அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.
Showing posts with label International. Show all posts
Showing posts with label International. Show all posts

Sunday, April 8, 2012

பேராசிரியர் ஹாஃபிஸ் ஸயீதின் தலைக்கு அமெரிக்கா பரிசு அறிவிப்பு: பாகிஸ்தானை உலுக்கிய கண்டனப் பேரணி!


Hafiz Saeed's supporters rally against US bounty
இஸ்லாமாபாத்:ஜமாஅத்து தஃவா அமைப்பின் தலைவர் பேராசிரியர் ஹாஃபிஸ் ஸயீதின் தலைக்கு ஒரு கோடி டாலர்(ரூ.50 கோடி) பரிசு அறிவித்துள்ள அமெரிக்காவின் அடாவடியை கண்டித்து பாகிஸ்தான் நகரங்களில் நடந்த பேரணியில் மக்கள் வெள்ளம் கரை புரண்டோடியது.

எங்கள் மீது இஸ்ரேல் கைவைத்தால் அந்த நாடே இல்லாமல் போய் விடும்-ஈரான் எச்சரிக்கை...


டெஹரான்: ஈரான் மீது இஸ்ரேல் போர் தொடுத்தால், இஸ்ரேல் என்ற ஒரு நாடே இருந்தது என்று சொல்ல முடியாத அளவுக்கு அந்த நாட்டை பூண்டோடு அழித்து விடுவோம் என்று ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Sunday, March 25, 2012

பிரிட்டன்: முஸ்லிம்களுக்கு எதிராக அரசியல் கட்சி தொடக்கம்

பிரிட்டன்: முஸ்லிம்களுக்கு எதிராக அரசியல் கட்சி தொடக்கம்ஆங்கிலேயர் தற்காப்பு இயக்கம் என்ற பெயரில் மூன்றாண்டுகளாக பிரிட்டனில் இயங்கிவந்த அமைப்பொன்று வலதுசாரி அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்த அமைப்பு முஸ்லிம்களுக்கு எதிரான கட்சியாக விடுதலைக் கட்சி Freedom Party என்ற பெயரில் ஓர் அரசியல் இயக்கமாக உருவெடுத்துள்ளது.
3 ஆண்டுகளுக்கு முன்னர் அடித்தள மக்களின் இயக்கம் என்ற தோற்றத்தில்  இந்த விடுதலைக் கட்சி இயக்கம் தொடங்கிக் கட்டமைக்கப்பட்டது. இலண்டனுக்கு வடக்கேயுள்ள லூட்டோன் நகரத்தில் விடுதலைக் கட்சி (Freedom Party) என்ற பெயரில் இது உதயமானது. இப்போது, இந்த அமைப்பு இஸ்லாமியருக்கு எதிரான அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ளது.

இஸ்ரேல் மீது தீர்மானம் : ஐ.நாவில் தனிமைப்படுத்தப்பட்ட அமெரிக்கா

ஜெனிவா : பாலஸ்தீன் பகுதியில் இஸ்ரேல் மேற்கொள்ளும் குடியேற்றங்கள் பலஸ்தீனர்களின் உரிமைகளை மீறுகிறதா என்பதை கண்காணிக்க சர்வதேச விசாரனை நடத்த வேண்டும் என்று கோரும் தீர்மானம் அமெரிக்காவை தவிர அனைத்து நாடுகளாலும் ஏற்கப்பட்டு ஐ.நாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Wednesday, March 7, 2012

ஈரானிய பாராளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி அஹமத் நஜாதின் ஆதரவாளர்கள் தோல்வி!!!

iran electionஈரானில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் மதத் தலைவர் ஆயதுல்லா அலி கொமைனியின் ஆதரவாளர்கள் தான்75 சதவீத இடங்களைக் கைப்பற்றியுள்ளனர். இதன்மூலம் ஜனாதிபதி மஹ்மூத் அஹமத் நஜாதின் செல்வாக்கு குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் முக்கியமான கொள்கைகளை வகுப்பதில் ஜனாதிபதியும்நாடாளுமன்றமும் தான் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று கூறி வருபவர் ஜனாதிபதி அஹமத் நஜாத். ஆனால்தனது உத்தரவே நாட்டின் கொள்கையாக இருக்க வேண்டும் என்பதில் திட்டவட்டமாக உள்ளார் மதத் தலைவர் கொமைனி.

படுகொலைகளுக்கு ஈரானும் ரஷ்யாவும் சீனாவும் நேரடிப் பொறுப்பாளிகள் என்றும் குற்றச்சாட்டு

Syria
ஈரானும் ரஷ்யாவும் சீனாவும் டமஸ்கஸ் அரசாங்கம் மேற்கொள்ளும் படுகொலைகளுக்குத் துணைபோகின்றன. அதில் அவர்களும் பங்காளிகளாக உள்ளனர் என சிரிய இஹ்வான்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
"எமது மக்கள் மீது ஈவிரக்கமின்றி கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள படுகொலைகளுக்கு ஈரானும் ரஷ்யாவும் சீனாவும் நேரடிப் பொறுப்பாளிகள் என்றே நாங்கள் கருதுகிறோம்" என சிரிய இஹ்வான்களின் பேச்சாளர் ஸுஹைர் ஸாலிம் குற்றம்சாட்டியுள்ளார். அவர் இது தொடர்பாக அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளார்

சிரியா: உலக அதிகாரச் சமநிலையில் மாற்றம்!


சிரியா மத்திய தரைக்கடலில் லெபனான்,துருக்கிஈராக்ஜோர்தான்,இஸ்ரேல் ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்ட நாடு. உத்தியோகபூர்வ கணிப்பின்படி 74% சுன்னி முஸ்லிம்களும் 12% அலவி ஷீஆக்களும், 9%கிறிஸ்தவர்களும் வாழ்கின்றனர்.
1946 இல் சுதந்திரம் அடைந்ததிலிருந்து பல இராணுவப் புரட்சிகளை சந்தித்து வந்த சிரியாவில், 1971 ஆம் ஆண்டிலிருந்து2000 ஆம் ஆண்டு வரை ஹாபிஸ் அல் அஸத் என்பவர் ஜனாதிபதியாக இருந்தார். தற்போது அவரது மகன் பஷர் அல் அஸத் பதவி விலக வேண்டும் எனக் கோரி மில்லியன் கணக்கான மக்கள் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

காதர்அத்னான்:இஸ்ரேலிய பயங்கரவாதத்திற்கு இன்னொரு ஆதாரம்!


The father of Palestinian prisoner Khader Adnan holds a poster
ஃபலஸ்தீன் விடுதலை போராளி காதர் அத்னானின் சிறை உண்ணாவிரதம் 65 தினங்களை கடந்த வேளையில் இஸ்ரேலிய பயங்கரவாதத்தின் கோரமுகமும் மீண்டும் ஒரு முறை சர்வதேச சமூகத்தின் முன்னால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Thursday, March 1, 2012

குர்ஆன் எரிப்பு எதிரொலி - ஆப்கான் விமானநிலையத்தில் தற்கொலைத் தாக குர்ஆன் எரிப்பு எதிரொலி - ஆப்கான் விமானநிலையத்தில் தற்கொலைத் தாக்குதல்!

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க ராணுவ மையத்தில் குர்ஆன் எரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு கலவரம் நடைபெற்று வருகிறது. இந்தக் கலவரங்களில் நான்கு அமெரிக்க படை வீரர்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.இன்று ஜலாலாபாத் விமான நிலையத்தில் ஏற்பட்ட தற்கொலைத் தாக்குதலில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.

சீனாவில் கலவரம் : முஸ்லிம்களை வெட்டி படுகொலை செய்த கொடூர கும்பல் !


சீனாவின் வடமேற்கே உள்ள சின்ஜியாங் உய்குர் பகுதியில் துர்க் மொழி பேசும் முஸ்லிம்கள் அதிகளவில் வசிக்கின்றனர். ஹன் பிரிவு சீன மக்களும் அதிகம் உள்ளனர். கடந்த 4 ஆண்டுகளாகவே இப்பகுதியில் இன மோதல் அடிக்கடி நடந்து வருகிறது.

பெண்களை அதிகமாக பாராளுமன்றத்திற்கு அனுப்பும் முஸ்லிம் நாடு!


பெண்களை அதிகமாக பாராளுமன்றத்திற்கு அனுப்பும் முஸ்லிம் நாடுகளின் வரிசையில் துனிசியா இரண்டாம் இடத்தில் இருக்கின்றது. இங்கு பாராளுமன்ற உறுப்பினர்களில் 26.3% பேர் பெண்கள். பொது இடங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நாட்டில் இன்று ஹிஜாபுடன் பாராளுமன்றத்தில் பெண்கள்...........

தேனிலவுக்கு அழைத்துவந்து மனைவியைக் கொன்ற கணவன் தப்பியோட்டம்

Honeymoon trip ended as a tragedyதேனிலவைக் கழிப்பதற்காகத் தன் மனைவியை கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள ஹோட்டலுக்கு அழைத்துவந்த கணவன், அவரது கழுத்தைவெட்டிக் கொடூரமாகக் கொலைசெய்துவிட்டுத் தப்பியோடியுள்ளார்.

கடந்த 25 ஆம் திகதி இப்படுகொலை இடம்பெற்றிருந்த நிலையில், நேற்று முன்தினம் (28.02.2012) மாலையில் மணப்பெண்ணின் சடலம் காவல்துறையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Thursday, November 10, 2011

வெள்ளம் நின்றும், தொடரும் சோகம் : நம்பிக்கையூட்டிய குட்டி யானை!



தாய்லாந்து : கடந்த ஒரு வாரமாக பேசப்பட்டுவரும் தாய்லாந்து வெள்ளத்தின் சீற்றம், தற்போது குறைந்த போதிலும், அம்மக்களின் வாழ்க்கை, இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. இந்நிலையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக பிறந்தது ஒரு யானைக் குட்டி.




விலங்குகளையும் விட்டுவைக்காத வெள்ளம்:

இந்தியாவும் பாகிஸ்தானும் தமக்கிடையேயான பிரச்சினைகள் மிகுந்த உறவுகளை பின்னுக்கு தள்ளி ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்க வேண்டிய தருணம் வந்துள்ளது என்று இரு நாட்டின் பிரதமர்களும் கூறியுள்ளனர்.


மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தானை தளமாகக் கொண்டு இயங்கும் தீவிரவாதிகள் மும்பையில் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலுக்கு பின்னர் இந்திய பாகிஸ்தான் உறவுகள் அதளபாதாளத்துக்கு சென்றன.
மாலத்தீவுகளில் நடைபெற்று வரும் தெற்காசிய நாடுகளின் உச்சி மாநாட்டின் போது இந்த இரு நாட்டுப் பிரதமர்கள் மற்றும் இதர அமைச்சர்கள் சந்தித்து உரையாடிய போதே இந்தக் கருத்துக்களை வெளியாகியுள்ளன.
இந்தப் பேச்சுவார்த்தைகளில் இருநாட்டு வர்த்தக உறவுகள் பற்றியே முக்கியமாக விவாதிக்கப்பட்டதாக இந்தியப் பிரதமருடன் மாலத்தீவுகள் சென்றுள்ள பி.டி.ஐ. செய்தியாளர் தமிழோசையிடம் தெரிவித்தார்.

பரஸ்பர பாராட்டுகள்

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் பாகிஸ்தானியப் பிரதமர் யூசூஃப் ராஜா கீலானியும் இந்தப் பேச்சு வார்த்தைகளின் போது பல விடயங்களை விவாதித்ததாகவும் கூறி ஒருவரை ஒருவர் நட்பு ரீதியாக பாராட்டிக் கொண்டனர்.
கீலானி அவர்கள் சமாதானத்தை விரும்பும் ஒரு மனிதர் எனும் எண்ணம் அவருடனான சந்திப்புக்கு பிறகு வலுவடைந்துள்ளது என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
மன்மோகன் சிங் ஒரு வெளிப்படையானவர் என்றும், தீவிரவாதம், காஷ்மீர் பிரச்சினை, நதிநீர் மற்றும் வர்த்தகம் தொடர்பான அனைத்து விடயங்களிலுள்ள பிரச்சினைகளை புரிந்து கொண்டு விவாதிக்கத் தயாராக இருக்கிறார் என்று பாகிஸ்தானியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
2008 ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற பயங்கவராதத் தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்ட நிலையில், இரு நாட்டு உறவுகள் மிகவும் மோசமடைந்தது.
ஆனாலும் இது போன்ற பல பேச்சுவார்த்தைகள் சீர்கெட்டுபோன உறவுகளை முன்னேற்ற உதவின.
அண்மையில் பாகிஸ்தானிய பரப்புக்குள் நுழைந்த ஒரு இந்திய ஹெலிகாப்டரையும், அதன் பணியாளர்களையும் பாகிஸ்தான் உடனைடியாக விடுவித்தது போன்ற சம்பவங்கள் நம்பிக்கைகளை அதிகரிக்கச் செய்துள்ளன.
பேச்சுவார்த்தைகளின் மூலம் உறுதியான முடிவுகளை எடுக்க இதுதான் சரியான நேரம் என இருநாட்டுப் பிரதமர்களும் கூறியுள்ளனர்.

"கஸாபை தூக்கிலட வேண்டும்"

மும்பை தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள்
மும்பை தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள்
பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் மும்பை தாக்குதல்களை நடத்திய பாகிஸ்தானியர் அஜ்மல் கசாப் ஒரு தீவிரவாதி என்று தான் நம்புவதாகவும் அவரை தூக்கிலட வேண்டும் எனவும் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்துள்ளார்.
இந்திய நீதிமன்றம் ஒன்றால் வழங்கப்பட்டுள்ள தூக்கு தண்டனையை எதிர்த்து அஜ்மல் கசாப் தற்போது மேல்முறையீடு ஒன்றை செய்துள்ளார்.
ஒசாமா பின் லாடனுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுக்கவில்லையா என்று பிபிசியின் செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, அதை முற்றாக மறுத்த ரஹ்மான் மாலிக் அது மிக மிக கற்பனையான ஒரு குற்றச்சாட்டு என்றும் கூறுகிறார்.
பாகிஸ்தானின் உளவுத்துறை உட்பட பாகிஸ்தானின் நிர்வாகத்தில் யாருக்கும் பின் லாடன் கொல்லப்படுவதற்கு முன்னர் தமது நாட்டில் தங்கியிருந்தார் என்பது தெரியாது எனவும் ரஹ்மான் மாலிக் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
எனினும் தீவிரவாதத்தை எதிர்த்து போராட பொதுவாத ஒரு உத்தி தேவை என்பதையும் தாங்கள் உணர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Wednesday, October 26, 2011

டாக்டர் மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள்!!!




டாக்டர் மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள்


கனடா நாட்டைச் சேர்ந்த கிறித்தவ பிரசார பீரங்கி டாக்டர் ஜாரி மில்லர். பைபிளைக் கரைத்துக் குடித்தவர். அதே நேரத்தில் கணக்குப் பிரியர். இதனால் எதையும் தர்க்கரீதியாக அணுகுவதையே விரும்புவார்.

இவர் ஒருநாள் திருக்குர்ஆனை வாசிக்க நினைத்தார். அவரது எண்ணமெல்லாம், குர்ஆனில் தவறுகளைக் கண்டுபிடிக்க வேண்டும்; முஸ்லிம்களைக் கிறித்தவ மதத்திற்கு அழைக்க இத்தவறுகள் தனக்கு உதவும் என்பதுதான். பதினான்கு நூற்றாண்டுகளாக ஓதப்பட்டுவரும் ஒரு பழைய நூலில் என்ன இருந்துவிடப் போகிறது? பாலைவனம் பற்றியும் அது போன்ற செய்திகள் பற்றியுமே அது பேசும் என்பதே அந்தக் கணக்கரின் கணக்காக இருந்தது.

அகழ்வாராய்சியில் கண்டறியப்பட்ட, 1500 ஆண்டு முன்பு புதைந்த காதலர்களின் எலும்பு கூடு!

ரோம் : கைகோர்த்த நிலையில், ஒருவரை ஒருவர் பார்த்தபடி புதைந்த ஆண் & பெண்ணின் எலும்பு கூடுகள் இத்தாலியில் ஜோடியாக கிடைத்துள்ளன. இவை 1,500 ஆண்டுகளுக்கு முன்பு புதைந்த காதல் ஜோடியின் எலும்புகளாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இத்தாலியின் மாடனா நகரின் புறநகர் பகுதியில் பழங்கால அரண்மனையை புதுப்பிக்கும் பணி சமீபத்தில் நடந்தது. இதற்காக பள்ளம் தோண்டியபோது, 10 அடி ஆழத்தில் ஒரு ஜோடி எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இருவரும் கை கோர்த்த நிலையில் உயிரை விட்டிருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர் டான்டனோ லாபட் கூறியதாவது:

இந்தியர்கள் உட்பட 15,000 மாணவர்களின் விசா ஆஸ்திரேலிய அரசு ரத்து

மெல்பர்ன் : கடந்த ஓராண்டில் ஆஸ்திரேலிய அரசு 15,066 வெளிநாட்டு மாணவர்களின் விசாவை ரத்து செய்துள்ளது. இதனால் ஆயிரக் கணக்கான இந்திய மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்வில் தோல்வியடைந்தது அல்லது வகுப்பை புறக்கணித்த காரணத்தால் 3,624 மாணவர்களின் விசா ரத்து செய்யப்பட்டு தங்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டனர். 

தாய்லாந்தில் கடும் வெள்ளம்: விமான நிலையத்திலும் நீர் புகுந்தது

கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத கடும் வெள்ளப்பெருக்கில் தாய்லாந்து சிக்கித் தவித்துத் தத்தளித்து வருகிறது. உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கான டான் முஆங் விமானநிலையம் பாதுகாப்பு ஏற்பாடுகளை மீறி நீர் உட்புகுந்துவிட்டதால் கடும் பாதிப்புக்குள்ளானது. பயணியர் விமானங்கள், சரக்கு விமானங்கள் அனைத்தும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன. எனினும், மற்றொரு பன்னாட்டு விமான நிலையமான ‘சுவர்ணபூமி’ விமான நிலையம் இதுவரை பாதிப்படையவில்லை.

Friday, October 21, 2011

இந்திய ஹஜ் யாத்ரிகர்களில் 16 பேர் இறப்பு; ஒரு பெண்குழந்தை பிறப்பு!

இந்தியாவிலிருந்து இவ்வாண்டு புனித ஹஜ்ஜுப் பயணத்திற்காக  இதுவரை 57,805 யாத்ரீகர்கள் வந்துள்ளதாகவும், அவர்களில் 16 பேர் உடல்நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களால் இறப்பைத் தழுவியதாகவும், சவூதி அரேபிய அரசு வெள்ளியன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

லிபிய முன்னாள் அதிபர் கடாபி சுட்டுக் கொலை !


சிர்தி (லிபியா): லிபிய முன்னாள் ஆட்சியாளர் கடாபி நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். பதுங்கு குழியில் மறைந்திருந்த அவர் மீது புரட்சி படை - நேட்டோ படை அதிரடி தாக்குதல் நடத்தி சுட்டுக் கொன்றது.