அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Thursday, July 30, 2009

கர்ணா சிங் கைது.

இஸ்லாம் மதத்தைக் குறித்து தவறாக எழுதப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து அந்தப் புத்தகத்தின் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரச்சனைக்குரிய அந்தப் புத்தகத்தின் பிரதிகளைக் கைப்பற்றும் முயற்சியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.


உதய்மான் பாரதீய சமாஜ்கி ஷிக்ஷாக் என்ற பெயருடைய இந்தப் புத்தகத்தை எழுதிய கர்ணா சிங் உத்திரப்பிரதேச மாநிலம் கேரி காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப் பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

இந்தப் புத்தகத்தில் முகமது நபியின் படம் இடம் பெற்றுள்ளதாகவும், இது இஸ்லாமிய மதத்திற்கு விரோதமானது என்றும் கூறப்படுகிறது. இந்தப் புத்தகத்தை எந்தப் பல்கலைக் கழகமும் பாடநூலாகப் பரிந்துரைக்கவில்லை என்றும் செய்திகள் கூறுகின்றன.

இந்தப் புத்தகத்தின் வெளியீட்டளாரும் உத்திரப் பிரதேச மாநிலம் கேரியைச் சார்ந்தவர் என்றும் அவர் மீதும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கேரி மாவட்ட காவல் துறை துணைக் கன்காணிப்பாளர் பிரிஜ்லால் கூறியுள்ளார்

No comments: