அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Thursday, August 4, 2011

ஜெயாவிடம் அடிவாங்க தயாரில்லை? அழகிரி!!

மதுரையில் மத்தியமைச்சர் மு.க.அழகிரி நேற்று பதிலளித்தார். தி.மு.க., வெற்றி பெற்றால், மாநில அரசியலுக்கு வருவது பற்றி நான் எந்த முடிவும் செய்யவில்லை. 2ஜி ஸ்பெக்ட்ரம் பற்றி எந்த கட்சியும் தற்போது பேசவில்லை. நாங்கள் தி.மு.க., அரசு செய்த சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்கிறோம். கருணாநிதி மற்றும் குடும்பத்தினரை திட்டி எதிர்கட்சியினர் ஓட்டு கேட்கின்றனர். அந்த கூட்டணியிலுள்ள நடிகரும் வேட்பாளரை அடித்தும், உளறியும் பேசி வருகிறார். இது மக்களுக்கும் தெரியும்.

தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை தி.மு.க.,வால் நிறைவேற்ற முடியாது என 2001 தேர்தலிலும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டினார். ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, இலவச "டிவி' விவசாய கடன் தள்ளுபடி போன்றவைகளை நிறைவேற்றியுள்ளோம். கருணாநிதி சொன்னதை செய்வார் என்ற நம்பிக்கை மக்களுக்கு உள்ளது. கோவையில் நடந்த ஜெயலலிதா கூட்டத்திற்கு செல்லாதது குறித்து விஜயகாந்திடம் தான் கேட்க வேண்டும். ஏற்கனவே அவர் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார் என தெரிவித்திருந்தேன். அவர் அந்த கூட்டத்திற்கு அழைக்கப்படவில்லையா? என தெரியவில்லை. அவரிடம் அந்த அம்மா (ஜெயலலிதா) அடிவாங்க தயாராக இல்லை, என்றார்.

No comments: