அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Sunday, August 14, 2011

நெல்லையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் சுதந்திர தின அணிவகுப்பிற்கு தடை

நெல்லையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் சுதந்திர தின அணிவகுப்பிற்கு தடை.நாளை நடைபெறவிருக்கும் சுதந்திர தின அணிவகுப்பிற்கு தடை விதிப்பதாக நெல்லை மாநகர காவல் துறை ஆணையர் வரதராஜலு ஐ.பி.எஸ்.கூறியுள்ள மறுப்பு கடிதத்தில் கூறியுள்ளதாவது .பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பிற்கு கேரளா,மற்றும் கர்நாடகவில் அணிவகுப்பிற்கு தடை அறிவிக்க பட்டு இருபதால் தமிழ்நாட்டிலும் உங்களுக்கு சுதந்திர தின அணிவகுப்பிற்கு தடை விதிக்க படுகிறது என கூறியுள்ளார்.எனவே மேல பாளையத்தில் அனைத்து பொது மக்களும் பெரும் கொந்தலிபில் உள்ளனர்.மேலும் பெருமளவில் போலிசார் குவிக்க பட்டு இருப்பதால் நெல்லையில் பெரும் பதட்டம் நிலவுகிறது.சுதந்திர தின அணிவகுப்பை தடுக்க வேண்டும் என்ற நோக்கோடு நெல்லை மட்ட காவல் துறை செயல்படுகிறது என அனைத்து இயக்கங்களும் கூறுகின்றனர்.மற்றும் 2008 -ல் மதுரையில் அணிவகுப்பு நடத்த அனுமதி வேண்டிய போது கேரளத்தில் சாலைகளில் அணிவகுப்பு நடைபெற்றதை காவல் துறையினரிடம் கூறிய போது கேரளா நிலைமை வேறு தமிழக நிலைமை வேறு என்று கூறிய காவல் துறை இப்போது மட்டும் அங்கு அனுமதி கொடுக்கவில்லை ஆதலால் இங்கும் அனுமதி மறுக்க படுகிறது என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது.மற்றும் இவர்கள் நீதி மன்றத்தை அணுகி அனுமதி பெற்று விடுவார்களோ என்ற ஐயத்திலும் தான் வெள்ளிகிழமை மாலை மறுப்பு கடிதத்தை வழங்கியதாகவும் சனி மற்றும் ஞாயிறு அன்று நீதி மன்றம் விடுமுறை என்பதை கருதில் கொண்டே கடைசி நேரதில் அனுமதி மறுத்தது என  பாப்புலர் ஃப்ரண்ட் வட்டாரங்கள் தெரிவிகின்றன ......

No comments: