அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Thursday, October 28, 2010

அணு விபத்து நட்டஈடு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து

India signs nuclear liability treaty - World News Headlines in Tamil


வியன்னா, அக். 28-

அணு விபத்து நட்டஈடு ஒப்பந்தத்தில் இந்தியா நேற்று கையெழுத்திட்டது. வியன்னாவில் உள்ள சர்வதேச அணுசக்தி நிறுவன அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் இந்த ஒப்பந்த கையெழுத்தானது.

இன்னும் ஒரு வாரத்தில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியா வருவதையொட்டியே இந்த ஒப்பந்தம் அவசர அவசரமாக கையெழுத்திடப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதை அடுத்து அமெரிக்க நிறுவனங்கள் இந்திய அணுசக்தித் துறையில் முதலீடு செய்ய முன்வரும் என்று தெரிகிறது.

மிகவும் சர்ச்சைக்கிடையே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அணுசக்தி நட்டஈட்டு சட்ட மசோதா மீது அமெரிக்க அணுசக்தி நிறுவனங்கள் சந்தேகம் தெரிவித்திருந்தன. இந்திய அணுசக்தி நட்டஈட்டு சட்டத்திலிருந்து அமெரிக்க நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அளிக்கவே இந்தியா இப்போது அணு விபத்து நட்டஈடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த ஒப்பந்தப்படி சர்வதேச விதிகளின்படி நட்டஈடு அளித்தால் போதுமானது. இந்த ஒப்பந்தப்படி அணு உலைகளை அல்லது அணு மின் திட்டத்தை செயல்படுத்தி வரும் நிறுவனம் தர வேண்டிய நட்டஈட்டு நிதி காலவரையறை, சட்டப்படியாக எடுக்கக் கூடிய நடவடிக்கைகள், இன்சூரன்ஸ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டதாக உள்ளது இந்த ஒப்பந்தம்.

இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அணுவிபத்து நட்டஈட்டு சட்டம் குறித்து சந்தேகங்களைத் தெரிவித்த அமெரிக்க நிறுவனங்கள் அதற்கு நிவாரணமாக இந்தியா அணு விபத்து நட்டஈடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று நெருக்கடி கொடுத்தன. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியாவுக்கு வருவதற்கு முன்னர் இப் பிரச்னைக்குத் தீர்வு ஏற்பட்டால்தான் அவரது இந்திய பயணத்தின்போது புதிய அணு மின் திட்டடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட முடியும் என்று எண்ணத்தில் இந்தியா அணு விபத்து நட்ட ஈடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட நிர்பந்திக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.





இந்தோனேசியாவில் சுனாமி, எரிமலை வெடிப்பு: சாவு எண்ணிக்கை 340 ஆக அதிகரிப்பு

Death toll in Indonesian tsunami, volcano tops 340 - World News Headlines in Tamil


ஜகார்த்தா, அக். 28-

இந்தோனேசியாவில் சுனாமி தாக்குதல் மற்றும் எரிமலை வெடிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 340 ஆக உயர்ந்துள்ளது. அங்கு மோசமான காலநிலை நிலவியதால் மீட்புப் பணியை உடனடியாக மேற்கொள்ள முடியாமல் போனது. புதன்கிழமை காலை முதல் மீட்புப் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

சுனாமி தாக்கிய மெந்தாவைய் தீவில் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்புக் குழுவினர் இறக்கிவிடப்பட்டனர். சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொட்டலங்கள், தண் ர் பாக்கெட்டுகள், மருந்து, மாத்திரைகள், படுக்கை விரிப்புகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. அலைகளால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு யாராவது உயிருக்கு போராடுகிறார்களா என்பதை கண்டறியும் பணியில் மீனவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மெந்தாவைய் தீவில் திங்கள்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்க வீச்சு 7.7 அலகாக இருந்ததால் சுனாமி ஏற்பட்டது. 10 அடி உயரத்தில் உருவான அலைகள், மெந்தாவைய் தீவுக்குள் புகுந்தது. இதில் 150 வீடுகள் சேதம் அடைந்தன. சுனாமியில் சிக்கி உயிரிழந்தவர்களில் 154 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 500 பேரைக் காணவில்லை. அவர்களது நிலைமை என்னவென்று தெரியவில்லை. அவர்களை தொடர்ந்து தேடும் பணி நடந்து வருகிறது.

இதேபோல் இந்தோனேசியாவில் ஜாவா தீவில் யோக்யகர்தா நகர் அருகே மவுண்ட் மெரபி என்ற எரிமலை உள்ளது. அது கடந்த சில நாட்களாகவே புகையை கக்கியபடி இருந்தது. எப்போது வேண்டுமானாலும் அந்த எரிமலை வெடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் மவுண்ட் மெரபி முதன் முறையாக வெடித்தது. நேற்று மீண்டும் வெடித்தது. இதையடுத்து, எரிமலையில் இருந்து ஏராளமான சாம்பல் வெளியே வந்தவண்ணம் உள்ளது. சூடான காற்றும் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இதனால், எரிமலை சரிவில் வசித்து வரும் 28 பேர், பலத்த தீக்காயங்களுடன் பலியானார்கள். அவர்களின் உடல்கள், ராட்சத பைகள் மூலம் அடிவாரத்துக்கு கொண்டுவரப்பட்டன. அவர்களை அடையாளம் கண்டறியும் பணி நடந்து வருகிறது.

மந்திர சக்தி படைத்தவராக கருதப்படும் மாபா மரித்ஜான் என்ற ஆன்மிக குருவும் பலியாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும், 14 பேர் கடுமையான தீக்காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சாவு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. ஏராளமான கால்நடைகளும் இறந்து விட்டன. எரிமலைச் சரிவில் இருந்த பல வீடுகள் இடிந்து விட்டன. அப்பகுதிகளில் எங்கு பார்த்தாலும் எரிமலை சாம்பல் கொட்டிக்கிடக்கிறது. புகை வெளிவந்தபடி இருப்பதால், லாவா எனப்படும் எரிமலைக் குழம்பு வெளிவருகிறதா? என்று பார்க்க முடியவில்லை. உயிர் தப்பியவர்களை அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது. நல்லவேளையாக, சாம்பல் பரவியபோதிலும், விமான போக்குவரத்து பாதிக்கப்படவில்லை.

மவுண்ட் மெரபி எரிமலை தற்போது அமைதியாக காணப்படுவதாக, சுரோனோ என்ற எரிமலை ஆராய்ச்சி நிபுணர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், இது தற்காலிக அமைதியா என்று தெரியவில்லை. உடனடியாக மீண்டும் எரிமலை வெடிப்பது போல தெரியவில்லை. இருப்பினும், எதையும் உறுதியாக சொல்ல முடியாது என்றார். எரிமலை வெடிப்பு பற்றி அறிந்தவுடன், ஹனோய் தீவுக்கு சென்றிருந்த அதிபர் சுசிலோ பாம்பங் யுதோயோனே, அவசரமாக இந்தோனேசியாவுக்கு திரும்பினார்.




டாஸ்மாக் கடை

கோவில்
இல்லாத ஊரிலும்
'குடி' இருக்கிறது
டாஸ்மாக் கடை!

பட்டொளி வீசி பறக்குது பாரீர்..



அடைபட்டுக்கிடக்கிறது
தேசம்..!

மக்களின் வரிப்பணம்
அரசுக்கருவூலத்தில்
அடைக்கலமாகி..
திரும்பி வருகின்றன
இலவசம் என்னும்..
"இழிசொல்லுடன்..!"

செத்த பின்பு சிதைமூட்டும்
திருநாட்டில்..
இன உணர்வு செத்ததற்காக
தன் உயிர்ச்சதையில்
தீமூட்டி எரிந்தனர்
அப்துல் ரவூப்பும்
முத்துக்குமாரும்..

ஈழம் கருகிய இறுதி நேரத்தில்
பிண வாடை முகர்ந்தும்
அதிகாரத்தின் வேர்
அறுந்து விடாமல்
உரத்த குரலில்
துயரப்படுகிறார்கள்
உடன்பிறப்புகள்..!

”வாக்களிக்க யாரும் இனி
வருந்த வேண்டாம்..!”
எந்திரங்கள் பழகிக்கொண்டன
ஜனநாயகத்தின் மாண்பைக் காக்க..!

தேசியக் கொடியில் -

ஈழத்தமிழனின்
இரத்தம் தெறித்து
சிவப்பு நிறமானது..!

”பாக்சைட்”டுக்காக
பசுமை வேட்டையாடியதில்
பச்சை நிறம் கீழே
பட்டொளி வீசி பறக்கிறது..!

ஏகாதிபத்தியத்திடம்
சரணடைபவர்களுக்காக
வெண்சாமரம் வீசுகிறது
வெள்ளைக் கொடி..!


படுகொலை படங்களை பீரிஸ் நிராகரிப்பு

உலகத் தமிழர் பேரவை வெளியிட்ட படங்களில் ஒன்று
உலகத் தமிழர் பேரவை வெளியிட்ட படங்களில் ஒன்று
உலகத் தமிழர் பேரவையால் வெளியிடப்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை காண்பிப்பதாகக் கூறப்படும் புகைப்படங்களை இலங்கை வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் நிராகரித்துள்ளார்.

இலங்கை போரின் போது இலங்கை இராணுவத்தினரால் இந்த தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறி அந்தப் புகைப்படங்களை உலகத் தமிழர் பேரவை வெளியிட்டிருந்தது.

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பலர் கொல்லப்பட்டிருப்பதை அந்தப் படங்கள் காண்பித்தன. கொலை செய்யப்பட்ட பெண்களின் அரை நிர்வாணப்படங்களும் அதில் இடம்பெற்றிருந்தன.

அதிகார பூர்வ விஜயம் ஒன்றை முன்னிட்டு அமைச்சர் ஜி. எல். பீரிஸ் லண்டன் வந்திருந்த தருணத்தில் இந்தப் படங்கள் வெளியாகியிருந்தன.

ஆர்ப்பாட்டத்தில் பிடிக்கப்பட்ட படம்
ஆர்ப்பாட்டத்தில் பிடிக்கப்பட்ட படம்
விடுதலைப்புலிகளின் முன்னாள் ஆதரவாளர்கள் சிலரையும் உள்ளடக்கியதாகக் கூறப்படும் உலகத் தமிழர் பேரவையினால் வெளியிடப்பட்ட இந்தப் புகைப்படங்களின் நம்பகத்தன்மை குறித்து தெளிவுபடுத்த முடியவில்லை.

இலங்கை அரசாங்கத்தின் அந்தஸ்தை சீர்குலைப்பதை நோக்கமாகக் கொண்டே இந்தப் படங்கள் வெளியிடப்பட்டதாக பீரிஸ் கூறியுள்ளார்.

இந்தப் படங்களை இலங்கை இராணுவத்தினரிடம் இருந்து கிடைத்ததாகக் கூறி, விடுதலைப்புலிகளின் உளவுத்துறை அதிகாரி ஒருவரே தந்ததாக உலகத் தமிழர் பேரவை கூறியுள்ளது.

இதற்கிடையே அமைச்சர் இன்று லண்டனில் உரையாற்றிய மண்டபத்துக்கு வெளியே ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் அவரது வருகையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நடத்தினார்கள்.

போலியோவை ஒழிக்கும் புதிய மருந்து

போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுகின்றது
போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுகின்றது

போலியோ கிருமிக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள புதிய மருந்து ஒன்று போலியோ பாதிப்பை கிட்டதட்ட 90 சதவீதம் குறைத்துள்ளது. மருத்துவ சஞ்சிகையான ‘தி லான்செட்’ இல் வெளியாகியுள்ள ஆய்வு ஒன்றில், தற்போது பிரபலமாக இருக்கின்ற மருந்தை விட இந்த புதிய மருந்து குழந்தைகளிடம் போலியோவை தடுப்பதில் சிறப்பாக செயற்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த 1988 போலியாவால் பீடிக்கப்பட்ட நாடுகளின் எண்ணிக்கையானது 125 ஆக இருந்தது, இது 2005 ஆம் ஆண்டில் நான்காக குறைந்தது. இதற்கு காரணம் கூட்டம் கூட்டமாக நடத்தப்படும் போலியோ தடுப்பு மருந்து கொடுக்கும் முகாம்கள் என்று கூறப்படுகிறது.

போலியோ டைப் 1, டைப் 2, டைப் 3 என்ற மூன்று வகையான கிருமிகளால் ஏற்படுகிறது. பொதுவாக தடுப்பு மருந்துகள் இந்த மூன்று கிருமிகளுக்கு எதிராக அல்லது ஏதாவது ஒரு கிருமிக்கு எதிராக செயற்பட்டு வந்தது.

இந்த நிலையில் இந்த புதிய மருந்தானது, தற்போது பாதிப்பை ஏற்படுத்தி வரும் இரண்டு வகையான கிருமியை மட்டுமே குறிவைத்து செயற்படுகின்றது.

இந்தியாவில் சுமார் 800 குழந்தைகளிடம் நடைபெற்ற ஆய்வில், இந்த புதிய மருந்து ஏற்கனவே இருக்கும் மருந்தை விட 30 சதவீதம் மிகவும் சிறப்பாக செயற்படுவது தெரியவந்துள்ளது.

அதனை தொடர்ந்து இந்த மருந்து ஆப்கானிஸ்தான், இந்தியா மற்றும் நைஜீரியாவில் போலியோ தடுப்பு மருந்து முகாம்களில் பயன்படுத்தப்பட்டது.

இந்த மருந்தை பயன்படுத்திய பின்னர் இந்தியாவில் போலியோவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிட்டதட்ட 90 சதவீதம் குறைந்துள்ளது. நைஜீரியாவில் 95 சதவீதம் வரையில் குறைந்துள்ளது.

இதற்கு காரணம் போலியோ மருந்து குறித்த விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் புதிய மருந்து என இந்த ஆய்வை நடத்திய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மருந்து மூலமாக ஒட்டு மொத்தமாக போலியோவை உலகத்தில் இருந்து அகற்ற முடியும் என்றும் இவர்கள் நம்புகின்றனர்.

ஜெய்பூர் குண்டுவெடிப்பில் RSS முக்கிய குற்றவாளி ATS குற்றப்பத்திரிகை தாக்கல்

2007 ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் தர்காவில் நடைபெற்ற குண்டுவெடிப்பை விசாரணை செய்துவரும் ராஜஸ்தான் மாநில தீவிரவாத எதிர்ப்பு படையினர் (ATS), தங்களின் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர். இதில் RSS ன் முக்கியத் தலைவர் உட்பட 5 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பில் மூன்று பேர் உயிரிழந்தனர். 15 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இவர்கள் மீது திட்டமிட்டு கூட்டுசதி செய்து படுகொலை செய்தது, வழிபாட்டுத் தலத்தை குண்டுவைத்து தர்த்தது போன்ற குற்றங்கள் ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

மூத்த RSS தலைவர் இந்திரேஷ் குமார் இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாவார். இதன் மூலம் இந்த தீவிரவாத நாசகர வேலையை செய்தது RSS இந்துத்துவ தீவிரவாத சக்திகள் தான் என்பது நிரூபணமாகியுள்ளது. இது போல் மலேகான், ஹைதராபாத் போன்ற பல குண்டுவெடிப்புகளிலும் RSS இந்துத்துவ தீவிரவாத சக்திகள் மூளையாக செயல்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த தீவிரவாத செயல்களுக்கும் RSS க்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று RSS தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் முக்கிய RSS தலைவர் மீது ATS ஆதாரத்துடன் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளதைத் தொடர்ந்து, இதுபோன்ற நாசகர வேலைகளை RSS தொடர்ந்து செய்துவருகின்றது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. மேலும் இதுபோன்ற தீவிரவாத தேசவிரோத செயல்களின் மூலம் தேசிய நலனுக்கு குந்தகம் விளைவிப்பதோடு வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியாவின் உயிர்மூச்சை நிறுத்தி இந்தியாவின் இறையாண்மைக்கே பாதிப்பு விளைவிக்கும் செயல்களில் RSS ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளது.

806 பக்கங்களை கொண்ட இந்த குற்றப்பத்திரிக்கை ஜுடிசியல் மாஜிஸ்ட்ரேட் ஜகேந்திரா குமார் ஜெயின் முன்னிலையில் தீவிரவாத எதிர்ப்பு படையினரால் தாக்கல் செய்யப்பட்டது. குற்றவாளிகளின் மீது இந்திய குற்றவிய சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. அதில் 302 (கொலை), 307 (கொலை முயற்சி), 120B (தீவிரவாத சதி) மற்றும் 295 (வழிபாட்டு மையங்களை தாக்குதல் மற்றும் சேதப்படுத்துதல்) ஆகிய பிரிவுகள் குறிப்பிடத்தக்கவை.

இந்த வழக்கில் இது வரை 133 நேரடி சாட்சிகளை விசாரிக்கப்பட்டுள்ளனர். வரும் அக்டோபர் 26 ஆம் தேதி இந்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வருகின்றது.

Insulin

டலில் இன்சுலின் சுரப்பது மிகக் குறைந்த அளவில் உள்ளவர்களுக்கும், அறவே இன்சுலின் சுரப்பு இல்லாதவர்களுக்கும் இன்சுலின் மருந்தை ஊசியாகப் போடுவதால் மட்டுமே சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள முடியும்.

இன்சுலின் வகைகள்

இன்சுலின் மருந்தில் பல வகைகள் உள்ளன. அவை உடலில் வேலை செய்யும் நேரத்தின் அளவைப் பொறுத்து மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

ல்லது குறுகிய நேரம் வேலை செய்பவை (Short Acting Insulin)

ல்லது நடுத்தரமான நேரம் வேலை செய்பவை (Intermediate Acting Insulin)

ல்லது நீண்ட நேரம் வேலை செய்பவை (Long Acting Insulin)

இவை உடலில் வேலை செய்யும் நேரம் மட்டுமின்றி வேறு சில பண்புகளிலும் பல வேறுபாடுகள் காணப்படுகின்றன.

உடலில் செலுத்தி எவ்வளவு நேரத்தில் அதன் இயக்கம் துவங்குகிறது? (On self of time of action)

உச்சகட்ட அளவு இரத்தத்தில் எப்போது அடைகிறது? (Time of peak Plasma Concentration)

எப்போது முற்றிலுமாக இரத்தத்திலிருந்து மறைகிறது?

இந்தப் பண்புகளின் அடிப்படையில் நோயாளியின் உடல் நிலைக்கு ஏற்ப, நோயின் தன்மை,தீவிரம் ஆகியவற்றின் அடிப்படையில் உங்கள் மருத்துவர் நீங்கள் எந்த வகை இன்சுலினை, எந்த அளவில் போட்டுக் கொள்ள வேண்டும் என்பதை முடிவு செய்வார்.

பெரும்பாலான நோயாளிகளுக்கும் குறுகிய நேரம் வேலை செய்யும் இன்சுலினும், நடுத்தர நேரம் வேலை செய்யும் அல்லது நீண்ட நேரம் வேலை செய்யும் இன்சுலினும் சேர்த்துக் கொடுக்க வேண்டியதிருக்கும்.

குறுகிய நேரம் வேலை செய்யும் இன்சுலின்

ல்லது இதை கரையும் இன்சுலின் என்றும் அழைக்கிறார்கள்.
*நிறமற்ற,தெளிவானதிரவமாகஇருக்கும்.
* இது விரைவாக வேலை செய்யத் துவங்குவதால் உடனடியாக இரத்தத்தின் சர்க்கரை அளவு குறையும். ஆனால், குறுகிய காலத்திற்கு மட்டுமே இது வேலை செய்வதால், ஒரு நாளில் குறைந்தது 2முதல் 3 தடவைகள் இந்த ஊசி போட வேண்டியதிருக்கும்.

நடுத்தர நேரம் வேலை செய்யும் இன்சுலின்

* சாதாரண கரையும் இன்சுலினுடன் புரோட்டாமின் (PERTAMINA) என்ற ஒரு புரதத்தைச் சேர்த்து இவ்வகை இன்சுலின் தயாரிக்கப்படுகிறது.

* இது கலங்கிய நிலை திரவமாக (Cloudy Liquid) இருக்கும். இதில் இரண்டு வகை முக்கியமானவை.

* N.P.H.நியூட்ரல் புரோட்டாமின் ஹாகிடிரான் (Natural PERTAMINA Hoedowns)லென்டி இன்சுலின் (Lento Insulin)

* அல்ட்ரா லென்டியுடன் செமிலென்டி-யைச் சேர்த்து லென்டி இன்சுலின் செய்யப்படுகிறது.

* இந்த இரண்டுவகை இன்சுலினும் வேலை செய்யும் பண்புகளில் ஒரே வகையானவையே.

நீண்ட நேரம் வேலைசெய்யும் இன்சுலின்

* புரோட்டாமின் கிங் இன்சுலின், அல்ட்ரா லென்டி இன்சுலின் ஆகிய இருவகைகள் முக்கியமானவை.


* கட்டுப்பாட்டில் இருக்கும் நீரிழிவு நோய்க்கு வழக்கமாக இந்த வகை உபயோகிக்கப்படுவதில்லை.

குறுகிய & சுமாரானநேரம் வேலை செய்யும் இன்சுலின் கலவைகள்

(Pre Mixed Insulin)

· இவ்வகைஇன்சுலின்கள்இப்போதுபிரபலமாகிவருகின்றன.
* குறுகிய நேரம் வேலை செய்யும் இன்சுலினும், சுமாரான நேரம் வேலை செய்யும் இன்சுலினும் கலந்த கலவையாக இவை தயாரிக்கப்படுகின்றன.

தனித்தனியே இவற்றை எடுத்துக் கலந்து போடும் போது அளவுகளில் மாற்றங்கள் ஏற்படும் சிரமத்தை இவை குறைக்கின்றன.

*நீரிழிவு நோய் நல்ல கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் நோயாளிகளுக்கே இவ்வகை இன்சுலின்கள் பரிந்துரைக்கப்படும்.

எந்த நிலையில் இன்சுலின்பரிந்துரைக்கப்படும்?

* சிறுவயதினருக்கு, முக்கியமாக குழந்தைகளுக்கு வரும் நீரிழிவு நோய்.

* நோயாளியின் எடை மிகக் குறைவாகவும், ஊட்டச்சத்து குறைபாடுகள் அதிகமாகவும் இருந்தால்.

* இரத்தத்தின் சர்க்கரை அளவு மிக அதிகமாகி கோமா நிலை தோன்றும் வாய்ப்பு உள்ள தருணங்களில்.

*பெரியஅறுவைசிகிச்சைகளுக்குமுன்.
*கர்ப்பகாலத்தில்.
*கோமாநிலையில்உள்ளவர்களுக்கு.
*மருந்து மாத்திரைகள், மருந்தில்லா முறைகள் மூலமாக சர்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாத பட்சத்தில்.

இன்சுலின் போட்டுக் கொள்ளும் முறை

இன்சுலின் போட்டுக் கொள்பவர்கள், தினமும் ஒருமுறை அல்லது இருமுறை,தங்கள் வாழ்நாள் முழுவதும் போட்டுக் கொள்ள வேண்டியதிருக்கலாம். அந்நிலையில் உள்ளவர்கள் ஊசியைப் போட்டுக் கொள்ள ஒவ்வொரு முறையும் இன்னொருவரைத் தேடுவது என்பது மிகவும் கடினமான காரியம்.

எனவே தாங்களே ஊசி போட்டுக் கொள்ளப் பழகிக் கொள்வது நல்லது. மிகவும் தயக்கமாக இருந்தால்,உங்களோடு எப்போதும் இருக்கும் ஒருவரை ஊசிபோட தயார் செய்து கொள்ளுங்கள்.

எவ்வாறு போடுவது என்பதை உங்கள் மருத்துவர் தெளிவாக விளக்கிச் சொல்வார். அடிப்படை முறையை இங்கே காணலாம்.

ஒருவகை இன்சுலின் மட்டும் உபயோகித்தல்

* உங்கள் கைகளை சுத்தமாக கழுவுங்கள்.

* இன்சுலின் பாட்டிலை உங்கள் கைகளுக்கிடையில் வைத்து மெதுவாக உருட்டுங்கள். (வேகமாக குலுக்க வேண்டாம்)

* இன்சுலின் சிரிஞ்சை எடுத்து, அதன் உட்குழாய் பகுதியை பின்னால் இழுத்து காற்றை சிரிஞ்சினுள் இழுக்கவும் (உங்களுக்கு எத்தனை யூனிட் இன்சுலின் எடுக்க வேண்டுமோ, அந்த அளவு வரை காற்றை இழுக்கவும்).

* ஊசியை இன்சுலின் பாட்டிலில் உள்ள ரப்பர் மூடிப்பகுதியில் குத்தி, சிரிஞ்சில் இழுத்த காற்றை பாட்டிலின் உள்ளே செலுத்துங்கள்.

* பாட்டிலை அப்படியே தலைகீழாகத் திருப்பி, மீண்டும் உள்குழாய் பகுதியை மெதுவாக கீழே இழுத்து உங்களுக்கு எத்தனை யூனிட் போட வேண்டுமோ அந்த யூனிட் அளவு வரை இன்சுலினை சிரிஞ்சில் நிரப்புங்கள்.

* சிரிஞ்சில் மருந்தோடு காற்று குமிழ்கள் கலந்திருந்தால், சிரிஞ்சை பக்கவாட்டில் மெதுவாக விரல்களால் தட்டுங்கள். குமிழ்கள் சிரிஞ்சின் மேல் பகுதியில் வந்து விடும். கவனமாக அவற்றை வெளியேற்றி விடுங்கள்.

* இப்போது இன்சுலின் தேவையான யூனிட்டுகள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொண்ட பின்னர் ஊசியை வெளியே எடுக்கலாம்.
* நீங்கள் உடலின் எந்தப் பகுதியில் ஊசியைப் போட்டுக் கொள்ளப் போகிறீர் களோ, அந்த இடத்தை சிறிது ஸ்பிரிட்டால் சுத்தம் செய்யுங்கள்.

* அந்த இடத்தில் உள்ள தோலை ஒரு கையின் கட்டை விரல் - சுட்டு விரல்களால் பிடித்துக் கொண்டு,மறு கையால் ஊசியை மெதுவாக உள்ளே செலுத்துங்கள்.

* உள்குழாயை மெதுவாகத் தள்ளி மருந்தை செலுத்திவிட்டு சிரிஞ்சை வெளியே எடுங்கள்.

* ஊசி போட்ட இடத்தை ஸ்பிரிட் தோய்த்த பஞ்சால் தடவி விடுங்கள்.

ஒரு வகைக்கு மேற்பட்டஇன்சுலின் உபயோகித்தால்

* முதலில் சுமாரான நேரம் அல்லது நீண்ட நேரம் வேலை செய்யும் இன்சுலினை மேலே குறிப்பிட்ட முறைப்படி சிரிஞ்சில் எடுத்துக் கொள்ளுங்கள்.

* பின்னர் குறுகிய நேரம் வேலை செய்யும் இன்சுலினை, தேவையான அளவுக்கு எடுத்துக் கொண்டு மேற்குறிப்பிட்டபடி உடலில் குத்திக் கொள்ளலாம்.

இன்சுலின் சிரிஞ்சுகள்

* இன்சுலின் ஊசியைப் போட்டுக் கொள்வதற்கென்றே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட சிரிஞ்சுகள் உள்ளன. இவற்றை இன்சுலின் சிரிஞ்சுகள் என்கிறோம்.

* பிற திரவ நிலை மருந்துகளை மி.லிட்டர் அளவில் அளவிடுகிறோம். ஆனால் இன்சுலின் மி.லிட்டர் அளவில் அளவிடப்படுவதில்லை.

* இன்சுலின் மருந்து `யூனிட்டுகள்'என்ற அலகையால் அளக்கப்படுகிறது.

* 40 இன்சுலின் யூனிட்டுகள் 1 மி.லி.

* இன்சுலின் சிரிஞ்சுகள் வெவ்வேறு கொள்ளளவுகளில் கிடைக்கின்றன.

* 30 யூனிட், 40 யூனிட், 50 யூனிட், 100 யூனிட் போன்ற அளவுகளில் மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

* நீங்கள் ஒருமுறை உபயோகிக்கும் இன்சுலின் மருந்தின் அளவைப் பொறுத்து எத்தனை யூனிட் சிரிஞ்சு வாங்க வேண்டும் என்பதை முடிவு செய்யுங்கள்.

* நீங்கள் உபயோகிக்கும் அளவை விட சற்றே அதிகமான கொள்ளளவு உள்ள சிரிஞ்சை வாங்குவது நல்லது.

இன்சுலின் உபயோகிப்போருக்கான குறிப்புகள்

* இன்சுலின் மிகவும் சக்தி வாய்ந்தது. சற்றே அளவு அதிகமானாலும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மிக அதிகமாக குறைந்து, `சர்க்கரை தாழ்நிலை' ஏற்பட்டு மயக்கம் வரலாம். எனவே எக்காரணம் கொண்டும் உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் அளவை அதிகப்படுத்த வேண்டாம்.

* இரத்தத்தின் சர்க்கரை அளவு, சிறுநீரில் சர்க்கரை அளவு சரியாக உள்ளதா என்பதை அவ்வப்போது,பரிசோதித்து அறிந்துகொள்ள வேண்டும்.

*குறுகிய நேரம் வேலை செய்யும் இன்சுலினுடன், நடுத்தர நேரம் வேலை செய்யும் இன்சுலினைச் சேர்த்து காலை, மாலை இருவேளையும் போட்டுக் கொள்ள வேண்டியதிருக்கும்.

சிலருக்கு ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே போட்டுக் கொண்டாலும் நோய் கட்டுப்பாட்டிற்குள் இருக்கலாம்.

*உங்கள் நோயின் தன்மை, தீவிரத்திற்கு ஏற்ப, எந்த அளவிற்கு சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதையும் கணக்கிட்டு உங்கள் மருத்துவர் இன்சுலின் ஒரு நாளில் எத்தனை முறை போட வேண்டும். எவ்வளவு அளவு போட வேண்டும் என்பதை முடிவு செய்வார்.

ஆரம்ப காலங்களில் மாடு,பன்றி போன்ற மிருகங்களின் கணையத்திலிருந்து இன்சுலின் பிரித்தெடுக்கப்பட்டது.

ஆனால் இவ்வகை இன்சுலின்களால் பலருக்கு ஒவ்வாமை ஏற்படும் வாய்ப்பு உள்ளது.மேலும் பலரது உடலில் இன்சுலின் உற்பத்தி செய்யப்படுகிறது.

இவ்வகை இன்சுலின்கள் எல்லா பண்புகளிலும் ஏறக்குறைய மனித இன்சுலினை ஒத்திருப்பதால் ஒவ்வாமை, இன்சுலின் எதிர்ப்பு நிலை போன்றவை தோன்றுவதற்கான சாத்தியக் கூறுகள் மிக மிகக் குறைவு.

சில பாக்டீரியாக்களில் அல்லது ஈஸ்ட் செல்களின் உள்ளே இன்சுலின் சுரக்கச் செய்யும் மரபணுக்களைச் செலுத்தி அவற்றை இன்சுலின் உற்பத்தி செய்ய வைக்கிறார்கள்.

இவ்வாறு உற்பத்தியாகும் இன்சுலினைப் பிரித்தெடுத்து,மனித இன்சுலினை ஒத்த நிலையை அடைய பல்வேறு நவீன முறைகளைப் பயன்படுத்தி இவை தயாரிக்கப்படுகின்றன.

எந்த இடத்தில் போடுவது

மேல்கையின்வெளிப்புறம்,மேல்தொடையின்,வெளிப்புறம்பிட்டங்கள்,ல்லது கீழ்வயிறு
இந்த இடங்களில் ஒவ்வொரு நாளும் வேறு வேறு இடங்களில் குத்திக் கொள்ளலாம்.

Thanks to Kumudam.

புதுடில்லி : தொழில், வர்த்தகம் போன்றவற்றில் மட்டுமல்ல, 'ஷுகர்' வியாதியிலும் இந்தியாவை சீனா மிஞ்சி விட்டது. சமீபத்தில், சீனாவில் 46 ஆயிரம் பேரிடம் நீரிழிவு நோய் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

அதன்படி, ஒவ்வொரு 10 சீனர்களில் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருக்கிறது; 1.5 சதவீதம் பேர் அந்தநோயால் பாதிக்கப்படக் கூடிய விளிம்பு நிலையில் உள்ளனர் என்று தெரியவந்துள்ளது. சீனாவின் முக்கியமான 14 நகரங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், நகர்ப்புறங்களில் 14 பேர்களில் ஒருவர் என்ற வீதத்திலும், கிராமப்புறங்களில் எட்டுப் பேருக்கு ஒருவர் என்ற வீதத்திலும் அந்நோய் பாதித்துள்ளது. சமீபத்தில் அங்கு நடந்த ஆய்வில் வளரிளம் பருவத்தினரில் மட்டும் ஒன்பது கோடியே20 லட்சம் பேர் அந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்த சில ஆண்டுகளில், 15 கோடி வளரிளம் பருவத்தினர் அந்நோயால் பாதிக்கப்படலாம் என்று அஞ்சப்படுகிறது.

இந்தியாவில் ஐந்து கோடி ஆண்களும், நான்கு கோடி பெண்களும் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளாவிய நிலையில் பல நாடுகளில் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து இன்னும் முழுமையாகக் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை.

இந்தியாவில் இப்போது ஐந்து கோடியாக இருக்கும் ஆண்களின் தொகை 2030க்குள் எட்டு கோடியைத் தொட்டு விடும் என்கின்றனர் ஆய்வாளர்கள். 25/3/10

கேள்வி கேட்பவர்களை சிறையில் தள்ளுவது துக்ககரமானது: அருந்ததிராய்

உலகில் மிகக் கொடூரமான ராணுவ ஆக்கிரமிப்பிற்கு கீழ் வாழும் கஷ்மீர் மக்களின் நீதியைக் கோரித்தான் டெல்லி கருத்தரங்கில் நான் கலந்துக் கொண்டு உரை நிகழ்த்தினேன் என பிரபல எழுத்தாளரும், மனித உரிமை ஆர்வலருமான அருந்ததிராய் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகரில் நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"கஷ்மீர் சுதந்திரம் குறித்து நான் பேசிய கருத்துக்களுக்காக, என் மீது ராஜதுரோக குற்றச்சாட்டு பதிவுச் செய்யப்பட்டு கைதுச் செய்யப்படலாம் என செய்தித்தாள்கள் மூலம் அறிந்தேன்.

கஷ்மீரில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் பல ஆண்டுகளாக தினந்தோறும் என்ன கூறுகிறார்களோ, அதைத்தான் நான் கூறினேன். வரலாற்று ஆசிரியர்களும், பல ஆண்டுகளாக எதை எழுதுகிறார்களோ அதைத்தான் நானும் பேசினேன். எனது உரையின் நகலை வாசிக்க எவராவது தயாரானால், அது அடிப்படை நீதிக்கான தேவை என காண இயலும்.

உலகத்தில் மிகக் கொடூரமான ராணுவ ஆக்கிரமிப்பிற்கு கீழ் வாழும் கஷ்மீர் மக்களின் நீதியைக் கோரித்தான் நான் பேசினேன். பிறந்த மண்ணிலிருந்து வெளியேற வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்ட கஷ்மீரி பண்டிட்டுகளின் துயரமான வாழ்க்கையைக் குறித்தும், சுடாலூர் கிராமத்தில் இடுக்காட்டில் அடக்கம் செய்யப்பட்ட கஷ்மீரில் மரணமடைந்த தலித் ராணுவ வீரர்களுக்காகவும்தான் நான் பேசினேன்.

நேற்று தெற்கு கஷ்மீரின் ஆப்பிள் நகரமான ஷோபியானுக்கு பயணம் செய்தேன். 47 தினங்கள் நீண்ட போராட்டத்திற்கு காரணமான, ஷோபியானில் ஆஸியாவும், நிலோஃபரும் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு கொலைச் செய்யப்பட்ட சம்பவங்கள் என் நினைவலையில் வந்தன. அவர்களின் கொலையாளிகள் இதுவரை நீதியின் முன்னால் நிறுத்தப்படவில்லை. ஆஸியாவின் சகோதரரையும், நிலோஃபரின் கணவரையும் நான் கண்டேன்.

துயரத்திலும் கோபத்திலும் ஆழ்ந்துள்ள மக்கள் கூட்டத்தின் நடுவில் நாங்களிருந்தோம். இந்தியாவிலிருந்து நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்த அவர்கள், சுதந்திரம் ஒன்றே வழி என நம்புகின்றனர்.

கண்ணின் வழியாக தோட்டக்கள் பாய்ந்து சென்ற கல்வீச்சில் ஈடுபட்ட இளைஞர்களை நான் கண்டேன். கல்வீசியதற்கு தண்டனையாக அனந்தநாக்கில் தனது நண்பர்களான 3 இளைஞர்களை போலீஸ் கஸ்டடியில் வைத்து கையிலுள்ள நகங்களை பிய்த்து எறிந்ததாக என்னுடன் பயணம் செய்த இளைஞர் ஒருவர் தெரிவித்தார்.

நான் துவேசப் பிரசங்கம் நிகழ்த்தியதாகவும்,இந்தியாவை பிரிக்கக் கோரியதாகவும் சில பத்திரிகைகள் எழுதுகின்றன.அன்பு மற்றும் அபிமானத்தின் காரணமாக எழுந்ததுதான் எனது வார்த்தைகள். மக்கள் கொல்லப்படக் கூடாது, வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்படக் கூடாது, சிறையிலடைக்கப்படக் கூடாது, நான் இந்தியக்காரன் எனக் கூறுவதற்காக அவர்களுடைய நகங்கள் பிய்த்து எறியப்படக் கூடாது என்ற விருப்பத்தின் அடிப்படையிலேயே எனது உரை அமைந்தது.

சமூகம் ஒன்றாக இருக்கவேண்டும் என நான் விரும்புகிறேன். எழுத்தாளர்களின், சிந்தையில் தோன்றுவதை, பேசுவதை தடுத்து அமைதியாக்கும் இந்த தேசத்தை நினைத்து நான் வெட்கப்படுகிறேன்.

சமூகக் கொலைக்காரர்கள், பெரிய நிறுவனங்களை நடத்தும் ஊழல்வாதிகள், வன்புணர்ச்சியை செய்பவர்களும், ஏழைகளில் ஏழைகளான மக்களை இரையை வீசி பிடிப்பவர்களும் சுதந்திரமாக உலாவுகின்றனர். ஆனால் நீதிக்கேட்டு பேசுபவர்களை சிறையில் தள்ள நினைக்கும் இந்த தேசத்தை நினைத்து துக்கப்படுகிறேன்." இவ்வாறு அருந்ததிராய் கூறியுள்ளார்.

உண்மையான அன்பு.

sad_thumb[.jpg

அஸ்ஸலாமு அலைக்கும்,

முகம் இரண்டும்

விலகிச் செல்ல;

முதுகு இரண்டும்

ஒட்டிக் கொள்ள;

கட்டுப்பட்டோம் ஆங்கிலத்திற்கு;

“ஈகோஎன்ற ஒர் எழுத்துக்கு!

துண்டுப்பட்ட மனம் மட்டும்

விம்மி விம்மி கதற;

மெண்டு விழுங்கும்

நினைவுகளோ உன்னைக்

கண்டப்படித் தேட!

வீங்கிப்போனப் பாசத்தாலே

வெடித்து நிற்கும் பிரிவு;

நீர்த்துப்போகும் சண்டை

மட்டும் அணுதினமும் வரவு!

தனித்து நின்று

நினைத்துப் பார்த்தால்

சினம்கூடத் தணிந்துப் போகும்;

கனம்கூட இனித்துப் போகும்!

முற்றிப்போன அன்பினாலே

தொட்டதெற்கெல்லாம் வம்பு;

கண்பட்டவுடன் கலைந்துப் போகும்

மாயமென்ன இயம்பு!

தோற்று ஓடட்டும்

நாற்றமெடுக்கும் கோபம்;

மனம் கசந்து முகம் சிவந்தால்

யாருக்கென்ன இலாபம்!