அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, July 16, 2011

சிலி அரசாங்கம் மீது சுரங்க தொழிலாளர்கள் வழக்கு!

சிலி: வடக்கு சிலியில் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 31 சுரங்க தொழிலாளர்கள் 69 நாட்களாக நிலத்தடியில் சிக்கி  போராடிவருகின்றனர். இதற்கு அரசின் அலட்சிய போக்குதான் காரணம் என அரசாங்கத்தின் மீது  தொழிலாளர்கள்  வழக்கு தொடுத்து வருகின்றனர். இது பற்றி சுரங்க தொழிலாளி கூறுகையில் என்னுடன் 31 தொழிலாளர்களும்  கடுமையாக பாதிக்கபட்டுள்ளனர் மேலும் அவர்களது குடும்பங்களும் சோகத்தால் வாடிவருவதாகவும் தெரிவித்தார். 33  சுரங்க தொழிலாளர்கள் வடக்கு சிலியில் உள்ள தாமிர சுரங்கத்தில் 2010ம் ஆண்டு அக்டோபர்13 லிருந்து சிக்கி  கொண்டிருந்தனர். 69 நாட்களுக்கு  பிறகு மேற்கொண்ட மீட்பு பணிக்கு பின் 700 மீட்டர் பள்ளத்திலிருந்து பாதுகாப்பாக  மீட்கபட்டனர். சுரங்க தொழிலாளர்கள் ஒவ்வொவருக்கும் 540000 அமெரிக்க டாலர்களை நஷ்ட ஈடாக தரவேண்டும்  எனவும் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

No comments: