அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Thursday, August 13, 2009

வேர்களை தேடும் விழுது

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹுமத்துல்லாஹி வபரக்காத்துஹு

மங்காப் பொன் மாநபியின் சமூகத்திற்கு
எனை அழைத்து செல்லுங்கள்
கொஞ்சம் உலகாயத மோகம் கலைந்து
இதமாய் இதயத்தை வருடி விட
அந்த மாநபியின் சமூகத்துக்கு
எனை இட்டுச் செல்லுங்கள்.

எங்கே
எமது நபியின் குயில் பிலால்
பிலாலே !
உங்கள் சுருதி மாறா குரலெடுத்து
எனக்காக ஒரு முறை
அதான் சொல்லுங்களேன்.
காது இனிக்க இனிக்க
இப்னு மஸீதின்
கிராத் கேட்க வேண்டுமே

அஸ்ஸலாமு அலைக்கும்
ஹாரிதா இப்னு நுஃமான்
எங்கே உங்களது தாய் -
பெற்றவருக்கு பணிவிடை செய்து
சொர்க்கத்தில் குரான் ஓதும்
பாக்கியம் பெற்றவரல்லவா நீங்கள்

அபூ ஹீரைரா !
உங்களிடம் எனக்காக
புத்தம் புது ஹதீஸ்
ஒன்று இருக்கிறதா
அபுபக்கரே !
உங்கள் ஈமானின் ஒரு துளியை
எங்கள் இதயத்தின் மீது
தூவுங்களேன்

உமரே !
பகுத்தறிவின் ஆழத்தின்
நுணுக்கம் தெரிந்த அறிவு ஜீவியே !
எங்கிருந்து உங்களுக்கு இவ்வளவு திறமை

ஆச்சரியம் எனக்கில்லை
நீங்களெல்லாம்
முஹம்மது எனும் சுடரில்
பாடம் பயின்ற மேதைகள் அல்லவா

ஓ முஸைப் இப்னு உமைரா
எங்கே உங்களது எமன் தேசத்து
காலணி பட்டில் நெய்த சீமை சட்டை
சுகந்தம் வீசும் அத்தர் மணம்
ஈமானின் சுகம் கண்டு
இத்தனை செளகரியமும்
துறந்ததாய் சொன்னார்கள்
இத்தியாகத்தின் பாசறையில்
என்னையும் சேருங்களேன்

எனது ஈமான் தளும்பும் போதுகளில்
எங்கே ஹன்ழரா ?
உங்கள் கவலையில் எனக்கும்
இடம் உண்டா ?
முதல் இரவில் வியர்வை காயுமுன்னே
விடியலின் வெள்ளி மறையும் முன்னே
போர்களத்தில் குருதி சிந்திய
ஷாஹிதே ஹன்ழராவே
உங்கள் இளம் மனைவிக்கும்
அல்லாஹ் அருள் சொறியட்டும்

உஹது மலையே ! உஹது மலையே !
ஹம்ஸா அம்பு பட்டு சாய்ந்த போது
உன்னால் அசையாமல் இருக்க முடிந்ததா?

எனது அன்னை ஆயிஷாவை
கண் நிறைய காண வேண்டும்
சொர்க்கம் சொந்தமாகியும்
அழுது அழுது குரான் ஓதும்
என் அன்பு தாயே
பதினெட்டு தாண்டு முன்
துணை இழந்த இளமையே
உங்கள் ஈமானின் பலம் புதிரில்லை

எமக்கு புதிதுமில்லை
அபுபக்கரின் மகளல்லவா நீங்கள்..

எனது உம்மா கதீஜாவிடம்
என்னை இட்டு செல்லுங்கள்
எங்கள் நபிக்கு தோள் கொடுத்து
அல்லாஹ்வின் சலாம் ஏற்று
பாத்திமாவெனும் மாணிக்கத்தை
கருவில் சுமந்த
அந்த தூய ஆத்மா
என் உயிர் தாயின் மடியில்
ஒரு கணம் சாய வேண்டும்

அள்ளி கொடுக்க கை நீளும்
அன்னை ஜைனப் எங்கே ?
தாயே எனக்கும் பசிக்கிறது
அன்ன கரண்டி எடுத்து
நரகம் தீண்டாத அந்த விரல்களால்
கொஞ்சம் ஊட்டி விடுங்கள்ளேன்

ஸ அத் இப்னு முஆத் உடைய
மரண ஊர்வலத்தில்

எனக்கும் கலந்து கொள்ள
இடம் இருக்குமா
மலாயிக்காமார்களுடன் நடந்து செல்லும்
பாக்கியமேனும் கிட்டுமே

என் உயிர் நபியே ! யா ரசூலே !
உங்கள் சமூகத்தின்
இதமான வாழ்க்கைக்குள்
நானும் வருகிறேனே
கொஞ்சம் உறங்கி, நிறைய விழித்து
அழுது தொழுது
ஏழையாய், ஆனந்தமாய் வாழ
என் உயிர் மேலும் ஆளுமை
கொண்ட நபியே ! யா ரசூலே !
உங்கள் பாசறையில்
என்னையும்
அணைத்துக் கொள்ளுங்களேன்.

நீங்கள் கருணையின் ஊற்று
எனக்காக உங்கள் இரக்கத்தில் இன்ஷா அல்லாஹ் இடம் இருக்கும்



اللَّهُمَّ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ


”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”

இந்தியாவை பல நாடுகளாக துண்டாட சீனாவுக்கு யோசனை

சீனா சிறிது முயற்சி மேற்கொண்டால்,' கூட்டாட்சி நாடு' என்று பெருமை பேசி வரும் இந்தியாவை 20 அல்லது 30 நாடுகளாக துண்டாட செய்துவிடலாம் என சீனாவுக்கு அந்நாட்டு பாதுகாப்பு நிபுணர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

இந்தியா - சீனா இடையேயான எல்லை பிரச்னை குறித்த 13 ஆவது சுற்று பேச்சுவார்த்தை கடந்த சனிக்கிழமையன்று டெல்லியில் நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தை நடைபெற்ற அதே தினத்திலேயே,சீனாவுக்கு சர்வதேச மற்றும் இராணுவ விவகாரங்களில் ஆலோசனைகளை வழங்கி வரும் சீன சர்வதேச யுத்த தந்திர ஆராய்ச்சி நிறுவனத்தின் இணைய தளத்தில் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.

ஷான் லீ என்பவர் எழுதிய அந்த கட்டுரையில்,வரலாறு கூறுவது போன்று இந்தியாவை ஒரே நாடு என்று கூறமுடியாது என்றும், இந்தியா ஒரே நாடாக இருப்பதற்கு இந்து மதத்தையே பிரதானமாக நம்பியுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவை சாதியை அடிப்படையாக கொண்ட" இந்து மத நாடு " என்றுதான் அழைக்க வேண்டும் என்றும் அதில் கூறியுள்ள லீ, சீனாவின் சொந்த நலன் மற்றும் ஒட்டுமொத்த ஆசியாவின் வளர்ச்சி ஆகியவற்றுக்காக இந்தியாவை 20 அல்லது 30 நாடுகளாக துண்டாட செய்யலாம் என்றும் யோசனை தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் சாதி பிளவுகளை மனதில் கொண்டு அஸ்ஸாமியர்கள், தமிழர்கள் மற்றும் காஷ்மீரிகள் போன்ற வேற்று தேச அடையாளங்கள் கொண்ட சக்திகளுக்கு ஆதரவளித்து, அவர்களுடன் சேர்ந்து இந்தியாவை எளிதாக பல நாடுகளாக சிதறுண்டுப் போகச் செய்துவிடலாம் என்றும், குறிப்பாக சுதந்திர அஸ்ஸாம் கோரி வரும் உல்ஃபா அமைப்புக்கு சீனா ஆதரவளிக்கலாம் என்றும் அந்த கட்டுரையில் சீனாவுக்கு யோசனை கூறியுள்ளார் லீ.

மேலும் இந்தியாவை பல நாடுகளாக உடைப்பதற்கு பாகிஸ்தான், நேபாளம் மற்றும் பூடான் போன்ற நட்பு நாடுகளின் உதவியையும் சீனா கோரலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஐரோப்பா போன்று இந்தியா பல நாடுகளாக உடைந்தால், அதன் மூலம் இந்தியாவில் காணப்படும் சாதி அமைப்பு ஒழிந்து, பிராந்தியங்கள் வளர்ச்சியை நோக்கி செல்லும் என்றும், அதுமட்டுமல்லாது தெற்காசியாவில் சமூக சீர்திருத்தத்தையும் அடைய முடியும் என்றும் அந்த கட்டுரையில் லீ மேலும் கூறியுள்ளார்.

நோன்பாளிகளே உங்களைத்தான்!



நோன்பாளிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில அம்சங்களை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்.

  • 2, 3 மணிக்கு ‘ஸஹர்’ செய்துவிட்டு அப்படியே உறங்குவது! இதன் மூலம் ஸஹரைப் பிற்படுத்துதல் என்ற சுன்னா விடுபடுவதுடன், சிலவேளை சுபஹுத் தொழுகை கூட தவறிவிடும் நிலை ஏற்படுகின்றது.
  • சிலர் சுபஹுக்கு சுமார் 1 மணி நேரத்திற்கு முன்னர் ‘ஸஹர்’ செய்தாலும், அதான் கூறும் வரை கொஞ்சம் சாய்ந்து கொள்வோம் என சாய்ந்தால், காலை 8, 9 மணிக்குத்தான் விழிக்கின்றனர். இதனால், ‘சுபஹ்’ தவறிவிடும் தவறு நேரிடுகின்றது! எனவே ஸஹரை, ‘சுபஹ்’ நெருங்கும் நேரம் வரை தாமதிப்போமாக!
  • உண்ணல், பருகலில் எல்லை மீறி அளவு கடந்து ஈடுபடுதல். சிலர் நோன்பு காலத்தில் ஏனைய காலங்களைவிட அதிகமாகவே உண்கின்றனர்.அதிகம் உண்ணுவது அல்லாஹ் விரும்பாத செயலாகும்.
  • ‘லுஹர்’, ‘அஸர்’ போன்ற தொழுகைகளை ஜமாஅத்துடன் தொழுவதில் சடைவு காட்டல், உறக்கம் அல்லது சோம்பல் போன்ற காரணங்களால் இது நிகழலாம்! இதைத் தவிர்க்க வேண்டும்.
  • புறம் பேசுதல், அடுத்தவர் குறை பேசுதல், வீண் விளையாட்டுக்கள், கேளிக்கைகள், அடுத் தவரைக் குழப்புவதற்காகப் பொய் உரைத்தல் போன்ற தவறான நடத்தைகளை விட்டும் விலகா திருப்பது நோன்பின் பலனை அழித்தவிடும்.
  • ‘ரமழான்’ எனும் புனித மாதத்தின் கண்ணியமான நேரங்களை வீண் விளையாட்டுக்களில் கழித்தல். குறிப்பாக ‘ரமழான்’ இரவுகளில் விளையாட்டுக்காக விழித்திருத்தல், பாதையோரங்களில் விளையாடுதல், இதன் மூலம் பிறருக்குத் தொல்லை கொடுத்தல் நோன்பின் கூலிகளை வீணாக்கிவிடும்.
  • ‘துஆ’, ‘திக்ர்’, ‘குர்ஆன்’ ஓதுதல், ‘நபிலான, சுன்னத்’தான தொழுகைகளைக் கடைபிடித்தல் என்பவற்றில் பொடுபோக்குக் காட்டுதல் ஒரு நோன்பாளியிடம் இருக்கக் கூடாது.
  • ‘கியாமுல் லைல்’ தொழுகையில் பொடு போக்குக் காடடுவது ரமழானில் கிடைக்கவிருக்கும் பாக்கியங்களை விட்டும் தூரமாக்கிவிடும்.
  • ‘ரமழான்’ இறுதிப் பத்தில் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து வணக்க வழிபாடுகளில் ஈடு படவேண்டும் என்றிருக்க, அதை பெருநாள் ஏற்பாட்டில் கழித்து பாழாக்கிவிடல்.
  • ‘ரமழான்’ மாதத்தில் ஆரம்பத்தில் அதிக தொழுகையாளிகளையும், இபாதத்தாளிகளையும் காணலாம். ஆனால், நாள் செல்லச் செல்ல சோம்பல் அதிகரித்து இபாதத்தாளிகளின் எண்ணிக்கை குறைவதைக் காணலாம்! எனவே, இறுதிப்பத்து கூடுதல் முக்கியத்துவம் கொடுக் கப்பட வேண்டியது என்பதைக் கவனத்தில் கொண்டு செயற்படுவோமாக!
  • சிலர் இரவு பூராக இபாதத்தில் ஈடுபட்டுவிட்டு ‘சுபஹ்’ த்தொழுகையை தவறவிட்டு விடுகின்றனர். இதுவும் தவிர்க்கப்பட வேண்டியதாகும்.
  • ‘ரமழானி’ல் தர்மம் செய்வது ஊக்குவிக்கப்பட்டுள்ளது. எனினும், வசதியுள்ள பலரும் இதில் கஞ்சத்தனம் செய்கின்றனர். இதுவும் தவிர்க்கப்பட வேண்டியதாகும்.
  • ‘ஸஹரு’டைய நேரம் ‘துஆ’வுக்கும், பாவ மன்னிப்புக்கும் ஏற்றதாக இருக்கும்போது, ‘இப் தாரு’டைய நேரம் ‘துஆ’வுக்குரியதாக இருக்கும் போது, இவ்விரு நேரங்களையும் உண்பதற் கும், பருகுவதற்குமுரிய நேரமாக மட்டும் கருதி ‘துஆ’, ‘இஸ்திஃபார்’ விடயத்தில் அலட்சியமாக இருத்தல்.
  • பள்ளிக்குச் செல்லும் பெண்கள் அலங்கார ஆடைகளுடனும், வாசனைத் திரவியங்கள் பூசிக் கொண்டும் செல்வது தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில், நபி(ஸல்) அவர்கள் பெண்கள் மனம் பூசிக்கொண்டு பள்ளிக்கு வருவதை தடுத்துள்ளார்கள் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.
  • ‘ஸகாதுல் பித்ரை’ மிகவும் முற்படுத்துதல், ‘பித்ரா’வின் பெயரில் பிச்சைக்கார சமூகத்தை உருவாக்குதல், வீடுதேடி வருபவர்களுக்கு சில்லறைகளை மாற்றி வைத்து வழங்கிவிட்டு ‘ஸகாத்’ கொடுத்து விட்டதாக எண்ணிக் கொள்ளல் தண்டணைக்குரிய குற்றமாகும்.
  • எமது சமூகத்தவர்களில் பலர் புகைத்தல் எனும் தீய பழக்கத்திற்குள்ளாகியுள்ளனர். புகைத்தலை விட்டும் விலக ரமழானே சிறந்த வாய்ப்பாகும். சுமார் 14 மணி நேரம் புகைத்தலை விட்டும் விலகியிருக்கும் எமது சகோதரர்கள் நோன்பு திறந்ததும் பகலில் குடிக்காத சிகரட்டுக்களையும் சேர்த்தே குடித்து விடுகின்றனர். இப்பழக்கத்தைக் கைவிட நோன்பைச் சரியான சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி அதை அப்படியே விட்டு விட அனைவரும் உறுதி கொள்ள வேண்டும். புகைத்தல் ஹராமானது என்பது இஸ்லாமிய அறிஞர்களுக்கு மத்தியில் ஏகோபித்த முடிவு என்பதைக் கவனத்தில் கொள்வோமாக!

இவ்வாறான எமது குறைபாடுகளைக்களைந்து இந்த ‘ரமழானை’த் தூய முறையில் கழிக்க முனைவோமாக

நோன்பு திறக்க வைப்பதின் சிறப்புகள்

Posted: 12 Aug 2009 08:06 AM PDT

யார் ஒருவரை நோன்பு திறக்க வைக்கின்றாரோ, நோன்பு நோற்றவருக்கு கிடைக்கும் நன்மையைப் போன்றே (ஒரு பங்கு) அவருக்கும் கிடைக்கும். அதனால் நோன்பு நோற்றவரின் நன்மையில் எதுவும் குறையாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி)

விளக்கம்: நோன்பு திறக்க வைப்பது சிறந்த அமலாகும். நோன்பு திறக்க வைப்பதென்பது பெரிய அளவிற்கு உணவளிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. ஒரு பேரீத்தம் பழத்தைக் கொடுத்து நோன்பு திறக்க வைத்தாலும் இந்த நன்மை கிடைத்துவிடும். ஒவ்வொருவரும் அவரவரின் வசதிக்கு ஏற்றவாறு செய்து கொள்ளலாம்.

நோன்பு திறக்கும் போது கேட்கப்படும் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும்

Posted: 12 Aug 2009 08:04 AM PDT

1) நோன்பாளி, நோன்பு திறக்கும் போது கேட்கும் பிரார்த்தனை தட்டப்படமாட்டாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: இப்னுமாஜா)

2) நோன்பாளி நோன்பைத் திறக்கும் வரை, நீதியான அரசன், அநியாயம் செய்யப்பட்டவன், இம்மூவரின் பிரார்த்தனைகள் தட்டப்படுவதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி)

விளக்கம்: நோன்பாளி, நோன்பு நேரத்தில் கேட்கும் பிரார்த்தனைகளையும், இன்னும் நோன்பு திறக்கும் போது கேட்கப்படும் பிரார்த்தனைகளையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்கின்றான். ஆகவே, நோன்பு காலங்களில் அதிக பிரார்த்தனைகளைச் செய்யுங்கள்.

இன்று முஸ்லிம்களில் பலர், நோன்பு திறக்கும் நேரத்தில் வீண் பேச்சுக்களிலும், வீண் வேலைகளிலும் ஈடுபடுகின்றார்கள். இந்த சிறப்பான நேரங்களை வீணாகக் கழிக்காமல் அல்லாஹ்விடம் நமது ஈருலக வெற்றிக்காகவும், முஸ்லிம்களுக்காகவும் பிரார்த்தியுங்கள். நமது சகல தேவைகளையும் பூர்த்தியாக்கித் தருவதற்கு அல்லாஹ் போதுமானவன்.

நோன்பு திறந்த பின் ஓதும் துஆ

Posted: 12 Aug 2009 08:01 AM PDT

(ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوْقُ وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ الله ُ. (أبوداود

தமிழில்: தஹபள்ளமஉ வப்தல்லதில் உரூக்கு வஸபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்.

பொருள்: தாகம் தணிந்தது, நரம்புகள் நனைந்தன, அல்லாஹ் நாடினால் கூலியும் உறுதியாகிவிட்டது. (ஆதாரம்: அபூதாவூத்)

பேரீத்தம் பழத்தால் நோன்பு திறப்பது சிறந்தது

Posted: 12 Aug 2009 07:50 AM PDT

1) நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்குச் செல்வதற்கு முன், கனிந்த பேரீத்தம் பழங்களைக் கொண்டு நோன்பு திறப்பார்கள். அது இல்லையென்றால் சாதாரண சில பேரீத்தம் பழங்களைக் கொண்டு நோன்பு திறப்பார்கள். அதுவும் இல்லையென்றால் சில மிடர் தண்ணீர் குடித்துக் கொள்வார்கள். (ஆதாரம்: திர்மிதி)

2) உங்களில் ஒருவர் நோன்பு திறந்தால் பேரீத்தம் பழத்தைக் கொண்டு நோன்பு திறக்கட்டும், அது கிடைக்கவில்லையென்றால் தண்ணீரைக் கொண்டு நோன்பு திறக்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி, அபூதாவூத்)

விளக்கம்: கனிந்த பேரீத்தம் பழங்களைக் கொண்டு நோன்பு திறப்பது சிறந்ததாகும். அது இல்லையென்றால் சாதாரண பேரீத்தம் பழம் அதுவும் கிடைக்கவில்லையென்றால் சில மிடர் தண்ணீரைக் கொண்டு நோன்பு திறப்பது சுன்னத்தாகும்.




அடக்கத்தின் உறைவிடம் அஸ்மா[ரலி]


அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்;
என்னை ஸ¤பைர் இப்னு அவ்வாம்(ரலி) (மக்காவிலிருக்கும் போதே) மணந்துகொண்டார்கள். இந்தப் பூமியில் அவருக்குத் தண்ணீர் இறைக்கும் ஓர் ஒட்டகத்தையும் அவரின் குதிரையையும் தவிர வேறு எச்சொத்துபத்துகளும் அடிமைகளும் உடைமைகளும் இருக்கவில்லை. அந்தக் குதிரைக்கு நான் தீனிபோடுவேன்; தண்ணீர் இறைப்பேன்; அவரின் தோல் சுமலையைத்தைப்பேன்; மாவு குழைப்பேன். ஆனால், எனக்கு நன்றாக ரொட்டி சுடத் தெரியாது. என் அண்டைவீட்டு அன்சாரிப் பெண்களே எனக்கு ரொட்டி சுட்டுத் தருவார்கள். அந்தப் பெண்கள் உண்மையாளர்களாயிருந்தனர். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் கணவருக்கு வருவாய் மானியமாய்த் தந்த நிலத்திலிருந்து -நானே பேரிச்சங்கொட்டைகளை(ப் பொறுக்கி) என் தலை மீது வைத்துச் சுமந்துவருவேன். அந்த நிலம் இங்கிருந்து இரண்டு மைல் தொலைவில் இருந்தது.

(
ஒரு நாள்) நான் என் தலை மீது பேரிச்சங்கொட்டைகளை வைத்து வந்து கொண்டிருந்தேன். (வழியில்) நான்,இறைத்தூதர்(ஸல்) அவர்களை, (அவர் தம் தோழர்களான அன்சாரிகளில் சிலர் அவர்களுடன் இருக்கச் சந்தித்தேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். என்னை தமக்குப் பின்னால் அமர்த்திக் கொள்வதற்காக, 'இஃக்,இஃக்' என்ற சொல்லித் தம் ஒட்டகத்தை மண்டியிட வைத்தார்கள். (ஆனால்,) நான் ஆண்களுடன் செல்ல வெட்கப்பட்டேன். மேலும்,நான் (என் கணவர்) ஸ¤பைர்(ரலி) அவர்களையும், அவரின்ரோஷத்தையும் நினைத்துப் பார்த்தேன். அவர் மக்களில் மிகவும் ரோஷக்காரராக இருந்தார். நான் வெட்கப்படுவதைப் புரிந்துகொண்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சென்றார்கள்.
நான் (என் கணவர்) ஸ¤பைரிடம் வந்து '(வழியில்)இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் தலையில் பேரிச்சங்கொட்டைகளிருக்க என்னைச் சந்தித்தார்கள். அவர்களுடன் அவர்களின் தோழர்கள் சிலரும் இருந்தனர். நான்ஏறிக்கொள்வதற்காக(த் தம் ஒட்டகத்தை) மண்டியிடச் செய்தார்கள். நான் அவர்களைக் கண்டு வெட்கப்பட்டேன். மேலும்,உங்களின் ரோஷத்தை நான் அறிந்துள்ளேன்'' என்று கூறினேன்.அதற்கு என் கணவர், 'அல்லாஹ்வின் மீதாணையாக!நபி(ஸல்) அவர்களுடன் நீ வாகனத்தில் வருவதைவிட பேரிச்சங்கொட்டைகளை நீ சுமந்து வந்தது தான் எனக்குக் கடினமானதாக இருக்கிறது'' என்று கூறினார்.

ஆதாரம்;புஹாரி எண் 5224

இந்த பொன்மொழியில், சுமார் இரண்டு மைல் தொலைவிலிருந்து தலையில் சுமையுடன் வரும் அஸ்மா[ரலி] அவர்களை தனது ஒட்டகையில் தன்னுடன் வருமாறு நபி[ஸல்] அவர்கள்அழைக்கிறார்கள். நபி[ஸல்] அவர்கள் யார்? அஸ்மா[ரலி] அவர்களின் தந்தை அபூபக்கர்[ரலி] அவர்களின் உற்ற தோழர் மேலும் அஸ்மா[ரலி] அவர்களின் கணவர் ஸுபைர்[ரலி] அவர்களின் தோழரும் கூட. அதுமட்டுமன்றி அஸ்மா[ரலி] அவர்களின் தங்கை அன்னை ஆயிஷா[ரலி] அவர்களின் கணவர். இவை எல்லாவற்றிற்கும் மேலாக கடுகளவும் கெட்ட எண்ணம் இல்லா இறைத்தூதர். அப்படியிருந்தும் அஸ்மா[ரலி] அவர்கள் வெட்கப்பட்டு,தன் கணவர் ஸுபைர்[ரலி] அவர்களின்ரோசத்தையும் மனதில் கொண்டு நபி[ஸல்] அவர்களோடு பயணிப்பதை தவிர்த்துவிட்டார்கள் எனில், இதுதான் இறையச்சம் கலந்த கற்புநெறி.

இன்றைய நவநாகரீக மங்கையர்களில் பெரும்பாலோர்,கணவனின் அண்ணனோடு அல்லது தம்பியோடு அல்லது உடன்பிறவா சகோதரர்களோடு மட்டுமன்றி கணவரின் நண்பர்களோடும் இரு சக்கர வாகனத்தில் பயணிப்பதையும்,மேற்கண்டவர்களோடு சில நேரங்களில் தனியாக பஸ்/ரயில்போன்றவற்றிலும் பயணிப்பதை பார்க்கிறோம். இவ்வாறான செயல்களையுடைய முஸ்லிம் பெண்களும்,

சென்னை போன்ற பெருநகரங்களில் 'ஷேர்ஆட்டோ' வில் அடுத்த ஆண்களோடு பயணிப்பது, நெருக்கடி மிகுந்த பஸ்களில் பயணிப்பது இவ்வாறான செயல்களையுடைய முஸ்லிம் பெண்களும்,

சமுதாய அமைப்புகள் அழைப்பு விடுக்கும் போராட்டங்களுக்கு சென்று, ரோட்டிலே நின்று கொண்டு,அங்கே ஆண்களுக்கு சமாமாக குரலை உயர்த்தி கோஷம் போடுவதோடு அந்நியர்களின்பார்வைக்கும் இலக்காகும் முஸ்லிம் பெண்களும்,

இந்த அஸ்மா[ரலி] அவர்களின் வாழ்விலிருந்து படிப்பினை பெறவேண்டும். அல்லாஹ், அஸ்மா பின்த் அபூபக்கர்[ரலி] அவர்களை பொருந்திக்கொள்வானாக!


“"யா அல்லாஹ்! உனது திருப்தியின் மூலம் கோபத்திலிருந்து பாதுகாப்புத் தேடுகின்றேன். உனது மன்னிப்பிலிருந்தும், தண்டனையிலிருந்தும் பாதுகாப்புத் தேடுகின்றேன். உன்னுடைய அருளால் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன். நீ தூய்மை யானவன். நீ உன்னைப் புகழ்ந்தது போல் நான் உன்னைப் புகழ்வதற்கு முடியாது. “
__._,_.

இம்மாதத்தின் பன்னீர்த்துளிகள்தான் ஏனைய 11 மாதங்களிலும் வாசம் வீசப்போகின்றது .

ஓர் மாலைப் பொழுது சூரியனின் ஒளிக் கீற்றுக்கள் விண்மீன் களைக் கண்டு ஒழிந்துகொள்ளும் நேரம். கடற்கரையிலே தூவிவிட்ட மணற்துகள்களைப் போல் மக்கள் கூட்டம். ஆரவாரமாயும், குதூகலமாயும் நிறைந்த உள்ளங்கள்வானத்தைப் பார்வைகளால் சுற்றி வருகின்றன. வானத்தில் என்னதான் அதிச யம் இருக்கிறது...? என்று உங்கள் எண்ணங்கள் கதைத்துக் கொள்வது என் செவிகளுக்குக் கேட்கிறது. வேறொன்றுமில்லை. ரமழானை வரவேற்க தலைப்பிறை தென்ப டுமா..?! என்ற ஏக்கம்தான்!

உண்மையிலேயே இறைவன் அருளிய பெரும் மாண்புமிக்க மாதம்தான் ரமழானென கூற முடிகி றது. இறை மொழியும் எம்நபிக்கு வஹியாய் வந்து சேர்ந்ததும் இம்மா தத்திலேதான். பாவங்கள் போக்கி இறையோனின் அருள் போர்த்திக் கொள்ளும் உன்னத லைலதுல் கத்ர் இதிலேதான்மறைந்திருக்கிறது. திருமறையும் இவ்வாறு கூறுகிறது;

"ரமழான் மாதம் எத்தகைய (மகத்துவமுடைய) தென்றால் அதில் தான் மனிதர்களுக்கு நேர்வழி காட்டும் திருக்குர்ஆன் (எனும் வேதம்)இறக்கப்பட்டது. அது (நன்மை, தீமையை) பிரித்தறிவித்து நேரான வழியைத்தெளிவாக்கக் கூடிய வசனங்களை உடையதாகவும் இருக்கிறது. ஆகவே,உங்களில் எவர் இம்மா தத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும்..." (அல் பகறா: 185)

இப்படியாகத் தொடர்கிறது இவ்வசனம்.

ஈமானிய நெஞ்சங்களே! இப் புனிதம் பூத்துக் குழுங்கும் இம்மா தத்தை நாம் இழந்தால் எம்மைவிட நஷ்டவாளராக யாரிருக்க முடியும்...?! சிந்தனையை சிறிது அலசிப் பாருங் கள். ஒரு கனம் நாம் கடந்து வந்த ரமழான்களில் பார்வையை விட்டுப் பாருங்கள்.

இறையச்சத்தோடு, ஈமானிய உணர்வோடு எத்தனை ரமழான் களை கடந்து வந்திருப்போம். ஓரி ரண்டாவது... நிச்சயம் இல்லாமலி ருக்கும். கூடியதுநோன்பின் சில நாட்கள் உற்சாகத்தோடு, அமல்கள் செய்து கடத்தியிருப்போம். ஆனால், போகப் போக வலுவில்லாமல் எம் உள்ளங்கள் ஆசைகளுக்கும் வீணுக் கும் இடம் கொடுத்திருக்கும். நான் சொல்வது உண்மைதானே...?யதார்த் தத்தில் இவை இல்லாமலில்லை. நானும்தான் நீங்களும்தான் நிச்சயம் பழைய ரமழானினது பக்கங்களை மீட்டிப் பார்க்க வேண்டும். இதன் மூலமல்லவா இந்த ரமழானையா வது உயிர்ப்புள்ளதாக கழித்திட முடியும்.

வரட்சியான இதய எண்ணங் களை நீரூற்றி செழிப்பான தரையாக மாற்ற இந்நோன்புகள் நிச்சயம் பயிற்சியளிக்கும். இந்த ஒரு மாதத் தில் எம் உள்ளங்களில் தெளிக்கும் பன்னீர்த்துளிகள்தான் நாளையாகப் போகும் பதினொரு மாதங்களிலும் வாசம் வீசப் போகிறது. அப்போது எப்படி நாம் அலட்சியமாய் இருந் திட முடியும்...? ஆதலால் தற்போதி லிருந்தே நாம் எம்மை தயார்படுத்த வேண்டும். எப்படி தயார்படுத்துவது என்று உங்கள் சிந்தனை ஓடுகிறதா? கேளுங்கள்.

கடந்த ரமழானினது நோன்புகளினை உம் விழிகளுக்குள் காட்சிப்ப டுத்துங்கள். உங்களது அமல்கள், செயற்பாடுகள் எந்நிலையில் இருந்தது? எல்லா நோன்புகளையும் உளத்திருப்தியோடு பிடித்தேனா? அல்லாஹ்விற்குப் பொருத்தமான முறையில் அந்நோன்புகள் இருந்ததா? எனது தொழுகைகள் எவ்வாறிருந் தது? குர்ஆனுடனான தொடர்புகள் என்னுள் நெருங்கியிருந்ததா?ஒவ்வொரு பத்தினதும் சிறப்பறிந்து எனது செயற்பாடுகள் அமைந்திருந்ததா?...இப்படியாக உங்களது நினைவுகளை வரிசைப்படுத்துங்கள்.

அதன்படி எம்மை அடையவிருக்கும் ரமழானினை உள்ளத்தில் கனவு காணுங்கள். கண்ட கனவுகளை சிந்த னையில் விட்டு மனதினுள் எழுதிக் கொள்ளுங்கள். அதுதான் திட்டமிடலாக மாறும். இப்பொழுது புரிந்து ணர்ந்தீர்களா? தயார்படுத்துவது எப்படி என்று...?! புதுப்புது வித்தியாச மானவிடயங்களையும் புகுத்திக் கொள்ளுங்கள்.

சொந்தங்களே! சென்ற ரமழானில் வாழ்ந்த எத்தனையோ உயிர்கள் இந்த ரமழானை அனுபவிக்க இறைவன் விதியில் அவனிடமே அழைத்துக் கொண்டிருப்பான். ஆனால் எமது அதிஷ்டம் இந்த ரமழானையும் அடையும்பாக்கியத்தை அவன் எமக்காய் விட்டிருக்கிறான். ரமழானில் எம்உணர்வுகளையும், உள்ளத்தையும், உடலினையும் அழுக்ககற்றி தூய்மையாகதயார் படுத்துவோம். எமது ஆசைகள் எம்மை மீறாமல் தடையிட்டுக் கொள்வோம்.

இன்ஷா அல்லாஹ் இந்த ரமழானை எமக்குத் தந்து தக்வாவை ஊட்டி இறையச்சத்தில் திளைக்க உறுதிகள் எம்முள் புடம் போடட்டும்.

"ரமழானே! உன் நினைவுகள்

என்னுள்ளும் அலைமோதுகின்றன...

என் உணர்வுகளுக்கு சுவாசமளிக்க

ஓடிவா...!!!"

Wednesday, August 12, 2009

மீறி கண்டனபேரணிமணிப்பூர்:போலி என்கவுண்டரை கண்டித்து ஊரடங்கு உத்தரவையும்


இம்பால்:ப‌ட்ட‌ப்ப‌க‌லில் போலி என்க‌வுண்ட‌ரில் இளைஞ‌ர் ஒருவ‌ரையும்,க‌ர்ப்பிணி பெண்ணையும் சுட்டுக்கொன்ற‌ காவல்துறையின் அக்கிர‌ம‌ ந‌ட‌வ‌டிக்கைக்கு எதிராக‌ ம‌ணிப்பூரில் க‌டும் எதிர்ப்பு கிள‌ம்பியுள்ள‌து.

நூற்றுக்க‌ண‌க்கான‌ பேர் க‌ல‌ந்துக்கொண்ட‌ க‌ண்ட‌ன‌ பேர‌ணியில் முத‌ல்வ‌ர் இபோபி சிங் ராஜினாமா செய்ய‌வும்,கொலைக்கார‌ர்க‌ளான‌ போலீஸ் அதிகாரிக‌ளின் மீது கொலைவ‌ழ‌க்கு ப‌திவுச்செய்ய‌வும்,பாதுகாப்பு ப‌டையின‌ரை க‌ட்ட‌விழ்த்து விடும் ச‌ட்ட‌ங்க‌ளை வாப‌ஸ் பெறுத‌ல் உள்ளிட்ட‌ கோரிக்கைக‌ள் வைக்க‌ப்ப‌ட்ட‌ன‌.

ச‌மூக‌ அமைப்பான‌ அபூன்பா லூப் என்ற‌ அமைப்புதான் இந்த‌ பேர‌ணிக்கு ஏற்பாடுச்செய்திருந்த‌து.ஊர‌ட‌ங்கு உத்த‌ர‌வும், அதிகாரிக‌ளின் மிர‌ட்ட‌லையும் புற‌க்க‌ணித்து நூற்றுக்க‌ண‌க்கான‌ ந‌ப‌ர்க‌ள் இதில் க‌ல‌ந்துக்கொண்ட‌ன‌ர். போராட்ட‌ம் தொட‌ருமென‌ அபூன்பா லூப் த‌லைவ‌ர்க‌ள் தெரிவித்த‌ன‌ர்.க‌ட‌ந்த‌23ம் தேதிதான் போலி என்க‌வுண்ட‌ரில் போலீஸ் க‌மான்டோக்க‌ள் ஒரு இளைஞ‌ரையும் க‌ர்ப்பிணி பெண்ணையும் சுட்டுவீழ்த்தின‌ர்.

க‌ர்ப்பிணியின் வய‌து 23.தீவிர‌வாத‌ இய‌க்க‌த்தில் முன்பு உறுப்பின‌ராக‌ இருந்த‌ ந‌ப‌ருட‌ன் ஏற்ப‌ட்ட‌ மோத‌லில்தான் அவர் கொல்ல‌ப்ப‌ட்ட‌தாக‌ போலீஸ் தெரிவித்த‌ நிலையில் தெஹல்கா ப‌த்திரிகை வெளியிட்ட‌ என்க‌வுண்ட‌ர் புகைப்ப‌ட‌ங்க‌ள் போலீஸின் கூற்று பொய்யென‌ நிரூபிக்கின்ற‌ன‌. போன் செய்வ‌த‌ற்காக‌ பூத்திற்குள் நுழைந்த‌ இளைஞனை எந்த‌வொரு எதிர்ப்பு இல்லாம‌ல் போலீஸ் சுட்டுக்கொன்ற‌ காட்சிக‌ள‌ட‌ங்கிய‌ புகைப்ப‌ட‌த்தைதான் டெஹ‌ல்கா வெளியிட்ட‌து. போலீஸ் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிசூட்டில் கர்ப்பிணி பெண்மணியொருவர் கொல்லப்படவும், 5 பேருக்கு காயமும் ஏற்படவும் செய்தது.

போலி என்கவுண்டர் செய்தி வெளியானவுடன் பொதுமக்கள் கடும் கோபமடைந்து அரசு மற்றும் போலீசுக்கெதிராக போராடத்துவங்கினர். இதற்கிடையில் போலி என்கவுண்டருக்கு காரணமான முதல்வர் சட்டமன்ற உறுப்பினர்களை திசைதிருப்ப முயல்கிறார் என மணிப்பூர் மாணவர் அமைப்பான செலியாங் ரோங் கூறியுள்ளது. ஆயுதப்படை சிறப்பு சட்டம்,தேசப்பாதுகாப்பு சட்டம்,பாதிக்கப்பட்ட பிரதேச சட்டம் ஆகியவற்றின் மூலம் மணிப்பூர் அரசு அநீதமான தாக்குதல்களையும்,மனித உரிமை மீறல்களையும் சட்டபூர்வமாக்கியுள்ளதாக அவ்வமைப்பு வெளியிட்ட பத்திரிகை செய்தியில் கூறியுள்ளது. மாநிலத்தில் இதுவரை நடைபெற்றுள்ள அனைத்து என்கவுண்டர் படுகொலைகளைப்பற்றியும் நடுநிலையான விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் அவ்வமைப்பு கோரியுள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ், தெஹல்கா

ஷோபியான்:மரபணு சோதனைக்கு அனுப்பிய மாதிரிகளில் மோசடி.கொலை செய்யப்பட்ட பெண்களுடையதல்ல என்று ரிப்போர்ட்


புதுடெல்லி:காஷ்மீர் பள்ளத்தாக்கை ஒருமாதத்திற்கும் மேலாக கலவரக்காடாக்கிய ஷோபியான் நிகழ்வில் பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட கொல்லப்பட்ட பெண்களின் மரபணு சோதனையில் மோசடி நடந்துள்ளதாக பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட ஆஸியா ஜான்,நிலோஃபர் ஜான் ஆகியவரின் உடலிலிருந்து எடுத்த மாதிரிகளை அனுப்பாமல் வேறொன்றை அதிகாரிகள் ஃபாரன்சிக் சோதனைக்கூடத்திற்கு அனுப்பியதாக கருதப்படுகிறது.
கொல்லப்பட்ட பெண்களின் மர்ம உறுப்புகளிலிருந்து எடுக்கப்பட்டதாக அனுப்பப்பட்ட திரவம் அவர்களின் இரத்த சாம்பிள்களுடன் ஒத்துப்போகவில்லை என்று சோதனைக்கூட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.அதனால்தான் அனுப்பட்ட மாதிரிகள் கொல்லப்பட்ட பெண்களுடையதல்ல என்ற முடிவுக்கு வந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.ஆனால் அதிகாரப்பூர்வமாக இதுபற்றிய விளக்கம் வரவில்லை.குற்றவாளிகளை பாதுகாப்பதற்காக கொல்லப்பட்ட பெண்களின் உடல்களிலிருந்து திரவ மாதிரிகளை எடுக்காமல் வேறொரு நபரிடமிருந்து எடுக்கப்பட்டதாக இருக்கலாம்.வழக்கு விசாரணையில் மோசடி நடைபெறுவதாக ஆரம்பத்திலேயே குற்றச்சாட்டு எழுந்தது.
செய்தி: