டிரான்ஸ்போர்ட்உரிமையாளர் பஜ்ரங்சிங் என்பவர் அளித்துள்ள புகார் மனுவில் "எங்களின் ஆயில் டேங்கர் லாரி ஒன்று கடந்த ஜூன்மாதம் ஒரு ஹர்பல் கம்பெனிக்குக் கடுகு எண்ணெய் கொண்டு (அரியானாவில் இருந்து உத்தரகண்ட் மாநிலம் ஜபல்பூருக்கு) செல்வதற்காக வாடகை பேசி எடுத்து செல்லப்பட்டது.
லாரியை வாடகைக்கு எடுத்தவர்கள் தங்களை ராம்தேவின் ஆட்கள் என அறிமுகப்படுத்திக் கொண்டனர். ஆனால் அந்தலாரி இன்னும் திரும்பவில்லை. இதனை ஒட்டி சென்ற ஓட்டுனர்ர் ஹனுமன் என்பவரும் இன்னும் குறித்த காலக்கெடுவுக்குள் ஊர் திரும்பவில்லை.போனில் தொடர்பு கொண்டால் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் கிடைக்கிறது..
எனவே ராம்தேவ் மற்றும் அவரது ஆதரவாளர்கள்மீது எனக்கு சந்தேகம் உள்ளது. உரிய நடவடிக்கை எடுத்து ஓட்டுனரையும்,வாகனத்தையும் மீட்டுத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று சிங் கூறியுள்ளார்.
இது தொடர்பாக காவல்துறையினர் எப்.ஐ.ஆர்., பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு விசாரணைக்குப் பின்னர் உண்மைநிலை தெரிய வரும் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெர்வித்தார்.
No comments:
Post a Comment