அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Monday, August 10, 2009

'ஸ்வைன் ப்ளு' -சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை,


தமிழகத்திலும் பன்றிக் காச்சல் பீதிஆரம்பமாகியுள்ளது. இந்தியாவில்பல்வேறு இடங்களிலும் வெகுவேகமாகப் பரவத்தொடங்கியிருப்பதாக தகவல்கள்தெரிவிக்கின்றன. பன்றிக்காச்சல்நோய் தீவிரத்திற்கு நேற்றுமுன்தினம் மட்டும் நான்கு பேர்பலியாகியுள்ளார்கள். மேலும் நேற்றுசென்னை மாணவன் மற்றும்புனேயைச் சேர்ந்த ஆயுர்வேதமருத்துவர் பலியாகியுள்ளதாகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நோய் பாதிப்பிற்க்குள்ளானவர்கள் சென்னையில் ஏற்கனவேகண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், இந்நோயால் யாரும் இறந்ததாகஅறிவிக்கப்டவில்லை. இந்நிலையில் நேற்று பலியான பள்ளி மாணவனின்மரணம், தமிழகத்தில் பன்றிக்காச்சல் பீதியை ஏற்படுத்தியுள்ளதாகத் தமிழகச்செய்திகள் தெரிவிக்கின்றன.
சென்னையில் பலியாகியுள்ள மாணவன், வேளச்சேரியைச் சேர்ந்தவன்என்றும், அவனுக்கு வயது நான்கு எனவும் அறியப்படுகிறது. சேத்துப்பட்டில்தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவன் இன்றுகாலை இந் நோய் பாதிப்பால் உயிரிழந்ததை டாக்டர்கள் உறுதிப்படுத்தினர்.பன்றிக்காச்சல் தீவிரம் காரணமாக சென்னையில் பல பள்ளிகளுக்குவிடுமுறை வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது. அதே சமயம்இயங்கிக் கொண்டிருக்கும் பள்ளி நிர்வாகங்கள், இருமல் சளி காச்சல் ஆகியநோய்குறிகள் காணப்படும் மாணவர்களைப் பள்ளிக்கு அனுப்பவேண்டாமெனவும், அத்தகைய மாணவர்களை உடனடியாக மருத்துவப்பரிசோதனைக்குட்படுத்துமாறும் பெற்றோர்களுக்குப் பரிந்துரைத்திருப்பதாகத்தெரிவிக்கப்படுகிறது.
பன்றிக் காய்ச்சலுக்கு சிறுவன் பலியாகியுள்ளதைத் தொடர்ந்து நாளைஇதுதொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதி உயர் மட்ட ஆலோசனைக்கூட்டம்ஒன்றைக் கூட்டவுள்ளதாகவும் இக் கூட்டத்தில் நோய் பரவலைத்தடுக்கவும், இதுதொடர்பான சிகிச்சை முறைகள் குறித்தும் விரிவாகஆலோசிக்கக்படும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments: