அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Monday, April 6, 2009

முஸ்லிம் கட்சிகள் - தன் மதிப்பீடு

1. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - முஸ்லிம் லீக், வேலூர் மக்களவைத் தொகுதியில் தனிச் சின்னத்தில் போட்டியிடுவதை நாம் வரவேற்க வேண்டும். முஸ்லிம் லீக்கில் அடித்தட்டு முஸ்லிம்களின் பங்கேற்பு குறைவு என்பதும், அக்கட்சியின் முக்கிய முடிவுகளை தென் மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் தொழிலதிபர்களே எடுக்கிறார்கள் என்பதும் அக்கட்சி திருத்திக் கொள்ள வேண்டிய பண்புகள். மனித நேய மக்கள் கட்சியும், இந்திய தேசிய மக்கள் கட்சியும் வேலூரில் தங்கள் வேட்பாளரை நிறுத்தக் கூடாது. முஸ்லிம் லீக்கிற்கு தங்கள் ஆதரவைத் தெரிவிக்க வேண்டும்.

2. இந்திய தேசிய மக்கள் கட்சி - இக்கட்சியைத் தொடங்கியவர்கள் த.மு.மு.கவினர் அரசியல் கட்சியைத் தொடங்கினால், அக்கட்சியை தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்றும் அதனாலேயே தாங்கள் கட்சி தொடங்குவதாகவும் சொன்னார்கள். ஆனால், த.மு.மு.க எதிர்ப்பையே தங்கள் கட்சியின் அடிப்படைக் கொள்கையாக வைத்துக் கொண்டுள்ளார்கள். திருக்குர்ஆர் விரிவுரையாளர் காஞ்சி அப்துர் ரவூஃப் பாகவி போன்ற மார்க்க அறிஞர்கள் இக்கட்சியில் இருந்தும் இந்த நிலையா என்று நம்பவே முடியவில்லை. இக்கட்சியின் தலைவர் குத்புதீன் ஐபக் பழிவாங்கும் உணர்ச்சியில் கலைஞரையும், ஜெயலலிதாவையும் விஞ்சி விடுவார் போலிருக்கிறது. தமிழக அரசியலைத் தொடர்ந்து கவனித்து வரும் பல முஸ்லிம்களுக்கே இக்கட்சியப் பற்றி எதுவும் தெரியவில்லை.

3. மனித நேய மக்கள் கட்சி - இக்கட்சியைத் தொடங்கியவர்கள் இக்கட்சிக்கு தலைவர் இல்லை. இறைவன் தான் தலைவன் என்று சொன்னார்கள். நம் இறுதித் தூதர் தான் தலைவர் என்று சொல்லியிருக்க வேண்டும். கட்சி தொடங்கியவுடனே பொறுப்பேற்பவர் பொதுச் செயலாளராய் இருக்க முடியாது. அமைப்புச் செயலாளராக அல்லது அமைப்புக் குழுச் செயலாளராகத் தான் இருக்க முடியும். தமிழகம் முழுவதும் கட்சிக்கு கிளைகள் அமைத்து, அந்தக் கிளைகளுக்கு தேர்தலும், பின்னர் மாவட்டக் கிளைகளுக்குத் தேர்தலும் நடத்த வேண்டும். இவ்வாறு தேர்ந்தெடுக்கப் படுபவர்களால் தேர்ந்தெடுக்கப் படுபவரே பொதுச் செயலாளராக இருக்க முடியும். இவர்கள் தி.மு.க கூட்டணியில் மூன்று இடங்களும், ஒரு ��

No comments: