அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, July 16, 2011

மண்ணில் புதைந்த ஆலயம்!!

சாத்தான்குளம் அருகே உள்ளது மணல் மாதா ஆலயம். 200 வருடங்களுக்கு முன்னால் மணலில் புதைந்து கிடந்த இந்த ஆலயத்தின் வரலாறு மிகவும் சுவ£ரஸ்யமானது. மான வீரவளநாடு என்று அழைக்கப்பட்ட இந்தப் பகுதியை கி.பி. முதலாம் நூற்றாண்டில் கந்தப்பராஜா என்னும் பாண்டிய மன்னன் ஆண்டு வந்தான். அவன் குடும்பத்தில் உள்ளவர்களை பேய் பிடித்து ஆட்டியது. இதை ஏசுவின் சீடர் தோமையார் வந்து குணப்படுத்தினார். அதன் பின் அவரது ஆலோசனைப்படி இந்த இடத்தில் கந்தப்பராஜா கிறிஸ்தவ மதத்தை தழுவினார். தொடர்ந்து ஆலயம் எழுப்பப்பட்டது.

இந்த ஆலயத்துக்கு 1548ம் ஆண்டு வந்த சவேரியார், இறந்த சிறுவனை உயிர்ப்பித்தார். அதன் பின் வீண்பழி சுமத்தப்பட்டு அரசால் தண்டனை விதிக்கப்பட்ட சேசு மரியாள் என்னும் பெண் இட்ட சாபத்தால் இந்த ஊர் அழிந்தது. மணல் மூடி ஆலயமும் அழிந்து போனது. பின்னர் 1799ம் ஆண்டு இந்தப் பகுதியில் பால் கொண்டு சென்ற சிறுவனின் காலில் சிலுவை தட்டுப் பட, மண்ணில் புதைந்த ஆலயம் வெளியில் வந்தது. படத்தில் நீங்கள் பார்ப்பது 200 ஆண்டுகளுக்கு முன் வெளிப்பட்ட சிலுவை மற்றும் இப்போதுள்ள மணல் மாதா ஆலயம்.

No comments: