அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, October 20, 2009

”தீ”யில் ஒரு முரண்

ங்கிலத்தில் "Double Standard" என்றொரு பதம் உண்டு. தமிழில் இரு நிலைபாடு.

தீவிரவாதிக்கு மதமில்லை

தீவிரவாதிக்கு மதமில்லை

Terrorism, terrorist, - தீவிரவாதம், தீவிரவாதி - எனும் சொற்களுக்கும் இந்த ”Double Standard” -க்கும் அதென்னவோ அப்படியொரு தோழமை - அம்மா, சின்னம்மா போல. இந்தத் ”தீ”ச்சொற்களுக்கான மொழியாக்கமே உலகம் முழுக்க தனியொரு விதிக்கு உட்பட்டு, அது தான் நியதி என்று நிலைத்தும் விட்டது.

Terrorism என்றால் ”the systematic use of terror especially as a means of coercion” என்கிறது வெப்ஸ்டர் அகராதி. அதாவது ”முறைப்படி திட்டமிட்டு பேரச்சம், பீதி போன்றவற்றை, குறிப்பாய் பலவந்தமாய் ஏற்படுத்துவது”.

சர்வதேச தீவிரவாதம் குறித்து எழுத்தாளர் பா. ராகவன் எழுதிய 'மாயவலை'யின் முன்னுரையில், ”தீவிரவாதம் என்பது அதிருப்தியில் பிறக்கும் குழந்தை. போதாமைகளின் விளைவு. வெறுப்பு மற்றும் விரக்தியின் விபரீத விளைவு. இல்லாமை, ஏழைமை, கல்விக்குறைபாடு, வேலைவாய்ப்பின்மை போன்ற எளிய காரணங்களுக்குள் இதனை வரையறுத்துவிட முடியாது” என்கிறார்.

எனில், அது என்ன தீவிரவாதம் என்றாலே இஸ்லாம்? தீவிரவாதி என்றால் முஸ்லிம்?

குண்டும், துப்பாக்கியும் என்றாலே முஸ்லிமும் தீவிரவாதமும் என்றால், ரதமோட்டிக் குருதி பெருக்கெடுக்கத் தூண்டியதை என்னவென்பது? ரொட்டியும் பிஸ்கெட்டும் சுடும் பேக்கரியில் மனிதர்களைச் சுட்டெரித்ததை எதில் சேர்ப்பது? கர்ப்பிணியைக் கற்பழித்து, வயிறு பிளந்து குழந்தையைக் கொன்றதை எந்தக் கொடூரத்தில் சேர்ப்பது? அங்கு ஏன் மதம் மறக்கப்படுகிறது?

உலகிலுள்ள எந்த சூத்திரத்தையும் விட கடினமானது "தீவிரவாதம்" என்று சொல்லப்படும் இன்றைய நிலை. இதனை ஒரு குறிப்பிட்ட மதம், அதன் மக்கள் மட்டும் என்று பரப்பப்பட்டு வருவது யதார்த்தமான தவறல்ல, ஒரு தேர்ந்த சதித்திட்டம் - conspiracy.

உலகளாவிய வகையில் பல இடங்களில் உரிமைக்கு, சுதந்தரத்திற்கு, அத்துமீறலுக்கு, ஆக்கிரமிப்புக்கு இத்யாதி காரணங்களுக்காகத்தான் பல இயக்கங்கள், அமைப்புகள், போராடி வருகின்றன, ஆயுதமேந்தி. ஆயுதமேந்தி மட்டுமே! அதில் தான் ஆரம்பிக்கிறது எல்லாமே. சிக்கனத்திற்கும் கருமித்தனத்திற்கும் உள்ள வித்தியாசம் போல் தான் போராளிக்கும் தீவிரவாதிக்கும் உள்ள வித்தியாசம். அதைப் பிரித்தறிவதில் இருக்க வேண்டும் நேர்மையும் நியாயமும்.

தீவிரவாத இயக்கம் என அறிவிக்கப்பட்ட விடுதலைப் புலிகள், இலங்கைத் தமிழர் விடுதலைப் போராட்ட இயக்கத்தவர்கள்தான் என்பதுதானே இங்கு நிலைத்திருக்கும் பெரும்பான்மையான கருத்து. விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு உள்ள அத்தனை நியாயங்களும், தர்மங்களும் ஹமாஸிற்கு இல்லையா என்ன?

பா.ரா. குறிப்பிடுகிறார், ”அடிப்படையில் சுதந்தர தாகமும் வேகமும், அதற்காக உயிரையும் கொடுக்கத் துணியும் மனோநிலையும் கைவரப் பெற்றவர்கள்தான் போராளிகளாகிறார்கள். போராளியாக மலரும் பொழுதில் அற்ப வெற்றிகளிலும் எளிய சுகங்களிலும் மனம் பறிகொடுத்து, இலக்கு மாறியவர்கள் தீவிரவாதிகளாகத் தேங்கிப் போகிறார்கள்.”

நக்ஸலைட்கள், உல்பா, லஷ்கர், தாலிபான் என அவரவர்க்கும் அவரவர் நியாயங்கள். உள்ளூர், உள்நாடு எனத் தொடங்கி சர்வதேச அளவில் உள்ள அத்தனைக்கும் ஒரே அளவுகோல் நிர்ணயித்து அதிலிருந்தல்லவா போராளியும் தீவிரவாதியும் இனங் காணப்பட வேண்டும். ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்ற தர்க்கத்தின் அடிப்படையில் போராளி இயக்கங்களை அணுகினால் அவர்கள் செய்வது எதிர்வினைதான் என்பதும், அதற்கு முந்தைய வினையில் இருக்கிறது இவர்களது நியாயத்தின் முன்னுரை என்பதும் எளிதில் புரியத் தக்கதே!

நிச்சயமாய் எத்தகைய அநியாயக் கொலைகளையும் நியாயப்படுத்துவதல்ல இக்கட்டுரை. மாறாய், கெட்ட வார்த்தையைப் போல் அனைத்தும் அனைவரும் ஜிஹாத், ஜிஹாதிகள் என்று முத்திரையிடாமல் அறப் போரையும் அக்கிரமச் செயல்களையும் வேறுபடுத்திப் புரிந்து கொள்ள நாம் முயற்சியாவது செய்ய வேண்டும் என்ற வேண்டுகோள். அதற்கு, திட்டமிட்டு மேலைநாடுகளும் இங்குள்ள ஹிந்துத்துவ சக்திகளும் பரப்பி வருகின்றனவே Islamophobia, அந்தத் திரையை நீக்கிப் பார்க்கும் ஆற்றல் வேண்டும்.

அனைத்து நாடுகளிடமும் உளவு அமைப்பொன்று உள்ளது. அப்படி அமெரிக்காவிலும் உள்ளது, சி.ஐ.ஏ. என்கிறார்கள். மற்ற நாடுகளுக்கும் இவற்றுக்கும் முக்கியமான ஒரே வித்தியாசம், உலகம் முழுக்க அந்தந்த உளவு அமைப்புகள் தங்களது நாட்டுக்குள் ஊடுருவலையோ, அச்சுறுத்தலையோ மோப்பமிட்டுக் கொண்டிருந்தால், இந்த சி.ஐ.ஏ.க்கு ஆபீஸ் மட்டும்தான் அமெரிக்காவில். செயல்படும் தளங்கள் உலகம் முழுதும்.

இவர்களுக்கு இடப்பட்டிருக்கும் பணியும், இவர்கள் நிகழ்த்திக் கொண்டிருக்கும் பணிகளும் அப்படியொன்றும் அஹிம்சைப் பணிகளல்ல. மாறாய் இன்று தீவிரவாதம் என்ற பெயரில் செய்திகள் வெளியாகின்றனவே அதற்கு எந்த விதத்திலும் குறைவானதில்லை என்பதுதான் அதிர்ச்சியான உண்மை.

"உலகின் தீய சக்திகள் என்று வருணிக்கப்டும் எந்த ஓர் இயக்கத்தைக் காட்டிலும் அதிகமான தீவிரவாதச் செயல்களை இந்தத் தேசம் (அமெரிக்கா) செய்து வந்திருக்கிறது” என்கிறார் பா.ரா.

இன்று உலகம் முழுதும் வியாபித்திருக்கும் ஆயுதப் போராட்டத்தின் மிகப் பெரும்பாலான நதி மூலம் இங்கு ஆரம்பிக்கிறது. இதைக் கொஞ்சமாவது புரிந்து கொள்ள வேண்டும்.

என்றால்,

  • காருக்கும், பைக்கிற்கும் ஊற்றிக் கொள்வதைத் தாண்டியும் எண்ணெய் பற்றித் தெரிய வேண்டும்;
  • அபகரிக்கப் பட்ட அந்த நிலங்களைப் பற்றித் தெரிய வேண்டும்;
  • அங்குள்ள நிலங்கள் பிடுங்கப்பட்டது பேரீச்சம் பழத்திற்கல்ல என்று தெரிய வேண்டும்;
  • அவற்றைச் சுற்றியுள்ள நிலங்களிலும் WMD பூச்சாண்டி காட்டி நிகழ்த்தப்பட்ட ஆக்கிரமிப்புகளும் அழித்தொழிப்புகளும் தெரிய வேண்டும்;
  • சொந்த நாட்டில் அகதியாய் ஆகும் அவலம் புரிய வேண்டும்;
  • இவ்வாண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அதிபரின் தேசத்தின் கரங்களிலுள்ள ரத்தம் தெரிய வேண்டும்;
  • அந்தத் தேசம் உருவான நாள் முதலாய் கொன்றொழித்த உயிர்களுடன் தீவிரவாதம் என்ற பெயரில் உலகில் கொல்லப்பட்டிருக்கும் உயிர்களை ஒப்பிட்டால் வரும் விடை புரிய வேண்டும்;

இப்படி நிலம், வழிப்பாட்டு ஸ்தலம், யார் பிறந்த இடம் என்ற பிரச்சனைகளைத் தாண்டியும் நிறையத் தெரிய வேண்டும். யாருக்கு இருக்கிறது அவகாசம்?

அதெல்லாம் வேண்டாம். நாம் பார்க்காததா, போடாத சண்டையா, இறுதியில் அஹிம்சையில் பெறவில்லையா விடுதலை? உட்கார்ந்துப் பேசி அஹிம்சையில் போராடினால் என்ன? என்று நாம் கேட்கலாம். அப்படி அஹிம்சையில் விடுதலைப் பெற்ற நாம் எல்லையோரத்திலுள்ள நம் ஜவான்களுக்கு ஆட்டுப்பாலும் வேர்க்கடலையும் கொடுத்தா நிற்க வைத்திருக்கிறோம்?

பொக்ரானில் சோதித்து, பத்திரமாக வைத்திருக்கிறோமே அணுகுண்டு! அதிலிருந்து வெளிவருவது என்னவாக இருக்கும்?

தயவு கூர்ந்து தலைப்பைப் படித்துக் கொள்ளுங்கள்.

-நூருத்தீன், சியாட்டில்


தேசப் பிரிவினைக்கு யார் காரணம்? -கனியூர் இஸ்மாயில் நாஜி

இந்து-முஸ்லிம் உறவு கடந்த காலங்களில்….

கி-பி 8-ம்நூற்றாண்டு முதல் கிபி 18-ம் நூற்றாண்டு வரை இந்தியாவை ஆண்ட முஸ்லிம்களின் ஆட்சியை தலை சிறந்த ஆட்சியென போற்ற இயலாவிட்டலும் அந்த 10 நூற்றாண்டுகளில் இந்து முஸ்லிம் கலவரங்கள் நடந்ததாக இந்திய சரித்திரத்தின் எந்த பகுதிலும் காண இயலாது.ஆனால் ஏகாதிபத்திய வெள்ளையர்கள் தங்கள் ஆட்சியை இங்கே நிலை நிறுத்த முயன்ற 19-ம் நூற்றாண்டில் தான் நாம் முதன் முறையாக இந்து-முஸ்லிம் கலவரங்களைப் பற்றி அறிகிறோம்.

பிரிட்டிஷ் ஆட்சியில் இந்துக்களும் -முஸ்லிம்களும் இந்துக்களையும்,முஸ்லிம்களையும் பிரித்தாளுதல் மூலமே தங்களின் ஆட்சியை நிலைபெற வைக்க முடியுமெனத் திட்டமிட்டனர் வெள்ளையர்.அதற்கு இரு வழியினைக் கடைப் பிடித்தனர்.
1)இந்துக்களின் மனதில் முஸ்லிம்களைப் பற்றிய தப்பான எண்ணத்தை ஏற்படுத்தும் வண்ணம் வரலாற்று நிகழ்ச்சிகளை திரித்துக் கூறல்.
2)பொருளாதார ரீதியில் இரண்டு இனங்களுக்குமிடையே ஏற்றத் தாழ்வை ஏற்படுத்துவதின் மூலம் இருவருக்கிடையே போட்டியையும்.பொறாமையையும்,குரோதத்தையும் ஏற்படுத்துதல்.
பிரிட்டிஷ் சதி

ஒரிஸாவின் முன்னாள் ஆளுனரும் முன்னால் ராஜ்யசபை உறுப்பினருமான பி.என்.பாண்டே அவர்கள் சரித்திரங்கள் எப்படி திருத்தப்பட்டன என்பதைக் குறிப்பிடும்பொழுது தன் கருத்துக்கு ஆதரவாகக் கீழ்கண்டவாறு எழுதுகிறார்:
“பிரிட்டிஷ் தஸ்தாவேஜுகளைப் பார்த்தால் பிரித்தாலும் கொள்கை எப்படி உருவெடுத்தது என்பது புலப்படும்.எல்கின் பிரபுவுக்கு பிரிட்டிஷ் அரசின் செயலாளார் ‘வுட்’எழுதியுள்ள கடிதத்தில்,
ஒரு பகுதிக்கு எதிராக அடுத்ததைத் தூண்டிவிடும் யுக்தி மூலம் இந்தியாவில் நமது ஆதிக்கத்தை நிலை நாட்டியுள்ளோம்.இதை நாம் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.அனைவருக்குமிடையே பொதுவான உணர்வு ஏதும் ஏற்படவிடாமல் இருக்க உங்களால் இயன்றது அனைத்தையும் செய்யுங்கள்”எனக் குறிப்பிட்டுள்ளனர்.
கவர்னர் ஜெனரல் டfபரினுக்கு கிராஸ் எழுதிய கடிதத்தில்,

“மத உணர்வுகளால் ஏற்படும் பிளவுகள் நமக்கு பொருத்த சாதகமாக உள்ளன.இந்தியாவுக்கான கல்விமுறைப் பற்றி ஆராயத் தாங்கள் நியமித்துள்ள ஆய்வுக்குழு மேலும் பல நல்ல விளைவுகளை நமக்கு ஏற்படுத்தித் தரும் என்று எதிர் பார்க்கிறேன்”என எழுதிய்யுள்ளார்.

கர்ஸன் பிரபுக்கு ஜார்ஜ் பிரான்சிஸ் ஹாமில்டன் பின் கண்டவாறு எழுதியுள்ளார்:
“படித்த இந்தியர்களை வெவ்வேறு கருத்துகளை இரு கூறுகளாகப் பிரித்தால் பரவிவரும் கல்வியறிவு காரணமாக நமது அரசுமீது ஏற்படவிருக்கும் நுட்பமான தாக்குதல்களிலிருந்து நம்மை நம் பாதுகாத்துக்கொள்ள முடியும்.எனவே.இனத்துக்கு இனம் பிளவை அதிகப்படுத்துகிற வகையில் பாடப் புத்தகங்கள் இருக்கும்படி நாம் திட்டமிட வேண்டும்
(இஸ்லாமும்,இந்தியக்கலாச்சாரமும்.byP.N.பாண்டே.நீரோட்டம் பதிப்பகம்,சென்னை)

இதன் அடிப்படையில் இந்திய சரித்திரப் பாடப் புத்தகங்கள் திட்டமிட்டுத் திருத்தி எழுதப்பட்டன.மத்திய காலத்தில் முஸ்லிம் மன்னர்களில் ஆட்சியில் இந்து மக்கள் கொடுமைப் படுத்தப்பட்டனர் என்பது போன்ற கருத்துக்கள் வலிந்து திணிக்கப்பட்டன.

பொருளாதாரத் தாக்குதல்

இரண்டாவதாக,பொருளாதார ரீதியில் இருவரிடையே விரோதத்தை எற்படுத்த முனைந்தனர்.வங்காளத்தில் நிரந்தரக் குடியேற்றம் என்ற பெயரில் முஸ்லிம்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு அவர்களிடம் ஊழியர்க்ளாக இருந்த இந்துக்களிடம் தரப்பட்டன.டாக்டர்.டபிள்யூ.டபிள்யூ.ஹாண்டர் பின்வருமாறு எழுதுகிறார்:
நிரந்தரக் குடியேற்றத்தின் இலட்சியமே இந்து அதிகாரிகளை நிலச்சுவாந்தார்களாக் மாற்றுவதே.அன்றுவரை முக்கிய பதவிகளில் இல்லாமல் இருந்த வரி வசூலிப்பவர்களை இக்குடியேற்றம் உயர்த்திவிட்டது.முஸ்லிம்களுக்கு கிடைக்க வேண்டியிருந்த செல்வங்களையெல்லாம் இந்த இந்து ஏவலாளார்கள் சேகரித்து கொள்ள அனுமதிக்கப்பட்டது.”
(Quote in the meaning of pakistan by F.K.Khan Duarrani).

நிதி நிர்வாக விசயங்களில் முஸ்லிம்கள் புற்க்கணிக்கப்பட்டனர்.இராணுவத்தில் முஸ்லிம்கள் சேராமல் தடை செய்யப்பட்டனர்.
கல்கத்தாவிலிருந்து வெளிவந்த “டோர்பீன்”என்ற பத்திரிக்கை 1867ம் ஆண்டு ஜூலை 14ந்தேதி இதழில் எழுதியிருந்த ஒரு கட்டுரையின் ஒரு பகுதி அன்றைய முஸ்லிம்களின் அவலநிலையை வெளிப்படுத்தும்.
“பெரியதும் சிறியதுமான எல்லா அலுவல்களும் நாளடைவில் முஸ்லிம்களிடமிருந்து பறிக்கப்பட்டு இதர மதத்தினரிடம் குறிப்பாக இந்துக்களுக்குக் கொடுக்கப்பட்டன.ஆட்சியாளர் தனது குடிமக்களில் எல்லா வகுப்பாளரையும் ஒரே விதமாகப் பாவிக்கக் கடமைப்பட்டுள்ளனர்.அவ்வாறிருக்க முஸ்லிம்களை அரசாங்க பதவிகளிலிருந்து அகற்றி விடுவதற்குத் தங்களின் கெஜட்டுகளிலிருந்து முஸ்லிம்களைப் பகிரங்கமாக நீக்கிவிட்டிருந்தது.சமீபத்தில் சுந்தர் பான்ஸ் காரியாலயத்தில் சில இடங்கள் காலியாயின.இதைப்பற்றிக் கமிஷனர்,அரசாங்கக் கெஜட்டில் வெளியிட்ட விளம்பரத்தில் அவ்வேலைகள் இந்துக்களைத் தவிர வேறெவருக்கும் தரபடமாட்டாதென அறிவித்திருந்தனர்.முஸ்லிம்கள் அரசாங்க வேலைகளுக்குத் தகுதியானவர்களாக இருப்பினும் அரசாங்க அறிக்கையில் அவர்களைப் புறக்கணித்தே வைக்கப்பட்டிருந்தது.இவ்வளவு தாழ்ந்த நிலைமைக்கு முஸ்லிம்கள் ஆக்கப்பட்டனர்.”

மேற்கண்டவாறு ஆட்சியாளர்கள் செய்த திட்டமிட்டச் சதியின் விளைவாக இந்துக்களின் மீது முஸ்லிம்களுக்கு ஒரு வகையான பொறாமையும்,முஸ்லிம்களைவிடத் தாங்கள் சக்தி வாய்ந்தவர்கள் என்னும் மனோபாவம் இந்துக்களுக்கும் வளர ஆரம்பித்தன.


சிப்பாய்க் கலகத்திற்குப் பின்

இந்நிலையில்,1857ம் வருடத்தில் பசுமாட்டின் கொழுப்பினால் தயாரிக்கப்பட்ட குண்டுகளைக் காரணம் காட்டி இந்து சிப்பாய்களால் சிப்பாய்க் கலகம் துவக்கப்பட்டது.அதில் முஸ்லிம்களும் பூரணமாகக் கலந்து கொண்டனர்.அக்கலகம் சில மாதங்களிலேயே ஒடுக்கப்பட்டு விட்டது.இந்துக்களில் சிலர் தங்களுடன் தோளோடு தோள் சேர்ந்து ஆயுதந்தாங்கிப் போரிட்ட முஸ்லிம்களுக்குத் துரோகிகளாக மாறி அரசாங்கத்திடம் காட்டிக் கொடுத்தனர்.இதனால் அரசாங்கத்தின் கோபமெல்லாம் முஸ்லிம்கள் மீது விழுந்தது.

சிப்பாய்க் கலகத்திற்குப் பின் முஸ்லிம்களின் மீது நடைபெற்ற கொடுமைகளை நேரில் கண்டசர்.ஸையித் அஹ்மதுகான்.1887ம் ஆண்டு காங்கிரஸ் மாநாட்டிற்குத் தலைமை வகித்த பம்பாய் பாரிஸ்டர் ஜனாப் பத்ருத்தீன் தையிப்ஜீக்கு எழுதிய கடிதத்தில்,

“சிப்பாய் கலகத்தின் போது என்ன நடந்தது?இந்துக்கள் அதை ஆரம்பித்தனர்.முஸ்லிம்கள் அதிக தைரியத்துடன் அதில் ஈடுப்பட்டனர்.இறுதியில் இந்துக்கள்,கங்கையில் முழுகித் தங்களின் பாவங்களைப் போக்கிக் கொண்டு முன் போல் நல்ல பிள்ளைகளாகி விட்டனர்.ஆனால்,ஆயிரக்கணக்கான முஸ்லிம் குடும்பங்கள் நசித்து நாசமடைந்தன.”என குறிப்பிட்டுள்ளார். (பாகிஸ்தான் விளக்கம்.by எப்.கே.துர்ரானி)

சொல்லவொணா துன்பங்களை அனுபவித்த முஸ்லிம்கள் தங்களின் எதிர்காலம் குறித்து அச்சம் கொள்ளும் பல நிகழ்ச்சிகள் நடந்தன.

இந்து தீவிரவாதிகளின் போக்கு

1867ல் காசியிலுள்ள இந்துத்தலைவர்கள் உருது மொழிக்கெதிராக கிளர்ச்சியில் ஏடுபட்டனர்.1875ல்’ இந்தியா இந்துக்களுக்கே’என்ற கோஷத்துடன் சுவாமி தயானந்த சரஸ்வதி என்பவரால் ஆர்ய சமாஜ் என்ற இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது.இதன் முக்கிய நோக்கம் இஸ்லாத்தையும்.கிறிஸ்துவ மதத்தையும் எதிர்ப்பதே.

1890ல் “முஸ்லிம்கள் அந்நியர்கள்”என்க் கூறிக் கொண்டிருந்த பாலகங்காதர திலகர்.முஸ்லிம்கள் குர்பானி கொடுப்பதை எதிர்த்து பசு பாதுகாப்பு இயக்கத்தைத் துவக்கினர்.

1882ல் பங்கிம் சந்திர சாட்டர்ஜி ‘ஆனந்த மடம்’எனும் பெயரில் ஒரு நாவல் வெளியிட்டார்.அதில்தான் வந்தே மாதரம் என்ற கீதம் வருகிறது.அதில் இந்தியாவை ‘காளி’என்ற கடவுளுக்கு ஒப்பிட்டு அந்த காளி துஷ்டர்களை ஒழிக்கச் சொல்கிறாள் எனும் கருத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட நூல் முஸ்லிம்களுக்கு எதிராக தனது துவேஷத்தை வெளிப்படுத்தியது.

இவையெல்லாம் முஸ்லிம்களின் மனதில் ஒரு வகையான பய உணர்ச்சியை ஏற்படுத்தின.அது பின்னாளில் இரு சாரரிடையே நிரந்தரப் பகையாக மாறியாது.

காங்கிரஸும் முஸ்லிம்லீக்கும்

இந்நிலையில்,1885ல் தேசிய காங்கிரஸ் தோன்றியது.அதன் முன்னோடி தலைவர்களில் பெரும்பாலோர் முஸ்லிம் எதிர்ப்பாளர்களே,அவர்கள் முஸ்லிம்களின் அச்சத்தைப் போக்க எவ்விதநடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆங்கிலேயர் தூவிய வேற்றுமை விஷ வித்துகளுக்கு பலியான இந்துமதத் தலைவர்கள் சுதந்திர போராட்டத்தை இந்து மறுமலர்ச்சி எனும் அடிப்படையில் நடத்த விரும்பினர்.முஸ்லிம்களை அரவணைத்துச் செல்வதற்குப் பதிலாக அவர்களை ஒதுக்கிவிட்டு தங்களின் சுதந்திரப் போராட்டத்தை நடத்த விரும்பினர்.விளைவு?1906ம் ஆண்டு அகில இந்திய முஸ்லிம் லீக்.சர்.ஆகாகான் அவர்கள் முயற்சியால் தோற்றுவிக்கப்பட்டது.

முஸ்லீம் லீக் ஏன் தோன்றியது?என்பதன் காரணத்தை R.P.Dutt இப்படி குறிப்பிடுகிறார்.
“தீவிரவாத தேசிய இந்துத் தலைவர்கள் தங்களின் போராட்டத்தை இந்துமத அடிப்படியில் நடத்த விரும்பினர்.இந்துமத மறுமலர்ச்சி மூலமே தேசிய விழுப்புணர்ச்சி ஏற்படுத்தப்பட்டதாகக் காட்ட விரும்பினர்.எனவே அவர்கள் தேசிய நீரோட்டத்தில் முஸ்லிம்கள் கலந்துவிடாமல் இருக்க முயற்சித்தனர்.அதன் விளைவே 1906ல் முஸ்லிம்லீக் தோன்றியது”.
(Quoted in R.A.Deasai’s social background of Indian Nationalism)
Most members of the congress made a serious error refusing to admit the existence and validity of muslim nationalism.

முஸ்லிம்களின் தேசிய உணர்வுகளின் அவசியத்தையும் நிலைபாட்டையும் மறுத்ததின் மூலம் பெரும்பாலான காங்கிரஸ் உறுப்பினர்கள் மோசமான தவறினைச் செய்தனர்.
(A short History of India and Pakistan by t.Walter Wall Bank)(U.S.A. )1965.

முஸ்லிம்லீக் தோன்றினாலும் முஸ்லிம்களில் பலர் காங்கிரஸிலும் லீக்கிலும் இருந்தனர்.மவ்லானா அலி சகோதரர்கள் காங்கிரஸை பெரிதும் நம்பினர்.


பிரிவினைப் பிரச்சாரம் யார் துவக்கியது?

இந்தியப் பிரிவினை தவிர்க்க முடியாமல் போனதற்கு 1920க்கும் 1940க்குமிடையே நடைபெற்ற பல நிகழ்ச்சிகளே காரணம். இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் தனித்தனி நாடு எனும் திட்டத்தை முதன் முதலில் கூறியவர்கள் இந்து தீவிரவாதிகள் தாம்.

இன்று இந்திய பிரிவினைக்கு முஸ்லிம்கள் தான் காரணம் எனப் பிரச்சாரம் செய்வோர் 1920க்கும் 1940க்குமிடையே நடைப்பெற்ற நிகழ்ச்சிகளையும் பேச்சுக்களையும் ஒரு முறை ஆராய்ந்து பார்க்கட்டும்.
இந்நாட்டைவிட்டும் வெளியேறிவிடுங்கள்;அல்லது இங்கு இரண்டாம் தர பிரஜையாக இருக்க சம்மதியுங்கள் எனும் கோஷம் முஸ்லிம்களை நோக்கி பகிரங்கமாகப்போடப்பட்டது.

“முஸ்லிம்களுக்கும்.இந்துக்களுக்கும் தனித்தனி நாடு எனும் சிந்தனை லாலா லஜ்பத்ராயின்மூளையில்தான் முதன் முதலில் உதித்தது”என அவரிடம் ஆறு ஆண்டுகள் அந்தரங்கச் செயலாளராக இருந்தவரும் காந்திஜியின் நெருங்கிய சகாவுமான பண்டிட்சுந்தர்லால்.’ரேடியன்ஸ்’ வார இதழில் (13-6-87)ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

இன்று R.S.S. போற்றிப் புகழும் V.D.சாவர்க்கார்.இந்துக்கள் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றும் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எவ்வித எதிர்காலமமும் இல்லை என்றும் 1917ம் ஆண்டிலிருந்து கூறி வந்ததாகR.N.அகர்வால் தனது The National Movement என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

குர்தகி மட சங்கராச்சாரியார், இந்தியா இந்துக்களுக்கே சொந்தமானது.முஸ்லிம்கள் இங்கு விருந்தினர்களே.அவர்கள் விருந்தாளியைப்போலவே நடந்து கொள்ள வேண்டுமென்று முஸ்லிம்களை எச்சரித்தார்.

அகில இந்திய சிவில் சர்வீஸில் உறுப்பினராக இருந்த ஹர்தயால், A Joint Hindu-Muslim state is Sheer Nonsenseஇந்து-முஸ்லிம் இணைந்த ஒரு நாடு என்பது முழு முட்டாள்தனம்”என உரத்துச் சொன்னார்.

1923ல் வாரணாசியில் பண்டிட் மதன்மோகன் மாளவியா தலைமையில் இந்துமகாசபைபுதுப்பிக்கப்பட்டது. இந்தத் தீவிரவாத இயக்கத்தின் கொள்கை முஸ்லிம்களை மீண்டும் இந்துவாக மாற்றல், இந்துக்களுக்குப் போர் பயிற்சிதரல்.அதன் முக்கிய குறிக்கோள் இந்தியா இந்துக்களுக்கே வேறு யாருக்கும் அதில் உரிமை இல்லை என்பதே.இந்த இயக்கம் தொடங்கப்பட்ட பின் வகுப்புக் கலவரங்கள் அதிகமாயின இஸ்லாத்தையும் முஹம்மது நபி (ஸல்) அவர்களையும் இழிவுபடுத்தும் முயற்சிகள் நடைபெற்றன.1924ல் லாஹூரில் ரங்கிலா ராஜா (கெட்ட நடத்தையுள்ள ராஜா)என்ற நூல் ஒன்று வெளியிடப்பட்டது.அதில் இஸ்லாமியர்கள் போற்றும் முஹம்மது நபி அவர்களைத் தரக்குறைவாக விமர்சிக்கப்பட்டது.

முஸ்லிம்களின் நிலை

இவ்விதம் இந்துமதத் தலைவகளில் பலர் இந்தியாவின் பிரிவினையைப் பற்றி 1917லிருந்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது முஸ்லிம் தலைவர்களின் நிலை என்னவாக இருந்தது?

இன்று இந்தியாவைத் துண்டாடியதாக அதிகம் குறை சொல்லப்படும் முஹம்மது அலி ஜின்னாசாஹிப் அவர்கள் முதலில் இரு நாடு எனும் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்தார்.1906ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம்லீக்கில் அவர் 1936ல் தான் அதிகாரப் பூர்வமாக இணைந்தார்.அதுவரை அவர் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பாலமாக இருந்தார்.’The Ambassadur Hindu-Muslim Unity’என்று சரோஜினி நாயுடுவால் பாராட்டப்பட்டவர்.1993ல் லண்டனில் மாணவராக இருந்த ரஹ்மத் அலி என்பவர் பாகிஸ்தான் என்ற ஒரு நாட்டைப் பற்றிக் குறிப்பிட்ட பொழுது ‘An Impossible Dream’நடைப்பெற இயலா கனவு’என்றார் ஜின்னா

1906ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம்லீக் 1940ம் ஆண்டுவரை தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தவில்லை.1945,1946ல்தான் பாகிஸ்தான் கோரிக்கை வலுப்பெற்றது.

ஜின்னா ஏன் கேட்டார் தனி நாடு?

தனி நாடு கோரிக்கையைப் பற்றி சிந்திக்காத ஜின்னா சாஹிப் பின் பிடிவாதமாக தனிநாடு கேட்டது ஏன்?1937க்குப் பின் ஆட்சிப் பொறுப்பை எற்ற காங்கிரஸ்தான் காரணம் என்கிறார் சர்.சிம்மன்லால் சிடால்வாட்.லிபர்ல் பார்டியின் தலைவரும் 1930ம் ஆண்டு நடைபெற்ற வட்டமேஜை “மாநட்டில் கலந்து கொண்டவருமான சிடால்வாட்,தனது Recollection and Reflection என்ற நூலில் ,Congress Parentage of Partition” என்ற தலைப்பின் கீழ் எழுதுகிறார்:

“பாகிஸ்தான் இயக்கத்திற்கு மூலதரம் காங்கிரஸ்தான்.அது 1935-ம் ஆண்டுச் சட்டப்படி ஆட்சிக்கு வந்தபொழுது நடந்துகொண்ட முறைகள் முஸ்லிம் சமுதாயத்தின் மனதில் சந்தேகத்தினை ஏற்படுத்தியது.முஸ்லிம்களின் முறையான கோரிக்கைகளைக் கூட அது நிறைவேற்றவில்லை”என்கிறார்.

வட்டமேசை மாநாட்டில் மாகாண மந்திரிச் சபைகளில் சிறுபான்மைப் பிரதிநிதிகளையும் சேர்த்து கொள்வதென ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தது.ஆனால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த மாகாணங்களில், லீகின் உறுப்பினர் பதவியை விட்டு விலகி காங்கிரஸ் உறுப்பினராக ஆனாலே தவிர மந்திரிப் பதவி இல்லை என காங்கிரஸ் கூறிவிட்டது.இதனை முஸ்லிம்கள் எதிர்த்தனர்.இதனைப் பற்றி டாக்டர்.அம்பேத்கர் குறிப்பிடும் பொழுது:”காங்கிரஸ் அனுசரித்த போக்கு விதிக்கு நேர்மாறானது.நாட்டின் இதர கட்சிகளையெல்லாம் நிர்முலமாக்கி காங்கிரஸை நாட்டின் ஒரே அரசியல் கட்சியாகச் செய்வதற்கே இந்த முறை கையாளப்பட்டது.ஒரு ஏகாதிபத்திய,யதேச்சதிகார அரசாங்கத்தை நிறுவ செய்யப்படும் இம் முயற்சியை ஹிந்துக்கள் ஒருக்கால் வரவேற்கலாம்.ஆனால் இது சுதந்திர மக்கள் என்ற முறையில் முஸ்லிம்களை அரசியலில் சாகடிப்பதாகும்”எனக் கண்டித்துக் கூறுகிறார்.
(quoted in A Short History of India and Pakistan)

காங்கிரஸ் ஆட்சியில் இருந்த இரண்டு ஆண்டுகால ஆட்சியில் முஸ்லிம்கள் விரும்பாத பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன.அரசாங்க மொழியாக ஹிந்தி மட்டுமே உபயோகிக்கப்பட்டது.உருது புறக்கணிக்கப்பட்டது.முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் அலட்சியம் செய்யப்பட்டன.தங்கள் நபியைப் பற்றியோ கலிபாக்களைப் பற்றியோ மற்றும் இஸ்லாம் சம்பந்தமான விஷயங்களோ பாடத் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை.தங்களின் கலச்சாரம் ஒரே அடியாக அழிந்து விடுமோ என முஸ்லிம்கள் அச்சப்பட்டனர்.(Sir Regined Coupland.The Indiyan Problem)

இவ்வாறு காங்கிரஸ் நடந்து கொண்ட முறைகளைக் கண்ட ஜின்னா சாஹிப் பூரண சுயாட்சி கிடைக்காத ஒரு நாட்டில் இடைக்கால ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் காங்கிரஸ் இவ்வளவு அநீதி இழைத்தால் பரிபூரண சுயாட்சிப் பெற்று ஆட்சிக்கு வந்தால் என்னவாகும் என எண்ணியே தனிநாடு தீர்மானத்தை 1940ல் ஆதரித்தார்.எனினும் அதனைத் தீவிரமாக வற்புறுத்தவில்லை.
நேருவின் பேட்டியால் நிலை மாறியது

ஒன்றுபட்ட இந்தியாவில் மாகாண சுயாட்சி என்ற அடிப்படையில் மாகாணங்களைப் பிரிக்கலாம் என 1946ம் ஆண்டு மே மாதம் 16ந்தேதி வெளியிடப்பட்ட கேபினட் தூதுக்குழுவின் முடிவினை ஜூன் மாதம் 6ந்தேதி கூடிய முஸ்லிம் லீக் கவுன்ஸில் ஜின்னா சாஹிபின் ஆலோசனையின்படி ஏற்றுக்கொண்டது.1940ல் அக்கட்சி இயற்றிய தனி நாடு கோரிக்கையைகைவிட தயாரானது.ஆனால் ஜூலை 10ந்தேதி நேரு அவர்கள் கேபினட் குழுவின் முடிவை மாற்ற காங்கிரஸுக்கு உரிமை உண்டு என்ற ரீதியில் அளித்த பேட்டி நிலைமையை மோசாமாக்கியது.”அடிக்கடி தன் நிலையை மாற்றிக் கொள்ளும் காங்கிரஸை நம்பத் தயாராக இல்லை.தனி நாடுதான் தீர்வு”என முடிவாக ஜின்னா கூறிவிட்டார்.

நேருவின் பேட்டி இந்தியாவின் சரித்திரத்தையே மாற்றி விட்டது”என மவ்லானா அபுல்கலாம் ஆஜாத் தனது India Wins Freedom என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சிகளிலிருந்து ஜின்னா சாஹிபும் முஸ்லிம்லீக்கும் முஸ்லிம்களும் பிரிவினையை நிர்ப்பந்த சூழ் நிலையில் தான் கேட்டார்கள் என்பது விளங்கும்.

R.S.S.ஐ நோக்கி ஒரு கேள்வி?

இன்று இந்தியாவைத் தூண்டிய பாவிகள் என முஸ்லிம்களைக் குற்றஞ்சாட்டிப் பிரச்சாரம் செய்யும் R.S.S.அன்று என்ன செய்தது? இந்தியாவைப் பிரிக்க வேண்டும் என இந்து மகாசபையினர் பேசினார்களே;பிரிக்கலாம் என இராஜாஜி அவர்கள் ஆலோசனை வழங்கினாரே; பிரிக்கவே கூடாது என பிடிவாதம் செய்த காந்தியை வல்லபாய்படேல் சமாதனாப் படுத்திச் சம்மதிக்க வைத்தாரே; இவ்வளவு நிகழ்ச்சிகள் நடந்த பொழுது R.S.S. என்ன செய்தது?(கோட்சே என்ற RSS காரன்தான் காந்தியை கொலை செய்தான்) இன்று பாரதமாதாவைத் துண்டாடிய பாவிகள் என நீலிக்கண்ணீர் வடிப்போர் அன்று பிரிவினைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனரா? மாநாடுகள் நடத்திக் கண்டனத் தீர்மானம் போட்டார்களா?இல்லையே!ஏன்?

முஸ்லிம்லீக்கை ஜின்னாசாஹிபை காயிதேமில்லத்தை முஸ்லிம்களைப் பிரிவினை வாதிகள் எனச் சாடுவோர் பிரிவினைக்கு முதலில் வித்திட்ட லஜ்பத்ராயை, பண்டிட் மாளவியாவை, ஆதரித்த இராஜாஜியை, பட்டேலை பிரிவினைவாதிகள் எனச் சொல்லுவது இல்லையே?ஏன்?

இந்தியா பிளவுபட்டாலும் பரவாயில்லை முஸ்லிம்களை இந்நாட்டை விட்டும் விரட்டிவிட வேண்டும் என்ற தணியாத ஆசையால் அதனை ஏற்றுக்கொண்டனர்:விரும்பினர் R.S.S.காரர்கள்.ஆனால் அவர்கள் விரும்பியது போல் இந்திய முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக இந்நாட்டை விட்டும் சென்று விடவில்லை.இந்நாட்டிலே பிறந்து இந்நாட்டிலே வளர்ந்து இந்நாட்டின் வளர்சிக்கும் வளத்திற்கும் பாடுபட்ட முஸ்லிம்கள் எப்படி போவார்கள்?அவர்களை விரட்ட யாருக்கும் எவ்வித குரோத உணர்வே R.S.S.க்காரர்கள் ஒன்றுமே அறியாத அப்பாவிகள் போல் கபட வேடமிட்டு புலம்புகின்றனர்.
சற்று சிந்தியுங்கள்!

மேற்குறிப்பிட்ட ஆதாரப் பூர்வமான நிகழ்ச்சித்தொகுப்புகளிலிருந்து நாம் என்ன புரிகிறோம்?

பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன் முஸ்லிம்களின் ஆட்சியில் வகுப்புக் கலவரம் நடக்கவில்லை.
இந்து-முஸ்லிம் கருத்து வேற்றுமையும்-குரோதமும் பிரிட்டிஷரால் திட்டமிடடு ஏற்படுத்தப்பட்டவை.
முஸ்லிம்கள் இந்நாட்டைப் பிரிக்க முதலில் விரும்பவோ,திட்டமிடவோ இல்லை.

இந்து தீவிரவாதிகளும் அடிக்கடித்தன்நிலையை மாற்றிக் கொண்ட காங்கிரஸுமே இந்தியப் பிரிவினைக்கு முதல் காரணம்.

எனவே இந்தியப் பிரிவினைக்கு முஸ்லிம்கள்தான் காரணம் என்பது திட்டமிட்டு நடத்தப்படும் துர்பிரச்சாரமே தவிர அதில் உண்மை ஏதுமில்லை.

மேற்கொண்டு உண்மை நிலையை அறிய விரும்புவோர்.

H.M.Sreevai எழுதிய partition of India:Legend and Reality, என்ற நூலையும்,

The dialogue Between Hindus and Muslims என்ற நூலையும் படித்து பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்

கோட்சேவின் பாணியில் கோவா குண்டுவெடிப்பு!


நாதுராம் கோட்ஷே என்பவர் இஸ்மாயில் என்று கையில் பச்சை குத்திக்கொண்டு காந்தியை சுட்டுக்கொன்றார். இஸ்மாயில் என்று பச்சை குத்தியதற்கு காரணம் காந்தியை கொன்றது ஒரு முஸ்லிம் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி அதன் மூலம் முஸ்லிம்களை கருவறுக்க திட்டம் தீட்டினார்.அந்த திட்டம் நிறைவேறாமல் போனது. அதுபோன்று, அவ்வப்போது கோட்சேவின் வாரிசுகள் எங்காவது எதையாவது செய்துவிட்டு அதை முஸ்லிம்கள் தலையில் கட்டுவதில் வல்லவர்கள். அவ்வளவு ஏன் தர்காவில் குண்டு வெடித்தாலும், மசூதியில் குண்டுவெடித்தாலும் காவல்துறை பாய்ந்து கைது செய்வது முஸ்லிம்களைத்தான். தீவீரவாதம் என்பது ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கு மட்டுமே குத்தகை விடப்பட்டது என்ற தோற்றம் இருந்த நிலையில், மகாராஷ்டிராவின் மாவீரன் கர்கரே போன்ற நல்ல உள்ளம் கொண்ட நடுநிலையான அதிகாரிகளால் மாலேகான்-தென்காசி போன்ற பகுதிகளில் நடந்த குண்டு வெடிப்புகளில் கோட்ஷே வாரிசுகளின் அதாவது இந்துத்துவா பயங்கரவாதிகளின் கைவரிசை உலகுக்கு படம்பிடித்து காட்டப்பட்டது. அந்தவரிசையில்,
கோவாவில் பானாஜி எனும் பகுதியில் தீபாவளியை முன்னிட்டு நரகாசுரன் கொடும்பாவியை எரித்து விமரிசையாக கொண்டாடுவதற்காக மக்கள் கூடும் இடத்தில் குண்டுவைத்து பெறும் உயிர் சேதத்தை ஏற்படுத்தும் நோக்கில், இந்துத்துவா வாதிகள் இருவர் ஸ்கூட்டரில் வெடிகுண்டுகளுடன் சென்று வெடிகுண்டை வைக்கும்போது எதிர்பாராத விதமாக, வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பார்களே; அதுபோன்று அவ்விருவரும் அந்த வெடிகுண்டு எதிர்பாராத விதமாக வெடித்ததால் மாண்டுள்ளனர். இவர்களை பற்றிய விசாரணையில் அவ்விருவரும் 'சனாதன் சன்ஸ்தா' ஆசிரமத்தோடு தொடர்புடையவர்கள் என்றும், இந்த ஆசிரமம், மாலேகான் புகழ் பெண் தீவிரவாதி பிரக்யாவுடன் நெருங்கிய தொடர்புடையது என்றும் செய்திகள் கூறுகின்றன.

இறந்துபோன அந்த தீவிரவாதிகள் திட்டப்படி, நரகாசுரன் கொடும்பாவி எரித்து கொண்டாடுவதற்காக பெரும்பாலான மக்கள் கூடும் அந்த இடத்தில், அந்த நேரத்தில் வெடித்திருந்தால் என்ன நடந்திருக்கும்...?
தீபாவளியை சீர்குலைக்க முஸ்லிம் தீவிரவாதிகள் சதி..? என்று ஆரம்பித்து லோக்கல் லஸ்கர் அல் தொய்பா தொடங்கி, இன்டெர் நேஷனல் அல்-காயிதாவரை தொடர்பு படுத்தி பத்திரிக்கைகள் பரபரப்பு செய்தியாக வெளியிட்டு தங்களின் கல்லாவை நிரப்பியிருக்கும். காலாவதியான பாரதீய ஜனதா கட்சிக்கும் இதன் மூலம் அரசியல் செய்ய ஒரு கருப்பொருளும் கிடைத்திருக்கும். இதற்கெல்லாம் வழிவிடாமல், நியாயமான அதிகாரிகளால் இந்த சம்பவத்தின் உண்மை நிலை வெளிவந்துள்ளது. நாம் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை பாராட்டுகிறோம். மக்களை அச்சுறுத்தும் யாராக இருந்தாலும் அவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கபடவேண்டியவர்களே! ஆனால் தீவிரவாதிகள் யார் என்பதற்கு அவர்களின் செயல்பாடுகள் அளவுகோலாக இருக்கவேண்டுமேயன்றி, அவர்கள் சார்ந்த மதம், அளவுகோலாக கருதப்படக்கூடாது என்பதுதான் இந்தியாவை நேசிக்கும் எல்லோரின் விருப்பமும் ஆசையுமாகும்.

தாய்ப்பாசம்


ஆயிரம் கைகள்
சேர்ந்து செய்த
மெத்தையில்
படுத்திருக்கிறேன்...

உன் இருகையில்
மட்டும்தான்
தூங்கி இருக்கிறேன்.

*

அம்மா உனக்கு
அவ்வளவு பாரமாய்
இருந்தேன் என்றா..?

பால் கொடுத்து
என்னை வளர்த்தாய்....

நீ
தூக்கவே
முடியாதளவுக்கு.

*

வெற்றி பெற்றால்
தேடி வந்து வாழ்த்த
ஆயிரம் உறவுகள்...

தோற்றுப்போனால்
தேடி வந்து அணைக்க
உன்னைத் தவிர யார்
எனக்கு.

*

ஆயிரம் முறை
தலை சீவிய
சந்தோசம்...

நீ
ஒரே ஒரு தடவை
தலை கோதிவிடும்
போது.

*

எல்லாம் சேலைதான்
எனினும்...

நீ
கட்டிய சேலையில்தான்
என் நிம்மதியான தூக்கம்
அவிழ்ந்து கிடக்கிறது.

*

என்னை நடக்க வைத்துப்
பார்க்க வேண்டும்
என்ற ஆசையை விட...

நான் விழுந்து விடக்கூடாது
என்ற கவனத்தில்தான் இருந்தது
உன் தாய்ப்பாசம்

முஸ்லிம் பெண்ணே!









உனது திரையானது எங்கள் கௌரவத்தின் கோட்டையாகும்.


மனித வர்க்கமென்னும் தீபஜோதிக்கு நீதான் வெளிச்சத்தை அளித்து வருகிறாய்...

தீனுடைய ஆவேசம் உனது உயிர்க்குளேதான் உறைந்து கிடக்கிறது.

ஆனால் நவின காலம் தேக சுகத்தையே லட்சியமாகக் கொண்டுள்ளது.

தேகத்தை விற்று விடவும் துணிவு கொண்டுள்ளது.

சூழ்ச்சி நிறைந்த காலமானது விலையுயர்ந்த ஒழுக்கத்தை அப்படியே ஜீரணித்து கொண்டிருக்கிறது.

அகப்பார்வை இழந்த பெண்களின் செயல்களில் அச்சமில்லை! கூச்சமில்லை!!

அந்நிய ஆடவர்களுடன் உராய்ந்து பழகுமாறு அறிவிழந்த பெண்களைச் செய்துவிட்டது.

மகளே!காலத்தின் கொள்ளைப்பிடுங்களில் சிக்கி விடாதே!!

கவனமாக ஒதுங்கி வாழ்வாயாக!!!

Court claim over camel 'beauty'

A $250,000 compensation claim has been made against Saudi Arabia's oil giant Saudi Aramco for causing the death of a prized camel, local press reports say.

The case, to be heard on Monday, involves a three-year-old black camel which fell into a large hole dug in the desert to store crude oil.
The camel's owner is quoted saying the beast had been entered in one of the region's popular camel beauty pageants.
The compensation claim is based on the value experts put on the camel.
Arabian camel (file photo)
Camels are highly prized in Arabia and can fetch huge sums of money
The owner, Abdullah Al-Saiari, said the she-camel was grazing in a desert pasture, about 150 miles (250km) west of Ahsa, when the accident happened.
"She was part of the Camel Beauty Contest," he said, the Saudi Gazette reported.

நாவைப் பேணுக!


உண்மை பேசுக!
அல்லாஹ், "இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும். கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு,அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள். 5:119

நேர்மையாக பேசுக!
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்.

அழகானதைப் பேசுக!
பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும்,மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்;மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள். 2:83

கனிவாகப் பேசுக!
உறவினர்களோ, அநாதைகளோ, ஏழைகளோ வந்து விடுவார்களானால் அவர்களுக்கும் அ(ச்சொத்)திலிருந்து வழங்குங்கள்;. மேலும் அவர்களிடம் கனிவான வார்த்தைகளைக் கொண்டே பேசுங்கள். 4:8

நியாயமாகப் பேசுக!
நீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கியஉறவினராக இருந்த போதிலும் - நியாயமே பேசுங்கள். 6:152

அன்பாகப் பேசுக!
அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டைவீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும்,உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம்செய்யுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. 4:36

வீண் பேச்சை தவிர்த்துடுக!
நம் வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்துகொண்டிருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் வரையில் நீர் அவர்களைப் புறக்கணித்து விடும். 6:68

பொய் பேசாதீர்!
உங்கள் நாவுகள் (சில பிராணிகள் பற்றி) பொய்யாக வர்ணிப்பதுபோல், இது ஹலாலானது, இது ஹராமானது என்று அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டாதீர்கள் - நிச்சயமாக,எவர் அல்லாஹ்வின் மீது பெய்யை இட்டுக்கட்டுகிறார்களோ அவர்கள் வெற்றியடைய மாட்டார்கள். 16:116

புறம் பேசாதீர்!
உங்களில் சிலர் சிலலைப் பற்றிப் புறம் பேசவேண்டாம். 49:12

ஆதாரமின்றி பேசாதீர்!
யாதோர் ஆதாரமுமின்றி, அல்லாஹ்வின் வசனங்களைப் பற்றித்தர்க்கம் செய்வது, அல்லாஹ்விடத்திலும் ஈமான் கொண்டவர்களிடத்திலும் மிகவும் வெறுக்கப்பட்டதாகும். 40:35

அவதூறு பேசாதீர்!
எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும்,மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; 24:23

[vidiyal] யூத நாய்களின் வெறிச்செயல்




?ui=2&view=att&th=12470a45708cea85&attid=0.1&disp=attd&realattid=ii_12470a45708cea85&zw
கடந்த டிசம்பரில் இஸ்ரேல் பாலஸ்தீன் மீது அநியாயமாக நடத்திய ஆக்கிரமிப்பு போரில் பல பாலஸ்தீன அப்பாவி பொது மக்களை வேண்டுமென்றே கொன்றுள்ளனர் என்றும் பலரை உயிருடன்புதைத்துள்ளனர் என்றும் பாலஸ்தீன மனித உரிமை ஆர்வலர் நஷாத் அல் வாஹிதி தெரிவித்தார்.

வாஹிதி அவருடைய அறிக்கையில், "பாலஸ்தீனிய பொதுமக்களை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள் கைதிகளாக பிடித்து அவர்களை கொன்று குவித்துள்ளனர்" என்று கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது, "காசாவின் கிழக்கு பகுதியில் உள்ள அல்ஜைத்தூன் பகுதியை ஆக்கிரமித்த இஸ்ரேலிய படைகள் காயம் பட்ட பல பாலஸ்தீன பொதுமக்களை உயிருடன் புதைத்துள்ளனர்.

மேலும் , காசா மீதான இஸ்ரேலின் இந்த தாக்குதலிற்கு பிறகு பல பாலஸ்தீன பொதுமக்கள் காணாமல் போயுள்ளனர். இவர்களின் நிலை என்ன என்பது இன்று வரை தெரியாமல் உள்ளது என்று கூறினார்.

இவர்கள் கொல்லப்பட்டுவிட்டனரா இல்லை இஸ்ரேலிய ரகசிய சிறைகளில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுகின்றனரா என்றுதெரியவில்லை.


உலகின் இளம் தலைமையாசிரியர்!





கோல்கத்தா, அக். 18: மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவருக்கு "உலகின் இளம் தலைமையாசிரியர்' என்று புகழாரம் சூட்டியிருக்கிறது பி.பி.சி. பி.பி.சி. செய்தி நிறுவனம் "கற்றுக்கொள்ளும் வேட்கை' என்ற பெயரில் புதிய செய்தித் தொடர் ஒன்றை தொடங்கியுள்ளது. உலகெங்கும் மிக மோசமான சூழல்களுக்கு இடையிலேயும் கற்றுக்கொள்ளும் வேட்கையோடு செயல்படுபவர்களை உலகுக்கு அடையாளம் காட்டும் நோக்கோடு இத்தொடரை பி.பி.சி. வெளியிடுகிறது. இத் தொடரின் முதல் செய்தியாக மேற்கு வங்கத்தின் மூர்ஷிதாபாத் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவர் பாபர் அலி நடத்தும் பள்ளிக்கூடத்தைப் பற்றி பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது. உலகெங்கும் இன்னமும் கோடிக்கணக்கான பிள்ளைகளுக்கு கல்வி ஒரு பெருங்கனவாகத்தான் இருக்கிறது. பள்ளிக்கூடங்கள், மதிய உணவு, சீருடைகள், கல்வி உதவித்தொகை என்று பல்வேறு சலுகைகளை அரசுகள் அளித்தாலும்கூட மோசமான வறுமை கோடிக்கணக்கான குழந்தைகளை இன்னமும் இளம் தொழிலாளர்களாகவே வைத்திருக்கிறது. இப்படிப்பட்ட மோசமான ஒரு சூழலிலிருந்து வெளிவந்திருப்பவர்தான் பாபர் அலி (16). குடும்பத்தின் முதல் மாணவரான பாபர் அலி தன்னுடைய வீட்டிலிருந்து 10 கி.மீ. தொலைவிலுள்ள ராஜ் கோவிந்தா பள்ளியில் படித்துவருகிறார். இது ஓர் அரசுப் பள்ளி என்பதால், பாபர் அலிக்குப் பெரிய அளவில் செலவுகள் ஏதுமில்லை. ஆனால், பிறரைப்போல குடும்பச் சுமையைப் பகிர்ந்துகொள்ளாததோடு, குடும்பத்தினருக்கு மேலும் ஒரு சுமையைத் தரும் வகையில், தான் படிக்க வந்திருப்பதே ஒரு பெரிய காரியம்தான் என்கிறார் பாபர் அலி. அவர் சொல்வது உண்மைதான். பாபர் அலி பகுதியைச் சேர்ந்த - அவர் வயதை ஒத்த நூற்றுக்கணக்கான குழந்தைகள் ஒவ்வொரு நாளும் ஐந்து ரூபாய்க்கும் பத்து ரூபாய்க்கும் கிடைக்கும் வேலையைச் செய்து குடும்ப பாரத்தைச் சுமக்கும் துர்பாக்கியமான நிலையிலேயே இருக்கின்றனர். ஆகையால், தனக்கு தன் குடும்பம் அளித்த மிகப் பெரிய கொடையாக பள்ளிக்கூட வாய்ப்பைக் கருதிய பாபர் அலி கல்வியில் மிகச் சிறந்த மாணவராகத் திகழ்கிறார். ஆனால், பாபர் அலிக்கு பி.பி.சி. புகழாரம் சூட்ட காரணம் ராஜ் கோவிந்தா பள்ளியின் சிறந்த மாணவராக அவர் திகழ்வதற்காக அல்ல. பாபர் அலி விளையாட்டாகத் தொடங்கிய இன்னொரு காரியத்துக்காக. அதாவது, அவர் விளையாட்டாகத் தொடங்கிய பள்ளிக்கூடத்துக்காக. அப்போது பாபர் அலிக்கு வயது 9. நம் வீட்டுப் பிள்ளைகள் விடுமுறை நாள்களில் "டீச்சர் விளையாட்டு' விளையாடுவதுபோல தன் வீட்டில் ஒரு நாள் "டீச்சர் விளையா'ட்டைத் தொடங்கினார் பாபர் அலி. டீச்சர் - பாபர் அலி. மாணவர்கள் யார் என்றால், அங்குள்ள பிள்ளைகள். அதாவது, முன்னெப்போதும் பள்ளிக்கூடத்துக்கே சென்றிராத ஏழைப் பிள்ளைகள். விளையாட்டு எல்லோருக்கும் பிடித்துப்போனது. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் விளையாடத் தொடங்கினார்கள். விளையாட்டு ஒரு கட்டத்தைத் தாண்டியபோதுதான் தெரிந்தது பாபர் அலிக்கு, தன் சக நண்பர்களின் ஆர்வம் விளையாட்டின் மீதானது மட்டுமல்ல, கல்வியின் மீதானதும் என்று. பாபர் அலி தன்னுடைய விளையாட்டுப் பள்ளிக்கூடத்தை உண்மையான பள்ளிக்கூடமாக மாற்றினார். ஒரு புதிய வரலாறு அங்கு உருவாகத் தொடங்கியது. சொன்னால், பிரமித்துப்போவீர்கள். இப்போது பாபர் அலியின் பள்ளிக்கூடத்தில் எத்தனைப் பேர் படிக்கிறார்கள் தெரியுமா? 800 பேர்! பாபர் அலி நடத்தும் இந்தப் பள்ளிக்கூடம் முற்றிலும் வித்தியாசமானது. பாபர் அலியின் வீட்டு முற்றம், வீட்டைச் சுற்றியுள்ள கொட்டகைகள், மரத்தடிகளே இந்தப் பள்ளிக்கூடம். களிமண்ணில், கட்டாந்தரையில் என்று கிடைக்கும் இடங்களில் அமர்ந்து பாடம் கற்கிறார்கள் மாணவர்கள். ஆசிரியர்கள்? பாபர் அலியும் அவருடன் படிக்கும் சில நண்பர்களும்தான். ஒவ்வொரு நாளும் தான் பள்ளிக்கூடம் சென்று வந்த பின்னர், இந்தப் பள்ளிக்கூடத்துக்கு மணியடிக்கிறார் பாபர் அலி. மணியோசை கேட்டதும் ஓடி வருகின்றனர் பிள்ளைகள். பொருளாதார ரீதியாக மிக மோசமான நிலையிலுள்ள மூர்ஷிதாபாத் பகுதியில் மிகக் குறுகிய காலத்தில் அற்புதமான மாற்றங்களை உருவாக்கி இருக்கிறது பாபர் அலியின் இந்தப் பள்ளிக்கூடம். மாற்றங்களுக்கு ஓர் உதாரணம் சம்கி ஹஜ்ரா (14). இந்தச் சிறுமி தன் தந்தை மற்றும் பாட்டியுடன் வசித்து வருகிறார். சம்கியின் தந்தை ஊனமுற்றவர். எந்த வேலைக்கும் செல்ல இயலாத நிலையில் இருக்கிறார். பாட்டியும் அப்படியே. சம்கி அருகிலுள்ள வீடுகளில் வீட்டு வேலை செய்து ஈட்டும் சொற்பத் தொகையிலேயே இந்தக் குடும்பம் வாழ்கிறது. பள்ளிக்கூடத்தை ஒருபோதும் அறிந்திராத சம்கி ஒரு நாள் விளையாட்டாக பாபர் அலியின் பள்ளிக்கூடத்துக்குச் சென்றார். இன்றோ முறையான பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவிகளுக்கே சவால் விடும் வகையில் இவர் படித்து வருகிறார். பாபர் அலி தனக்கு கல்வி கொடுத்த கடவுள் என்று குறிப்பிடுகிறார் சம்கி. சரி. பாபர் அலி அப்படி என்னதான் பாடம் நடத்துகிறார்? ""நான் என் ஆசிரியர்களிடம் கேட்பதை இவர்களுக்கு அப்படியே சொல்கிறேன்; அவ்வளவுதான்'' என்கிறார் பாபர் அலி. தான் விரும்பும் சமூக மாற்றத்தை தன்னிலிருந்து தொடங்கிய பாபர் அலி மகத்தான மனிதன் என்று கொண்டாடுகிறது பி.பி.சி. உலகின் இளம் தலைமையாசிரியர் இவரே என்றும் பிரகடனப்படுத்துகிறது. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மூர்ஷிதாபாத்தின் இந்த இளம் தலைமையாசிரியருக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. பொருத்தமானதுதானே!

Sunday, October 18, 2009

மண்ணறை வேதனை

அஸ்ஸலாமு அலைக்கும், வாலிபர்களே!!
நம் வாழ்க்கை இவ்வளவுதான் என்பதை மறந்துவிடாதீர்
இது எச்சரியக்கயல்ல வல்ல அல்லாஹுவின் எச்சரிக்கை
எனக்கு வந்த தகவலை உங்களுடன் பகிர்ந்து இந்த புனித ரமலான் மாதத்தில் நம் அனைவரும் திருத்திக்கொள்ளும் வாய்ப்பை வல்ல ரஹ்மான் நம் எல்லோருக்கும் அருள்வானாக. ஆமீன்


மண்ணறை வேதனை

Photobucket - Video and Image Hosting



இந்தப் புகைப்படம் ஓமன் நாட்டிலுள்ள ஒரு மருத்துவமனையில் இறந்த 18வயது இளைஞனுடையது. இவனுடைய தந்தையின் வற்புறுத்தலின் பேரில் 3மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் பதைகுழியில் இருந்து இந்த இளைஞனின் பிணம் தோண்டி எடுக்கப்பட்டது.

இந்த இளைஞன் மருத்துவமனையில் இறந்தபிறகு அதேநாளில் இஸ்லாமிய சடங்குகள்படி புதைக்கப்பட்டது. ஆனால் மருத்துவரின் சிகிச்சையின் மீது சந்தேகப்பட்ட இவனது தந்தை தனது மகன் இறந்ததற்கான உண்மையான காரணம் அறிய ஆசைப்பட்டதால் இவனது பிணம் தோண்டி எடுக்கப்பட்டது.

Photobucket - Video and Image Hosting





உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் அப்பிணத்தை தோண்டி எடுப்பதற்காக அனைவரும் செல்லுகின்றனர்.3 மணி நேரத்திற்கு முன்பு சடங்குகள் செய்து விட்டுச் திரும்பிய கால்கள் மறுபடியும் அக்குழியை நோக்கிச் செல்லுகின்றது.

சற்று முன்பு புதைக்கப்பட்ட இடம் என்பதால் எளிதாக மணலைத் தோண்ட முடிகின்றது. மூடிய குழிகள் மெல்ல மெல்ல தோண்டப்பட்டு வருகின்றது. முழுவதுமாய் தோண்டி அந்த இளைஞனின் பிணம் வெளியே எடுக்கப்படுகின்றது. சிலருக்கு மயக்கம் வராத குறை. சிலர் முகம் சுளிக்கின்றனர்.

உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அப்பிணத்தைக் கண்டு பெரும் அதிர்ச்சி அடைகின்றனர் அவனது தந்தையால் அந்த பிணத்தை காண முடியவில்லை. சற்று முன் புதைக்கப்ட்ட பிணமாக அந்த உடல் தெரியவில்லை.

3 மணி நேரத்தில் அவனது உடலில் பயங்கர மாற்றம் ஏற்பட்டுளள்ளதை அனைவரும் திகிலோடு கவனிக்கின்றனர். அந்தப்பிணத்தின் உடல் ஒரு விதமான சாம்பல் நிறமாக காட்சி அளிக்கின்றது. 18 வயதான அந்த இளைஞனின் உடல் ஒரு முதியவரின் உடல் போல தோற்றமளிப்பதைக்கண்டு அனைவருக்கும் பயம் கலந்த ஆச்சர்யம்.

சுமார் 1000 பேர் சேர்ந்து அந்த பிணத்தை குழிக்குள் வைத்து அடித்துப்போட்ட மாதிரி மிகவும் சேதமடைந்து கை மற்றும் கால்களில் எலும்புகள் எல்லாம் நொறுக்கப்பட்டு இடுப்புப் பகுதியில் யாரோ நெருக்கியயது போல இடுப்பு பகுதிகள் ஒடிந்து இரத்தங்கள் வெளியே முகத்தில் சிதறி கோரமாக காட்சி அளித்தது.உடல் முழுவதும் உடலின் நிறம் முற்றிலுமாய் மங்கி காட்சி அளித்தது.


Photobucket - Video and Image Hosting


அனைவருக்கும் ஆச்சர்யம் என்னவென்றால் கண்கள் மூடியபடி அடக்கப்பட்ட அந்தப் பிணத்தின் விழிகள் முற்றிலுமாய் திறக்கப்பட்டு எதையோ பார்த்து பயந்து போய் வலி தாங்க முடியாமல் சொக்கி போனதுபோல காட்சி அளித்தது. உடலில் உள்ள இரத்தம் வெளியே வந்து மிகுந்த சித்திரவதைக்கு உட்பட்டவனைப் போல காட்சி அளித்தது.


இரண்டு பக்கம் வைக்கப்பட்டுள்ள இயந்திரங்களால் மனித உடலை நசுக்கினால் எப்படி சிதையுதோ அந்த அளவிற்கு சிதைவுகளின் கோரம் இருந்தது.
புதைத்து 3 மணிநேரத்திற்குள் இப்படி மோசமாக உடல் சிதைக்கப்பட்டுப் போனதன் காரணம் தெரியாமல் அனைவரும் திகிலடைந்து போய் இருந்தனர்.

உறவினர்கள் அந்தப் பிணத்தை எடுத்து இஸ்லாமிய மருத்துவ ஆராய்ச்சியாளர்களிடம் ஒப்படைத்து ஆராயச் சொன்னபொழுது அவர்களின் விளக்கப்படி இந்தப்பிணமானது குழிக்குள் மிகுந்த சித்திரவதைக்கு ஆட்படுத்தப்பட்டுள்ளது என்றும் தீய வழியில் நடப்பவர்கள் குழிக்குள்வேதனைப்படுத்தப்படுவார்கள் என்று அல்லாஹ் மற்றும் அவனது தூதுவரான நபிகள் நாயகத்தின் ஏற்கனவே கூறப்பட்டுள்ள எச்சரிக்கைதான் என்றும் விளக்கமளித்தனர்.

திகிலில் இருந்து உறையாமல் பயத்துடன் இருந்த அவனது தந்தையிடம் கேட்டபொழுது அவர் தனது மகன் தீய நடவடிக்கைகளில் ஈடுபட்டான் என்பதையும் தொழுகையை ஒழுங்காக பேணி தொழுபவன் இல்லை என்றும் வாழ்க்கையில் சரியான வழியில் அவன் செல்லவில்லை என்றும் விளக்கமளித்தார்.

அல்லாஹ்வின் பாதையில் இறந்தவனைத்தவிர மற்ற அனைவருக்கும் கப்ரு வேதனை உண்டு. கியாமத் நாளுக்கு ( இறுதி நாள் ) முன்பு வேதனைகள் வெளிக்கொணரப்பட்ட முதல் சம்பவம் இதுவாகும்.

"ஜனாஸா (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும்போதுஇ அந்த ஜனாஸா நல்லறங்கள் புரிந்தாக இருக்குமானால் என்னை விரைந்து எடுத்துச் செல்லுங்கள் என்று கூறும். அது நல்லறங்கள் புரியாததாக இருக்குமானால்இ கைசேதமே! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள் என்று கூறும். இவ்வாறு கூறும் சப்தத்தை மனிதனைத் தவிர அனைத்தும் செவியுறும் மனிதன் அதைச் செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி:1314 அபூஸயீத் அல்குத்ரி (ரலி))

"ஓர் அடியானது உடலைக் கப்ரில் அடக்கம் செய்துவிட்டு அவனுடைய தோழர்கள் திரும்பும்போது அவர்களின் செருப்பின் ஓசையை மய்யித் செவியேற்கும். அதற்குள் இரண்டு ( முன்கீர் - நக்கிர்) வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து முஹம்மத் எனும் இந்த மனிதரைப் - பற்றி நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?' எனக் கேட்பர்.
அதற்கவன் 'இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன்' என்பான்.

பிறகு '(நீ கெட்டவனாக இருந்திருந்தால் நரகத்தில் உனக்கு கிடைக்கவிருந்த) தங்குமிடத்தைப் பார்! (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதற்குப் பதிலாக உனக்குச் சொர்க்கத்தில் தங்குமிடத்தை ஏற்படுத்தியுள்ளான்' என்று அவனிடம் கூறப்பட்டதும் அவன் அவ்விரண்டையும் ஒரே நேரத்தில் காண்பான். நிராகரிப்பவனாகவோ நயவஞ்சகனாகவோ இருந்தால் கேள்வி கேட்கப்பட்டதும்இ 'எனக்குத் தெரியாது; மக்கள் சொல்வதையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்'என்பான்.
அப்போது அவனிடம் 'நீயாக எதையும் அறிந்ததுமில்லை; (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமில்லை என்று கூறப்படும். பிறகு இரும்பாலான சுத்தியால் அவனுடைய இரண்டு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள்இ ஜின்களைத் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் கத்துவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி: 1338 அனஸ் (ரலி))

இதுவெல்லாம் நடக்கவா போகிறது என்று வீண் அலட்சியத்தில் இருப்பவர்களுக்கு இது அல்லாஹ்வின் இறுதி எச்சரிக்கையாக இருக்ககூடுமோ?

ஹதீஸில்தானே சொல்லப்பட்டிருக்கின்றது. இதுவெல்லாம் நமக்கு வரும்பொழுது பார்த்துக்கொள்ளலாம் என்று அலட்சியப்படுத்திவிடாதீர்கள்நண்பர்களே. மண்ணறையின் வேதனையை மட்டும் மனிதர்களுக்கு கேட்குமானால் அவன் மயக்கமுற்று விடுவான் என்கிற அளவுக்கு வேதனைகள் கடுமையாக இருக்கும்.

அய்யோ வேதனையைத் தாங்க முடியவில்லையே.. அலட்சியமாக இருந்துவிட்டோமே என்று அந்த நேரத்தில் நீங்கள் எவ்வளவுதான் மன்றாடினாலும் வேதனைகள் விட்டு விலகாது. அது காலம் கடந்த ஞானயோதயம்.

ஒன்று புரிந்து கொள்ளுங்கள் : எல்லோருக்கும் மரணம் நிச்சயம். ஆனால் எப்பொழுது வரும் என்று திட்டமிட்டு தெரியாததால் நாம் இவ்வளவு அலட்சியமாக இருக்கின்றோம்.

எனக்கு மெயிலில் வந்த இந்த சம்பவத்தை என்னால் முடிந்தவரை அனைவருக்கும் தெளிவுபடுத்தியுள்ளேன். இது உண்மையாக இருக்குமா அல்லது பொய்யான தகவலா என்று ஆராய்வதும் அல்லது இதன் மூலம் தன் வாழ்க்கையைளிவுபடுத்திக்கொள்வதும் அவரவர் கைகளில் உள்ளது.