அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Sunday, August 14, 2011

கருப்பான அழுக்கு தோல் தமிழர்கள் : அமெரிக்க தூதரக அதிகாரி

சென்னை : சென்னையில் நடைபெற்ற கல்லூரி விழாவில் பேசிய அமெரிக்க தூதரக அதிகாரி மவுரீன் சவோ கருப்பான மற்றும் அழுக்கு தோல் படிந்த தமிழர்கள் என குறிப்பிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நடந்த சம்பவத்துக்கு அமெரிக்க தூதரகம் வருத்தம் தெரிவித்துள்ளது.
சென்னையில் உள்ள புகழ் பெற்ற எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் பேசிய அமெரிக்க தூதரக அதிகாரி மவுரீன் சவோ 20 வருடங்களுக்கு முன் தான் இந்தியாவில் படித்த போது நடைபெற்ற ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.
"20 வருடங்களுக்கு முன் என் பல்கலைகழகத்தில் வெளிநாட்டில் ஒரு செமஸ்டர் படிக்க வேண்டிய வாய்ப்பு வந்த போது இந்தியாவின் கலாசாரத்தால் ஈர்க்கப்பட்டு இந்தியாவுக்கு படிக்க வந்தேன். டெல்லியிலிருந்து ஒரிஸாவுக்கு 24 மணி நேரத்தில் வரும் இரயிலில் நான் வந்தேன். ஆனால் கிட்டத்தட்ட 72 மணி நேரம் கழித்து ஒரிஸ்ஸா வந்ததால் என் தோல் முழுக்க தமிழர்களை போன்று கருப்பாகவும் அழுக்காகவும் ஆகி விட்டது" என்றார்.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அமெரிக்க தூதரகம் சவோவின் கருத்துகள் பொருத்தமற்றவை என்றும் அவரின் கருத்துகள் யாரையேனும் புண்படுத்தியிருந்தால் வருத்தம் கோருவதாகவும் 

No comments: