அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, January 21, 2009

திருமங்கலம் தீர்ப்பு - ஒரு அலசல்

பரவலாக எதிர்பார்க்கப் பட்டது போலவே ஆளுங்கட்சியான தி.மு.க. இந்த இடைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், இந்த தேர்தல் முடிவுகள் மூலம் வெவ்வேறு அரசியல் கட்சிகளுக்கு கிடைத்துள்ள செய்திகள் என்னவென்று பார்ப்போம்.

தி.மு.க. :

குடும்பம் மற்றும் கூட்டணியில் தொடர்ந்து விரிசல்கள் ஏற்பட்டு வரும் இந்த வேளையில் திருமங்கலம் தொகுதி வெற்றி கட்சித் தலைமைக்கு ஓரளவுக்கு திருப்தியைத் தந்திருக்கக் கூடும். அதே சமயம் ஒரு சிறிய தொகுதியில் முழு அரசு பலத்தையும் காட்ட முடிந்தது போல, அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் காட்ட முடியாது என்பதாலும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலை அப்போது என்னவாக இருக்கும் என்பது தொடர்ந்து கேள்விக் குறியாகவே இருப்பதாலும் நாடாளுமன்றத்திற்கு நடைபெறவுள்ள தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த முடிவுகளை எடுத்துக் கொள்ள முடியாது. பொருளாதார தளர்ச்சியின் பாதிப்பு அனைத்து தரப்பினரையும் பாதித்துள்ள இன்றைய சூழலில் சாதாரணமாக மக்களின் கோபம் ஆளுங்கட்சியின் மீதே திரும்ப வாய்ப்புகள் அதிகம். இதன் காரணமாகவே, உடனடியாக தேர்தலை விரும்பாத மத்திய அரசு குறுகிய கால நோக்கில் பல பொருளாதார மீட்சி நடவடிக்கைகளை (பெட்ரோல் விலை குறைப்பு, வட்டி வீத குறைப்பு போன்றவை) எடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய நடவடிக்கைகள் பெருமளவு பலன் தராத பட்சத்தில் ஆளுங்கட்சிக்கு பொதுத் தேர்தல் கடும் சவாலாகவே இருக்கும் என்று கருதுகிறேன்.

அ.தி.மு.க.:

இந்த தேர்தலின் மூலம் தி.மு.க. விற்கு மாற்றுக் கட்சியாக அ.தி.மு.கவையே மக்கள் கருதுகிறார்கள் என்பதும் மூன்றாவது நான்காவது கட்சிகள் பெருமளவு வோட்டுகளைப் பெற வில்லை என்பதும் அ.தி.மு.க. தலைமைக்கு ஆறுதல் தரும் விஷயங்கள். ஏற்கனவே சொன்னபடி, நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் சமயத்தில் இப்போதைய பொருளாதார தளர்ச்சி நீடிக்குமேயானால், அதன் பலன் அ.தி.மு.க.விற்கே அதிகம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதே சமயம், பா.ஜ.க வுடன் கூட்டணி இல்லை என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்ட நிலையில், வெற்றி பெற்றால் அ.தி.மு.க. தரப்பில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதும், புதிய ஆட்சியில் அ.தி.மு.க. வின் பங்கு என்னவாக இருக்கும் என்பது பற்றியும் அதன் தலைமை தெளிவு படுத்த வேண்டி இருக்கும். மேலும் பா.மா.க போன்ற கட்சிகளுடன் கூட்டணி ஏற்படுத்திக் கொள்வது, ஆளும் கட்சிக்கு கடும் போட்டியை தர உதவும் என்று கருதுகிறேன்.

தே.மு.தி.க. :

கடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலிலும் பின்னர் வந்த இடைத் தேர்தலிலும் மிகப் பெரும் நம்பிக்கைகளை ஏற்படுத்திய தே.மு.தி.க. இந்த தேர்தலில் டெபொசிட் இழந்துள்ளது இந்த கட்சியும் ம.தி.மு.க, பா.ம.க. போன்ற கட்சிகளின் நிலையை (சிறந்த துவக்கத்திற்கு பின்னர் கூட்டணி கட்சிகளில் ஒன்றாகிப் போனது) அடைந்து விடுமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. திராவிட கட்சிகளுக்கு நல்ல மாற்று போல துவக்கத்தில் தோற்றமளித்த இந்த கட்சியில் ஏற்பட்ட தலைமையின் குடும்ப தலையீடுகள் மற்றும் வாய் சவடால்கள் காரணமாக இந்த கட்சிக்கும் மற்ற திராவிட கட்சிகளுக்கும் பெரிய வேற்றுமைகள் இல்லை என மக்கள் முடிவு செய்து விட்டதாலேயே இந்த தேர்தலில் மிகக் குறைந்த வாக்குகளை இந்த கட்சி பெற்றுள்ளது என்று கருதுகிறேன். இந்த நிலை தொடர்ந்தால், வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்த கட்சியால் எந்த பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என்றே தோன்றுகிறது. அதே போல, பா.ஜ.க.வுடன் கூட்டணி ஏற்படுத்திக் கொள்வது அகில இந்திய அளவில் ஒரு அறிமுகத்தையும், நிதி தட்டுப்பாட்டைக் குறைக்கவும் உதவும் என்றாலும், அதிக வாக்குகளைப் பெற்றுத் தருமா என்பது கேள்விக் குறியே. அதே சமயம், இரண்டு பெரிய கட்சிகளுடன் ஏதேனும் கூட்டணி வைத்துக் கொண்டால் ஓரளவுக்கு சீட்டுகளைப் பெற வாய்ப்புகள் உள்ளது. ஆனால் பத்தோடு பதினொன்றான ஒரு கூட்டணி கட்சியாக மாறி மக்கள் மதிப்பை இழக்க வேண்டி இருக்கும். எனவே இந்த தேர்தல் முடிவுகள் கட்சித் தலைமைக்கு பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கும் என்று நம்புகிறேன்.

இதர கட்சிகள்:

கூட்டணியை மாற்ற காங்கிரஸ்சின் தமிழக கிளையின் ஒரு பிரிவினர் செய்து வந்த முயற்சிகள் இப்போதைக்கு பின்னடைவை சந்திக்கும். எந்த கட்சியுடன் கூட்டு என்ற பாமகவின் முடிவு பொதுத் தேர்தல் வரும் வரை தள்ளிப் போடப் படலாம். நான்காவது ஐந்தாவது இடம் பெற்ற கட்சிகள் ஏதேனும் ஒரு பெரிய கட்சியுடன் கூட்டணி அமைத்து (சீட்டு இல்லாமல்) போட்டி இடலாம். அல்லது ஒரு மாபெரும் (?) மூன்றாவது கூட்டணியில் இடம் பெற்று தேர்தலைச் சந்திக்கலாம்.

வன்முறை:

தமிழகம் இதுவரை காணாத வன்முறையை இந்த தேர்தல் கண்டதாக தகவல்கள் கூறுகின்றன. காஷ்மீர், பீகார் மாநிலங்களின் தேர்தல்களை விட அதிக வன்முறை திருமங்கலம் தேர்தலில் நடைபெற்றதாக தேர்தல் உயரதிகாரி தெரிவித்துள்ளார். கட்சிகள் இந்த தேர்தல் முடிவை கௌரவ பிரச்சினையாக நினைத்ததே இந்த வன்முறைக்கு காரணம் என்று நினைக்கிறேன். இது வருத்தத்துக்குரிய மற்றும் கடுமையாக கண்டிக்கத் தக்க விஷயம் என்றாலும், பரவலான பொதுத் தேர்தலின் போது இத்தகைய வன்முறை நிகழாது என்று நம்புகிறேன்.

ஆக மொத்தத்தில், தமிழக அரசியல் களத்தில் இரண்டு பெரிய திராவிட கட்சிகளின் ஆதிக்கமே இன்னும் சில காலத்திற்கு தொடரும் என்பதையே இந்த இடைத் தேர்தல் முடிவு காட்டுவதாக கருதுகிறேன். மேலும் இந்த இரண்டு கட்சிகளில் (கூட்டணிகளில்) நாடாளுமன்ற தேர்தலுக்கான வியுகத்தை சிறப்பாக அமைக்கிற கட்சியே (கூட்டணியே) வெற்றி பெறும் என்று நம்புகிறேன்.

தடுமாறும் இந்திய திரைப்படத் துறை

2008 ஆம் ஆண்டில் வெளிவந்த "கஜினி" 200 கோடி வசூல், "சிங்க் இஸ் கிங்" வசூல் மழை, "தசாவதாரம்" வரலாறு காணாத வெற்றி என்றெல்லாம் ஊடகங்களால் வர்ணிக்கப் பட்டாலும் உண்மையில் கடந்த ஆண்டு திரைப்படத் துறைக்கு சரிவைத் தந்த ஒரு ஆண்டாகவே இருந்தது. பொதுவாக வெற்றிவிகிதம் மிகக் குறைவாக உள்ள ஒரு துறையாகவே சினிமா தொழில் கருதப் பட்டாலும், பெரிய தொழிற் முறையிலான இந்திய மற்றும் வெளிநாட்டு வணிக நிறுவனங்கள் (இரோஸ் இன்டர்நேஷனல், ரிலையன்ஸ் அட்லாப்ஸ், பிரமிட் சமிரா போன்றவை) சில காலத்திற்கு முன்னர் பெருமளவில் இந்திய திரைப்படத் துறையில் நுழைந்தது அனைவரிடமும் புதிய நம்பிக்கைகளை உருவாக்கியது.

ஆனால் நடந்ததோ வேறு. முன்பெல்லாம் பட்ஜெட்/பார்முலா/ஸ்டார் அந்தஸ்து குறைந்த படங்கள் மட்டுமே அதிக தோல்வி அடைந்தன. ஆனால் சென்ற வருடம், மிகப் அதிக பொருட்செலவுடன் ஸ்டார் அந்தஸ்து உள்ள நடிகர்கள் துணையுடன் பெரிய நிறுவனங்கள் பிரமாண்டமாக தயாரித்து வெளி வந்த பல படங்கள் (துரோணா, லவ் 2050, யுவராஜ், குசேலன், ஏகன், குருவி மற்றும் பல) வணிக ரீதியாக தோல்வி அடைந்தன என்பது குறிப்பிடத் தக்கது. கடந்த வருடம் திரைப் படத் துறையைச் சேர்ந்த பல வணிக நிறுவனங்களின் பங்குகள் மற்ற தொழிற் துறைகளைச் சேர்ந்த பங்குகளை விட மிக அதிகமாக வீழ்ச்சி அடைந்ததும் சினிமா துறையின் வீழ்ச்சிக்கு கட்டியம் கூறுகிறது.

தெலுங்கு திரையில் வெளிவந்த படங்களில் தொண்ணூறு சதவீதம் வணிக ரீதியான தோல்வி பெற்றன எனவும் தமிழில் வெளி வந்த 115 படங்களில் 100 படங்கள் தோல்வியைச் சந்தித்தன என்றும் தகவல்கள் கூறுகின்றன. தமிழ் திரைப் படத் துறை கடந்த வருடம் மட்டும் சுமார் 700 கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்துள்ளது என்று விநியோகஸ்தர் சங்கத் தலைவர் (கலைப் புலி சேகரன்) கூறுகிறார். மற்ற மொழி திரை உலகங்களும் இதற்கு விதி விலக்கல்ல. ஹிந்தி திரையுலகம் கூட இந்த வருடம் பெரும் இழப்புகளை சந்தித்துள்ளதாக சில திரையுலக வணிக நிபுணர்கள் கூறுகின்றனர்.

மொத்தத்தில், இந்திய திரையுலகம் கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாக தெரிகிறது. பல புதிய திரை முயற்சிகள் (மர்ம யோகி போன்றவை) தள்ளிப் போடப் பட்டுள்ளன. ஹிந்தியில் தொண்ணூறு சதவீத புதிய முயற்சிகள் நிறுத்தி வைக்கப் பட்டிருப்பதாகவும் தயாரிப்பில் உள்ள திரைப் படங்கள் வெகுவாக காலதாமதமாகுவதாகவும் பிரபல ஹிந்தி திரைப் பட தயாரிப்பாளர் மகேஷ் பட் கூறுகிறார். நம்மூரில் கூட ரஜினி-சங்கர் கூட்டணியில் உருவாகும் "எந்திரன்" கைமாறியதற்கும் திரையுலகை வாட்டும் நிதி நெருக்கடி ஒரு முக்கிய காரணம் எனக் கருதப் படுகிறது.

இந்த வீழ்ச்சிக்கு காரணங்கள் என்ன என்பது பற்றி இங்கே ஒரு சிறு அலசல்.

காசுக்கேற்ற பணியாரம் இல்லை.

மல்டிப்ளெக்ஸ் கலாச்சாரம் திரைப் படங்களைப் பார்ப்பதற்கான செலவினை கடந்த சில வருடங்களில் பல மடங்கு உயர்த்தியுள்ளது. மாநகரத்தில் வாழும் ஒரு சிறிய குடும்பம் ஒரு சினிமாவைப் பார்ப்பதற்கு சாதாரணமாக ஆகும் செலவு கிட்டத் தட்ட ஆயிரம் ரூபாய். செய்த செலவிற்கு கணக்குப் பார்க்க கூடிய இந்திய கலாச்சாரத்தில், செலவு செய்த ஆயிரம் ரூபாய்க்கு குறிப்பிட்ட திரைப் படம் தகுதிதானா என்ற கேள்வி பலருடைய மனதிலும் எழுகிறது. அதிக செலவு செய்து பார்த்த படம் திருப்தி இல்லாத போது பணம் ஏமாற்றப் பட்டது போன்ற உணர்வு பலருக்கும் ஏற்படுகிறது. அதே நடிகர் அல்லது இயக்குனரின் அடுத்த படத்தை அவர்கள் பார்க்க இரு முறை யோசிப்பார்கள். மேலும், ஒட்டு மொத்த பொருளாதாரம் தேக்க நிலையைச் சந்திக்கும் இன்றைய காலகட்டத்தில் பெருமளவு பொருட் செலவு செய்து அரங்குகளுக்கு சென்று படங்களைப் பார்க்க முன் போல மத்திய தர வர்க்கத்தினர் முன் வருவார்களா என்பது ஒரு கேள்விக் குறி.

சின்னத் திரை வழங்கும் போட்டி

வீட்டிற்குள்ளேயே வரும் சின்னத் திரை முக்கியமாக நெடுந்தொடர்கள் பெரிய திரைக்கு கடும் போட்டியைத் தருகின்றன. நெடுந்தொடர்களின் ஒரு நாள் பகுதியைக் கூட தியாகம் செய்ய (திரைப்படம் பார்க்க) பல தாய்மார்கள் தயங்குவது பெண்களின் கூட்டம் வார நாட்களில் அரங்குகளில் குறைந்துக் காணப் பட முக்கிய காரணமாகிறது. திரை இயக்குனர் செல்வராகவன் சொல்வது போல, சின்னத் திரையில் ஏராளமான திரைப்படங்கள் தொடர்ந்து காட்டப் படுவது மக்களுக்கு ஒரு வித திகட்டலையே தருகிறது.

மலிவான வியாபார தந்திரங்கள்

மக்களை திரை அரங்குக்கு வரவழைக்க திரை உலக வியாபாரிகள் மேற்கொள்ளும் மலிவான முயற்சிகள் நீண்ட கால நோக்கில் எதிர்வினையையே ஏற்படுத்துகின்றன. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், இந்த "பல நாட்களுக்கு அனைத்துக் காட்சிகளும் புக் செய்யப் பட்டு விட்டன", "இது வரை இல்லாத அளவிற்கு வசூல் மழை" (வெளிநாட்டு பணத்தை இந்தியாவிற்கு கொண்டு வர இது ஒரு ஹவாலா முயற்சி என்று கூட சொல்லப் படுகிறது) என்றெல்லாம் விளம்பரம் செய்யப் படுவதைக் கூறலாம். "சிங்க் இஸ் கிங்" என்ற படத்திற்கு இவ்வாறே விளம்பரம் செய்யப் பட்டிருக்க, மேலும் ஒரு தினப் பத்திரிக்கையோ மிகச் சிறந்த படம் என சான்றிதழ் வழங்க, நான் இது ஒரு காணுதற்கரிய படம் என்று நம்பி அரங்கிற்கு செல்ல மிஞ்சியது ஏமாற்றமே. படம் வெளி வந்து நான்காவது நாள் மாலைக் காட்சியில் முன்னூறு பேர் அமரக் கூடிய அந்த அரங்கில் இருந்தது என் குடும்பத்தையும் (3) சேர்த்து மொத்தம் பத்திற்கும் கீழே. சான்றிதழ் வழங்கிய தினத்தாள் அந்த படத்திற்கு ஒரு "மீடியா பார்ட்னர்" என குறிப்பிடப் பட்டிருந்தது எனக்கு வெறுப்பையே தந்தது.

நிதி பற்றாக் குறை.

இந்திய திரையுலகம் ஒரு தொழிற் துறையாக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் சரிவர அங்கீகரிக்கப் படாதது, திரை உலகம் சந்திக்கும் நிதி நெருக்கடிக்கு முக்கிய காரணம். மேற்சொன்னபடி, வெற்றி விகிதம் மிகவும் குறைவாக உள்ள துறையாக சினிமாத் துறை இருப்பதால், வங்கிகள் கடன் வழங்க தயங்குகின்றன. சினிமா துறை பங்குகளின் செயல்பாடு போதுமான அளவிற்கு திருப்தியாக இல்லாததால் பங்கு சந்தையிலும் நிதி திரட்ட திரையுலகத்தினருக்கு சிரமமான காரியமாகவே உள்ளது. இதனால் அதிக வட்டிக்கு கடன் வாங்கும் சூழ்நிலைக்கு தயாரிப்பாளர்கள் தள்ளப் படுகின்றனர். ஒரு படம் தயாரிக்கும் செலவில் பெரிய பங்கு (நடிகர்களின் ஊதியத்திற்கு அடுத்தபடியாக என்று கூட கூறலாம்) வட்டிக்கே போகிறது. திரைப் படம் தயாரிப்பில் மற்றும் வெளியீட்டில் ஏற்படும் தாமதங்கள் படத்தின் வணிக ரீதியான தோல்விக்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன.

நடிகர்களின் ஸ்டார் அந்தஸ்து ஒரு கேள்விக் குறி

ஸ்டார் நடிகர்களுக்கு உள்ளதாக சொல்லப் படும் "மக்களை அரங்குகளுக்கு கவர்ந்திழுக்கும் காந்த சக்தி" இந்த ஆண்டு பெருமளவு வெளிப் பட வில்லை என்றே சொல்ல வேண்டும். உதாரணம், பெரிய நடிகர்கள் நடித்த குசேலன், யுவராஜ் போன்ற படங்கள் அடைந்த தோல்வி. ஏகன் மற்றும் குருவி படங்கள் பார்த்து வெளிவந்த போது மனதில் எழுந்த கேள்வி "குறிப்பிட்ட நடிகர்கள் பிடிக்கும் என்ற ஒரே காரணத்திற்காக இவ்வளவு பெரிய தண்டனை தேவையா?" என்பதே. எனவே மக்களின் விருப்பங்கள் வேகமாக மாறும் இன்றைய காலகட்டத்தில் ஸ்டார் நடிகர்களின் காந்த சக்தி என்பதே ஒரு கேள்விக் குறியான நிலையிலும் கூட அவர்களுக்கு மிக அதிக சம்பளங்கள் வழங்கப் படுவது, திரைப் படத்தின் வணிக ரீதியான தோல்விக்கு முக்கிய காரணமாகும்.

ஹாலிவுட் படங்கள் தரும் போட்டி

மொழிமாற்றம் செய்யப் படும் ஹாலிவுட் படங்கள் இந்தியப் படங்களுக்கு கடும் சவாலாக விளங்குகின்றன. சிறந்த தொழிற் நுட்பம், நேர்த்தியான கதை அமைப்பு, அரங்குகளில் மட்டுமே அனுபவிக்க முடிகிற பிரமாண்டம், கலைஞர்களின் தொழிற் அர்ப்பணிப்பு தன்மை இவற்றுடன் எளிதில் புரிய உதவும் தாய்மொழி மாற்றம் ஆகியவை ஹாலிவுட் படங்கள் இந்தியாவில் பெரும் வெற்றி பெற காரணமாக அமைகின்றன.

இந்திய திரைத் துறை வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.


இதற்கான பதிலை நாம் சென்ற ஆண்டில் வெற்றி பெற்ற படங்களில் இருந்தே பெற முடியும். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகி வெற்றி பெற்ற படங்களில் குறிப்பிடத் தக்கவை கஜினி மற்றும் தசாவதாரம் ஆகியவை. எதிர்பார்ப்புகளை ஈடுகட்டும் அளவிற்கு கடும் உழைப்பு மற்றும் சரியான திட்டமிடல் இருந்ததே இந்த இரண்டு படங்களின் வெற்றிக்கும் முக்கிய காரணங்களாக இருந்தன. இவ்விரண்டு படங்களும் வெளி வர நீண்ட காலம் பிடித்தாலும் இடை பட்ட காலத்தில் மிகச் சிறந்த விளம்பர யுக்திகள் பின் பற்றப் பட்டதும் இவற்றின் வெற்றிக்கு முக்கிய காரணமாகும். பெரிய எதிர்ப்பார்ப்பு இல்லாமல் வந்து வணிக ரீதியாக வெற்றி பெற்ற படங்களில் குறிப்பிடத் தக்க அஞ்சாதே மற்றும் சுப்ரமணியபுரம் ஆகியவை ஸ்டார் நடிகர்கள் இல்லையென்றாலும் கூட சிறந்த வித்தியாசமான கதையமைப்பு கொண்டிருந்தன.

எந்த ஒரு தொழிற்துறையிலும் செய்த முதலீட்டைப் போல பல மடங்கு லாபம் அதுவும் அதிக உழைப்பின்றி குறுகிய காலத்தில் பார்க்க முனைவது பல சமயங்களில் எதிர் வினையையே ஏற்படுத்தும் என்பது வணிக நியதி. இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டிய திரைத் துறையினர் செய்ய வேண்டியது என்ன?

௧. தமது (மொழிக்கான அல்லது வட்டாரத்திற்கான) சந்தை வீச்சை முழுமையாக புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் பட்ஜெட் இடுதல். தேவையற்ற ஆடம்பர செலவுகளைத் தவிர்த்தல். சிக்கனம் கூட ஒரு வகையில் வணிக ரீதியான வெற்றிக்கு உதவும்.


௨. ஸ்டார் நடிகர்களின் சம்பள பணத்தை படத்தின் மொத்த பட்ஜெட்டின் குறிப்பிட்ட விகித்தத்திற்குள் வைத்தல். முடிந்த வரை சிறந்த கதையமைப்பிற்கு மற்றும் தொழிற் நுட்ப நேர்த்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தல். இதன் மூலம் நுகர்வோருக்கு அதுதாங்க ரசிகர்களுக்கு அதிக திருப்தியை வழங்க முடியும்.

௩. சிறந்த திட்டமிடல் அதுவும் படம் ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்னதாகவே முழுமையான திட்டம் இருப்பது படத்தின் செலவைக் குறைப்பதோடு திரைப் படம் நேர்த்தியான முறையில் வெளியாக உதவும். சிறந்த திட்டம் பாதி வெற்றிக்கு கியாரண்டி.

௪. அரங்கு உரிமையாளர்களும் திரைப் பட தயாரிப்பாளர்களும் கலந்து பேசி அரங்கு நுழைவுக் கட்டணம் மற்றும் இதர செலவினங்களின் அளவைக் குறைத்தல். "குறைந்த விலை அதிக லாபம்" என்பது வெற்றி பெற முக்கியமான வணிக நியதி.

லட்சக் கணக்கான மக்களின் வாழ்வாதாரமாகவும் கோடிக் கணக்கான மக்களின் பொழுது போக்கு சாதனமாகவும் உள்ள இந்திய திரைப் படத் துறை ஆரோக்கியமான வளர்ச்சியை அடைந்து வரும் ஒரு தொழிற் துறையாக நீடித்திருப்பது அவசியமான ஒன்றாகும். இந்தியரின் வாழ்வோடு இரண்டற கலந்து விட்ட நமது திரைத் துறையினர் இந்த 2009 ஆம் ஆண்டில் தாமும் வணிக ரீதியாக வெற்றி கண்டு ரசிகர்களுக்கும் நல்ல படங்கள் பல வழங்க வாழ்த்துவோம்.

ஒபாமாவே வருக! நம்பிக்கையைத் தருக!

பொருளாதார வீழ்ச்சி, வேலை இழப்புகள், வங்கிகள் மூடப் படுதல், வாகனத்துறை வீழ்ச்சி மற்றும் சந்தை ஊழல்கள் என கெட்ட செய்திகளாகவே வந்து கொண்டிருந்த அமெரிக்காவிலிருந்து பல நாள்களுக்கு பிறகு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. அதாவது, வரும் வாரத்தில் திரு.ஒபாமா அவர்கள் அமெரிக்காவின் முதல் குடிமகனாக பொறுப்பேற்க உள்ளார் என்ற செய்தி. பல நூற்றாண்டுகளாக கொடுமைபடுத்தப் பட்ட ஆப்ரிக்கா-அமெரிக்கா இனத்தை சேர்ந்த ஒருவர் முதன் முறையாக ஆட்சிப் பொறுப்பேற்கிறார் என்பது அரசியல் ரீதியான முக்கிய நிகழ்வு ஆகும்.

அதே சமயம், பல ஆண்டுகளாக ஒரே (பொருளாதார) பாதையில் சென்று கொண்டிருந்த அமெரிக்காவிற்கு (ஓரளவிற்கேனும்) வேறுபட்ட சிந்தனைகளைக் கொண்ட ஒருவர் பொறுப்பேற்கிறார் என்பது சந்தைகளிற்கு சற்று தெம்பைக் கொடுக்கும் விஷயம். இந்த தெம்பு வரும் வாரத்தில் சந்தைகளில் என்ன மாற்றம் தர உதவும் என்று பார்க்கலாம்.


சென்ற வார சந்தை நிலவரம்


நாம் எதிர்பார்த்தது போலவே, சத்யம் ஊழல் மற்றும் சரிவைக் காட்டும் அமெரிக்க பொருளாதார புள்ளி விவரம், சென்ற வாரம் சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சத்யம் நிறுவனத்தின் முன்னாள் தலைவரின் ஊழல் பற்றி தினந்தோறும் வரும் புதிய தகவல்களும், முதலில் சத்யம் நிறுவனத்தை மீட்கலாம் என்று களத்தில் இறங்கிய மத்திய அரசு, ராஜு செய்த மோசடியின் வீச்சு கண்டு சற்று தயங்கியதும், இந்த வார வீழ்ச்சிக்கு பெரிய காரணங்கள்.


பொருளாதார பின்னடைவு குறித்த அச்சத்தின் காரணமாக உலக சந்தைகள் இந்த வாரம் பெரும் சரிவை சந்தித்ததும் நமது சந்தைகளின் நம்பிக்கையைச் சிதைத்தன. அமெரிக்க வங்கிகளின் காலாண்டு நிதி நிலை அறிக்கைகள் மிக மோசமாக இருந்ததும் நமது சந்தைகளின் பின்னடைவுக்கு முக்கிய காரணங்களாக அமைந்தன. இந்த வாரமும் வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் தொடர்ந்து இந்திய பங்குகளை விற்று வந்தன.

அதே சமயம், இந்திய கார்பொரட் உலகத்தின் அச்சாணிகளான அண்ணன்-தம்பிகளுக்கிடையேயான எரிவாயு பங்கீடு குறித்த பிரச்சினைக்கு விரைவில் முடிவு கிடைக்கும் என்ற பலமான வதந்தியும் கிருஷ்ணா-கோதாவரி படுகையில் எரிவாயு உற்பத்தி விரைவில் தொடங்கும் என்ற செய்திகளும் சந்தைக்கு ஊக்கத்தைத் தந்தன. மேலும் சரியும் பணவீக்கம் (5.24), அதனடிப்படையில் வட்டி வீதங்கள் மேலும் குறைக்கப் படலாம் என்ற நம்பிக்கைகளைத் தந்தது. ரிலையன்ஸ் குழுமம் மற்றும் எரிசக்தி துறை பங்குகள் இந்த வாரம் சிறப்பான வளர்ச்சியைச் சந்தித்தன. டி.சி.எஸ். நிறுவனத்தின் காலாண்டு அறிக்கை ஏமாற்றத்தைத் தந்தாலும், இன்போசிஸ் நிறுவனத்தின் சிறப்பான காலாண்டு அறிக்கை மென்பொருள் துறை பங்குகள் சிறப்பாக செயல் பட உதவியது. வங்கிகளின் நிதி அறிக்கைகள் சிறப்பாக இருந்தாலும், உலகளாவிய நிதித் துரையின் வீழ்ச்சி இந்திய வங்கிகளின் பங்குகளிலும் எதிரொலித்தது. ரியல் எஸ்டேட் துறை பங்குகளின் வீழ்ச்சி சென்ற வாரமும் தொடர்ந்தது. நாம் ஏற்கனவே கூறியிருந்தது போல சென்செக்ஸ்சுக்கு 9000 புள்ளிகளும் நிபிட்டிக்கு 2700 புள்ளிகளும் நல்ல அரண்களாக இருந்தன.


வரும் வார சந்தை நிலவரம்.


மேலே கூறியது போல, ஒபாமா வருகை சந்தைகளுக்கு ஒரு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தும் என நம்பலாம். திங்கள் கிழமை அமெரிக்கா சந்தைகளுக்கு விடுப்பு என்பதால், வாரத்தின் முதல் இரண்டு நாட்கள் இந்திய சந்தை நல்ல நிலையில் இருக்கக் கூடும். சென்ற வாரம் சென்செக்ஸ்சுக்கு 9000 புள்ளிகளும் நிபிட்டிக்கு 2700 புள்ளிகளும் நல்ல அரண்களாக இருந்ததும் சந்தைக்கு ஒரு நல்ல தெம்பை கொடுக்கும்.


அதே சமயத்தில், சந்தை மிக அதிக முன்னேற்றம் காணும் என நம்புவது கடினம். அமெரிக்கா நிதி சந்தைகளின் நிலை மற்றும் இந்திய நிறுவனங்களின் (முக்கியமாக ரிலையன்ஸ்) காலாண்டு அறிக்கைகள் சந்தையின் போக்கை நிர்ணயிக்கும். மொத்தத்தில் இந்த வாரம் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த வாரமாகவே இருக்க வாய்ப்புகள் அதிகம்.


வரும் வாரத்திற்கான எதிர்ப்பு நிலைகள்

சென்செக்ஸ் - 9500-9600, 9900-10100,
நிபிட்டி 2900-2930, 3000-3030

வரும் வாரத்திற்கான அரண் நிலைகள்


சென்செக்ஸ் - 8950-9050, 8400-8500,
நிபிட்டி - 2700-2725, 2475-௨525


நிபிட்டி 2700 க்கு (சென்செக்ஸ் 9000) கீழே முடிவடையும் பட்சத்தில் வர்த்தகர்கள் தகுந்த இழப்பு நிறுத்தத்துடன் (Strict Stop Loss Limits) பெரிய நிறுவனங்களுக்கான பங்குகளை அல்லது குறியீடுகளை விற்கலாம்.

நிபிட்டி 2700 புள்ளிகளுக்கு மேல் தொடரும் வரை தகுந்த இழப்பு நிறுத்தத்துடன் (Strict Stop Loss Limit) பெரிய நிறுவனங்களுக்கான பங்குகளை அல்லது குறியீடுகளை வாங்கலாம்.

முதலீட்டாளார்கள் சந்தை சரிவைச் சந்திக்கும் பட்சத்தில், நன்கு செயல் படும் பொதுத் துறை வங்கிகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் பங்குகளை நீண்ட கால நோக்கில் வாங்கலாம்.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் வர்த்தகம் மிகுந்த ஏற்றத் தாழ்வுகளுடன் இருக்க வாய்ப்பு உள்ளது. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் தொடர்ந்து இந்திய பங்குகளை விற்பனை செய்வது ரூபாய் வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். மற்றும் மேலே சொன்ன இதர சந்தை காரணிகள் ரூபாய் வர்த்தகத்தையும் பாதிக்கும். இந்திய ரூபாய் 48.00 இலிருந்து 49.50 வரை இருக்க வாய்ப்புகள் உண்டு.

வரும் வாரம் சிறப்பான வாரமாக அமைந்திட வாழ்த்துக்கள்.

ஒபாமாவே வருக! நம்பிக்கையைத் தருக!

பொருளாதார வீழ்ச்சி, வேலை இழப்புகள், வங்கிகள் மூடப் படுதல், வாகனத்துறை வீழ்ச்சி மற்றும் சந்தை ஊழல்கள் என கெட்ட செய்திகளாகவே வந்து கொண்டிருந்த அமெரிக்காவிலிருந்து பல நாள்களுக்கு பிறகு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. அதாவது, வரும் வாரத்தில் திரு.ஒபாமா அவர்கள் அமெரிக்காவின் முதல் குடிமகனாக பொறுப்பேற்க உள்ளார் என்ற செய்தி. பல நூற்றாண்டுகளாக கொடுமைபடுத்தப் பட்ட ஆப்ரிக்கா-அமெரிக்கா இனத்தை சேர்ந்த ஒருவர் முதன் முறையாக ஆட்சிப் பொறுப்பேற்கிறார் என்பது அரசியல் ரீதியான முக்கிய நிகழ்வு ஆகும்.

அதே சமயம், பல ஆண்டுகளாக ஒரே (பொருளாதார) பாதையில் சென்று கொண்டிருந்த அமெரிக்காவிற்கு (ஓரளவிற்கேனும்) வேறுபட்ட சிந்தனைகளைக் கொண்ட ஒருவர் பொறுப்பேற்கிறார் என்பது சந்தைகளிற்கு சற்று தெம்பைக் கொடுக்கும் விஷயம். இந்த தெம்பு வரும் வாரத்தில் சந்தைகளில் என்ன மாற்றம் தர உதவும் என்று பார்க்கலாம்.


சென்ற வார சந்தை நிலவரம்


நாம் எதிர்பார்த்தது போலவே, சத்யம் ஊழல் மற்றும் சரிவைக் காட்டும் அமெரிக்க பொருளாதார புள்ளி விவரம், சென்ற வாரம் சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சத்யம் நிறுவனத்தின் முன்னாள் தலைவரின் ஊழல் பற்றி தினந்தோறும் வரும் புதிய தகவல்களும், முதலில் சத்யம் நிறுவனத்தை மீட்கலாம் என்று களத்தில் இறங்கிய மத்திய அரசு, ராஜு செய்த மோசடியின் வீச்சு கண்டு சற்று தயங்கியதும், இந்த வார வீழ்ச்சிக்கு பெரிய காரணங்கள்.


பொருளாதார பின்னடைவு குறித்த அச்சத்தின் காரணமாக உலக சந்தைகள் இந்த வாரம் பெரும் சரிவை சந்தித்ததும் நமது சந்தைகளின் நம்பிக்கையைச் சிதைத்தன. அமெரிக்க வங்கிகளின் காலாண்டு நிதி நிலை அறிக்கைகள் மிக மோசமாக இருந்ததும் நமது சந்தைகளின் பின்னடைவுக்கு முக்கிய காரணங்களாக அமைந்தன. இந்த வாரமும் வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் தொடர்ந்து இந்திய பங்குகளை விற்று வந்தன.

அதே சமயம், இந்திய கார்பொரட் உலகத்தின் அச்சாணிகளான அண்ணன்-தம்பிகளுக்கிடையேயான எரிவாயு பங்கீடு குறித்த பிரச்சினைக்கு விரைவில் முடிவு கிடைக்கும் என்ற பலமான வதந்தியும் கிருஷ்ணா-கோதாவரி படுகையில் எரிவாயு உற்பத்தி விரைவில் தொடங்கும் என்ற செய்திகளும் சந்தைக்கு ஊக்கத்தைத் தந்தன. மேலும் சரியும் பணவீக்கம் (5.24), அதனடிப்படையில் வட்டி வீதங்கள் மேலும் குறைக்கப் படலாம் என்ற நம்பிக்கைகளைத் தந்தது. ரிலையன்ஸ் குழுமம் மற்றும் எரிசக்தி துறை பங்குகள் இந்த வாரம் சிறப்பான வளர்ச்சியைச் சந்தித்தன. டி.சி.எஸ். நிறுவனத்தின் காலாண்டு அறிக்கை ஏமாற்றத்தைத் தந்தாலும், இன்போசிஸ் நிறுவனத்தின் சிறப்பான காலாண்டு அறிக்கை மென்பொருள் துறை பங்குகள் சிறப்பாக செயல் பட உதவியது. வங்கிகளின் நிதி அறிக்கைகள் சிறப்பாக இருந்தாலும், உலகளாவிய நிதித் துரையின் வீழ்ச்சி இந்திய வங்கிகளின் பங்குகளிலும் எதிரொலித்தது. ரியல் எஸ்டேட் துறை பங்குகளின் வீழ்ச்சி சென்ற வாரமும் தொடர்ந்தது. நாம் ஏற்கனவே கூறியிருந்தது போல சென்செக்ஸ்சுக்கு 9000 புள்ளிகளும் நிபிட்டிக்கு 2700 புள்ளிகளும் நல்ல அரண்களாக இருந்தன.


வரும் வார சந்தை நிலவரம்.


மேலே கூறியது போல, ஒபாமா வருகை சந்தைகளுக்கு ஒரு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தும் என நம்பலாம். திங்கள் கிழமை அமெரிக்கா சந்தைகளுக்கு விடுப்பு என்பதால், வாரத்தின் முதல் இரண்டு நாட்கள் இந்திய சந்தை நல்ல நிலையில் இருக்கக் கூடும். சென்ற வாரம் சென்செக்ஸ்சுக்கு 9000 புள்ளிகளும் நிபிட்டிக்கு 2700 புள்ளிகளும் நல்ல அரண்களாக இருந்ததும் சந்தைக்கு ஒரு நல்ல தெம்பை கொடுக்கும்.


அதே சமயத்தில், சந்தை மிக அதிக முன்னேற்றம் காணும் என நம்புவது கடினம். அமெரிக்கா நிதி சந்தைகளின் நிலை மற்றும் இந்திய நிறுவனங்களின் (முக்கியமாக ரிலையன்ஸ்) காலாண்டு அறிக்கைகள் சந்தையின் போக்கை நிர்ணயிக்கும். மொத்தத்தில் இந்த வாரம் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த வாரமாகவே இருக்க வாய்ப்புகள் அதிகம்.


வரும் வாரத்திற்கான எதிர்ப்பு நிலைகள்

சென்செக்ஸ் - 9500-9600, 9900-10100,
நிபிட்டி 2900-2930, 3000-3030

வரும் வாரத்திற்கான அரண் நிலைகள்


சென்செக்ஸ் - 8950-9050, 8400-8500,
நிபிட்டி - 2700-2725, 2475-௨525


நிபிட்டி 2700 க்கு (சென்செக்ஸ் 9000) கீழே முடிவடையும் பட்சத்தில் வர்த்தகர்கள் தகுந்த இழப்பு நிறுத்தத்துடன் (Strict Stop Loss Limits) பெரிய நிறுவனங்களுக்கான பங்குகளை அல்லது குறியீடுகளை விற்கலாம்.

நிபிட்டி 2700 புள்ளிகளுக்கு மேல் தொடரும் வரை தகுந்த இழப்பு நிறுத்தத்துடன் (Strict Stop Loss Limit) பெரிய நிறுவனங்களுக்கான பங்குகளை அல்லது குறியீடுகளை வாங்கலாம்.

முதலீட்டாளார்கள் சந்தை சரிவைச் சந்திக்கும் பட்சத்தில், நன்கு செயல் படும் பொதுத் துறை வங்கிகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் பங்குகளை நீண்ட கால நோக்கில் வாங்கலாம்.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் வர்த்தகம் மிகுந்த ஏற்றத் தாழ்வுகளுடன் இருக்க வாய்ப்பு உள்ளது. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் தொடர்ந்து இந்திய பங்குகளை விற்பனை செய்வது ரூபாய் வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். மற்றும் மேலே சொன்ன இதர சந்தை காரணிகள் ரூபாய் வர்த்தகத்தையும் பாதிக்கும். இந்திய ரூபாய் 48.00 இலிருந்து 49.50 வரை இருக்க வாய்ப்புகள் உண்டு.

வரும் வாரம் சிறப்பான வாரமாக அமைந்திட வாழ்த்துக்கள்.

இந்தியாவின் ஒபாமா?

இன்று உலகின் சரித்திரத்தின் மிக முக்கியமான நாள். சுரண்டலின் அடையாளமாக திகழும் அமெரிக்காவின் தலைவராக பல நூற்றாண்டுகளாக வஞ்சிக்கப் பட்ட ஒரு சமுதாயத்தைச் சார்ந்த ஒருவர் இன்று பதவி ஏற்க உள்ளார். உலகின் மிக வலிமையான ஒரு ஜனநாயக நாட்டில் கத்தியின்றி ரத்தமின்றி அமைதியாக ஏற்பட்டுள்ள இந்த புரட்சி, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் (அதுதாங்க நம்ம இந்தியா) சில எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஆப்ரிக்கா-அமெரிக்கா இனத்தவரைப் போன்றே சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பல நூற்றாண்டுகளாக நேர்மையற்ற முறையில் ஒடுக்கப் பட்ட தலித் இனத்தைச் சார்ந்த ஒருவர் இந்தியாவின் பிரதமர் ஆவாரா என்றும் அப்படி ஆவது எப்போது என்பது பற்றியும் இங்கு பார்ப்போம்.

அது வேறு இது வேறு என்று நினைப்பவர்களுக்காக, பல்லாயிரம் மைல்கள் தூரத்தில் இருவேறு திசைகளில் அமைந்திருக்கும் இரு பெரும் நாடுகளில் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் ஏற்பட்ட இரண்டு சமுதாய மீட்சி இயக்கங்களுக்கிடையே உள்ள அதிசயத்தக்க சில ஒற்றுமைகள் பற்றி பார்ப்போம்.
தங்களுக்குள்ள நியாமான உரிமைகள் பற்றியும், தம் மீது இழைக்கப் படும் கொடுமைகளை எப்படி களைவது என்பது பற்றியும் பெருமளவு விழிப்புணர்வு நலிவுற்ற சமுதாயங்களுக்கு இல்லாத காலகட்டத்தில், இவர்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர்கள் இரண்டு நாட்டிலும் பிறப்பால் ஆதிக்க வர்க்கத்தைச் சார்ந்திருந்தாலும் மனதால் சமுதாய சீர்திருத்தத்தை விரும்பிய சிலர்தான். அதே சமயம் ஒட்டுமொத்த நாட்டைச் சீர்திருத்த முயன்ற ஒரு பெரிய இயக்கத்தின் சிறு பகுதியாகவே ஒடுக்கப் பட்டவர்களை ஓரளுவுக்கேனும் உயர்த்தும் முயற்சி இருந்ததும் குறிப்பிடத் தக்கது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் அமெரிக்காவை ஒன்றிணைக்க அமெரிக்காவில் ஏற்பட்ட புனரமைப்பு இயக்கத்தின் (Reconstruction Movement) ஒரு பகுதியாக "அடிமை கலாச்சாரத்தை" ஒழிக்க முயற்சி மேற்கொள்ளப் பட்டது. கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் இந்தியர்களை சமூக ரீதியாக ஒருமைப் படுத்த இந்தியாவில் தோன்றிய ஆர்யா சமாஜ், பிரம்ம சமாஜ் போன்ற சமூக சீர்திருத்த இயக்கங்கள் "தீண்டாமை ஒழிப்பு" பணியிலும் ஈடுபட்டன. உயரிய சமுதாய கொள்கைகள் இந்த இயக்கங்கள் கொண்டிருந்தாலும், அவர்களுடைய பணிகளின் வீச்சும் பலனும் மிகக் குறைந்த அளவிலேயே இருந்தன. மேலும் அடிபட்டவர்களின் வலி முழுமையாக தெரியாதவர்களால் இந்த இயக்கங்கள் நடத்தப் பட்டதால் இந்த இரு இயக்கங்களுமே பெரிய வெற்றி பெற வில்லை. அதே சமயம், பிற்காலத்தில் நடைப் பெற்ற பெரும் மாற்றங்களுக்கு இவை அடிகோலின என்பதை மறுக்க முடியாது.

இந்த புரட்சியின் இரண்டாம் பாகம் இரண்டு நாடுகளிலும் இருபதாம் நூற்றாண்டில் நிகழ்ந்தேறியது. ஆப்ரிக்கா-அமெரிக்கா இனத்தவரின் வானில் விடி வெள்ளியாக அதே இனத்தைச் சேர்ந்த மார்ட்டின் லுதேர் கிங் அவர்களும், இந்திய தலித்துகளின் பகலவனாக அவர்களிடமிருந்தே அம்பேத்கர் அவர்களும் புரட்சிக்கு தலைமை வகிக்க முன் வந்தனர். தங்களது இனத்தைச் சார்ந்த ஒருவர் ஆதிக்க வர்க்கங்களில் இருந்து வந்த தலைவர்களுக்கு சமமான தகுதிகளுடன் அவர்களுக்கு இணையாக அரசியல் வானில் உயர்ந்தது இந்த இனங்களின் மக்களுக்கு புதிய தன்னம்பிக்கையும் எழுச்சியையும் அளித்தது.

அடிமைகள் எனப் பொருள் படும் "நீக்ரோக்கள்" என்ற பெயரில் முதலில் வழங்கப் பட்டு, ஆதிக்க வர்க்கத்தைச் சார்ந்த மிதவாதிகளால் பின்பு "கறுப்பர்கள்" எனப் பெயர் சூட்டப் பட்ட ஆப்ரிக்கா-அமெரிக்கா இனத்தவர் தம் பெயர் மீது இருந்த மேல்தட்டு மக்களின் ஆதிக்கத்தை முற்றிலும் ஒழிக்க விரும்பி தம்மைத் தாமே "ஆப்ரிக்கா-அமெரிக்கா இனத்தவர்" என்று அழைத்துக் கொண்டனர். இதே போல, முதலில் கீழ்சாதி என்றும் தாழ்த்தப் பட்டவர் என்றும் அழைக்கப் பட்ட தலித் மக்கள், "ஹரிஜன்" என்று ஆதிக்க வர்க்கத்தினரால் சூட்டப் பட்ட பெயரையும் விரும்பாமல், தம்மைத் "தலித்" என்று அடையாளப் படுத்திக் கொள்ளவே விரும்பினர்.

வர்க்க வேறுபாடுகளுக்கு மதமே மூல காரணம் என்று நம்பிய ஆப்ரிக்கா-அமெரிக்கா இனத்தவர் பெரும் எண்ணிக்கையில் கிறித்துவ மதத்தை விட்டு விலகி இஸ்லாம் மார்க்கத்தில் இணைந்தனர். கிட்டத் தட்ட அதே சமயத்தில் இந்திய தலித்துகள் தம்மை பிறப்பிலேயே தாழ்ந்தவராக வைத்த ஹிந்து மதத்தை விட்டு அம்பேத்கர் தலைமையில் பெரும் எண்ணிக்கையில் புத்த மதத்தில் இணைந்தனர்

அதே சமயம் மார்டின் லூதர் கிங் மற்றும் அம்பேத்கர் ஆகிய தலைவர்களுக்கு நாட்டின் தலைமைப் பொறுப்பில் அமர தகுதிகள் பல இருந்தும் வாய்ப்புக்கள் கிடைக்கப் பெற வில்லை. ஆனால், அந்த வாய்ப்பை சுரண்டப் பட்ட சமுதாயங்களின் பிந்தைய சந்ததிகள் பெறக் கூடிய வகையில் அடித்தளம் போட்டவர்கள் இவர்கள் என்பதை மறுக்க முடியாது.

சமுதாய மாற்றத்தின் மூன்றாம் பகுதியாக, சுரண்டலின் சின்னமாகவும், ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதியாகவும், முதலாளித்துவத்தின் அடையாளமாகவும் அறியப் படும் அமெரிக்காவில் முன்னொரு காலத்தில் அடிமைகளாக கருதப் பட்டவர்களின் இனத்திலிருந்து ஒருவர் முதல் குடிமகனாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

சரித்திரம் சொல்லும் ஆச்சரியகரமான ஒற்றுமைகளின் அடிப்படையில் இப்போது அமெரிக்காவில் ஒபாமா அடைந்த வெற்றியினை இந்தியாவில் பழமைவாதத்தின் அடிப்படையில் பிறப்பினாலேயே தாழ்ந்தவராக கருதி ஒடுக்கப் பட்ட தலித் இனத்திலிருந்து வரும் ஒருவர் பெறுவாரா என்பது இப்போது எழுந்துள்ள ஒரு கேள்வி.

பலருடைய பார்வை இப்போது பகுஜன் சமாஜ் கட்சித் தலைவி மாயாவதி அவர்களின் மீதுதான் உள்ளது. ஏற்கனவே இந்தியாவின் மிகப் பெரிய மாநிலத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ள இவர், மூன்றாம் அணியின் பிரதமர் வேட்பாளர் எனவும் அறியப் படுவது குறிப்பிடத் தக்கது. இவரையும் ஒபாமாவையும் சற்று ஒப்பிடலாம்.

ஒபாமாவின் தந்தை ஆப்ரிக்கா-அமெரிக்கா இனத்தவர் என்றாலும் தாயார் ஐரோப்பிய-அமெரிக்கா இனத்தைச் சார்ந்தவர். மேலும், தாயாரின் குடும்பத்திலேயே மேல்தட்டு நாகரிகத்துடன் வாழ்ந்து உயர்ந்த கல்வி மற்றும் சமூக வசதிகளைப் பெற்றவர் ஒபாமா. அதே சமயம் மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்து கடுமையான சூழல்களுக்கிடையே போராடியே வாழ்வில் உயர்ந்தவர் மாயாவதி. இந்த வகையில் மாயாவதியின் வெற்றி அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.

பெரும்பாலும் பொருளாதார கொள்கைகளின் அடிப்படையிலேயே நடைபெறும் அமெரிக்கத் தேர்தல் பிரசாரங்களில் தனது தனிப் பட்ட விவாதத் திறனால் மக்களைக் கவர்ந்தவர் ஒபாமா. சாதி மற்றும் வாக்கு வங்கிகளின் அடிப்படையிலேயே நடைபெறும் இந்தியத் தேர்தலில் தனது சிறந்த மேடைப் பேச்சுத் திறனாலும் சாதுரியமான வேட்பாளர் தேர்வாலும் உத்திரப் பிரதேச தேர்தலில் வென்றவர் மாயாவதி.

ஒபாமா ஒரு குறிப்பிட்ட இனத்தவரின் பிரதிநிதியாக அறியப் படாமல் ஒட்டுமொத்த அமெரிக்கர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க கூடியவராகவே அறியப் படுகிறார். அதே சமயத்தில், ஒரு குறிப்பிட்ட இனத்தவரின் பிரதிநிதியாகவே அறியப் படும் மாயாவதி மற்ற இனத்தவரால் குறிப்பாக மேல்தட்டு மக்களால் சாதிக் கட்சி தலைவராகவே அறியப் படுகிறார். இதை மாற்ற இப்போது முயற்சி செய்து வரும் மாயாவதி கடந்த உ.பி. தேர்தலில் பல இடங்களில் ஆதிக்க சாதியைச் சார்ந்த வேட்பாளர்களை நிறுத்தியதும், அந்த முயற்சி உ.பி. சட்ட மன்றத்தில் தனிப் பெரும்பான்மை பெற உதவியதும் நாம் அறிந்ததே. இத்தகைய சாதுர்ய முயற்சி (கூட்டணி அரசியலாக வடிவெடுத்து) இந்தியா முழுதும் வெற்றி பெறுமேயானால் மைய அரசியலில் மாயாவதியின் முன்னேற்றம் தடுக்க முடியாத ஒன்றாகவே இருக்கும் என்பது என் கருத்து.

ஒபாமா மாற்றத்தின் அடையாளமாகவும் நம்பிக்கையின் சின்னமாகவும் பெரும்பாலான அமெரிக்கர்களால் அறியப் படுகிறார். அதே சமயத்தில் மாயாவதி பெரும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி இந்தியாவின் ஒரு சராசரி அரசியல்வாதியாகவே அதிகம் உணரப் படுகிறார்.

இப்படி இருவருக்குமிடையே பல வேறுபாடுகள் இருந்தாலும், இப்போதைக்கு இந்தியாவின் தலைமைப் பொறுப்பேற்க அதிகம் வாய்ப்புள்ள தலித் இனத்தைச் சார்ந்த ஒருவர் மாயாவதி என்றே கருதப் படுகிறது. இவரால் தலைமைப் பதவிக்கு உடனடியாக வரமுடிய வில்லையென்றாலும், அப்படி வந்து அதில் நீடிக்க முடிய வில்லையென்றாலும் கூட, தலித் இனத்தைச் சார்ந்த ஒருவர் (அது மாயாவதியாகவே கூட இருக்கலாம்) , அதன் தனி பிரதிநிதியாக உணரப் படாமலேயே, பெரும்பாலான இந்தியரால் ஏற்றுக் கொள்ளப் பட்டு இந்தியாவின் தலைமைப் பொறுப்பிற்கு வர அதிக காலம் பிடிக்காது என்பது என் நம்பிக்கை. இந்த நம்பிக்கையை விதைத்தது, இவ்விரு பெரிய நாடுகளில் ஏற்பட்ட சமுதாய மாற்றங்களின் தோற்றங்களும், வளர்ச்சிகளும் வேறுபட்டு இருந்தாலும் விளைவுகள் கிட்டத்தட்ட ஒன்றே போலவும் ஒன்றையொன்று காலரீதியாக ஒட்டி அமைந்ததும்தான்.

ஒபாமா வெற்றி பெற்ற போது போட்டி வேட்பாளர் "மக்.கைன்" கூறியது.

"ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் மிகவும் துன்புறுத்தப்பட்ட ஆப்ரிக்க-அமெரிக்க இன மக்களில் இருந்து ஒருவர் இன்றைக்கு அமெரிக்க ஜனாதிபதி ஆகி இருப்பது அமெரிக்கா எவ்வளவு முதிர்ச்சி அடைந்து உள்ளது என்பதையே காட்டுகிறது. ஒவ்வொரு அமெரிக்கரும் கொண்டாட வேண்டிய தருணமிது. இதற்கு காரணமான ஒபாமா அவர்களைப் பாராட்டுவோம்.''

இதே போல பல ஆயிரம் ஆண்டுகளாக கொடுமைப் படுத்தப் பட்டுள்ள தலித் இன மக்களில் இருந்து ஒருவர், மற்றவர்களின் அனுதாபத்தாலோ அல்லது அவர்கள் இதுவரை செய்த தவறுகளுக்கு பிராயச்சித்தமாகவோ அல்லது வெறுமனே சிம்பாலிக்காகவோ இல்லாமல், பெரும்பாலான இந்திய மக்களால் தனது தனிப் பட்ட தகுதியினால் மட்டுமே ஏற்றுக் கொள்ளப் பட்டு இந்தியாவின் தலைமைப் பொறுப்பில் அமர்வாரேயானால், அந்நாள் இந்தியாவின் பொன்னாளாக இருக்கும். அந்த நாள் விரைவில் வரும் என்று நம்பிக்கையுடன் காத்திருப்போம்.

பாரக் ஹீசைன் ஒபாமா - தடுமாறுவாரா? தடம் மாற்றுவாரா?



உலகமே ஒருவரை உற்று நோக்கினால் என்னவாகும்?
இன்று அமெரிக்க அதிபராக பதவி ஏற்றிருக்கும் ஒபாமாவைக் கேளுங்கள், பதில் சொல்லுவார்.

1861ல் ஆபிரகாம் லிங்கன் பயன்படுத்திய பைபிள் சாட்சியாக, அமெரிக்காவின் 44வது அதிபராக பதவிப் பிரமாணம் எடுக்கும்போது, பாரக் ஹீசைன் ஒபாமா, ஒரு கணம் தடுமாறித்தான் போனார்.

கிட்டத்தட்ட பத்து இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் முன்னிலையில், வாஷிங்டன் சதுக்கத்திற்கு எதிரிலிருந்து காப்பிடல் மாலில் சில மணி நேரங்களுக்கு முன்னால் ஒபாமா அமெரிக்க அதிபராக பதவி ஏற்றார், அல்லது சுமையை ஏற்றார்.

"இன்றைக்கு நம் முன்னால் இருக்கின்ற சவால்கள் அத்தனையும் நிஜம்" , தனது ஏற்புரையில் ஒபாமா அழுத்திச் சொன்னது இதைத்தான். போர், வேலையின்மை, நிதி பற்றாக்குறை போன்ற காரணங்களால் தடுமாறிக் கொண்டிருக்கும் அமெரிக்காவை ஒபாமா எப்படி காப்பாற்றுவார் என்று உலகமே ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் போல பார்த்துக்கொண்டிருக்கிறது.

"நம்மை அச்சுறுத்தும் சவால்கள் பல. அவைகளை ஒரு குறுகிய காலத்தில் வெல்லுவது கடினம். ஆனால், இது அமெரிக்கா. சவால்கள் தோற்கடிக்கப்படும்", என்று எச்சரிக்கையும், நம்பிக்கையும் கலந்து ஏற்புரையாற்றினார் ஒபாமா.


ஆனால் "சவால்களை குறுகிய காலத்தில் பிரச்சனைகளை சமாளிக்க முடியாது என்று கவலைப்பட ஆரம்பித்திருக்கும் ஒபாமா, பதவி ஏற்கும் போதே சில நிமிடங்களை இழந்துவிட்டார்"

ஒரு ஆப்பிரிக்க தந்தைக்கும், வெள்ளைக்கார அம்மாவுக்கும் பிறந்த 47வயது ஒபாமா, அவருடைய மனைவி லிங்கனின் பைபிளை ஏந்தியிருக்க,பதவி ஏற்கும்போது குறிப்பிட்ட நேரம் கடந்து சில நிமிடங்கள் தாமதமாகியிருந்தது.

வழக்கத்திற்கு அதிகமான மக்கள் கூட்டம், வழக்கத்திற்கு அதிகமான எதிர்பார்ப்பு, வழக்கத்தை மீறி ஒரு கருப்பின மனிதன் அமெரிக்க ஜனாதிபதி என பல வழக்க மீறல்களுடன் உலகத்தின் ராஜாவாகியிருக்கிறார் ஒபாமா. வழக்கமாக எல்லா அமெரிக்க ஜனாதிபதிகளின் உரைகளிலும் உற்சாகம் கொப்பளிக்கும். ஆனால் ஒபாமாவின் உரையில் அது மிஸ்ஸிங்.

"But he downplayed deliberately"
"NO..he is already tensed"
என்று மீடியாக்கள் வழக்கம் போல வார்த்தைகளை அவரவர் பார்வையில் கூறு போட ஆரம்பித்துவிட்டன.


"அரசு மயமாக்கல், கல்வி, மாற்று எரிசக்தி, நவீன ஆனால் மலிவான தொழில் நுட்பம், இவைகளை முன்னிலை படுத்தி வேலை வாய்ப்பை பெருக்குவதுதான் உடனடி இலக்கு". அதற்காக கடுமையான ஆனால் துரிதமான “bold and swift” நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

மக்களிடம் ஓட்டு கேட்டு சென்ற போதும் கொஞ்சம் கடுமையாகத்தான் பேசினார். "அரசாங்கமே அனைத்தையும் செய்யாது. ஆனால் நிச்சயமாக அதற்கு ஒரு தனி மனிதனை விட சக்தி அதிகம். அரசாங்கத்தால் ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வியும், சுத்தமான உணவும் குடிநீரும், மருத்துவ வசதிகளும், பாதுகாப்பான விரைவான சாலையும் வழங்க முடியும். அதை எனது தலைமையில் அமையும் அரசு செய்யும் என்றார்."

கிட்டத்தட்ட அதன் தொடர்ச்சியாக "இன்று முதல் எழுந்து நில்லுங்கள், பிரச்சனைகளை தூசு தட்டி கவனம் கொள்ளுங்கள், அமெரிக்காவை மீண்டும் உருவாக்குவோம். begin again the work of remaking America" என்று முழங்கினார்.

காலை 5 மணி முதலே ஒபாமாவுக்காக காத்திருந்த ஆப்பிரிக்க அமெரிக்க கூட்டம் ஆர்ப்பரித்தது. அவர் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் உரையாற்றியபோதிருந்த அந்த உணர்ச்சிக் கொந்தளிப்பு பதவி ஏற்பு விழாவில் நிச்சயம் இல்லை. ஆனாலும் உறைய வைக்கும் குளிரிலும், குளிரிலும் வெப்பத்தைக் கக்கிய அடர்த்தியான போக்குவரத்து நெரிசலிலும் மக்கள் கூட்டம் 'ஒபாமா...ஒபாமா' என்று கோஷமிட்டபடி காத்திருந்தது ஒரு வரலாற்றுப் பதிவுதான். குறிப்பாக ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் மிக நம்பிக்கையுடன், இவன் நம்ப ஆளு என்கிற தோழமையுடன் வந்திருந்தார்கள். கூட்டத்தின் பெரும் பகுதி அவர்கள்தான்.

முன்னாள் குத்துச்சண்டை வீரர் நோய்வாய் பட்டிருந்த நிலையிலும் குளிரை பொருட்படுத்தாமல் ஒபாமா பதவி ஏற்பு விழாவிற்கு வந்திருந்தார். போட்டோவில் அவரை அடையாளம் தெரிகிறதா பாருங்கள்.


வெளியே சிரித்தாலும், உள்ளுக்குள் ஒபாமாவின் வெற்றியை கேலி செய்து கொண்டும், சீக்கிரமே தோற்று வீழ்ந்துவிடுவார் என்று எதிர்கட்சிகளும், (2002ல் ஒபாமாவை கட்சி மாநாட்டு பந்தலுக்குள் விடாத)உள்கட்சி நிற வெறியர்களும் காத்திருக்கிறார்கள்.

அவர்களையும் தனது பேச்சில் இடித்துரைக்க மறக்கவில்லை ஒபாமா. 'எங்களை இழிவு படுத்துபவர்கள், தங்களது கால்களுக்கு கீழே நிற்க வழியில்லாமல் பூமியை நழுவ விட்டுக்கொண்டிருக்கிறார்கள்", என்றார்.

"இந்த அரசு பெரியதா சிறியதா என்பது முக்கியமல்ல. இந்த அரசு செயல் படுமா? இதுதான் இன்று உள்ள மிக முக்கியமான கேள்வி. இந்த அரசு நல்ல சம்பளத்துடன் வேலை தந்து குடும்பங்களை வாழ வைக்குமா? வயதான காலத்தில் நல்ல ஓய்வூதியம் தருமா?" இந்த கேள்விகளுக்கு விடைதருவதுதான் நமது செயல் திட்டம் என்றார்.


ஒபாமாவின் பதவி ஏற்பு விழாவிற்கு வந்த மக்கள் கூட்டம் ஒரு கின்னஸ் சாதனையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சாலைகளும், சுரங்கப்பாதைகளும் நிரம்பி வழிந்தன. எங்கும் கார்களும், மனிதத்தலைகளும் குளிருக்கு அஞ்சாமல் பெருகிக் கொண்டே இருந்தன. பலர் கார்களை பல கிலோ மீட்டர்களுக்கு முன்பே நிறுத்திவிட்டு நடந்தே வந்தார்கள். காலை 5.30 மணியிலிருந்து 8 மணிக்குள்ளாக இரண்டரை மணி நேரத்திற்குள் கிட்டத்தட்ட நான்கு இலட்சம் பேர் சில சுரங்கப் பாதையை பயன்படுத்தினார்களாம். காலை பத்து மணி அளவில் ஒரு சிறிய விபத்து பல மைல்களுக்கு போக்கு வரத்தை நிறுத்தியதாம்.

விழாவில் பிரார்த்தனை நேரத்தின் போது பிஷப் T.D. Jakes, ஒரு பைபிள் வாசகத்தை வாசித்தார். “In time of crisis, good men must stand up”; “You cannot change what you will not confront,” and “You cannot enjoy the light without enduring the heat.” பிரச்சனைகள் தலை தூக்கும்போது நல்லவர்கள் துணிந்து நிற்க வேண்டும்.நேருக்கு நேர் சந்திக்காமல் நாம் எதையும் மாற்ற முடியாது. வெப்பத்தை சகித்துக் கொள்ளாமல் வெளிச்சம் பெற முடியாது"

ஒபாமா "Change" என்கிற மந்திர வார்த்தையைச் சொல்லி ஆட்சியை பிடித்திருக்கிறார். பதவிப் பிரமாணத்தின் போது ஏற்பட்ட சிறு தடுமாற்றம் தொடருமா? தடுமாற்றம் மடியுமா?

Bay of Pigs - மூக்குடைத்துக் கொண்ட அமெரிக்கா - 50 ஆண்டுகளை கடந்த சுதந்திர கியூபாவிற்கு வாழ்த்துக்கள்.

Bay of Pigs - மூக்குடைத்துக் கொண்ட அமெரிக்கா - 50 ஆண்டுகளை கடந்த சுதந்திர கியூபாவிற்கு வாழ்த்துக்கள்.

1961ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி கியூபாவின் தெற்கு பகுதியில் உள்ள Bay of Pigs என்ற இடத்தின் மீது கியூபாவில் இருந்து நாடுகடத்தப் பட்டு அமெரிக்காவில் தஞ்சம் புகுத்தவர்களால் ஒரு படையெடுப்பு நிகழ்த்தப் பட்டது. இதற்கு திட்டம் வகுத்து, நிதியுதவி, ஆயுத உதவி மற்றும் பயிற்சி அளித்தவர்கள் சாட்சாத் அமெரிக்க உளவு நிறுவனமான சி ஐ ஏ தான். Playa Girón என்ற கடற்கரையில் வந்திறங்கிய அமெரிக்க ஆதரவு புரட்சிப் படையை சோவியத் மூலம் பயிற்சியும் ஆயுதபலமும் அளிக்கப் பட்ட கேஸ்ட்ரோவின் ராணுவம் மூன்றே நாட்களில் வெற்றிகரமாக முறியடித்தது. இந்த படையெடுப்பு 19ஆம் தேதியே முடிவுக்கு வந்தது. இந்த புரட்சிப் படையில் சுமார் 1300 ( சிலர் 1400 என்று சொல்கிறார்கள் ) பேர் இருந்தார்கள். அதில் 93 பேர் (அல்லது 68 பேர்) கியூப ராணுவத்தால் கொல்லப் பட்டார்கள். மற்றவர்கள் போர்க் கைதிகளாக பிடிபட்டார்கள்.கியூப ராணுவத் தரப்பில் 87 பேர் இறந்ததாகவும் மேலும் பலர் காயமடந்ததாகவும் அரசாங்கம் அறிவித்தது. ( எண்ணிக்கைகள் பல இடங்களிலும் வேறு வேறாகவே இருக்கிறது )

பிடிபட்டவர்களில் சிலர் தூக்கிலிடப் பட்டதாகவும் , சிலர் சிறையிடைக்கப் பட்டதாகவும் தகவல்கள் உள்ளன. பின்னர் 1962 டிசம்பர் 21ம் தேதி கேஸ்ட்ரோவும் ஜேம்ஸ் பி டொனொன் என்ற அமெரிக்க வழக்கரிஞறும் கையெழுத்திட்ட ஒப்பந்ததின் படி 53 மில்லியன் டாலர் மதிப்பிலான உணவு மற்றும் மருந்துப் பொருட்களுக்கு பதிலாக 1113 கைதிகள் ஒப்படைக்கப் பட்டிருக்கிறார்கள். இந்த பணம் அமெரிக்காவின் நன்கொடை மூலம் வசூல் செய்யப் பட்டதாம்.

கென்னடிக்கு முன்பு இருந்த குடியரசுத் தலைவரால் திட்டமிடப் பட்டிருந்தாலும் கென்னடி பொறுப்பேற்ற பின் நடந்த நடவடிக்கை என்பதால் அவர் நிர்வாகத்திற்கு பெரும் கெட்டப் பெயர் பெற்றுத் தந்த இந்த தோல்விக்கு பொறுப்பேற்று சிஐஏவின் இயக்குனர் உள்ளிட்ட சில உயரதிகாரிகள் ராஜினாமா செய்ய வைக்கப் பட்டிருக்கிறார்கள்.

ஃபிடல் கேஸ்ட்ரோ தலைமையிலான புரட்சிபடை கியூபாவை கைபற்றிய சில ஆண்டுகளிலேயே இந்த நடவடிக்கை நிகழ்த்தப் பட்டது. ஆனாலும் சோவியத் உதவியில் ஓரளவு பலமான ( அரசு எதிர்ப்பு புரட்சிப் படைகளை எதிர்க்கும் அளவிற்கும் அதிகமாக )ராணுவத்தைக் கொண்டிருந்த கியூபா, இதை மூன்றே தினங்களில் முடிவுக்குக் கொண்டு வந்தது. அதன் பிறகு வேறு வழி இல்லாமல் சில பல குற்றச் சாட்டுகளை சுமத்தி கியூபாவின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை அமல்படுத்தி தொடர்ந்துக் கொண்டிருக்கிறது.

ஆனாலும் இன்று உலகிலேயே மிகச் சிறந்த சுகாதார வசதியும் கல்வி அறிவும் கொண்ட நாடாக கியூபா திகழ்கிறது. 37 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலை உலகிலேயே கியூபாவில் மட்டுமே உண்டு. கியூபாவின் மருத்துவர்கள் உலகிலேயே மிகச் சிறந்தவர்களாக உலக சுகாதார மையத்தால் அங்கீகரிக்கப் பட்டுள்ளது.

புரட்சிக்கு முன்னர் கியூப மக்களின் சராசரி வயது 58. இப்போது 78. குழந்தைகள் இறப்பு விகிதமும் 10 மடங்கு குறைந்திருக்கிறது. 1000 பேருக்கு 6 மருத்துவர்கள் உள்ளனர். இது அமெரிக்காவைவிட இரண்டு மடங்கு அதிகமாம். மேலும் உலகம் முழுதும் சேவை செய்ய தங்கள் மருத்துவர்கள் 36,500 பேரை கியூபா அனுப்பி இருக்கிறது. இது ஒட்டுமொத்த உலக நாடுகள் அனுப்பிய மருத்துவர்களையும் விட அதிக எண்ணிக்கையாம்.


முடிஞ்சா இதையும் படிங்க ............................

CASTRO'S ASCENT TO POWER

1952: Castro runs for parliament, but elections are called off after Gen. Fulgencio Batista overthrows Cuba's government on March 10.

July 26, 1953: Castro, 26, leads a small rebel group in an attack on a military barracks aimed at inspiring an uprising against Batista. The attack fails; Castro later is arrested and sentenced to 15 years in prison.

May 15, 1955: Castro and his brother Raul are freed under an amnesty plan. They later organize a guerrilla group called the 26th of July Movement, named after the 1953 attack.

Jan. 1, 1959: Fidel Castro's guerrilla efforts succeed as Batista flees Cuba and Castro's rebels take power.

February 1960: Soviet Deputy Prime Minister Anastas Mikoyan visits Cuba and signs sugar and oil deals, the first of many pacts over the next 30 years.

June: Cuba nationalizes U.S.-owned oil refineries after they refuse to process Soviet oil.

October: The USA bans exports to Cuba, besides food and medicine.

April 16, 1961: Castro declares Cuba a socialist state. The next day, 1,297 Cuban exiles supported by the CIA invade Cuba at the Bay of Pigs to try to inspire an overthrow of Castro's regime. The effort collapses two days later.

Jan. 22, 1962: Cuba is suspended from the Organization of American States; Cuba calls for armed revolt across Latin America.

Feb. 7: The USA bans Cuban imports.

October: President Kennedy orders a naval blockade of Cuba to force the removal of Soviet nuclear missiles. Soviets agree to remove missiles; Kennedy agrees not to invade Cuba.

March 1968: Castro's government takes over almost all private businesses other than small farms.

March 18, 1977: President Carter ends ban on U.S. travel to Cuba.

April 1980: Refugee crisis starts at Mariel port as Cuba says anyone can leave the country. About 125,000 Cubans flee by the end of September.

April 19, 1982: President Reagan reinstates ban on U.S. travel to Cuba.

April 1986: Castro, responding to anti-communist speeches by Reagan, calls him as "irresponsible as Hitler."

December 1991: Fall of the Soviet Union ends extensive aid and trade for Cuba; economic output drops 35% by 1994.

Jan. 21-25, 1998: Pope John Paul II visits Cuba.

June 23, 2001: Castro faints while giving a speech in searing sun, stunning Cubans and raising questions about his longevity.

Dec. 16: Shipments of corn and chicken arrive in Havana harbor, the first direct U.S. food sales to Cuba in nearly 40 years.

March 18, 2003: Cuba cracks down on dissidents it accuses of working with the U.S. government; 75 are sentenced to prison.

Oct. 20, 2004: Castro falls after a speech, shattering his left kneecap and breaking his right arm.

November 2004: Cuba releases a half-dozen political prisoners, a move widely seen as intended to court favor with the European Union.

July 27, 2006: In Castro's final appearance as president, he gives a four-hour speech urging Cubans to have patience that electrical problems will be solved.

July 31: Castro temporarily cedes power to his brother to recover from gastrointestinal surgery.

Aug. 13: Castro turns 80. Celebrations are postponed until December to give him time to recover.

Dec. 2: Castro fails to appear at military parade marking the 50th anniversary of Cuba's Revolutionary Armed Forces. He does not attend birthday celebrations.

March 28, 2007: Castro writes first essays in a series translated as "Reflections of the Commander-in-Chief" that give him a voice on international affairs while he remains off the public stage.

Dec. 18: Castro publishes essay saying he doesn't intend to cling to power forever and will not "obstruct the path of younger people."

Jan. 20, 2008: Castro is re-elected to parliament.

Feb. 19: Castro resigns as president. Five days later, Raul Castro becomes president but declares Fidel will remain "commander in chief."

May 7: President Bush says Cuba's post-Fidel Castro leadership has made only "empty gestures at reform" and rejects calls to ease U.S. restrictions.

Sources: The Associated Press, USA TODAY research


50 ஆண்டுகள் கடந்து சுதந்திர காற்று சுவாசிக்கும் கியூபாவிற்கு வாழ்த்துக்கள். வெற்றிநடை தொடரட்டும்..

பின் குறிப்பு : இந்தப் பதிவில் தவறுகள் இருந்தால் பின்னூட்டவும். திருத்திக் கொள்ளப்படும். ஏனெனில் “வரலாறு முக்கியம் அமைச்சரே” .. :)

நீதிபதிகள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா?

நீதிபதிகள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா?

மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியில் பெரிய சாதனைகள் என்றால் அதில் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கும் தகவல் அரியும் உரிமை சட்டத்திற்கும் முக்கிய இடம் உண்டு. இந்த சட்டத்தால் பல அழுகிய நாறிப் போன சமாச்சாரங்கள் எல்லாம் வெளிய வந்தது. அரசின் ரகசியமில்லாத எந்த ஆவணத்தின் விவரங்களையும் பொது மக்களால் அறிந்துக் கொள்ள முடிகிறது. இதை பற்றி ஏற்கனவே நிறைய பேர் எழுதிவிட்டதால் இப்போதைய விவகாரத்திற்கு வருவோம்.

சமீபத்தில், தகவல் அறியும் உரிமை அமைப்புக்கான கமிஷனர், நீதிபதிகளின் சொத்து விவரங்களையும் இந்த சட்டத்தின் படி யாராவது கேட்டால் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். உடனே நம்ம தலைமை நீதிபதி பாலகிருஷ்ணனின் ஈகோ டமார்ன்னு எகிறி குதிச்சி ருத்ர தாண்டவம் ஆடிடிச்சி. நாங்க எல்லாம் நீதிபதிகள். நாங்க யாருக்கும் எங்க சொத்து விவரங்களை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று திருவாய் மலர்ந்தார்.

ஏனுங்க சொல்ல மாட்டிங்க அப்டின்னு கேட்டதுக்கு, “ நீதிபதிகள் நியமனம் மாதிரியான விவரங்களை நான் சுப்ரீம் கோர்ட் பதிவாளரிடம் கூட சொல்வதில்லை. நீதிபதிகள் தங்கள் சொத்து விவரங்களை என்னை நம்பி ஒப்படைத்திருக்கிறார்கள். அதை வெளியே சொல்வது நம்பிக்கை துரோகம் “ என்றெல்லாம் சொல்லி இருக்கிறார். அட என்னங்க இது வம்பா போச்சி.. மக்கள் என்ன நீதிபதிகளின் வீட்டு விவகாரத்தையும் சொந்த கஷ்ட நஷ்டங்களையுமா கேக்கறாங்க. சொத்து விவரங்களைத் தானே. அரசாங்க அமைப்பின் அங்கத்தினர் என்ற வகையில் நீங்களும் இந்த சட்டத்திற்கு கட்டுபட்டவர்கள் தான்.

மேலும் , நீதிபதிகளின் மீதான நம்பிக்கை இப்போதெல்லாம் குறைந்து வருகிறது. நீதிபதிகளுக்கு பணவெறி பிடித்து ஆட்டுவதும் சமீக காலங்களாக வெளிவந்துக் கொண்டிருக்கிறது. கீழ்க் கோர்ட்டுகளில் நீதிபதிகள் கவர் வாங்குவது போன்ற குற்றச் சாட்டுகள் ஏற்கனவே வந்துக் கொண்டிருக்கிறது. ஆகவே நீதிபதிகளின் சொத்து விவரங்களை வாங்கி அதை ஆவணமாக தலைமை நீதிபதி வைத்திருக்கிறார். அந்த ஆவணங்களில் உள்ள விவரங்களை மக்கள் கேட்க்கும் போது தெரியபடுத்துவது தலைமை நீதிபதியின் கடமையே. சட்டத்தின் முன் அனைவரும் சமம்தான். இதை நிலைநாட்டும் நீதிபதிகள் இதற்கு முன்னாதாரணமாக இருக்க வேண்டுமே ஒழிய தங்களுக்கே உத்தரவா என்ற தலைக்கனத்தில் இருக்கக் கூடாது.

நட்புக் காலங்கள் - எழுதியவர் யாரோ?

நட்புக் காலங்கள் - எழுதியவர் யாரோ?












இதை எழுதிய அன்பர்/அன்பி யார்னு தெரிஞ்சா சொல்லுங்க.. அவங்க பேர போட்றலாம்னன். :)

-----
03.11.2007
இந்த கவிதைகள் இடம் பெற்றிருப்பது அண்ணன் பாவலர் அறிவுமதியின் கவிதை நூலான நட்புக்காலம். 2000 ஆண்டு வெளிவந்த நூல்.
தகவல் : திரு. முத்துகுமரன். நன்றி.

Counterfeit Card உஷாரய்யா உஷாரு!

Counterfeit Card உஷாரய்யா உஷாரு!

இப்போ எல்லாம் Credit Card இல்லாதவங்க ரொம்ப கம்மி தான். அது இல்லாத சிலர் கூட தேவை இல்லாத பயத்தால தான் வாங்காம இருக்காங்க. ஆனா உண்மையில் அது ரொம்பவும் உபயோகமானது தான். அதுல முக்கியமான மேட்டர் இன்னான்னா.. நம்ம மனசும் கட்டுப்பாடா இருக்கோனும். சரி மேட்டர்க்கு வரேன். இந்த கடன் அட்டைகளை பல வகையிலும் மக்கள் தவறா பயன்படுத்திட்டு இருந்தாங்க. இப்போ புது மாதிரி பயன்படுத்தறாங்க.

அதாவது... ஒரு வகை நவீன கருவி பயன்படுத்தி நமது Debit Card அல்லது Credit Cardஐ Scan செய்து அதன் காந்த காகிதத்தில் உள்ள ரகசிய குறியீடுகளை கண்டுபிடித்து அதே போல் வேறு அட்டை தயாரித்து பயன் படுத்துகிறார்கள். இந்த முறைகேடான அட்டைக்கு Counterfeit Payment Card என் பெயர். இதை வணிக மையங்களில் பயன்படுத்தி பொருட்களை வாங்கி விட்டு நம் தலையில் கை வைக்க வைத்துவிடுகிறார்கள். கடன் அட்டை எண்ணை திருடி ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்கினால் கண்டுபிடிப்பது சுலபம். அதில் பொருளை ஒப்படைக்க அவர்கள் விலாசம் கொடுத்தே ஆகவேண்டும். ஆகவே அதை வைத்து சுலபமாக கண்டுபிடித்து விடலாம். அதே போல் கடன் அட்டையை திருடி பயன்படுத்த முயன்றால், திருட்டு கொடுத்தவர் சம்பத்தபட்ட நிறுவனத்தில் புகார் அளித்து அட்டையை செயல் இழக்கச் செய்ய முடியும். ஆனால் இந்த மாதிரி போலி அட்டைகளை வைத்து நேரடியாக பொருட்களை வாங்கும் போது சரியான முகவரி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆகவே கண்டுபிடிப்பது கடினம். கிட்டத்தட்ட கண்டுபிடிக்கவே முடியாது என்றே சொல்லலாம். ஆகவே இப்போது இந்த மாதிரி போலியாக தயாரித்த அட்டைகளின் மூலம் நடக்கும் முறைகேடுகள் மிக வேகமாக பரவி வருகிறது.

சரி... Credit Card or Debit Card தான் நம்ம கிட்ட தானே இருக்கும். அத எப்படி யாரோ ஒருத்தர் ஸ்கேன் பண்ண முடியும்னு உங்களுக்கு தோனும்.... அதான் இருக்கவே இருக்கோமே சோம்பேரிகளும் வெத்து பந்தா வீராசாமிகளும். ஹோட்டல் போய் பெயர் தெரியாத கண்டதையும் சாப்ட வேண்டியது. அது சில நூறுகள் அல்லது சில ஆயிரங்களில் வந்து நிற்கும்... சாப்டு முடிஞ்சதும் சேவையாளர் பில் குடுத்ததும் அவரிடமே க்ரெடிட் கார்ட் குடுத்து விடுவோம். பெட்ரோல் போட்டாலும் இதே நிலை. பெட்ரோல் போட்டவர்டமே கார்டை குடுத்து விடுவோம். கார்டின் எண் மற்றும் ரகசிய எண்ணை(CVC-Card Verification code) குறித்து வைத்துக் கொள்ள நல்ல சந்தர்ப்பம் குடுப்போம். நம் அட்டையை ஸ்கேன் எடுக்க இந்த சந்தர்ப்பம் போதுமே..இப்போது இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தான் போலி அட்டைகளை தயாரிக்கிறார்கள்.

ஆகவே மக்களே.... உங்கள் கடன் அட்டையை எந்த சூழ்நிலையிலும் யாரிடமும் குடுக்காதிங்க. பணம் செலுத்தும் இடத்திற்கு நீங்களே சென்று கடன் அட்டையை குடுத்து உங்கள் முன்னிலையில் பயன்படுத்தும் படி பார்த்துக்கொள்ளுங்கள். அது கடையோ ,ஹோட்டலோ, பெட்ரோல் பங்கோ.. எதுவாக இருப்பினும்...

சில டிப்ஸ்....
1. Credit Card Billing தேதியை உங்கள் வசதிக்கு ஏற்ப முதலில் மாற்றிக் கொள்ளுங்கள். உங்களுக்கு எந்த தேதியில் பணம் வருமோ அந்த தேதியில் பில் வரும் படி மாற்றிகொள்ளுங்கள்.

2. க்ரெடிட் கார்ட் மூலம் பொருட்கள் வாங்கும் போது வரும் பில்களை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். கார்ட் பில் வந்ததும் அதை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

3.மிக முக்கியம். கண்ட நாட்களிலும் கடன் அட்டையை பயன்படுத்தாதிங்க. உங்கள் பில்லிங் தேதியில் இருந்து 5 நாட்கள் வரையில் மட்டுமே பயன்படுத்டுங்க. அப்போ தான் பணம் செலுத்த அதிக நாட்கள் கிடைக்கும். பெரும்பாலான நிறுவனங்கள் 55 நாட்கள் வரை அவகாசம் தருகிறார்கள். உதாரணத்திற்கு .... உங்கள் பில்லிங் தேதி 1 - 30 என்று வைத்துக் கொள்வோம். 1ம் தேதியில் இருந்து பணம் செலுத்தும் நாள் கணக்கிடப் படும். 1ம் தேதியில் இருந்து 55 நாட்கள் என்றால் அடுத்த மாதம் 25ம் தேதி போல் உங்களுக்கு Due Date வரும்... அது.. நீங்கள் 1ம் தேதி வாங்கி இருந்தாலும் சரி அல்லது 30ம் தேதி வாங்கி இருந்தாலும் சரி. ஆகவே நீங்கள் 1 முதல் 5ம் தேதிக்குள் அட்டையை பயன்படுத்தினால் 50 முதல் 55 நாட்கள் வரை அவகாசம் கிடைக்கும். ஒரு வேளை 25 அல்லது 30ம் தேதி பயன்படுத்தினால் 30 முதல் 25 நாட்கள் வரை தான் அவகாசம் கிடைக்கும். அதுவே 40 நாட்கள் மட்டும் அவகாசம் அளிக்கும் வகையிலான கடன் அட்டையாக இருந்தால் 10 அல்லது 15 நாட்கள் தான் அவகாசம் கிடைக்கும். ஆகவே ப்ளான் பண்ணாம எதையும் பண்ணப்படாது.

4. அதிக கடன் வசதிக்கு ஆசைப்பட்டு கோல்ட் , ப்ளாட்டினம் கார்டிகளை வாங்காமல் குறைந்த கடனே அளிக்கும் கட்டணம் வசூலிக்காத இலவச அட்டைகளையே வாங்கலாம்.

5. கடைகளில் அட்டையை பயன்படுத்துவதற்க்கு முன்னால் அதற்கு சர்வீஸ் சார்ஜ் எவ்வளவு வசூலிப்பார்கள் என்பதை கேட்டுவிடுங்கள். பெரும்பாலும் 2% இருக்கும். இது அனாவசிய செலவு. நாம் வாங்குவது பெரும் தொகையாக இருந்தால் சர்வீஸ் சார்ஜ் அதிகமாக இருக்கும் அதற்கு பணம் கொடுத்தே வாங்கிவிடலாம்.

6. சில வணிக மையங்களில் சலுகைகளும் உண்டு. 5% வரை Cash Back கிடைக்கும். சில அட்டைகளுக்கு வட்டி இல்லா தவணைகளும் உண்டு. கூச்சப் படாம இதை எல்லாம் விசாரிக்கனும். பணம் சம்பாதிப்பதை விட அதை சரியாக பயன் படுத்துவது தான் சாவாலான் விஷயம்.

7. கடைசி தேதிக்கு 4 நாட்கள் முன்பே காசோலை செலுத்த சொல்வார்கள்.சில நேரங்களில் தவிர்க்க முடியாத காரணங்களால் கடைசி தேதி அன்று தான் காசோலை குடுக்க முடியும். அதற்கு கடன் அட்டை நிறுவனம் கட்டணம் வசூலிக்கும். அதை கொடுக்காதிங்க. சண்டை போடுங்க. 4 நாட்களுக்கு முன்பே கொடுக்க வேண்டும் என்றால்.. அவர்கள் அவகாசமாக தரும் நாட்களுக்கு என்ன கணக்கு இருக்கு? அது 4 நாட்கள் குறைத்தது போல் ஆகாதா? ஆகவே இதை சொல்லி வாதம் பண்ணுங்க. அந்த கட்டணத்தை ரத்து செய்ய வாய்ப்பு இருக்கு. நான் பல முறை இப்படி பயன் பெற்று இருக்கிறேன்:))....

கொசுறு:
.............கடன் அட்டையை வைத்து பணம் கூட சம்பாதிக்கலாம். என் பில் தேதியில் இருந்து சில நாட்கள் கழித்து என் அட்டையை பயன்படுத்தி கொஞ்சம் Pure Gold வாங்கினேன். எனக்கு பில் கட்ட வேண்டிய நாள் அடுத்த மாதம் முதல் வாரம் தான். ஆனால் நான் வாங்கிய தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்திருக்கிறது. இப்போது அந்த தங்கத்தை விற்றால் எனக்கு கனிசமான பணம் மிஞ்சும். எந்த முதலீடும் இல்லாமல். இது எப்படி இருக்கு? :))
........ டிஸ்க்ரிப்ஷன் : இந்த பதிவு இதை பற்றி தெரியாதவர்களுக்கு மட்டுமே. பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கலாம். இந்த பதிவு தொடர்பான உருப்படியான தகவல் இருந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்க. இன்னும் தெரிஞ்சிக்கலாம்னேன்... என்ன நாஞ்சொல்றது? சரிதானே.. :P

போராடுவோம் போராடுவோம் இறுதி வரை போராடுவோம்..

போராடுவோம் போராடுவோம் இறுதி வரை போராடுவோம்..

இந்த கிரடிட் கார்டுங்கள பார்த்து எதுக்குத் தான் மக்கள் இப்படி பயப்படறாங்களோ தெரியலை. நாம ஒழுங்கா இருந்தா க்ரெடிட் கார்ட் மாதிரி நண்பன் வேற யாரும் இருக்க மாட்டாங்க. யாருக்கு எபடியோ .. ஆனா எனக்கு இவரு ரொம்ப நல்ல நண்பன்தாங்க... எந்த பொருள் வாங்கினாலும் 50 நாளைக்கு பணம் கட்ட டைம் வாங்கி தரான். எப்படி பார்த்தாலும் குறைந்த பட்சம் 30 நாள் டைம் வாங்கி தரான். ஆனா கடந்த சில மாதங்களாக இவனால கொஞ்சம் சிக்கல் ஆகிபோச்சிங்க... பணம் கட்டும் கெடுவுக்கு 4 நாட்கள் முன்னாடியே செக் தரனும்னு ப்ரிண்டட் ஸ்டேட்மெண்ட்ல சொல்லி இருக்காங்க. ஆனா நான் அதை எல்லாம் பாக்கறதில்ல. மெயில்ல வர ஸ்டேட்மெண்ட் மட்டும் தான் பாப்பேன். அதுல அந்த விவரம் இருக்காது.

சரி மேட்டருக்கு வருவோம்...
நான் எப்போவுமே கெடு தேதி அல்லது அதற்கு ஒரு நாள் முன்பு தான் காசோலை தருவது வழக்கம். ஆரம்பத்தில் இதனால் எனக்கு எந்த சிக்கலும் இல்லை. ஆனால் கடந்த சில மாதங்களாக தாமதக் கட்டணம் என்று 350 ரூபாய் போட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் நான் அதை கழித்தே பணம் செலுத்தினேன். ஒவ்வொரு மாதமும் தாமதக் கட்டணம் போட்டதுமில்லாமல் சென்ற மாதம் Finance Charge என்று ஒன்று புதியதாக போட்டிருந்தார்கள். வட்டியாக இருக்கலாம். நான் இதற்கு முன்பே சேவை மையத்தில் இதை பற்றி குறிப்பிட்டிருந்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. தாமதமாக என் காசோலை Collection ஆகி இருப்பதாக பதில் சொன்னார்கள். ஆனால் நான் ஒருமுறை கூட கெடு தேதிக்கு பின்பு காசோலை குடுத்ததில்லை. தாமதமாக அவர்களுக்கு பணம் போனதற்கு நான் காரணம் இல்லை.

Finance charge என்பதை பார்த்து கடுப்பானதில் வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு மெயில் அனுப்பினேன். ரொம்ப புத்திசாலித் தனமாக கடந்த 3 மாத அறிக்கையை குறிபிட்டு .. இவ்வளவு தொகை இருக்கிறது. நீங்கள் இவ்வளவு தான் கட்டி இருக்கிறீர்கள். ஆகவே தாமதக் கட்டணங்களும் ஃபினான்ஸ் கட்டணமும் வந்திருக்கு என்று பதில் அனுபினார்கள். என் கடுப்பை அதிகரிக்க வேண்டும் என்று அந்த பெண் சபதம் எதும் எடுத்திருப்பார் போல. உடனே நானும் அதற்கு பதில் அனுப்பினேன்.

யக்கா மாரியாத்தா..." நீங்கள் குறிப்பிட்டிருப்பது தாமதக் கட்டணத்தையும் சேர்த்து.. நான் அதை கழித்து கட்டி இருக்கிறேன். அநாவசியமாக நீங்கள் குறிப்பிடும் தாமதக் கட்டணத்தை கட்ட வேண்டிய அவசியம் இல்லை. வேண்டுமென்றால் என் காசோலைகளை சரிபார்த்துக் கொள்ளுங்கள். எனக்கு 50 நாள் அவகாசம் கொடுத்திருக்கிறீர்கள். ஆகவே நான் கடைசித் தேதியில் தான் காசோலை தருவேன். நான் கொடுப்பது உள்ளூர் காசோலை. இது பணமாக 24 மணி நேரத்துக்கு மேல ஆகாது. அப்படி இருக்க நான் ஏன் தாமதக் கட்டணம் செலுத்த வேண்டும். எந்த சூழ்நிலையிலும் நீங்கள் குறிப்பிட்டுள்ள தாமதக் கட்டணத்தையும் செலுத்த மாட்டேன். உங்கள் வங்கி எடுக்கும் எந்த நடவடிக்கையையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். மேலும் இந்த தேவையற்ற கட்டணங்களை திரும்ப பெறவில்லை என்றால் உடனே உங்கள் வங்கி அளித்துள்ள கடன் அட்டையை ஒப்படைத்துவிடுகிறேன்" என்று பதில் அனுப்பினேன்.

அடுத்த நாளே பதில் வந்தது. நீங்கள் எங்களின் மதிப்பு மிக்க வாடிக்கையாளர்... லொட்டு லொசுக்கு என்று அளந்து விட்டு, அந்த கட்டணங்கள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்கள். இன்று எனக்கு ஸ்டேட்மெண்ட் வரும் நாள். பார்த்தேன். அட.. சொன்ன மாதிரியே எல்லாவற்றையும் திரும்ப பெற்றுக் கொண்டார்கள் :)...

ஆகவே மக்களே .. இதனால் சகலமானவங்களுக்கும் தெரிவிப்பது இன்னான்னா.. பேராசையை கட்டுப் படுத்திக் கொண்டு கடன் அட்டையை சரியாகப் பயன் படுத்தினால் அதை விட நல்ல நண்பன் இருக்கவே முடியாது. ஆகவே கடன் அட்டையை பார்த்து பயப்படாதிங்க. நாம ஒழுங்கா இருக்கிறவரைக்கும் அவங்களால ஒன்னும் பண்ண முடியாது. கடன் அட்டை வழங்கிய நிறுவனம் "தவறான" கட்டணம் குறிப்பிட்டிருந்தால் கட்டாதீங்க.கேள்வி கேளுங்க... அவர்கள் என்ன நம்மை மிரட்டுவது.. நாம் அவர்களை மிரட்டுவோம்...ஜெயம் நமக்கே..

அஸ்கி புஸ்கி : இந்த பதிவை எழுதிமுடித்து எழுத்துப் பிழை திருத்த திரும்ப படித்த போது கொஞ்சம் டோண்டு பாணி பதிவாக தோன்றியது. இதில் சுய தம்பட்டம் அடிப்பது நோக்கம் அல்ல. எனக்கு நேர்ந்ததை உள்ளது உள்ளபடி சொல்லி கடன் அட்டை பற்றிய பயத்தை போக்குவதும் தவறை எதிர்த்தால் நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும் என்பதை வலியுறுத்தவுமே இந்த பதிவு. உங்களுக்கும் இது போன்ற அனுபவம் இருந்தால் பின்னூட்டத்தில் குறிப்பிடுங்கள். யாருக்காவது உதவலாம். ஹிஹி.. தலைப்பு கொஞ்சம் ஓவரா இருக்குல.. கண்டுக்காதிங்க.. :P

ஓட்டு போடுங்க சாமியோவ்..

தலைக்கவசம் போட வைத்த 25 ரூபாய்

தலைக்கவசம் போட வைத்த 25 ரூபாய்

நான் ஈரோட்டில் இருந்த 4 வருடங்களும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் தான் இருசக்கர வாகனம் ஓட்டிக் கொண்டிருந்தேன். பிறகு கோவையில் அலுவலகம் தொடங்க திட்ட்மிட்டதும், கோவையில் நம்ம தில்லாலங்கடி வேலை செல்லாது என்று ஓட்டுநர் உரிமம் பெற்றேன். நான் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டிக் கொண்டிருந்த போது ஒரு போக்குவரத்து/போக்காவரத்து காவலரும் என்னை விசாரித்ததில்லை. இரவில் திரைப் படம் பார்க்க செல்வது, நண்பர்கள் வந்தால் அவர்களை அழைத்துவர செல்வது, தொடர்வண்டி நிலையம் செல்வது என முக்கிய்மான எல்லா இடங்களுக்கும் அடிக்கடி சென்றிருக்கிறென். ஆனால் என்னிடம் ஓட்டுநர் உரிமமோ வாகனத்திற்கான சான்றிதல்களோ எந்த அலுவலரும் விசாரித்ததில்லை. பல சமயங்களில் நான் செல்லும் சாலைகளில் இரவில் வாகன தணிக்கையில் காவலர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால் என்னை யாரும் நிறுத்தியதில்லை. இன்றுவரை அதற்கான காரணம் எனக்குத் தெரியவில்லை. பார்ப்பதற்கு மிக நாகரிகமானவன் போல் கூட இருக்க மாட்டேன். ஆனால் ஓட்டுநர் உரிமம் பெற்ற ஒரு வாரத்திற்குள் இரவு நேரத்தில் பேருந்து நிலையம் அருகில் ஒரு காவலர் என் வாகனத்தை நிறுத்தினார். அதான் உரிமம் இருக்கே. :).. நல்ல வேளை அவர் வாகனத்திற்கான சான்றிதல்கள் எதுவும் கேட்கவில்லை. கேட்டிருந்தால் சங்கு தான். :)

நாங்கள் கோவையில் அலுவலகம் தொடங்க ஆரம்பித்த சமயம் தமிழக அரசு , அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் உபயோகிக்க வேண்டும் என உத்தரவு போட்டது. ஓட்டுபவர் மட்டுமின்றி பின்னாடி அமர்ந்து வருபவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பது அரசாணை. அப்போது நான் தினமும் ஈரோட்டிலிருந்து கோவை வந்து அலுவலகம் மற்றும் சேமிப்புக் கிடங்கிற்கான இடம் தேர்வு செய்ய ஒரு இடைத்தரகர் மற்றும் என் நண்பர் ஒருவருடன் இரு சகக்ர வாகணத்தில் சென்று சரியான இடம் பார்த்துக் கொண்டிருந்தேன். வாகனத்தில் பின்னாடி அமர்பவரும் தலைக்கவசம் போட வேண்டும் என்பதால் நான் புது இருசக்கர வாகனம் வாங்கும் முன்பே தலைக்கவசம் வாங்கி விட்டேன். தினமும் அதை ஈரோட்டிலிருந்து பேருந்தில் வரும் போது கொண்டுவந்து கோவையில் வாகனத்தில் செல்லும் போது உபயோகிப்பேன்.

பிறகு சில நாட்களிலேயே அந்த சட்டம் திரும்பப் பெறப்பட்டுவிட்டது. ஆகவே நான் தலைக்கவசம் பயன்படுத்துவதையும் தவிர்த்துவிட்டேன். பிறகு கோவை வந்து புதிய வாகனம் வாங்கும் போது அவர்கள் கொடுத்த தலைக்கவசமும் திருப்பிக் கொடுத்துவிட்டேன். நான் ஆரம்பத்தில் வாங்கியதை வைத்திருந்தேன். ஆனால் அதை அணிந்து வாகனம் ஓட்டியதே இல்லை. வாகனம் வாங்கும் முன்பே தலைக்கவசம் வாங்கிவன் நான் ஒருவனாகத் தான் இருப்பேன்.

சமீபத்தில் திருப்பூர் சென்றுவிட்டு என் இருசக்கர வாகனத்தில் வந்துக் கொண்டிருந்தேன். அப்போது பின்னாடி அமர்ந்திருந்த எங்கள் விற்பனை அலுவலர் தான் வண்டி ஓட்டுவதாக கூறினார். சரி.. பாசக்கார பய.. ரொம்ப தூரம் வாகனம் ஓட்டியதில் நான் களைப்பாக இருப்பேன் என்று எண்ணி கேட்கிறார் போலும் என்று நினைத்து அவரை ஓட்ட சொன்னேன். கொஞ்ச தூரம் வந்ததும் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் எதிரில் மூன்று போக்குவரத்துக் காவலர்கள் எங்களை நிற்க சொன்னார்கள். எப்போதுமே நம்ம பாசக்கார பயலுக நேரம் காலம் தெரியாமல் சொதப்புவதில் நம்மையே மிஞ்சுபவர்களாச்சே என்று நினைத்துக் கொண்டு, வாகனத்தில் இருந்து இறங்குவதற்கு முன் அவரிடம் உரிமம் உள்ளதா என விசாரித்தேன். நான் நினைத்த மாதிரியே நடந்தது. உரிமத்தை தொலைத்துவிட்டாராம். அதான பார்த்தேன். சரி கொஞ்சம் முன்னாடி நிறுத்துங்கள் என்று சொல்லிவிட்டு அவரை அங்கேயே இருக்க சொல்லிவிட்டு வாகனத்தில் இருந்த சான்றிதல்களை எல்லாம் எடுத்துக் கொண்டு நான் காவல் அதிகாரிகள் அருகில் சென்றேன். எங்களை நிறுத்திய அதிகாரி மற்றவர்களை ஓரங்கட்டுவதில் மும்முரமாய் இருந்தது எனக்கு வசதியாய் இருந்தது. ஆவணங்களை சரிபார்த்துக் கொண்டிருந்த அதிகாரி அருகில் சென்று பவ்யமாய் எல்லா ஆவணங்களியும் கொடுத்தேன். பதிவு சான்றிதல், வாகன காப்பீட்டுச் சான்றிதல் எலலாம் சரியாக இருந்தது. அடுத்து?.. வேறென்ன.. ஓட்டுநர் உரிமம் இருக்கா என்று வினவினார். ஹிஹி.. ஓட்டியவ்ரிடம் தானே இல்லை.. உட்கார்ந்து வந்த என்னிடம் இருக்கே.. ஒருவழியாய் அன்று தில்லாலங்கடி வேலை செய்து தப்பித்தேன். அது வரை நான் அபராதம் என்று ஒரு பைசாவும் கட்டியதில்லை.

இதெல்லாம் பழங்கதை.. இப்போ கோவை மாநகர காவல்துறை ஆணையர் மஹாலி அவர்கள் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்தே ஆக வேண்டும் என்று உத்தரவு போட்டுவிட்டார். அப்படியும் நான் அதை பின்பற்றாமல் தான் சுற்றிக் கொண்டிருந்தேன். சில தினங்களுக்கு முன் இரவு ஒரு பாசக்கார முகவர் அவராகவே அழைத்தார் காசோலை தருவதற்கு. அது கனவா நனவா என்ற ஆச்சர்யத்தில் சென்ற எனக்கு நிஜமாகவே காசோலை அளித்து திக்குமுக்காட வைத்தார். அந்த மிதப்பிலேயே வந்துக் கொண்டிருந்த என்னை லட்சுமி ஆலைகள் தாண்டி ஒரு காவல் துறை அக்கா நிறுத்தவிட்டார். நான் நல்ல பிள்ளையாய் வாகன ஆவணங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு அருகில் போய் நின்றேன். அதற்கு அந்த அக்கா “ அதெல்லாம் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் தம்பி. தலைக்கவசம் எங்கே?” என வினவினார். அங்க அக்காவை பார்ப்பதற்கு மிக நல்லவராகவே தெரிந்தார். இத்தனை ஆண்டுகால சந்தைப் படுத்துதல் துறையில் இருந்து நான் கற்றுக் கொண்ட ஒரே சிறப்பம்சம் இது தான். யாராக இருந்தாலும் முகம் பார்த்ததுமே அவர் எப்படிப் பட்டவராக இருபபார் என ஓரளவுக்கு கணித்து விட முடிகிறது. ஆஹா.. மாட்டிக்கிட்டயே காந்தி.. என்று நினைத்த வாறே “ அக்கா.. மன்னித்துக் கொள்ளுங்கள் அக்கா. காலையில் இருந்து வாகனம் ஓட்டிக் கொண்டிருக்கிறேன். அப்போது தலைக்கவசத்துடன் தானக்கா ஓட்டினேன். இப்போது வீட்டிலிருந்து ஒரு நண்பரை பார்ப்பதற்காக வந்தேன். இப்போது தான் தலைக்கவசத்தை வீட்டில் வைத்துவிட்டு வந்தேன். இதுவரை நான் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதே இல்லை. இந்த ஒருமுறை மட்டும் விட்டுவிடுங்கள் அக்கா. இனி தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்ட மாட்டேன்..” என்று கூச்சநாச்சமே இல்லாமல் பொய் சொன்னேன். நிச்சயம் அபராதம் கட்டியாக வேண்டும் என்றாலும் கட்டிவிடுகிறேன். தவறு என்னோடது தானே என்று மிக நல்லவன் போல் நன்றாகவே நடித்தேன். அவரும் அதை நம்பியது போல் தான் தெரிந்தது. இன்னொருவரும் இதே போல் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் அவர் அபராதம் கட்ட 100 ரூபாய் இல்லை என்று அளந்து விட்டுக் கொண்டிருந்தார். பிறகு அந்த அக்கா என்னைப் பார்த்து “ பாருங்க இவரிடம் 100 ரூபாய் இல்லையாம். கோவைக்காரங்க சட்டைப் பையில் 100 ரூபாய் கூட இல்லாமல் சுற்றுவார்களாம். இதை நான் நம்பனுமாம்” என்று சொனனார். சரி இருங்க என்று சொல்லிவிட்டு மற்ற எல்லாரிடமும் அபராதம் வசூலித்து தவறாமல அதற்கான ரசீதையும் கொடுத்துக் கொண்டிருந்தார். ஆஹா.. நம்மை இன்னுமா இந்த உலகம் நம்புகிறது. விட்டுவிடுவார் போல் இருக்கே என்று நினைத்து ஓரமாக நின்றுக் கொண்டேன். அந்தக் கூட்டத்தில் ஒருவருக்கு அபராதம் போட்டு ரசீதும் எழுதிவிட்டார்கள் அந்த அக்கா. ஆனால் அந்த தோழரோ 50 ரூபாய் தான் இருக்கிறது. 100 ரூபாய் இல்லை என்று நிஜமோ பொய்யோ சொல்லிக் கொண்டிருந்தார். அவர் புலம்பலில் கடுப்பான அக்கா வாகன சாவியை கொடுத்துவிட்டு செல்லுங்கள். பணம் கொடுத்துவிட்டு வாகனத்தை எடுத்து செல்லுங்கள் என்று கோபமாக சொல்லிவிட்டார். இன்னும் சற்று நேரம் இருந்தால் நமக்கும் ஆப்பு அடிப்பார் போல என்று நினைத்து “ அக்கா.. நான் வேண்டுமானால் அபராதம் செலுத்திவிடுகிறேன்.. நேரம் ஆகிறது “ என்று சொன்னேன். உடனே இன்னொரு நண்பரையும் என்னையும் பார்த்து அந்த 50 ரூபாய் தோழரை காண்பித்து இவருக்கு ஆளுக்கு 25 ரூபாய் கொடுத்துவிட்டு செல்லுங்கள். நான் ரசீது எழுதிவிட்டேன். இவர் 50 ரூபாய் மட்டும் கொடுத்தால் மீதம் 50 ரூபாய் நான் தான் கட்ட வேண்டும்.” என்றார். நான் 25 ரூபாயை அக்காவிடம் கொடுத்தேன் . ஆனால் அவர் அதை அந்தத் தோழரிடம் கொடுக்க சொன்னார். ஆஹா .. காவல் துறையில் இவ்வளவு நல்ல அக்காவா என்று நினைத்துக் கொண்டு அந்த தோழரிடம் 25 ரூபாய்க் கொடுத்து விட்டு அக்காவிர்கு நன்றி சொல்லி கிளம்பினேன்.

கிளம்பும் போது அக்கா சொன்னாங்க. “ நகரில் மொத்தல் 21 இடத்தில் இது போன்ற தணிக்கையில் காவலர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆகவே யாரும் தப்ப முடியாது. இனி தலைக்கவசம் இல்லாமல் வாகனம் ஓட்ட வேண்டாம். மீறினால் ஒரு நாளைக்கு குறைந்தது 100 ரூபாய் நீங்கள் அபராதம் கட்டுவது உறுதி” என்றார்

அவர் சொன்னது போலவே நகரில் எங்கெங்கு காணினும் தலைக்கவச சோதனைகள் நடந்துக் கொண்டிருக்கிறது. ஆனால் என்னை யாரும் நிறுத்தவில்லை. பின்ன.. தலைக்கவசம் இல்லாமல் ஓட்டினால் தானே நிறுத்துவார்கள். :))

பின்குறிப்பு : காலையில் இணையத்தில் என்னைக் கண்ட தாரணிபிரியா அக்கா “ டேய் தம்பி, என்னடா எப்போவும் அரசியல் பதிவா எழுதிட்டு இருக்க.. உன்னை திட்ட வேண்டும் போல் ஆசையா இருக்கு..ஒரு மொக்கை பதிவு போடுடா.. வந்து கும்மி அடிச்சிடறேன்” என்று பாசமாய் கேட்டதற்காகத் தான் இந்த மொக்கை.. எதுவாக இருந்தாலும் அவர திட்டிக் கொள்ளவும். :)

பிகு2 : என்னாலும் ஆங்கில சொற்கள் கலக்காமல் தமிழில் எழுத முடியும். :))
பிகு3 : ஆனாலும் எழுத்துப் பிழைகள் இல்லாமல் எழுத முடியாது. :))

மொக்கை போட்டவன்..

ஓட்டு போடுங்க சாமியோவ்..

சுப்ரமணியபுரம் சசிக்குமார்.. பருத்தித் தமிழ் வீரன் அமீர், எழுத்து வீரன் சாரு...

சுப்ரமணியபுரம் சசிக்குமார்.. பருத்தித் தமிழ் வீரன் அமீர், எழுத்து வீரன் சாரு...

சசிக்குமார்.. ஒரே படத்தின் மூலம் தமிழ்நாட்டின் முக்கிய இயக்குனர் ஆகிவிட்ட இவரின் வெற்றிக்குப் பின் இருக்கும் உழைப்பை அறிந்தவர்கள் ஆச்சர்யப்படமாட்டார்கள்..

சமீபத்திய வருடங்களில் தமிழ்நாட்டை திரும்பி பார்க்க வைத்த அல்லது புரட்டிப் போட்ட படங்கள் என்று குறிப்பிட்டுப் பார்த்தால்.. சேது, நந்தா, பிதாமகன், ராம், பருத்தி வீரன் இந்த படங்கள் அந்த லிஸ்ட்டில் இடம்பெறும்.. இந்த எல்லா படங்களிலும் துணை மற்றும் இணை இயக்குனராக பணியாற்றியவர்தான் சசிக்குமார்.. தன் இருப்பையும் பொறுப்பையும் மிகச்சுத்தமாகவும் சத்தமாகவும் சுப்ரமணியபுரம் படம் மூலம் முரசறைந்தவர் சசிக்குமார்..

அமீர் : ஈழப் பிரச்சனை குறித்த தம் குரலை ஆழமாக பதிந்தவர்..ராம் மூலம் கவனம் ஈர்த்தவர்.. என்பதை எல்லாம் தாண்டி.. மண்ணின் மனத்தையும் ரத்தத்தின் நிறத்தையும் அந்த பிசுபிசுப்போடு பருத்திவீரன் மூலம் உலகிற்கு உணர்த்தியவர்.. தமிழ் சினிமா அதிகம் எதிர்பார்க்கும் இயக்குனர்..

இவர்கள் இருவரும் பங்கேற்கும் நிகழ்ச்சி நாளை (7 1 09 புதன்கிழமை..) மாலை 6 மணியளவில் சென்னை புக் பாயிண்ட் அரங்கத்தில் நடைபெறுகிறது..

என்ன நிகழ்ச்சி??

எழுத்து வீரன்.. தமிழில் அதிகம் விமர்சிக்கப்படும் எழுத்தாளர் சாரு..ஏனெனின் அதிகம் வாசிக்கப்படுபவர் என்பதால்.. பிடித்தவர்கள் பிடித்ததற்காக வாசிக்கிறார்கள்.. பிடிக்காதவர்கள் விமர்சனத்திற்காக வாசிக்கிறார்கள்.. ஆக.. விமர்சனங்களும் விமர்சகைளும் பெற்றுக் கொண்டிருக்கும்.. தமிழ் எழுத்தில் தனக்கென ஒரு கட்டமைப்பை உருவாக்கிக் கொண்டுவரும்,கொண்டவருமான சாருநிவேதிதாவின் நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி..

இவர்கள் தவிர .. திரு மதன், திரு இந்திரா பார்த்தசாரதி,திரு பிரபஞ்சன்,திரு ந.முத்துச்சாமி திருமதி சிவகாமி, திருமதி தமிழச்சி தங்கபாண்டியன் ,திரு அழகிய பெரியவன், திரு சுதேசமித்திரன்..
என அவரவர் துறையின் ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சிக்கு பதிவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது..

இடம் : புக் பாயிண்ட் அரங்கம்..(ஸ்பென்ஸர் பிளாஸா எதிரில்) சென்னை..
நாள் : 7 1 2009 புதன்கிழமை
நேரம் : மாலை 6 மணி

அதைத்தொடர்ந்து கலாச்சார கலந்துரையாடல் வித் சாரு @ country club.. RA PURAM.
மேலும் விபரங்களுக்கு..

முரளி கண்ணன் : 9444884964

அனைவரும் வருக..

எங்க ஊரு ஜல்லிக்கட்டு..முடிஞ்சா..

எங்க ஊரு ஜல்லிக்கட்டு..முடிஞ்சா.. அணைஞ்சுக்கோவ்வ்வ்..

கிராமத்திற்கு, டிசம்பர் மாதம் முதல் வாரத்திலேயே பொங்கல் வந்துவிடும்.அதாவது ஜல்லிக்கட்டு பற்றிய பேச்சு.. தெருமுக்கில் மாட்டுவண்டி சாய்த்து வைக்கப்பட்டு, நேக்காவில் இரண்டுபக்கமும் குழந்தைகள் "ஏத்துலக்கடி இறக்குலக்கடி" ஆடிக்கொண்டிருக்க, இளவட்டங்கள் வண்டியிலும் அதன் பக்கத்திலும் அமர்ந்து பேச்சை ஆரம்பிப்பார்கள்.. பெரும்பாலும் ஒரு பெரிசு ஆரம்பிக்கும்..

"ஏனப்பா.. இந்த வருஷம் என்னா பண்றாங்ங்களாம் இவெங்க.."

"யாரு பெரிசு?"

"அதானாப்பா.. ஜல்லிக்கட்டு விடுறாங்களா, இல்ல மாடு பாவம்,கொம்பு படுதுனு நொட்ட சொல்லு சொல்லி கோர்ட்டுல விடக்கூடதுனு சொல்றாங்களா?"

"அட நீ ஒருபக்கம்.. பொங்கல் அன்னிக்கு நடத்தலாம்னு சொல்லிட்டாங்க.. பாதுகாப்பு பலமா இருக்குமாம்"

"ஒக்காலி என்ன பாதுகாப்பு குடுப்பாங்கலாம்.. என் செவல மாடு நிண்டு விளையாண்டுச்சுன்னா ஒரு பய நிக்கமாட்டாங்க.. பாதுகாப்பாம்ல பாதுகாப்பு.."

இப்படி ஆரம்பித்து வைக்கப்படும் ஜல்லிக்கட்டு பற்றிய பேச்சு.. கிட்டத்தட்ட ஜனவரி முடிந்தும் தொடரும்..

வருடம் பூர இதற்காகவே உசுப்பேற்றி வளர்க்கப்படும் காளைகள்.. தங்கள் குழந்தைகளை விட அதிக முக்கியத்துவம் கொடுத்து வளர்க்கப்படும் ஜல்லிக்கட்டு மாடுகள்.

"பிடிமாடு" ஆகிவிடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக.. மாட்டுக்காரர்கள் மெனக்கெடும் செயல்கள் அதிகம்.

கொம்பு சற்று வளைந்து இருக்கும் காளையை பார்த்து வாங்கி, தினமும் காலை மாலை இருவேளை குளிப்பாட்டுவார்கள்.. சூடு ஏறிவிடக்கூடாது என்பதற்காக. கடலைப்புண்ணாக்கும் பருத்தி விதையும் தினமும். மாலைவேளையில் ஊரிணி பக்கமாய் இருக்கும் மண்மேட்டில்,செம்மண்ணாய் இருந்தால் கூடுதல் விசேஷம், காளையை குத்த விடுவார்கள்.. கையில் இருக்கும் கயிறை இருவர் பிடித்திருப்பார்கள்.. ஒருவர் இழுக்க மற்றவர் தளர்த்த.. மாடு வெறி கொண்டு மண்ணை முட்டித் தூக்கும்.. ஜல்லிக்கட்டிற்கான பயிற்சி இது.அந்த தருணத்தில் அதன் மூக்கில் இருந்து வரும் கோபக்காற்றில் கீழே இருக்கும் மணல் பறந்து பயம் ஏற்படுத்தும்..

மாட்டு ஓனர் எந்த அரசியல் சார்புடையவர் என்பது மாட்டின் கொம்பில் இருக்கும் பெயிண்டில் தெரிந்து விடும்.

ஜல்லிக்கட்டு நெருங்க நெருங்க, மக்களின் நடமாட்டம் இல்லாத இடமாக பார்த்து மாட்டை பெரும்பாலும் தனிமையில் இருக்கும்படியே வளர்ப்பார்கள்.
"யாயாய்ய்ய் கண்ட்ரோழி" என்ற மந்திர வார்த்தையை உச்சரிக்க வேண்டியவர் உச்சரித்தால்தான் அடங்கும்.. வேறு யார் அருகில் சென்றாலும் கொம்பை சுழற்றும் சுழற்றில் ஐந்தாறு அடி பின்னோக்கி ஓடிவிடுவார்கள்.

மாட்டுக் கொட்டகையில் கீழே போடப்பட்டிருக்கும் பட்டியக்கல் சாதாரண கற்கலைப் போல இருக்காது.. மிக நேர்த்தியாக "கொத்திவிடப்பட்டிருக்கும்" பட்டியக்கல்லில் தான் மாடு நிற்கும்..அப்பொழுதுதான் வழுக்காது. அவ்வளவு நுணுக்கமாக வளர்க்கப்படும் இந்த காளைகள்..

மூக்குணாங்கயிறு என்பது தான் முக்கியமான கயிறு.. அதைப் பிடிக்கத் தெரிந்தவன் சிறுவனாக இருந்தாலும் பிடிப்பதில் இருக்கும் யுத்தியை வைத்து காளை மாடு பசுமாடுமாதிரி அமைதியாக செல்லும்.. அதாவது மூக்கணாங்கயிறை மேற்திசையில் ஏத்தி பிடிக்கவேண்டும்.. அப்படி பிடித்தால் மாடு பிடிப்பவரின் கன்ட்ரோலுக்கு வந்துவிடும்.

ஆனால் இது எல்லாம் குளிப்பாட்டும் பொழுதோ அல்லது தீனி வைக்கும் பொழுதோ தான்.. ஜல்லிக்கட்டு அன்று மூக்கணாங்கயிறை அறுத்து விடுவார்கள்.. இந்த மூக்கணாங்கயிறு அறுக்கும் பொழுதே அதற்குள் ஒரு பரவசம் ஏற்பட்டுவிடும்.. குத்த லைசன்ஸ் கொடுத்த மாதிரி அதற்கு.. அதனால்தான் மிக லாவகமாக வாடியின் வாசல் வரை வந்து சட்டாரென்று அறுத்து விடுவார்கள்..

வாடிவாசல்.. ஜல்லிக்கட்டிற்கு நான்கு நாட்கள் இருக்கும் பொழுதே "கமிட்டியாளர்கள்" ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தில் தான் இருப்பார்கள்..பலகைகளால் ஆன மேடை.. அதற்கு தெற்கில் கீழே.. பனைமரங்களாலும் இன்னபிற மரக்கட்டைகளாலும் ஆன வாடி.. ஒரு சமயத்தில் ஒரு மாடுதான் அதனுள் நிற்க முடியும்.. அங்கிருந்துதான் காளையை அவிழ்த்து விட வேண்டும்..சற்று இருள் சூழ்ந்த அந்த இடத்தின் குறுகலாக வாசல் வழியே பார்த்தால் ஜனத்திரள் முண்டியடித்துக் கொண்டு நிற்பது தெரியும்.. அதைப் பார்க்கும் பொழுதே மாட்டிற்கு கோபமும்,ஆக்ரோஷமும் லேசான பயமும் கலந்த கலவையாக.. இந்த உணர்ச்சிகள் எந்த மாட்டிற்கு அதிகம் ஏற்படுகிறதோ அதைப்பொறுத்து வாடி வாசலில் இருந்து வெளியேறும் பொழுது அதன் தாவல் உயரம் அமையும்.. மிகுந்த ஆக்ரோஷமான மாடுகள் இரண்டாள் உயரத்திற்கு கூட தவ்வி வெளியேறும்..அதுதவிர உள்ளே ஊத்தி விடப்பட்ட சரக்கின் அளவும் அதைத் தீர்மானிக்கும்..





ஜல்லிக்கட்டில் இந்த மாடுகள் எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் மாடுபிடி வீரர்கள்.. ஏகப்பட்ட உத்திகள் கையாண்டு மாட்டை அடக்குவார்கள்.. ராமராஜன் போல பேச்சிப் பேச்சி என்று பாடிக்கொண்டிருந்தால் டங்குவார் அந்துவிடும்.. அதைவிடக் கொடுமை ரஜினி படங்களில் காட்டுவார்களே.. கொம்பை இரண்டு கைகளாலும் பிடித்து உலுக்குவாரே..அப்படி எல்லாம் செய்யவே முடியாது..குத்திக் கிழித்துவிடும்..



மனோதத்துவ மருத்துவர்கள் தோற்றுவிடுவார்கள் இந்த பிடிவீரர்களின் முன்னால்.. மாட்டின் மனநிலை மற்றும் சூழல் அறிந்து இவர்கள் செயல்படுவது அறிவியலுக்கும் அப்பாற்பட்ட விசயம்.


மாடு பிடி நேக்கு என்பது.. வாடி வாசலில் மிகச் சாமார்த்தியமாக பதுங்கி அதாவது மாட்டின் கண்களுக்கு உடனே தெரியாத வண்ணம் பின்னால் இருந்து பதுங்கி நிற்க வேண்டும்.. வெளியேறும் மாடு தவ்வி ஓடினால்..முதல் தவ்வில் அதைத் தொடக்கூடாது.. இரண்டாவது மூன்றாவது தாவலில் அதன் தவ்வலின் உயரம் குறையும்.. அப்பொழுது அதன் கூடவே ஓடி,மிக முக்கியமாய் வலதுபக்கம் மட்டுமே.. ஓடி அது எங்கே தாவுகிறதோ அதனோடு தாவி சிமிழைப் பிடித்துக் கொண்டு அதன் உடம்போடு லாவகமாக பத்தடி வரை செல்லவேண்டும்.. மேலே பிடிக்கப்படும் தூரத்தை கயிறு கட்டி தெரிவித்திருப்பார்கள்.. அதுவரை பிடித்தாலே போதும்..இது சாதாரண வழி..






சில மாடுகள் நின்று விளையாடும்.. தெளிவான மாடுபிடிகள் இந்த காளைகளை அதிகம் பிடிக்க மாட்டார்கள்.. ஏனெனில் அதன் கொம்புகள் மிகக் கூர்மையாக செதுக்கப்பட்டிருக்கும்.. சில மாடுகள் தகரக்கொம்புகளோடு கூட வரும். நின்று விளையாடுவது என்றால் ஓடாமல் அந்த இடத்தில் நின்று சுற்றி கொண்டிருக்கும்..வலதுபக்கம் போவதுபோல் சென்று இடது பக்கம் நிற்கும் கூட்டத்தை முட்டித்தூக்கும்..

இது போன்ற தருணங்களில் மிக எளிதாக தப்பிக்கும் முறை.. சிம்ப்பிள்.. படுத்துவிடுவார்கள்.. "ஒருசாய்த்து" படுத்துவிட்டால் ஒன்றும் செய்யாது.. ஓடினால் அடுத்தநாள் உட்காரமுடியாது.. ஆம் அந்த இடத்தை கிழித்துவிடும்.

மிரளும் மாடுகளின் பாடுதான் திண்டாட்டம்.. கூட்டமாய் அதன்மீது ஏறி சட்னியாக்கிவிடுவார்கள்.. ஆனால் மாட்டுக்காரர்கள் இதைப்பார்த்துக்கொண்டே மாட்டின் பின்னால் ஓடுவது போல ஓடி கையில் இருக்கும் கயிறைக்கொண்டு கூட்டத்தின் மேல் ஒரு இழுப்பு இழுத்து விட்டு போய்விடுவார்கள்.. காயம் ஆற அடுத்த ஜல்லிக்கட்டு ஆகிவிடும்.

இன்னும் சில மாடுகள் ஓடுவது போல் ஓடி நின்று திரும்பி குத்தித் தூக்கும்.. இதுதான் ஜல்லிக்கட்டைப் பொறுத்தவரை மிக டேஞ்சரான தருணம்.. இதில்தான் உயிர்ச்சேதங்கள் ஏற்படுகிறது.. சிமிழிலும் வெளக்கெண்ணெய் தடவி இருப்பார்கள்.. அதுதவிர மாட்டின் உடல் முழுதும் கத்தாழை மற்றும் இன்னபிற வழுக்கும் ஐட்டங்களைத் தேய்த்திருப்பார்கள்.. பிடிக்கும்பொழுது வழுக்கி விழுந்தால் மிகத் தெளிவாக அப்படியே குப்புற படுத்துவிடுவார்கள்.. திரும்பினாலோ எழுந்து ஓடினாலோ தான் ஆபத்து..

இவ்வளவு கஷ்ட்டப்பட்டு இந்த அக்கப்போறு தேவைதானா.. என்ன பரிசு கிடைக்கும் என்கிறீர்களா?? பரிசுகள் என்னவோ குடம்,குத்துவிளக்கு,பீரோ,அதிகபட்சமாக டிவி.. ஆனால் அக்கம்பக்க ஊர்களில் எல்லாம் பேசுவார்களே .. "அந்த திருச்சி காளையை சிமிழ்லயே நிண்ட பய இவருதான்.." என்ற வார்த்தைகள்..அதற்காகத்தான் இவ்வளவும்..

அந்த ஒரு நாளைத்தவிர வருடம் பூராவும் மாடுகளுக்கும் மிகப்போஷாக்கான வாழ்க்கைதான்..

இந்ந்ந்ந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக... என்று எந்த திரைப்படம் டிவியில் போட்டாலும்...

"காளை தவ்வுது.. முடிஞ்சா அணைஞ்சுக்கோவ்வ்வ்வ்வ்" என்று மைக்கில் கமிட்டியாளர்களின் குரலைக் கேட்டால்.. டிவியை அணைத்துவிட்டு அங்கே போய்விடுவார்கள்..

வாழ்க ஏறுதழுவல்.!

தலைமுடியும்..சில முடிவுகளும்

தலைமுடியும்..சில முடிவுகளும்

தமிழ் படத்தை ஆங்கில சப் டைட்டிலுடன் பார்த்தால், வசனத்தையும் அந்த சப்டைட்டிலையும் கலந்துபார்த்த, ஒருவித குழப்பமும் அல்லாத தெளிவும் அல்லாத மனநிலை ஏற்படுமே, அப்படிப்பட்ட ஒரு நிலையில் இருந்தான் பாண்டி.ஒருவேளை இருபது வயதே நிறைந்த பெண் தன் காதலனுடன் ஓடுவதற்காக மிக நேர்த்தியாக ஒரு கொலை செய்தாளே.. அதை நினைத்தா.. சத்யம் என்ற பெயர் வைத்து அந்த பெயருக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத காரியத்தை செய்தாரே அவரை நினைத்தா..ஹூஹும்.. இது வேலைக்காகாது என்று எழுந்தவன் அனிச்சையாக சட்டையை ஒரு கையில் மட்டும் மாட்டிக்கொண்டு கண்ணாடி முன் நின்றான்.சுவரில் சாய்ந்து அமர்ந்து இருந்ததாலும், படுத்துக்கொண்டே இருந்ததாலும் பின் மண்டை முடி படிய மறுத்தது.முடி வெட்டியும் ஒரு மாதம் ஆகிவிட்டது நினைவுக்கு வந்தததும் பட்டனைப் போட்டவாரே வண்டியை கிளப்பினான்.

சென்னை தி.நகரின் மையத்தில் இருந்த அந்த சலூன் உட்புறம் குளிரூட்டப்பட்டிருந்த உயர்தர ஃபைவ்ஸ்டார் ஹோட்டல் மாதிரி இருந்தது.காத்திருக்கும் இருக்கையில் அமர்ந்தவன் கையில் புத்தகத்தை எடுத்தான்.. ஏனோ ஊரில் சலூனுக்குபோன பழைய‌ ஞாபகங்கள் வந்தன..

சந்திரா சலூன்.. என்ற எழுத்துக்களுக்கே ஷேவிங் செய்தது போல அங்கங்கே வழித்து இருக்கும் போர்டு.. வாடிய பூ.

"வாங்க தம்பி.. எப்பவும் போலவா?? "
"இல்லண்ணே.. (F)பங்க் விட்டு கட் பண்ணுங்க.."
"பண்ணிருவோம்.." என்று கூறிக்கொண்டே.. விஷ்க் விஷ்க் என அந்த அரதப்பலசான தண்ணீர் பீய்ச்சும் கேனை எடுத்து முடியை நனைப்பார்..

"கோரமுடி தம்பி.. ஃபங்க் வச்சா நல்லா இருக்கும்" என்று கூறிக்கொண்டே கிரீச் கிரீச் என்ற ஒலி எழுப்பும் கத்திரிக்கோலை எடுப்பார்.. சீப்பில் லாவகமா ஒரு தட்டி தட்டி வேலையை ஆரம்பிப்பார்.. நடுநடுவே அரசியல் நாட்டின் பொருளாதாரம் அவரின் பொருளாதாரம் என அலசி ஒரு வழியாக முடித்து விட்டு, முடி படாமல் இருக்க போர்த்தி இருக்கும் துண்டை மெதுவாக எடுத்து கீழே லாவகமாக கொட்டி, மடிப்பார்.. அதை உதறவே மாட்டார்.. உதறினால் கிழிந்து விடும் என்று அவருக்கு தெரியும்.

மறுபடியும் விஷ்க் விஷ்க்.. படிய வாரி விட்டு.. (அவர் வாரிவிடும்பொழுது மட்டும் மிக நன்றாக படியும்) ஒரு மார்கெட்டிங்க் பிட்டைப் போடுவார்..

"என்னா ஃபங்க் வச்சு வெட்டினாலும் ஹீட்டர் போட்டாத்தான் "கிச்சுனு" நிக்கும்.."
ஹீட்டர் என்ற வார்த்தையைக் கேட்டதும் ஒருவித பரவச உணர்ச்சி ஏற்படும்..

கையிருப்பை கருத்தில் கொண்டு சரி என்று ஆசையாக அதையும் போட்டுக் கொண்டு வீடு வரை நடக்கும் பொழுது.. தேவர்மகன் கமல் செய்வது போல ஒரு 20 தடவையாவது கையை வைத்து பின்மயிரை கோதிவிட்டு.. வீட்டிற்குள் அடி எடுத்..

"நில்றா.. என்னடா இது?"
"என்னப்பா?"
"என்ன நொன்னப்பா? முடி வெட்டப்போறேன்னு சொல்லிட்டு அப்படியே இருக்கு?"
"ஃபங்..க்.."
"என்னா..து?"
"ஃபங்க் ஸ்டைல்ப்பா.."
"என்ன எழவோ.. இரு.." என்று சட்டையை மாட்டிக்கொண்டு
"வாடா.. சந்திரா தான?"
எனும்போதே,அவமானம் ஆரம்பித்து விடும்..

"ஏன்யா.. அவந்தான் சின்னப்பையன்னா.. உனக்கு தெரியாதா? என்ன வெட்டியிருக்க?"

"தம்பி ஆசப்பட்டுச்சு சார்.."

"ஆசயாவது பூசயாவது.. எப்பவும் போல வெட்டுங்க.."

அந்த "எப்பவும்" போல என்பது.. காதுக்கும் முடிக்கும் இருக்கும் இடைவெளியில் ரயில் விடலாம் போல ஒரு வெட்டு.. காது மட்டும் பெரிசாக தனியே தெரியும்.. உச்சி மண்டையில் கபாளம் தெரியும் படி கரைத்து விடப்படும்..

"கரச்சான் மண்ட.. எந்த பாலத்துக்கீழ தலய குடுத்த" போன்ற வார்த்தைகளுக்கு பயந்து மறுநாள் பொய் சொல்லி ஸ்கூலுக்கு போவது பெரும்பாலும் தவிர்த்துவிடுவான்.

"சார்.. வர்றீங்களா.." என மிக பவ்யமான அழைப்பில் நிகழ்வுக்கு வந்தவன்.. கண்ணாடி முன் இருந்த குஷனில் அமர்ந்தான்..

"என்ன சார்.. லைட்டா ட்ரிம் பண்ணிருவமா? லேட்டஸ்ட் ஃபேஷன் ஸ்டைட்ரனிங்.. முடி நீளமா இருக்குறதால உங்களுக்கு நல்லா செட் ஆகும்.."

"வேண்டாம்..நல்லா ஒட்ட வெட்டுங்க.."

என்று கண்களை மூடி சாய்ந்து அமர்ந்தான்..வானத்தில் இருக்கும் அப்பாவை மூடிய கண்களில் பார்த்துக்கொண்டே..

ஜெயமோகனின் ஊமைச்செந்நாய்..

ஜெயமோகனின் ஊமைச்செந்நாய்..

சில எழுத்தாளர்களின் நடை வசீகரமாக இருக்கும். சிலரின் கதை சுவாரஸ்யமாய் போகும்.. சில எழுத்தாளர்களின் வர்ணனைகள் அந்த சூழலுக்குள் வாசகனை இட்டுச் செல்லும்.. வெகு சில எழுத்தாளர்களின் எழுத்தில் இவை அனைத்தும் இருக்கும்.. அதில் ஜெயமோகனும் ஒருவர். ஒரு சோறு பதம்..ஊமைச்செந்நாய்...

ஒன்லைன் ஸ்டோரி என்று பார்த்தால்..ஒரு வெள்ளைக்கார துரையின் வேட்டையாடலுக்கு உதவும் அடிமையின் கோணம்.

அந்த துரை, நாம் லகான் படத்தில் அமீர்கானுடன் மோதும் வெள்ளைக்கார துரையின் பிம்பம் ஏற்படும்..சாதாரணமாக துரை என்றவுடன் பரங்கித்தலை,ஈஸ்ட்மெண்ட் கலர் பவுடருடன் வீரபாண்டியகட்டபொம்மன் படத்தில் வரும் துரைகள் தானே நமக்கு ஞாபக வரும்.. ஆனால் அப்படி ஏற்படவில்லை..முதல் பாராவிலேயே துரை என்று ஆரம்பிக்கும் ஜெயமோகனின் வர்ணனையின் வலிமை அப்படி.

அந்த துரைக்கு(வில்சன்) கிட்டத்தட்ட அடிமையாக இருக்கும் ஒருவனின் பார்வையில் துரை நடத்தும் கொடுமைகள்,அவன் உணவு பழக்கம்,பெண்களை புணரும் விதம் என அனைத்தையும் ஊமைச் சாட்சி போல் பக்கத்தில் இருந்து பார்த்து சொல்லும் கோணமே ஊமைச்செந்நாய்..ஊமைச்செந்நாய் அந்த அடிமைதான்.

தோமா என்ற சமையல்காரனின் ருசியான இறைச்சிகளை துரை உண்ணும் விதம்..அவன் உண்ணும் வரை காத்திருந்து பின் கிடைக்கும் மீந்த உணவை ருசித்து உண்ணுவதாகட்டும்.. துரையின் பசி அடங்கியபின் காமப்பசிக்கு அங்குள்ள வேசிப்பெண்ணை அழைத்து வந்து..அவள் படும் வேதனையை பார்த்து தலைகுனிவதாகட்டும்..பின் காதலுடன் அவள் இவனை அழைக்கும் பொழுது உடலுறவு கொண்டு..

இந்த இடத்தில்தான் ஜெயமோகனின் எழுத்தின் வலிமை.. பின்னர் வரும் அத்தியாயத்தில் இந்த செந்நாய் பாத்திரம் துரைக்காக ஒரு மானை ஈட்டி எறிந்து வீழ்த்தி..அது துடித்து இறக்கும் பொழுது பாவமாய் கண்களை மூடும் பொழுது..அவனின் மனது அவளைப் புணரும் பொழுது அவள் கண்கள் சொருகி உச்சம் அடைந்ததை நினைத்துப் பார்ப்பது போல வரும் இடம்.. நிறைய அர்த்தங்களில் வாசிக்கப்பட வேண்டியது.

துரையின் துப்பாக்கி.. அதையும் ஒரு பெண்ணைப்போல கையாளும் அவன் குணம்..யானைகளையும் இந்திய தெய்வங்களையும் துச்சமாக மதிக்கும் ஆங்கிலேய மன்ப்பான்மை..அதற்கு அவன் சொல்லும் காரணம்..அதாவது அவர்கள் நாட்டில் செல்வந்தர்களால் பட்ட அவமானங்களை இங்கே வெய்யிலையும் பொருட்படுத்தாது வந்து அந்த அவமானங்களை இந்திய அடிமைகள் மீது காட்டி சந்தோஷப்படும் சாடிஸ மனப்பான்மை.. என சுழட்டி அடிக்கிறார் ஜெமோ.

காட்டின் நுட்பமான விபரங்கள்..செடிகள்..என நிறைய விபரங்கள்.. ஒரு ஸாம்பிள்.. இரை தேட சிறுத்தை நடக்கும் பொழுது மண்கூட சரியாது..புல்கூட அசையாது..
இது போன்ற நுட்பங்கள்..

ஒரு யானையை சுட்டு வீழ்த்தி..அதன் தந்தங்களை பார்த்த்து தடவும் துரை..அதே நேரம் அந்த யானையின் கண்களில் வழியும் நீரை பாவமாய் பார்க்கும் செந்நாய் பாத்திரம்.. இப்படி பாத்திர வேறுபாடுகளை குறிப்பால் உணர்த்தும் பாங்கு..

எவ்வளவு கொடுமைகள் செய்திருப்பினும் அந்த துரையை பாம்பு கடித்தவுடன் மிகுந்த அக்கறையுடன் காப்பாற்றும் செந்நாய்..

ஆனால் அவன் துரையை முடிவில் என்ன செய்கிறான்? என்பது ஆச்சர்யம்.. படியுங்கள்..

ஜெயம் மோகன்..

(இது தொடர் பதிவு இல்லை என்றாலும் புத்தககண்காட்சியில் வாங்கிய/வாசித்த விமர்சனத்தையோ அறிமுகத்தையோ பதிவர்கள் தொடர்ந்தால் நல்ல புத்தகங்கள் அறியும் வாய்ப்பு கிடைக்கும்..)

சைட் அடிக்கும் பெண்கள்.. கம்பர் வாழ்க..

சைட் அடிக்கும் பெண்கள்.. கம்பர் வாழ்க..

சென்னை மாயாஜால்.. இளைஞர்களின் கொண்டாட்டம்.. குடும்பஸ்தர்களின் திண்டாட்டம்..(குடும்பத்தோடு போனால் பர்ஸ் பனால்.) நிறைய காதலர்கள்.. அதைவிட நிறைய கல்லூரி மாணவ மாணவிகள் குரூப் என பட்டாம்பூச்சி(விட்டில்?)மயம்.. மாயாஜால் திரையரங்க..உணவக என அடுத்த கட்ட முயற்சி.. அங்கே தான் நம் கதாநாயகிகள் திவ்யாவும் ப்ரியாவும் பாப்கார்னை நுனிவிரலில் எடுத்து நுனிநாக்கில் வைத்து..இப்படி நுனிநளினங்கள் எல்லாம் வெளியேதான்..வாய்க்குள் அதே பாப்கார்ன் என்ன பாடுபடுகிறது..அட இதில் என்ன ஒரு வாழ்க்கைத் தத்துவம்.

"என்னயா..சுகன்யா வருவாளா இல்ல நம்ம உள்ள போகலாமா?"

"வெயிட்பண்ணலாம்ப்பா.. வருவா..அங்க பார்த்தியா.. க்யூட் பேபி இல்ல.."

என்று சொல்லிக்கொண்டே கன்னத்தை உப்பிக் காட்டி சிரித்தாள்.. அந்த குழந்தையும் சிரித்தது..

ஒரு சிகப்பு டீ சர்ட் இளைஞன் க்ராஸ் செய்தான்..

"நல்லா இருக்கான் இல்ல.."

"இல்ல.. செளவ்செளவ் காய் மாதிரி இருக்கான்யா.. நீ இன்னும் அங்க பார்க்கல.."
"ஹே.. ஆமா.. அதான் நீ இந்த பக்கமாவே பார்த்து பேசிட்டு இருக்கியா..பாதி மறைக்கிதே.."
"ஸோ வாட்? அந்த ஷோல்டர் செம மேன்லியா இருக்கு இல்ல.. "
"நான் எங்க அதப்பார்த்தேன்.. இன்னும் அவன் கண்ணத்தான் பார்த்துட்டே இருக்கேன்.. "
இதைக் கேட்டுக்கொண்டே வந்த சுகன்யா..
"ஆமா.. அவரு பெரிய ராமரு.. நீங்க அயோத்தியா அழகிகங்க.. இவ கண்ண மட்டுமே பார்க்குறாளாம் அவ தோள மட்டுமே பார்க்குறாளாம்.. வாங்கடி.. படம் போட்டுற போறான்.."
"லேட்டா வந்ததும் இல்லாம ஆரம்பிச்சுட்டியா.. ஹே அந்த ராமாயண மேட்டர் புரியலடி.. எக்ஸ்பைளைன் ப்ளீஸ்.."

"ராமர் சீதை இருக்குற மண்டபத்துக்கு வந்தப்ப.. அங்க இருக்குற பொண்ணுங்க எல்லாம் அவர் அழகுல மயங்கி பார்த்துட்டே இருந்தாங்களாம்.. அதுவும் நீங்க இப்ப சொன்னீங்களே அந்த மாதிரி.. அவரோட தோளப் பார்த்த கண்கள் அதையே கடைசி வரைக்கும் பார்த்துட்டே இருந்துச்சாம்.. காலப் பார்த்தவங்களும் அந்த கால் அழக மட்டும் பார்த்துட்டே இருந்தாங்களாம்.. மொத்தத்துல யாருமே முழு அழகையும் பார்க்கலயாம்..

இப்படி நடந்துச்சோ இல்லையோ.. ஆனா கம்பரோட பார்வையும், வார்த்தைகளும்.. ஒருத்தரோட அழக வர்ணிக்கிறதுனா இதைவிட சிறப்பா யாரும் எழுத முடியாதுங்கறதும் மட்டும் உண்மையோ உண்மை..
பேசிக்கொண்டே தியேட்டருக்குள் நுழைந்து மறைந்துபோனார்கள்..
அந்த பாடல்..

தோள்கண்டார் தோளே கண்டார்
தொடுகழல் கமலம் அன்ன
தாள்கண்டார் தாளே கண்டார்
தடக்கை கண்டாரும் அஃதே
வாள்கொண்ட கண்ணார் யாரே
வடிவினை முடியக் கண்டார்
ஊழ்கொண்ட சமயத்து அன்னான்
உருவுகண் டாரை ஒத்தார்.

( தோளைப் பார்த்தவர்கள் அதை மட்டுமே பார்த்தார்கள். தாமரைப் பூ போன்ற காலையும், கைகளயும் பார்த்தவர்களின் நிலையும் அதுதான்..வாளைப்போல கண்களை பார்த்தவர்கள் கண்களை மட்டுமே பார்த்தார்கள்.. ஆக முழு வடிவையும் யாரும் பார்க்கவில்லை..அத்தனை அழகுவாய்ந்த உருவம் கொண்ட ராமன்)

மிகைப்படுத்தி வர்ணித்தாலும், எத்தனை அழகான சொற்கள்..எவ்வளவு கற்பனை..அதுதான் கம்பர்..!