அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, December 6, 2011

மாவோயிஸ்ட் போராட்டம் ஜார்கண்டில் 2வது நாளாக தண்டவாளம் தகர்ப்பு!!!



ராஞ்சி : மாவோயிஸ்ட் கமாண்டர் கிஷன்ஜி கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜார்கண்ட்டில், மாவோயிஸ்ட்கள் நேற்று 2வது நாளாக தண்டவாளத்தை தகர்த்தனர். 
கிஷன்ஜி, பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மாவோயிஸ்ட்கள் கடந்த 2 நாட்களாக போராட்டம் அறிவித்தனர். ஜார்கண்ட் மாநிலம் லதேகர் மாவட்டத்தில் ரயில் தண்டவாளம் கடந்த 3ம் தேதி இரவு தகர்க்ப்பட்டது. 

இந்நிலையில் தன்பாத் மாவட்டம் நிஷித்பூர் மற்றும் மடாரி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டாவாளத்தை மாவோயிஸ்ட்கள் நேற்று முன்தினம் இரவு குண்டுவைத்து தகர்த்தனர். தன்பாத்&காரக்பூர் பயணிகள் கடந்து சென்ற சிறிது நேரத்தில் இந்த குண்டு வெடிப்பு நடந்ததால், பயணிகள் தப்பினர். பலாமாவ் மாவட்டத்தில் வட்டா அலுவலகம் ஒன்றும் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. மாவோயிஸ்ட் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் நேற்று 2வது நாளாக பேராட்டம் நடந்ததால் மார்க்கெட் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. லாரிகளும் ஓடவில்லை.

தொண்டையில் வாழைப்பழம் சிக்கியது எல்கேஜி மாணவன் மூச்சுத் திணறி சாவு!!!

சென்னை : தொண்டையில் வாழைப்பழம் சிக்கியதால், எல்.கே.ஜி. மாணவன்  மூச்சுத் திணறி பரிதாபமாக இறந்தான். சென்னை அடுத்த கீழ்க்கட்டளை, அம்பாள் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவர், தனியார் சாப்ட்வேர் கம்பெனி மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரி. இவரது மனைவி பாக்கியலட்சுமி. இவர் களது மகன் ஹரீஸ் சாய்நாதன். மூன்றரை வயது சிறுவன். இவன் பல்லாவரம், தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தான். 

கிருஷ்ணகுமார், தனது மகனை நேற்று காரில் அழைத்து வந்து பள்ளியில் விட்டுச் சென்றார். ஹரீஸ், காலை 10.15 மணிக்கு பள்ளி வராண்டாவில் சக மாணவர்களுடன் வீட்டில் இருந்து கொண்டு வந்த வாழைப்பழத்தை சாப் பிட்டுக் கொண்டிருந்தான். வேகமாக சாப்பிட்டதாக தெரிகிறது. அப்போது, எதிர்பாராதவிதமாக பழம் தொண்டையில் சிக்கியது. இதில் அவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே வகுப்பு ஆசிரியை ஈஸ்வரி, ஆயா கண்மணி, உடற்பயிற்சி ஆசிரியர் சந்துரு ஆகியோர் அவனுக்கு முதலுதவி செய்தனர். இருப்பினும், மூச்சுத் திணறல் நீடித்தது. பின்னர் வலிப்பு ஏற்பட்டது. 

தமிழகம்-கேரளா இடையேயான உறவை சீர்குலைப் பவர்களுக்கு தண்டணை : உம்மன் சாண்டி!!!



திருவனந்தபுரம்: முல்லை பெரியாறு விவகாரத்தை பயன்படுத்தி, தமிழகம் மற்றும் கேரளா இடையேயான உறவை சீர்குலைக்கும் வகையில் கலவரம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, அம்மாநில முதல்வர் உம்மண் சாண்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தைப் பயன்படுத்தி தமிழர்கள் மீதான வன்முறையை கேரளாவில் சிலர் ஏவியுள்ளனர். குறிப்பாக இடுக்கி மாவட்டத்தில் பல பகுதிகளிலும் தமிழக சுற்றுலாப் பயணிகள், ஐயப்ப பக்தர்கள், தொழிலாளர்களைக் குறி வைத்து கடும் தாக்குதல் நடந்துள்ளது. தமிழர்களின் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் தாக்கப்பட்டுளளன.

குஜராத்:இன​ப்படுகொலைக்​கு உதவியதன் மூ​லம் மோடியிடம் ஆதாயம் பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரிகளி​ன் பட்டியல்


imagesCAZYZ0GI
புதுடெல்லி:மோடிக்கு எதிராக குரல் எழுப்பிய மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் சிறையில் வாடும் வேளையில் குஜராத்தில் முஸ்லிம் இனப்படுகொலை நடைபெற்ற வேளையிலும் அதனைத் தொடர்ந்தும் மோடியின் கட்டளைகளை தவறாமல் நிறைவேற்றி ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு உதவிய ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு மோடி அளித்தது பதவி உயர்வும், ஓய்வுப்பெற்ற பிறகும் பதவியில் நீடிப்பதற்கான அனுமதியுமாகும்.
பி.சி.பாண்டே(1970பாட்ச்):- 
இனப்படுகொலை நடைபெற்ற வேளையில் அஹ்மதாபாத் மாநகர போலீஸ் கமிஷனர். ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் கூட்டுப் படுகொலை நிகழ்த்துவதற்கு உதவும் விதமாக போலீஸை செயலற்றதாக்கினார்.
1000 முஸ்லிம்கள் அஹ்மதாபாத்தில் கொல்லப்பட்ட வழக்கில் ஆதாரங்களை அழித்ததும், தொடர்ந்து நடந்த போலி என்கவுண்டர்களில் பங்கு வகித்ததும் நிரூபணமானது.

பாபர் மஸ்ஜித் நிஜங்களும்-போராட்டங்களும் .

கி.பி.1526 - முதல் பாணிபட் போர் டெல்-க்கு அருகே (இன்றைய ஹரியானா மாநிலத்தில்) பாபருக்கும் அப்போது டெல்-யை ஆண்ட இப்ராஹிம் லோடிக்கும் இடையே நடந்தது. லோடி கொல்லப்பட்டு பாபர் வெற்றி பெறுகிறார். இந்தியாவின் வரலாறு மாறுகிறது. பாபர் முகலாயப் பேரரசின் தலைவராக அறியணை ஏறுகிறார்.
 
கி.பி.1528 - பாபரின் தளபதி மீர்பாகி அயோத்திக்கு வருகிறார். அங்கு முழுமை அடையாமல் கிடந்த பள்ளிவாசலை கட்டி முடித்து அதற்கு பாபரின் பெயரை சூட்டுகிறார். 1524ல் இப்ராஹிம் லோடி டெல்-யை ஆண்டபொழுது இப்பள்ளிவாசலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருந்தது.
 
கி.பி.1853 - முதல் முறையாக பாபர் மஸ்ஜித் நிலம் தொடர்பான சர்ச்சை ஆங்கிலேயர்களால் தூண்டிவிடப்படுகிறது.
 

சமூக நீதி மாநாடு!!!



delhi SJC
சமூக நீதியையும்,சம உரிமைகளையும் தேடி இந்தியாவில் ஒடுக்கப்பட்ட சிறுபான்மை சமூகங்கள் நடத்தி வரும் நீண்ட நெடிய போராட்டத்தின் மகத்தான வளர்ச்சிதான் கடந்த 26,27 தினங்களில் டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக நீதி மாநாடு.
இந்தியாவின் நாலா புறங்களிலும் இருந்து வந்த பிரதிநிதிகள் ஒன்றிணைந்த மாநாட்டின் இரண்டாவது நாள், தேசத்தின் தலைநகரையே ஆச்சரியப்படவைக்கும் வகையில் பெரும் சக்தி பிரகடனத்தின் சாட்சியாக மாறியது.

என்றும் நம் நினைவில்…! நீதிக்காக ஏங்கும் பாபரி!


let we forgot
பாபரி மஸ்ஜித் என்றதும் நம் நினைவில் நிழலாடுவது சிதிலமடைந்த மூன்று கும்பங்கள் கொண்ட ஒரு கட்டடமும், பின்னர் அது மணல் மேடாகத் தகர்க்கப்பட்டதும், பயங்கரவாத ஃபாசிச ஹிந்துத்துவ கோர முகங்களும், நாடு முழுவதும் அதனையொட்டி நடந்த முஸ்லிம் இனப் படுகொலைகளும், இழந்த முஸ்லிம்களின் ரத்தமும், சதையும், அதனை மீட்டெடுப்பதற்கான முஸ்லிம்களின் நீண்டகாலப் போராட்டமும்தான்!
ஹிந்துத்துவ கயவர்கள் 1992 டிசம்பர் 6 அன்று பாபரி மஸ்ஜிதைச் சுற்றி குழுமியிருந்த பொழுது எப்படியும் நம்துனை இராணுவம் மஸ்ஜிதைக் காப்பாற்றிவிடும் என்ற நப்பாசை நம் இதயத்தில் ஓடியது. ஒவ்வொரு கற்களாக பாபரி தகர்க்கப்பட்ட பொழுது நம் நப்பாசையும் தகர்ந்து தரைமட்டமானது.

Thursday, November 10, 2011

'கோமாதா'வை பாதுகாக்க கோஷம் போடும் தினமணி.

untitled.bmp
ந்துக்கள் வழிபடும் கடவுளர்களின் பட்டியலில் பசுவும் ஒன்று. அதை நாம் குறைகாண முடியாது. அது அவர்களின் நம்பிக்கை சார்ந்த விஷயம். ஒருவர் தனக்கு சொந்தமான எந்த ஒரு பொருளையும் விற்கும் உரிமை படைத்தவர். அந்த அடிப்படையில் மாடு வளர்க்கும் ஒருவர், அந்த மாட்டின் மூலம் பலனில்லை என்றால் அதை விற்பதற்கு அவருக்கு அனுமதியுண்டு. அதே போல் அவர் விற்கும் மாட்டை விலைக்கு வாங்கிச்செல்லும் ஒருவர் அதை இறைச்சியாக்கி விற்பதற்கும் உரிமையுண்டு. இதில் அடுத்தவர் தலையிட எந்தவித நியாயமுமில்லை. ஆனால், ஒரு நேரத்தில் பசுவதை என்று பசுவுக்கு மட்டும் வக்காலத்து வாங்கிய 'அவாள்கள்' இப்போது காளை மாட்டிற்கும் ஆதரவுக் கரம் நீட்டத் தொடங்கியுள்ளார்கள். இதுபற்றி ''தடை விதத்தால் தான் என்ன?'' என்ற தலைப்பில் தலையங்கம் தீட்டியுள்ள தினமணி நாளிதழ் தலைகால் புரியாமல் உளறியுள்ளது.

வெள்ளம் நின்றும், தொடரும் சோகம் : நம்பிக்கையூட்டிய குட்டி யானை!



தாய்லாந்து : கடந்த ஒரு வாரமாக பேசப்பட்டுவரும் தாய்லாந்து வெள்ளத்தின் சீற்றம், தற்போது குறைந்த போதிலும், அம்மக்களின் வாழ்க்கை, இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. இந்நிலையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக பிறந்தது ஒரு யானைக் குட்டி.




விலங்குகளையும் விட்டுவைக்காத வெள்ளம்:

நீதிபதி கட்ஜுக்கு கண்டனம் தெரிவிக்கும் ஊடகத்தாருக்கு கடுங்கண்டனம்..!

ந்த ஊடகத்துறையினர் எல்லோரும் இப்படி ஒட்டுமொத்தமாக வாயிலும் வயிற்றிலும் 'லபோ திபோ' என்று அடித்து அலறிக்கொண்டு... எதற்கு இதுபோல காட்டமாக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி திரு.மார்கண்டேய கட்ஜுவுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும்..? ஊடகத்தினர்  பற்றி அவர் அப்படி என்னதான் சொன்னார்..?

காரணம் இருக்கின்றது சகோ..! "ஊடகம்" என்ற இந்த காட்டுப்பூனைக்கு,  இதுவரை சரியான ஒரு மணியை கட்ட முக்கிய உயர்ந்த அரசுப்பணியில் இருந்தவர்கள் எவரும் ஒரு சிறு முயற்சி எடுத்ததாகக்கூட எனக்கு நியாபகம் இல்லை. ஆனால், இவரோ... செய்தியாளர் திரு.கரன் தாப்பர்க்கு சென்ற வாரம் அளித்த CNN-IBN  தன் பேட்டியில், பொதுவாக ஊடகங்களை சவுக்கை எடுத்து அடித்து விளாசி தோலை உரித்து தொங்கப்போட்டு இருக்கிறார், தன்னுடைய காட்டமான உண்மை வார்த்தைகள் மூலம்..!
.

இரண்டாம் தலைமுறை செல்லிடத் தொலைபேசி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட நான்கு பேர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனுக்கள் தொடர்பாக, டிசம்பர் 1-ம் தேதி பதிலளிக்குமாறு சிபிஐ எனப்படும் மத்தியப் புலனாய்வுத் துறைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சி இயக்குநர் ஷரத்குமார், குசேகான் நிறுவன இயக்குநர்கள் ஆஸிப் பால்வா, ராஜீவ் அகர்வால் மற்றும் ஹிந்தித் திரைப்படத் தயாரிப்பாளர் கரீ்ம் மொரானி ஆகியோர் தாக்கல் செய்த மனு மீது நீதிபதி வி.கே. ஷாலி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
கடந்த 3-ம் தேதி, கனிமொழி உள்ளிட்டோரின் ஜாமீன் மனுக்களை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, அவர்கள் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறார்கள்.

வந்து விடுகிறேன்!!!

pain.jpg

அழும் உன் குரலை
ஆழ் மனதில்
பிதைத்துவிட்டு;
இறுதியாய் உனை
ஒருமுறை
திரும்பிப்பார்த்து;

இந்தியாவும் பாகிஸ்தானும் தமக்கிடையேயான பிரச்சினைகள் மிகுந்த உறவுகளை பின்னுக்கு தள்ளி ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்க வேண்டிய தருணம் வந்துள்ளது என்று இரு நாட்டின் பிரதமர்களும் கூறியுள்ளனர்.


மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தானை தளமாகக் கொண்டு இயங்கும் தீவிரவாதிகள் மும்பையில் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலுக்கு பின்னர் இந்திய பாகிஸ்தான் உறவுகள் அதளபாதாளத்துக்கு சென்றன.
மாலத்தீவுகளில் நடைபெற்று வரும் தெற்காசிய நாடுகளின் உச்சி மாநாட்டின் போது இந்த இரு நாட்டுப் பிரதமர்கள் மற்றும் இதர அமைச்சர்கள் சந்தித்து உரையாடிய போதே இந்தக் கருத்துக்களை வெளியாகியுள்ளன.
இந்தப் பேச்சுவார்த்தைகளில் இருநாட்டு வர்த்தக உறவுகள் பற்றியே முக்கியமாக விவாதிக்கப்பட்டதாக இந்தியப் பிரதமருடன் மாலத்தீவுகள் சென்றுள்ள பி.டி.ஐ. செய்தியாளர் தமிழோசையிடம் தெரிவித்தார்.

பரஸ்பர பாராட்டுகள்

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் பாகிஸ்தானியப் பிரதமர் யூசூஃப் ராஜா கீலானியும் இந்தப் பேச்சு வார்த்தைகளின் போது பல விடயங்களை விவாதித்ததாகவும் கூறி ஒருவரை ஒருவர் நட்பு ரீதியாக பாராட்டிக் கொண்டனர்.
கீலானி அவர்கள் சமாதானத்தை விரும்பும் ஒரு மனிதர் எனும் எண்ணம் அவருடனான சந்திப்புக்கு பிறகு வலுவடைந்துள்ளது என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
மன்மோகன் சிங் ஒரு வெளிப்படையானவர் என்றும், தீவிரவாதம், காஷ்மீர் பிரச்சினை, நதிநீர் மற்றும் வர்த்தகம் தொடர்பான அனைத்து விடயங்களிலுள்ள பிரச்சினைகளை புரிந்து கொண்டு விவாதிக்கத் தயாராக இருக்கிறார் என்று பாகிஸ்தானியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
2008 ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற பயங்கவராதத் தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்ட நிலையில், இரு நாட்டு உறவுகள் மிகவும் மோசமடைந்தது.
ஆனாலும் இது போன்ற பல பேச்சுவார்த்தைகள் சீர்கெட்டுபோன உறவுகளை முன்னேற்ற உதவின.
அண்மையில் பாகிஸ்தானிய பரப்புக்குள் நுழைந்த ஒரு இந்திய ஹெலிகாப்டரையும், அதன் பணியாளர்களையும் பாகிஸ்தான் உடனைடியாக விடுவித்தது போன்ற சம்பவங்கள் நம்பிக்கைகளை அதிகரிக்கச் செய்துள்ளன.
பேச்சுவார்த்தைகளின் மூலம் உறுதியான முடிவுகளை எடுக்க இதுதான் சரியான நேரம் என இருநாட்டுப் பிரதமர்களும் கூறியுள்ளனர்.

"கஸாபை தூக்கிலட வேண்டும்"

மும்பை தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள்
மும்பை தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள்
பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் மும்பை தாக்குதல்களை நடத்திய பாகிஸ்தானியர் அஜ்மல் கசாப் ஒரு தீவிரவாதி என்று தான் நம்புவதாகவும் அவரை தூக்கிலட வேண்டும் எனவும் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்துள்ளார்.
இந்திய நீதிமன்றம் ஒன்றால் வழங்கப்பட்டுள்ள தூக்கு தண்டனையை எதிர்த்து அஜ்மல் கசாப் தற்போது மேல்முறையீடு ஒன்றை செய்துள்ளார்.
ஒசாமா பின் லாடனுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுக்கவில்லையா என்று பிபிசியின் செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, அதை முற்றாக மறுத்த ரஹ்மான் மாலிக் அது மிக மிக கற்பனையான ஒரு குற்றச்சாட்டு என்றும் கூறுகிறார்.
பாகிஸ்தானின் உளவுத்துறை உட்பட பாகிஸ்தானின் நிர்வாகத்தில் யாருக்கும் பின் லாடன் கொல்லப்படுவதற்கு முன்னர் தமது நாட்டில் தங்கியிருந்தார் என்பது தெரியாது எனவும் ரஹ்மான் மாலிக் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
எனினும் தீவிரவாதத்தை எதிர்த்து போராட பொதுவாத ஒரு உத்தி தேவை என்பதையும் தாங்கள் உணர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பூமிக்கு அருகில் வந்து சென்றது அபூர்வ கிரகம்..

வாஷிங்டன் : விண்வெளியில் இருந்து கீழிறங்கிய கிரகம் ஒன்று, 8ம் தேதி இரவு பூமியை நெருங்கி வந்து சென்றதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’ தெரிவித்துள்ளது. 2005 ஒய்.யூ.55 என்ற அந்த கிரகம், பூமியில் இருந்து 3.24 லட்சம் கி.மீ. வரை நெருங்கி வந்தது. 8ம் தேதி இரவு வேகமாக இது நடந்தது. 
சந்திரனில் இருந்து பூமிக்கு இடையே உள்ள தூரத்தில் 0.85 பங்கு அளவுக்கு கிரகம் அருகே வந்தது. 

வர வேண்டாம்.

Pain_in_.jpg

வெற்று அறையில்
ஒற்றையாய் நின்று
உனக்குப் பிடித்த
வாசனைத் திரவியத்தை
நான் வாசம் பிடித்து!

18 ஆண்டுகளில் விசித்திர மாற்றம் : மனிதர்களை கம்ப்யூட்டர் 2029ல் ஓவர்டேக் செய்யும்!

வாஷிங்டன்: இன்னும் 18 ஆண்டுகளில் மனிதர்களை கம்ப்யூட்டர் உலகம் ஓவர்டேக் செய்யும் என்று கணித்து கூறுகிறார் அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளர். இயற்பியல், வேதியியல், மருத்துவம், வானியல், தொழில்நுட்பம் என்று ஒரு பக்கம் ஆராய்ச்சிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. இத்துறைகளில் ஏற்படும் மாற்றங்களை அடிப்படையாக கொண்டு எதிர்காலத்தை கணிக்கும் ‘பியூச்சராலஜி’ (எதிர்காலவியல்) துறையிலும் ஆராய்ச்சிகள் சூடுபறக்க நடக்கின்றன. கம்ப்யூட்டர் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பம் இதேபோக்கில் வளர்ச்சி அடைந்தால், எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கணிக்கும் ஆராய்ச்சியை அமெரிக்காவில் புகழ்பெற்று விளங்கும் பியூச்சராலஜி ஆராய்ச்சியாளர் ரே  கர்ஸ்வெல் மேற்கொண்டார். ஆய்வு முடிவை தற்போது அவர் வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

Sunday, November 6, 2011

அரசுத் துறை, போலீஸ் மின் கட்டண பாக்கி ரூ.300 கோடி: நோட்டீஸ் அனுப்ப மின் வாரியம் முடிவு

மத்திய, மாநில அரசுத் துறை அலுவலகங்கள், மின் கட்டணம் செலுத்தாமல், தமிழக மின் வாரியத்திற்கு 300 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளன. தெரு விளக்குக்காக, ஊராட்சிகள் மட்டும் 70 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளன. இவற்றிற்கு நோட்டீஸ் அனுப்பி வசூலிக்க, வாரியம் முடிவு செய்துள்ளது. தமிழக மின் வாரியம், 53 ஆயிரம் கோடி ரூபாய் கடனிலும், 38 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பிலும் சிக்கித் தவிக்கிறது. மின்சாரப் பற்றாக்குறையால், அதிக விலைக்கு வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்கி, குறைந்த விலைக்கு மின் வாரியம் வினியோகம் செய்கிறது. இதனால், நஷ்டத்தின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.

மாணவன் மர்ம மரணம்மருத்துவமனை முற்றுகை

காங்கேயம்: படியூர் தனியார் ஐ.டி.ஐ.,யில் மாணவன் மர்மமாக மரணமடைந்தார்.காங்கேயத்தில் உள்ள தனியார் ஐ.டி.ஐ.,யில், காளிபாளையம் முத்துசாமி மகன் ரமேஷ்குமார் (21), படித்தார். நேற்று முன்தினம் மாலை ஐ.டி.ஐ.,யில் ரமேஷ்குமார் மயக்கமடைந்ததாக கூறி, காங்கேயம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மாலை 4.30க்கு ரமேஷ்குமார் இறந்து போனார்.மாணவரின் உடல் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

பெட்ரோல் விலையை குறைக்க முடியாது : மத்திய அரசு திட்டவட்டம் : மம்தா மிரட்டலுக்கு "பெப்பே!'

புதுடில்லி:"பெட்ரோல் விலை உயர்வு வாபஸ் பெறப்படாது. அதற்கான வாய்ப்பே இல்லை' என, மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. அதே நேரத்தில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மிரட்டலுக்கும் "பெப்பே' காட்டி விட்டது.

பெட்ரோல் விலை கடந்த வியாழனன்று, லிட்டருக்கு ரூ.1.80 உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும் என, எதிர்க்கட்சிகளும், மத்தியில் ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. போராட்டம் நடத்தப்போவதாக அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளன. இந்நிலையில், உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலை வாபஸ் பெறப்படாது என, மத்திய அரசு வட்டாரங்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன.

தமிழகம் முழுவதும் சாலைகள், பயிர்கள் நாசம் தொடர் மழைக்கு 40 பேர் பலி

சென்னை: தமிழகத்தில் தொடர் மழைக்கு இதுவரை 40 பேர் பலியாகியுள்ளனர். 50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். சேதமடைந்த சாலைகளை சீரமைக்க சுமார் ஸி500 கோடிக்கு மேல் செலவாகும் என மதிப்பிடப் பட்டுள்ளது. சென்னையில் மழைநீர் கால்வாயில் விழுந்து பள்ளி ஆசிரியை பரிதாபமாக உயிரிழந்தார்.
தமிழகத்தில் கடந்த மாதம் 24ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அன்று முதல் இதுவரை 4 முறை காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டு தொடர் மழை பெய்து வருகிறது. ஓரிரு நாள் மட்டுமே ஓய்ந்திருந்த மழை, இப் போது பகல், இரவு பாராமல் தொடர்ந்து கொட்டி வருகிறது. சென்னையில் தாழ்வான பகுதிகள் எல்லாம் தண்ணீரில் மிதக்கின்றன. தி.நகர் உஸ்மான் சாலையில் தரையில் இருந்து 2 அடி அளவுக்கு தண்ணீர் தேங்கி நின்றதால், நடந்து  சென்ற பள்ளி ஆசிரியை மூடாமல் இருந்த மழைநீர் கால்வாயில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

Wednesday, October 26, 2011

வங்க தேசம்: கொத்தடிமை தேசம்!

ரெடிமேட் என அழைக்கப்படும் ஆயத்த ஆடைகளைத்தான் இன்று உலகம் முழுவதும் விரும்பி அணிகின்றனர். பல்வேறு வடிவமைப்புகளில் பல பெயர்களில் இவை விற்கப்பட்டாலும், இவற்றைச் சந்தைப்படுத்துவது விரல்விட்டு எண்ணக்கூடிய சில பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களே. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் சில்லரை விற்பனையில் ஆதிக்கம் செலுத்தும் வால்மார்ட், மெட்ரோ, டெஸ்கோ போன்ற மிகப் பெரிய சங்கிலித் தொடர் நிறுவனங்கள் ஆயத்த ஆடை வர்த்தகத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ளன. இந்த ஆயத்த ஆடைகளின் மீது ஒட்டப்பட்டிருக்கும் பெயர்கள் மட்டுமே பன்னாட்டு நிறுவனங்களுடையவை. ஆனால் அவற்றைத் தயாரித்துத்தரும் உழைப்பு முழுவதும் ஏழை நாடுகளின் தொழிலாளர்களுக்குச் சொந்தமானது.
ஆயத்த ஆடை உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நாடுகளில் வங்கதேசமும் ஒன்று. இத்துறையில் கோலோச்சும் ஒப்பந்த நிறுவனங்கள் கொழுத்து வளர்வதற்காக, அற்ப கூலிக்கு தினமும் 12 மணிநேரம் வரை, வங்கதேசத் தொழிலாளர்கள் உழைக்கின்றனர். இன்றைய உலகமயச் சூழலில், ஏழை நாடுகளின் தொழிலாளர் வர்க்கம் எத்தகையதொரு சுரண்டலுக்கும் அடக்குமுறைக்கும் ஆளாகி அவலத்தில் தள்ளப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வங்கதேச ஆயத்த ஆடைத் தொழிலாளர்களின் வாழ்நிலை, ஒரு வகைமாதிரியாக அமைந்துள்ளது.

கடாபி குடும்பத்தினரின் ஆடம்பரம்!!!


பொதுவாகவே கடாபியை விமர்சிக்கப்பட்ட காரியங்களில் மிக முக்கியமானது கடாபி தனது பாதுகாப்பிற்க்காக பெண் கமான்டோக்களை வைத்திருந்ததுதான் ஆம் திருமனமாகத 
நாற்பது இளம்பெண்களைத்தான் கடாபி தனது பாதுகாப்புப் படையாக வைத்திருந்தார் அதன் பின்னர் விமர்சிக்கப்பட்டது தனது குடும்பத்தினரின் ஆடம்பரம் பற்றித்தான் கடாபி குடும்பத்தினரின் ஆடம்பரத்தைப் பற்றி உறுதியாக எந்தத் தகவலும் இல்லையென்றாலும் மேற்கத்திய ஊடகங்கள் பலவாறான செய்திகளை வெளியிட்டுள்ளன அவைகள் அவரது உறவினர்கள் ஹாலிவுட்டில் பணமுதலீடு செய்துள்ளதாகவும் மிகப்பெரிய விருந்துகளை ஏற்பாடு செய்து பாப் இசைப் பாடகர்களுடன் கூத்தடிப்பதாகவும் கடாபியின் இரண்டாவது மனைவிக்கு சொந்தமாக விமான நிறுவனம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது கடாபி கொள்ளப்பட்டு மூன்று நாட்களாகும் நிலையில் அவரின் சொத்துமதிப்பு உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமாக இருபதாயிரம் கோடி டாலர்களைத் தாண்டும் என்று மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

கடாபி பிறப்பு முதல் இறப்புவரை!!!



கடாபி கடந்த இரண்டு நாட்களாக உலகில் உள்ள எல்லாநாளிதழ்களிலும் முன்பக்கத்திலும் எல்லாச் செய்திச்சேனல்களிலும் நிறைந்து காணப்படும் பெயர் ஆம் நாற்பது ஆண்டுகளுக்கும்மேல் லிபியாவை ஆண்டு அந்நாட்டுப் புரட்சிப்படைகளின் கைகளாலேயே அடித்துக் கொள்ளப்பட்ட கடாபியின் சுருக்கமான வரலாறை  இங்கு தருகிறோம்
பிறப்பும் கல்வியும்
1942 ம் ஆண்டு ஜூன் மாதம் ஏழாம் தேதி பிறந்த கடாபியின் முழுப்பெயர் முவம்மர் முஹம்மது அபூமின்யார் அல்கடாபி ஆகும் கடாபியின் சொந்த ஊரான ஸிர்த்திற்க்கு அருகில் பாலைவனப் பிரதேசத்தின் பெதுயுன் கோத்திரத்தில் வளர்ந்த கடாபி அங்குள்ள கதாபா கோத்திரத்தைச் சேர்ந்தவர் வீட்டிற்க்கு அருகில் உள்ள முஸ்லீம் தொடக்கப்பள்ளியில் ஆரம்பக் கல்வியைத் தொடங்கிய கடாபி பின்னர் மிஸ்ரதயில் ஆசிரியர் ஒருவரின் மாணவராகச் சேர்ந்து தொடர்ந்து கல்வி கற்றார் 1961 ல் தலைநகர் பெங்காசியில் உள்ள லிபியன் ரானுவ அகடாமியில் சேர்ந்து ராணுவக்கல்வி பயின்று அதன் தொடர்ச்சியாக இங்கிலாந்து சென்று அங்கு நான்கு மாதம் ராணுவ உயர்கல்வியை கற்றுமுடித்தார்

டாக்டர் மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள்!!!




டாக்டர் மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள்


கனடா நாட்டைச் சேர்ந்த கிறித்தவ பிரசார பீரங்கி டாக்டர் ஜாரி மில்லர். பைபிளைக் கரைத்துக் குடித்தவர். அதே நேரத்தில் கணக்குப் பிரியர். இதனால் எதையும் தர்க்கரீதியாக அணுகுவதையே விரும்புவார்.

இவர் ஒருநாள் திருக்குர்ஆனை வாசிக்க நினைத்தார். அவரது எண்ணமெல்லாம், குர்ஆனில் தவறுகளைக் கண்டுபிடிக்க வேண்டும்; முஸ்லிம்களைக் கிறித்தவ மதத்திற்கு அழைக்க இத்தவறுகள் தனக்கு உதவும் என்பதுதான். பதினான்கு நூற்றாண்டுகளாக ஓதப்பட்டுவரும் ஒரு பழைய நூலில் என்ன இருந்துவிடப் போகிறது? பாலைவனம் பற்றியும் அது போன்ற செய்திகள் பற்றியுமே அது பேசும் என்பதே அந்தக் கணக்கரின் கணக்காக இருந்தது.

ஈ'... எனும் எதிரி!!!





ன்று நகரம் முதல் கிராமம் வரை எங்கும் நீக்கமற நிறைந்து வாழும் பூச்சி இனம்தான் ஈக்கள்.  பொதுவாக ஈக்கள் என்று சொன்னாலே நமக்கு அருவருப்புதான் தோன்றும்.  ஏனென்றால் அவை மலத்திலும்குப்பையிலும் உட்கார்ந்து அப்படியே நம் உடலிலும்உண்ணும் உணவுகள் மீதும் உட்காருவது தான்.  ஈக்களை முழுமையாக ஒழிக்க சுகாதாரமே சிறந்த வழி. அரசும் பல வழிகளில் முயற்சி செய்தும் ஈக்களின் எண்ணிக்கை குறைந்த பாடில்லை.

கடைகளில் மக்கள் கூட்டம் ஸ்டீவ் ஜாப்ஸ் புத்தகம் சீனாவில் கடும் கிராக்கி!!!


பெய்ஜிங் : ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றிய வாழ்க்கை வரலாற்று புத்தகத்துக்கு  சீனாவில் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. கடைகள் முன் நீண்ட வரிசையில் காத்திருந்து புத்தகங்களை மக்கள் வாங்கிச் செல்கின்றனர். அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் 1955ல் பிறந்த ஸ்டீவ் ஜாப்ஸ், 21 வயதில் கம்ப்யூட்டர் துறையில் கால்பதித்து ஆப்பிள் நிறுவனத்தை நிறுவினார். கம்ப்யூட்டர் துறையில் உலகின் சிறந்த நிபுணர்களை உருவாக்கியதுடன் பல புதிய பொருட்களை அறிமுகப்படுத்தினார். 

வீண் செலவு வேண்டாமே !!!!





நாலு ஏக்கர் தென்னந்தோப்பையா கழுத்துல போட்டுட்டு திரிஞ்சே....' என்று கதாநாயகியைப் பார்த்து பாட்டி கேட்பது ஒரு திரைப்பட வசனம்.  இளம் வயதினரும், பெரியவர்களும் பணத்தைப் பார்க்கும் பார்வையின் வேறுபாட்டை இந்த வசனம் வெளிப்படுத்துகிறது.

இளம் வயதினரிடையே பற்றியெரியும் பழக்கங்களில் ஒன்று வீண் செலவு.  அதற்கு அவர்கள் 'பே ஷன்' என்றோ 'டிரன்ட்' என்றோ பெயர் சூட்டிக் கொள்கிறார்கள்.  தேவைக்கும், ஆடம்பரத்துக்கும் இடையே உள்ள வித்தியாசம் தெரியாமல் தடுமாறும் நிலை இன்றைக்கு அதிகமாகியிருக்கிறது.

உங்களுக்கு எதிரே செல்லும் இளைஞனின் கையிலிருக்கும் செல்போனின் விலை ஆயிரக்கணக்கில் இருக்கலாம் என்பதுதான் பதறடிக்கும் உண்மை!  நண்பனிண்டம் ஒரு ஐபோன் இருந்தால் தானும் ஒரு ஐபோன் வாங்கிவிட வேண்டும் என பலர் துடிக்கிறார்கள்.  புதிதாக என்ன மாடலில் செல்போன் வந்தாலும் அதை வாங்கிவிட வேண்டும் என்ற துடிப்பு இன்றைய இளைஞனிடம் காணப்படுகிறது.

' தாங்கள் பட்ட கஷ்டத்தைத் தங்கள் பிள்ளைகள் படக் கூடாது ' என பெற்றோர் கண்ணும் கருத்துமாய் இருப்பார்கள்.  வரப்பில் படுத்து வேலை செய்தாலும் பிள்ளைகளுக்கு வியர்வை அரும்பக் கூடாது என சாமரம் வீசுவார்கள்.  பணத்தின் அருமை பிள்ளைகளுக்குப் புரியாமல் போவதற்கு இதுவே கூட காரணமாகி விடுகிறது.

இளம்பெண்களிடம் இருக்கும் ஒரு பழக்கம், ஏகப்பட்ட மேக்கப் பொருட்களை வாங்கிக் குவிப்பது உடல் ஆரோகியத்துக்கு ஆபத்தானது, தோலுக்குத் துரோகம் இழைப்பது என பல்வேறு ஆராய்ச்சிகள் கரடியாய் கத்தினாலும் பலரும் பொருட்படுத்துவதில்லை.

அழகு என்பது மேக்கப் பொருட்களால் வருவதல்ல, ஒரு சின்ன புன்னகையின் மின்னலில் மிளிர்வது என்பதை இளம்பெண்கள் உணர்ந்தாலே போதும்.  குறைந்தபட்ச மேக்கப் பொருட்களே போதும் உங்கள் தேவைகளைத் தீர்த்துக் கொள்ள.

ஹேய்... என்னோட சட்டை எப்படி இருக்கு? பிரபல கம்பெனியின் தயாரிப்பு... விலை இரண்டாயிரம் ரூபாய்... என பந்தா விடுவதில் பல இளைஞர்களுக்கு சில வினாடி சுகம் கிடைக்கிறது.  இது தன்னம்பிக்கைக் குறைபாட்டின் வெளிப்பாடு என்கிறது உளவியல்.

பிறர் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைக் கொண்டே எல்லாவற்றையும் தீர்மானிக்கும் மனம் இவர்களுடையது.  தனது பணத்தை வீணாக பிறருடைய ' அபிப்பிராயத்துகாக ' செலவிடும் அப்பாவிகள் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம்.  நமது பணம் அடுத்தவர்களைத் திருப்திப்படுத்த அல்ல எனும் அடிப்படை உண்மை உணர்தல் முக்கியம்.

பலர் அலுவலகங்களுக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு வருவதையே கவுரவக் குறைச்சலாக நினைத்து விடுகிறார்கள்.  நண்பர்களுடன் உயர்தர ஹோட்டல்களில் உணவருந்துவதுதான் உயர்ந்தது என கருதிக் கொள்கிறார்கள்.  சின்ல நேரங்களில் வார இறுதிக் கொண்டாட்டங்களுக்காக கடற்கரை ஓரங்களிலோ, ஹோட்டல்களிலோ அவர்கள் செலவு செய்யும் பணத்தில் ஏழைகளின் பட்டினியை பல வாரங்களுக்கு விரட்டலாம்.  வீட்டில் சாப்பிடுவது உங்கள் பர்சை மட்டுமல்ல, உங்கள் ஆரோகியத்தையும், குடும்ப உறவையும் வலுவாக்கும்.

சில சமயங்களில் வீட்டுப் பெரியவர்களிடமிருந்து இந்தப் பழக்கம் இளம் வயதினருக்குத் தொற்றுவதுண்டு.  பல அம்மாக்களும், ஐயாக்களும் விளம்பரங்களைக் கண்டால் பொருட்களை வாங்கிக் குவிப்பார்கள்.  இலவசமாய்க் கிடைக்கும் கரண்டிக்காக பட்டு சேலை வாங்க முண்டியடிப்பார்கள்.

'சூப்பர் ஆபர்' என அடித்துப் பிடித்து வாங்கிய பொருட்களில் எத்தனை பொருட்கள் நமக்குத் தேவையானவை? 'கண்டிப்பாக வேண்டும்' என வாங்கிக் குவித்த பொருட்களை எவ்வளவு பயன்படுத்தியிருக்கிறோம் கொஞ்சம் அலசிப் பாருங்கள்.  ஒரு ஆண்டில் எத்தனை முறை அது பயன்பட்டது? அதை வாங்காமல் இருந்திருந்தால் என்னென்ன இழப்புகள் நேரிட்டிருக்கும்? வாங்கியதால் என்னென்ன நன்மைகள் வந்திருக்கின்றன? என கொஞ்சம் யோசியுங்கள் !

பாதிக்கு மேலான பொருட்கள் 'ஏண்டா வாங்கினோம்?' என நம்மை யோசிக்க வைக்கும் என்பது சர்வ நிச்சயம்.  

தேவையான அளவு செலவு செய்வதும், சேமிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்வதும் இளைஞர்களிடம் இருக்க வேண்டிய சில சிறப்பும் பண்புகளாகும்.  குடும்பத்தை வலுவாக்கவும், அதன் மூலம் வலுவான சமூகத்தைக் கட்டியெழுப்பவும் இது ரொம்பவே அவசியம்.

ஒவ்வொரு மாதமும் எவ்வளவு ரூபாய் செலவு செய்யப் போகிறேன் என்பதை முன் கூட்டியே திட்டமிடுங்கள்.  உதாரணமாக வீட்டு வாடகை, பயணச் செலவு, உணவு, போன்பில், இத்யாதி என பட்டியலிடுங்கள்.  அந்த பட்ஜெட்டுக்குள் உங்கள் செலவுகளை கச்சிதமாக நிறுத்துங்கள்  'எது ரொம்ப முக்கியம்' என ஒவ்வொரு விஷயத்தையும் வரிசைப்படுத்தி அந்த வரிசைப்படி பொருட்களை வாங்க முயலுங்கள்.  மாத இறுதியில் நீங்கள் திட்டமிட்டபடி செயல் பட்டிருக்கிறீர்களா என்று பாருங்கள. 

ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையைச் சேமிப்பேன் என முடிவெடுங்கள்.  அது எவ்வளவு என்பதை நீங்களே முடிவெடுங்கள்.  சின்ன வயதில் உண்டியலில் சேமிப்பதைப் போல், சட்டென எடுக்க முடியாத ஒரு வங்கியில் அந்த சேமிப்பு இருப்பது நல்லது. 

புத்திசாலிதனமான இளைஞர்கள் வேலை கிடைத்த உடனேயே தங்கள் ரிட்டயர்மென்ட்டுக்காக சேமிக்க துவங்குவார்கள்.  சின்னத் தொகையாக இருந்தாலும், பணி வாழ்க்கை முடிந்த பின் அந்த பணம் நமக்கான பொருளாதார ஊன்றுகோலாய் மாறும். 

இளைஞர்கள் சிக்கிக்கொள்ளும் இன்னொரு இடம் கிரடிட் கார்ட்.  கிரடிட் கார்ட் இருபுறமும் கூரான வாள் போன்றது.  சரியாகக் கையாலவில்லையேல் காயம் நிச்சயம்.  சரியாகப் பயன்படுத்தத் தெரியாதவர்களுக்கான அட்வைஸ், 'என்ன செலவு செய்தாலும் பணப்பரிமாற்றமே வைத்துக் கொள்ளுங்கள்' என்பதுதான்.  செலவு குறையும் என்பது சர்வ நிச்சயம். 

பிரியத்துக்குரியவர்களுக்கு 'கிப்ட்' கொடுப்பதில் கொஞ்சம் வித்தியாசம் காட்டுங்கள்.  பரிசுப் பொருட்கள் விலையுயர்ந்ததாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.  அவை அன்பில் உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம்.  பல வேளைகளில் கையால் நாம் உருவாக்கும் கடிதங்களோ, கை வினைப் பொருட்களோ தரும் ஆத்ம திருப்தி, போகும் வழியில் வாங்கிச் செல்லும் விலையுயர்ந்த பொருட்களுக்கு இருப்பதில்லை! 

அப்படியே ஏதேனும் வாங்க வேண்டுமெனும் கட்டாயமெனில் முன்னமே திட்டமிடுங்கள்.  கடைசி நேரத்தில் அலைபாயும்போது செலவு அதிகமாகும்.  சில மாதங்களுக்கு முன்பே யோசித்தால் நல்ல விலைக்குப் பொருட்கள் கிடைக்கக்கூடும். 

இன்றைக்கு உங்கள் பின்னால் ஓடி ஓடி வரும் 'பர்சனல் லோன்' புதைகுழியில் மறந்தும் விழுந்து விடாதீர்கள்.  கால் வைத்து விட்டால் அப்படியே உங்களை உள்ளிழுத்துக் கொள்ளும்.  முதலில் வசீகரமாய்ப் பேசி பின் கோரமாய்ப் பல்லிளிக்கும்.  அதீத எச்சரிக்கை தேவை!  பலரும் நண்பர்களை இம்ப்ரஸ் செய்கிறேன் பேர்வழி என லோன் வாங்கிக் குவிக்கும் பொருட்கள் அவர்களுடைய பொருளாதாரத்தை டைனோசர் மாதிரிக் கடித்துக் குதறிவிடும். 

பல இளைஞர்கள் நண்பர்கள் செய்கிறார்களே என்பதற்காக ஜிம், டென்னிஸ் கிளப், கிரிக்கேட் கிளப், நீச்சல் கிளப் என ஒரு பந்தாவுக்காக எல்லாவற்றிலும் உறுப்பினர் ஆகி விடுவார்கள்.  ஆனால் எதிலும் உருப்படியாகப் போவதில்லை.  தேவையற்ற இடங்களில் உறுப்பினராய் இருப்பதைத் தவிர்த்தாலே கணிசமான பணம் சேமிக்கலாம். 

உங்களிடம் உறைந்து கிடைக்கக்கூடிய ஏதோ ஒரு திறமையைக் கூர் தீட்டினால் கிடைக்கக்கூடிய மரியாதை அலாதியானது.  எழுத்தோ, ஓவியமோ, கணிதமோ, தையலோ ஏதோ ஒன்றில் உங்கள் ஸ்பெ ஷாலிட்டி இருக்கலாம்.  உங்களிடம் கார் இருக்கிறது என்பதை விடப் பெரிய கவுரவம் நீங்கள் நல்ல ஓவியர் என்பது ! இந்த உண்மையை உணர்ந்தாலே நீங்கள் பணத்தின் மூலம் அடுத்தவர்களை ஈர்க்கும் குணாதிசயத்திலிருந்து வெளியே வந்து விடுவீர்கள். 

  •  உங்களிடம் என்ன இல்லை என்பதை நினைத்துக் கவலைப்படுவதை நிறுத்துங்கள்.  என்ன இருக்கிறது என்பதை நினைத்து தன்னம்பிக்கை கொள்ளுங்கள். 
  •  அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் எனும் கவலை விடுங்கள்.  அடுத்தவர்களைப் பற்றி நீங்கள் அபிப்பிராயம் சொல்வதையும் தவிருங்கள்.  
  •  என்ன செலவு செய்தாலும் அதன் நீண்டகாலப் பயன்களை மனதில் கொள்ளுங்கள்.  உங்கள் ஒவ்வொரு துளிப் பணமும் பல கோடி மக்களுக்கு எட்டாக் கனி என்பதை எப்போதும் நினைவில் வைத்திருங்கள். 
  •  சூதாட்டம், மது, போதை போன்ற தவறான வழிகளுக்கு நிரந்தரப் பூட்டு போடுங்கள்.  உங்கள் வருமானத்தின் கடைசித் துளியையும் உறிஞ்சும் வேகமான வாய் அவற்றுக்கு உண்டு. 
  •  பிறருக்கு உதவும் எண்ணம் கொண்டிருங்கள்.  நீங்கள் ஒரு நேரம் ஹோட்டலில் சாப்பிடாமல் இருந்தால் ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை.  அதற்காகச் செலவிடும் பணத்தை ஒரு ஏழைக்குக் கொடுங்கள்.  கொடுப்பதில் இருக்கும் சுகம், வாங்கிக் குவிப்பதில் இருப்பதில்லை எனும் உண்மை உணர்வீர்கள். 
  •  பொருட்கள் எப்போதுமே நிரந்தர மகிழ்ச்சியைத் தருவதில்லை.  ஆழமான நட்பும், அன்புமே நிரந்தர மகிழ்வைத் தருபவை என்பதைக் கவனத்தில் இருத்துங்கள்.- 
           - நன்றி சேவியர் 

நரபலி நரேந்திர மோடிக்கு ஆப்பு !!

modiகடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரம் தொடர்பான வழக்கில் முதல்வர் நரேந்திர மோடியிடம் குறுக்கு விசாரணை நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டினால் நியமிக்கப்பட்ட வக்கீல்குழு சமர்பித்த அறிக்கையில் பரிந்துரைத்துள்ளனர். .

அகழ்வாராய்சியில் கண்டறியப்பட்ட, 1500 ஆண்டு முன்பு புதைந்த காதலர்களின் எலும்பு கூடு!

ரோம் : கைகோர்த்த நிலையில், ஒருவரை ஒருவர் பார்த்தபடி புதைந்த ஆண் & பெண்ணின் எலும்பு கூடுகள் இத்தாலியில் ஜோடியாக கிடைத்துள்ளன. இவை 1,500 ஆண்டுகளுக்கு முன்பு புதைந்த காதல் ஜோடியின் எலும்புகளாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இத்தாலியின் மாடனா நகரின் புறநகர் பகுதியில் பழங்கால அரண்மனையை புதுப்பிக்கும் பணி சமீபத்தில் நடந்தது. இதற்காக பள்ளம் தோண்டியபோது, 10 அடி ஆழத்தில் ஒரு ஜோடி எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இருவரும் கை கோர்த்த நிலையில் உயிரை விட்டிருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர் டான்டனோ லாபட் கூறியதாவது:

இந்தியர்கள் உட்பட 15,000 மாணவர்களின் விசா ஆஸ்திரேலிய அரசு ரத்து

மெல்பர்ன் : கடந்த ஓராண்டில் ஆஸ்திரேலிய அரசு 15,066 வெளிநாட்டு மாணவர்களின் விசாவை ரத்து செய்துள்ளது. இதனால் ஆயிரக் கணக்கான இந்திய மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்வில் தோல்வியடைந்தது அல்லது வகுப்பை புறக்கணித்த காரணத்தால் 3,624 மாணவர்களின் விசா ரத்து செய்யப்பட்டு தங்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டனர். 

தாய்லாந்தில் கடும் வெள்ளம்: விமான நிலையத்திலும் நீர் புகுந்தது

கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத கடும் வெள்ளப்பெருக்கில் தாய்லாந்து சிக்கித் தவித்துத் தத்தளித்து வருகிறது. உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கான டான் முஆங் விமானநிலையம் பாதுகாப்பு ஏற்பாடுகளை மீறி நீர் உட்புகுந்துவிட்டதால் கடும் பாதிப்புக்குள்ளானது. பயணியர் விமானங்கள், சரக்கு விமானங்கள் அனைத்தும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன. எனினும், மற்றொரு பன்னாட்டு விமான நிலையமான ‘சுவர்ணபூமி’ விமான நிலையம் இதுவரை பாதிப்படையவில்லை.

மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-





மனவியல்வு சிக்கல்(காம்ப்ளக்ஸ்) இன்று ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கும் ஒரு பொதுப் பிரச்சினையாக இருக்கிறது.

ஒரு மனிதனுக்கு அதிகப்படுத்தப்பட்ட அளவில் சுய மதிப்பீடு இருப்பின், அவர் பிறரை விட தன்னை உயர்வாக நினைக்கத் தொடங்குகிறார். மனிதனை மிருகத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது இந்த சுய மதிப்புதான்.
இந்த அதிகப்படுத்தப்பட்ட சுய மதிப்பு சுபாவமானது, ஒரு மனிதனை Superiority complex என்ற நிலைக்குத் தள்ளுகிறது. இந்த மனப் பாங்கானது, அறிவுப்பூர்வ நிலையிலிருந்து ஒரு மனிதனை திருப்பி, அவனை தவறான கருத்தியலுக்குள் செலுத்தி, அவனது ஆளுமையில்(Personality) பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இந்தியச் சுதந்திரத்தில் நாங்கள்

warr.jpg

சுதந்திரத்தில் நாங்கள்

உதிரம் சூடேறி;
பற்றி எரியும் சரித்திரத்தின்
பக்கங்களுக்குச் சொந்தக்காரன்;
மேனியின் சதையை
விதையாக்கி;

புகையில்லா புதுவாழ்வு!




டாக்டர் ப.உ. லெனின் - 



ஒரு மிதமான பொழுதுபோக்கிற்காக, நண்பர்களுடன் கலந்துரையாடும்போது பிடிப்பதாக இருந்த இந்த வெண்சுருட்டுகள் இன்று அனைத்து தரப்பிலும், பழக்கமாகிப் போய், அதை விட்டொழிக்க முடியாமல் தள்ளாத வயதிலும் தடுமாற்றத்தோடு அதை தவறாமல் புகைத்து வருகிறார்கள்.
புகைப்பவருக்கு புகை பல்வேறு நோய்களை தருவது மட்டுமின்றி, அருகில் இருப்பவர்களுக்கும் சேர்த்து இலவசமாக நோய்களைத் தந்து விடுகிறது என்பதுதான் புகைப்பவர்கள் தன்னையும் அறியாமல் செய்யும் கொடும் செயல்! அப்படி என்னதான் புகையால் தீமைகள் ஏற்படுகின்றன? என்றால், முதலில் புகைபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் வருவதே தீய எண்ணம்தான்! ஒரு வெண் சுருட்டில் மட்டும் தார், நிக்கோட்டின், துத்தநாகம், சல்பர் போன்ற 148 வகையான வேதிப் பொருட்கள் இருக்கின்றன. இந்த நூற்றுக்கும் மேற்பட்ட வேதிப் பொருட்கள் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் ஒரு சேர பாதிக்கும். நச்சுகளின் மொத்த நாசகாரக் கலவைதான் இந்த வெண் சுருட்டுகள்!