அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, April 4, 2009

Israel FM rejects Annapolis deal


breaking news

Israel's new ultra-nationalist foreign minister has said it is not bound by a US-sponsored 2007 agreement to reach a peace deal with the Palestinians.

"The Annapolis conference, it has no validity," Avigdor Lieberman said in his first speech since taking office.

He was speaking at a handover ceremony at the foreign ministry, prompting his predecessor Tzipi Livni to interrupt and diplomats to shift uncomfortably.

The Annapolis process was meant to lead to the creation of a Palestinian state.

Palestinian leaders say Mr Lieberman's stance could undermine stability.

"There is one document that obligates us - and that's not the Annapolis conference, it has no validity," Mr Lieberman said.

"The Israeli government never ratified Annapolis, nor did parliament," he added.

HAJ COMMITTEE OF INDIA


(Constituted under the Act of Parliament No.35 of 2002)

ANNOUNCEMENT FOR HAJ 1430 (H) – 2009

1. The Haj committee of India is pleased to announce the Programme for Haj 1430 (H) – 2009.
2. Single Haj Application Forms for provisional registration for Haj - 1430 (H) – 2009, are available with all the State Haj Committees with effect from 5th March, 2009, the same may be collected from the State Haj Committees, free of cost. If any individual or organization is found charging money for the same, this may immediately be reported to Chief Executive Officer, Haj Committee of India, Mumbai.
3. Single Haj Application Forms are available on the website of Haj Committee of India www.hajcommittee. com . The Pilgrims are advised to download the same and submit the application form duly completed in the respect alongwith pay-in slip of Rs.200/- per Pilgrim towards non refundable provisional registration fee, in the respective State Haj Committee on or before 31st March, 2009. The Xerox copies of forms will also be accepted by State Haj Committees.
4. The Haj Application Form should be filled in strictly in accordance with the instructions on the back side of Haj Application Form for Haj & nbsp; - 1430 (H) – 2009. Pilgrims, in their own interest, are requested to fill the Application Form by self. He/she should thoroughly go through the Guidelines before filling Haj Application Form. Haj Application Form complete in all respect must reach the Executive Officer / Secretary of the concerned State / Union Territory Haj Committee on or before 31st March, 2009.
5. All the intending Pilgrims are informed that Haj Committee of India, Mumbai has no administrative relations with any person or organization to conduct the Haj affairs, except the duly constituted State Haj Committees.
6. The single Application Form for provisional registration should be filled in legibly and the particulars required to be recorded therein need to be written in English and all in Block Letters.
7. Incomplete Applications are liable to be rejected.
8. Latest 2x3cm size photographs should be pasted on the Application.
9. Please ensure that all particulars recorded in the Application Form is true and correct to the best of your knowledge and that you have affixed your signature / thumb impressions at the appropriate places in the Application Form. It needs to be noted that the false information furnished or suppression of facts shall lead to rejection of application.
10. The A pplication Form should be submitted through your State Haj Committee only.
11. The following persons are not entitled to make Application for Haj 1430 (H) – 2009.
a) Those who have performed Haj during last FIVE years viz. during block year 2005 – 2008. This restriction applies even for Haj- e-Badal.
b) Those suffering from Tuberculosis, AIDS or other communicable disease or are crippled, handicapped, lunatic or otherwise physically incapacitated.
c) Children upto 16 years. Only those Infants, who would complete two years of age on 31st December, 2009 i.e. till the arrival of last inward Haj Charter Flight shall be allowed to travel accompany of their parents.
d) The Lady Pilgrim should be accompanied with Sharai Mehram provided that Mehram should not be a Repeater.
12. Each Application Form is required to be accompanied by Pay-in-Slip issued by State Bank of India the amount of Rs.200/- per Pilgrim deposited in Current Account No. 30683623887 towards non-refundable processing Fee.. (i.e. maximum Rs.1,000/- per application) .
13. &n bsp; The Application Form duly filled in and accompanied Pay-in-slip 0f Rs.200/- per Pilgrim for processing fee should reach the Executive Officer / Secretary of the concerned State Haj Committee on or before the 31st March, 2009. No Application Form received after expiry of the Closing Date shall be entertained.
14. A maximum number of Five persons comprising the family members or close relatives can make Application in a single cover. It is in the interest of the Pilgrims to ensure that only family members having blood relatives are included in the cover. The head of the cover should be responsible for all the payments of the persons included in the cover under the circumstances, an alien person should not be included in the cover. Haj Committee of India has no objection to register a cover with a single Application / Pilgrim.

15. CONFIRMATION


i) This is not selection. It is computerized form for provisional registration for Haj 2009. Haj Committee of India after obtaining details about total number of applications received by the State Haj Committee shall decide about holding Qurrah, if necessary. The computerized qurrah shall be held by the State Haj Committee on date fixed by the Haj Committee of India.
ii) The seats are allotted to the State proportionate to the Muslim Population based on last Census of 2001. If a State Haj Committee receives less applications, remaining seats surrendered in favour of Haj Committee of India would be utilized for confirmation of seats to the States, where the applications have been received in excess of the Quota.
iii) Confirmation of success in Qurrah shall be communicated to the intending Pilgrims by the respective State Haj Committees. Thereafter selected Pilgrims should filled up the Haj Application Form and to be submitted to State Haj Committee on or before the date fixed by the Haj Committee of India.
iv) At the time of submission of regular Haj Application intended Pilgrim should deposit 30% amount of foreign exchange, air fare & other charges and remaining 70% amount should be paid upto 31st August, 2009.
16. The Saudi Arabia Government has intimated that Haj Visa will be endorsed on international Passport only. Thus intending Pilgrims should have international passport.

Sd/-
Dated :___________ _________ ___ Chief Executive Officer
For any further enquiry: Haj Committee of India ,
Phone
: 022 – 22612989 (6 Lines) Haj House,
I.V.R.S. : 022 – 22618862 (4 Lines) 7 – A, M. R. A. Marg ( Palton Road ),
Fax : 022 -= 22620 920 &nbs p; Mumbai – 400 001.

For more information pl. get from the website www.hajcommittee. com

Gaza Summit Underway in Egypt, without Hamas



Egyptian President Hosni Mubarak on Monday told delegates gathered for an international donors' conference aimed at reconstructing the war-torn Gaza Strip that a cease-fire deal between Israel and the Palestinians was of utmost importance.
In his opening address to a gathering of high-profile world figures on Monday morning, Mubarak said that the goal of the gathering was to help the two sides reach a truce. With heavyweight donors in attendance such as the European Union, Saudi Arabia and the United States, the head of the Palestinian care-taker government Prime Minister Salam Fayad is expected to receive nearly all of the approximately $2..8 billion he is requesting to rebuild Gaza and support the PA's 2009 budget.
The presidents of France and the Palestinian Authority were in attendance at the conference, along with 45 foreign ministers including high-profile Hillary Rodham Clinton, who arrived Sunday in the Red Sea resort for her first trip to the Middle East as U.S. secretary of state.
The Islamic resistance Hamas group, which has ruled the Gaza Strip since 2007, has not been invited to the conference.
The real challenge behind "The Palestinian National Early Recovery and Reconstruction Plan for Gaza, 2009-2010" is the competition between the two rival Palestinian governments, the PA in Ramallah and Hamas in Gaza, over who gets the credit of rebuilding Gaza after “Operation Cast Lead”.
Hamas has announced in the media that it has already evaluated the damage in the Strip and formulated a recovery plan using its own sources of funding. Meanwhile, the PA is attempting to implement its plan although its institutions have not operated in Gaza for nearly two years. The PA intends to implement its program through various subcontractors - United Nations agencies.
According to the Palestinian constitution, President Mahmoud Abbas ended his term on January 9 and accordingly the current government is a care-taker government thus it has no authority to implement the recovery plan in the Strip.
The Authority's recovery plan is based on the assessments of various UN organizations, the World Bank, academics and international and Palestinian non-governmental groups. The 53-page document is written in English and will be presented today to international donors at the "Conference in Support of the Palestinian Economy for the Reconstruction of Gaza" in Egypt.
Fayyad and the other authors used harsh language in describing the Israeli attacks and policies in Gaza, calling them "horrendous, merciless, the worst assaults since they were forced from their homes over 60 years ago."
In addition, the document states that without opening the entire crossing points, the plan had no chance of success. "What is the value of all of these millions of dollars if Israel is not allowing in a single material needed for construction, like cement, glass, metal, or tubes?" said Mustafa Barghouthi, a Palestinian MP representing the Palestinian National Initiative faction. "The Israeli siege and closure on Gaza will prevent any reconstruction unless it is removed," he said.
The international community, particularly the US and the EU, he added, should demand that Israel lift its blockade immediately, demand guarantees from Israel "that they won't destroy what is going to be rebuilt again" and demand it pay for damage caused to civilian infrastructure.
European officials also expressed concern about the blockade. "I think everyone is gravely concerned about the access of goods and materials into Gaza for reconstruction, " said Roy Dickinson, head of operations of the European Commission office in occupied Jerusalem. The commission, along with the United Nations, the US and others, is a co-sponsor of the conference. "I think everybody in Sharm e-Sheikh will be unanimous that the opening of the crossings is key and is almost the only issue at the moment."
"We have almost endless money. Money is not the problem. The only question is then can this aid reach the people of Gaza?" said Dickinson. In addition, banks in Gaza were severely cash-strapped due to Israeli restrictions on money transfers from banks in occupied Ramallah to the Gaza Strip, he added.
The authors of the document also expressed the hope that the political division between Hamas and the PA would end and promised to work toward reconciliation and a unity government. However, the document does not discuss the roots of the division.
The Gaza recovery and reconstruction plan opens by alluding to the damage “Operation Cast Lead” wrought on society: The high number of casualties, 1,314 killed and about 5,000 injured, along with 1,900 disabled needing rehabilitation and 100,000 homeless.
The document describes at length the psychological suffering of all Gaza residents. Almost a quarter of the entire sum requested for rehabilitation, $315 million, is slated for social causes: education, health and nutrition, and reconstruction of religious and cultural institutions. The Social Protection, Safety Nets and Psychosocial Wellbeing budget accounts for $202 million of the requested sum, which will go toward projects promoting social welfare and mental health for orphans, traumatized children, the disabled and others.
Other sums requested include about half a billion dollars for infrastructure rehabilitation, $412 million to rebuild agricultural and industrial sectors and $26 million for environmental resources.
The report's harsh findings include: "Feelings of insecurity and hopelessness are common ... (women) describe increased fear, sadness and crying, and over-reaction to ordinary daily stress in the household ... in children, anxiety is exhibited through symptoms such as nightmares, lack of concentration, withdrawal and the need to cling to caregivers. In adults, surveys reveal that distress is displayed in symptoms such as depression, withdrawal and loss of confidence in a previously secure role as head of household... "
The document discusses at length women's vulnerability in society and the possible danger of violence against women as a way of relieving social pressures. This section contains underlying criticism of Hamas - which is not explicitly mentioned in the document. The harsh description of the psychological situation of most Gaza residents is based on the reports of UN agencies and non-governmental groups, and contradicts the image Hamas wants to present of a strong, undefeated public that is proud of its steadfastness.
The section dealing with rehabilitating government institutions claims that during the three weeks of the attack there was "a marked deterioration in security and social cohesion, as well as a breakdown in channels for public decision making, protection and human rights."

ஒரு சகாப்தத்தின் துவக்கம்


உலக சமுதாயத்தின் கோரிக்கைகளை அவமதித்தும் சர்வதேச மரியாதைகளை காற்றில் பறக்கவிட்டும் இராக்கில் அமெரிக்காவின் பொம்மை அரசு கொலை செய்த இராக் முன்னாள் அதிபர் சதாம் ஹுசைனின் உடல் அவரின் பிறப்பிடமான அவுஜாவில் எவ்வித பரபரப்பும் இன்றி இரகசியமாக அடக்கம் செய்யப்பட்டது. ஆக்ரமிப்பாளர்களுக்கு எதிராக கடைசி வரை போராடவும் இறுதியில் தீரமாக வீரமரணம் அடையவும் செய்த தங்களின் பிரியத்திற்குரியவரின் அடக்கமிடத்தை ஏக்கத்துடன் ஒருமுறை காணவும், அதில் தங்களின் வீரநாயகனுக்காக இறைவனிடம் பிரார்த்திக்கவும் ஆயிரக்கணக்கான ஈராக் மக்கள் அவுஜா பிரதேசத்தில் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். கப்ரிடத்தை பார்வையிட்டு திரும்புபவர்கள் சதாம் ஹுசனை அநியாயமாக கொன்றவர்களை பழிக்குப்பழி வாங்குவதாக சூழுரைத்து திரும்புகின்றனர்

எவ்வாறு உலக முஸ்லிம்கள் அனைவரும் பிரார்த்தனைக்காக இறையில்லத்தில் ஒன்றுகூடியிருந்த தியாத்திருநாள் அன்று அதிகாலை 6 மணிக்கு திடீரென எவ்வித தகவலும் இன்றி சதாம் ஹுசைனை தூக்கிலேற்றினார்களோ அதற்கு கிஞ்சிற்றும் குறையாத விதத்தில், கடந்த ஞாயிறு அன்று ஆளரவம் குறைந்த அதிகாலை 3.30 மணிக்கு மிக மிக அமைதியாக யாருக்கும் தெரியாத விதத்தில் சதாமின் உடலை அடக்கம் செய்தனர். அடக்கம் நடக்கும் இடத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கையையும் அவர்களின் ஆக்ரோசமான பிரதிபலிப்பிற்கும் பயந்து சதாமின் உடலை அடக்கும் இடம் குறித்த தகவலை இறுதி வரை அமெரிக்கப்படையினர் வெளிப்படுத்தாமல் வைத்திருந்தனர். 2003-ல் ஆக்ரமிப்புப்படைகள் கொலை செய்த சதாமின் மகன் உதய் மற்றும் குசய் அடக்கஸ்தலத்திற்கு அருகாமையிலேயே சதாமின் இறுதி தூக்கத்திற்குரிய இடமும் தெரிவு செய்யப்பட்டிருந்தது. அதிபர்களின் இறுதிச்சடங்கில் வழங்கப்படும் எவ்வித மரியாதையையும் இராக்கை நவீனப்படுத்திய இந்த இராக்கின் சிற்பிக்கு வழங்க அமெரிக்காவின் பொம்மை அரசும், ஆக்ரமிப்புப்படைகளும் தயாராகவில்லை.

அவுஜ, பாக்தாதின் வடக்குபாகத்தில் திக்ரித் என்ற நகரில் உள்ள முக்கிய பிரதேசமாகும். பலத்த பாதுகாப்புடன் அமெரிக்க இராணுவத்தின் ஹெலிகாரில் சதாமின் உடல் திக்ரித்திற்கு கொண்டுவரப்பட்டது. ஸலாஹுத்தீன் பகுதியின் கவர்னர் முஹம்மத் அல்கைஸி மற்றும் அலிஅல்நித சதாமின் உடலை ஏற்றெடுக்க வந்திருந்தனர். ஆளரவமில்லாத நேரம் அடக்கத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்ததால் கப்ரடக்கத்தில் மிகக்குறைந்த நபர்களே பங்குபெற்றிருந்தனர். முன்னமே திக்ரித் நகர் முழுவதையும் அமெரிக்க படைகள் சுற்றி வளைத்து பாதுகாப்பு அரணுக்குள் கொண்டுவந்திருந்ததால் சதாமின் மிக நெருங்கிய உறவினர்களுக்குக் கூட உடலை அடக்கம் செய்யும் வேளையில் கலந்து கொள்ள இயலவில்லை. பொது கூட்டங்களுக்கு உபயோகப்படுத்தியிருந்த பெரிய ஒரு ஹாலில் கப்ரை தயார் செய்து வைத்திருந்தனர். தன் தந்தையின் உடலை தனக்கு விட்டுத் தரவேண்டும் எனவும், உடலை யமனில் கப்ரடக்க அனுமதி தர வேண்டும் எனவும் கோரியிருந்த சதாமின் மகள் ரகதாவின் கோரிக்கையை முன்னரே நிராகரிக்கவும் செய்திருந்தனர்.

மரணத்தின் இறுதி நிமிடங்களில் கூட முகத்தில் புன்முறுவலையும், வாயில் இஸ்லாத்தின் ஏகத்துவ கலிமாவையும், தான் நேசித்த மண்ணின் எதிர்காலத்திற்க்கு பிரார்த்திக்கவும் செய்திருந்த அந்த வீரநாயகனின் அடக்கஸ்தலம் தங்களுக்கு மிகப்பெரிய தலைவேதனையாக தீருமோ என்ற பயத்தில் ஈராக்கின் பொம்மை அரசாங்கம் தற்போது உள்ளது இதிலிருந்து தெரிகிறது. சதாமின் நேசத்திற்குரிய ஈராக் மக்களால் அடக்கஸ்தலம் மக்கள் தரிசிக்கும் புனிதஸ்தலமாக மாறுவதற்கும், தங்களுக்கெதிரான எதிர்கால போராட்டங்களுக்கு அவ்விடம் உறைவிடமாக மாறிவிடும் என்று பயந்ததால் எவரும் அறியாத ஓரிடத்தில் அடக்குவதற்கு முதலில் தீர்மானித்திருந்தனர். எனினும் சதாமின் கோத்ரமாகிய அல்பூ நாஸிரின் வலுவான கோரிக்கையை தொடர்ந்து உடலை அவரின் பிறந்த இடத்தில் அடக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.

தனது இறுதி நிமிடத்தில் பிரகாசமான முகத்துடன் உறுதியாக, "அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் இல்லை. முஹம்மத்......." என்ற இஸ்லாத்தின் அடிநாதத்தை உச்சரிப்பதற்கு இடையில் அதனை முழுமைப்படுத்தக் கூட விடாமல் ஈவிரக்கமின்றி அநியாயமாக கொல்லப்பட்ட சதாம் என்ற போராளி சரித்திரத்தில் நீங்கா இடம்பிடித்த நாயகனாக மாறியது உலகெங்கும் பல்வேறு விதத்தில் பிரதிபலிக்கவும் தொடங்கியுள்ளது.

நரேந்திரமோடி தலைமையிலான சங்க்பரிவாரங்கள் முஸ்லிம்களை நரவேட்டையாடிய குஜராத் மாநிலத்தின் அனந்த் என்ற மாவட்டத்தின் ஹாத்கட் என்ற குறுகிய கிராமத்தில் வசிக்கும் 70 சதவீத முஸ்லிம்களில் பெரும்பாலான பெண்களும் தங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தை ஆணாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு சதாம எனப்பெயர் சூட்ட காத்திருக்கின்றனர். "சதாம் ஒரு சிங்கம். அதனாலேயே இறப்பதற்கு முன் முகத்தில் முகமூடி போடக் கூட விடாமல் தைரியமாக தூக்குக் கயிற்றை சந்தித்தார்" - இது அக்கிராமத்தில் தனக்கு பிறக்கப் போகும் ஆண்குழந்தைக்காக காத்திருக்கும் ஸைதா பானுவின் சொற்களாகும். மற்றொரு ஆண் மகவுக்காக காத்திருக்கும் ஆசிரியை இக்லாஸ் பானு, "சதாமை தூக்கிலிட்டது மிகப்பெரும் அநீதியும், தவறுமாகும். இதன் மூலம் சதாமின் நினைவுகளை உலகிலிருந்து அழிப்பதற்கு இயலாது" என்று கூறுகிறார்.

இப்பிரதிபலிப்புகள் உலகின் பல்வேறு பாகங்களிலும் வெளிப்படுகிறது. 1991 ல் முதல் வளைகுடா யுத்தகாலத்தில் அமெரிக்காவிற்கு பாடம் புகட்ட அமெரிக்காவின் வளர்ப்புநாடான இஸ்ரேலின் மீது அநேக ராக்கட்டுகள் வீசி இஸ்ரேலிற்கு கிலி ஏற்படுத்தியதன் மூலம் ஃபலஸ்தீனியர்களின் மனதில் இடம் பிடிக்க ஆரம்பித்த சதாம் உலகில் எவருக்கு எதிராக திரும்பியிருந்தாலும் தங்கள் சொந்த இருப்பிடத்திற்காக இஸ்ரேலுக்கு எதிராக 24 மணி நேரமும் போராட்டமே வாழ்க்கையாக கொண்டிருக்கும் ஃபலஸ்தீனியர்களுக்கு எதிராக ஒருபோதும் திரும்பியதில்லை.

இரண்டாம் இந்திஃபாதா காலத்தில் வீரமரணம் அடையும் ஃபலஸ்தீனிகளின் குடும்பங்களுக்கு தலா 25,000 டாலரும், இஸ்ரேலால் கொல்லப்படும் ஒவ்வொரு பலஸ்தீனியர்களுக்கும் தலா 10,000 டாலரும் அவர் வழங்கி அவர்களின் துயரத்தில் நீங்கா நாயகனாக பங்கு கொண்டிருந்தார். தனது மரணவேளையில் கூட "ஃபலஸ்தீன் நீண்டநாள் வாழ வேண்டும்" எனப்பிரார்த்திக்கும் அளவிற்கு சதாமின் மிகுந்த அன்பிற்குரியவர்களாக அவர்கள் இருந்த காரணத்தினாலேயே சதாமிற்கு எதிராக அனைத்து அரபு நாடுகளும் திரும்பிய பொழுதும் ஃபலஸ்தீனியர்கள் கடைசிவரை சதாமிற்கு ஆதரவாகவே இருந்தனர்.

"சதாமிற்கு ஏற்பட்ட கதிதான் அரபுபிரதேசங்களில் அமெரிக்காவிற்கு அடிவருடியாக இருக்கும் அரபுராஜாக்களுக்கும் ஏற்படும் என்றும் அதற்கு அவர்கள் தயாராக இருந்து கொள்ளட்டும் எனவும், அரபு பிரதேசங்களில் அமெரிக்கா தொடரும் குரூரமான நடவடிக்கைகளின் தொடர்ச்சியே இது எனவும்" பெரும்பாலான ஃபலஸ்தீனியர்கள் கருத்து தெரிவித்தனர்.

மேற்குலக ஊடங்கங்களால் மிகப்பெரிய சர்வாதிகாரி எனத் திரும்பத் திரும்ப கூறப்பட்டு அனைவராலும் வெறுக்கப்படும் ஒரு சூழலை உருவாக்கி பின்னர் தான் நினைத்ததை சாதித்துக் கொண்ட அமெரிக்காவின் சதாமிற்கெதிரான கூற்றுக்கள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக அவர் உயிருடன் இருக்கும் பொழுதும் பொய்த்துக் கொண்டிருந்தன; அவர் இறந்த பின்னும் அவை அனைத்தும் பொய் என்பது போன்ற தகவல்களே உலகின் எல்லா பாகங்களிலிருந்தும் கிடைக்கப்பெறுகின்றன.

ஆக்ரமிப்பாளர்களின் சிறையில் தனது இறுதி காலத்தை செலவழித்த சதாமின் இறுதி தருணங்களை அருகிலிருந்து அவதானித்த அமெரிக்க படையால் நியமிக்கப்பட்டிருந்த மருத்துவ உதவியாளரும் "சதாம மிகுந்த அன்பு உடையவர்; சாத்வீகமானவர்" என்றே கூறுகிறார். "தனக்கு வழங்கப்படும் ரொட்டியின் கடின பாகங்களை சேமித்து வைத்திருந்து அபூர்வமாக தன்னை சிறைக்கு வெளியே கொண்டு செல்லப்படும் தருணங்களில் பறவைகளுக்கு அவற்றை அளித்து மகிழும் சதாம, பழகுவதற்கு மிகவும் இனிமையானவர்" என்ற கருத்தை அவருடைய உடல்நிலையை கண்காணிக்க நியமிக்கப்பட்ட மருத்துவ உதவியாளர் ராபர்ட் எல்லிஸ் கூறுகிறார். இதனூடே ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட தன் மரண நிமிடங்களை புத்தகங்களை படித்தல், செடிகளை பராமரித்தல் போன்றவைகளின் ஊடாக சதாம் எதிர்பார்த்திருந்ததாகவும் அவர் கூறினார். சதாமுடன் நெருங்கிப்பழகிய பலரும் சதாம பழக இனிமையானவர் என்றும் அன்பு நிறைந்தவர் என்றும் கூற ஏற்கெனவே அவரைக் குறித்து மேற்குலக ஊடகங்கள் வழி கேள்விப்பட்டிருந்தவை அனைத்தும் மிக மோசமான அரசியல் சதியில் புனையப்பட்ட புதினங்கள் என்ற முடிவுக்கு வரவழிவகுக்கிறது.

எது எப்படியிருப்பினும் அனைத்து சர்வதேச விதிமுறைகளையும் மீறி 2006 ஆண்டு இறுதியில் அமெரிக்க குரூர செயல்பாடுகளின் பாகமாக நிகழ்த்தப்பட்ட சதாமின் கொலை அமெரிக்காவிற்கு வேண்டுமெனில் ஒரு சகாப்தத்தை முடித்து விட்ட திருப்தியை தரலாம். ஆனால் இந்நிகழ்வு மற்றொரு சகாப்தத்தின் துவக்கம் என்பதை வரலாற்றின் வரும் காலங்களினூடாக ஏகாதிபத்திய அரசாங்கம் அனுபவத்தில் புரிந்து கொள்ளும். அதற்கான சாத்தியக் கூறுகளே உலகின் பல்வேறு பாகங்களிலிருந்து எழும் எதிர்ப்புகளும், கருத்தாடல்களும் உணர்த்தி நிற்கின்றன.

ஆக்கம் : வளைகுடா வசந்தன்

ஐயா, தீவிரவாதிகள் அனைவருமே முஸ்லிம்களாக இருப்பது ஏன்?


கட்டுரையாளர் ஃபிரோஸ் பக்த் அஹமது விடுதலைப் போராட்ட வீரர் அபுல் கலாம் ஆசாத் அவர்களின் ஒன்றுவிட்ட பேரனாவார். சமீபத்தில் வெளியான அவரது பேட்டியிலிருந்து...

நாட்டு நடப்பைப் பற்றி 11ஆம் வகுப்பின் 52 மாணவர்களடங்கிய ஒரு கலந்துரையாடலின்போது, ப்ரஜ்வி மல்ஹோத்ரா என்ற மாணவன் மேற்காணும் (இத்தலைப்பின்) கேள்வியை என்னிடம் கேட்டான். சரியான தருணத்தில் கேட்கப்பட்ட நியாயமானதொரு கேள்வி. ப்ரஜ்விக்கும் அவனைப் போன்ற மற்ற மாணவர்களுக்கும் மனதில் தோன்றிய இக்கேள்விக்கு ஒரு முஸ்லிம் என்ற முறையில் பதிலளிக்க வேண்டியது என்மீது கடமையானது.

"எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகளல்லர். ஆனால் எல்லாத் தீவிரவாதிகளும் முஸ்லிம்கள்தாம்!" என்ற கருத்துருவாக்கம் மேற்கத்திய ஊடகங்களால் உற்பத்தி செய்யப்பட்டு, திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டு, 'அது உண்மையாக இருக்குமோ!' என நம்ப வைக்கப்பட்ட ஏராளமானோரில் ப்ரஜ்வியும் ஒருவன்.

'இஸ்லாம் தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறது' எனப் பல்வேறு குரல்களில் தொடர்ந்துப் பிரச்சாரம் செய்யப் படுவதால், இன்று இஸ்லாம் என்பது கண்காணிப்பு வளையத்தினுள் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கிறது. இந்தப் பொய்க் கருத்துருவாக்கத்தைப் பொதுமக்கள் நம்புகிறார்கள் என்றால் அதற்கும் சில காரணங்கள் இல்லாமலில்லை. சில சமயங்களில் அவர்கள் கண்ணால் காண்பவற்றைக் கொண்டே முடிவு செய்கிறார்கள். தீவிரவாதிகள் சிலர் இஸ்லாத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு வன்முறைகளில் ஈடுபடுவதை மக்கள் காண்பதால் அவ்வாறு முடிவுக்கு வருகின்றனர்.

நான் ப்ரஜ்வியிடம் சொன்னேன்: "எல்லா மதங்களின் நல்லொழுக்க வழிகாட்டுதல்களும் ஒன்றேதான். இஸ்லாமும் அதுபோன்ற நல்ல வழிகாட்டல்களையும் கொள்கைகளையுமே போதிக்கிறது. ஆனால் சிலர் இறைவனின் பெயரைச் சொல்லி மற்ற சிலரை தவறான பாதையில் வழிநடத்துகின்றனர்.'

மும்பை, டெல்லி, காஷ்மீர் குண்டு வெடிப்புகள், அல்-காயிதா அமைப்பின் உலகளாவிய நடவடிக்கைகள் ஆகியன என்னைத் தலை குனியச் செய்கின்றன. மனிதத் தன்மையற்ற பயங்கரவாதச் செயல்களில் ஒரு முஸ்லிமின் பெயர் சம்பந்தப்படும் போதெல்லாம் மனம் குமைந்து போகிறது!

ஜிஹாத் பற்றி முஸ்லிமல்லாத சகோதரர்கள் மட்டுமல்லாது முஸ்லிம்கள் பலருமே தவறாகப் புரிந்து வைத்திருப்பதைப் பரவலாகக் காண முடிகிறது. ஜிஹாத் என்பதன் உண்மையான கருத்து பிற மதங்கள் மற்றும் சமூகங்களுக்கு எதிரான வன்முறைச் செயல்களல்ல; மாறாக, ஒருவர் தனது உள்மனதில் புதைந்திருக்கும் சுயநலச் சிந்தனைகள், இஸ்லாமிய சமுதாயத்தில் புரையோடியிருக்கும் ஒழுக்கக்கேடுகள் மற்றும் குறைபாடுகள், தீயசக்திகள், அநீதி, சமத்துவமின்மை, கல்லாமை, அறியாமை ஆகியற்றை எதிர்த்துப் போராடுவதே ஜிஹாதாகும். முதலில் அவர் தன் உள்மனதுடன் ஜிஹாத் செய்து (போராடி) அதைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். அதன்பின்னர் அவர் தம் மனைவி, குடும்பத்தினர், அண்டை அயலார் மற்றும் முழு சமுதாயத்தினரிடையேயும் தமது முயற்சிகளைத் தொடர வேண்டும். இதுவே 'ஜிஹாதே அக்பர்' (மாபெரும் போராட்டம்) எனப்படும் மிகச் சிறந்த ஜிஹாத் ஆகும். ஜிஹாத் என்பதன் சரியான விளக்கமும் இதுதான்.

தீவிரவாதம் என்பது ஓர் அரசியல் நடவடிக்கையே தவிர, மதங்களுக்கும் மதங்கள் சார்ந்த சமூகங்களுக்கும் இவற்றுடன் எந்தத் தொடர்புமில்லை. எந்த மதமும் அப்பாவிகளைக் கொல்லும்படி போதிக்கவில்லை. ஆனால் தீவிரவாதிகள் அதைத்தான் செய்கிறார்கள். எந்த மதம் சார்ந்தச் சமூகமும் தங்கள் சார்பாக பயங்கரவாதச் செயல்களைச் செய்யும்படி தீவிரவாதிகளைத் தேர்ந்தெடுத்து பணியிலமர்த்துவதில்லை.

இருந்தபோதிலும், இத்தகைய பயங்கரவாதச் செயல்களின் பின்விளைவாக, அவற்றுடன் எந்தச் சம்பந்தமுமில்லாத ஒரு சராசரி இந்திய முஸ்லிம் பலவிதப் பிரச்னைகளைச் சந்திக்க நேர்கிறது. முஸ்லிம்கள் மீதான வெறுப்புணர்வில் நிகழ்த்தப்படும் குற்றச்செயல்கள், பணியிடங்களிலும் கல்வி நிலையங்களிலும் காட்டப்படும் பாரபட்சம், வாடகைக்கு வீடு கிடைப்பதில் பிரச்னைகள், நம்பிக்கையின்மை போன்றவையே அவை. 1984இல் சீக்கிய சமுதாயத்தினருக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கலவரங்களைப்போல இன்னுமொன்று நடந்துவிடக் கூடாதே என்பதும் முஸ்லிம்களின் அச்சமாக இருக்கிறது.

சமுதாயங்களுக்கிடையே பிரிவினை உண்டாக்க முயலும் தீவிரவாதிகளுக்கு எவ்வகையிலும் உதவி சென்றடையக் கூடாது. மும்பைத் தாக்குதலை நடத்தியவர்கள் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே பிளவினை உண்டாக்க முயன்றனர். ஆனால், அதற்கு மாறாக, இந்த பயங்கரவாத நிகழ்வினால் தோன்றிய அதிர்ச்சி அலைகள் இந்திய மக்களை ஒருங்கிணைத்ததைக் காண முடிந்தது.

பாகிஸ்தான் மீதான கண்டனங்களை இந்திய முஸ்லிம்கள் விரும்ப மாட்டார்கள் என சில அரசியல் தலைவர்கள் தப்புக் கணக்குப் போடுகின்றனர். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது; சென்ற பொதுத் தேர்தலின்போது இந்திய முஸ்லிம்களின் வாக்குகளைக் கவருவதற்காக, பாரதிய ஜனதா கட்சி தங்கள் ஆட்சியின்போது லாகூருக்குப் பேருந்து சேவை தொடங்கியதையும் பாகிஸ்தானுடன் உறவை வலுப்படுத்தியதையும் மாபெரும் சாதனை போல விளம்பரப் படுத்திக் கொண்டிருந்தனர். இந்திய முஸ்லிம்களை பாகிஸ்தானின் கைப்பொம்மைகள் போல இன்னும் இவர்கள் கருதுவது உண்மையில் வருந்தத் தக்கது!.

ஒரு சில தீவிரவாதிகளின் செயல்பாடுகள் ஒட்டுமொத்தமாக ஒரு சமூகத்தையே பிரதிநிதிக்காது என்பது இந்தியர்கள் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இருந்தும் 'முஸ்லிம் வாக்குகளை இழந்து விடுவோமோ' என்ற பயத்தாலோ என்னவோ நமது அரசு பாகிஸ்தானுடன் சீரியஸான பேச்சு வார்த்தைகளில் ஈடுபடாது வெறும் வாய்ச் சவடால்களில் காலம் கழித்துக் கொண்டிருக்கிறது.

'தீவிரவாதச் செயல்களுக்கு எதிராக எடுக்கப்படும் கடும் நடவடிக்கைகள் இந்திய முஸ்லிம்களைத் தனிமைப் படுத்துவதாக ஆகிவிடும்' என்ற ஒரு தவறான கண்ணோட்டம் இந்திய அரசியல்வாதிகள் அனைவரிடமும் ஒட்டிக் கொண்டிருக்கிறது. அப்படிக் கருதுவது இந்திய முஸ்லிம்கள் அனைவரையும் பாகிஸ்தானின் ஆதரவாளர்கள் எனத் தவறாக முத்திரை குத்துவதற்கு ஒப்பாகும் என்பதை இவர்கள் எப்போது உணர்வார்கள்? இந்திய முஸ்லிம்களை இதைவிட மோசமாக வேறு யாராலும் கேவலப் படுத்த முடியாது.

தீவிரவாதத்தை ஒடுக்குவதில் மென்மையான அணுகுமுறையை மேற்கொள்வது முஸ்லிம்களை மகிழ்ச்சியடையச் செய்யாது. ஏனெனில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் தங்கள் இலக்குகளை மதரீதியில் பிரித்துப் பார்ப்பதில்லை. "தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் முஸ்லிம்கள் நம்மைப் பாராட்டுவார்கள்" என்று நம் நாட்டு அரசியல்வாதிகள் நினைத்தார்களென்றால் அவர்கள் தவறிழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மத உணர்வுகளைத் தூண்டி விடுவதன் மூலம் அரசியல் ஆதாயம் பெற முயல்வோரை மக்கள் அடையாளம் கண்டு வருகிறார்கள். சமீபத்திய டெல்லித் தேர்தல் முடிவுகள் இதைத்தான் சுட்டிக் காட்டுகிறது.

மத நம்பிக்கைகள் ஒருவரின் தனிப்பட்ட உணர்வுகளுடன் தொடர்புடையது. மதங்களுக்குச் சொந்தம் கொண்டாடும் சில தனிநபர்கள் மற்றும் குழுவினரின் கட்டுப்பாட்டிலிருந்து அவை விடுவிக்கப்பட வேண்டும். அடிப்படையில் மனிதர்களாகிய நாம் அனைவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள்தாம் என்பதை மறந்து விடலாகாது.

-ஃபிரோஸ் பக்த் அஹமது

துபாய்: பாஸ்போர்ட் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ சேவை த‌னியார் வ‌ச‌ம் ஒப்ப‌டைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து

துபாய்: அமீர‌க‌த்தில் ப‌ணிபுரிந்து வ‌ரும் இந்திய‌ர்க‌ள் இனி பாஸ்போர்ட் புதுப்பிக்க‌வோ அல்ல‌து அமீர‌கத்தில் பிற‌க்கும் இந்திய‌ குழ‌ந்தைக‌ளுக்கோ பாஸ்போர்ட் பெற‌ இனி இந்திய‌ தூத‌ர‌க‌ அலுவ‌ல‌க‌த்தையோ அல்ல‌து இந்திய‌ க‌ன்சுலேட்டையோ அணுக வேண்டிய‌தில்லை.

பாஸ்போர்ட் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ சேவைக‌ளை விரைவாக‌ப் பெற‌ அமீர‌கத்தில் இச்சேவைக‌ள் த‌னியார் வ‌ச‌ம் ஒப்ப‌டைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌.

இச்சேவை குறித்து இந்திய‌ க‌ன்சல் ஜெனர‌ல் வேணு ராஜாம‌ணி செய்தியாள‌ர்க‌ளிட‌ம் விள‌க்கினார்.

இத‌ற்கான‌ முத‌ல் அலுவ‌ல‌க‌ம் துபாயில் புத‌ன்கிழ‌மை துவக்கப்பட்டுள்ளது. இந்த வ‌லுவ‌ல‌க‌ம் துபாய் தேரா அல் ஒவைஸ் பில்டிங், நிஸான் ச‌ர்வீஸ் சென்ட‌ர் அருகில், அறை எண் 101 ல் அமைந்துள்ள‌து.

அமீர‌க‌ போஸ்ட‌ல் நிறுவ‌ன‌ம் (எம்போஸ்ட்) இந்திய‌ தூத‌ர‌க‌ அலுவ‌ல‌க‌த்துட‌ன் செய்து கொண்ட‌ ஒப்ப‌ந்த‌ந்தின் அடிப்ப‌டையில் இச்சேவை துவ‌ங்க‌ப்ப‌ட்டுள்ள‌து. இவ்வ‌லுவ‌லக‌ம் காலை ஏழு ம‌ணி முத‌ல் இர‌வு ப‌த்து ம‌ணி வ‌ரை இய‌ங்கும்.

மேலும் விப‌ர‌ம‌றிய‌ தொட‌ர்பு கொள்ள‌ வேண்டிய‌ தொலைபேசி எண் 600 522229 அல்லது http://www.ipavsc. com/ இணையத் தளத்தை நாடலாம்.

அமீரகத்தில் பாஸ்போர்ட் பெற‌ விண்ண‌ப்பிக்க‌ வேண்டிய‌ எம்போஸ்ட் சேவை மைய‌ங்க‌ள்:


101,Al Owais building, Behind Arabian Automobiles.
Deira, Dubai

3, Karama Star Building,
Karama, Dubai

Central Post Office
Karama, Dubai

2nd Floor, EMPOST Building, Madina Zayed,
Abu Dhabi

EMPOST Al Wahda Street
Sharjah

EMPOST
Umm Al Quwain

EMPOST
Ras Al Khaimah

4th Floor, Opp Sabka Bus Station
Naif Dubai

Indian Association Ajman, Opp Lulu
Hypermarket, Al Ittihad Street,
Al Sawan, Ajman

Indian Association RAK Al Mamoyra,
Muntazar Road, Near Old Mamoura Police Station
Ras Al Khaimah

Indian Social Club Fujairah (ISCF)
Al Fazil Road, Opp Hilton Hotel
Fazeel, Fujairah

Indian Social Club Khorfakan (ISCK)
Behind Indian School Kabba
Khorfakan

Indian Social & Cultural Club, Kalba (KISCC)
Opposit Kalba Police Station,
Near Bin Moosa Pharmacy
Kalba

Indian Social Center, Al Saroj District
Al-Ain

Indian Association
Sharjah, United Arab Emirates

சத்யம் பின்னிய மாயவலை





சத்யமா கடுமையான தலைவலி

சத்யம் பின்னிய மாயவலை!

வெலவெலத்துப் போயிருக்கிறது மென்பொருள் துறை. ஐயாயிரத்து சொச்சம் கோடி ரூபாய் கையிருப்பில் உள்ளது என்று நேற்றுவரை சொல்லிக்கொண்டிருந்த சத்யம் கம்ப்யூட்டர் சர்வீஸஸ் நிறுவனத்தின் நிஜமான கையிருப்பு வெறும் 320 கோடி மட்டுமே என்ற ரகசியம் சமீபத்தில் அம்பலமாகி உள்ளது. அதுவும் நிறுவனத்தின் தலைவரான ராமலிங்க ராஜுவின் வாக்குமூலமாக.

"ஆமாம். கணக்கு வழக்குக் குறிப்பேட்டில் சிலபல மோசமான திருத்தங்களைச் செய்து சத்யம் நிறுவனம் கடந்த சில வருடங்களில் அதிக லாபம் சம்பாதித்ததாகக் கணக்குக் காட்டினேன். உண்மை அதுவல்ல. எங்களிடம் இருப்பது வெறும் முந்நூற்று இருபது கோடி மட்டுமே" என்று அப்ரூவர் அவதாரம் எடுத்திருக்கிறார் ராமலிங்க ராஜு.

பல்லாயிரக்கணக்கான பணியாளர்களுடைய வாழ்க்கையை, எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி இருக்கிறது இந்த மோசடி. கண்கட்டு வித்தை போல நடந்துள்ள இந்த மோசடிக் கதை சிக்கல்கள் நிறைந்தது. துணிச்சல் இருந்தால் கொஞ்சம் உள்ளே வாருங்கள். மனித மூளையின் விஷமத்தனத்தை தரிசிக்கலாம்.

இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனங்கள் என்று பட்டியல் போட்டால் முதல் ஐந்து இடங்களைப் பிடிப்பவை டாடா கன்சல்டன்ஸி சர்வீஸஸ், இன்ஃபோஸிஸ், ஹெச்.சி.எல், விப்ரோ மற்றும் சத்யம். 1987-ல் ராமலிங்க ராஜு என்பவரால் நிர்மாணிக்கப்பட்ட நிறுவனம் சத்யம்.

தேர்ந்த நிர்வாகம். திறமையான பணியாளர்கள். பிரமாதமான சேவை. எல்லாம் இருந்ததால் வாடிக்கையாளர்கள் குவியத் தொடங்கினர். மெல்ல மெல்ல வளர்ந்த சத்யம், அறுபத்தாறு நாடுகளில் தன்னுடைய கிளைகளைப் பரப்பியது. இன்றைய தேதியில் ஐம்பத்து மூன்றாயிரம் பணியாளர்களைத் தன்னிடம் கொண்டுள்ளது சத்யம் நிறுவனம்.

ஏப்ரல் 2007 முதல், மார்ச் 2008 வரையிலான நிதியாண்டில் சத்யம் நிறுவனத்தின் மொத்த வருமானம் 8,473 கோடி ரூபாய். அதில், லாபம் என்று பார்த்தால் வரி கட்டியது போக 1687 கோடி ரூபாய். இப்படி கடந்த நான்கு நிதி ஆண்டுகளில் மட்டும் சத்யத்துக்குக் கிடைத்த லாபத்தின் மொத்த மதிப்பு 5,360 கோடி. இதுதான் கடந்த நிதியாண்டு முடிவில் சத்யம் நிறுவனம் சமர்ப்பித்த கணக்கு.

ஆனால், திடீரென இப்போது எங்கள் கையில் அவ்வளவு பணம் இல்லை. முக்கியமாக, நாங்கள் காண்பித்த எண்ணிக்கையில் ஐயாயிரம் கோடி ரூபாய் குறைகிறது, கைவசம் இருப்பது வெறும் 320 கோடி மட்டுதான் என்று அதிர்ச்சி குண்டுகளை வீசியிருக்கிறார் ராமலிங்க ராஜு. அதிர்ச்சி. குழப்பம். எங்கோ தவறு நடந்துள்ளது. தோண்டிப் பார்த்தால் பல சங்கதிகள் புதைந்து கிடப்பது தெரிகிறது.

உண்மையில் மற்ற நான்கு மென்பொருள் நிறுவனங்களைப் போல சத்யம் நிறுவனம் பெரிய அளவில் லாபம் சம்பாதிக்கவில்லை. குறைவான லாபத்தையே ஒவ்வொரு ஆண்டும் ஈட்டி வந்துள்ளது. ஆனால், பங்குச் சந்தையைப் பொறுத்தவரை அதிக வருமானம் ஈட்டும் நிறுவனம்தான் பெரிய நிறுவனம். அந்த நிறுவனத்துக்குத்தான் அதிகப் பங்கு மதிப்பு கிடைக்கும்.

கொஞ்சம் புரியும்படி பார்க்கலாமா? ராமசாமி நிறுவனத்தின் ஆண்டு வருமானம் இருபது கோடி என்று வைத்துக்கொள்வோம். அவர்களுடைய லாபம் இரண்டு கோடி. ஆனால் மாடசாமி நிறுவனத்தின் வருமானம் ஐந்து கோடி. லாபம் இரண்டு கோடி. இரண்டுமே ஒரே அளவு லாபம் சம்பாதித்தாலும், உண்மையில் எது சிறப்பான நிறுவனம்? குறைவான வருமானத்தில் அதிக லாபம் சம்பாதிக்கும் நிறுவனம்தானே? ஆனால், பங்குச் சந்தையைப் பொறுத்தவரை ராமசாமி நிறுவனத்துக்குதான் அதிக மதிப்பு. அதன் பங்கு மதிப்புதான் அதிகம். காரணம், அவர்களுடைய வருமானம்தான் அதிகம். ஏன் இப்படி என்றால், கொஞ்சம் நிர்வாகம் கவனமாக நடந்துகொண்டால், செலவை சற்றே கட்டுப்படுத்தி, லாபத்தை அதிகரித்துவிடலாம் என்பது நம்பிக்கை.

மேலும் பங்குச்சந்தையில், ஒரே தொழிலில் இருக்கும் நான்கைந்து நிறுவனங்களை முதலீட்டாளர்கள் எப்போதும் ஒப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள்.`டி.சி.எஸ், இன்ஃபோசிஸ் எல்லாம் இத்தனை சதவிகிதம் லாபம் என்கிறதே, நீங்கள் மட்டும் ஏன் வருமானமும் இல்லை, லாபமும் இல்லை என்கிறீர்கள்' என்று சத்யத்தைக் கேள்விகள் கேட்பார்கள். பதில் சொல்ல முடியவில்லை என்றால், சத்யத்தின் பங்கு விலைகள் அதலபாதாளத்தில் படுத்துவிடும்.

இதுதான் சத்யம் நிறுவனத் தலைவர் ராமலிங்க ராஜுவை யோசிக்க வைத்தது. என்ன மாய மந்திர வித்தைகள் செய்தால் சத்யத்தின் பங்கு மதிப்பை உயர்த்தமுடியும் என்று யோசிக்கத் தொடங்கினார். தொழில்நுட்ப மூளை அல்லவா, நுட்பமாகவே சிந்திக்கத் தொடங்கியது. ஒத்தாசைக்கு நிதித்துறையில் பழம் தின்று கொட்டை போட்ட சில முக்கியஸ்தர்கள் வந்தனர்.

உட்கார்ந்து பேசியதில் அழகான திட்டம் இறுதி செய்யப்பட்டது. மேலும் அந்தத் திட்டம் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. சத்யம் நிறுவனத்துக்கு வெளியில் இருந்து வரவேண்டிய தொகையை உயர்த்திக் கணக்குக் காட்ட வேண்டும். இது முதல்படி. அடுத்தது, சத்யம் நிறுவனத்தில் இருந்து வெளிநபருக்குச் செல்லவேண்டிய தொகையைக் குறைத்து கணக்குக் காட்ட வேண்டும். இது இரண்டாவது படி. இறுதியாக, நிறுவனத்தின் கையில் இருக்கும் ரொக்கம் அல்லது உண்மையான சொத்து மதிப்பைவிட அதிகம் என்பதுபோல கணக்குகளைத் தயார் செய்வது.

வெளியில் இருந்து வரவேண்டிய பணத்தை அதிகப்படுத்திக் காட்டுவதற்காக சத்யம் தேர்வு செய்த உத்தி, போலி இன்வாய்ஸ்களைத் தயாரிப்பது. ஊர், பேர் தெரியாத நபர்களுடைய பெயரில் இன்வாய்ஸ்களைத் தயாரித்து கணக்கில் காட்டினார்கள் துணிச்சலாக. இதனால் வருமானம் மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கியது, போலியாக. ஆனால், இது சத்யம் நிர்வாகிகளுக்கும் கணக்கு வழக்குகளைக் கண்காணிப்பவர்களுக்கும் மட்டும்தானே தெரியும்!

சத்யம் நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை தணிக்கை செய்யும் நிறுவனத்தின் பெயர் பிரைஸ்வாட்டர்ஹவுஸ்கூப்பர்ஸ். அவர்களுடைய வாயை எப்படி அடைத்தார்கள் அல்லது அவர்களுடைய கண்ணில் எப்படி மண்ணைத் தூவினார்கள் என்பது இன்னும் வெளியே வராத சங்கதி. அல்லது அவர்களும் இதற்கு உடந்தையா என்பது மற்றொரு திகில் விஷயம்.

பெயரளவில் வருமானம் உச்சத்துக்குச் சென்று கொண்டிருந்ததால், சத்யம் நிறுவனத்தின் பங்கு மதிப்பும் உயரத்திலேயே இருந்தது. ராமலிங்க ராஜு எதிர்பார்த்ததும் அதுவே. மெல்ல மெல்ல சத்யம் நிறுவனத்தின் பங்குகளை விற்கத் தொடங்கினார். நிறுவனம் நல்ல நிலையில் இருப்பதாக நிதிநிலை அறிக்கைகள் சொன்னதால் ஏராளமான முதலீட்டாளர்கள் சத்யம் பங்குகளை வாங்கிக் குவித்தனர். இறுதியில் ராஜு மற்றும் குடும்பத்தினர் கையில் வெறும் ஐந்து சதவிகிதம் மட்டுமே இருந்தது. அதையும்கூட வங்கியில் அடமானம் வைத்து கூடுதலாகக் கடன் வாங்கினார் ராஜு.

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளுக்கு மேல் தாங்காது அல்லவா? சத்யம் நிறுவன கணக்கு ஏடுகளில் லாபத்தொகை ஏறிக்கொண்டே வந்தது. 5360 கோடி என்ற அளவை எட்டிய பிறகுதான் நிலைமை எல்லை கடந்துகொண்டிருக்கிறது என்பது ராமலிங்க ராஜுவுக்குப் புரிந்தது. ஐயாயிரம் கோடி உதைக்கிறதே என்று உதறல் எடுக்கத் தொடங்கியதும் அதன்பிறகுதான். மிகப்பெரிய குளறுபடியைச் செய்திருக்கிறோம். சிக்கினால் சின்னாபின்னமாகி விடுவோம் என்ற நிலை. தண்டனை இல்லாமல் தப்பிக்க இன்னொரு குறுக்குவழியைக் கண்டுபிடித்தார் ராஜு.

இதற்கிடையில், அவருடைய இரண்டு மகன்களும் சேர்ந்து மேதாஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் (Maytas Infrastructure) மற்றும் மேதாஸ் ப்ராபர்டீஸ் (Maytas Properties) என்ற இரண்டுநிறுவனங்களை உருவாக்கியிருந்தனர். நிறுவனத்தின் பெயரான Maytasஐ திருப்பிப் போட்டால் Satyamஎன்று வருகிறது. சத்யம் நிறுவனத்தை அப்படியே புரட்டிப் போடும் முயற்சி என்பதற்கு இது ஒரு சமிக்ஞை. யாருக்கும் அது அப்போது புரியவில்லை.

திட்டம் இதுதான். சத்யம் நிறுவனக் கணக்கு ஏடுகளில் இடித்துக் கொண்டிருக்கும் ஐயாயிரம் கோடி ரூபாய்க்கு அந்த மேதாஸ் நிறுவனங்களை வாங்கியதுபோல கணக்குக் காட்டிவிட்டால் தீர்ந்தது பிரச்னை. அந்த நிறுவனங்களின் அதிபர்கள் தன்னுடைய மகன்களாக இருப்பதால் டீல் முடிவதில் பிரச்னை இல்லை. பேப்பர் அளவில் நிறுவனத்தைக் கையகப்படுத்திவிடலாம், பைசா செலவில்லாமல். அதே நேரம், இல்லாத காசை இருப்பதுபோலக் காட்டி, கொடுப்பதுபோலக் கொடுத்து, தன் பேரில் உள்ள ஏமாற்றல் குற்றச்சாட்டு வெளியாகாமல் பார்த்துக் கொள்ளலாம். இங்குதான் விவகாரம் வேறு திசையில் திரும்பியது.

யார் அந்த மேதாஸ் நிறுவனம்? அவர்கள் இருக்கும் துறை என்ன? மென்பொருள் துறையில் இருக்கும் நாம் ஏன் போய் கட்டுமான நிறுவனத்தை வாங்க வேண்டும். அப்படியே செய்வதென்றாலும், எதற்காக அந்த நிறுவனத்தை வாங்க வேண்டும்? அதுவும் ஏன் ஐயாயிரம் கோடி ரூபாய்க்கு? அந்த அளவுக்குத் தகுதியான நிறுவனமா அது? தனது குடும்பமே பங்குதாரராக இருக்கும் இரு நிறுவனங்களுக்கு இடையே இப்படி கொடுக்கல் வாங்கல் செய்வதில் வெளிப்படையாக நடந்துகொள்ளவில்லையே? இது ஏன்? கேள்வி மேல் கேள்வி கேட்டனர் சத்யம் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்தவர்கள். பதில் சொல்ல முடியாமல் திணறினார் ராமலிங்க ராஜு. எதிர்ப்பு வலுப்படவே, அந்தத் திட்டத்தை அடுத்த நாளே கைவிடுவதாக அறிக்கை விட்டார்.

வால் போய் கத்தி வந்த கதையாக இப்போது அடுத்த பிரச்னை எழுந்து நின்று பயமுறுத்தியது. நிறுவனத்தில் வரும் லாபத்தில் கணிசமான தொகையை முதலீட்டாளர்களுக்கு டிவிடண்ட் என்ற பெயரில் தருவது நிறுவனங்களின் வழக்கம். ஆனால், கடந்த நான்கு ஆண்டுகாலக் கணக்கை எடுத்துப் பார்த்ததில் கடந்த மூன்று ஆண்டுகளில் டிவிடண்ட் என்பதையே முதலீட்டாளர்களுக்குத் தரவில்லை சத்யம். ஐயாயிரம் கோடி ரூபாய்க்கு ஒரு நிறுவனத்தை வாங்கும் அளவுக்கு சத்யம் வலுவாக இருக்கும்போது ஏன் டிவிடண்ட் தரக்கூடாது என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

தலையே சுற்றுவது போல இருந்தது ராமலிங்க ராஜுவுக்கு. பணம் இருந்தால்தானே ஐயா, தருவதற்கு? போதாக்குறைக்கு சத்யம் நிறுவனத்தில் இயக்குநர்களாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த சிலர், தமது பதவிகளை வரிசையாக ராஜினாமா செய்தனர். அந்த நேரம் பார்த்து உலக வங்கி, சத்யம் நிறுவனத்துக்குக் கொடுத்திருந்த சேவை ஒப்பந்தங்கள் சிலவற்றை விலக்கிக்கொண்டு, சத்யம் நிறுவனத்தை எட்டு ஆண்டுகளுக்குத் தடை செய்துள்ளது என்ற தகவல் கசிந்தது. ராஜுவும் குடும்பத்தினரும் கையில் வைத்திருக்கும் பங்குகளை அடமானம் வைத்து கடன் வாங்கியுள்ளனர் என்றும், இப்போது பங்கு விலை இறங்கிக்கொண்டே வருவதால், கடன் கொடுத்த வங்கிகள் அந்தப் பங்குகளை பொதுச்சந்தையில் விற்று பணம் செய்திருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகின.

இனியும் உண்மையை மூடி மறைத்தால் உயிரோடு விடமாட்டார்கள் முதலீட்டாளர்கள் என்பதால், பகிரங்கமாகக் கடிதம் எழுதிவிட்டு, தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டார் ராஜு.

அதிர்வுகள் பலமாகக் கேட்கத் தொடங்கியுள்ளன. சத்யம் நிறுவனத்தின் பங்கு மதிப்பு, தேசியப் பங்குச்சந்தையிலும் மும்பை பங்குச்சந்தையிலும் ஒரே நாளில் 160 சொச்சம் ரூபாயிலிருந்து 75 சதவிகிதம் அதிரடியாகக் குறைந்து சுமார் 40 ரூபாய்க்கு வந்துள்ளது. நியூயார்க் பங்குச்சந்தையில், இந்தப் பங்கில் வர்த்தகம் செய்வதை நேற்று தடை செய்துள்ளனர். இந்தப் பங்கின் விலை மேலும் இறங்கும் அபாயம் இருக்கிறது. இதனால் அந்தப் பங்குகளில் முதலீடு செய்தவர்களின் நிலை அதலபாதாளத்தை நோக்கிச் சென்றுகொண்டுள்ளது.

தவிரவும், நிறுவனம் பலமாகச் சேதமடைந்துள்ளதால், அதில் வேலை பார்த்துவரும் ஐம்பத்து மூன்றாயிரம் பணியாளர்களுக்கும் வேலை இழப்பு அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே பொருளாதார நெருக்கடி உலகத்தைசாப்பிட்டுக் கொண்டிருக்கிறது. இந்திய மென்பொருள் துறையில் ஆள்குறைப்பு அதிகரித்து வருகிறது. இதில் எங்கே போய் வேலை தேடுவது?

இதன் இன்னொரு அபாயம் மோசமானது. சத்யம் போன்ற நிறுவனத்தில் அதிகச் சம்பளம் வாங்கி வந்தவர்கள், நிச்சயம் வீடு அல்லது வாகனக் கடன் வாங்கியிருப்பார்கள். இவர்கள் வேலையை இழந்தால், கடன்களை எப்படித் திரும்ப அடைப்பார்கள்? அடைக்காவிட்டால் வங்கிகளின் வருமானம் பாதிக்கப்படுமே? பக்க விளைவுகளை நினைத்துப் பதறிக்கொண்டிருக்கின்றனர் சம்பந்தப்பட்டவர்கள்.

பங்குச் சந்தை மதிப்பு சரிந்துகொண்டு இருப்பதால் இந்த நிறுவனத்தை துறையின் முக்கியப் புள்ளிகளான இன்போசிஸ், விப்ரோ, எச்.சி.எல். உள்ளிட்ட ஏதேனும் ஒரு நிறுவனம் கையகப்படுத்தி சீர் செய்ய முன்வருவார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வி. அநேகமாக எல்லா வாடிக்கையாளர்களும் தாங்களாகவே இந்நேரத்துக்குள் பிற நிறுவனங்களைத் தொடர்பு கொண்டிருப்பார்கள்.

சமஸ்கிருத வார்த்தையான சத்யத்துக்கு தமிழில் உண்மை என்று அர்த்தம். உண்மை என்றால் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் நடந்துகொள்வது. தான் அப்படித்தான் நடந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார் ராமலிங்க ராஜு. என்னத்தைச் சொல்வது?

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

AL-QURAN (ARABIC, URDU AND TAFSEER)

PAGE : 192-193

21.gif

18


stars03.gif picture by Ali_awan_Ali17stars03.gif picture by Ali_awan_Ali17stars03.gif picture by Ali_awan_Ali17stars03.gif picture by Ali_awan_Ali17stars03.gif picture by Ali_awan_Ali17

stars03.gif picture by Ali_awan_Ali17stars03.gif picture by Ali_awan_Ali17stars03.gif picture by Ali_awan_Ali17stars03.gif picture by Ali_awan_Ali17stars03.gif picture by Ali_awan_Ali17

stars03.gif picture by Ali_awan_Ali17stars03.gif picture by Ali_awan_Ali17stars03.gif picture by Ali_awan_Ali17stars03.gif picture by Ali_awan_Ali17stars03.gif picture by Ali_awan_Ali17

முஸ்லீம் பயங்கரவாதிகள் உருவாக்கப்படுவது இப்படித்தானே?





ஐதராபாத்தைச் சேர்ந்த இப்ராஹிம் அலி ஜுனாயத், 26 வயதான யுனானி மருத்துவர். கடந்த 2007ஆம் ஆண்டு மே மற்றும் ஆகஸ்டு மாதங்களில் ஐதராபாத்தின் மெக்கா மசூதியிலும், லும்பினி பூங்காவிலும் நடந்த குண்டுவெடிப்புகளில் இவரைத் தொடர்புபடுத்தி, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு ஐந்து மாதங்கள் சிறையிலடைக்கப்பட்டார்.

அப்போது மாணவராக இருந்த இவரைப் பிடித்துச் சென்ற போலீசார், சட்டவிரோதமாக அடைத்து வைத்ததுடன், வெடிகுண்டு வைத்ததாக ஒப்புக்கொள்ளும்படி, தொடந்து 5 நாட்களுக்குச் சித்திரவதை செய்துள்ளனர். கடந்த டிசம்பர் 30, 2008 அன்று, மாவட்ட கீழமை நீதிமன்றம், நிரபராதி எனக் கூறி இவரை விடுவித்துள்ளது. இதையடுத்து தனக்கு 20 லட்ச ரூபாய் நட்ட ஈடு வழங்க வேண்டும் என ஜுனாயத் வழக்குத் தொடர்ந்துள்ளார். போலீசாரின் சித்திரவதைக்குள்ளான கொடுமையான அந்த ஐந்து நாட்களைப் பற்றி அவர் கூறுகிறார்:

"அன்று செப்டம்பர் 3, 2007. நானும், நிஜாமியா அரசுக் கல்லூரி மற்றும் பொது மருத்துவமனையைச் சேர்ந்த மற்ற மாணவர்களும், புது டில்லிக்கு ஒரு கல்விச்சுற்றுலா சென்றுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தோம். செகந்திராபாத் ரயில் நிலையத்தில் இறங்கிய நாங்கள், பழைய ஐதராபாத்தின் யாகுத்புராவிலிருந்த எங்களது கல்லூரி விடுதிக்கு உள்ளூர் ரயிலின் மூலம் வந்து சேர்ந்தோம்.

அங்கு சென்றவுடன் எனது சகோதரனைப் பொதுத் தொலைபேசி மூலமாக அழைத்து, நான் வந்து சேர்ந்துவிட்டதைத் தெரிவித்தேன். பேசி முடித்துவிட்டு வெளியே வந்த மறுகணமே, சாதாரண உடையிலிருந்த நான்கு போலீசார் என்னைப் பிடித்து மூட்டையாகக் கட்டி ஒரு சுமோ காரில் ஏற்றினார்கள். அப்போது காலை 11 மணி.

விக்டரி விளையாட்டு மைதானம் வரை அந்த வாகனம் விரைந்து சென்றது. அதற்குப் பிறகு என் கண்கள் கட்டப்பட்டன. பிறகு, ஒரு மணி நேரம் எங்கேயும் நிற்காமல் வாகனம் சென்றது. வண்டியின் ஓட்டுனர் வாய்தவறிக் கூறியதிலிருந்து நான் காந்திப்பேட்டையில் (25 கி.மீ தொலைவில்) இருப்பதை உணர்ந்தேன். நான் ஒரு அறைக்குக் கொண்டு செல்லப்பட்டு உள்ளாடைகளுடன் தரையில் தள்ளப்பட்டேன். என்னைப் போன்றே இன்னும் சிலரையும் அங்கே அடைத்து வைத்திருந்ததை அவர்களது அலறலிலிருந்து என்னால் உணரமுடிந்தது. என்னுடைய பணப்பை, அடையாள அட்டை, டெலிபோன் டைரி ஆகியவற்றைப் போலீசார் பறித்துக் கொண்டனர்.

எனது கைகள் பின்னால் கட்டப்பட்டன. நான் குற்றமற்றவன் என்றும், என் மீது இரக்கம் காட்டும்படியும் நான் கெஞ்சியபோதும் கூட, என் மீது மூன்று பேர் பாய்ந்தனர். குப்புறத்தள்ளி, இருவர் எனது கால்களை அழுத்திப் பிடித்து அமர்ந்துகொள்ள ஒருவர் எனது தோள் மீது ஏறி நின்றார். ஒருவர் எனது பாதங்களை தோல் பெல்ட்டால் அடிக்க, மற்ற இருவரும் என் உடம்பு முழுக்க அடித்துத் துவைத்தனர். வலியோ தாங்கவே முடியாததாக இருந்தது. முடிவில் நான் மயக்கமடைந்து விழுந்துவிட்டேன்.

மறுநாள் காலையில் கண்விழித்தவுடன், என்னை மற்றொரு அறைக்கு இழுத்துச் சென்றனர். அங்கே ஒருவர் பூட்ஸ் காலால் என் உடல் முழுவதும் ஏறி மிதித்தார், எட்டி உதைத்தார், எனது கை, கால் விரல்களை நசுக்கினார்; எனது உடலில் இரத்த ஓட்டமே நின்றுவிட்டதைப் போன்று மரத்துப் போனது. மிகக் கடுமையான வலியால் நான் துடித்துப் போனேன். மெக்கா மசூதி, லும்பினி பூங்கா, மற்றும் கோகுல் சாட் சென்டர் ஆகிய இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளில் எனது பங்கு என்ன என்று கேட்டுத் தொடர்ந்து என்னைச் சித்திரவதை செய்தனர். நான் குற்றமற்றவன் என்றும் என் மீது இரக்கம் காட்டும்படியும் அவர்களிடம் கெஞ்சினேன். ஆனால் அவர்கள், என்னை நம்ப மறுத்துவிட்டனர். நான் குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டும் என அவர்கள் நினைத்தனர். ஆனால் ஒப்புக்கொள்வதற்கு என்னிடம் ஒன்றுமில்லை.

இது என்னை விசாரித்தவர்களுக்கு மேலும் எரிச்சலூட்டியது. சித்திரவதை அதிகமாகியது. எனது காது மடல்கள், மார்பு, உதடு, பிறப்புறுப்பு என எல்லா இடங்களிலும் மின்சாரத்தைப் பாய்ச்சினார்கள். காலையில் தொடங்கி இரவு வரை நீண்ட இத்தகைய சித்திரவதைகள் மூன்று நாட்களுக்குத் தொடர்ந்தன. பல நாட்களுக்கு சிறுநீருடன் இரத்தம் செல்லுமளவுக்கு எனது பிறப்புறுப்பு காயமடைந்திருந்தது. எனது உடலின் பல பகுதிகளில் அந்தக் காயங்களின் தழும்புகள் இன்னமும் உள்ளன.

மனித உரிமை ஆர்வலர்களும், மூத்த பத்திரிகையாளர்களும் தலையிட்ட பின்னர்தான், என்னை, செப்டம்பர் 8, 2007 அன்று, மாநகர நீதிபதியின் முன் நிறுத்தினர். என்னை செப்டம்பர் 3ஆம் தேதியே கைது செய்துவிட்டபோதும், செப்டம்பர் 8இல் தான் கைது செய்தது போல் காட்டினார்கள்.

நான் ஏன் இதற்குப் பலியானேன்? மே 18, 2007, மெக்கா மசூதியில் குண்டு வெடித்த அன்று நான் அங்கே தொழுவதற்காகச் சென்றிருந்தேன். பின்னர், குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உதவ, நான் மசூதிக்குத் திரும்பவும் சென்றேன். இதுதான் நான் செய்த குற்றம். அதேவேளையில் இந்த விசாரணைகள் எனக்கு ஒன்றை உணர்த்தின. போலீசாருக்கு வழக்கில் ஏதாவதொரு முன்னேற்றத்தைக் காட்டவேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. இந்த சமுதாயத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் தவறுதலாக வழிகாட்டப்பட்டு ஜிகாத்துக்குத் திருப்படுகிறார்கள் என்ற வரையறைக்குப் பொருந்துவது போல, நான் வேறு படித்த முஸ்லீமாக இருந்தேன். எல்லாவற்றிற்கும் மேலாக, அந்த துரதிருஷ்ட நாளன்று நான் அந்த மசூதியில் வேறு இருந்தேன்.''

இக்கொடுமை மோடியின் இந்துவெறி பயங்கரவாத ஆட்சி நடக்கும் குஜராத்தில் நிகழவில்லை. மதச்சார்பின்மை பேசும் காங்கிரஸ் ஆளும் ஆந்திராவில் தான் நடந்துள்ளது. மசூதிகள் முஸ்லீம் குடியிருப்புப் பகுதிகளில் குண்டு வைப்புகளை நடத்திவரும் இந்துவெறி பயங்கரவாதிகள் ஒருபுறம்; இக்குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியதாக அப்பாவி முஸ்லிம்கள் மீது பழிபோட்டு வதைக்கும் அரச பயங்கரவாதம் மறுபுறம் என இருவகை பயங்கரவாதிகளிடம் சிக்கி நாடெங்கிலுமுள்ள முஸ்லீம்கள் வதைபடுகிறார்கள். சாமாமானிய முஸ்லீம்கள் மட்டுமல்ல அல்லாவின் பெயரால் புனிதப்போர் தொடுப்பதற்காக படித்த இளைஞர்களை இஸ்லாமிய பயங்கரவாதிகள் அணிதிரட்டி வருகிறார்கள் என்ற ஊகத்தின் அடிப்படையில், படித்த நடுத்தர வர்க்க இஸ்லாமிய இளைஞர்களையும் அரசபயங்கரவாதம் மிருகத்தனமாக வதைக்கிறது. இதற்கு இன்னுமொரு சாட்சியம்தான், இப்ராஹிம் அலி ஜுனாயத்

நன்றி: அழகு

Pressures force Indian police to blow the lid off Hindutva terror’s face


WSN Bureau

The ugly face of Hindutva terrorism is now out in the open. It is now clear that ultra-Hindu organisations like the RSS-BJ-VHP-Bajrang Dal were involved in blessing and propagating fringe elements like Abhinav Bharat and similar platforms and encouraging terrorism in its most ugly form.

Special wings of Indian police, under massive pressure after the cover got blown, were finally forced to admit that an officer of the Indian army, many of his fellow comrades and Hindu terror organisations were hand in hand in planting bombs, and are now being either feted or defended by RSS parivaar.

Lawyers are being marshalled for them, Uma Bharti wants to give such elements tickets to fight elections, L K Advani publicly praises then and BJP president Rajnath Singh warns everyone not to utter a bad word about them till they are proven guilty. Such is the touching defence of the men and women found involved in blood-soaked instruments of terror.

One Hindu saadhvi, who has earlier been part of the larger RSS parivaar, is widely reported to have admonished the bombers for not ensuring that a far higher number of people died. "Why are there so few dead?" she is said to have asked.

Cops have now found SMS messages sent from Lt-Col Shrikant Purohit to retired Major Ramesh Upadhyay that led to the arrest of Purohit for the September 29 Malegaon bomb blast. He is now behind bars, and Indian establishment which has so far been spouting great praise of its army's ethics and apoliticisation has a black face.

Purohit, 37, was stationed at the Army Education Corps Training College and Centre at Panchmarhi, Madhya Pradesh, where he learnt Arabic. He is the ninth person to be arrested for the terror strike in the textile town that killed six people.

Purohit had attended most of the meetings organised by others accused at Kashmir, Pune, Bhopal, Nashik, and Deolali. Police now believe that he could have been the source for the RDX used in the bomb. He apparently distributed money to several people through his organisation through cheques and cash. He also trained several youths in bomb making..

India has found its own shrill voice to match the world's cry against terror. Instead of getting serious about the causes that give rise to terrorism, it has reduced the war against terror to stereotyping minority Muslims just as it had badnamed the Sikhs in the 1980s-90s.. This reportage

brings to the fore the ugly face of Hindutva terror.

Another retired Major Ramesh Upadhyay and former Durga Vahini national executive president Sadhvi Pragya Singh Thakur are also under arrest. Purohit is the first armyman being booked for a terror act in India. He came in contact with Upadhyay when he was posted at Nashik as liaison unit officer. He was the founding member of Abhinav Bharat, the right-wing radical Hindu outfit whose members allegedly carried out the terror attack in Malegaon.

Police is now probing the fund raisers and the channels for it.

Now it seems that after the network has been so thoroughly exposed, the tentacles may spread deeper and wider. CBI director Ashwani Kumar has gone so far as to suggest that there is a link between the Malegaon blast on September 29 and the one in Nanded two years ago.

After initial bravado, the Sangh Parivar has decided to completely distance itself from Lt-Col Shrikant Prasad Purohit. It now plans to call them a "fringe group". They said such groups had always remained on the periphery of the Parivar for the past several decades, but they never enjoyed the patronage of the leadership. The Sangh Parivar leadership does not want to be seen as having reversed its "tough-on-terror" stand for the sake of Malegaon terrorists.

The anti-terrorism squad (ATS) has now established a link between arrested Lt-Col Prasad Purohit and Thane theatre blast accused Dr Hemant Chalke. A homeopath by profession, Chalke was a sympathiser of Sanatan Sanstha and was arrested in June for doing the recce of Vashi’s Bhave theatre where a bomb was found on May 31 this year. Purohit told cops that he knew Chalke and was in touch with him before the September 29 Malegaon blast. Chalke is currently in Arthur Road jail. Chalke and five others were arrested by the ATS for planting bombs in Thane’s Gadkari theatre, a vashi theatre and a cinema hall in Panvel.

The ATS probing the September 29 Malegaon bomb blast case is questioning a 37-year-old bogus ‘‘military jawan’’ from Deolali, who was found in possession of a fake cantonment area entry pass in the restricted area. The police suspect that the accused, who frequently visited Bhonsla Military School in Nashik, could have links with the blast suspects. The suspect, Sudhakar Omkarnath Chaturvedi, told the police that he frequently visited the Nashik school to attend ‘‘personality development programmes’’. He holds a masters degree in arts from an Uttar Pradesh university.

India's Home Minister of State Shakeel Ahmed has said that the investigation into the Malegaon bomb blast has brought the role of Rashtriya Swayamsevak Sangh (RSS) under the scanner. “Though investigation in the case is still inconclusive at this stage, fingers have been pointed out towards RSS,” he said.

In that incident, in April 2006, two Bajrang Dal activists were killed while they were allegedly assembling a bomb in a Nanded home. A CBI team has already questioned Lt Col Purohit and other eight accused who were arrested by the ATS.

Director Ashwani Kumar said a link has been indeed established between Nanded and Malegaon blasts.

Now, some saner people plan to pursue the stufff to logical end. Teesta Setalvad of Communalism Combat has said she would file a petition in the Supreme Court challenging the CBI’s Nanded chargesheet.

The CBI director said that the September 29 Malegaon blast — in which five Muslims were killed after Ramzan prayers — is being probed by the ATS alone.

The probe into the Nanded blast had claimed to have exposed the alleged role of a former Indian Navy official in the training of Bajrang Dal activists. It had also identified Bhonsala Military School in Nashik as one venue where such training camps were organised under the supervision of ex-servicemen. And that the training camp was attended by those accused in the Nanded blast.

This is the same school that has come under the scanner now. It was here, ATS officials claim, that in April this year, Lt Col Purohit, Pragya Singh Thakur and other accused held one of a series of meetings before the blasts.

The Nanded blast took place at the residence of a retired Irrigation Department engineer and RSS activist Lakshman Rajkondawar. His son Naresh Rajkondwar and Himanshu Panse, both Bajrang Dal activists, were killed while four were seriously injured.

The ATS named Sanatkumar Ragvithal Bhate, a retired Navy officer from Pune, as one of several witnesses in the case. In his statement to the ATS, he claimed that in March or April 2000, he had received a telephone call from a Bajrang Dal office located near the Saraswati Mandir School in Pune and was allegedly asked by Bajrang Dal leader Milind Parade to train his activists in the use of gelatin sticks at a camp in the city.

Bhate is said to have admitted that he trained around 50 activists, including Himanshu Panse. According to his statements, Bhate was then asked by Parade to help in a bigger camp organised in the Bhonsala Military School, for which Parade and three of his associates carried 300 gelatin sticks with them from Pune.

The ATS has chargesheeted 11 people for criminal conspiracy, all with links to Hindutva organisations. It also linked them to attacks on mosques and against Muslims in towns of Jalna, Parbhani and Purna around that time. Later, the case was transferred to the CBI which filed its chargesheet in March 2008 and dropped charges against Laxman Rajkondwar in whose house the blast had occurred.
12 November 2008

இஸ்லாம் கவிதையை நிராகரிக்கின்றதா?

செவ்வாய், 24 மார்ச் 2009
விமர்சனம்: ''உங்களில் ஓருவருடைய வயிறு கவிதையால் நிரம்பியிருப்பதைவிட சீழ் சலத்தால் நிரம்பியிருப்பது நன்று.''
புகாரி 6154, முஸ்லிம் 4191.

இப்படியிருக்கயில் ஏன் கவிதை என்ற பகுதி? அதனை எடுத்துவிடலாமே. கட்டுரையிலேயே நம் கருத்துக்களைச் சொல்லலாம்.

- மின்னஞ்சல் வழியாகச் சகோதரர் முஹம்மது சுல்தான்.

விளக்கம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்புச் சகோதரர் முஹம்மது சுல்தான்,

''உங்களில் ஒருவருடைய வயிறு கவிதையால் நிரம்பியிருப்பதைவிடச் சீழ் சலத்தால் நிரம்பியிருப்பது நன்று'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிப்பாளர்கள்: அபூஹுரைரா,(ரலி) ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அபூஸயீத் அல் குத்ரீ (ரலி) (நூல்கள்: புகாரி 6154. 6155 முஸ்லிம் 4546, 4547, 4548)

கவிதை கூடாது என்று நீங்கள் எடுத்துக்காட்டிய அறிவிப்புகள் இருப்பதுபோல் கவிதையை ஆதாரித்தும் ஆதாரப்பூர்வமான பல அறிவிப்புகள் உள்ளன.

கவிதைகளுக்கும் கவிஞர்களுக்கும் இஸ்லாம் எதிரானதல்ல. "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கவிஞர் என்று அழைக்கப்படும் ஹஸ்ஸான் (ரலி) அவர்களுக்காக பள்ளிவாசலில் ஒரு மேடை அமைக்கப்பட்டு, அதில் நின்று இஸ்லாத்தின் மேன்மைகளையும் நபியவர்களின் பண்புகளையும் அவர் பாடுவார்" என நபிமொழிகளின் விரிவுரைகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன! கவிஞருக்கு மேடை அமைத்துக்கொடுத்துக் கவிபாடச் சொன்ன மார்க்கம் இஸ்லாம்.

இஸ்லாம் கவிபாடுவதைத் தடை செய்யவில்லை!

இஸ்லாத்தில் கவிதை கூடுமா? கூடாதா? என்பதில் கவிதை கூடும் என்பதற்கான இஸ்லாத்தின் சான்றுகளை முதலில் பார்ப்போம்:

கவிதை கூடும்; கூடாது என்ற இருவாதங்களுக்கும் வைக்கப்போகும் அறிவிப்புகளில் கவிதை என்ற சொல்லுக்கு அரபியில் ''ஷிஅர்'' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. வார்த்தை மாற்றங்கள் இருக்குமோ என்ற சந்தேகம் எழுவதற்கு வாய்ப்பில்லை.

''நிச்சயமாக கவிதையிலும் ஹிக்மத் - ஞானம் உண்டு'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 6145)

(பனூ குறைழா போரின்போது கவிஞர்) ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்களிடம் ''எதிரிகளுக்கு எதிராக வசைக்கவி பாடுங்கள். ஜிப்ரீல் உங்களுடன் (உறுதுணையாக) இருப்பார்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன். அறிவிப்பாளர்கள்: பராவு பின் ஆஸிப் (ரலி) அபூஹுரைரா (ரலி) (நூல்கள்: புகாரி 3213, 4123, 4124, 6153. முஸ்லிம் 4897, 4899)

மேலும், மக்காவைத் துறந்து மதீனா வந்தபோது நபித்தோழர்கள் அபூபக்ர் (ரலி) பிலால் (ரலி) ஆகியோருக்குக் காய்ச்சல் ஏற்பட்டு, தங்கள் உடல் நலக்குறைவைக் கவிதை நடையில் கூறியதாக புகாரியின் 1889, 3926, 5654, 5677 ஆகிய ஹதீஸ்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்னும், விரிவஞ்சிக் கவிதையை ஆதரிக்கும் பல அறிவிப்புகள் இங்குச் சேர்க்கப்படவில்லை.

கவிதை பாடுவது இஸ்லாத்திற்கு எதிரானதல்ல என்றும் கவிதையையும் கவிஞரையும் உற்சாகமூட்டும் மார்க்கமே இஸ்லாம் என்பதையும் பல நபிமொழிகள் வழியாக அறிந்துகொள்ள முடிகின்றது. "இஸ்லாத்தின் எதிரிகளுக்குப் பதிலடி கொடுத்து கவிபாடும்போது வானவர்கோன் ஜிப்ரீலைக் கொண்டு கவிஞருக்கு இறைவன் வலுவூட்டுகின்றான்" என்ற அறிவிப்பு இங்குக் குறிப்பிடத்தக்கது.

இஸ்லாம் ஆதரிக்கும் கவிதைகள்.

எவ்வகையான கவிதைகளை இஸ்லாம் ஆதரிக்கிறது? என்றால் இஸ்லாம் விதிக்கும் ஒரே நிபந்தனை, கவிதையில் உண்மை இருக்க வேண்டும். கவிதை என்ற பெயரில் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டுப் பொய்யையும் புனைச் சுருட்டையும் சேர்த்து இட்டுக்கட்டக்கூடாது.

''கவிஞர்களின் சொற்களிலேயே மிகவும் உண்மையான சொல், (கவிஞர்) லபீத் சொன்ன, 'அறிக! அல்லாஹ்வைத் தவிர அனைத்துப் பொருட்களுமே அழியக்கூடிவையே' எனும் பாடல்தான்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்கள்: புகாரி 3841, 6147, 6489. முஸ்லிம் 4541, 4542, 4543, 4544, 4545,)

கவிதையின் இலக்கணம் அதன் ஒவ்வொரு வாசகத்திலும் உண்மை பொதிந்திருக்க வேண்டும். இதையே இஸ்லாம் விரும்புகின்றது.

எடுத்துக் காட்டாக: கவிமணி தேசிக விநாயகம் பாடிய ஒரு கவிதை. உண்மையும் உள்ளத்து எழுச்சியும் உணர்ச்சி மயமாகிப் பிறப்பதே கவிதை என்பது அவரது சார்பு.

''உள்ளத்து உள்ளது கவிதை - இன்பம்

உருவெடுப்பது கவிதை,

தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை

தெரிந்து உரைப்பது கவிதை''

வாழும் காலத்தில் மனிதர்களிடையே சமநிலை இல்லாமல் ஏற்றத் தாழ்வுகளே நிலைத்து நிற்கின்றன. ஆனால் மரணத்திற்குப்பின் ''பிரேதம்'' என்ற ஒரு சொல்லில் மண்ணறையில் சமநிலை சமரசம் ஏற்படுகின்றது! இதைச் சில கவித்துளி வரிகளில் மிகச் சுருக்கமாக ஒரு கவிஞன் பாடுகிறான்:

''ஆண்டி இங்கே அரசனும் இங்கே

அறிஞன் இங்கே அசடனும் இங்கே''

ஆண்டிக்கும் அரசனுக்கும் சமரசம் சமத்துவம் ஏற்படும் இடம் மண்ணறை!

அரசன் மரணித்தாலும், அறிஞன் மரணித்தாலும் அரசனை எடுத்தாச்சா? என்று கேட்பதில்லை! பிரேதத்தை எடுத்தாச்சா? என்றும், முஸ்லிம்கள் சொல் வழக்கில் ஜனாஸா" title="Definition : உயிர் பிரிந்த உடல்">ஜனாஸாவை எடுத்தாச்சா? மையித்தை எடுத்தாச்சா? என்றே விசாரிக்கப்படும்.

உண்மை, உயிரோட்டம், உணர்ச்சிகள் அடங்கிய கவிதைகளை இஸ்லாம் வரவேற்கின்றது.

ஆமிர்(ரலி) அவர்கள் கவிஞராக இருந்தார்கள். அவர்கள் (தம் வாகனத்திலிருந்து) இறங்கி மக்களுக்காகப் (பின்வரும் யாப்பு வகைக் கவிதையைப்) பாடி அவர்களின் ஒட்டகங்களை விரைந்தோடச் செய்தார்கள்.

'இறைவா! நீ இல்லையென்றால் நாங்கள் நேர்வழி பெற்றிருக்கமாட்டோம்,

தர்மம் செய்திருக்கவுமாட்டோம்,

தொழுதிருக்கவுமாட்டோம்,

உனக்காக (எங்களை) அர்ப்பணம் செய்கிறோம்,

உன் வழியைப் பின்பற்றும்வரை எங்களை மன்னிப்பாயாக!

நாங்கள் (போர்க்களத்தில் எதிரியைச்) சந்திக்கும்போது எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக!

எங்களின் மீது அமைதியைப் பொழிவாயாக!

(அறவழியில் செல்ல) நாங்கள் அழைக்கப்பட்டால் நாங்கள் (தயாராக) வந்துவிடுவோம்.

எங்களிடம் மக்கள் (அபயக்) குரல் எழுப்பினால் (உதவிக்கு வருவோம்)' என்று பாடிக் கொண்டிருந்தார்கள். (வழக்கம் போன்று பாடலைக் கேட்டு ஒட்டகங்கள் விரைந்தோடலாயின.)

அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'யார் இந்த ஒட்டகவோட்டி?' என்று கேட்டார்கள். மக்கள், 'ஆமிர் இப்னு அக்வஃ' என்று பதிலளித்தனர். அப்போது, 'அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாக!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூல்கள்: புகாரி, 6148 முஸ்லிம் 3695).

இறைவன் இல்லை என்றால் நேர்வழி என்பதே இல்லை என்பதை ஆணித்தரமாக விளக்குகிறது மேற்கண்ட கவிதை.

இஸ்லாம் தடை விதிக்கும் கவிதைகள்.

கவிஞர்களை வீணர்களே பின்பற்றுவார்கள். அவர்கள் ஒவ்வொரு பள்ளத் தாக்கிலும் தட்டழிந்து திரிவதை நீர் அறியவில்லையா? அவர்கள் செய்யாததைக் கூறுகின்றனர். ( அல்குர்ஆன், 26:224-226)

அல்குர்ஆனின் ''கவிஞர்கள்'' என்ற 26வது அத்தியாயத்தில் ''கவிஞர்களை வீணர்களே பின்பற்றுவார்கள்'' என்ற இறைவாக்கு சத்தியத்திற்கெதிராகவும் அசத்தியத்திற்கு ஆதரவாகவும் போலித்தனத்தைப் பொய்யாகப் புனைந்து கவிதை வடித்த நிராகரிப்பளார்களைக் குறிப்பிட்டுப் பேசுகின்றது.

ஒரு கவிதை அனுமதிக்கப்படுவதும் நிராகரிக்கப்படுவதும் அது சொல்லக்கூடிய தகவலைப் பொறுத்தே அமையும். இறை உணர்வு, இறைவாழ்த்து, ஓரிறைக்கொள்கை, நல்லறம் போன்ற நல்ல கருத்துகளைக் கொண்டதாக இருந்தால் அது அறியாமைக்கால கவியாக இருந்தாலும் வரவேற்கப்படும்.

ஒரு நாள் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களது வாகனத்தில்) அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள், ''உமய்யா பின் அபிஸல்த்தின் கவிதைகளில் ஏதேனும் உமக்குத் தெரியுமா?'' என்று கேட்டார்கள். ''ஆம் தெரியும்!'' என்றேன். ''பாடு'' என்றார்கள். நான் பாடலைப் பாடினேன். ''இன்னும் பாடு'' என்றார்கள். இன்னொரு பாடலைப் பாடினேன். ''இன்னும் பாடு'' என்றார்கள். இவ்வாறு அல்லாஹ்வின் தூதருக்காக நூறு பாடல்களைப் பாடிக்காட்டினேன். அறிவிப்பவர்: ஷரீத் பின் சுவைத் அஸ்ஸகஃபீ (ரலி) (நூல்: முஸ்லிம் 4540)

உமய்யா பின் அபிஸல்த் அறியாமைக் காலக் கவிஞர் ஆவார். - ''அவர் தமது கவிதையின் கருத்துகளால் இஸ்லாத்தைத் தழுவும் அளவுக்கு வந்து விட்டார்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக வேறோர் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது. அந்த அளவுக்கு - அவரது கவிவரிகளில் ஓரிறைக் கோட்பாடு, சத்தியம், அறநெறிகள், நல்லறங்கள் நிறைந்திருந்திருந்தன. கலப்பற்ற உண்மையான உயிரோட்டமான கவிதைகளுக்கு இஸ்லாம் மறுப்புச் சொல்லவில்லை.

ஆனால், ''கண்ணுக்கு மை அழகு, கவிதைக்கு பொய் அழகு'' என உண்மைக்குப் புறம்பாக, கற்பனை கவிவரிகளுக்கு வார்த்தைகளைத் தேடிப் புனைவதும் கவிதை என்ற பெயரில் பெண்களின் அங்கங்களை வர்ணிப்பதும் குர்ஆன் சுன்னாவுக்கு எதிரானவையாகும். இப்படியான புனைவுக் கவிதைகளில் எந்நேரமும் மூழ்கிக் கிடக்கும் கவிஞனின் வயிறு கவிதையால் நிறைந்திருப்பதைவிட சீழ் சலத்தால் நிறைந்திருப்பது எவ்வளவோ மேல் என்ற கருத்தைச் சொல்லிக் கண்டிக்கிறது இஸ்லாம். அவ்வாறான கவிதைகளையும், கவிஞர்களையும் விட்டு மக்கள் விலகிக்கொள்ள வேண்டும்.

உண்மையான - உயிரோட்டமான நல்ல கவிகளைப் பாடுவதையும் கேட்பதையும் குர்ஆன், சுன்னா தடை செய்யவில்லை. ''கவிதையிலும் ஹிக்மத் - ஞானம் உண்டு'' ஞானமுள்ள கவிதைகளை மக்கள் கேட்கலாம்; அதிலிருந்து படிப்பினையும் பெறலாம் என்று விளங்கினால் கவிதைகள கூடும்; கூடாது என்ற இரு கருத்திலுள்ள முரண்பாடு நீங்கிவிடும்.

.

சுதந்திர இந்தியாவின் தலைமைத் தேர்தல் அதிகாரிகள்


சி.எம்.என். சலீம்

நாட்டின் ஜனாதிபதியால் தேர்வு செளிணியப்படுபவர் தான் தேர்தல் ஆணையத்தின் தலைமை அதிகாரி. இந்த தேர்தல் ஆணையம் தான் நாட்டின் மிக உயரிய பஞ்சாயத்து அமைப்புகளான பாராளுமன்றம், மாநில சட்டமன்றம், போன்றவற்றிற்கு தேர்தல் நடத்துகிறது. அதுமட்டுமல்ல, இந்தியாவின் முதல் குடிமகனான ஜனாதிபதி பதவிக்கும், துணை ஜனாதிபதி பதவிக்கும் கூட தேர்தல் நடத்தும் பொறுப்பு இந்த ஆணையத்திற்கு உண்டு. தேர்தலில் சட்ட திட்டங்களை வகுப்பது, அரசியல் கட்சிகளை பதிவு செளிணிவது, போட்டியிடும் வேட்பாளர்களின் தகுதியை நிர்ணயிப்பது, அவர்களுக்கு சின்னம் வழங்குவது, வாக்காளர் பட்டியல் தயாரிப்பது, வாக்குச் சாவடிகளை கண்காணிப்பது, வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்குவது, தகுதியிழக்கும் உறுப்பினர்களை ஜனாதிபதி மற்றும் ஆளுநர் ஆகியோரிடம் பரிந்துரைப்பது, அனைத்து தேர்தல் நடவடிக்கைகளுக்கும் இந்த அமைப்புதான் பொறுப்பு. சுருங்கச் சொன்னால் இந்தியாவில் வாழும் 110 கோடி மக்களை ஆளுகின்ற வர்க்கத்தை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை (தேவை ஏற்படின் இடையில்) தேர்வு செய்ய அரசியல் சாசன சட்டம் 324ன் கீழ் அமைக்கப்பட்ட தன்னாட்சிப் பெற்ற அமைப்புதான் இந்த இந்தியத் தேர்தல் ஆணையம். இந்த தேர்தல் ஆணையத்தின் தலைமை அதிகாரிகஷீமீ பட்டியலைப் பார்ப்போம். நாடு விடுதலை பெற்றதிலிருந்து இது வரையில் பொறுப்பில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரிகளின் பட்டியல் இங்கே தரப்பட்டுள்ளது.

1. சுகுமார் சென் - 1950 - 1958
2. கே.வி.கே.. சுந்தரம் - 1958 - 1967
3. எஸ்.பி. சென் வர்மா - 1967 - 1972
4. டாக்டர் நாகேந்திர சிங் - 1972 - 1973
5. டி. சாமிநாதன் - 1973 - 1977
6. எஸ்.கே. ஷாக்தார் - 1977 - 1982
7. ஆர்.கே. திரிவேதி - 1982 - 1985
8. ஆர்.வி.எஸ். பெரிசாஸ்திரி - 1986 - 1990
9. வி.எஸ். ரமாதேவி - 1990 நவ26 - டிச 26வரை.
10. டி.என். சேசன் - 1990 - 1996
11. எம்.எஸ். கில் - 1996 - 2001
12. ஜே.எம். லிங்டோ - 2001 - 2004
13. டி.எஸ். கிருட்டிணமூர்த்தி - 2004 - 2005
14. பி.பி. டாண்டன் - 2005 - 2006
15. என். கோபாலசாமி - 2006 - இன்று வரை

நாடு விடுதலை பெற்று 61 ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட தலைமைத் தேர்தல��=8

பாஸிஸ காவல்துறையும் இரட்டைவேட ஊடகங்களும்!


பொதுவாகவே இந்தியக் காவல்துறையும் உளவுத்துறையும் காவிமயமாக்கப்பட்டுள்ளது என்றதொரு குற்றச்சாட்டு நீண்டகாலமாக உண்டு. முஸ்லிம் மற்றும் சிறுபான்மையினரின் கல்வி, பொருளாதார, அரசியல் நிலைகளைக் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட சச்சார் கமிட்டியின் அறிக்கையும் கிட்டத்தட்ட இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

இதில் மும்பைக் காவல்துறையின் செயல்பாடுகளை எடுத்துக் கூறமுடியும். அந்த அளவிற்கு மும்பைக் காவல்துறையின் பாஸிஸ, காவி முகம் 1992 பாபரி மஸூதி குண்டுவெடிப்பின்போது மும்பையில் நடத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான இனக்கலவரத்தில் வெளிப்பட்டது. அதன் பின்னர், பல்வேறு தருணங்களில் மும்பைக் காவல்துறையின் முஸ்லிம் விரோதச் செயல்பாடுகள் வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருந்தாலும் அவை ஊடகத்துறையில் ஊடுருவியுள்ள பாஸிஸக் கூட்டாளிகளின் கைங்கர்யத்தால் மக்களிடையே வெளிப்படாமலேயே மறைக்கப்பட்டுள்ளன.

நாட்டில் எந்த ஒரு அசம்பாவிதம் நடந்தாலும் அதிலும் குண்டுவெடிப்பாக இருந்து விட்டால் உடனடியாகச் சில முஸ்லிம் இளைஞர்களைக் கைது செய்து, முஸ்லிம் சமுதாயத்தைக் கூண்டில் நிறுத்துவது இப்பாஸிஸக் காவல்துறையின் வாடிக்கையான செயல். அவ்வேளைகளில் காவல்துறைக்குப் போட்டியாக ஊடகங்களும் நான் முந்தி, நீ முந்தி என இல்லாத "இஸ்லாமியத் தீவிரவாதத்தை" முஸ்லிம் பெயர்களில் சந்தைப் படுத்துவது வழக்கம்.

மாறிவரும் வேக உலக நடப்புகளில் மாய்ந்து போகும் குண்டுவெடிப்புகளின் வடுக்களோடு, அதில் தொடர்புடையவர்களாகக் கைது செய்யப்பட்டு "தீவிரவாதிகளாக்கப்பட்ட" முஸ்லிம் இளைஞர்களின் கதையையும் மக்கள் மறந்து விடுகின்றனர். மறந்து விட்ட மக்களுக்கு எதற்காக வீணாக நினைவுபடுத்த வேண்டும் என்று நினைத்தார்களோ என்னவோ, பல வழக்குகளிலும் 'அவசரமாக'க் கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் விசாரணைகள் மூலம் அதிர்ஷ்டவசமாக நிரபராதிகள் எனத் தெளிவிக்கப்பட்டு விடுதலை செய்யப்படும்போது, ஆரம்பத்தில் "முஸ்லிம் தீவிரவாதிகள்" எனவும் புதிய-புதிய பெயர்களில் அறிமுகப்படுத்தப்பட்ட இல்லாத தீவிரவாத இயக்கங்களையும் காவிக் கூட்டணி அமைத்துள்ள பாஸிஸ ஊடகங்களும் மறைத்து விடுகின்றன.

இதற்குச் சரியான எடுத்துக்காட்டு, மும்பைத் தாக்குதலின்போது ஆரம்பத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட சிமியின் புதிய தென்னகப் பதிப்பு என்று சொல்லப் பட்ட, "டெக்கான் முஜாஹிதீன்!". ஒவ்வொரு குண்டுவெடிப்புகளின் பின்னணியிலும் செயல்பட்ட/படும் உண்மையான தீவிரவாதிகளால் உருவாக்கப்படும் இந்தப் புதுப்புது தீவிரவாத இயக்கங்களின் பெயர்கள், பிந்தைய காலங்களில் முஸ்லிம் இளைஞர்களை வேட்டையாடுவதற்கு வசதியாக உளவுத்துறையின் தலைமையகங்களில் பதியப்பட்டு விடுவது வழக்கம்.

ஆனால், டெக்கான் முஜாஹிதீன் விவகாரத்தில் மட்டும் "மும்பைத் தாக்குதலை நடத்தியவர்கள் நாங்கள்தான்" என ரஷ்ய/கனடாவிலிருந்து டெக்கான் முஜாஹிதீன் பெயரில் மின்னஞ்சல் அனுப்பிய ஆசான்கள் தயவால் பிழைத்துக் கொண்டது. ஆரம்பத்தில் "டெக்கான் முஜாஹிதீன்" பெயரில் ரஷ்யாவிலிருந்து வந்த மின்னஞ்சலை மையப்படுத்தி விழாக் கொண்டாடிய பெரு ஊடகப் பணமுதலைகள், இப்பொழுது அதனைக் குறித்து வாயைத் திறப்பதே இல்லை.

அதனைப் போன்ற மற்றொரு பெயர்தான், மும்பைத் தாக்குதலுக்கு முன்னர் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளின்போது அறிமுகப்படுத்தப்பட்ட சிமியின் இல்லாத "இந்தியன் முஜாஹிதீன்" கிளை அமைப்பும். அத்தகையதொரு இல்லாத நிழல் இயக்கம் இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக அந்தக் குண்டுவெடிப்புகளின்போது குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் பலரை, அவ்வியக்கங்களின் நிறுவனர்களாகவும் துணை நிறுவனர்களாகவும் காவல்துறையும் ஊடகங்களும் அறிமுகப்படுத்தின. அவர்களைக் "கண்டு பிடித்த"க் காவலர்களுக்குச் சிறப்புப் பரிசுகளும் அறிவிக்கப் பட்டன.

அதில் ஒருவர்தான் சாதிக் ஷேக் என்பவர். இரயில் குண்டு வெடிப்புகளில் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்பட்டுக் கைது செய்யப்பட்ட இவரை, "இந்தியன் முஜாஹித்தீன் (IM) அமைப்பின் துணை நிறுவனராக" மும்பைக் காவல்துறை அறிமுகம் செய்தது. அப்போது இவரைக் குறித்துப் பக்கம் பக்கமாக செய்திகள் வெளியிடாத ஊடகங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இறுதியாக, இந்த சாதிக் ஷேக் குற்றத்தை ஒப்புக் கொண்டதாகவும் அவர்தான் இந்தியன் முஜாஹிதீனின் துணை நிறுவனர் என அவர் பொறுப்பேற்றுக் கொண்டதாகவும் இத்தகைய செயலுக்கு அவர் வருந்துவதாக அவர் வாக்குமூலம் அளித்ததாகவும் பாஸிஸ ஊடகங்கள் பொய்களைக் கடைபரப்பின.

தற்பொழுது, குற்றங்களை 'ஒப்புக் கொண்ட' அதே சாதிக் ஷேக் நிரபராதி எனவும் அவருக்கும் இரயில் குண்டுவெடிப்புக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை எனவும் அப்பாவியான அவரை மும்பைக் காவல்துறை பொய்க் குற்றம் சுமத்தி குற்றவாளியாக்கியதாகவும் கூறி, மும்பைத் தீவிரவாதத் தடுப்புத் துறை (ATS) அவரை விடுதலை செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன. அவரது விஷயத்தில் மும்பைக் காவல்துறை செய்த அநியாயத்தைக் குறித்துத் தீவிரவாதத் தடுப்புத் துறை கூறும் தகவல் இதோ:

கடந்த 2006ஆம் வருடம் ஜூலை 11ந் தேதி நிகழ்ந்த இரயில் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர் என சந்தேகிப்பட்டு, மும்பைக் காவல்துறையால் கைது செய்யப்பட்டார் சாதிக் ஷேக். அதன் பின் தொடர்ச்சியாக நடந்த விசாரணைக்குப் பிறகு தற்போது "குண்டு வெடிப்பிற்கும் இவருக்கும் தொடர்புள்ள எந்தவோர் ஆதாரமும் கிடைக்காத காரணத்தினால் குற்றமற்றவர்" என்று நிருபணமாகியுள்ளதாக ATS அறிவித்துள்ளது.

ATS விசாரணையின் ஒரு பகுதி!

"குற்றத்தை சாதிக் ஒப்புக் கொண்டார்!" என மும்பை குற்றப்பிரிவு இதுநாள்வரை கூறிவந்த தகவல் பொய்யானது என்பது வேறு வகையில் நிரூபணம் ஆகியுள்ளது.

மும்பையின் forensic science laboratory ஏ.டி.எஸ் இடம் சமர்ப்பித்துள்ள ஆய்வுகளான மூளையில் பதிவாகும் விஷயங்களைக் கண்டறியும் (brain mapping) மற்றும் பாலிகிராஃப் (polygraph) ஆகிய சோதனைகளின் மூலம் சாதிக், குற்றமற்றவர் என்று நிருபணம் ஆகியிருப்பதோடு, குற்றத்தினை ஒப்புக் கொள்ள வற்புறுத்தப் பட்டுள்ளார் என்பதையும் காட்டிக் கொடுத்திருக்கிறது.

இந்தத் திடுக்கிடும் தகவல், இவ்வழக்கில் பெரும் திருப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அப்பாவி சாதிக்கைக் குண்டு வெடிப்பில் தொடர்பு படுத்திய மும்பை குற்றப்பிரிவு, அஹமதாபாத் காவல்துறையினர் மற்றும் டெல்லி காவல்துறையினர் ஆகியோரின் கூற்று ஒட்டுமொத்தமான பொய் மூட்டைகள் என்று நிருபணம் ஆகியுள்ளது.

ATS இன் இந்த அறிவிப்பு மும்பையின் குற்றப்பிரிவுக் காவல்துறைக்குப் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2008 செப்டம்பர் மற்றும் அக்டோபரில் மும்பைக் குற்றப்பிரிவு (Mumbai crime branch) காவல்துறையினர், 21 பேரைக் கைது செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் இந்தியன் முஜாஹித்தீன் அமைப்பினைச் சேர்ந்தவர்கள் என்றும், விசாரணையின்போது குண்டு வெடிப்பிற்கும் தனக்கும் தொடர்பிருப்பதாக சாதிக் ஒப்புக் கொண்டதாகவும் மும்பைக் குற்றப்பிரிவு தகவல் வெளியிட்டது.

மும்பைக் குற்றப்பிரிவு வெளியிட்ட அந்தத் தகவல் ATSக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஏனெனில், இதே சம்பவம் தொடர்பாக ATS ஏற்கனவே தனது விசாரணையின் கீழ் பதிமூன்று பேரைக் கைது செய்திருந்தது. மேலும், கைது செய்யப்பட்டவர்கள் சிமி உறுப்பினர்கள் என்ற சந்தேகக் கண்ணோடு பதினோரு ஆயிரம் பக்கங்கள் அடங்கிய குற்றப் பத்திரிகையை ATS தயாரித்திருந்தது.


இச்சூழலில், மும்பைக் குற்றப்பிரிவின் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, தமது விசாரணையை சாதிக் பக்கம் திருப்பிய ATS, இரண்டு வாரங்கள் கடும் விசாரணையை அவரிடம் மேற்கொண்டது. விசாரணையின் இறுதியில், மும்பைக் குற்றப்பிரிவின் அறிவிப்பு தமக்குப் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக ATS அறிவித்துள்ளது.

"முப்பத்தியொரு வயதான சாதிக்கைக் கடந்த பிப்ரவரி 28ம் தேதி கைது செய்து நாங்கள் விசாரணையைத் துவக்கினோம். இருவாரத் தொடர் விசாரணையில் ரெயில் குண்டுவெடிப்பிற்கும் சாதிக்கிற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பது தெளிவானது. மேலும் தொடர்புடைய ஆதாரங்கள் ஏதும் கிடைக்க வில்லை!" என்றார் ATS அதிகாரி ஒருவர்.

ATS தற்போது செய்வதறியாமல், நீதிமன்றத்தில் தனது தரப்பிலான புகாரைச் சமர்ப்பிக்க உள்ளது. இதன் மூலம் சாதிக் குற்றமற்றவர் என்று விடுதலை செய்யப் படுவார் என்று ATS அறிவித்துள்ளது.

அதே சமயத்தில், தான் தவறு இழைத்துவிட்டதாகவும் அதற்காக வருந்துவதாகவும் சாதிக் கூறியதாக, ஒரு செய்தி ஊடகம் திரித்து வெளிட்ட சிடி வெளியீட்டினை ATS கடுமையாகக் கண்டித்துள்ளது.

குண்டுவெடிப்புகளும் அசம்பாவிதங்களும் நிகழும் வேளைகளில் காவிமயமாக்கப்பட்டுள்ள காவல்துறையும் ஊடகங்களும் போட்டியிட்டுக் கொண்டு முஸ்லிம் இளைஞர்களைத் தீவிரவாதிகள் எனக்கூறி அவர்களின் வாழ்க்கையோடு விளையாடும் அதே வேளையில், தொடர் விசாரணைகளின்போது அதிர்ஷ்டவசமாக யாரையாவது நிரபராதி எனக் கண்டறியப்பட்டால், அவர் தொடர்பாக அவிழ்த்து விடப்பட்ட தீவிரவாதக் கட்டுக்கதைகளைக் குறித்தோ அவரது வாழ்க்கை சீரழிந்துள்ளதைக் குறித்தோ எவ்விதக் குற்ற உணர்வும் இன்றி, அச்செய்திகளைக் கண்டுகொள்வதையே இந்த ஊடகங்கள் தவிர்த்து விடுகின்றன. ஊடகத்துறையின் நம்பகத்தன்மைக்கு வேட்டு வைக்கும் விதத்தில் காவித்துவம் ஆணிவேராக ஆகிவிட்ட ஊடகங்களிடமிருந்து நியாயங்களை எதிர்பார்ப்பதில் இனியும் எவ்வித அர்த்தமுமிருப்பதாகத் தெரியவில்லை.

நீதிக்காவும் நியாயத்திற்காகவும் புதைக்கப்படும் உண்மைகளுக்காகவும் காவிமயமாகி விட்ட ஊடகத்துறையைச் சீர் செய்வதற்காகவும் இறைமார்க்கத்தினர் எழுதுகோல் ஆயுதம் ஏந்த வேண்டியது கட்டாயக் கடமை.

கடமையை நிறைவேற்றுவார்களா?