அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.
Showing posts with label The great fruad. Show all posts
Showing posts with label The great fruad. Show all posts

Tuesday, August 23, 2011

2ஜி ஏலம் வேண்டாம் என முடிவு செய்ததே பிரதமரும் சிதம்பரமும் தான்: கனிமொழி

2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்களை ஒதுக்கீடு செய்வதற்கு ஏலம் விட வேண்டாம் என்று பிரதமர் மன்மோகன் சிங்கும், அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரமும் தான் முடிவு செய்தனர் என்று டெல்லி நீதிமன்றத்தில் திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.


ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழி சார்பில் அவரது வழக்கறிஞர் சுஷில் குமார் இன்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் முன்வைத்த வாதம்:

"2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யும் முறை குறித்து பிரதமர், அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அப்போதைய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா ஆகிய மூவரும் ஆலோசித்து முடிவு செய்தனர்.

அந்த ஆலோசனையின்படி, 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்களை விற்பனை செய்யவோ, ஏலம் விடவோ வேண்டாம் என்று அவர்கள் முடிவு செய்தனர்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஏலம் விடப்படும் முறையில் நடக்காததால், வருவாய் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை அடிப்படையாக வைத்து சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

ஆனால், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் இழப்பு ஏற்படவில்லை என்று பிரதமர், அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அப்போதைய தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா ஆகியோர் கூறியுள்ளனர்.

எனக்கு இந்த வழக்கில் தொடர்பில்லை என்பதனால், என்னை இவ்வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும்," என்று அந்த வாதத்தில் கனிமொழி கேட்டுக்கொண்டார்.

பிரதமர், ப.சிதம்பரம், ஆ.ராசா ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்தின் விவாதம் குறித்து பதிவு செய்யப்பட்ட தகவல்களும் நீதிமன்றத்தில் கனிமொழி சார்பில் ஒப்படைக்கப்பட்டது.

இதனிடையே, தனக்கு முந்தைய அரசு கடைபிடித்த நடைமுறைகளையே தாமும் பின்பற்றியதாகவும், இதில் எவ்வித தவறும் இழைக்கப்படவில்லை என்றும் ஆ.ராசா வாதிட்டுள்ளார்

Tuesday, May 3, 2011

குற்றப்பத்திரிக்கைக்குப் பிறகே கலைஞர் டி.வியுடன் ஒப்பந்தம் நடந்துள்ளது - சிபிஐ!!!

2G ஸ்பெக்ட்ரம் முறைகேடுகள் தொடர்பாக முதல் தகவல்அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்யப்பட்ட பின்னரே கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி அளிக்கப்பட்டது குறித்து ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று சிபிஐ தெரிவித்துள்ளது.

2G ஊழல் தொடர்பாக சிபிஐ சமீபத்தில் தாக்கல் செய்துள்ள துணைக் குற்றப்பத்திரிகையில் ஸ்வான் டெலிகாம், டி.பி. ரியாலிட்டி நிறுவனங்கள் மூலம் கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கைமாறியுள்ளது.23-12-2008 மற்றும் 07-08-2009க்கு இடைப்பட்ட காலத்தில் இந்த பணம் கைமாறியுள்ளது. கலைஞர் டி.வி.க்கு அளிக்கப்பட்டது குறித்து அப்போது ஒப்பந்தம் ஏதும் கையெழுத்தாகவில்லை.


2G ஊழல் குறித்து அக்டோபர் 21,2009இல் முதல் தகவலறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதையடுத்தே கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கைமாறியது தொடர்பாக முறைப்படி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.27-01-2010-ல் தான் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.


இவ்வழக்கில் முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ.ராசாவை கைது செய்து விசாரிக்கத் தொடங்கி, இந்த வழக்கில் தீவிரம் காட்டியதை அடுத்தே கலைஞர் டி.வி. பணத்தை திருப்பி அளித்துள்ளது என்று சிபிஐ குற்றம் சுமத்தியுள்ளது.


2G வழக்கில் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டுள்ள டி.பி.ரியாலிட்டி கணக்காளர் சதீஷ் அகர்வால்,சினியுக் பிலிம்ஸ் நிறுவன இயக்குநர் மொஹமத் மொரானி ஆகியோரிடம் சிபிஐ விசாரணை நடத்தியபோது, அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் 2G ஊழலில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட பிறகு ரூ.200 கோடிக்கான ஒப்பந்தத்தை கலைஞர் டி.வி. மேற்கொண்டது அம்பலமாகியுள்ளது.