அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, August 12, 2009

போலி என்கவுன்டர் சொராபுதீன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு


புதுடெல்லி, ஆக. 12: குஜராத் முதல்வரை கொல்ல முயன்றதாக கூறி அப்பாவியான சொராபுதீன் ஷேக் என்ற இளைஞரை போலீசார் கடந்த 2005ம் ஆண்டு போலி என்கவுன்டர் நடத்தி கொன்றனர்.
இது தொடர்பாக குஜராத் போலீஸ் உயர் அதிகாரிகள் 7 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தருண் சட்டர்ஜி, அப்தாப் ஆலம் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சொராபுதீனின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இடைக்கால இழப்பீடு தர நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
source:Dinakaran

No comments: