அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, January 29, 2011

மகரஜோதி சர்ச்சை: விசாரணை நடத்த விரும்பவில்லை: ஐகோர்ட்டில் கேரள அரசு தகவல்



மகரஜோதி மனிதரால் ஏற்றப்படுவதா? இல்லையா? என்பது குறித்து விசாரணை நடத்தும் திட்டம் இல்லை என்று கேரள ஐகோர்ட்டில் கேரள அரசு தெரிவித்துள்ளது.

சபரிமலை அருகே கடந்த 14ந் தேதி ஏற்பட்ட நெரிசலில் 102 பக்தர்கள் பலியானார்கள். இதுபற்றி விசாரணை நடத்தக்கோரி, முன்னாள் மேல்சாந்தி ஸ்ரீகுமார், பகுத்தறிவாளர் சங்கம் உள்பட 3 பேர் கேரள ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் ராதாகிருஷ்ணன், பி.எஸ்.கோபிநாத் ஆகியோர் அடங்கிய தேவசம் பெஞ்ச், மகரஜோதி' எனப்படுவது, மனிதரால் ஏற்றப்படுவதா? என்றும், மகரவிளக்குக்கும், மகரஜோதிக்கும் இடையிலான வேறுபாடு குறித்தும் கேள்வி கேட்டனர்.
இதுபற்றி சபரிமலை தலைமை பூசாரி கண்டரரு மகேஸ்வரரு கூறுகையில், மகரஜோதி என்பது வானில் தோன்றும் நட்சத்திரம். மகரவிளக்கு என்பதுதான், பொன்னம்பலமேட்டில் மனிதர்களால் ஏற்றப்படும் தீபம் என்றார்.

இந்நிலையில், 27.01.2011 அன்று இம்மனுக்கள் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகளின் கேள்விக்கு கேரள அரசு சார்பில் அரசு பிளீடர் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:
மகரஜோதி', மனிதர்களால் ஏற்றப்படுவதா? அல்லது அது வானியல் அற்புறதமா? என்பது குறித்து கேரள அரசு விசாரணை நடத்த விரும்பவில்லை. இதை முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் ஏற்கனவே தெளிவுபடுத்தி உள்ளார். மகரஜோதி, லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கை சம்பந்தப்பட்டது என்பதால், அதுபற்றி விசாரணை நடத்த மாட்டோம் என்று அச்சுதானந்தன் கூறியுள்ளார் என, அரசு பிளீடர் கூறினார்.


இதையடுத்து, இந்த விவகாரம் பொதுநலன் சம்பந்தப்பட்டது என்பதால், இம்மனுக்களை மேல்விசாரணைக்காக தலைமை நீதிபதி செலமேஷ்வருக்கு மாற்றுவதாக தேவசம் பெஞ்ச் அறிவித்தது.


தினமனி செய்தி:

கொச்சி, ஜன.27: சபரிமலை மகர ஜோதி மற்றும் மகர விளக்கு தொடர்பான சர்ச்சை குறித்து எந்தவிதமான விசாரணையும் நடத்தவில்லை என உயர்நீதிமன்றத்தில் கேரள அரசு தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக பகுத்தறிவாளர்கள் சங்கம் தாக்கல் செய்த மனு உள்ளிட்ட 3 மனுக்களை கேரள உயர்நீதிமன்றம் விசாரித்தது. அப்போது நீதிபதிகள் தோட்டத்தில் ராதாகிருஷ்ணன் மற்றும் கோபிநாத் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு அரசு வழக்கறிஞர் பதில் மனுத்தாக்கல் செய்தார்.இதுதொடர்பாக எந்தவித விசாரணையும் நடத்த அரசு விரும்பவில்லை என முதல்வர் ஏற்கனவே கூறியுள்ளார் என்று அரசு வழக்கறிஞர் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.மக்களின் சமய நம்பிக்கை குறித்த விவகாரமாக இருப்பதால் மகரஜோதி தெய்வீகமானதா அல்லது மனிதரால் உருவாக்கப்படுவதா என்பதை அரசு விசாரிக்காது என கேரள முதல்வர் அச்சுதானந்தன் தெரிவித்ததாக ஊடகங்களில் வெளியான செய்தியை அவர் சுட்டிக்காட்டினார்.


Virus வந்த pen drive ஐ Format செய்வது எப்படி?

நாம் நமது Pen Drive ஐ Format செய்யும் போது நமக்கு சில சமயம் அது Format ஆவது இல்லை. முக்கிய காரணமாக வைரஸ் தான் இருக்கக் கூடும். இதனை எப்படி சரி செய்வது என்றும், அதோடு ஒரு pen drive வாங்கினால் அதை எப்படி பாதுகாப்பது என்றும் தெரிந்து கொள்ளலாம்.


முதலில் format செய்யும் பிரச்சினையை சரி செய்வோம்.
உங்களால் உங்கள் pen drive ஐ நேரடியாக Format செய்ய இயலவில்லை எனில்


Right Click "My Computer"
-->Manage
--> Disk Management
--> Right Click your Pen drive
--> "Change Drive Letter And Paths"
Select ஆகி உள்ள letter ஐ remove செய்யவும்.




இப்போது அதே இடத்தில உங்கள் pen drive மீது ரைட் கிளிக் செய்து format கொடுக்கவும்.
இப்போது Format ஆகிவிடும் பின்னர் மீண்டும் ரைட் கிளிக் செய்து அதற்க்கு லெட்டர் add செய்து விடவும், இல்லை என்றால் உங்கள் pen drive my computer இல் தெரியாது.


இந்த முறையில் format ஆகவில்லை என்றால் உங்கள் கம்ப்யூட்டர் அந்த pen drive ஐ format செய்யாது. வேறு கம்ப்யூட்டர் இல் முயற்சி செய்யவும்.


எப்படி pen drive ஐ பாதுகாப்பது??


1 . இன்று எல்லா pen drive களும் ஒரே தரத்தில் கிடைத்தாலும் நண்பர்களிடம் கேட்டு விட்டு அவர்கள் எத்தனை நாட்கள் பயன்படுத்தி உள்ளனர் என்பதை பொருத்து அதை முயற்சி செய்யலாம். (முழுவதுமாக நம்ப முடியாது )

2 . Browsing Center களில் பயன்படுத்த வேண்டாம்.

3 . மூச்சுக்கு முன்னூறு முறை Format அடிக்காதீர்கள். தேவை இருப்பின் மட்டும் செய்யவும்.

4 . Pen drive வேறு யாரிடமாவது கொடுத்து இருந்தால் பின்னர் வாங்கும் போது ஸ்கேன் செய்து வைரஸ் இருந்தால் மட்டும் Format செய்யலாம்.

5 . டெல்லியில் Electronic பஜாரில் மட்டும் pen drive ஐ வாங்க வேண்டாம்.

6 . தண்ணீரில் விழுந்து விட்டால் தலைதெரித்து கம்ப்யூட்டர் இல் செருக வேண்டாம். அதை நன்றாக காயவைத்து மட்டும் தண்ணீர் போய்விட்டது என்று தெரிந்த பின் மட்டும் செருகவும்.

7 . Pen drive சொருகியவுடன் ஸ்கேன் செய்ய சிறந்த சாப்ட்வேர்
USB-Disk-Security

வெளிநாட்டு வேலை



paasam.jpg

பழைய நினைவுகள்

தூசுப்படிந்துக்;

காசுக்காக தேசம் கடந்துப்;

பள்ளி நண்பர்களும்;

கல்லூரி தோழர்களும்;

அலைவரிசையில்

அலையடிக்கும்;

எப்போதாவது

உள்ளத்திற்கு மகிழ்ச்சியாய்

குளிர் அடிக்கும்!

வெயிலும் பனியும்

நம் சருமத்திடம்

சரணடைந்து;

பெற்றோரின் விரலுக்கு

நம் காதுச் சமர்ப்பணமாய்;

திருகி விளையாட!

குளியலுக்காக

வாய்க்காலையும்;

வரப்புகளையும்

வலைவீசித் தேடி;

ஓடியப் பாதங்கள்;

ஓய்வாக இன்று!

என் வியர்வைகள்

குளிர்சாதனப்பெட்டிற்கு

வெட்கப்பட்டு;

மேனியில்

மறைந்துப்போய்;

வியர்வை என்பதே

மறந்துப்போய்!

கணிணிக்குக் கண்கள்

அர்ப்பணமாய்;

உடல்கள் சுற்றும்

நாற்காலிக்கு

மெத்தனமாய்!

உறவுகள்

கடலுக்கு அப்பால்;

மாதா மாதம்

பணம் மட்டும்

பயணம் செல்லும்;


விவசாயி..


vayal.jpg

கையைக் கடிக்கும் செலவைத்;

திருப்பிக் கடித்து;

விளைச்சல் கண்டப்பின்;

பயிரிட மீண்டும்;

செலவிற்குக் கையைக்

கொடுக்க!

எருவுகளை மண்ணின்

கருவுக்குச் செலுத்த;

மாநிலங்கள்

நிலங்களுக்கான நீரை ஏமாற்ற;

கருச்சிதைவுகள்

கண்ணிற்குத் தெரியாமல்!

பசுமை நீர்த்துப்போய்;

கட்டிட மனைக்குப்

பலியாகிப்போய்;

விதைத் தூவிய இடங்கள்;

மலடாகி;

கல்லுக்கும் ஜல்லிக்கும்

வாக்கப்பட்டு;

வீடாக!


வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்..

3429626923_aac0366b06_m.jpg


வெட்கத்தைப்

படம்பிடித்துக் காட்ட;

பெண்கள் கூட்டத்தில்

வெளிச்சம் போட்டுச்

சிரித்துக்கொண்டே

வீடியோக்காரன்!

வெட்கிக்கொண்டே;

வெட்கத்தை

வெளியேற்றிக் கொண்டே;

முகம் காட்டும்

அகம் கறுத்த மங்கைகள்!

மலறும் முகம்

மணவாளனுக்காக;

வாசம் வீசுவதற்கு முன்னே;

ரசித்து எடுக்க

வீடியோக்காரன்

மணவாளியின் அறையில்;

குடும்ப அனுமதியுடன்!

தவறிவிழும் தாவணியும்;

ஒதுங்கிக் கிடக்கும்

முந்தாணியும் தப்பாமல்

ஓரக்கண்ணின்

ஓலி ஓளி நாடாவில்!

விட்டுப்பிரிந்த உறவுகளை

விழிகளில் அடைக்க;

திருமண வீடியோக்கள்;

வளைகுடா அறைகளில்!

அறிந்தவன் அறியாதவன்;

அனைவரும் கண்டுக்களிக்க;

அடுத்தவன் விழிகளுக்கு

விருந்துக் கொடுக்க;

வெட்கம் கெட்டுப்போன

சமாச்சாரங்களுக்காகச்

சமபந்திப் போஜனம்;

Source:yazar kavitaigal

விற்பனைக்கு அல்ல



Female.jpg


ஆண் மகனின்

பட்டங்கள் கிரயமாக;

எனக்காக நடக்கும்

கருத்துக்கணிப்பு!

வித்தியாசமான விலைகளில்

இளங்காளைகள்

முதுகலையும்

இளங்கலையுமாக!

ஏற்றம் இறக்கும்

கொண்ட ஏலத்தில்

உள்நாடு வெளிநாடு

மாபிள்ளைக் கிராக்கிகள்!

நல்லப் பெண்ணா என்று;

நகையைக் கொண்டு

என்னை எடைப்போடும்;

மதிப்புள்ள நகைக்கு முன்னே;

என் புன்னைகைப்

புண்ணாகிப்போக;

வரவுகள் வாசலைக் கண்டு

நடைப்போடும்!

மென்மையானப்

பெண்மையைச்

சீண்டிப்பார்க்கும் கொடுமை;

தட்சணை என்ற வன்மை!

செலவோடுச் செலவாக;

இனி தொங்கவிடவேண்டும்

கதவுகளில் - நான்

விற்பனைக்கு அல்ல!


குழிக் கண்டச் சாலை

Road.jpg

சுரண்டும் ஊழலால்;

குழிவிழுந்தச் சாலை;

பயணத்தின் போதேப்

உடற்பயிற்சிக் கொடுக்கும்

அரசின் தந்திரம்!

ஒழிக்க வேண்டியக்

கலப்படங்கள் உணவிலே;

சேர்க்க வேண்டியக்

கலப்படங்கள் சாலைகளில்

ஒதுக்கப்பட்டதால்;

மலுங்கிப்போன பாதைகளில்

நாங்கள் குலுங்கி குலுங்கி!

தேங்கி நிற்கும் குழிகளில்;

வாகங்களின் சக்கரத்தில்

நசுக்கப்பட்ட நீர்;

சில நேரங்களில்

எங்கள் சட்டைகளிலும்!

இளமையிலேப்

பொக்கை விழுந்த;

நோய் கொண்டச் சாலை!

Source:Yazar kavitaigal
பட்டினி...

hunngry.jpg

ஏங்கிப்போன

விழிகளும்;

தூங்க மறுக்கும்

வயிறும்;

பேசிக்கொள்ளும் மொழி;

பசி!

அடிவயிறு அலற;

முதுகுத்தண்டு

நிமிர மறுக்க;

மென்றுத் திண்ணும்;

குடல்களும்

கூப்பாடுப்போடும்;

சாப்பாடுப்போட

ஆளில்லாததால்!

Source:Yazar kavithaigal...

நம்மை தூக்கிக்கொண்டு பறப்பதற்காக ஜனாசா ஏர் லைன்ஸ் தயாராக உள்ளது! பயணிகளே கவனமாக தயாராகுங்கள் !!!

ஏறும் இடம் (Departure ) : துணியா !
இறங்கும் இடம் (Araival) : கபர்ஸ்தான் !!.
புறப்படும் நேரம் : நம்மை படைத்த எல்லாம் வல்லாஹ் அல்லாஹ் அறிந்தவன்.
கவலைபடவேண்டாம் பயண நேரமும் தேதியும் மாற்றத்திற்கு உள்ளாகாது !. விமானமும் கேன்சல் ஆகாது !?.
Destination Air போர்ட் : டெர்மினல் 01 சொர்க்கம் ! / டெர்மினல் 02 நரகம்!?.
இது ஒரு ட்ரான்சிட் AIR LINE ?
இந்த அதிநவீன ஏர் லயன்சின் திட்டங்களும் விபரங்களும் உலகில் எங்கும் கிடைக்காது ஆனால்
புனித திருக்குரான் மற்றும்
நபிகளார் முகமது சல்லல்லாஹுவசல்லம்அவர்களின் வாழ்வின் நடைமுறையில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
இந்த அதிநவீன எரோபிளேனின் பெயர் பிரிட்டிஷ் அல்லது கல்ப் அல்லது எமிரேட்ஸ் அல்லது ஏர் இந்திய கிடையாது.
ஆனால் இதன் பெயரோ ஏர் ஜனாசா !.
இந்த விமானத்தின் கேப்டன் மலக்குல் மவுத் !!!.
இதனில் உட்காரும் இருக்கை இல்லை, வசதியாக படுத்துக்கொண்டேபயணிக்கலாம் !.
இதில் ரவுண்டு ட்ரிப் கிடையாது ஒன் வே ட்ரிப் மட்டும்தான் !!!.?.
இதில் கண்டிப்பாக உங்கள் உடமைகளை எடுத்து கொண்டு பயணிக்க இயலாது !,
ஆனால் நமது அமல்களை எத்துனை கிலோவாக இருந்தாலும் அனுமதி கிடைக்கும் !!.
அதற்காக ஏர்போர்ட் டாக்ஸ் கட்ட வேண்டிய பிரச்னை இல்லை மகிழ்ச்சிதானே ! ?.
இதிலே செல்வதற்கு கோட் சூட் தேவை இல்லைஒரு ஆறு முழ வெள்ளை துணி போதும் ? காசு மிச்சம்தானே !!!.
இதில் நீங்கள் பயணிக்க விசாவிற்கோ மற்றும் ஏர் டிக்கெட் எடுபதற்கோ சிரமபடதேவை இல்லை !!!! ??? காசும் விரயம் இல்லை!?.
உங்களுடை விசாவும் பயண சீட்டும் நீங்கள் உங்கள் தாயின் வயிற்றில் இருக்கும்போதே தயாராக விட்டது. !!!.
மேலும் மகிழ்ச்சிதானே?! ஆம் உங்கள் சீட் உறுதிசெய்யப்பட்டு விட்டது (confirmed )!. ரீ கன்பாம் செய்யும் பிரச்னை இருக்காது !!!.
ஆனால் உங்களுடைய சரியான பாஸ் போர்டை வைத்துகொள்ள மறந்தும் இறந்து விடாதீர்கள் ?
உங்களுக்கு பாஸ்போர்ட் செக்கிங் உண்டு !!!.
பாஸ் போர்ட் செக்கரின் பெயர் முன்கர் மற்றும் நகீர் !!!!!!! ???.
வேறு இந்தியன் or அமெரிக்கன் or பிரிட்டிஷ் or எந்தவிதவிதமான பாஸ்போர்ட்டும் செல்லுபடியாகாது ???.
ஆனால் ஒரே ஒரு பாஸ் போர்ட் தான் செல்லு படியாகும் !!!.
ஆம் அந்த பாஸ் போர்டின் பெயர் மவுத் !!!!!!.
அதிலே எல்லாருக்கும் ECR கட்டாயம் ஸ்டாம்ப் உண்டு.
எமிக்ரேசன் கிளியரன்சுக்கு மூன்று கேள்விகளை நமது பாஸ்போர்ட் எமிக்ரேசன் ஆபிசர் மதிற்பிக்குரிய முன்கர் மற்றும் நகீர் அவர்கள் கேட்பார்கள்.
அதை சரியாக கூறிவிட்டால் உங்கள் ட்ரான்சிட் லவுஞ்சில் சுகமாக ஓய்வு எடுக்கலாம் எந்த விதமான தொல்லையும் இருக்காது!!!.
ஆஆனால் சரியாக கூறாவிட்டால் உங்களுக்கு தொல்லை ஆரம்பம் ஆகிவிடும் உங்களின் ட்ரான்சிட் லவுன்ச் நரக லவுன்ச் ஆகிவிடும்???.
உஷார் !
உஷார் !
உஷார் !
உஷார் ! அந்த மூன்று கேள்விகள் !.
உன்னுடைய இறைவன் யார் ? விடை அல்லாஹ் !!!!!!.
உன்னுடைய மார்க்கம் எது ? விடை இஸ்லாம் !!!!!!!!.
உன்னுடைய நபி யார் ? விடை முகமது சல்லல்லாஹுவசல்லாம்
மறந்தும் இறந்து விடாதீர்கள் ? பதிலை சொல்ல நல்ல முஸ்லிமாக வாழ்ந்து சுகமான பயணத்திற்கு தயாராக இருங்கள் இன்ஷா அல்லாஹ் !.
வஸ்ஸலாம்
நம்முடைய ஏர் ஜனாசா !. பயணம் நல்ல பயணமாக அமய துவா செய்யும்,
"எங்கள் இறைவா ! உன்மீது ஈமான் கொண்டவர்களை நல்லோருடன் வாழ வைப்பாயாக ! நல்லோருடன் சேர்பாயக"
"யா முகல்லிபுள் குளுஉப் சப்பிக அலா கல்பி தீனுக்க"

--

நா(னா)மாக...எதுவும் ...பழகவில்லை .....

imagess.jpg

நானாக எதுவும்
பழகவில்லை ..,
... என்னை ..,
பழக்கியிருக்கிறார்கள் ....
சிறுவயதில் ..,
கடைக்கு போக மறுத்த
போது.,
விளையாட்டாய்
அம்மா தந்த
ஐந்து ரூபாய்
.. என்னை ..,
பழக்கியிருக்கலாம் ....
நண்பனை ,வீட்டிற்கு
அழைத்து
வந்த போது ...
வீட்டில் இருந்தவர்கள்...
பெயர் கேளாமல் ..,
சாதியை கேட்டது .
...என்னை ..,
பழக்கியிருக்கலாம் ....
வயதான என்
தாத்தா-பாட்டியை
முதியோர் இல்லத்தில்
தவிக்க விட்டு வந்த
என் பெற்றோர்கள் ..
....என்னை ..,
பழக்கியிருக்கலாம் ....
விவரம் தெரியாத
வயதில் ...
அப்பாவிற்கு ...வாங்கி
கொடுத்த சிகரேட்...
.....என்னை ..,
பழக்கியிருக்கலாம் ....
கடைக்காரர் தெரியாமல்
கூடக் கொடுத்த சில்லரையை
திருப்பி கொடுக்காமல்
வந்தது ....
......என்னை ..,
பழக்கியிருக்கலாம் ....
.
இப்படித்தான்
ஒவ்வொருவரும்...
எங்கெங்கோ...
எதையெதையோ
பழகி இருக்கிறோம்...
நா(னா)மாக...எதுவும்
....பழகவில்லை .....

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சவுதியிலிருந்து ஒரு மடல்!..


இசைத்துறையில் ஆஸ்கார் விருது பெற்ற அன்பு சகோதரர் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு…

ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது நிலவட்டுமாக!

‘சவுதி அரேபியாவுக்கு சென்ற ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஜித்தாவில் உற்சாக வரவேற்பு’, ‘புனித பூமியில் பிறந்தநாள் கொண்டாடிய இசைமேதை’ என்றெல்லாம் சில தினங்களுக்கு முன் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. அதுபற்றி தெளிவுபடுத்த விரும்பியதன் விளைவே இந்த கட்டுரை.

ஆஸ்கார் விருது பெற்றபோது எல்லா புகழும் இறைவனுக்கே! என்று மிகத் தெளிவாக அறிவித்து எங்களைப் போன்றவர்களை வியப்பில் ஆழ்த்தினீர்கள். இஸ்லாத்தில் இசை என்பது தடுக்கப்பட்டது. ஒரு சாராயக்டையை அல்லது ஒரு விபச்சார விடுதியை நடத்தி அதன் மூலமாக வரும் கோடிக்கணக்கான வருமானத்தை ஒருவன் ஏழை எளியவர்களுக்கு தர்மம் செய்தாலும் அவன் செய்யும் வியாபாரம் ஹலாலாக ஆகிவிடாது. தடுக்கப்பட்டதை செய்து மக்களை வழிகெடுத்ததற்கான தண்டனையை அவன் அனுபவித்தே ஆகவேண்டும் என்பது இஸ்லாமிய நியதி. உங்களது இசையும் அது போன்றதே! நீங்கள் அமைக்கும் இசையானது வெறும் இசையுடன் மட்டுமின்றி ஆபாசக்காட்சிகளுடன் வெளியிடப்படுகின்றன. அந்நியர்களுடன் சரச சல்லாபத்தில் ஈடுபடுவதும் அங்க அவயங்களை மாற்றாருக்கு காண்பிப்பதும் இஸ்லாத்தில் மிகப்பெரும் தவறு என்பதை தாங்கள் அறியாமலிருந்தால் அதை தங்களின் கவனத்துக்கு கொண்டு வருகின்றேன். ஒரு தீமையை செய்ததற்காக கிடைத்த விருதை நீங்கள் பெற்றபோது ‘எல்லா புகழும் இறைவனுக்கே! என நீங்கள் விளித்தது ‘நன்மையும் தீமையும் இறைவனிடத்தில் இருந்து வருபவை’ என்ற இஸ்லாமிய கோட்பாட்டின் படி மட்டுமே சரியானது. ஆனால் தீமை செய்ததற்கான தண்டனையை மறுமையில் அனுபவித்தே ஆக வேண்டும்.

ஒருவன் பிற மதத்திலிருந்து இஸ்லாத்தை தேர்ந்தெடுத்து வந்தால் அவனது முந்தைய பாவங்கள் அனைத்தையும் இறைவன் மன்னித்து விடுகின்றான் என நமது வழிகாட்டியாகிய நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அவ்வாறு அனைத்து பாவங்களும் மன்னிக்கப்பட்ட நீங்கள் மீண்டும் தர்ஹாக்களுக்கு சென்று இணைவைப்பு எனும் பாவத்தை சம்பாதித்து வருகின்றீர்கள்.



காத்ரீனா கைஃப், ஷில்பா ஷெட்டி போன்றவர்களெல்லாம் தலையில் பூக்கூடை அணிந்தவர்களாக அஜ்மீர் தர்ஹாவுக்கு செல்கிறார்கள் என்றால் அது பிழைப்புக்காக! முஸ்லிம் ரசிகர்களும் படம் பார்க்க வரவேண்டும் என்ற நப்பாசையும் தனது படம் நிறைய நாள் ஓடவேண்டும் என்ற சுயலமும் தான் அதற்கு காரணம். அவர்களை பொறுத்தவரை அது பத்தோடு பதினொன்று. கோவிலுக்கும் செல்வார்கள், சர்ச்சுக்கும் செல்வார்கள், தர்ஹாவுக்கும் செல்வார்கள்.

இறைவனைத் தவிர வேறு எவராலும் நமக்கு எதையும் தந்திட முடியாது என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை. ‘எம்மதமும் சம்மதம்’ என்று சொல்பவன் ஏக இறைவனை வணங்கக் கூடியவனாக இருக்க முடியாது. பல தெய்வ கொள்கைகளை தகர்த்து ஏக தெய்வ கொள்கையை இஸ்லாம் வலியுறுத்துகிறது. அப்படியிருக்க கல், மண், கப்ரு, மகான் என்பனவற்றிற்கு சக்தி எங்கிருந்து வரும். அவைகளால் திரைப்படம் அதிக நாள் ஓடும் என நீங்கள் நம்பினால் நீங்கள் இஸ்லாத்திலிருந்து விலகி விட்டீர்கள் என்றே அர்த்தம். உங்களை ஒரு இஸ்லாமியராக உலகம் பார்ப்பதால் தர்ஹாக்களுக்கு நீங்கள் செல்வதை இஸ்லாமிய வழிபாட்டில் ஒரு பகுதியாக சிலர் எண்ணும் வாய்ப்புகளுண்டு. அது களையப்பட வேண்டும். ஆனால் இதில் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், உங்களை ஜித்தாவில் வரவேற்றவர்கள் இசை என்பது ஹராமென்றோ, தர்ஹாக்களிடம் கையேந்துவது மிகக் கொடிய பாவம் என்றோ தங்களுக்கு ஏன் சொல்லவில்லை என்பது தான். உங்களை வரவேற்ற முஸ்லிம் பெயர்தாங்கிகள் அனைவருமே ஒரு பிரபலத்துடன் போஸ் கொடுக்க வேண்டும் என்ற நினைப்புடன் நடந்துள்ளார்கள் என்பது இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

மக்காவில் உம்ரா செய்ய வேண்டுமென்று வந்ததாகவும் அந்த புண்ணிய பூமியில் தங்களது பிறந்தநாளை கொண்டாட வேண்டுமென்றும் விரும்பியதாக தாங்கள் பேட்டியளித்துள்ளீர்கள். அஜ்மீர் தர்ஹா, கடப்பா தர்ஹாவிற்கு சென்று பிரார்த்திப்பது போன்றதல்ல மக்காவுக்கு செல்வது என்பதை தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

எண்ணப்படி தான் செயல்கள் அமையும் என்பது புகாரி ஹதீஸ் புத்தகத்தில் வரும் முதலாவது ஹதீஸ். இதுவரை நீங்கள் படிக்காமலிருந்தால் இன்றே அதை புரட்டுங்கள். ஒருவன் தனது நாட்டை, குடும்பத்தை, செல்வத்தை விட்டு அடுத்த நாட்டுக்கு ஹிஜ்ரத் செய்யும் போது அங்கே இருக்கும் அழகான பெண்களை திருமணம் செய்ய வேண்டும் என எண்ணி இருந்தால் அது நிறைவேறும். ஆனால் இறைவனின் பொருத்தத்தை அடைய முடியாது என்பது அந்த ஹதீஸின் அர்த்தம். பிறந்தநாள் கொண்டாட வேண்டும் என்ற அர்த்தத்தில் நீங்கள் வந்திருந்தால் அது நிறைவேறிவிட்டது, உம்ரா இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டதா என்பது சந்தேகமானதே! அதை இறைவன் ஒருவனே அறிவான்.

பிறந்தநாள் கொண்டாட்டம் என்பது இஸ்லாத்தில் இல்லை, நாம் போற்றும் நபிகளார் பெருமானார் (ஸல்) அவர்கள் தனது எந்த பிறந்தநாளுக்கும் கேக் வெட்டியதில்லை, இன்று என்னுடைய பிறந்தநாள், எனவே விழா எடுங்கள் என்றோ சொன்னதில்லை, அவர்களது காலத்தில் பாசத்திற்குரிய குழந்தைளுக்கும் அன்பிற்குரிய மனைவிகளுக்கும் நேசத்திற்குரிய தோழர்களுக்கும் பிறந்தநாள் கொண்டாடியதில்லை, அதை அனுமதிக்கவுமில்லை. ஆனால் அறியாமையால் நீங்கள் கேக் வெட்ட முனைந்த போது தங்களுடன் இருந்த எவருமே தடுக்காதது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும். அந்த இடத்தில் அது தவறு என்பதை தங்களுக்கு அவர்கள் உணர்த்தி இருந்தால் தாங்களும் அதை உணர்ந்து அந்த தவறை செய்யாமல் இருந்திருப்பீர்கள். அதன் மூலமாக தமிழ் முஸ்லிம்களிடத்தில் அது பற்றிய ஒரு விழிப்புணர்வும் ஏற்பட்டிருக்கும். தாங்கள் செய்த அச்செயல் இன்று ஒரு முன்னுதாரணமாக மாறிவிடுமோ என்ற கவலையே என்னுள் எழுகின்றது.

பிறந்தநாளுக்கு கேக் வெட்டுவது இஸ்லாமிய கலாச்சாரமல்ல! அதுவும் சவுதி அரேபியாவில் அதை அனுமதித்த ஜித்தா நண்பர்கள் மிகப்பெறும் தவறிழைத்துவிட்டார்கள். அவர்கள் தங்களை இஸ்லாமியனாக பார்க்கவில்லை. உடன் நின்று போட்டோ எடுக்கும் பிரபலமாகத் தான் பார்த்திருக்கின்றார்கள். இல்லையேல் உம்ரா செய்யும் போது மொட்டை அடிப்பது தான் சிறந்தது என்பதை சொல்லி தந்திருப்பார்கள். ஏனெனில் உம்ரா செய்துவிட்டு முடிகளை விரலளவு களைவதை இஸ்லாம் கற்றுத்தரவில்லை. மொட்டையடிப்பதை சிறந்ததாக கூறுகிறது. மொட்டையடித்தவர்களுக்காக நபிகள் பெருமானார் மூன்று முறை பிரார்த்தனை செய்துள்ளார்கள் என்பதை உங்களது வழிகாட்டிகள் உங்களுக்கு சொல்லித்தரவில்லை. அவர்களுக்கும் தெரிந்திருக்குமோ என்பதும் சந்தேகமே!

சரி! தங்களது பிறந்தநாளில் என்ன வித்தியாசத்தை நீங்கள் பார்த்தீர்கள். வயதை அளவிடும் ஒரு நாளே தவிர எந்த சிறப்பும் அதற்கு இல்லை. ஆண்டுக்கொருமுறை தான் பிறந்தநாள் கொண்டாட வேண்டும் என்பதை எதன் அடிப்படையில் தீர்மானித்தீர்கள். வருடத்திற்கொருமுறை ஏன் அந்த நாளை கொண்டாட வேண்டும். மாதத்திற்கொரு முறை கொண்டாடலாமே? ஒவ்வொரு மாதமும் 6ம் தேதி கொண்டாடலாமே? ஏன்? கிழமையை கணக்கிட்டு வாரத்திற்கொருமுறை கூட கொண்டாடலாமே? நீங்கள் பிறந்தது திங்கள்கிழமை என்றால் இன்று அது வியாழக்கிழமை! பின் எவ்வாறு பிறந்தநாள் கொண்டாட முடியும். எனவே சிந்தியுங்கள்!

நம்மை பொறுத்தவரை வாழ்க்கை என்பது இந்த உலகத்துடன் முடிந்து விடுவதில்லை. மறுமை உலகம் என்ற மாபெரும் பேறு நமக்காக காத்திருக்கின்றது. அதில் நாம் வெற்றியடைய வேண்டுமாயின் அதற்கான தேர்வுக்கூடம் தான் இது. உங்களை புகழ்ந்து கொண்டும் உங்களுடன் போட்டோவுக்கு போஸ் கொடுப்பவர்களும் மறுமையில் உங்களுக்கு துணையாக வரமாட்டார்கள். மறுமை நாளிலே இந்த கூட்டமெல்லாம் உங்களை வரவேற்க வராது, உதவிகள் செய்யாது. நீங்கள் மட்டும் தனித்து விடப்படுவீர்கள். மரணிக்குமுன் நீங்கள் தவறுகளுக்காக இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்டுவிட்டால் அவன் நாடினால் மன்னித்துவிடுவான்.

இறுதியாக, தமிழகத்திலோ அல்லது வடமாநிலங்களிலோ இந்த பிறந்தநாளை நீங்கள் கொண்டாட திட்டமிட்டிருந்தால் திரையுலகமும் ஆட்சியாளர்களும் திரண்டு ஊரே கோலாகலமாக இருந்திருக்கும். ஆனால் அதைவிட புனித பூமியான மக்காவிற்கு செல்வதை நீங்கள் சிறந்ததாக கருதியதிலிருந்து அந்த புகழாரத்தை விட மக்காவின் அமைதியை நீங்கள் விரும்பியுள்ளீர்கள் என்பது தெளிவாகின்றது. எனவே தங்களை சுற்றியுள்ள கூட்டமே தங்களை முழுமையாக இஸ்லாத்தில் நுழையவிடாமல் தடுக்கின்றன என்பதை என்னால் உணர முடிகின்றது.

ரசிகர்கள் கூட்டத்தை கண்டு புளகாங்கிதம் அடையாமல் மறுமையை பற்றிய தேடுதலை அதிகப்படுத்துங்கள். அப்போது மிகப்பெரிய மாற்றத்தை காண்பீர்கள். உங்களது தேடுதலில் இறைவனை பற்றிய அறிவை நீங்கள் பெற்றுவிட்டால் கல்லை, கபரை, மனிதனை வணங்க கூடாது என நீங்கள் முடிவெடுத்து விடுவீர்கள். ஆனால் அதை அறிவித்து விட்டால் நீங்கள் தனித்து விடப்படுவீர்கள். எதிர்ப்புக்கு உள்ளாக நேரிடும். இசை, பாடல்களின் மூலம் கிடைத்த புகழாரம் மற்றும் வருமானம் நின்று போகும். உங்களின் இசை, ஆடல், பாடல்களை ரசித்து உங்களை சுற்றிலும் இருப்பவர்கள் உங்களை வெறுக்க ஆரம்பித்து விடுவர். நீங்கள் தனித்து விடப்படுவீர்கள். இந்த விளைவுகளுக்கு நீங்கள் தயாராக இருந்தால் இன்றே தங்களது தேடுதலை துவக்குங்கள்.

அன்பிற்குரிய ரஹ்மான்!

நீங்கள் இஸ்லாத்தை ஏற்றதும் அனைத்து பாவங்களும் மன்னிக்கப்பட்டதை போல இணைவைப்பிலிருந்து விலகி தவ்பா செய்தால் மீண்டும் பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்களாக மாறுவீர்கள், மாறவேண்டும் என்பதே எனது அவா. ஏனெனில் மறுமை நன்மைக்காகத் தான் நீங்கள் உம்ராவுக்கும் வந்தீர்கள். மதீனாவிலிருந்து ஜித்தா செல்ல பிளைட்டுக்கு நேரமாவதைக் கூட உணராமல் பிரார்த்தனையில் லியித்ததாகவும் அதனால் பிளைட்டை தவற விட்டுவிட்டு காரில் ஜித்தா செல்லும் நிலை எற்பட்டதாகவும் செய்தி அறிந்தேன். பிரார்த்தனையில் இத்தனை நிகழ்வுகள் நிகழும் போது மறுமையில் கேள்விக்கணக்கு நாளில் நமது நிலை என்னவாக இருக்கும்! அங்கு தனித்து விடப்படுவதை காட்டிலும் இவ்வுலகில் தனித்து விடப்படுவது துன்பம் தரும் விஷயமல்ல. மரணத்திற்கு பின் இருப்பதே நிலையான வாழ்க்கை என்பதை அறிந்து கொண்டு தீயவைகளை களைந்து இறைவனுக்கு பிடித்தவற்றை மட்டும் செய்யக்கூடியவனாக தங்களை இறைவன் மாற்றவேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்தவனாக முடிக்கின்றேன்.


Source:Changesdo.blogspot.com

ஹஜ் புனித யாத்திரைக்கு மானியம் கொடுப்பது சட்ட விரோதம் அல்ல..


புதுடில்லி :"ஹஜ் புனித யாத்திரைக்காக முஸ்லிம்களுக்கு அரசு சார்பில் மானியம் அளிப்பது சட்ட விரோதமாகாது. மற்ற மதத்தினருக்கும் இதேபோல் அரசு சார்பில் சலுகை அளிக்கப்படுவதும் சட்ட விரோதம் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.


பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் எம்.பி., பிரபுல் கொராடியா என்பவர், ஹஜ் புனித யாத்திரை செல்பவர்களுக்கு அரசு சார்பில் மானியம் அளிக்கப்படுவதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். "மத நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக, அரசின் வரிப் பணம் பயன்படுத்தப்படுவது, அரசியல் சட்டப் பிரிவு 27ல் உள்ள விதிமுறைகளை மீறும் செயல்' என, மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.இந்த மனு, நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு, கியான் சுதா மிஸ்ரா ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.


இறுதியில், இந்த மனு தொடர்பாக நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:புனித யாத்திரை செல்பவர்களுக்காக, சிறிய தொகையிலான அரசுப் பணம் பயன்படுத்தப்படுவது, சட்ட விரோதமாகாது. எங்களை பொறுத்தவரை, வருமான வரி மூலம் வசூலிக்கப்பட்ட ஒட்டு மொத்த தொகையில் கணிசமான பகுதியையோ, சுங்க வரி, கலால் வரி, விற்பனை வரி உள்ளிட்ட மற்ற வரிகள் மூலம் வசூலிக்கப்படும் ஒட்டு மொத்த தொகையில், கணிசமான பகுதியையோ, மத நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக செலவிட்டால் தான், அரசியல் சட்டப் பிரிவு 27ல் உள்ள விதிமுறைகளை மீறியதாகக் கருத முடியும்.ஒட்டு மொத்த வருமான வரி வசூலில், 25 சதவீதத்தை குறிப்பிட்ட மதத்தினரை ஊக்குவிப்பதற்காக பயன்படுத்தினால், விதிமுறைகளை மீறியதாகக் கூறலாம்.


ஆனால், சிறிய அளவிலான தொகையை இதற்காக செலவிடுவதை சட்ட விரோதமாகக் கருத முடியாது.பாகிஸ்தானில் உள்ள கோவில்கள் மற்றும் குருத்வாராக்களுக்கு செல்வதற்காக, இந்து மற்றும் சீக்கிய மதத்தினருக்கும், சில மாநில அரசுகள் சார்பில் வசதிகள் செய்து தரப்படுகின்றன. இவையெல்லாம், அரசின் ஒட்டு மொத்த வரி வசூல் தொகையை ஒப்பிடும் போது, மிகவும் சிறிய தொகையே.இவ்வாறு தீர்ப்பளித்த நீதிபதிகள், பிரபுல் கொராடியா தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்தனர்.

வெற்றிகரமான கணவர்..


Thanks : Read Islam

காவிக்கொடியவர்களின் கையில் தேசியக்கொடி


இந்திய இரானுவத்தின் அத்துமீறல்களை - படுகொலைகளை எதிர்த்து சுதந்திரத்திற்காக ஆண்கள்-பெண்கள் மற்றும் சிறார்கள் அனைவரும் இரத்தம் சிந்தி போராடும் காஷ்மீரிகளின் உணர்வுகளை புண்படுத்துவதற்காக திட்டமிட்டு -
பா.ஜ.க -சங்பரிவார தொண்டர்களை திரட்டிக்கொண்டு ஶ்ரீநகர் சென்று சுதந்திர தினத்தன்று (நாளைக்கு - 26 ஜனவரி 2011) தேசியக்கொடியை ஏற்றப் போவதாக அறிவித்ததை தொடர்ந்து காஷ்மீரில் பதட்டம் நிலவுகிறது.

தேசப்பற்று - தேசியக்கொடி என்ற பெயரில் மீண்டும் சங்பரிவார் கும்பல்கள் இந்திய சிறுபான்மை முஸ்லிம்கள் மீதான வெறுப்புணர்வை பெரும்பான்மை மக்களிடம் விதைக்க ஆரம்பித்துள்ளது.

கொடி பிடிக்க காரனமென்ன ?

அஜ்மீர், மாலேகான் மற்றும் மக்கா மஸ்ஜித்களில் வெடிகுண்டு வைத்து பலரின் உயிரிழப்புக்கு காரணமானது சங்பரிவார்தான் என்று பட்டவர்த்தனமாக அவர்களின் முகமூடி கழற்றியெறியப்பட்டு நிர்க்கதியாய் நிற்கும் இச்சூழ்நிலையில் பொதுமக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக தேசப்பற்று என்ற மற்றொரு முகமூடியணிந்து வந்திருக்கிறது சங்பரிவார்.

பா.ஜ.க தலைமையிலான அந்த மதவெறி சக்திகள் நாளை (26 ஜனவரி 2011) காஷ்மீர்- ஶ்ரீநகரில் சுதந்திர தினத்தையொட்டி தேசிய கொடியை ஏற்றப்போவதாக அறிவித்து பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

காக்காய் பிடிப்பதில் வல்லர்களான 'காவி ' வந்தேறிகள் - ஆங்கில 'வந்தேறிகளோடு' கைக்கோர்த்து பிரிட்டிஷ் ஆண்டைகளின் அடிமைகளாக செயல்பட்ட இவர்களால் 'மூவர்ண தேசியக் கொடி, சுதந்திரப்போராட்ட காலத்தில் ஒருபொழுதும் பிடிக்கப்பட்டதேயில்லை.

ஒட்டு மொத்த இந்தியாவே ஆங்கிலேய அரசை எதிர்த்த போது இவர்கள் மட்டும் பிரிட்டிஷாருக்கு வக்காலத்து வாங்கி - ஒத்து ஊதினர் என்பது வரலாறு.

இந்திய தேசியக்கொடியை கையிழேந்தும் அருகதை - சங்பரிவாரத்திற்கு உள்ளதா? என்று வரலாற்றை ஆராய்ந்து பார்த்தால் உண்மை விளங்கும். சுதந்திரத்திற்கு முன்பிருந்தே காவிக்கொடியை தவிர வேறொன்றும் பிடிக்காத - கயவர்களுக்கு மூவர்ணக் கொடி அறவே பிடிக்காது.

சங்பரிவாரின் ஆங்கில ஊதுகுழலான ஆர்கனைசர் (ஜூலை 17, 1947) இதழில், சுதந்திர இந்தியா தேசியக்கொடியாக - 'மூவர்ண கொடியை' தேர்ந்தெடுத்தது பற்றி மிகவும் வருந்தியும்
காவிக்கொடிதான் தேர்ந்தெடுக்கபட்டிருக்க வேண்டும் என்றும் முகப்பு கட்டுரை வடித்தது.

ஆகஸ்ட் 14 (1947) அன்று எழுதிய மற்றொரு முகப்பு கட்டுரையில் 'மூவர்ணக்கொடியை' பற்றி மிகவும் இழிவாக 'மூன்று என்ற எண்ணே அபசகுனமானது - அதனால் மூன்று வர்ணங்களை கொண்ட தேசியக்கொடி பாரதமாதாவிற்கு கேடு விளைவிக்கும்' என்று பூச்சாண்டி காட்டி- காவிக்கொடியை தேசியக்கொடியாக அறிவிக்க வேண்டுமென்று பலமுறை முயன்று தோற்றது.

இந்திய சுதந்திரத்திற்கு பிறகு வெளியான கோல்வால்க்கரின் 'சிந்தனை கொத்துக்கள்' என்ற நூலில்கூட தேசியக்கொடியை விமர்சித்து - காவிக்கொடியை புகழ்ந்து, இந்தியாவில் வசிக்கும் அனைவரும் ஒருநாள் காவிக்கொடி முன் தலை வணங்க வேண்டிய நிலை உருவாகும் என்று எழுதியிருந்தது.

சங்பரிவாரம் நடத்தும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் மூவர்ணக்கொடிக்கு இன்று வரை - இடமே கிடையாது. அதன் தலைமையகமான நாக்பூர் அலுவலகத்திலோ அல்லது அது 'ஷாகா' பயிற்சி நடத்தும் மைதானங்களிலோ தேசியக்கொடியை பறக்க விட்டதேயில்லை. ஆனால் எப்பொழுதெல்லாம் இந்திய முஸ்லிம்களை சீண்டி மதக்கலவரம் உருவாக்க வேண்டும் என்று நிணைக்கிறதோ அப்பொழுது மட்டுமே சங்பரிவாரின் கண்களுக்கு மூவர்ண தேசியக்கொடி தென்படும்.

சில ஆண்டுகளுக்கு முன்பாக ஜோசியத்தை பள்ளிக்-கல்லூரி பாடமாக்கவேண்டும் என்று முன்மொழிந்த முரளிமனோகர் ஜோஷீ தலைமையில் 'ஶ்ரீநகர்' லால் சௌக்கிலும், உமாபாரதி தலைமையில் கர்நாடக ஈத்கா மைதானத்தில் தேசிய கொடியேற்றி கலவரம் விளைவிக்க முயன்றனர்.

ஹிந்துக்களுக்கு மதவெறி ஊட்ட காவிகொடியையும் - முஸ்லிம்களின் மீது தாக்குதல் நடத்த மூவர்ணக் கொடியையும் சந்தர்பத்திற்கு தகுந்தாற்பொல் பயன்படுத்தி வந்திருக்கிறது. பாப்ரி பள்ளிவாசலை இடிப்பதற்காக அதன் மண்டபங்களின் மீது ஏறிய ஹிந்து வன்முறைகும்பலின் கையில் 'காவி'கொடி இருந்ததை நாமெல்லாம் மறந்திருக்க முடியாது.

ஶ்ரீநகரில் - தேசியக்கொடி ஏற்றப்போகிற சாக்கிலே கலவரம் விளைவித்து மத நல்லிணக்கத்திற்கு வேட்டு வைக்க முயலும் காவி பச்சோந்திகள் - சட்டத்தை சந்திக்க திராணியில்லாது - தாங்கள் செய்த 'காலித்தனத்துக்கு' மூவர்ணம் பூசி தப்பிக்க முயற்சிக்கிறார்கள். அரசியல் ஆதாயம் தேடும் இவர்களின் ஈனச் செயலை இந்திய ஒருமைப்பாட்டில் அக்கறை கொண்டவர்கள் மக்களுக்கு தோலுரித்து காட்டவேண்டும்.

பெரியார் பார்வையில் இஸ்லாம் (அ) ஏகத்துவம்..

(’இஸ்லாம்’ பற்றி பகுத்தறிவு கொள்கை கொண்ட பதிவர்கள் சிலரின் மதிப்பீடுகளை-பின்னூட்டங்களை தமிழ்மணத்தில் படித்துவிட்டு -பகுத்தறிவு தந்தையின் மதிப்பீடு என்னவென்று தேடியபோது கிடைத்ததை மீள்பதிவு செய்திருக்கிறேன்).

சகோதரர்களே! 69 ஆதிதிராவிடர்கள் முகமதியர்களாகி விட்டதால், அவர்களுடைய பாவங்களெல்லாம் மன்னிக்கப்பட்டு விட்டதென்றோ, அவர்களுக்கு "மோட்ச லோகம்' கூப்பிடும் தூரத்திற்கு வந்துவிட்டதென்றோ, "கடவுளோடு கலந்து விட்டார்கள்' என்றோ கருதி நான் மகிழ்ச்சி அடையவில்லை. இவைகளை நான் ஏற்றுக் கொள்ளுவதும் இல்லை. மற்றவர்களை நம்பும்படிச் சொல்வதும் இல்லை. அன்றியும், ஒரு மனிதன் மதம் மாறுவதால் அவனுடைய செய்கைக்கும், எண்ணத்திற்கும் தகுந்த பலன் அடைவதில் வித்தியாசமுண்டு என்பதை நான் ஒப்புக் கொள்வதில்லை.
இந்துவாயிருந்து பசுவைக் கொன்றால் பாவம் என்றும், முமகமதியனாயிருந்து பசுவைக் கொன்று தின்றால் பாவமில்லை என்றும், மதத்தின் காரணமாக கருதுவது மூடநம்பிக்கையே ஒழிய, இரண்டுவித அபிப்பிராயத்திலும் அர்த்தமே இல்லை. உலகத்தில் உள்ள சகல மதங்களும் மூட நம்பிக்கையின் மீதே கட்டப்பட்டிருக்கின்றன. ஆகையால், பாவபுண்ணியத்தையும், மோட்ச நரகத்தையும் ஆதாரமாய் வைத்தும் நான் மகிழ்ச்சியடையவில்லை.

மற்றென்னவென்று கேட்பீர்களேயானால், இந்து மதம் என்பதிலிருந்து மதம்மாறினதாகச் சொல்லப்படும் 69 ஆதிதிராவிடர்களும், பிறவியின் காரணமாக அவர்களுக்குள்ள இழிவிலிருந்து விடுதலை அடைந்ததோடு, பாமரத் தன்மையும் காட்டுமிராண்டித்தனமுமான மிருகப்பிராயத்திலிருந்தும், அறியாமையிலிருந்தும்சிறிது விடுதலை அடைந்தவர்களானார்கள் என்பதற்காகவே மகிழ்ச்சியடைகின்றேன்.

அதாவது, மேற்கண்ட 69 பேர்களுக்கும் தீண்டாமை என்பது போய்விட்டது. இனி ஒருவன் அவர்களைப் பறையன், சக்கிலி, சண்டாளன் என்று இழிவாய்க் கூற முடியாது. அவர்களும் மற்றவர்களை "சாமி, சாமி, புத்தி' என்று கூப்பிட்டுக் கொண்டு தூர எட்டி நிற்க வேண்டியதில்லை. மற்ற மனிதர்களின் காலில் விழுந்து கும்பிட வேண்டியதில்லை. ஊரை விட்டு வெளியில் குடி இருக்க வேண்டியதில்லை. குளிக்கத் தண்ணீரில்லாமல், குடிக்கத் தண்ணீரில்லாமல் திண்டாட வேண்டியதில்லை.

வண்ணான், நாவிதன் இல்லாமல் அழுக்குத் துணியுடனும், கரடிபோல் மயிர் வளர்த்துக் கொண்டும், பார்ப்பவர்களுக்கு அசிங்கமாகத் தோன்றும்படி வாழவேண்டியதில்லை. இனி எந்த பொதுத் தெருவிலும் நடக்கலாம்; எந்த வேலைக்கும் போகலாம்; யாருடனும் போட்டி போடலாம்; அரசியலில் சமபங்கு பெறலாம்; மத சம்பந்தமாகவும் இனி அவர்கள் தங்கள் கோயிலுக்குள் போக தாராள உரிமை உண்டு; வேதம் படிக்க உரிமையுண்டு.

எனவே, இவர்கள் பொருளாதாரக் கஷ்டத்திலும், அறிவு வளர்ச்சித் தடையிலும், சமூக இழிவிலும், சுயமரியாதைக் குறைவிலும், அரசியல் பங்குக் குறைவிலுமிருந்து ஒருவாறு விடுதலை அடைந்து விட்டார்கள் என்பது போன்றவைகளை நினைக்கும்போது மகிழ்ச்சியடையாமலிருக்க முடியவில்லை. ஏனெனில், தீண்டாமை, நெருங்காமை, பார்க்காமை, பேசாமை முதலாகிய சகிக்க முடியாத கொடுமைகள் முதலாவதாக மதத்தின் பேரால், வேத சாஸ்திரங்களின் பேரால், கடவுள்களின் பேரால் உள்ளவைகள் எல்லாம் அடியோடு நீங்க வேண்டும் என்கின்ற தீவிர ஆசையே இம்மாதிரி நினைக்கச் செய்கின்றது.

ஆகையால், தீண்டாமை முதலிய கொடுமை ஒழிய வேண்டும் என்கின்ற கருத்துள்ளவர்களுக்கும், ஒற்றுமையை எதிர்பார்க்கும் கருத்துள்ளவர்களுக்கும், மக்களுக்கு சுயமரியாதை உணர்ச்சியை ஊட்ட வேண்டும் என்னும் கருத்துள்ளவர்களுக்கும் நமது நாட்டில் இப்போது உள்ள முக்கியவேலை, முதலில் தீண்டப்படாதவர்கள் முகமதியராவதை ஆட்சேபியாதிருப்பதேயாகும் என்பது, எனது தாழ்மையானதும், கண்ணியமானதுமான அபிப்பிராயம்.

நிற்க. சிலர் முகமதிய மதம் முரட்டு சுபாவத்தை உண்டாக்குகின்றது என்று எனக்கு எழுதி இருக்கிறார்கள். அது வாஸ்தவமானால், தீண்டப்படாதவர்களுக்கு அவர்களது தீண்டாமை ஒழிய முகமதிய மதத்தைச் சிபாரிசு செய்வதற்கு அதுவே ஒரு நல்ல காரணம் என்றே கருதுகிறேன். முகமதிய மதம் முரட்டு சுபாவத்தை உண்டாக்குவது உண்மையானால், அதில் சேர்ந்த இவர்கள் இனிமேலாவது இவ்வளவு தாழ்மையாக நடந்து கொள்ள மாட்டார்கள் அல்லவா? மற்றவர்களும் அவர்களது முரட்டு சுபாவத்தைக் கண்டு பயந்து மரியாதையாய் நடந்து கொள்ள இடமேற்படும் அல்லவா?

ஆகையால், இந்து சமூகத்தில் உண்மையான சமத்துவமும் ஒற்றுமையும் ஏற்படும்வரை தீண்டப்படாதவர்கள் கும்பல் கும்பலாய் முகமதியர் ஆவதைத் தவிர வேறு மார்க்கமில்லையாதலால், நாம் அதை ஆட்சேபிக்க முடியாதவர்களாய் இருக்கின்றோம். தவிரவும், மதத்தினிடத்திலோ இந்து சமூகத்தினிடத்திலோ கவலையுள்ளவர்களுக்கு இதனால் ஏதாவது சங்கடம் இருப்பதாயிருந்தால், அவர்கள் தாராளமாய் வெளிக்கிளம்பி வந்து தீண்டப்படாத மக்களுக்கு இருக்கும் கொடுமையையும் இழிவையும் நீக்க முன்வரட்டும். அவர்களோடும் எப்போதும் ஒத்துழைக்கத் தயாராயிருக்கிறேன்.

நன்றி: http://www.keetru.com/rebel/periyar/12.php

ஐந்து மணிக்குத் தீண்டத்தகாதவன் 5.30 மணிக்குத் தீண்டத்தகுந்தவன்!

நான் இந்து மதத்தைப் பற்றியோ, இஸ்லாம் மதத்தைப் பற்றியோ பேசுவது என்பதில் இரண்டு மதத்தினுடையவும் ஆதாரங்களை ஆராய்ச்சி செய்து பேசுவதாக யாரும் கருதிவிடாதீர்கள். அந்த வேலையை ஒரு பரீட்சை மாணவனுக்குக் கொடுத்து விடுங்கள். அதில் என்ன இருக்கின்றது என்பதில் எனக்குக் கவலை இல்லை. ஆனால், நான் பேசுவது என்பது, இரண்டு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பெரும்பான்மை மக்களிடையே இருந்து வரும் பிரத்தியட்சக் கொள்கைகள் சம்பந்தமான காரியங்களையும், அதனால் அவரவர்கள் பிரத்தியட்சத்தில் அடைந்துவரும் பலன்களையும் பற்றித்தான் பேசுகிறேன்.

அந்தந்த மதங்களில் மக்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்? அதனால் சமூகம் என்ன பயனடைந்திருக்கிறது? என்பன போன்றவைகள்தான் மதத்தின் மேன்மையை அளக்கும் கருவியாகும். அப்படிப் பார்ப்போமானால், அனேக விஷயங்களில் இந்து மதத்தைவிட இஸ்லாம் மதமே மேன்மையுடையது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

இஸ்லாம் மக்களிடத்தில் தங்களுக்குள் சமத்துவம், சகோதரத்துவம், ஒற்றுமை, அன்பு முதலிய குணங்கள் இருக்கின்றன. வீரம் இருக்கின்றது. வீரம் என்றால் லட்சியத்திற்கு உயிரைவிடத் துணிவது என்பதுதான். இஸ்லாம் மதத்தில் உயர்வு தாழ்வு இல்லை. அவர்களுக்குள் தீண்டாதவன் இல்லை. அவர்களது தெருவில் நடக்கக்கூடாதவன், குளத்தில் இறங்கக்கூடாதவன், கோவிலுக்குள் புகக்கூடாத மனிதன் இல்லை. இதை யோக்கியமான இந்துக்கள் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.

இந்துக் கொள்கையில் வேறு எங்கு ஒற்றுமையாய் இருந்தாலும் சமூக வாழ்விலும் கடவுள் முன்னிலை என்பதிலும், மனிதன் மிருகத்தைவிடக் கேவலமாய் நடத்தப்படுகின்றான். இதை நேரில் காண்கின்றோம். இதைத்தான் அன்பு மதம், சமத்துவ மதம் என்று இந்துக்கள் தைரியமாய்ச் சொல்லுகின்றார்கள்.

மதத் தத்துவ நூலை, வேதம் என்பதை இஸ்லாம் மதத்தில் உள்ள செருப்புத் தைக்கும் சக்கிலியும், மலம் அள்ளும் தோட்டியும் படித்தாக வேண்டும்; பார்த்தாக வேண்டும்; கேட்டாக வேண்டும். இந்துமத வேதம் என்பதை ஒரே ஒரு சிறு கூட்டம் தவிர பார்ப்பனன் தவிர மற்ற யாவரும் அவன் பிரபுவானாலும், ஏழையானாலும், யோக்கியனானாலும், அயோக்கியனானாலும் சரி, ஒருவனுமே படிக்கவும் பார்க்கவும் கேட்கவும் கூடாது.

இஸ்லாம் கொள்கை மக்களை ஒன்று சேர்க்கிறது. இந்தியாவில் கொஞ்ச காலத்திற்கு முன் ஒரு கோடியைவிடக் குறைந்த எண்ணிக்கையுள்ள முஸ்லிம்கள் இன்று 8 கோடி மக்களாய்ச் சேர்ந்திருக்கிறார்கள். இன்று யாவரையும், எப்படிப்பட்ட இழிவானவர் என்று இந்து மார்க்கத்தாரால் கருதப்பட்டவர்களையும் தனக்குள் சேர்த்துக் கொள்ளக் கையை நீட்டுகின்றது. இந்துக்களின் கொள்கையோ எப்படிப்பட்ட மேலானவன் என்று மதிக்கப்பட்டவனையும் உள்ளே விட மறுத்து, வாசற்படியில் காவல் காக்கின்றது; தன்னவனையும் வெளியில் பிடித்துத் தள்ளுகின்றது.

ஆதித் திராவிடர்களை நான், ‘இஸ்லாம் மதத்தில் சேருங்கள்' என்றுசொன்னதற்காக அனேகம் பேர் என்மீது கோபித்துக் கொண்டார்கள். அவர்களைப்பற்றி நான் கோபித்துக் கொள்ளவில்லை. அவர்களுக்குச் சொந்த அறிவும் இல்லை; சொல்வதைக் கிரகிக்கச் சக்தியும் இல்லை. சிலருக்குத் தங்கள் மேன்மை போய்விடுமே தங்களுக்கு அடிமைகள் இல்லாமல் போய்விடுமே என்கின்ற சுயநல எண்ணம். ஏனெனில், மோட்சம் அடைவதற்காக என்று நான் ஆதித் திராவிடர்களை இஸ்லாம் கொள்கைகளைத் தழுவுங்கள் என்று சொல்லவில்லை; அல்லது "ஆத்மார்த்தத்திற்கோ' "கடவுளை அடைவதற்கோ' நான் அப்படிச் சொல்லவில்லை. ஆதித் திராவிடர்களின் தீண்டாமையைப் போக்குவதற்குச் சட்டம் செய்வது, சத்தியாக்கிரகம் செய்வது போலவே இஸ்லாம் கொள்கையைத் தழுவுவது என்பதும் ஒரு வழி என்றே சொன்னேன்; இனியும் சொல்கின்றேன்.

சட்டம் செய்வது கஷ்டம்; செய்தாலும் நடைமுறையில் வருவது கஷ்டம். சத்தியாக்கிரகம் செய்வதும் கஷ்டம்; செய்தாலும் வெற்றி பெறுவது சந்தேகம். இவற்றால் துன்பமும் தோல்வியும் கிடைத்தாலும் கிடைக்கலாம். ஆனால், ஆதித் திராவிடர்களுக்கு இஸ்லாம் கொள்கையை ஏற்றுக் கொண்டேன் என்று சொல்வதில் என்ன கஷ்டம்? அதில் தோல்வியோ துன்பமோ ஏதாவது உண்டா? அல்லது, அன்னியருக்கு ஏதாவது கஷ்டம் உண்டா? அவன் ஆத்திகனாய் இருந்தால் என்ன? நாத்திகனாய் இருந்தால் என்ன? உண்மை இஸ்லாம் ஆனால் என்ன? பொய் இஸ்லாம் ஆனால் என்ன? உலகில் மதங்கள் ஒழிக்கப்படும்போது, இஸ்லாம் மதமும் ஒழியும்.

ஏன் கிறிஸ்து மதத்தைக் தழுவக் கூடாது? ஆரிய சமாஜத்தைத் தழுவக் கூடாது? கிறிஸ்து மதக் கொள்கைகள் புத்தகத்தில் எப்படி இருக்கின்றன என்பதைப் பற்றி நான் சொல்ல வரவில்லை. நடைமுறையில் பறை கிறிஸ்தவன், பார்ப்பாரக் கிறிஸ்தவன், வேளாளக் கிறிஸ்தவன், நாயுடு கிறிஸ்தவன், கைக்கோளக் கிறிஸ்தவன், நாடார் கிறிஸ்தவன் என்பதாகத் தமிழ்நாடு முழுவதும் உள்ளனர். இஸ்லாம் மார்க்கத்தில் இவ்வித வேறுபாடுகள் இருக்கின்றனவா? கிறிஸ்தவ சகோதரர்கள் கோபிக்கக் கூடாது; வேண்டுமானால், வெட்கப்படுங்கள் என்று வணக்கமாய்த் தெரிவித்துக் கொள்கிறேன். ஆரிய சமாஜம் என்பதும் ஒரு வேஷந்தான்.

இணையத்தில் 280க்கும் அதிகமான தளங்களில் இருந்து வீடியோக்களை டவுன்லோட் செய்ய


இணையத்தில் நாம் வீடியோக்களை கண்டிருப்போம். இதில் ஒரு சில வீடியோக்களை நாம் கணினியில் டவுன்லோட் செய்ய நினைத்தால் அந்த தளங்களில் டவுன்லோட் செய்யும் வசதியை அவர்கள் வைத்து இருக்க மாட்டார்கள். ஆகையால் இந்த வீடியோக்களைடவுன்லோட் செய்ய நாம் ஒருசில மென்பொருட்கள் அல்லது சில இணையதளங்களில் உதவியோடு டவுன்லோட் செய்வோம். இந்த வரிசையில் நாம் இன்று பார்க்கும் மென்பொருள் மிகவும் பயனுள்ளது.



மென்பொருளின் பயன்கள்:

o இந்த மென்பொருளின் மூலம் இணையத்தில் இருக்கும் சுமார் 280 தளங்களில் இருந்து நமக்கு தேவையான வீடியோவை டவுன்லோட் செய்து கொள்ளலாம். எந்த மென்பொருளிலும் இவ்வளவுதளங்களில் இருந்து டவுன்லோட் செய்ய முடியாது.

o ஒரே நேரத்தில் 1 முதல் 20 வீடியோக்கள் வரை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

o வீடியோக்களை தரவிறக்கும் போதே CONVERT செய்து கொள்ளும் வசதி.

o 3.19 அளவே உடைய மிகச்சிறிய இலவச மென்பொருள்.

பயன்படுத்தும் முறை:

o கீழே உள்ள டவுன்லோட் பட்டனை அழுத்தி மென்பொருளை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.

o இப்பொழுது இன்ஸ்டால் செய்த மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள். கீழே இருப்பதை போல விண்டோ வரும். அதில் மேலே உள்ள சிறிய கட்டத்தில் நீங்கள் டவுன்லோட் செய்ய நினைக்கும் வீடியோவின் URL கொடுத்து அந்த DOWNLOAD என்ற பட்டனை அழுத்துங்கள்.

o ஒரே நேரத்தில் டவுன்லோட் செய்யப்படும் எண்ணிக்கை இதில் 2 ஆக இருக்கும். இதனை மாற்றSETTING க்ளிக் செய்து அதில் வரும் விண்டோவில் உங்கள் எண்ணிக்கை தேர்வு செய்யுங்கள்.

o இதில் அதிக பட்சம் 20 வீடியோக்களை ஒரே நேரத்தில் டவுன்லோட் செய்யுமாறு தேர்வு செய்து கொள்ளலாம்.

o டவுன்லோட் செய்யும் போதே வீடியோவை நமக்கு தேவையான பார்மட்டில் மாற்றும் வசதி உள்ளதால் டவுன்லோட் செய்து CONVERTAR மென்பொருள் கொண்டு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.

o இதற்க்கு OUTPUT SETTINGS என்பதை க்ளிக் செய்து தேவையான பார்மட்டை செட் செய்து கொள்ளுங்கள்.

o இது போன்று வீடியோக்களை நாம் மிக சுலபமாக இணையத்தில் இருந்து தரவிறக்கி கொள்ளலாம். 280தளத்திற்கும் மேலே இந்த மென்பொருள் மூலம் வீடியோக்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய இந்த பட்டனை அழுத்துங்கள்