அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Thursday, August 4, 2011

செல்போனில் படம் எடுத்து மாணவியை ஆபாசமாக சித்தரித்து பரப்பிய 3 பேர் பிடிபட்டனர்

ஆலந்தூர் : பள்ளி மாணவியை செல்போனில் படம் எடுத்து, ஆபாசமாக மார்பிங் செய்து பரப்பிய பெயின்டர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தாம்பரம் அடுத்த சேலையூரை சேர்ந்தவர் குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், சேலையூர் போலீசில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:

எனது மகள் சேலையூரில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறாள். அவளை சேலையூரை சேர்ந்த பெயின்டர் சந்திரகுமார் (19), அம்சலிங்கம் (39), ஆலப்பாக்கம் ராஜேஷ்குமார் (24) ஆகியோர் செல்போனில் படம் பிடித்துள்ளனர், அதை ஆபாசமாக மார்பிங் செய்து நண்பர்களுக்கு அனுப்பி யுள்ளனர். இதுபற்றி சந்திரகுமாரிடம் தட்டிக்கேட்டேன். அப்போது, “‘உன்னால் எங்களை எதுவும் செய்ய முடியாது. 

ஊரில் உள்ள பல பெண்கள் படத்தை இதுபோன்று மார்பிங் செய்து வைத்துள்ளோம். போலீசில் புகார் செய்தால் மேலும் பலருக்கு அனுப்பி உன்னையும், உனது மகளையும் அவமானப்படுத்துவோம்‘ என்று மிரட்டுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகாரில் குமார் கூறியிருந்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து, சந்திரகுமார், அம்சலிங்கம், ராஜேஷ்குமார் ஆகியோரை கைது செய்தார். அம்சலிங்கம் பழ வியாபாரமும், ராஜேஷ்குமார் செல்போன் கடையும் நடத்தி வந்துள்ளனர்.  

சந்திரகுமார் கூறுகையில், ‘‘பள்ளிக்கு நடந்து சென்ற குமாரின் மகளை செல்போனில் படம் பிடித்து ராஜேஷ்குமாரிடம் கொடுத்தேன். அவர் கம்ப்யூட்டரில் ஆபாசமாக மார்பிங் செய்து செல்போனில் பதிவு செய்து தந்தார். அதை நண்பர்களுக்கு அனுப்பினேன்‘ என தெரிவித்துள்ளார். 3 பேரையும் தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து 3 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

No comments: