அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, February 8, 2011

2ஜி அலைக்கற்றை ஊழல் - ராசாவின் சிபிஐ காவல் நீடிக்கப்படுமா ?

சென்ற வாரம் கைது செய்யப்பட்டு சிபிஐ காவலில் இருந்து வரும் முன்னாள் அமைச்சர் ராசாவை மேலும் சில தினங்களுக்கு விசாரிக்க சிபிஐ முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
ராசாவின் 5நாள் சிபிஐ காவல் இன்றோடு முடிகிறது. சிபிஐ காவலில் வைத்து விசாரிப்பதன் மூலம் விசாரணையின் முன்னேற்றம் இருப்பதாக சிபிஐ கருதுகிறது. இன்னும் சில நாட்களில் உச்ச நீதிமன்றத்திற்கு சிபிஐ வழக்கு குறித்து இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யவேண்டியிருப்பதால் ராசா மற்றும் அவருடன் கைது செய்யப்பட்ட சொந்தாலி, சித்தார்த் பெஹூரா ஆகியோரின் காவல் நீட்டிப்பை நீடிக்க கோரி சிபிஐ இன்று மனு செய்யலாம் என எதிர்பார்க்கபடுகிறது

No comments: