அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, August 6, 2011

மேலப்பாளையத்தில் சூடு பிடிக்கும் சுதந்திர தின அணிவகுப்பு விளம்பரங்கள்.



மேலப்பாளையத்தில் வரும் ஆகஸ்டு 15 அன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பின் சார்பாக சுதந்திர தின அணிவகுப்பு நடைபெற உள்ளது. இந்த அணிவகுப்பு ஜின்னா திடல் முதல் ஹாமீம் புரம் 7 வது தெரு வரை நடைபெற உள்ளது. இந்த அணிவகுப்பை தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெறும் என்றுபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது. 

பசிரப்பா தெருவின் முனையில் வைக்கப்பட்டுள்ள பேனர்
இந்த அணிவகுப்பிற்காக மேலப்பாளையம் முழுவதும் போஸ்டர்கள், பேனர்கள், ஜும்ஆ நோட்டிஸ், சுற்றரிக்கைகள் மற்றும் பல புதிய முறையில் விளம்பரங்கள் நடைபெற்று வருகின்றன. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் இந்த சுதந்திர அணிவகுப்பிற்கு அனைத்து ஜமாத்களும் ஆதரவு தெரிவித்துள்ளது.

மேலப்பாளையத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்

 இந்த அணிவகுப்பின் அறிவிப்பை தொடர்ந்து மேலப்பாளையம் மட்டுமில்லாமல் பாளை, பேட்டை, பத்தமடை, ஏர்வாடி, வள்ளியூர், மற்றும் பிற மாவட்டங்களிலும் மக்கள் மிக எதிர்பார்ப்புடன் உள்ளனர்.  

No comments: