அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, October 23, 2010

மதி மங்கும் மது.

Drinkers.jpg

அஸ்ஸலாமு அலைக்கும்,

மது அருந்தி

மதிக் கொல்லும்;

கதியே என இதில் இருந்து

விதி மீதுப் பழிப்போடும்!

தள்ளாடும் உன்

கால் நடைக்கு

கால்நடைகளும் இளிக்கும்;

கொண்டாட்டம் என நீ

நினைத்ததெல்லாம்

கொல்லிக் கட்டையாய்

கருகும்!

சுய அறிவை இழந்துவிட்டு

தெருமுனையில் கிடப்பாய்;

கடைசித் தடவை என்று

இந்தமுறையும் குடிப்பாய்!

செத்துப் போகக் குடித்துவிட்டு

சத்து என சிரிப்பாய்;

பழுதுப்பட்ட குடலுக்கு

விழுந்து அழுது கொதிப்பாய்!

அதட்ட வேண்டிய

அரசாங்கமோ

ஊற்றிக்கொடுக்கச் சொல்லும்;

தரமான சரக்கிற்கு

தமிழகமே சப்ளைப் பண்ணும்!

குடித்து அழுகும் குடலும்

குடித்ததினால் அழுவும்

குடும்பம்!

மது ஒழிக்க; வழிவகுக்க;

ஒளிக்கொடுக்க; வலிவிலக்க;

சட்டம் ஒன்று வேண்டும்

அதற்கு கையில்

சவுக்கைக் கொடுக்க வேண்டும்!

மார்க்கம் சொன்னத் தொணியிலே

மதுவைத் தடுக்க வேண்டும்;

முரண்டுப் பிடித்தால்

முட்டி இரண்டையும்

தரையை முட்ட செய்யவேண்டும்!

கடுமையானத் தண்டனைத்தான்

கடமை இழக்கச் செய்யாது;

சொல்லி வளர்ந்த இஸ்லாம்

ஒரு நாளும் பொய்யாகாது!

No comments: