அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Thursday, August 4, 2011

தமிழக சட்டசபை பட்ஜெட் தாக்கல் : 367 கோடி செலவில் ஏரி, அணை, கால்வாய்கள் சீரமைப்பு!

சென்னை : தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்கள் வருமாறு:

* காவிரி ஆற்றின் குறுக்கே முத்தரச நல்லூரில் தடுப்பணை கட்டப்படும். இதற்கான ஒதுக்கீடு ரூ.32 கோடி ஒதுக்கீடு.

* ரூ.130 கோடியில் நீதிமன்றங்களுக்கு சொந்த கட்டிடம்.

* நடப்பு நிதி ஆண்டில் 111 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி.

* தீயணப்புத்துறை புதிய கருவிகள் வாங்க நவீனப்படுத்த, புதிதாக 10 கட்டடங்கள் கட்ட திட்டம். இதற்கு ரூ.170 கோடி ஒதுக்கீடு.

* கூட்டுறவுத்துறை மூலம் கடனை திருப்பி செலுத்துவோருக்கு சலுகை.

* சிறைச்சாலை மேம்பாட்டுக்காக ரூ.117 கோடி.

* சென்னை பெருநகர காவல் ஆணையம் உருவாக்கம். சென்னை புறநகர் காவல் ஆணையம் இதனோடு இணைக்கப்படுகிறது.  சென்னை பெருநகர காவல் ஆணையம் 4 மண்டலங்களாகப் பிரிக்கப்படும்.

* நடப்பு ஆண்டில் கலப்பின கறவை மாடுகள் வழங்க ரூ.56 கோடி ஒதுக்கீடு .

* 5 ஆண்டுகளில் 60 ஆயிரம் கறவை மாடுகள் வழங்கப்படும்.

* ஏழை குடும்பங்களுக்காக 4 ஆடுகள் வீதம் வழங்க ரூ.135 கோடி ஒதுக்கீடு.

* ஆழ்கடல் மீன் பிடிப்பு ஊக்குவிக்கப்படும் .

* நாகை, பழையாறில் நவீன மீன் பிடிதுறைமுகம்.

* 367 கோடி செலவில் ஏரி, அணை, கால்வாய்கள் சீரமைக்கப்படும் 

* நெல்லை ஒரத்தநாடு பகுதிகளில் புதிதாக கால்நடை மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்படும்.

* தேசிய நெடுஞ்சாலைகளை பராமரிக்க ரூ.5000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* சூரிய சக்தி மூலம் தெருவிளக்கு அமைக்கப்பட்டு கிராமங்களில் ஒளியூட்ட ரூ. 248 கோடி ஓதுக்கப்பட்டுள்ளது.
* சேலம் மற்றும் நெல்லையில் சைபர் கிரைம் குற்றப்பிரிவு.
* சென்னை மாநகர குடிநீர் சேமிப்பு கொள்ளளவு 4.20 டி.எம்.சியாக உயர்த்தப்படும்.
* ஓசூரில் சர்வதேச தரத்துடன் கோழி வளர்ப்பு மேலாண்மை மையம்.
* விசைப்படகுகள் எண்ணிக்கை உயர்த்த திட்டம்; நடப்பு ஆண்டில் புதிதாக 500 விசைப் படகுகள் வழங்க மானிய விலையில் கடன் ஏற்பாடு.
* ரூ. 74 கோடியில் புதிய மீன் இறங்குதளங்கள்.
* 13 மீன் பிடி நகரங்களில் மீன் பதப்படுத்தும் மையம்.
* தனியார் இடங்களில் மரம் வளர்க்கும் திட்டம் அறிமுகம்.
* 43 கோடி செலவில் 3 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளன.
* சூரிய சக்தி தெருவிளக்கு திட்டத்துக்கு ரூ.248 கோடி ஒதுக்கீடு. ஆண்டுக்கு 20 ஆயிரம் கிராமங்கள் வீதம் அமல்.
* நுண்ணுயிர் பாசன திட்டம் அமைக்க விவசாயிகளுக்கு நூறுசதவீத முன்னுரிமை.
* உணவு தானிய சேமிப்புக் கிடங்குகளுக்கு ரூ.237 கோடியில் திட்டம்.
* மானிய விலையில் 5 ஆயிரம் புல்வெட்டிகள் விவசாயிகளுக்கு வழங்க ஏற்பாடு. 

No comments: