுடியாமல் அந்த தம்பதிகள் தனி தனி செல்லில் வாட, அவர்களது பிள்ளை பெற்றோரை பிரிந்து அனாதையாக வளர்ந்தானே! அப்போது அந்த ஆயிஷாவுக்கும் தாய்ப்பாசம் இருந்தது உங்களுக்கு தெரியவில்லையா கலைஞரே!
 
அன்று மதானி பத்து ஆண்டுகளாக தனது பிள்ளைகளை பிரிந்த வேதனை இப்போது புரிகிறதா கலைஞரே! மதானி மட்டுமல்ல;  உங்களால் கைது செய்யப்பட்ட ஒவ்வொரு அப்பாவியும் தனது பிள்ளையை-மனைவி- தாய்- தந்தையை பிரிந்து வாடினார்களே! அவர்களுக்கெல்லாம் ஜாமீன் கிடைக்க நீங்கள் அதாவது உங்கள் அரசு தடையாக நின்றதே! அன்றைக்கு அவர்களும் அவர்களது குடும்பமும் இப்படித்தானே துடித்திருக்கும்?
 
ஒரு குண்டுவெடிப்பிற்காக சம்மந்தப்பட்டவர்கள்  என்று கூறப்படும் சிலரோடு, சம்மந்தமில்லாத பலரை நள்ளிரவில் கூட வீடு புகுந்து உங்கள் காவல்துறை கைது செய்தபோது சம்மந்தப்பட்ட முஸ்லிம்கள் துடித்த வேதனையை உங்களை நள்ளிரவில் கைது செய்தபோது உணர்ந்திருப்பீர்கள். செய்யாத குற்றத்திற்காக சிறையில் வாடும்  அப்பாவி கைதிகளின் பிள்ளைகளும்- குடும்பத்தாரும் படும் வேதனையை கனிமொழி கைதின் மூலம் உணர்ந்திருப்பீர்கள். ஆம் கலைஞரே! 'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்'  தானே!
 

Tuesday, June 14, 2011

தயாநிதி மாறனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - ஜெயா கோரிக்கை!

பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்தப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா 2G ஊழல் குறித்து நடைபெற்று வரும் விசாரணையில் நீதிமன்றத்தின் மீது தமக்கு நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்தார். 

ஏர்செல் நிறுவன அதிபர் சிவசங்கரனை மிரட்டி அந்நிறுவனத்தை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்றதாக மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் தயாநிதிமாறன் அமைச்சர் பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என்றும் அவ்வாறு விலகத் தவறினால் பிரதமர் தயாநிதிமாறனை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.

2G ஊழல் வழக்கை மத்திய அரசின் அங்கமான  சி பி ஐ கையாண்டு வருவதாகவும், திமுகவினர் மீது வழக்கு போட தாம்  யாரையும் தூண்ட வில்லை என்றும் தெரிவித்துள்ளார் ஜெயலலிதா.

Monday, May 9, 2011

கனிமொழியைக் காப்பாற்ற ராசாவை பலி கொடுப்பதா? - கிருஷ்ணசாமி கண்டனம்.

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி "அலைக்கற்றை ஊழலில் கனிமொழியைக் காப்பாற்ற ஆ.ராசாவை பலிகொடுக்க கருணாநிதி முயல்கிறார்" என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து நிருபர்களிடம் பேசிய அவர்,
"2G அலைக்கற்றை   ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவை பதவியில் இருந்து அகற்றி, நாடாளுமன்ற  கூட்டுக்குழு விசாரணை அமைக்க வேண்டும் என, மக்களவையை எதிர்க்கட்சியினர் முடக்கிய போது , ராசாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து, முதல்வர் எவ்வித கருத்தும் கூறவில்லை. மாறாக, தலித் என்பதால் ராசா மீது குற்றம் சுமத்துகின்றனர் என்றும், ஆரிய - திராவிட போர் என்றும், சாதி வர்ணம் பூசினார் கருணாநிதி.
ராசா குற்றமற்றவர் என கூறிய தி.மு.க. தம் வழக்கறிஞர் வாயிலாக  இப்போது, 'ராசா தான் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேட்டிற்குக் காரணம். கனிமொழிக்கு எவ்வித தொடர்பும் இல்லை' என, நீதிமன்றத்தில்  கூறியிருப்பது கண்டனத்திற்குரியது. ஊழலில் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். கனிமொழியைக் காப்பாற்ற, ராசாவைப் பலிகடாவாக ஆக்கும் முயற்சியில் தீவிரமாக முதல்வர் ஈடுபட்டுள்ளார் என்பதற்கு, நீதிமன்றத்தில்  வழக்கறிஞர்  வைத்த வாதமே சாட்சியாக உள்ளது"
என்று கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

Thursday, May 5, 2011

ஆ.ராசா இருக்கும் சிறையில் சுரேஷ் கல்மாடி.


காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் நடந்த முறைகேடுகள் வழக்கில் கைதாகியுள்ள காமன்வெல்த் முன்னாள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் சுரேஷ் கல்மாடிக்கு சிபிஐ காவல் முடிவடைந்ததைத் தொடர்ந்து திஹார் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.



முன்னாள் அமைச்சர் ராசா உள்ளிட்ட விஐபிக்கள் தற்போது அடைக்கப்பட்டுள்ள திஹார் சிறையில் கல்மாடியும் அடைக்கப்படுகிறார். அங்கு 14 நாள் சிறைக் காவலில் வைக்க டெல்லி சிபிஐ கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கல்மாடி உள்ளிட்ட 3 பேர் நீதிபதி தர்மேஷ் சர்மா முன்னிலையி்ல ஆஜர்படுத்தப்பட்டனர். அதைத் தொடர்ந்து மே 18ம் தேதி வரை அனைவரையும் சிறையில் அடைக்க நீதிபதி சர்மா உத்தரவிட்டார்

'ஸ்பெக்டரம்' - பொதுக் கணக்குக் குழு அறிக்கை

இந்திய மக்களவை
இந்திய மக்களவை
இரண்டாம் தலைமுறை செல்லிடத் தொலைபேசி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக ஆய்வு செய்த பொதுக் கணக்குக்குழுவின் அறிக்கை சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் நிலையில், குழுவின் தலைவர் முரளி மனோகர் ஜோஷி அந்த அறிக்கையை மக்களவைத் தலைவர் அலுவலகத்தில் சமர்ப்பித்திருக்கிறார்.

பொதுக்கணக்குக் குழுவின் தலைவராக முரளி மனோகர் ஜோஷியின் பணிக்காலம் சனிக்கிழமையுடன் முடிவடையும் நிலையில் அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று ஜோஷி வலியுறுத்தியுள்ளார்.

அந்தக் குழு தயாரித்த வரைவு அறிக்கையில், பிரதமர் அலுவலகம் மீதும், அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரம் உள்ளிட்டோர் மீதும் குற்றச்சாட்டுக்களைக் கூறியிருந்தது. கசியவிடப்பட்ட அறிக்கையின் மூலம் இந்தத் தகவல்கள் வெளியாயின.

காங்கிரஸ் கூட்டணி உறுப்பினர்கள் எதிர்ப்பு

மன்மோகன் சிங்
மன்மோகன் சிங்
இந் நிலையில், அந்த அறிக்கையை இறுதி செய்ய பொதுக்கணக்குக் குழு கூடிய போது காங்கிரஸ், திமுக, சமாஜவாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளின் 11 உறுப்பினர்கள் சேர்ந்து அந்த அறிக்கையை நிராகரிப்பதாக தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

அதற்கு முன்னதாக நடந்த கடும வாக்குவாதத்தை அடுத்து, கூட்டத்தை ஒத்திவைத்துவிட்டு வெளியே சென்றார் ஜோஷி.

அந்த அறிக்கை சட்டப்படி செல்லாது என்று கூறப்படும் நிலையில், அதை மக்களவைத் தலைவரிடம் சமர்ப்பித்திருக்கிறார் ஜோஷி. அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் அறிக்கையை மக்களவைத் தலைவரிடம் சமர்ப்பித்துவிட்டதாகவும், அதை மக்களவைத் தலைவர் ஏற்றுக்கொண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அனுமதியளிப்பார் என்று எதிர்பார்ப்பதாகவும், அவரது முடிவே இறுதியானது என்றும் தெரிவித்தார்.

அதே நேரத்தில், பிரதமரைப் பற்றி அறிக்கையில் குறிப்பிடுவதை காங்கிரஸார் விரும்பாததால் தான் பிரச்சினையை எழுப்பியிருக்கிறார்கள் என்று ஜோஷி குற்றம் சாட்டினார். இவ்வளவு பெரிய முறைகேடு தொடர்பான அறிக்கையை சீர்குலைக்க முயல்வது மிகவும் கவலைக்குரிய விடயம் என்றார் ஜோஷி.

அமலாக்கப்பிரிவு சம்மன்:கனிமொழியுடன் கருணாநிதியும் உடன் செல்வார்...


2G அலைக்கற்றை ஒதுக்கீடு முறைக்கேடு குறித்த வழக்கில் தமிழக முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி எம்.பியை நீதிம்னறத்தில் ஆஜராகும்படி அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பியுள்ளதைத் தொடர்ந்து, அவருக்குத் துணையாக கருணாநிதியும் டெல்லிக்குச் செல்வார் என்று தெரிகிறது.



கலைஞர் தொலைக்காட்சியில் 20% பங்குதாரரான கனிமொழி எம்.பி. 2G ஊழலில் கூட்டுச்சதியில் ஈடுபட்டுள்ளார் என்று CBI தாக்கல்செய்த துணைக் குற்றப்பத்திரிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதைத் தொடர்ந்து மே-1 அன்று நீதிமன்றத்தில் ஆஜராகும் கனிமொழி கைது செய்யப்படக்கூடும் என்ற தகவல்கள் பரவியுள்ள நிலையில் மத்திய அமைச்சரும் சகோதரருமான மு.க.அழகிரி நேற்று ஏற்கனவே டெல்லிக்கு விரைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் அறிவாலயத்தில் நடந்த செயற்குழு கூட்டத்தில் கனிமொழியை தனது மகள் என்று பார்க்காமல் கட்சி விசுவாசி என்று கருதவேண்டும் என்று கருணாநிதி பேசியிருந்தார். கனிமொழி எம்.பி.டெல்லி நீதிமன்றத்தில் ஆஜராகும்போது உடனிருப்பதன்மூலம், உடனடியாகக் கைது செய்யப்படுவதை தடுக்க முடியும் என்பதற்காகவே முதல்வர் கருணாநிதியும் உடன் செல்ல வேண்டியுள்ளது என்பதாகச் சொல்லப்பட்டாலும், ஏற்கனவே அமலாக்கப் பிரிவு குற்றப்பத்திரிக்கையில் இடம்பெற்று விட்டதால், தனியாகக் கைது செய்யப்படவேண்டிய அவசியமில்லை என்றும் சொல்லப்படுகிறது.

கனிமொழிக்கு ஆதரவாக பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி ஆஜராவார் என்று அறிவாலய வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. ராசாவுக்கு ஆதரவாக ஆஜராக ஜெத்மலானி மறுத்து விட்டதைத் தொடர்ந்து பிரபல திமுக வழக்கறிஞர் ஷன்முக சுந்தரம் ஆஜராவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2G வழக்கை சட்டப்படி சந்திப்பதற்காக திமுஅ தரப்பிலிருந்து அமைச்சர் துரைமுருகன் மற்றும் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் ஆகியோர் ஏற்கனவே முகாமிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது

அதிமுக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் கொல்றாங்கோ..! கொல்றாங்கோ..?

கடந்த முறை அதிமுக ஆட்சி முடிந்து தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றபோது 1991-96 வரை அ.தி.மு.க ஆட்சியில் நடந்த ஊழல்கள் பட்டியலிடப்பட்டு, அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா மற்றும் அனைத்து அமைச்சர்கள் மேல் பல்வேறு ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.



இதனால் அதிமுக கடும் பின்னடைவை சந்தித்ததோடு இனிமேலும் அதிமுகவில் தொடர்ந்தால் வழக்குகள் பாயும் என்ற பயத்தில் முன்னாள திமுக அமைச்சர்கள் சிலர், தி.மு.கவில் தஞ்சம் புகுந்தனர். மேலும் சிலர், அரசியலில் இருந்து, "வேணாம்டா சாமி, விட்டால் போதும்' என்று ஒதுங்கி வழக்குகளிருந்து தப்பித்தனர். திமுக அரசு பதிவு செய்த வழக்குகள் காரணமாக, அ.தி.மு.கவின் செல்வாக்கு கணிசமாகச் சரிந்து அடுத்தடுத்த தேர்தல்களில் கடும் பின்னடைவைச் சந்தித்தது.

2011 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று அக்கட்சி தலைமை உறுதி நம்புகிறது. அவ்வாறு ஆட்சி அமையும் போது,"1996 இல் அ.தி.மு.கவுக்கு எதிராக ஊழல் வழக்குகள் மூலம் நெருக்கடி கொடுத்ததுபோல், தற்போது தி.மு.கவுக்கு கொடுக்க வேண்டும்' என அதிமுக தலைமைக்கு விசுவாசமாக இருந்து உயர் பதவியைப் பிடிக்கத் திட்டமிட்டுள்ள அரசு அதிகாரிகள் காய் நகர்த்தி வருவதாகச் சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் பட்சத்தில் கடந்த ஐந்தாண்டு கால, தி.மு.க., ஆட்சியில், துறை வாரியாக நடந்த முறைகேடுகள், ஊழல் விவகாரங்களை ஆதாரங்களோடு பட்டியல் போட்டு, அ.தி.மு.க., தலைமையிடம் கொடுத்துள்ளதோடு அதிமுக ஆட்சி அமைந்ததும்,இவற்றின் அடிப்படையில், முதல்வர் கருணாநிதியில் துவங்கி, முக்கிய அமைச்சரவை சகாக்கள்மீது வழக்குகள் பதிவாகும் என்று கூறப்படுகிறது.

2G வழக்கின்மூலம் துள்ளி எழுந்துள்ள அதிமுகவுக்கு பன்னாட்டு தொழில் நிறுவனங்களுடன் திமுக அரசு செய்து கொண்ட ஒப்பந்தங்களின் பின்னணி குறித்தும், அவர்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் குறித்தும் ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. மேலும் புதிய தலைமைச் செயலகம் கட்டுமானப்பணிகள்,செம்மொழி மாநாட்டின் போது கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 1,000 கோடி ரூபாய்க்கு மேலான வளர்ச்சிப் பணிகள் போன்றவற்றில் நடந்த குறைபாடுகளையும் தொகுத்து அதிமுக தலைமையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அமைச்சர்கள் சிலர் மீது எழுந்துள்ள கொலை சம்பவங்களில் தொடர்பு, நில ஆக்கிரமிப்பு, மிரட்டல், கட்டப் பஞ்சாயத்து போன்ற புகார்களின் அடிப்படையிலும் வழக்குகள் படிவு செய்யப்படலாம் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Tuesday, May 3, 2011

காங்கிரசின் அடுத்த தலைவர் யார்? துவங்கியது போட்டா போட்டி!

கட்டுப்பாடு இழந்து நிற்கும், தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை கைப்பற்றுவதில், கோஷ்டி தலைவர்கள் வரிந்துக்கட்டிக்கொண்டடு, டெல்லியில் காய்களை நகர்த்தி வருகின்றனர்.

முன்பு காங்கிரஸ் தலைவராக வாசன் பதவி ஏற்ற பின், மாநில நிர்வாகிகள் நியமிக்கபடவில்லை என்ற ஒரு குறையை தவிர, கட்சியை பலவீனப்படுத்தும் அளவிற்கு எந்த பிரச்னையும் ஏற்படவில்லை.அவர் தலைவராக இருந்த போது, 2004ல், லோக்சபா தேர்தல் வந்தது. தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி, 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றது.

அதன்பின், புதிய தலைவராக கிருஷ்ணசாமி பதவி ஏற்றார்.இவர் பதவி ஏற்றும் மாநில நிர்வாகிகள் நியமிக்கப்படவில்லை. இவர் தலைவர் பதவியில் இருந்த போது, சட்டசபை தேர்தலை காங்கிரஸ் சந்தித்தது. அதன்பின், 2009ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது, கிருஷ்ணசாமி தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, தங்கபாலு தலைராக்கப்பட்டார்.லோக்சபா தேர்தலில், தி.மு.க.கூட்டணியில் 10 எம்.பி. சீட்டுகளிலிருந்து, 13 சீட்டுகளாக பெற்றுக் கொண்டாலும், ஆறு பேர் மட்டும் தான் எம்.பி.யாக வெற்றி பெற்றனர்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க.கூட்டணியில், காங்கிரஸ் 63 சீட்டுகளை பெற்றாலும், தகுதியில்லாத வேட்பாளர்கள் தேர்வு, வேட்பாளர்கள் தேர்வில் குளறுபடி போன்றவை காரணமாக தங்கபாலுவின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டு, காங்கிரசில் கலவரம் நடந்தது. கட்சியின் கட்டுப்பாடு சீர்குலைந்து, தடி எடுத்தவர்கள் தண்டல்காரர்கள் என்பது போல் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு எதிராக, காங்கிரசார் உள்குத்து வேலைகளில் ஈடுப்பட்டனர்.

தேர்தல் முடிவில் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான ரிசல்ட் வந்தால் தான் தங்கபாலு தலைக்கு மேல் தொங்கும் கத்தி விலகும். இல்லையென்றால், அவரது பதவி பறிபோவது உறுதி என்கிறது காங்கிரஸ் வட்டாரம். தமிழக சட்டசபை தேர்தல் முடிவு தலைகீழாக இருக்குமானால், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவின் நாற்காலி பறிக்கப்படுவது உறுதியாகியுள்ளது.

தேர்தல் முடிவு வெளிவருவதற்கு முன்பே, டில்லியில் கோஷ்டி தலைவர்கள் அனைவரும் சோனியாவை சந்தித்து தமிழக காங்கிரஸ் நிலவரத்தை விலாவாரியாக விளக்கியுள்ளனர். ரிசல்ட் வந்த பின் முடிவு எடுக்கலாம் என, மேலிடம் காத்திருக்கிறது. இந்நிலையில், அடுத்த தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தற்போதைய நிலையில் மத்திய அமைச்சர்கள் வாசன், சிதம்பரம் ஆகிய இருவரில் ஒருவரை தலைவராக நியமித்தால் தான், கட்சி பலப்படுத்தப்படும் என்ற நிலை உருவாகியுள்ளது. கட்சியைகட்டுக்கோப்புடனும், எழுச்சியுடனும் நடத்தி செல்வதற்கு இந்த இரு தலைவர்களால் தான் முடியும் என்பது தொண்டர்களின் எண்ண ஓட்டம்.

ஆனால், சிதம்பரத்தை பொறுத்தவரையில், நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த உள்துறை அமைச்சராக இருப்பதால், அவரால் அப்பதவியை விட்டு விலகி, மாநில தலைவர் பதவியை ஏற்றுக் கொள்ள விரும்ப மாட்டார். ஆனால், தன் ஆதரவாளரும், கடலூர் எம்.பி.யுமான, கே.எஸ்.அழகிரிக்கு தலைவர் பதவியை பெற்றுக் கொடுக்கும் முயற்சியில் சிதம்பரம் ஈடுபட்டுள்ளார்.

"தனக்கு மத்திய அமைச்சர் பதவியும், மாநில தலைவர் பதவியும் சேர்த்துக் கொடுக்க வேண்டும். ஐந்தாண்டுகள் வரை சுதந்திரமாக செயல்படுவதற்கு அனுமதிக்க வேண்டும்' என்பன உள்ளிட்டநிபந்தனைகளுக்கு மேலிடம் பச்சைக் கொடி காட்ட வேண்டும் என வாசன் விரும்புகிறார். அவரது விருப்பம் நிறைவேறும் பட்சத்தில், தலைவர் பதவி ஏற்றுக் கொள்வதற்கு அவர் தயாராக இருக்கிறார்.இரண்டையும் தர டில்லி மேலிடம் மறுக்குமானால், மத்திய அமைச்சர் பதவியில் தொடரவும், தன் ஆதரவாளர்களான, எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், ஞானதேசிகன், பீட்டர் அல்போன்ஸ் ஆகியோரில் ஒருவருக்கு மாநில தலைவர் பதவியை வழங்க அவர் பரிந்துரைப்பார் என்று கூறப்படுகிறது.

முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன், மாநில தலைவர் மற்றும் செயல் தலைவர் பதவி வகித்த போது, கட்சி பலமாகவே இருந்தது. எனவே, அவருக்கு மீண்டும் வாய்ப்பு அளித்தால் கட்சியை தூக்கி நிறுத்துவார் என, அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.தனக்கு பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையின் காரணமாக பரபரப்பாக பேட்டி தரும் இளங்கோவன், தேர்தல் ரிசல்ட் வரை அமைதி காத்து வருகிறார்.

இவர்கள் போக, சுதர்சன நாச்சியப்பன், வசந்தகுமார், ஜெயக்குமார் போன்றவர்களும் தலைவர் பதவியை எதிர்பார்த்து டில்லியில் காய்களை நகர்த்தி வருகின்றனர் என்கிறது காங்கிரஸ் வட்டாரம்.

Tuesday, April 26, 2011

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் மூன்றாவது குற்றப்பத்திரிகை?

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சி.பி.ஐ. தனது முதல் குற்றப்பத்திரிகையை கடந்த ஏப்ர்ல் 2ம் தேதி, விசேஷ கோர்ட் நீதிபதி சைனி முன் தாக்கல் செய்தது. அதில், தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராஜா, பல்வா உட்பட ஒன்பது பேர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.

இவ்வழக்கில் துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரண்டாவது (துணை) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.அதில், தி.மு.க.கட்சியின் ராஜ்யசபா எம்.பி. கனிமொழி, கலைஞர் "டிவி”யின் தலைமை நிர்வாக அதிகாரி சரத்குமார் ரெட்டி மற்றும் இதில் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவன அதிகாரிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில், இன்னொரு துணை குற்றப்பத்திரிகையும் சி.பி.ஐ. தரப்பில் மூன்றாவது முறையாக தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது, அடுத்து மாதம் 30ம் தேதியன்று தாக்கல் செய்யப்படும் என சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன