அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Thursday, August 4, 2011

பட்ஜெட்டின் பக்கங்கள் அதிகம்; திட்டங்கள் இல்லை: ராமதாஸ்!!!

தமிழக நிதிநிலை அறிக்கை அதிக பக்கங்களைக் கொண்டதாக உள்ளது. ஆனால் சொல்லிக்கொள்ளும்படியாக திட்டங்கள் எதுவும் இல்லை என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார். தமிழக பட்ஜெட் குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:

தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை அதிக பக்கங்களைக் கொண்டதாக உள்ளது. ஆனால் சொல்லிக்கொள்ளும்படியாக திட்டங்கள் எதுவும் இல்லை.

மாணவர்களுக்கு பாடம் கற்றுத்தர ஆசிரியர்களை அமர்த்துவது குறித்தோ அல்லது பள்ளிகளை தரம் உயர்த்துவது குறித்தோ நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை.

ரூ 12 ஆயிரம் மகப்பேறு நிதி உதவித் திட்டம், விவசாயிகளுக்கு ரூ 3 ஆயிரம் கோடி வட்டியில்லாக் கடன், நடமாடும் மருத்துவமனை ஆகிய திட்டங்கள் வரவேற்கப்பட வேண்டியவை.

சென்னைக்கு சற்றும் ஒத்துவராத மோனோ ரயில் திட்டத்தை செயல்படுத்தியே தீருவோம் என அரசு பிடிவாதம் பிடிப்பது சரியல்ல.

கடந்த மார்ச் நிலவரப்படி தமிழகத்தின் கடன்சுமை 1,01,349 கோடி ரூபாயாக இருந்தது. இது நடப்பு நிதியாண்டின் இறுதியில் 1,18,801 கோடி ரூபாயாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஓராண்டில் 17,452 கோடி ரூபாய் கடன் உயர்ந்தால் தமிழகம் தாங்காது. தமிழகத்தின் மொத்த வருவாயான ரூ 72,413 கோடியில் 10.31 விழுக்காடு அதாவது சுமார் 8 ஆயிரம் கோடி ரூபாய் வட்டிக்கே செலவிடப்படும் நிலை மாற வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments: