அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, May 7, 2011

யார் இந்த ஓசாமா ? யார்? யார்?












அன்பு சகோதரர்களே கேளுங்கள்.
உலக வரலாற்றில் அமெரிக்கா என்னும் பிணம் தின்னும் ஓநாய் பல அக்கிரமங்களை செய்து வருகிறது (வந்தது)அதில் ஊன்று தான் சமீபத்தில் நடந்த ஓசாமா படுகொலை.ஒபாமா சொல்கிறான்.ஒசாமா ஒழிந்தான் என்றும்,ஒசாமா அழிந்தான் என்றும். ஆனால் நான் சொல்கிறேன் ஓசாமா ஒழியவில்லை அழியவும் இல்லை.அவன் ஒரு இறை போராளி.இந்த உலகம் அழியும் வரை அவன் வாழ்ந்து கொண்டு தான் இருப்பான்.வரலாற்றை பலர் எழுதுவார்கள்.சிலர் மட்டும் தான் வரலாற்றில் இடம் பிடிப்பார்கள்.அவ்வாறு வரலாற்றில் இடம் பிடிடவர் தான் இந்த ஒசாமா.கறுப்பின அபிசீனிய அடிமை உங்களுக்கு அமீராக நியமிக்க பட்டாலும் அவருக்கு நீங்கள் கீழ் படியுங்கள்.என்று நபிகள் நாயகம் (ஸல் ) அவர்கள் கூறினார்கள் அவர்களின் வழியை பின்பற்றி நடந்த ஒரு சிறந்த மனிதர்   தான் இந்த ஒசாமா.
ஓசாமா ஒவ்வொரு இஸ்லாமியனின் இதயத்திலும்  வாழ்கிறார்.


ஓசாமா உலக எதிரி அல்ல தீவிரவாதியும் அல்ல.
தனது உரிமைக்காக,தன் நட்டு மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்தார்.அதனால் அவர் தீவிரவாதியாக சித்தரிக்க பட்டார்.
எவன் ஒருவன் தனது  உரிமைக்காக போராடி தனது உயிரை இழகின்றானோ.அவன் இறை போராளி (ஷகித்) ஆவான்.
இன்னும் தனது உரிமைக்காக போராடும் எத்தனையோ ஒசாமாக்கள் இவ்வுலகில் உள்ளனர்.மற்றவரின் உயிரை எடுக்கும் ஒபாமாவாக வாழ எந்த இஸ்லாமியனும் விரும்பவில்லை (விரும்புவதும் இல்லை ),அன்று ஆப்கான்,அடுத்து இராக் ,இன்று ஈரான்,என இஸ்லாமிய நாடுகளை குறி வைத்து கொலைகளை கொடூரங்களை,கூட்டு படுகொலைகளை நடத்தும் அமெரிக்க நாயை ஓட ஓட விரட்டிய பெருமைக்கு சொந்தக்காரன் இந்த ஒசாமா .

இவன் பிறந்தது மாட மாளிகையில்,
ஓலை குடிசையை ஒரு போதும் அறியாத  இவன் 
வாழ்நாளில் பாதியை களித்தது அங்கே தான் 
இவனது தொழிற்சாலையை சுற்றி பார்க்க இவனுக்கே 
ஒரு மாதம் ஆகும் என்றால் நமக்கெல்லாம் எவ்வளவு நாள் ஆகும்.
 
கணித்து பாருங்கள்.கட்டிட கலையின் வல்லுனர்கள் இவனின் மூதாதையர்கள் 
ஹரம் ஷெரிப் தொடங்கி கஃபத்லாஹ் வரை மக்கா மதீனாவில் உள்ள அனைத்து கட்டிடங்களும் இவர்களின் பெயரைதான் சொல்லும்.
அவ்வளவு பெரிய செல்வந்தர் தான் இந்த ஓசாமா .

நாம் அனைவரும் பிறக்கும் பொது ஊசமாவாக பிறப்பதில்லை 
இறக்கும் போதாவது ஒசாமாவகை இறக்க முயற்சிப்போமாக 
நீ இறக்கவில்லை விழுந்திருக்கிறாய் விதையாக.உன்னிலிருந்து 
எழுவோம் நாங்கள் ஆயிரம் ஆயிரம் மரமாக. 

பட்டாடை உடுத்தி பவனி வர வேண்டிய வயதில் நீ இஸ்லாத்திற்காக 
ஏ - கே 47 ஐ கையில் எடுதாய்.

உரிமைக்காக போராடினாய்.உலக வரலாற்றில் இடம் பிடித்தாய்.

ஓசாமா உரிமைகளின் போராளி.இறந்தும் வாழும் மாவீரன் நீ 

உன் இறப்பு ஆயிரம் ஆயிரம் ஒசாமாக்களின் 
பிறப்பாக அமையும் இன்ஷா அல்லா இவ்வுலகில்.

நானும் ஒரு ஒசாமாவாக (இறை போராளியாக) மரணிக்க 
ஆசை படுகிறேன் இறைவன் நாடினால் நானும்
 ஒரு ஒசாமாவாக மாறுவேன் இன்ஷா அல்லா.

என்றும் அன்புடன் உங்கள் அன்பு சகோதரன் 
செய்யது அலி அசாருதீன்.

Thursday, May 5, 2011

நரவேட்டை நரேந்திர மோடியைத் தூக்கில் போடுவது எப்போது?.


நான் குல்பர்கா சமூகக் கூடம் எரிந்து தீர்ந்த அடுத்த தினம் அங்கே சென்றிருந்தேன். அதன் தரையெங்கும் மனிதச் சதை தீயில் பொசுங்கி கூழாகப் படிந்திருந்தது. அது எனது காலணியின் கீழ் பகுதியில் சவ்வு போல் ஒட்டிக் கொண்டு நின்றது. அந்தத் தரையின் ஒரு மூலையில் பாதி எரிந்தும் எரியாமலும் இருந்த ஒரு புத்தகத்தை நான் கண்டெடுத்தேன். அது ஒரு பிரிட்டானிக்கா என்சைக்ளோ பீடியா. அதன் மேல் படிந்திருந்த சாம்பலின் மிச்சங்களைத் தட்டிவிட்டு முதல் பக்கத்தைப் புரட்டினேன் – அஸன் ஜாஃப்ரி என்கிற பெயர் அழகான முத்து முத்தான கையெழுத்தில் எழுதப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. அன்றைக்கு நாண் அணிந்திருந்த காலணிகளை அதற்குப் பின் நான் பயன்படுத்தவும் இல்லை – அதன் அடிப்பகுதியை சுத்தம் செய்யவும் இல்லை

குஜராத் கலவரங்களை விசாரித்து வரும் சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் முன் 2002-ம் ஆண்டு குஜராத் காவல்துறையின் உளவுப் பிரிவு கமிஷனராய் இருந்த சஞ்சீவ் ராஜேந்திர பட்டின் வாக்குமூலத்திலிருந்து வெளியே கசிந்துள்ள பகுதிகளில் மேலே உள்ள வரிகள் காணப்படுகின்றன. இந்த அறிக்கையின் விவரங்களை தெகெல்கா பத்திரிகை கடந்த மாதம் வெளியிட்டிருந்தது.

பிப்ரவர் 27-ம் தேதி 2002-ம் ஆண்டு கோத்ரா இரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத் முதலமைச்சர் கூட்டிய காவல் துறை உயரதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் சஞ்சீவ் பட் கலந்து கொண்டுள்ளார். அந்தக் கூட்டத்தில் வைத்து, "முசுலீம்களைப் பழிவாங்கும் நேரம் இது" என்றும், "இந்துக்கள் தமது ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ளப்போகிறார்கள்" என்றும், "அதைக் காவல் துறை கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும்" என்றும் மோடி பகிரங்கமாக உத்திரவிட்டார்.

பாபு பஜ்ரங்கி

Dim lights Embed

அடுத்த நாள். இந்துக்களின் பழிவாங்கும் உணர்ச்சி, அரசு இயந்திரத்தின் மௌனமான அங்கீகாரத்துடன் அரங்கேறுகிறது. முசுலீம்களைக் கண்ட இடத்திலெல்லாம் கொன்று குவித்தனர் இந்து பயங்கரவாதிகள். கருவிலிருந்த முசுலீம் குழந்தைகள் கூட அன்றைக்குத் தப்பவில்லை. தொடர்ந்து நடந்த வன்முறை வெறியாட்டத்தில் நூற்றுக்கணக்கான முசுலீம்கள் கொல்லப்பட்டனர், பெண்கள் வன்புணர்ச்சி செய்யப்பட்டனர். காந்தி பிறந்த மண் என்று போற்றப்படும் மாநிலம் முசுலீம்களின் இரத்தத்தால் சிவந்தது.

கலவரத்தால் அச்சமடைந்த நூற்றுக்கணக்கான முசுலீம்கள் மெகானி நகரில் இருக்கும் குல்பர்கா சமூகக் கூடத்தில் தஞ்சமடைந்துள்ளனர். அது பிப்ரவரி 28-ம் தேதி. அன்று அங்கே தஞ்சமடைந்திருந்தவர்களில் ஒருவர்தான் காங்கிரஸின் முன்னாள் எம்.பி ஹஸன் ஜாஃப்ரி. அன்று அந்தக் கூடத்துக்கு வெளியே முசுலீம்களைக் கொன்றுபோட வேண்டுமென்று கூச்சலிட்டுக் கொண்டு ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, வி.எச்.பி போன்ற இந்து பயங்கரவாத இயக்கங்களின் தொண்டர்கள் குவிந்த வண்ணம் இருந்திருக்கிறார்கள். அந்தப் பகுதியின் கள நிலவரத்தை பார்வாட் எனும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சஞ்சீவ் பட்டுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்.

அரவிந்த் பான்ட்யா

Dim lights Embed

சஞ்சீவ் பட் தன் மேலதிகாரிகளைத் தொடர்பு கொண்டு நிகழவிருக்கும் இனப் படுகொலையை எப்படியாவது தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் என்று கெஞ்சியிருக்கிறார். ஒருவரும் கண்டு கொள்ளாமல் போகவே முதலமைச்சர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு ஓ.பி. சிங் என்கிற அதிகாரியிடம் பேசுகிறார். ஆனால் அங்கே குல்பர்கா சமூகக் கூடம் அமைந்திருக்கும் மெகானி நகர் பகுதியிலோ கொஞ்சம் கொஞ்சமாகப் பிற பகுதிகளில் இருந்து திரட்டி வரப்பட்ட இந்து வெறியர்களின் கும்பல் பெரிதாகிக் கொண்டேயிருந்திருக்கிறது.

முந்தைய தினம் மோடியின் வாயிலிருந்து உதிர்ந்த வார்த்தைகளின் உண்மையான பொருளை சஞ்சீவ் உணர்ந்து கொண்ட போது அங்கே குல்பர்கா சமூகக் கூடம் முற்றிலுமாக எரிந்து போயிருந்தது. 69 முசுலீம்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். அஸன் ஜாஃப்ரியை வெளியே இழுத்து வந்த இந்து வெறியர்கள், அவரது கழுத்தில் நாய் பிடிக்கும் இரும்புச் சுருள் கண்ணியை மாட்டி இறுக்கி, தரதர வென்று இழுத்துள்ளனர். பின் இறந்த அவரின் உடலைத் துண்டுத் துண்டாகப் பிளந்து நெருப்பில் அடையாளம் தெரியாத அளவுக்கு எரித்துள்ளனர்.

ரமேஷ் தவே

Dim lights Embed

இவையெல்லாம் ஏதோ ஆத்திரத்தில் செய்யப்பட்ட கொலைகள் அல்ல. சட்டென்று ஒரு கண நேர கோபத்தில் நிகழ்ந்த வன்முறைகள் அல்ல. அன்றைக்கு நிகழ்ந்த கொலைகளை எப்படியெப்படியெல்லாம் அனுபவித்துச் செய்தார்கள் என்பதையும், கற்பழிப்புகளை எப்படியெல்லாம் திட்டமிட்டு ஒரு கலையைப் போல் நிறைவேற்றினார்கள் என்பதையும், முசுலீம் குழந்தைகளைக் கொன்று களிப்புற்ற தங்கள் அனுபவத்தையும் பின்னர் அவர்களே தெகல்காவின் கேமரா முன் நிதானமாக அசை போட்டுச் சொன்னதைக் கேட்டு நாடே திகைத்து நின்றது. மனசாட்சி கொண்ட மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

தீயிட்டுக் கொளுத்தப்பட்ட குல்பர்கா சமூகக் கூடத்தை ஆய்வு செய்யச் சென்ற போது எரிந்து போன நிலையில் கண்டெடுத்த அஸன் ஜாஃப்ரியின் என்சைக்ளோ பீடியாவைக் கையில் ஏந்தி நின்ற அந்த கணத்தின் மனப்பதிவுகளை சஞ்சீப் பட் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

“எனது கையில் பாதி எரிந்த போன நிலையிலிருந்த அந்தப் புத்தகத்தில் இருந்த ஹஸன் ஜாஃப்ரி எனும் அந்த அழகான கையெழுத்தை கொஞ்ச நேரம் வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றேன். அந்த நேரத்தில் எனது பள்ளி நாட்களின் நினைவுகள் நிழலாடின. அப்போதெல்லாம் இணையம் போன்ற வசதிகள் கிடையாது. என்சைக்ளோ பீடியாவைப் படிக்க வேண்டுமென்றால் சில கிலோ மீட்டர்கள் சைக்கிளை மிதித்து நூலகத்துக்குத்தான் செல்ல வேண்டும். எனது மாணவப் பருவத்தின் லட்சியமே ஒரு நல்ல என்சைக்ளோ பீடியாவை சொந்தமாக வாங்குவதுதான். இதோ, எனது கையில் இப்போது ஒரு என்சைக்ளோ பீடியா இருக்கிறது – பாதி எரிந்து போன நிலையில் – தீயில் பொசுங்கிய மனித சதைக் கூழ் படிந்து போன நிலையில். நான் ஜாஃப்ரியை எனது வாழ்நாளில் சந்தித்ததேயில்லை. ஆனால், அந்த அழகான கையெழுத்து நிச்சயம் அந்த மனிதரின் பக்குவப்பட்ட கலாச்சாரத்தை எனக்கு உணர்த்தியது”

2002ம் ஆண்டு குஜராத்தில் இந்து வெறியர்கள் நிகழ்த்திக் காட்டிய அந்த படுகொலைச் சம்பவங்களில் கொல்லப்பட்ட முசுலீம்களில் எத்தனையோ அஸன் ஜாஃப்ரிக்களின் நெஞ்சை உலுக்கும் கதைகள் உள்ளன. படுகொலைச் சம்பவங்களின் பின்னுள்ள சதியை அம்பலப்படுத்தும் முயற்சியில் இறங்கிய தனது சொந்தக் கட்சிக்காரரான ஹிரேன் பான்ட்யாவைக்கூட பின்னர் கொன்று போட்டனர் இந்து பயங்கரவாதிகள். சென்ற வருடத்தின் ஜனவரி மாதம் சிறப்புப் புலனாய்வுப் பிரிவினரின் முன் கொடுக்கப்பட்ட இந்த வாக்குமூலங்களைக் கொண்டு நடப்பிலிருக்கும் சட்டங்களைக் கொண்டே மோடியைத் தண்டிக்க முடியும். தூக்கில்கூட போட்டிருக்க முடியும்.

ஆனால் இதுவரை அதைத் தன் சொந்த அரசியல் நலன்களுக்காகக்கூட முன்னெடுத்துச் செல்ல காங்கிரசு முயலவில்லை. கார்ப்பரேட் உலகத்தால் மோடிக்கு நல்லவர் வல்லவர் என்கிற ஞானஸ்நானம் வழங்கப்பட்டு அவரது பாவங்கள் மன்னிக்கப்பட்டு விட்டன. நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும்; நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும் என்று முதலாளித்துவ ஊடகங்களும் ஒரு முடிவுக்கு வந்து விட்டன. மோடியின் பொருளாதார ‘சாதனைகளின்’ ஒளியில் தான் கருகிப் போன சில ஆயிரம் முசுலீம்களின் கனவுகளும் உள்ளன என்பதை இவர்கள் மிக வசதியாக மறந்து விடத் துடிக்கிறார்கள்.

குஜராத்தின் சாதனைகள் பற்றிய மயக்கத்தில் இருப்பவர்கள் இன்றும் தொழில்கள் பறிக்கப்பட்டு, வாழ்விடம் பறிக்கப்பட்டு, வாழ்க்கையே பறிக்கப்பட்டு, சொந்தங்களை இழந்து குஜராத்தில் அகதிகளாய் அலையும் அந்த அப்பாவி முசுலீம்களிடம் சென்று அதைப் பற்றி பேசட்டும். ஆனால், ஜனநாயகத்திலும், சக மனிதனின் வாழும் உரிமையின் பேரிலும் உண்மையான அக்கறை கொண்டவர்கள் சிந்தித்துப் பார்க்க எம்மிடம் ஒரு கேள்வி உண்டு – “இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த அமைதி?”

தற்போது இந்த நேர்மையான தைரியமான காவல் அதிகாரி உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்திருக்கிறார். அதில் மோடி நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டதையும், மோடி அங்கே கலவரத்திற்கு ஆதரவாக தெரிவித்ததையும் கூறியிருப்பதோடு, இது குறித்து சிறப்பு புலனாய்வு குழு தீவிரமாக விசாரிக்கவில்லை என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார். ("குஜராத் கொலைகளுக்கு அனுமதியளித்தவர் மோடி" என வெளிப்படையாகக் குற்றம் சாட்டி குஜராத்தின் முன்னாள் DGP ஜெனரல் ஸ்ரீகுமார், பத்திரிகையாளர் கூட்டத்தில் பேசியிருந்ததை சத்தியமார்க்கம்.காம் பதிவு செய்திருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்).

ஆனால் சஞ்செய் பட்டின் இந்த நேரடி வாக்குமூலத்தை மறுத்து மோடியின் பக்தர்களான சில போலீசு அதிகாரிகள் பேசிவருகின்றனர். கோத்ரா எரிப்பு நடந்த இரவில் கூடிய அந்த கூட்டத்தில் இந்த சஞ்செய் பட் இல்லவே இல்லை என்று சக்ரவர்த்தி எனும் அன்றைய டி.ஜி.பி கூறியிருக்கிறார்.

வேறு இரு போலீசு அதிகாரிகள் மோடி கூட்டிய அந்த கூட்டத்தில் யாரெல்லாம் இருந்தார்கள் என்று நினைவில்லை என்று சமாளித்திருக்கிறார்கள். ஆனால் இந்த பச்சைப் பொய்யை சஞ்செய் பட்டின் ஓட்டுநராக இருந்த தாரா சந்த் யாதவ் மறுத்திருக்கிறார். அன்றைய கூட்டத்திற்கு சஞ்செய் கலந்து கொண்டதையும், அவருக்காக வாகனத்துடன் வெளியில் காத்துக் கொண்டிருந்ததையும் அந்த ஓட்டுநர் துணிச்சலுடன் தெரிவித்திருக்கிறார். இதற்காக மோடி கும்பல் இவரை என்கவுண்டர் செய்தாலும் செய்யலாம்.

ஏனெனில் எந்தக் கொலைக்கும், பயங்கரவாத செயல்களுக்கும் இவர்கள் துணிந்தவர்கள்தான் என்பதை பிரக்யா சிங், அசீமானந்தா, மோடி மூலம் அறியலாம்.

நூற்றுக்கணக்கான முசுலீம் மக்களை கொன்று குவித்த அந்த கலவரம் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட படுகொலை என்பதும், அதற்கு தலைமையேற்றவர்தான் நரேந்திர மோடி என்பதற்கும் இதை விட என்ன ஆதாரம் வேண்டும்?

கசாப்பை தூக்கில் போடவேண்டும் என்று தும்மினாலும், சிந்தினாலும் கூப்பாடு போடுபவர்களின் கோரிக்கையை நாம் மறுக்கவில்லை. ஆனால் கசாப் கொன்றதை விட அதிக எண்ணிக்கையில் கொன்றவரும், கசாபின் காலத்திற்கும் முந்தையவருமான நரவேட்டை நாயகன் மோடியைத் தூக்கில் போடவேண்டும் அல்லவா? எப்போது போடுவீர்கள்?

கேள்வியும் படமும் : வினவு

வீடியோ : யூட்யூப்

oOo

தெகெல்காவின் கட்டுரைகளுக்கான இணைப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது. வாசகர்கள் அனைவரும் அவசியம் அவற்றை வாசித்துப் பார்க்க வேண்டும்.

ஹெலிகாப்டரில் சென்ற சிரஞ்சீவி உயிர் தப்பினார்!


மேற்கு வங்க மாநிலத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக ஹெலிகாப்டரில் சென்ற நடிகர் சிரஞ்சீவி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்று வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கரக்பூரில் வசிக்கும் தெலுங்கு மக்களிடையே பிரச்சாரம் செய்வதற்காக நடிகர் சிரஞ்சீவி ஹெலிகாப்டர் மூலம் சென்றார்.

புரூலியாவில் இருந்து கரக்பூருக்கு செல்லவிருந்த அந்த ஹெலிகாப்டர் புறப்பட்ட சில நிமிடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. வானிலை மோசம் அடைந்ததால் ஹெலிகாப்டர் மேலே பறக்க முடியாமல் திணறியது.

சில நிமிடங்கள் வானத்திலேயே வட்டமடித்துக் கொண்டிருந்தது. ஹெலிகாப்டரின் எரிபொருள் குறைந்து கொண்டிருக்க முன்னேறிச் செல்வதில் தடங்கல் ஏற்பட்டதால் விமானி, ஹெலிகாப்டரை கொல்கத்தாவுக்குத் திருப்பி அவசர அவசரமாகத் தரையிறக்கினார்.

பின்னர் ஹெலிகாப்டர் பயணத்தை ரத்து செய்துவிட்டு கரக்பூருக்கு கார் மூலம் பயணமானார் நடிகர் சிரஞ்சீவி

ஆ.ராசா இருக்கும் சிறையில் சுரேஷ் கல்மாடி.


காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் நடந்த முறைகேடுகள் வழக்கில் கைதாகியுள்ள காமன்வெல்த் முன்னாள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் சுரேஷ் கல்மாடிக்கு சிபிஐ காவல் முடிவடைந்ததைத் தொடர்ந்து திஹார் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.



முன்னாள் அமைச்சர் ராசா உள்ளிட்ட விஐபிக்கள் தற்போது அடைக்கப்பட்டுள்ள திஹார் சிறையில் கல்மாடியும் அடைக்கப்படுகிறார். அங்கு 14 நாள் சிறைக் காவலில் வைக்க டெல்லி சிபிஐ கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கல்மாடி உள்ளிட்ட 3 பேர் நீதிபதி தர்மேஷ் சர்மா முன்னிலையி்ல ஆஜர்படுத்தப்பட்டனர். அதைத் தொடர்ந்து மே 18ம் தேதி வரை அனைவரையும் சிறையில் அடைக்க நீதிபதி சர்மா உத்தரவிட்டார்

'ஸ்பெக்டரம்' - பொதுக் கணக்குக் குழு அறிக்கை

இந்திய மக்களவை
இந்திய மக்களவை
இரண்டாம் தலைமுறை செல்லிடத் தொலைபேசி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக ஆய்வு செய்த பொதுக் கணக்குக்குழுவின் அறிக்கை சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் நிலையில், குழுவின் தலைவர் முரளி மனோகர் ஜோஷி அந்த அறிக்கையை மக்களவைத் தலைவர் அலுவலகத்தில் சமர்ப்பித்திருக்கிறார்.

பொதுக்கணக்குக் குழுவின் தலைவராக முரளி மனோகர் ஜோஷியின் பணிக்காலம் சனிக்கிழமையுடன் முடிவடையும் நிலையில் அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று ஜோஷி வலியுறுத்தியுள்ளார்.

அந்தக் குழு தயாரித்த வரைவு அறிக்கையில், பிரதமர் அலுவலகம் மீதும், அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரம் உள்ளிட்டோர் மீதும் குற்றச்சாட்டுக்களைக் கூறியிருந்தது. கசியவிடப்பட்ட அறிக்கையின் மூலம் இந்தத் தகவல்கள் வெளியாயின.

காங்கிரஸ் கூட்டணி உறுப்பினர்கள் எதிர்ப்பு

மன்மோகன் சிங்
மன்மோகன் சிங்
இந் நிலையில், அந்த அறிக்கையை இறுதி செய்ய பொதுக்கணக்குக் குழு கூடிய போது காங்கிரஸ், திமுக, சமாஜவாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளின் 11 உறுப்பினர்கள் சேர்ந்து அந்த அறிக்கையை நிராகரிப்பதாக தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

அதற்கு முன்னதாக நடந்த கடும வாக்குவாதத்தை அடுத்து, கூட்டத்தை ஒத்திவைத்துவிட்டு வெளியே சென்றார் ஜோஷி.

அந்த அறிக்கை சட்டப்படி செல்லாது என்று கூறப்படும் நிலையில், அதை மக்களவைத் தலைவரிடம் சமர்ப்பித்திருக்கிறார் ஜோஷி. அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் அறிக்கையை மக்களவைத் தலைவரிடம் சமர்ப்பித்துவிட்டதாகவும், அதை மக்களவைத் தலைவர் ஏற்றுக்கொண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அனுமதியளிப்பார் என்று எதிர்பார்ப்பதாகவும், அவரது முடிவே இறுதியானது என்றும் தெரிவித்தார்.

அதே நேரத்தில், பிரதமரைப் பற்றி அறிக்கையில் குறிப்பிடுவதை காங்கிரஸார் விரும்பாததால் தான் பிரச்சினையை எழுப்பியிருக்கிறார்கள் என்று ஜோஷி குற்றம் சாட்டினார். இவ்வளவு பெரிய முறைகேடு தொடர்பான அறிக்கையை சீர்குலைக்க முயல்வது மிகவும் கவலைக்குரிய விடயம் என்றார் ஜோஷி.

தேர்வு முறையில் மாற்றம் இல்லை

தமிழக முதல்வர் கருணாநிதி
தமிழக முதல்வர் கருணாநிதி
தமிழகத்தில் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் ஏற்கெனவே உள்ள நடைமுறையே தொடரும் என தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

மாணவர் சேர்க்கை தொடர்பான இந்திய தொழில்நுட்பக் குழுமத்தின் புதிய நெறிமுறைகள் பிற்படுத்தப்பட்டோரின் நலனை பாதிக்கும் எனவும் தமிழக முதல்வர் கூறியிருக்கிறார்.

சமூக நீதியைக் காக்கும் வகையில் புதிய மதிப்பெண் வரையறைகள் திரும்பப் பெறப்படவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

தற்போது மாநிலத்தில் பொறியியல் கல்வி மாணவர் சேர்க்கைக்கான குறைந்தபட்ச தகுதியாக பொதுப் பிரிவினருக்கு சம்பந்தப்பட்ட பாடங்களில் சராசரியாக 50 சதவீத மதிப்பெண்களும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 45 சதவீத மதிப்பெண்களும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு 40 சதவீத மதிப்பெண்களும், பட்டியல் இனத்தவர் மற்றும் மலைவாழ் பழங்குடியினருக்கு 35 சதவீத மதிப்பெண்களும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

தமிழக அரசின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது என்று கூறுகிறார் கோவை அண்ணா தொழில்நுட்ப பல்கலைகழகத்தின் துணை வேந்தர் கே.கருணாகரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.


கடந்த கல்வியாண்டு முதல் தற்போது இருக்கும் நடைமுறை தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வருகிறது.

ஆனால அகில இந்திய தொழில்நுட்பக் குழுமம் எதிர்வரும் கல்வியாண்டு முதல் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு, சம்பந்தப்பட்ட பாடங்களில் குறைந்தபட்சமாக பொதுப் பிரிவினர் 50 சதவீத மதிப்பெண்களும், ஒதுக்கீடு பெறும் இனத்தவர் 45 சதவீத மதிப்பெண்களும் பெற வேண்டும் என்று அறிவித்திருக்கிறது.

புதிய நெறிமுறைகளின் விளைவாய் பட்டியல் இனத்தவர், சீர்மரபினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், கிராமப்புற மாணவர்கள் பெரிதும் புறக்கணிக்கப்படுவதோடு, இது சமூக நீதிக் கொள்கையையே பொருளற்றதாகிவிடும் என முதல்வர் கருதுவதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

அகில இந்திய தொழில்நுட்பக் குழுமம் கல்வி பொதுப் பட்டியலில் இருக்கிறது என்ற காரணத்தைக் காட்டாமல், அனைத்துப் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்கள் பயன்பெறும் வகையில், புதிய ஆணையினை திரும்பப் பெறவேண்டுமென்றும் தமிழக அரசு கோருவதாக அச்செய்திக்குறிப்பு மேலும் தெரிவிக்கிறது.


கனிமொழி நாளை கைது?


மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினரும் திமுக தலைவர் கருணாநிதியின் மகளுமான கவிஞர் கனிமொழி நாளை (வெள்ளி) கைது செய்யப்படலாம் என்று மத்தியப் புலனாய்வுத்துறைட்டாரங்களிலிருந்து செய்தியலைக்கற்றைகள் பரவி உள்ளன.

அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான விவகாரத்தில் ரூ. 1.76 லட்சம் கோடி நாட்டுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது குறித்து தொடரப்பட்டுள்ள வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரர்களான கனிமொழி, சரத் குமார் ரெட்டி, சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்தின் கரீம் மொரானி ஆகியோர் தவிர மற்ற அனைவரும் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 2 ஜி அலைகற்றை முறைகேடு தொடர்பான வழக்கில் மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினர் கனிமொழி, வெள்ளிக்கிழமை (மே 6) கைது செய்யப்படலாம்.

ம.பு .து சிறப்பு நீதிமன்றத்தில் மே 6 ஆம் தேதி முன்னிலையாவதற்காக கனிமொழி, சென்னையிலிருந்து புதன்கிழமை காலையில் தலைநகர் டெல்லி வந்தார். தி.மு.க. நா.ம. உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, டி.கே.எஸ். இளங்கோவன், திருச்சி சிவா, ஏ.கே.எஸ். விஜயன் ஆகியோரும்அவருடன்டெல்லி வந்துள்ளனர்

சாணக்கியபுரியில் உள்ள புதிய தமிழ்நாடு இல்லத்துக்கு கனிமொழி சென்றார். அங்கு சட்ட நிபுணர்களுடனும், தி.மு.க. எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்திய வண்ணம் இருந்தார்.பிரபல சட்ட நிபுணர்களான ராம் ஜேட்மலானி, முகுல் ரோத்தகி ஆகியோருடனும் தொலைபேசி மூலம் கனிமொழி ஆலோசனை நடத்தியதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழக அரசின் சார்பாக பல முக்கிய வழக்குகளில் ஆஜராகி வரும் பிரபல சட்ட நிபுணர் பராசரனின் ஆலோசனையையும் பெற்றதாகத் தெரியவந்துள்ளது.

அலைக்கற்றை விவகாரத்தில் சிறையில் உள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் ஐவரும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பிணையில் விடுவிக்கக் கோரி மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தனர். இவர்களது மனுவை சிறப்பு நீதிமன்றம் ஏற்கெனவே நிராகரித்தது. இந்த மனுமீது கடந்த இரு தினங்களாக விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணை புதன்கிழமையும் நடைபெற்றது. மேலும் இரண்டு நாள்களுக்கு மனு மீதான விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.மே 6 ஆம் தேதிக்குள் 5 பேரின் மனுக்கள் மீது விசாரணை முடிந்து, டெல்லி உயர் நீதிமன்றம் பிணையில் விடுவிப்பு வழங்கும் பட்சத்தில் கனிமொழியும் அதே நடவடிக்கையைப் பின்பற்றலாம் என்ற நிலை இருந்தது இப்போது மாறிவிட்டது. இந்த நிலை கனிமொழி தரப்புக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தை அளிப்பதாகவும் தெரிகிறது.

இந்த முறைகேடு விவகாரத்தில், குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளவர்களின் தனிப்பட்ட வருமான வரி, அவர்கள் சார்ந்த நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் வருமான வரி தொடர்பான விவரங்களை ம. பு.து உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்ய இருக்கிறது. இதன் அடிப்படையில் 5-ஆம் தேதிக்குப் பதில் மே 12 ஆம் தேதி கனிமொழி உள்ளிட்ட நான்கு பேரும் அமலாக்கப் பிரிவு முன் நின்றே ஆகவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படலாம்

குடியரசுத் தலைவர் மாளிகையில் செம்மொழிக்கான விருது வழங்கும் விழாவுக்கு மே 6 ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு செம்மொழி மாநாட்டை மிக சிறப்பாக நடத்திய தமிழக முதல்வர் கருணாநிதி இந்த விழாவில் கலந்து கொள்வார் என தமிழ் ஆர்வலர்கள் மிக ஆவலுடன் உள்ளனர்.ஆனால் அதே நாளில் முதல்வரின் மகள் கனிமொழி ம.பு.து சிறப்பு நீதிமன்றத்தில் முன்னிலையாகவேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

இதனால் முதல்வரின் கவனம் முழுவதும் அரசியல் ரீதியாக கனிமொழிக்கு ஆதரவாக என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்தே இருக்கும் என்று கருதப்படுகிறது

ஒசாமா கொலை: தகவல்களில் மாற்றம்


ஒஸாமா பின் லாடன்
பின் லாடன் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் அமெரிக்க வெள்ளை மாளிகை தாங்கள் முதலில் வெளியிட்ட விபரங்களை மாற்றிக்கொண்டுள்ளது.

முதலில் சொல்லப்பட்டதுபோல தாங்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய போது பின் லாடன் ஆயுதம் எதனையும் ஏந்தியிருக்கவில்லை என்று வெள்ளை மாளிகை இப்போது கூறுகிறது.

அப்படியானால் வேண்டுமென்றே சுட்டுக் கொல்வதற்காக நடத்தப்பட்ட ஒரு நடவடிக்கை இதுவா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

மேலும் பில் லாடனின் மனைவிகளில் ஒருவர் கொல்லப்பட்டார் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கொல்லப்பட்டது பின் லாடன் மனைவி அல்ல என்று பிற்பாடு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஒஸாமா பின் லாடன் தன் மனைவியை முன்னால் பிடித்துக்கொண்டு அவரை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தி துப்பாக்கி சூட்டில் இருந்து தப்பிக்க முயன்றிருந்தார் என்று முன்னர் கூறப்பட்டது. ஆனால் அவர் அப்படி செய்திருக்கவில்லை என்றும் இப்போது கூறப்பட்டுள்ளது.

அவசர அவசரமாக நிறைய தகவல்களை வெளியிட வேண்டி வந்ததால் விபரங்களில் இவ்வாறான திரிபுகள் நிகழ்ந்துவிட்டிருக்கலாம் என்று அமெரிக்க அதிபரின் ஊடகத்துறைச் செயலர் ஜே கார்னி தெரிவித்துள்ளார்.

"பின் லாடனின் மனைவி ஒருவர் அமெரிக்காவின் தாக்குதல் அணிச் சிப்பாய் ஒருவரை நோக்கி வேகமாகப் வந்தபோது அவரது காலில் சுடப்பட்டது. ஆனால் அவர் சாகடிக்கப்படவில்லை. பிற்பாடுதான் பின் லாடன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவர் அச்சமயம் ஆயுதம் ஏந்தியிருக்கவில்லை." என்று ஜே கார்னி தெரிவித்துள்ளார்.

பின் லாடன் கையில் துப்பாக்கி எதுவும் அச்சயமம் இருந்திருக்கவில்லை என்றாலும் பொதுவாக அந்த இடத்தில் பெருமளவான எதிர்ப்பை அமெரிக்கச் சிப்பாய்கள் சமாளிக்க வேண்டியிருந்தது என்றும், அந்த இடத்தில் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்திருந்தது என்றும் ஜே கார்னி கூறியுள்ளார்.

பின்லாடனின் இரண்டு சகோதரர்கள் மற்றும் பெண்ணொருவர் கட்டிடத்தின் கீழ்ப் பகுதியில் வைத்து கொல்லப்பட்டுள்ளனர் என்று தற்போது தெரிவிக்கப்படுகிறது. பின்லாடனின் மகன் ஒருவர் கொல்லப்பட்டதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பிற்பாடு சொல்லப்பபட்டுள்ள விபரங்களில் அது பற்றி எவ்விதக் குறிப்பும் இல்லை.

இப்படிப்பட்ட குழப்பங்களால், பின் லாடனை உயிரோடு பிடிப்பது என்ற எண்ணமே அமெரிக்காவுக்கு இருந்திருக்கவில்லை என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளடது.

பின் லாடன் சடலத்தின் புகைப்படத்தை வெளியிடுவது பற்றி அமெரிக்க அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை என்று தெரிகிறது. மோசமான அந்தப் புகைப்படம் வெளிவந்தால் உணர்வலைகள் தூண்டப்படலாம் என்று வெள்ளை மாளிகைப் ஊடகத் தொடர்பாளர் ஜே கார்னி தெரிவித்துள்ளார்

தொடரும் சான்றுகள்.


மதீனாவில் ஒருநாள்!

மேகங்கள் திரண்டு வானை மூடிக் கொண்டன. அவற்றின் பின்னே சூரியன் மறைந்து கொள்ள, பகல் தன் வெளிச்சத்தை இழந்தது. அதைக் கண்டு வேகமாய்த் தம் வீட்டிற்குத் திரும்பினார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். அவர்களது முகத்தில் பெருங் கவலை. சற்றுக் கழித்து வீட்டிற்கு வெளியே சென்று அண்ணாந்து பார்த்தார்கள். சிறிது நேரம் கழித்து, திரண்ட மேகங்கள் மழை பொழிய ஆரம்பித்தன. அந்த மழையைக் கண்டவுடன்தான் நபியவர்களின் முகத்தில் நிம்மதியும் ஆனந்தமும் வெளிப்பட்டு கவலை மறைந்தது.

இதையெல்லாம் நபியவர்களின் மனைவி ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா கவனித்துக் கொண்டேயிருந்தார்கள். பெரும் ஆச்சரியம் அவர்களுக்கு. கேட்டேவிட்டார்கள், "மழை வருமுன் உங்கள் முகத்தில் ஏன் அந்தக் கவலை?"

"ஆது இன மக்கள் சந்திக்க நேர்ந்த விதியோ என்ற கவலை" என்று நபியவர்களிடமிருந்து பதில் வந்தது. தொடர்ந்து குர்ஆனின் சூரா அல்-அஹ்காஃபின் 24ஆவது வசனத்தில் ஆது மக்கள் கூறியது பதிவாகியிருந்ததை நினைவுபடுத்தினார்கள் நபியவர்கள்.

ஆனால் (அவர்களுக்கு அனுப்பப்பட்ட வேதனை) அவர்கள் இருந்த பள்ளத்தாக்குகளை நோக்கி மேகம்போல் வருவதைக் கண்டதும், "இது நமக்கு மழையைப் பொழியும் மேகமாகும்" எனக் கூறினார்கள்; "அப்படியல்ல, இது நீங்கள் (எதற்காக) அவசரப்பட்டீர்களோ அந்தக் (கொடுங்)காற்று - இதில் நோவினை செய்யும் வேதனை இருக்கிறது"

அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்கள்! மிகச் சிறந்த ஆன்ம பலம் அவர்களின் வலிமை; அத்தகு நபி, திரண்டு வரும் மேகத்திற்குக் கவலை கொள்கிறார்கள்.

அத்துடன் மட்டுமல்லாமல் பலமான காற்று வீசும்போதெல்லாம் இறைவனிடம் இறைஞ்சுவார்கள், "யா அல்லாஹ்! இந்தக் காற்றின் மூலம் அதில் அடங்கியிருக்கும் நன்மைகளை உன்னிடம் வேண்டுகிறேன். இது நன்மையுடன் உன்னால் அனுப்பப்பட்டதாக இருக்க வேண்டுமென விரும்புகிறேன். இதில் அடங்கியுள்ள தீமைகளை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். இது தீது விளைவிக்க உன்னால் அனுப்பப்பட்டதாக இருக்கக் கூடாது என்று ஆதரவு வைக்கிறேன்"

வேகமாய் வீசும் காற்றிற்கும் அச்சம். ஏன் அப்படி? வரலாறுகளை அவர்கள் அறிந்திருந்ததால்!

"ஆகவே அவர்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறும் பொருட்டு (இத்தகைய) வரலாறுகளைக் கூறுவீராக" என்று இறைவன் திருமறையில் சூரா அந்அஃராபின் 176ஆவது வசன இறுதியில் அறிவுறுத்துகிறானே, அதை அவர்கள் நன்கு புரிந்து வைத்திருந்ததால்! அந்த வரலாறுகளில் பொதிந்திருந்த நீதியையும் பாடங்களையும் அவர்கள் தெளிவுற உணர்ந்திருந்ததால்!

என்ன வரலாறுகள் அவை? என்னதான் அந்த நீதிக் கதைகள்?

இம்மை, மறுமை; சொர்க்கம், நரகம்; நன்மை, தீமை; சட்டம், ஒழுங்கு; இப்படியெல்லாம் குர்ஆனில் தெரிவித்துக் கொண்டேவரும் இறைவன், ஆங்காங்கே கடந்துபோன நிகழ்வுகளைச் சொல்கிறான் - வரலாற்று நிகழ்வுகள்.

"(நபியே!) நாம் வஹீ மூலம் உம் மீது இந்தக் குர்ஆனை அருள் செய்தது கொண்டு மிக அழகான வரலாற்றை உமக்கு நாம் கூறுகின்றோம் - இதற்குமுன் (இது குறித்து) ஏதும் அறியாதவர்களில் (ஒருவராய்) நீர் இருந்தீர்" என்று சூரா யூஸுபில் 3ஆவது வசனமாக அதை நபியவர்களிடமே அவன் கூறுகிறான்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முன்னர் இப்புவியில் பல சமூகங்கள் வாழ்ந்து மறைந்தன. அவர்கள், அவர்களுக்கு அனுப்பப்பட்ட நபி, அப்பொழுது நடந்த நிகழ்வுகள் என்று சில சமூகங்களைப் பற்றிய பழைய வரலாறுகள் குர்ஆனில் பதிவாகியுள்ளன. ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்தந்தச் சமூகங்கள் மெதுவே, மெதுமெதுவே நேர்வழியிலிருந்து மிக இலேசாகக் கிளை பிரியும். அப்படி மிக இலேசாக மாறும் கிளைப்பாதை தொடர்ந்து தொடர்ந்து ஒருகட்டத்தில் நேர்வழிக்குச் சம்பந்தமில்லாமல் வெகு தூரமாய் விலகிவிட்டிருக்கும். சரிசெய்ய அவர்கள் மத்தியில் ஒரு நபியை அனுப்புவான் இறைவன். வெகு எளிய மொழியில், சுற்றி வளைப்பது என்று எதுவுமே இல்லாமல் அந்த இறைத்தூதரும் அந்த மக்களின் பிழையை அவர்களின் முகத்தில் விரல் நீட்டிச் சொல்லிவிட்டு மீண்டும் நேர்பாதையில் இணைந்து கொள்வதற்கான வழிமுறைகளைச் சொல்லிவிடுவார்.

ஏற்றவர்கள் புண்ணியம் தேடிக்கொள்ள, "நேர்வழியாவது, மண்ணாவது" என்று நகைப்பும் அக்கிரமும் அகங்காரமும் தீமையும் பாவமும் அழிச்சாட்டியமும் என்று மிஞ்சி நிற்பவர்கள், அந்த நபியிடமும் இறைவனிடமும் அசட்டுத்ததனமாய்ச் சவால் விடும்போது வந்து சேர்கிறது தண்டனை. அந்த மக்கள் சமூகத்தைப் புரட்டிபோடும் தண்டனை.

ஆது சமூகம் என்று மேலே பார்த்தோமல்லவா, யார் அவர்கள்?

ஏக இறைவனை நிராகரித்துவிட்டு இணை வைக்க ஆரம்பித்திருந்தார்கள் அந்த மக்கள். தங்கள் விருப்பத்திற்கு உகந்தவாறு மூன்று சிலைகள் செய்துவைத்துக் கொண்டு, ‘இவர்கள்தாம் எங்களின் கடவுளர்கள். இவர்களது பெயர்கள் சமதா, சமூதா, ஹாரா’ என்று அவற்றிற்கு பெயரிட்டுவிட்டு வழிபட ஆரம்பித்தார்கள். அல்லாஹ் அந்த மக்களில் இருந்தே அவர்களுக்கு ஹுது என்பவரை நபியாகத் தேர்ந்தெடுத்தான். 'அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்’ என்றான். ஹுது அலைஹிஸ்ஸலாம் தம் மக்களிடம் சென்றார்; ஏகத்துவத்தை எடுத்துச் சொன்னார்.
அனைத்தையும் கேட்டுக் கொண்ட அவர்கள், "எங்களைப்போல் நீயும் ஒரு மனிதன்தான். இப்படியெல்லாம்கூட நீ பொய்ச் சொல்வாயா? அதெல்லாம் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது" என்று சொல்லிவிட்டார்கள்.

ஆது மக்களுக்கு மகா வலிமையைத் தந்திருந்தான் இறைவன். நவீன வசதிகள் எதுவும் இல்லாத அந்தக் காலத்திலேயே ‘உசர உசரமாய்’ தூண்களெல்லாம் அமைத்து, பிரம்மாண்டமாய் நகரம் அமைத்து, உயரமான குன்றுகளிலெல்லாம் மிகப் பெரும் மாளிகைகளும் கோட்டைகளும் அமைத்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

மனிதனுக்கு வலிமை ஏற்படுகிறது; அதைக் கொண்டு அவனால் இவ்வுலகில் ஏதோ சில பிரம்மாண்ட செயல்கள் புரியமுடிகிறது; அதைப்பார்த்து மக்களில் சிலர் மூக்கின்மீது விரல் வைத்து ஆச்சரியப்படுகிறார்கள். அவ்வளவுதான்! அடுத்து என்ன நிகழ்கிறது? அந்த மனிதனுக்கு அது அளவிலா மமதையையும் ‘தான்’ என்ற செருக்கையும் தந்து விடுகிறது. அது அத்தனையும் ஆது இன மக்களுக்கு வந்து சேர்ந்தது. தங்களை யாராலும் அசைக்கமுடியாது என்று திட்டவட்டமாய் நம்ப ஆரம்பித்து விட்டார்கள் அவர்கள்.

ஹுது (அலை) சொன்ன உபதேசங்களெல்லாம் செவிடன் காதில் வந்துவிழுந்த சங்கொலி ஆகிப்போனது. ஆனாலும் விடவில்லை; அலுக்காமல் தம் பணியைத் தொடர்ந்து கொண்டிருந்தார் ஹுது! ஆரம்பத்தில் இருந்த நையாண்டி மறைந்து எரிச்சலும் கோபமும் அதிகமாகி ‘என்ன இந்த ஆளுடன் ரோதனை! தம் இஷ்டத்திற்கு வீண் மிரட்டல் மிரட்டிக் கொண்டிருக்கிறார்’ எனறு நினைத்தவர்கள் இறுதியில் அவரிடம், "நீர் உண்மையாளராக இருந்தால், நீர் அச்சுறுத்துவதை எம்மிடம் கொண்டுவாரும்" என்று சொல்லிவிட்டார்கள்.

சவால்! தங்களது வலிமை உசத்தி என்று அசட்டுத்தனமாய் நம்பி, இறைவனுக்கே சவால்!

‘இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள்?’ என்று வந்தது அது. இறைவன் அனுப்பிவைத்த தண்டனை வந்தது!

அடர்ந்து திரண்டு கருமேகம் அவர்களை நோக்கி வர, ‘வளம் பெருக மழை வரப்போகிறது பார்’ என்று ஆவலுடன் காத்திருந்தார்கள் அவர்கள். வந்து சேர்ந்ததோ கொடுமையான சுழல்காற்று. கூடவே பேரொலி. சுற்றி வளைத்தது அவர்களை. வந்தது, நிகழ்ந்தது, முடிந்தது என்றில்லாமல் ஏழு இரவு, எட்டுப் பகல்கள் விடாமல் அடித்துத் துவைத்துச் சாய்த்துவிட்டுதான் ஒருவழியாய் ஓய்ந்தது அது. எல்லாம் முடிந்தபின் பார்த்தால் ஈச்சமரங்களை அடியுடன் பிடுங்கி எறிந்து போட்டால் எப்படி இருக்கும்? அப்படிக் கிடந்தார்கள் அந்த வலிமைமிகு ஆது மக்கள். அதற்குப்பிறகு அவர்களில் மிச்சம் மீதி என்று யாராவது? ம்ஹும்! ஒருவரும் இல்லை.

சுத்தமாக அந்த இனத்தைத் துடைத்துப் போட்டான் இறைவன்.

oOo

தபூக் மீது நபியவர்கள் தம் தோழர்களுடன் படை திரட்டிச் சென்று கொண்டிருந்தார்கள். வழியில் அல்-ஹிஜ்ரு என்றொரு பகுதி; அங்குப் படை தங்க நேர்ந்தது. அருகிலேயே ஒரு கிணறு. அதில் நீரிறைத்து அருந்திய முஸ்லிம்கள் தங்களிடமிருந்த மாவில் ரொட்டி சமைக்க அந்த நீரை எடுத்து உபயோகித்து மாவு பிசைந்தனர். அதைக் கேள்விபட்ட நபியவர்கள் உடனே விரைந்து வந்து, ‘பாத்திரத்தில் சமைத்துக் கொண்டிருப்பதைக் கொட்டிவிடுங்கள்; பிசைந்து வைத்துள்ள மாவை ஒட்டகங்களுக்கு அளித்துவிடுங்கள்; இங்குள்ள நீரை யாரும் உபயோகிக்க வேண்டாம்’ என்று கட்டளையிட்டார்கள்!

முன்னொரு காலத்தில் அல்-ஹிஜ்ருப் பகுதியில் ஸமூத் இனம் வசித்து வந்தது. புகழ் பெற்ற சமூகம். அந்தச் சமூகத்து மக்களும் இறைவனுக்கு இணைவைத்து உருவங்களை வழிபட ஆரம்பித்தனர். அந்த மக்களைச் சேர்ந்தவர் ஒருவர் இருந்தார் - ஸாலிஹ். இவரைத் தன் நபியாகத் தேர்ந்தெடுத்து அறிவித்தான் இறைவன். இறைக் கட்டளைப்படி தம் மக்களிடம் சென்றார் ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம். "என் மக்களே! அல்லாஹ்வை வழிபடுங்கள். அவனைத்தவிர வேறு இறைவன் இல்லை. மண்ணிலிருந்து உங்களை உருவாக்கி அதில் உங்களை வாழ வைத்துள்ளான். அவனிடம் பாவ மன்னிப்புக் கேளுங்கள். நிச்சயமாக இறைவன் அருகில் இருக்கிறான்; செவிமடுக்கிறான்."

அதைக் கேட்ட அவர்கள், "ஓ ஸாலிஹ்! நம்ம ஆளு நீ! உன் மீது மிகவும் நம்பிக்கை வைத்திருந்தோம். திடீரென்று நீ எங்களிடம் நம் மூதாதையர்கள் வணங்கியதெல்லாம் தப்பு, அதை வணங்கக்கூடாது என்று சொல்கிறாய். எங்களுக்கு என்னவோ உன் மீது சந்தேகமாயிருக்கிறது" என்றனர்.

"நம்ப முடியவில்லையா? இறைவனிடமிருந்து அத்தாட்சி கொண்டு வரட்டுமா?" என்று கேட்டார் ஸாலிஹ்.

"உனக்கு யாரோ வசியம் செய்துவிட்டார்கள் போலிருக்கிறது. நீயும் எங்களைப்போல் ஒருவன். நீ சொல்வதெல்லாம் உண்மையென்றால் அத்தாட்சி கொண்டுவா பார்ப்போம்."

இறைவன் மாயம் புரிந்தான். பாறையிலிருந்து ஓர் ஒட்டகம் வந்தது! பொம்மை ஒட்டகமல்ல! தோலும் சதையிலுமான உயிருள்ள பெண் ஒட்டகம்! பாறையில் செடி முளைத்தாலே ஆச்சரியமாய் இருக்கிறது. ஒட்டகமே வந்தால்? எவ்வளவு தெளிவான அத்தாட்சி அது? சில மக்கள் உடனே நம்பிக்கைக் கொண்டுவிட்டார்கள். மற்றவர்களுக்கு அப்பொழுதும் முழுநம்பிக்கை வரவில்லை.

ஸாலிஹ் அவர்களிடம், "இந்த ஒட்டகத்தை அதன் போக்குக்கு நீங்கள் விட்டுவிட வேண்டும். அதுவாய் நிலத்தில் மேய்ந்து உண்டு கொள்ளும். இங்குள்ள கிணற்றில் நீர் அருந்திக் கொள்ள நமக்கென ஒருநாளும் ஒட்டகத்திற்கு ஒருநாளும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஒட்டகத்தை நீங்கள் தீண்டவோ சில்மிஷம் செய்யவோ கூடாது. அதுதான் உங்களுக்குக் கட்டளை."

இந்த ஸமூது மக்களுக்கும் இறைவன் அளப்பரிய ஆற்றலைக் கொடுத்திருந்தான். அந்தக் காலத்தில் என்ன பெரிய மக்கள் தொகை இருந்திருக்கப்போகிறது. தரிசு தரிசாய் எவ்வளவு நிலம் இருந்திருக்கும்? இருந்தாலும் மலைப் பாறைகளைக் குடைந்து குடைந்து அதில் இல்லம் அமைத்திருந்தார்கள் அவர்கள். மிகவும் பலமான இருப்பிடம்! காற்று, மழை, புயல் என்று எதுவும் இலேசில் தாக்க முடியாது. மிகப் பத்திரமாய் இருந்தார்கள்.

திறமையும் பத்திரமும் மனிதனுக்கு ஏற்படும்போது செருக்கும் மமதையும் ஒன்றாய்ச் சேர்ந்து, பலமாய் அவன் மனதில் புகுந்துவிடுகின்றன. அந்தச் செருக்கும் இறுமாப்பும் ஸமூது மக்களின் கண்களை மறைக்க, "நீ நம்புவதை எல்லாம் எங்களால் நம்பமுடியாது" என்று மறுத்துவிட்டனர். அத்துடனாவது விட்டிருக்கலாம் இல்லையா? சதி செய்தார்கள்!

‘என்னவோ மந்திரம் செய்து ஒட்டகத்தை உலவ விட்டிருக்கிறாரே, அதைப் போட்டுத் தள்ளினால் போதும். இந்த விஷயத்தை தீர்த்துவிடலாம். அடுத்து ஸாலிஹையும் அவர் குடும்பத்தையும்கூட கொன்றுவிடலாம். யாராவது கேட்டால் நமக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லிவிடலாம்.’
வெறும் ஒன்பதுபேர் கூடித் திட்டம் தீட்டினார்கள். பிறகு மற்றவர்களையும் இணங்க வைத்தார்கள். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த இறைவனும் திட்டம் தீட்டினான்.

ஒருநாள் அந்த ஒட்டகம் கிணற்றுக்கு நீர் அருந்த வந்தது. மறைந்து காத்திருந்த அந்த அயோக்கியர்கள் ஒட்டகத்தின்மீது அம்பெய்தார்கள்; பிறகு பாய்ந்து தாக்கினார்கள்; கொன்றார்கள். இறந்துபோனது ஒட்டகம்.

பிறகு ஸாலிஹிடம் சென்று, "என்னவோ மிரட்டல் விடுத்தாயே. நீர் தூதர்களில் ஒருவர் என்றால் எங்களுக்குப் பயமுறுத்தியதைக் கொண்டுவா பார்ப்போம்"

சவால்! இறைவனுக்கே சவால்!

"உங்களது இல்லங்களுக்குச் சென்று மூன்று நாட்கள் நீங்கள் வேண்டியதை அனுபவித்துக் கொள்ளுங்கள். அதுதான் கெடு. அதன்பிறகு தண்டனை வரும். இது பொய் ஆகாது" என்றார் ஸாலிஹ்.

"பார்ப்போம் அதையும்" என்று தங்களது இல்லங்களுக்குத் திரும்பியது அந்த கும்பல்.

சரியாக மூன்றாவது நாள். அதிகாலை நேரம் அது நிகழ்ந்தது. 'குகைக்குள் வீடு கட்டிப் புகுந்து கொண்டால் பாதுகாப்பு; தப்பித்து விடலாம் என்று நினைத்தீர்களா?' என்று இறைவன் பேரிடி ஒன்றை அனுப்பினான். சப்தமென்றால் சப்தம், உயிரைப் பறிக்கும் சப்தம் அது. கூடவே பலமான பூகம்பம் ஒன்று தாக்கியது. அப்படியே அவரவர் வீட்டில் இறந்து போனார்கள் அனைவரும். அதற்குமுன் அங்கு ஒரு சமூகம் வசித்ததா என ஆச்சரியப்படும்படி அந்த இடத்திலிருந்து அவர்களை அழித்து, துடைத்தெறிந்தான் இறைவன்.

"என்னுடைய சமூக மக்களே! உங்களுக்கு இறைவனுடைய செய்தியை எடுத்துச் சொன்னேன். நற்போதனை சொன்னேன். அதையெல்லாம் கேட்க மாட்டேன் என்று சொல்லிவிட்டீர்கள்."

வருத்தப்பட்டார் ஸாலிஹ்!

oOo

மத்யன் என்றொரு நகரம் இருந்தது. அந்த மக்களுக்கு அவர்களில் இருந்தே ஷுஐப் என்பவரை நபியாகத் தேர்ந்தெடுத்து அறிவித்தான் இறைவன்.

அந்த மக்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்றால் வியாபாரத்தில் அளவில் எடையில் தில்லு முல்லு. தங்களுக்கு வேண்டுமா, தேவைப்படும் எடையைவிட அதிகமாக எடுத்துக் கொள்வது; பிறருக்குக் கொடுக்க வேண்டுமா? அளவு குறைந்துவிடும். சாலைகளில் அமர்ந்து கொண்டு பாதசாரிகளை மறித்து அவர்களிடம் கொள்ளையடிப்பது அவர்களது அடுத்த பொழுதுபோக்கு. தவிர இதர அழிச்சாட்டியங்கள்.
ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு முறையாகச் செய்தியை எடுத்துச் சொன்னார். ‘இதோ பாருங்கள். ஒரே இறைவன். அவனை வணங்குங்கள். தெளிவான அத்தாட்சிகள் அளித்துவிட்டான் அவன். அளவில் எடையில் தில்லுமுல்லு செய்யாமல் ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள். அக்கிரமம் பண்ணிக்கொண்டு திரியாதீர்கள். சாலைகளில் அமர்ந்து கொண்டு கொள்ளையடிக்காதீர்கள்.’

கேட்பார்களா அவர்கள்? ‘சும்மா இருக்கமாட்டீரா நீர்? எங்கள் மூதாதையர் சொன்னபடி வணங்கிக் கொண்டிருப்பதையெல்லாம் நீர் சொல்வதைக் கேட்டு விட்டுவிட வேண்டுமா? எங்கள் சொத்து, எங்கள் பொருள், எங்கள் இஷ்டத்திற்கு அளவு குறைத்தோ கூட்டியோ விற்போம். உமக்கென்ன போச்சு? உம்மையும் உம்மை நம்பிக்கொண்டு இருப்பவர்களையும் ஊரைவிட்டுத் துரத்திவிடுவோம்; கல்லால் அடித்துக் கொல்வோம்’ என்றெல்லாம் மிரட்டல்விட ஆரம்பித்துவிட்டனர்.

சொல்லி சொல்லிப் பார்த்தார் அவர். கேட்டால்தானே?

ஒருநாள் அவர்களையும் பூகம்பமும் பேரிடியும் தாக்கியது. எல்லோரும் அப்படி அப்படியே தத்தம் வீடுகளில் இறந்துவிட்டனர். அதுவும் எப்படி? அவர்களது வீடுகளில் ஒருகாலத்தில் அவர்கௌல்லாம் வாழ்ந்து கொண்டிருந்தார்கள் என்று நம்பவே முடியாதபடி!

மத்யனுக்குப் பெரும் நாசம்.

oOo

பழங்காலத்தில் சோடோம் என்றொரு நகர் இருந்தது. அந்தக் காலத்தில் அது மிக முக்கியமான நகரம். அதில் வாழ்ந்துவந்த மக்கள் விவரிப்பிற்கும் அப்பாற்பட்ட ஒழுக்கங்கெட்டவர்கள். மகாக் கொடியவர்கள். விலங்குகளைவிடக் கீழானவர்களாக இருந்தனர். கொள்ளையடிப்பது அவர்களின் அடிப்படைத் தொழில்.

‘இதென்ன கொலை, கொள்ளை என்று எல்லோரும் செய்யும் பிசாத்து குற்றம்’ என்று அதற்குமுன் மனித சமூகத்தில் யாருமே செய்யாத புதியதொரு பாவச் செயலைக் கண்டுபிடித்தனர் அவர்கள். ஆணோடு ஆண் என்று ஓரினச் சேர்க்கை!

அதையும் கேளிக்கை விடுதிகளில், மக்கள் கூடும் பொது இடங்களில் என்று பலர் பார்க்குமளவில், எத்தகைய கூச்ச நாச்சமின்றி செய்வது மிகப்பழகிப் போய் அவர்களுக்கு இயல்பாகிவிட்டது. அவமானம் என்றொரு வார்த்தையே அவர்களது மொழியில் இல்லை என்றானது.
அந்த நகருக்கு, அவர்களுக்கு, லூத் அலைஹிஸ் ஸலாமைத் தன் நபியாக அனுப்பிவைத்தான் இறைவன். நபி இப்ராஹீமின் (அலை) சகோதரர் மகன்தான் லூத். அவர்களிடம் வந்தார் லூத். "என்ன கொடுமை இது? படைப்பினங்களிலேயே இதற்குமுன் எவரும் எதுவும் செய்யாத ஒரு பாவத்தைப் புரிகிறீர்கள். உங்களுக்கு மனைவிகளாக அமைய பெண்களை இறைவன் படைத்திருக்க ஆண்கள் ஆண்களுடன் காமம் கொள்கிறீர்களே? எல்லை மீறும் பாவம் புரியும் மக்களாய் இருக்கிறீர்கள் நீங்கள்."

"இதோ வந்துட்டாரய்யா ஒழுக்க சீலர். ஊரை விட்டுத் துரத்துங்கள் இவரை."

சொல்லிப் பார்த்தார்; விவரித்துப் பார்த்தார்; கதறிப் பார்த்தார்; இறைவனின் தண்டனையைச் சொல்லி பயமுறுத்திப் பார்த்தார். ம்ஹும்! எதுவும் அவர்கள் காதில் விழவில்லை. "நீ உண்மையானவன் என்றால் உன் இறைவனின் தண்டனையை எங்கள்மீது கொண்டுவா பார்ப்போம்" என்று சொல்லிவிட்டார்கள்.

சவால்! இறைவனுக்கே சவால்!

இறுதியில் ஒருநாள் இறைவன், நபி லூத்திடம் மூன்று வானவர்களை அனுப்பினான், "இன்றே கடைசி. நாளை இவர்கள் கதை முடிந்தது" என்ற செய்தியுடன்! கொடுமையிலும் கொடுமை பெருங்கொடுமை என்னவென்றால் அழகிய ஆண்களின் தோற்றத்தில் லூத் வீட்டிற்கு விருந்தினர்களாக வந்தார்களே அந்த மூன்று வானவர்களையும், "எங்கள் வசம் எங்களது ஆசை தீர்த்துக்கொள்ள அனுப்பிவை" என்று பெரியதொரு ஆண்கள் கூட்டம் நபி லூத் (அலை) வீட்டை முற்றுகையிட்டு விட்டது.

"என்னடா நீங்கள்? இப்படி என் விருந்தினர் எதிரே மானத்தை வாங்குகிறீர்கள்? நம் இனத்துப் பெண்கள் இதோ. இவர்களை மனைவியாக ஏற்றுக்கொண்டு உங்கள் இச்சையைத் தீர்த்துக் கொள்ளுங்கள்" என்று லூத் (அலை) கெஞ்ச, கேட்பவர்களாய் இல்லை அந்த அயோக்கியர்கள். அந்த அயோக்கியர்களுக்கு நபி லூத்தின் மனைவியும் உடந்தை.

லூத் (அலை) அவர்களின் மனைவியைத் தவிர, அவரையும் அவர்தம் குடும்பத்தாரையும் இரவோடு இரவாக திரும்பிப் பாராமல் ஊரைவிட்டு வெளியேறச் சொன்னார்கள் இறைவனின் வானவர்கள். அவ்வாறே வெளியேறினார் லூத்.

மறுநாள் அதிகாலை.

அந்நகரைத் தோசையைப்போல் திருப்பிப் போட்டான் இறைவன்! சுடப்பட்ட செங்கற்கள் வானிலிருந்து அவர்கள் மீது மழையாய்ப் பொழிந்தன! ஒவ்வொன்றிலும் ஒவ்வொருவரின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.

அழிந்தது சோடோம்!

oOo

முன்னொரு காலத்தில் இப்படியொரு சமூகம் வாழ்ந்தது; இன்னின்ன பாவங்கள் புரிந்தார்கள்; அவர்களை அழித்தேன் என்கிறான் அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா. இன்றைய காலகட்டத்தில் இப்பொழுதுள்ள மனித சமூகம் முன்சென்ற அத்தனை சமூகங்கள் செய்த அத்தனை பாவங்களையும் குற்றங்களையும் அக்கிரமங்களையும் அழிச்சாட்டியத்தையும் ஒட்டு மொத்தக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டு எத்தகைய கூச்சமோ, அருவருப்போ, பயமோ, இன்றிச் செய்து கொண்டிருக்கிறது. பாவங்களெல்லாம் நியாயங்களாகவும், நியாயங்கள் எல்லாம் அக்கிரமமாகவும் ஆகிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நாட்டிலும் ஊரிலும் சமூகத்திலும் இணை வைப்பு; விஞ்ஞான முன்னேற்றம் அளித்துள்ள மமதை, அகங்காரம், இறுமாப்பு; கொலை, கொள்ளை; ஆச்சாரமாகிப்போன விபச்சாரம், களவு; எங்கோ நடந்தது, யாரோ செய்தார்களாம் என்பதெல்லாம் பழம் செய்தியாகி மிகவும் இயல்பாகிப் போய்விட்ட ஓரினச் சேர்க்கை; வெட்கம் என்ற சொல்லே மறந்து இந்த அயோக்கியத்தனத்திற்கு அங்கீகாரம் கேட்டுத் திரியும் அமைப்புகள்!

என்ன ஆகும்?

நினைவைக் கிளறி நினைவூட்ட, இயற்கைச் சீற்றம் வந்து சேரும்! அனுப்பி வைப்பான் இறைவன். ஆனால் மக்களின் அறிவியல் முன்னேற்றமானது பௌதிக ரீதியாய், தர்க்க ரீதியாய் ஒவ்வொரு நிகழ்வுக்கும் காரணம்தேட முற்படுகிறதே தவிர "இறைவன் – இறைச் சக்தி" எனும் அடிப்படையைத் தனது சிந்தையில் இருந்து முழுக்க முற்றிலும் துடைத்துப் போட்டுவிட்டது மிகப்பெரும் கொடூரம்! அழிவின் நிச்சயத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் போக்கு இது.

பூகம்பம், சுனாமி, புயல், எரிமலை என்று ஒவ்வொரு சீற்றத்தையும் அது எப்படி ஏற்படுகிறது என்று கண்டுபிடித்து வைத்திருக்கிறோம்.
பூமிக்கடியில் அழுத்தம் அதிகமாகி அதனால் சக்தி வெளியேற்றப்பட்டு, தளத்திட்டுகள் (Plates) நகர்ந்து பூமி அதிர்கிறதா? அது நிலநடுக்கம் என்கிறார்கள். அறிவியல் அதுபற்றி அறிந்து மேலும் தகவல் சொல்கிறது.

பூமியின் மேற்பரப்பு (Lithosphere) பெரும் பாளங்களாக அமைந்துள்ளது; இவை நகரும் பிளேட்டுகளாக இருக்கின்றன; நிலப்பரப்பிலும், நீரின் அடியிலுமாக உள்ள இவற்றில் ஏழு பிளேட்டுகள் மிகப் பெரியதாகவும், குறைந்தது ஒரு டஜன் சிறிய பிளேட்டுகளும் உள்ளன. இந்த ஏழு பெரும் பிளேட்டுகளில் ஐந்து கண்டங்களும் பசிபிக் முதலிய சமுத்திரப் பகுதிகளும் அடக்கம். இந்தப் பிளேட்டுகள் நாம் சாப்பிடப் பயன்படுத்தும் பிளேட்டுகள்போல் இல்லாமல் ஒவ்வொன்றும் சுமார் 80 கி.மீ. வரை தடிமன். சாம்பாரில் கொதிக்கும் கத்தரிக்காய்போல் இதனடியில் பாறைகளே கொதிக்கும் குழம்பாக இருப்பதாலும், பூமியின் சுழற்சி வேகத்தில் இந்தப் பாறைக் குழம்பு நகர்வதாலும், மேலே இருக்கும் அம்மாம்பெரிய பிளேட்டுகள் ஒன்றுடன் ஒன்று உராய்ந்து கொண்டே நகர்ந்தும் செல்கின்றன.

இந்தப் பிளேட்டுகள் ஒரு வருடத்திற்கு ஒரு செ.மீ. முதல் சுமார் 13 செ.மீ. வரை நகர்கின்றன. இது நமது உலக வேகத்திற்கு மிக நுண்ணியதாக இருந்தாலும் இந்த பிளேட்களின் லேசான உராய்வும்கூட பெரும் பூகம்பம் ஏற்படுத்தக் கூடியவை.

Dim lights Embed

Tornado கேள்விபட்டிருக்கிறீர்களா?

Tornado என்பது சுழற்காற்று. இது இந்தியாவில், ஆசியாவில் அதிகம் பரிச்சயமில்லாத ஒன்று. ஆனால் அமெரிக்காவில் இது உண்டு. ஆண்டுதோறும் நம் ஊரில் பருவ மழை தவறினாலும் தவறலாம், அமெரிக்காவில் tornado தாக்கும் மாநிலங்கள் சில உள்ளன, அங்கு இது வரத் தவறுவதில்லை. இதோ கடந்த வாரம்கூட ஒன்று.

Tornado என்பது என்ன?

அடர்த்தியாய் மேகம் ஒன்று திரண்டு வரும். கூடவே மூர்க்கமான, பயங்கரமான காற்று. சுழலும் தூண் போன்ற இந்தக் காற்று மேகத்தையும் பூமியையும் தொட்டு்க் கொண்டு வரும். பெரும்பாலும் கூம்பு வடிவமுள்ள புனல் (funnel) போல் இருக்கும். கூம்பு பூமியை உரசிக் கொண்டிருக்கும்.

ஓர் ஊரின் உள்ளே அந்தக் காற்று புகும்போது அங்குள்ள புழுதி, குப்பை, ஆடு, மாடு, வீடு, ட்ராக்டர், நெடு நெடு கட்டடம் என்று எல்லாமே ஏதோ க்ரைண்டரில் சுழலும் மாவுபோல் அந்தக் காற்றுக்குள் சிக்கி சொப்பு பொம்மைகளாகிவிடும். காற்றின் வேகம் மணிக்கு 177 கி.மீட்டரிலிருந்து 480 கி.மீ. வரை மட்டுமே. இந்தச் சுழற்காற்று கூம்பின் அகலம் 80 மீட்டர். பல கிலோமீட்டர்களுக்குப் பூமியை உரசிக் கொண்டே சென்று மறையும். மிகத் தீவிரமான சுழற்காற்று உண்டு. அது 3 கி.மீ. அகலம் இருக்கும் 100 கி.மீ. வரை பூமியைக் கிழித்துக் கொண்டே செல்லும். பயங்கரப் பின்னணி இசையாக அச்சுறுத்தும் உறுமல் சத்தம் உண்டு. ஜெட் இன்ஜின் போலவோ, வேகமாய் சீறிப்பாயும் ரயில் வண்டி போலவோ, பொத்துக்கொண்டு கொட்டும் நீரருவி போலவோ சப்தம். நிச்சயம் மனதை நிலைகுலைய வைக்கும் சப்தம்.

இவை அத்தனையும் சில நிமிடங்களுக்குத்தான். அது கடந்து முடிந்தபின் பார்த்தால் அகோரம். போரில் குண்டுகள் வீசி மனிதன் நிகழ்த்தும் நாசமெல்லாம் இதனுடன் ஒப்பிடும்போது ஒன்றுமே இல்லை. சில சிறு கிராமங்கள் முற்றிலுமாய் அழிந்திருக்கின்றன.
இதைக் கடந்த 140 ஆண்டுகளாய் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். அதிலும் கடந்த 60 ஆண்டுகளில் மிகவும் முனைப்புடன் ஆராய்ந்திருக்கிறார்கள். இருந்தாலும் இதன் விஷயங்கள் இன்னும் மர்மமானவை என்கிறது விஞ்ஞானம். ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்தியாவில் சில ஆண்டுகளுக்குமுன் வரை சுனாமி என்றொரு வார்த்தையே இருந்த்தில்லை. நமக்கெல்லாம் வெகு பரிச்சயம் பினாமி மட்டுமே. இன்று இந்த ஆழிப்பேரலையின் பேரழிவு எல்.கே.ஜி. பாடப்புத்தகங்களிலும் இடம்பெறுமளவு பிரபலமடைந்துவிட்டது.
இறைவன் ஏதொன்றையும் பொழுது போக்கிற்காகவும் விளையாட்டிற்காகவும் படைக்கவில்லை; ஏதொரு காரணமும் இன்றி அழிப்பதுமில்லை. ஆனால் கேளிக்கைகள் பெருகப் பெருக, உல்லாசமே வாழ்க்கை நியதி என்றாகிவிட, எந்தவொரு பெரும் பேரழிவும் மரத்துப்போன நம் உள்ளங்களை அதிகம் அசைப்பதில்லை. "உச்" கொட்டிவிட்டு அடுத்தச் செய்திக்குத் தாவிவிடும் அளவிற்குப் பற்பல உருப்படியற்ற சங்கதிகள் நம் கவனத்தை ஆக்கிரமித்துவிட்டன.

மனிதன் அறிவு, அறிவு என மனிதன் தேடிப்பெறும் எதுவொன்றும் இறைவன் மீது பயத்தையும் பக்தியையும் அதிகரிக்க உதவாவிடில் அது எத்தகு மேதமை பொருந்திய அறிவாக இருந்தாலும் மலம் துடைத்து எறிந்த காகிதத்தின் அளவிற்குக்கூடப் பயனற்றது.

oOo

இந்த வரலாறுகளையெல்லாம் சொல்லிக் கொண்டே வரும்போது ஆங்காங்கே இறைவன் சில கேள்விகளும், அறிவுரைகளும் சொல்கிறான். எக்கச்சக்க செய்திகள் அதில் நமக்கு அடங்கியுள்ளன.

... நீங்கள் சொற்பத் தொகையினராக இருந்தீர்கள்; அவன் உங்களை அதிகத் தொகையினராக்கினான் என்பதையும் நினைவு கூருங்கள் - குழப்பம் செய்து கொண்டிருந்தோரின் முடிவு என்னுவாயிற்று என்பதைக் கவனியுங்கள் ... (என்றும் கூறினார்). (7:86)

... ஆகவே, குற்றவாளிகளின் இறுதி முடிவு என்ன ஆயிற்று என்று (நபியே!) நீர் நோக்குவீராக. (7:84)

(அவ்வாறே அவ்வூரார், அழிந்தனர்) அறிவுள்ள சமூகத்தாருக்கு இதிலிருந்தும் நாம் ஒரு தெளிவான அத்தாட்சியை விட்டு வைத்துள்ளோம். (29:35)

நிச்சயமாக அவ்வூர் (நீங்கள் பயணம்) போய்வரும் பாதையில்தான் இருக்கிறது. (15:76)

இன்னும், நீங்கள் காலை-மாலை வேளைகளில் அவர்களின் (அழிந்து போன ஊர்களின்) மீதே கடந்து செல்கிறீர்கள். நீங்கள் (இதைக்கொண்டு) நல்லறிவு பெற மாட்டீர்களா? (37:137-138)

என் எச்சரிக்கையும் வேதனையும் (அம் மக்களுக்கு) எப்படி இருந்தன? (என்பதைக் கவனிக்க வேண்டாமா?) (54:30)

அவரைப் பொய்யர் என்றனர். ஆதலின் நாம் அவர்களை அழித்தோம்; நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது எனினும் அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை. (26:139)

ஆகவே, வேதனை அவர்களைப் பிடித்துக் கொண்டது - நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது - எனினும், அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை. (26:158)

நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது எனினும் அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை. (26:190)

திடமாக முஃமின்களுக்கு இதில் (தகுந்த) அத்தாட்சி இருக்கிறது. (15:77)

நிச்சயமாக இதிலே ஓர் அத்தாட்சி இருக்கிறது. எனினும் அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை. (26:174)

நோவினை தரும் வேதனையை அஞ்சுபவர்களுக்கு நாம் இதில் ஓர் அத்தாட்சியை விட்டு வைத்தோம். (51:37)

நிச்சயமாக இதில் சிந்தித்துப் பார்ப்போருக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (15:75)

நிச்சயமாக, இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம், எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா? (54:22)

இறைவன் கூறும் பழைய சங்கதிகள் வெறும் பொழுதுபோக்குக் கதைகள் அல்ல. படிப்பினை பொதிந்தவை. அவன் அனுப்பிவைக்கும் சீற்றங்கள் மதசார்பற்றவை. Tornado, புயல், வெள்ளம் என்பதெல்லாம் அமெரிக்காவின் தனியுரிமையும் அல்ல; பூகம்பம், சுனாமி என்பது Made in Indonesia, Made in Japan -ம் அல்ல.

உமர் ரலியல்லாஹு அன்ஹு கலிஃபாவாய் இருக்கும்பொழுது ஒருமுறை மதீனாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மக்களையெல்லாம் அழைத்து உமர் சொன்னார், "மற்றொருமுறை நிலம் அதிர்ந்தால் நிச்சயமாய் நான் உங்களையெல்லாம் விட்டுவிட்டுச் சென்றுவிடுவேன்" (முஸன்னஃப் இப்னு அபீஷைபா 2/358) - மக்களே, பாவம் புரிவதை நிறுத்தித் தொலையுங்கள் - என்று அர்த்தம்.

நாமெல்லாம் உமரும் அல்ல. ஓடிஒளிய தூய நிலப்பகுதி என்று உலகில் இடமுமில்லை. நாம் நம் பாவத்தை உணர்ந்து அவற்றிலிருந்து மீண்டு வாழ்வதே நம்மால் ஆகக்கூடியது.