அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, August 2, 2011

இளம்பெண்களைச் சீரழிப்பதே பணக்காரர்களின் பொழுதுபோக்காகி விட்டது- கேரள நீதிபதி!

"இளம்பெண்களுடன் பாலியல் உறவு வைத்து கொள்வது பணக்காரர்களின் பொழுதுபோக்காகி விட்டது" என இளம்பெண் பாலியல் வல்லுறவு வழக்கு விசாரணையின்போது கேரள நீதிபதி தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் பரவூரைச் சேர்ந்த 14 வயது மாணவியை 100-க்கும் மேற்பட்டோர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த வழக்கில் அந்த மாணவியின் தந்தை, காவல்துறை உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள், பிரபல பணக்காரர்கள் உள்பட 60 பேர் இதுவரை கைதாகி உள்ளனர்.

மாணவியைப் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதாகியுள்ள கேரள மாநில கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் தாமஸ் வர்கீஸ் உள்பட 8 பேர் ஜாமீன்கோரி விண்ணப்பித்து இருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி கே.டி. சங்கரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி கூறியதாவது:

"பணக்காரர்களுக்கு இளம்பெண்களுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்வது பொழுதுபோக்காகிவிட்டது. கன்னிப் பெண்களுக்கு மவுசு அதிகமாகிவிட்டது. ஒரு வேளை எய்ட்ஸ் வந்துவிடும் என்று இப்படி செய்கிறார்களோ?" என்றார். பின்னர் அவர் அந்த 8 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

No comments: