அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, July 16, 2011

ஆ.ராசாவிடம் சிபிஐ மீண்டும் விசாரணை!

2ஜி முறைகேடுகள் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தொலைத்தொடர்பு முன்னாள் அமைச்சர் ஆ.ராசா மற்றும் இரண்டு நபர்களிடம் மீண்டும் விசாரணை செய்ய டில்லி நீதிமன்றம் சிபிஐக்கு அனுமதி வழங்கியுள்ளது.

ஆ. ராசா, தொலைத் தொடர்பு முன்னாள் செயலாளர் சித்தர்த பெருவா மற்றும் தொலைத் தொடர்பு நிறுவனம் ஒன்றின் அதிகாரி கெளதம் தோஷி ஆகியோரிடம் சிபிஐ மீண்டும் விசாரணை செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி அனுமதி அளித்துள்ளார்.

குற்றம்சாட்டப்பட்டுள்ளோரிடம் திங்கள் கிழமையன்று விசாரணை செய்ய சிபிஐக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என்று நீதிபதி தமது தீர்ப்பில் கூறியுள்ளார்.

சிபிஐ மீண்டும் எதுகுறித்து விசாரணை நடத்தப்படுகிறது என்பதை எங்களுக்கு அறியத் தர வேண்டும் என்ற தோஷியின் வழக்கறிஞரின் வேண்டுகோளை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

No comments: