
இலங்கையில் கொல்லப்படும் அப்பாவி மக்களை காக்க கோரி USF சார்பாக திருச்சியில் 06.03.09 அன்று கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. வெஸ்ட்ரி ஸ்கூல் அருகே தொடங்கி கலெக்டர் அலுவலகம் வரை பேரணி நடைபெற்றது.. ஏராளமான மாணவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.. பேரணியை USF திருச்சி மாவட்ட தலைவர் திரு.ஆ.முஹம்மது இப்ராஹிம் அவர்கள் ஒருங்கிணைத்தார்.. USF மாநில செயலாளர் S.முஹம்மது ஷாஃபி அவர்கள் கண்டன உரையாற்றினார்.. Z.முஹம்மது தம்பி நன்றியுரையாற்றினார்..

பேரணியின் முடிவில் USF மாநிலச் செயளாலர் S.முஹம்மது ஷாஃபி அவர்கள் D.R.O திரு.தட்சினாமூர்த்தியிடம் மனு அளித்தார்...

செய்தி : USF தலைமையகம்
No comments:
Post a Comment