அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, December 15, 2009

துபாய்க்கு அபுதாபி 10 பில்லியன் டாலர் கடனுதவி!

துபாய் நிதி நெருக்கடியைத் தொடர்ந்து துபாய் அரசாங்கம் இன்று கொடுக்க வேண்டிய 4.1 பில்லியன் டாலர் மதிப்பிலான இஸ்லாமிய சுகூக்குக்கான நிதியை கொடுக்குமா என்பது சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்பாக இருந்தது. இச்சூழலில் 10 பில்லியன் டாலர் நிதியை துபாய் அபுதாபியிடமிருந்து கடனாகப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும் துபாய் அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில் மீதமுள்ள 5.9 பில்லியன் டாலர் 2010 ஏப்ரல் வரையான துபாய் வேர்ல்டின் தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் என்று கூறிய ஷேக் அஹமத் பின் சயீத் அல் மக்தூம், துபாய் எப்போதும் தன் வாக்குகளையும் சர்வதேச சட்டங்களையும் மதித்து நடக்கும் நாடு என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறோம் என்றார்.

துபாய் முன்பிருந்ததைப் போன்று எப்போதும் பிரகாசமான பொருளாதார மையமாக விளங்கும். எங்கள் சிறப்பான காலம் இனி மேல் தான் வரவிருக்கின்றது என்றும் அஹ்மத் கூறினார். இவ்வறிப்பின் காரணத்தால் துபாய் மட்டுமல்லாது வளைகுடா சந்தைகளும் இன்று ஏறுமுகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சோபியான் சம்பவம்: கற்பழிப்பு, கொலை இல்லை - மத்திய புலனாய்வுத் துறையின் அறிக்கை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் பகுதியில் பெண்கள் கற்பழித்துக் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட வழக்கை விசாரித்து வந்த சிபிஐ இன்று அம்மாநில உயர்நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்தது.
அதில் கற்பழித்துக் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட நிலோபர் ஜான் (22), அவரது மைத்துனி ஆசியா ஜான் (17) ஆகியோர் மே 30ம் தேதி பிணமாகக் கண்டெடுக்கப்பட்டனர்.இவர்கள் இருவர் மரணம் குறித்து விசாரித்ததில் இருவரும் கற்பழிக்கப்படவோ அல்லது கொலை செய்யப்படவோ இல்லை என்று தெரிய வந்துள்ளது. மாறாக இருவரும் நீரில் மூழ்கி இறந்துள்ளது தெரிய வந்தது. இவர்களை பாதுகாப்புப் படையினர் கற்பழித்துக் கொலை செய்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்தக் கொலைகள் தொடர்பாக 6 டாக்டர்கள், ஐந்து வக்கீல்கள், 2 பொதுமக்கள் ஆகியோர் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தது. இவர்கள் அனைவரும் சாட்சியங்களை கலைத்ததாகவும், சாட்சிகளை மிரட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
சோபியான் கொலைகள் தொடர்பாக விசாரணை முறைப்படி நடக்கவில்லை என்றும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இந்த நிலையில், சிபிஐ இப்படி ஒரு அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.
இதுகுறித்து நிலோபரின் கணவர் ஷகீல் அகங்கர் கூறுகையில், எனது நீதிக்கான போராட்டம் ஓயாது. நீதி கிடைக்கும் வரை போராடுவேன். சிபிஐயின் கண்டுபிடிப்புகளை நாங்கள் நம்பவில்லை. அனைவரும் வேண்டும் என்றே வழக்கை திசை திருப்புகின்றனர். நான் சிபிஐயை நம்ப மாட்டேன். ஷகீலின் மனைவி மற்றும் சகோதரி மட்டும் கற்பழிக்கப்படவில்லை. மாறாக ஒட்டுமொத்த காஷ்மீர் பெண்களும் கற்பழித்துக் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை மத்திய அரசுக்குப் புரிய வைப்பேன். எனது போராட்டம் தொடரும். என்றார்.
இதற்கிடையே, சிபிஐ அறிக்கை குறித்து மக்கள் ஆத்திரப்பட்டு வன்முறையில் இறங்க வேண்டாம் என மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் முசாபர் பெய்க் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் சிபிஐ விசாரணை அறிக்கைக்கும் அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இரு பெண்களின் கொலைகள் தொடர்பாக சோபியானில் பெரும் வன்முறை வெடித்தது. 47 பந்த் போராட்டங்கள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கை செப்டம்பர் மாதம் முதல் விசாரித்து வந்தது சிபிஐ.
source:inneram

கால் 'தடுக்கி' விழுந்தவரும் காணாமல் போன பாபரி மஸ்ஜித் கோப்புகளும்!

பாபரி மஸ்ஜித்நீண்ட 17 ஆண்டுகளுக்குப் பின்னர், பாபரி மஸ்ஜித் வழக்கை விசாரித்த ஓய்வு பெற்ற நீதிபதி லிபரான் தலைமையிலான விசாரணைக் கமிஷன், கடந்த 30 ஜூன் 2009இல் தன் இறுதி அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. இதற்கு முன்னரும் பல்வேறு கலவரங்கள் தொடர்பாக விசாரணைக் கமிஷன்கள் அமைக்கப்பட்டு அறிக்கைகள் சமர்ப்பிக்கப் பட்டன. அவற்றில் எல்லாம் சிறுபான்மை சமுதாயங்களுக்கு எதிராக நடந்த கலவரங்கள் தொடர்பான விசாரணைக் கமிஷன்களின் அறிக்கைகள் அனைத்தும், இந்த மதசார்பற்ற நாட்டில் பரணில் தூங்குகின்றன. சிறுபான்மை சமுதாயங்களுக்கு நீதி என்பது எட்டாக் கனிதான் போலும்!

குறிப்பாக, பாபரி மஸ்ஜித் தகர்ப்புக்குப்பின் மும்பையில் நிகழ்ந்த கலவரம் தொடர்பான ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கை! "மும்பைக் கலவரத்தில் பால் தாக்கரே முக்கிய குற்றவாளிதான்" என்று அந்த அறிக்கை தெளிவாகக் கூறுகிறது. ஆனால், இந்த நிமிடம்வரை பால் தாக்கரேக்கு எதிராக மத்திய-மாநில அரசுகளும் நீதிமன்றங்களும் ஒரு துரும்பைக்கூடக் கிள்ளிப் போடத் துணியவில்லை. எனவேதான் இந்திய நாட்டின் இறையாண்மைக்கே சவால் விடும் அளவிலான பால் தாக்கரேயின் சிறுபான்மையினருக்கு எதிரான அச்சுறுத்தல்கள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கை பால்தாக்கரேயை மும்பைக் கலவரக் குற்றவாளி என மிகத் தெளிவாகக் கூறியதைப் போலவே, "அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, வாஜ்பாய், ஆகிய மூவரும் பாஜகவின் முக்கியத் தலைவர்களும் பாபரி மஸ்ஜித் தகர்ப்பில் குற்றவாளிகள்தாம்" என லிபரான் கமிஷன் அறிக்கை மிகத் தெளிவாகக் கூறுகிறது. முறித்தெறியப் பட்ட தடை வேலிகள் முதற்கொண்டு முதுகுசவாரிக் கேவலம்வரை எல்லாத் தொலைக்காட்சிகளும் உலகம் முழுக்க ஒளிபரப்பிய இந்திய தேசிய அவமான ரகசியத்தைச் சொல்வதற்குத்தான் 17 ஆண்டுகளில் மக்களின் வரிப்பணம் 8கோடி ரூபாய் இந்தக் கமிஷனுக்குச் செலவழிக்கப் பட்டது.

"வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகிய மூவரும் பா.ஜகவின் போலி மிதவாதிகள். அவர்கள் பாபரி மஸ்ஜித் தகர்ப்பு, தங்களுக்கே தெரியாமல் நடந்து விட்டதாகக் கூறியுள்ளனர். ஆனால் நடந்த நிகழ்வுகளைப் பார்க்கும்போது, பாபரி மஸ்ஜித் தகர்ப்பு என்பது திடீரென்று நடந்ததல்ல; மாறாக, திட்டமிட்டு நடத்தப்பட்டது என்று தெரிகிறது".

"பாபரி மஸ்ஜிதைத் தகர்க்க வேண்டும் என்ற சங்பரிவாரின் முடிவுகளுக்கு இவர்கள் மூவரும் உடன்பட்டுள்ளனர். சங்பரிவாரின் திட்டம் அவர்களுக்குத் தெரியாது என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. அவர்கள் ஆர்.எஸ்.எஸ்.இன் கைப்பாவைகளாக செயல் பட்டுள்ளனர். ஆர்.எஸ்.எஸ்.இன் கட்டளைகளை மீற முடியாதவர்களாக இருந்துள்ளனர் என்பது எவ்விதச் சந்தேகத்துக்கும் இடமின்றி நிரூபிக்கப் பட்டுள்ளது. எனவே, சட்டச் சலுகையான சந்தேகத்தின் பலனை அளித்து அவர்களைக் குற்றத்திலிருந்து விடுவிக்க முடியாது".

"தங்களது அரசியல் லாபத்துக்காக, மிகப்பெரிய நாடான இந்தியாவைக் காட்டுமிராண்டித் தனத்துக்கும் சகிப்பற்றத் தன்மைக்கும் ஆளாக்கி உள்ளனர்".

"இதைவிடப் பெரிய துரோகம், ஜனநாயகத்தில் கிடையாது. அவர்கள் தெரிந்தே செய்த குற்றங்களைக் கண்டனம் செய்ய இந்தக் கமிஷனுக்குத் தயக்கமே கிடையாது. அவர்கள் அயோத்தி விவகாரத்தில் நாட்டை மத மோதலுக்கு இட்டுச் சென்றுள்ளனர்"

என்று லிபரான் கமிஷன் விளக்கியுள்ளதோடு,

"அவர்கள், வாக்காளர்கள் (மக்கள்) வைத்திருந்த நம்பிக்கையையும் மீறி விட்டனர். இதைவிடப் பெரிய துரோகம், ஜனநாயகத்தில் கிடையாது. அவர்கள் தெரிந்தே செய்த குற்றங்களைக் கண்டனம் செய்ய இந்தக் கமிஷனுக்குத் தயக்கமே கிடையாது. அவர்கள் அயோத்தி விவகாரத்தில் நாட்டை மத மோதலுக்கு இட்டுச் சென்றுள்ளனர்".

எனக் கூறும் லிபரான் கமிஷன் அறிக்கை, ஊடகங்கள் கையில் கிடைக்காமல் நேரடியாகப் நாடாளுமன்ற விவாதத்துக்கு வந்திருந்தால் அன்றைக்கே பாஜக எனும் கட்சி, இந்திய அரசியலில் இருந்து துடைத்து எறியப் பட்டிருக்கும். அத்தகைய இழிவு நிலையிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, அறிக்கை வெளிவந்ததைத் தங்களுக்கு இழைக்கப் பட்ட அநீதியாகத் திசை திருப்பும் நாடகத்தில் பாஜக இறங்கி விட்டது. இந்தத் திசை திருப்பல் வெற்றி அடைந்து விட்டால், பால் தாக்கரேயைப் போலவே அத்வானி வகையறாக்களும் நிம்மதியாக அடுத்தக்கட்ட மதக்கலவரங்களை உருவாக்கும் வழிமுறைகளைக் குறித்து ஆலோசிக்கத் தலைப்படக் கூடும்.

அறிக்கை வெளியானதற்கே இந்த நிலைமை எனில், லிபரான் கமிஷனின் விசாரணைக் காலகட்டத்தில் இதனை விட சுவாரசியமான அநியாயங்கள் அதிகார, இந்துத்துவக் கூட்டணியால் நடத்தப்பட்டன. அவற்றுள் ஒன்று:

-o-

பாபரி மஸ்ஜித் வழக்குத் தொடர்பான லிபரான் விசாரணைக் கமிஷனின் அறிக்கையும் வழக்கமான கண்துடைப்பு ஏமாற்று நாடகம்தான் என்று ஐயங் கொள்வதற்கு இடம்பாடாக, இறுதி அறிக்கையை நீதிபதி லிபரான், பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சமர்ப்பித்த ஒருவார காலத்துக்குள் சான்றுகள் வெளிவந்தன.

உத்தரப் பிரதேச உள்துறைத் தலைமைச் செயலாளர் அதுல் குமார் குப்தா, கடந்த 7 ஜூலை 2009 அன்று லக்னவ் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், "பாபரி மஸ்ஜித் தொடர்பான 23 கோப்புகள் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னரே காணாமல் போய்விட்டன" எனக் குறிப்பிட்டிருக்கிறார். உள்துறைச் செயலர் ஜாவித் அஹ்மது தயாரித்த அந்த அறிக்கையில், "கோப்புகளின் எண்ணிக்கை, பதிவு செய்யப் பட்ட பட்டியிலில் மட்டுமே உள்ளது; கோப்புகளைக் காணவில்லை" எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.

நீதிபதி லிபரான் தலைமையிலான விசாரணைக் கமிஷன், காணாமல் போய்விட்டதாகச் சொல்லப் படும் 23 கோப்புகள் பற்றிக் கண்டு கொள்ளாமல் 48 தடவை கால அவகாச நீட்டிப்புப் பெற்று, 17 ஆண்டுகளாக நடந்த விசாரணையைக் கெட்டிக்காரத் தனமாக மூட்டை கட்டி விட்டது.

பாபரி மஸ்ஜித் தொடர்பான 23 கோப்புகள் காணாமல் போய்விட்டதாகச் சொல்லப் படும் கதையாவது:

உத்தரப் பிரதேச உள்துறை அமைச்சகத்தின் வகுப்புக் கலவரக் கட்டுப்பாட்டுத் துறையில் சிறப்புப் பணி அலுவலராகப் பணிபுரிந்த சுபாஷ் பன் சத் (Subhash Bahn Sadh), ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் சந்தேகத்திற்கிடமான முறையில் மரணமடைந்தார். சுபாஷின் பொறுப்பில்தான் பாபரி மஸ்ஜித் தொடர்புடைய, காணாமல் போய்விட்டதாகச் சொல்லப் படும் 23 கோப்புகளும் இருந்தன!

2000ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி, உத்தரபிரப் தேசத்திலிருந்து டெல்லிக்குக் காசி-விஸ்வநாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் மேற்கொண்ட சுபாஷ், "ரயில் டெல்லி திலக் ப்ரிட்ஜ் ரயில் நிலையம் வந்து சேர்ந்தபோது, கால் தடுமாறி ரயிலிலிருந்து கீழே விழுந்து காயமடைந்து, இரு நாள் சிகிச்சைக்குப்பின் இறந்தார்" என்று காவல்துறை அறிக்கை கூறுகிறது. பாபரி வழக்குத் தொடர்பாக லிபரான் விசாரணைக் கமிஷன் முன்னிலையில் 1.5.2000 அன்று வாக்குமூலம் கொடுப்பதற்காக டெல்லிக்கு வந்த சுபாஷ், அன்றைய தினம் டெல்லியிலுள்ள ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் பாதி உயிருடன் படுத்திருந்தார்.

தன் பொறுப்பில் இருந்த 23 கோப்புகளையும் சுபாஷ் எங்கு வைத்திருந்தார் என்பதும் தனது இறுதி டெல்லிப் பயணத்தின்போது அவற்றைத் தன்னுடன் எடுத்துச் சென்றாரா இல்லையா என்பதும் கேள்விக்குறிகளாகவே தொங்குகின்றன.

உத்தரப் பிரதேச உள்துறையின் சிறப்புச் செயலாளரான கே.பி. அகர்வால், டெல்லி காவல்துறையின் தலைமையக இணை ஆணையாளர் ட்டீ என் மோகனிடம் கடந்த 6.7.2000 அன்று சமர்ப்பித்த அஃபிடவிட்டில், "டெல்லிக்குப் போகும்போது கோப்புகளை உடன் கொண்டு செல்ல வேண்டும் என சுபாஷுக்குக் கட்டளை ஏதும் இடப் படவில்லை" என்று குறிப்பிட்டதோடு, 'விபத்து' நடந்த பின்னர் "சுபாஷின் உடமைகளைப் பரிசோதித்த வகையில் கண்டெடுக்கப் பட்டவை பயணத்துக்கான ரயில் டிக்கெட்டும் சில விசிட்டிங் கார்டுகள் மட்டுமே" என்று பதிவு செய்திருக்கிறார்.

சுபாஷின் ரயில் 'விபத்து'க்குப் பின்னர் மருத்துவமனையில் அவர் சேர்க்கப் பட்டிருந்தபோது அங்கு அவரைப் பார்க்கச் சென்ற உத்தரப் பிரதேச உள்துறையின் அன்றைய தலைமைச் செயலாளரும் தற்போது பண்டல்கண்ட் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தருமான வீ.கே. மிட்டல் கூறும்போது, "ஒரிஜினல் கோப்புகளை அவரோடு எடுத்துச் சென்றிருக்க வாய்ப்பில்லை. அப்படி எடுத்துச் செல்வதாயின் அதற்கு முன்னர் எனக்குத் தகவல் சொல்லப் பட்டிருக்கும். அப்படியே எனக்குத் தகவல் தராமல் ஒரிஜினல் கோப்புகளை எடுத்துச் சென்றிருந்தால் ஆவணக் காப்பகத்தில் அவற்றின் பிரதிகள் இருக்க வேண்டும். பிரதிகளை எடுத்துச் சென்றிருந்தால் ஒரிஜினல் இருக்க வேண்டும். ஆனால், காப்பகத்தில் ஒரிஜினலும் இல்லை; பிரதிகளும் இல்லை" என ஃப்ரண்ட் லைன் பேட்டியின்போது வியப்புத் தெரிவித்தார்.

இத்தனைக்குப் பிறகும் செத்துப் போனவர் திரும்பி வந்து மறுக்கப் போவதில்லை எனும் துணிவில், "பாபரி மஸ்ஜித் தொடர்பான 23 ஒரிஜினல் கோப்புகள் 9 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போய்விட்டன. அவற்றை டெல்லிக்குப் போகும்போது சத் எடுத்துச் சென்றிருக்க வேண்டும்" என்று உத்தரப் பிரதேச அரசின் தலைமைச் செயலர் அதுல் குமார் குப்தா உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த 7 ஜூலை 2009 விளக்கத்தில் பூடகமாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், "அன்று வீட்டிலிருந்து புறப்பட்டபோது அவனது டெல்லிப் பயணத்துக்குத் தேவையான மாற்று உடைகளை மட்டுமே சிறு சூட்கேஸில் வைத்து எடுத்துச் சென்றான். கோப்புகள் எதையும் எடுத்துச் செல்லவில்லை" என்று சுபாஷின் தந்தையான பீர்பான் ஸத் கூறுகிறார்.

மேலும், "என் மகன் 'விபத்து'க்குள்ளானான் என்ற செய்தியறிந்து லக்னவிலிருந்து 1.5.2000 இரவு முழுக்கப் பயணம் செய்து அடுத்தநாள் டெல்லியை அடைந்தேன். நான் மருத்துவமனைக்குச் சென்று என் மகனைப் பார்த்தபோது தன்னினைவுடன் இருந்தான். தனக்கு அறுவைச் சிகிச்சை செய்வதில் ஆட்சேபணை இல்லை என மருத்துவமனை விண்ணப்பத்தில் கையெழுத்திட்டதாக என்னிடம் சொன்னான். 'விபத்து' நடந்து ஒரு நாள் முழுக்கக் கடந்தும் அவனிடம் டெல்லிக் காவல்துறையினர் எந்த விசாரணையும் செய்யாமல் அலட்சியப் படுத்தியது, நடந்தது 'விபத்து' அல்ல; அவனுக்கெதிரான அரசியல் சதியின் ஓர் அங்கமே என்பதை உறுதிப் படுத்துகிறது" என்று கூறினார்.

"அப்போது உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியில் இருந்த பிஜேபியும் அதன் தலைவர்களும் என் மகனுடைய சாவின் பின்னணியில் இருந்தது உறுதி"நீதி வேண்டும்

"அப்போது உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியில் இருந்த பிஜேபியும் அதன் தலைவர்களும் என் மகனுடைய சாவின் பின்னணியில் இருந்தது உறுதி" என்றும் பீர்பான் ஸத் கூறினார். அத்துடன்,

"ஓடிக் கொண்டிருந்த ரயிலிலிருந்து தன் மகன் சுபாஷை தண்டவாளத்தில் தள்ளிக் கொலை செய்து விட்டனர்" என்றும் டெல்லி உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த புகாரில் தெரிவித்துள்ளார். ஆனால், அவ்வழக்குத் தொடர்பான மேல் விசாரணை வேளைகளில் சுபாஷின் இறப்புத் தொடர்பாக மட்டுமே நடந்த தொடர் விசாரணைகள், ரகசிய கோப்புகளைக் குறித்துக் கண்டு கொள்ளவே இல்லை.

'விபத்து' நடந்தபோது சுபாஷிடம் ரகசிய கோப்புகள் இருந்தனவா?

என்னென்ன ரகசியக் கோப்புகள் இருந்தன?

தற்போது காணாமல் போனதாகத் தலைமைச் செயலர் அதுல் குப்தா கூறியுள்ள இந்த ரகசியக் கோப்புகள்தாம் சுபாஷிடம் இருந்தனவா?

அல்லது அவரது மரணத்தைச் சாக்கிட்டு, காணாமல் 'ஆக்கப்பட வேண்டிய' ரகசிய கோப்புகளும் சுபாஷோடு சேர்த்துப் புதைக்கப் படுகின்றனவா?

சுபாஷின் மரணம் மிக மிக அசாதாரணமானது. திலக் பிரிட்ஜ் நிலையத்தில் ரயில் நிற்பதற்கு முன்னர் இறங்க முயன்று, ஊர்ந்து கொண்டிருந்த ரயிலுக்கும் ரயில் ப்ளாட்ஃபாரத்திற்கும் இடையில் விழுந்து அடிபட்டு, ராம் மனோகர் லோஹியா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப் பட்டு, அடுத்த நாள் அவர் மரணமடைந்ததாக அறிவிக்கப் பட்டார்.

சுபாஷின் தந்தையின் புகார் அடிப்படையில் வழக்கை விசாரித்து 2000 ஆகஸ்ட் 22 க்குள் அறிக்கை சமர்ப்பிக்க காவல்துறையினருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உத்தரவின்படி காவல்துறை சமர்ப்பித்த அறிக்கையில் திருப்தியடையாத நீதிமன்றம், மீண்டும் மறுவிசாரணை நடத்த உத்தரவிட்டது. மறுவிசாரணைக்காக இரண்டு ஆண்டுகள் பொறுத்திருந்த நீதிமன்றம், 2002இல் சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டது. ஆனால், 9 ஆண்டுகள் கடக்கும் நிலையிலும் இதுவரை மறு விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. சி.ஐ.டி விசாரணையும் இந்த நிமிடம்வரை நடைபெறவில்லை!

பாபரி மஸ்ஜித் வழக்குத் தொடர்பான ஆவணங்களைக் கோரி, 2002 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்திலுள்ள சுன்னி வக்ஃப் போர்டும் மற்றும் சில அமைப்புகளும் இணைந்து சமர்ப்பித்த மனுவின் மீதான விசாரணையின்போதுதான் உத்தரப் பிரதேச மாநில அரசு முதன்முதலாக, "பாபரி வழக்குத் தொடர்பான முக்கிய 23 கோப்புகள் காணாமல் போய் விட்டன" என நீதிமன்றத்தில் தெரிவித்தது.

"சுபாஷின் மரணம் வெறும் 'விபத்து'தான் என்ற முடிவுக்குக் காவல்துறை வந்ததற்கான காரணமாகக் காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில், 'விபத்தில்' படுகாயம் அடைந்தபோதும் தன்னினைவுடன் இருந்த சுபாஷிடம் வாக்குமூலம் பெறாமல் எதிர் ப்ளாட்ஃபார்மில் வியாபாரம் செய்து கொண்டிருந்த ஒரு வியாபாரியின் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர். இந்த ஒரு வாக்குமூலத்தை மட்டும் அடிப்படையாக வைத்து, சுபாஷின் மரணத்தை வெறும் 'விபத்து'தான் என்ற முடிவுக்கு அவசரகதியில் வந்தக் காவல்துறை, நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர்கூட, மிக முக்கிய ரகசிய ஆவணங்களுடன் வந்ததாகச் சொல்லப் படும் ஓர் உயர் அதிகாரி இறந்து, அவர் வைத்திருந்த ரகசிய ஆவணங்களும் காணாமல் போனதாகக் கூறப்படும் நிகழ்வைச் சந்தேகக்கண் கொண்டு பார்த்து, மறு கோணத்தில் விசாரிப்பதற்கு முன்வராமல் அடம்பிடிக்கிறது. இதுவே சுபாஷின் மரணத்தில் மிகப் பெரிய சந்தேகத்தைத் தோற்றுவிக்கிறது" என அவருடைய குடும்ப வழக்கறிஞர் ரன்தீர் ஜெய்ன் கூறுகிறார்.

சுபாஷின் மரணம் தொடர்பாகக் காவல்துறை எழுதி வைத்துள்ள கதையில் பல முரண்பாடுகள் உள்ளன. சுபாஷ் இரண்டாம் வகுப்பில் பிரயாணம் செய்திருந்ததாகக் காவல்துறை கூறுகிறது. ஆனால், அவருடன் பிரயாணம் செய்த சக பிரயாணிகளில் ஒருவரது வாக்குமூலத்தைக்கூட காவல்துறை பதிவு செய்யவில்லை. ரயில் நிற்பதற்கு முன்னரே அவர் இறங்க முயன்றாரா? இல்லையா? என்பது அவருடன் பிரயாணம் செய்த சக பிரயாணிகளால் மட்டுமே உறுதிப்படுத்த இயலும். சாதாரண ஒரு பாமரனுக்குக்கூட தோன்றும் இந்தச் சிந்தனை, காவல்துறைக்குத் தோன்றாதது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

1.5.2000 அன்று லிபரான் கமிஷன் முன்னிலையில் ஆஜராகச் சென்ற சுபாஷ், டெல்லியில் தான் தொடர்பு கொள்ள வேண்டிய அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள், தன் குடும்ப வழக்கறிஞர் என முக்கியமான அனைத்துத் தொடர்பு எண்களையும் தன் வசம் வைத்திருந்தார். ஆனால், அவரது கைவசம் இருந்த தொலைபேசி எண்களில் எவரையும் காவல்துறை தொடர்பு கொண்டு அவரது மரண விவரத்தைத் தெரிவிக்கவில்லை. யாரோ ஒருவர் அழைத்த தொலைபேசி அழைப்பினூடாகவேதான் அவரது மரணச் செய்தியை அறிந்ததாக சுபாஷின் வழக்கறிஞர் ஜெய்ன் கூறுகிறார். அழைத்த நபர், சுபாஷை மருத்துவமனையில் சேர்த்தவர் என்று தன்னை அவருக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். ஆனால், சுபாஷின் கையிலிருந்த அதி முக்கிய ரகசிய ஆவணங்களும் காணாமல் போன நிலையில் அவரை மருத்துவமனையில் சேர்த்ததாகக் கூறிய அந்த நபரைக் கண்டுபிடிப்பதற்கான எந்த ஒரு முயற்சியையும் காவல்துறை செய்யவில்லை என்பது எல்லாவற்றிலும் மிகப் பெரிய ஆச்சரியம்!

சுபாஷின் மரணம் தொடர்பான காவல்துறையின் முதல் விசாரணை அறிக்கையில், இது போன்ற பதிலில்லாத எண்ணற்ற கேள்விகள் எஞ்சி நின்ற காரணத்தினாலேயே டெல்லி உயர்நீதி மன்றம் மறு விசாரணைக்கும் பின்னர் சி.ஐடி. விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது என்பது திண்ணம். ஆனால், நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர்கூட, சுபாஷின் மரண வழக்கும் அவர் கைவசமிருந்து காணாமல் போன ரகசிய ஆவணங்கள் குறித்த விசாரணையும் ஒரு இஞ்ச் கூட நகரவில்லை.

இவை அனைத்திலிருந்தும், ரகசிய ஆவணங்கள் லிபரான் கமிஷன் கையில் கிடைக்காமல் இருப்பதற்காக ஏதோ சதிவேலை நடந்துள்ளது என்பதும் அதன் ஒரு பாகமாகவே சுபாஷ் கொல்லப்பட்டுள்ளார் என்ற சந்தேகமும் வலுப்பெறுகிறது. நீதிமன்றம் இரு முறை உத்தரவிட்ட பின்னர்கூட, காவல்துறையோ சி.ஐ.டி பிரிவோ இவ்வழக்கில் மேல்விசாரணை நடத்தாமல் இருந்ததிலிருந்து இவ்வழக்கில் மேல்மட்டத் தலையீடுகள் இருந்ததுள்ளன என்பது உறுதியாகிறது.

சுபாஷின் மரணம் குறித்த வழக்கு ஆரம்பித்துக் கிடப்பில் போடப்பட்ட நிலையில், அவர் கையிலிருந்த ரகசிய ஆவணங்கள் எங்கே சென்றன? என்ற ஓர் அதி முக்கிய கேள்வி இறுதியில் எஞ்சி நிற்கின்றது. மிக முக்கியமான அரசு ஆவணமாக இருந்த போதிலும்கூட, அவற்றைக் கண்டு பிடிக்க அரசு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாததும் லிபரான் கமிஷனின் விசாரணைக்கான முக்கிய ஆதாரம் ஒரு மரணத்தின் பின்னணியில் மறைக்கப்பட்டது குறித்து அரசு கண்டுகொள்ளாததும் வியப்பின் உச்ச கட்டமாகும். 17 ஆண்டுகளுக்குப் பின்னர், லிபரான் கமிஷன் தன் அறிக்கையைச் சமர்ப்பித்து விட்ட போதிலும் சுபாஷின் மரணத்திற்கான நீதி தேடி நீதிமன்றம் ஏறி இறங்கிக் கொண்டிருக்கின்றது சுபாஷின் குடும்பம். அவர் கைவசமிருந்து காணாமல் போன ரகசிய ஆவணங்களோ கேட்பார் எவருமின்றி எங்கோ மாயமாய் மறைந்து விட்டன.

இறுதியாக சுமார் 9 ஆண்டுகளுக்குப் பின்னர், பாபரி மஸ்ஜித் வழக்குத் தொடர்பான முக்கியக் கோப்புகள் காணாமல் போன நிகழ்வைக் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த அலஹாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோப்புகள் காணாமல் போனதை மிகவும் மோசமான நிகழ்வாகச் சுட்டிக்காட்டிய உயர் நீதிமன்றம், சி.பி.ஐ விசாரணையைப் பூர்த்தி செய்து அறிக்கை சமர்ப்பிக்க 2 மாத காலம் நிர்ணயித்தது. இதற்குள் ஆகஸ்டு 24 ஆம் தேதியன்று இடைக்கால அறிக்கையும் சி.பி.ஐ தாக்கல் செய்திருக்க வேண்டும்.

விசாரணைக்கிடையில் கோப்புகள் காணாமல் போனதில் "முக்கிய குற்றவாளியாகக் கருதப் படும் எத்தகைய உயர்ந்த அதிகாரியையாவது கைது செய்ய வேண்டும் என்று சி.பி.ஐ கருதினால், புதிய வழக்குகள் பதிவு செய்து அவர்களைக் கைது செய்ய எவ்விதத் தயக்கமும் காட்ட வேண்டாம்" எனவும் "இவ்வழக்கில் சி.பி.ஐக்கு முழு சுதந்திரம் வழங்குவதாகவும்" உயர்நீதி மன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. "விசாரணைக்கிடையில் ஏதாவது தடைகளோ, இடையூறுகளோ ஏற்பட்டால் நீதிமன்றத்திற்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும்" எனவும் கூறியுள்ளது.

முக்கிய ரகசியக் கோப்புகள் காணாமல் போனது தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விட்டு, மேல் விசாரணை நடத்தாமல் சி.பி.ஐக்கு அதனை ரெஃபர் செய்த மாநில அரசின் செயல்பாடு, காலம் கடத்துவதற்கான தந்திரமாகும். இத்தனை முக்கியமான ஒரு நிகழ்வைக் குறித்த பல ரகசிய கோப்புகள், தலைமைச் செயலகத்திலிருந்து மாயமான சம்பவம் சாதாரண விஷயமல்ல. மாநில அரசு, சர்வ சாதாரணமாக, "தலைமைச் செயலகத்திலிருந்து முக்கிய ரகசிய ஆவணங்கள் காணாமல் போய் விட்டன" எனக் கூறுவது அதிர்ச்சியளிக்கக் கூடியதாக உள்ளது எனவும் உயர்நீதி மன்றம் கடுமையாகத் தன் அதிருப்தியை வெளிப்படுத்தியது.

காணாமல் போன 23 கோப்புகளில், 1949ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநில அரசுக்கும் பைஸாபாத் மாவட்ட நீதிமன்றத்திற்கும் இடையில் நடந்த கடிதப் போக்குவரத்துகள், "பாபரி மஸ்ஜிதினுள் இரவோடு இரவாக அத்துமீறித் திருட்டுத் தனமாக வைக்கப்பட்ட ராமர் சிலையை உடனடியாக அகற்ற வேண்டும்" என அன்றைய பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு மாநில அரசுக்கு அனுப்பிய டெலக்ஸ் செய்தி முதலான முக்கிய ஆவணங்கள் அடங்கியிருந்தன. சி.பி.ஐயின் இந்த விசாரணையில் அரசும் அதிகாரிகளும் முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் கடுமையாக உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-o-

இந்நிலையில் முக்கிய ஆதாரமான காணாமல் போன ஆவணங்களின் உதவி இல்லாமலேயே சமர்ப்பிக்கப்பட்டுள்ள லிபரான் கமிஷன் அறிக்கை, லிபரான் விசாரணை வேளையில் விசாரிக்கப் படாத ஒருவரையும் பாபரி மஸ்ஜித் தகர்ப்பில் குற்றவாளியாகச் சேர்த்துள்ளது.

"பிரச்சனைக்குரிய இடத்தில் புதிதாகக் கட்டுமானப் பணிகளைச் செய்யத்தான் சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. அங்குக் கரசேவைக்குத் தடையில்லை, பஜனை நடத்தவும் கீர்த்தனைகள் பாடவும் தடையில்லை. நீங்கள் நடமாடாமல் அல்லது கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது".

"அங்கு (அயோத்தியில்) சும்மா நின்று கொண்டே இருக்க முடியுமா?. கற்களும் பாறைகளும் உள்ள அந்த இடத்தில் எப்படி உட்காருவது?. எனவே, அந்த இடத்தை நாம் சமப்படுத்தியே ஆக வேண்டும். அப்போதுதான் நாம் அங்கே அமர முடியும்".

"நாளை (டிசம்பர் 6ஆம் தேதி) என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது. அதைத் தீர்மானிக்கப் போவது கர சேவகர்கள்தாம்"

என்றெல்லாம் வன்முறையைத் தூண்டி விட்டு, லக்னவில் 5.12.1992இல் கரசேவகர்களுக்கு மத்தியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பாபரி மஸ்ஜிதை இடிப்பதற்கு ஊக்கமளித்துப் பேசிய ஒருவரது வீடியோ பதிவைக் கடந்த 4.2.2004இல் வழக்கறிஞர் ஐ.பி. சிங், லிபரான் கமிஷன்முன் சமர்ப்பித்து, அவரை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்தார்.

"நன்கு திட்டமிடப் பட்ட பாபரி மஸ்ஜித் தகர்ப்பு நடவடிக்கை குறித்து பாஜகவின் முன்னோடித் தலைவர்களுக்கு முழுமையாகத் தெரியும் - What is going to be most damaging for the BJP is that the Liberhan Report indicts its top leadership of being fully aware of 'the tailor- made exercise' that resulted in the demolition of the Babri Masjid"

அப்போது அவரை விசாரிக்க மறுத்த லிபரான் கமிஷன், பாபரி மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகள் பட்டியலில் 51ஆவதாக இப்போது அவரது பெயரைக் குறிப்பிட்டுள்ளது, " முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேய்" என்று.

மேலும், பாராளுமன்றத்தில் வைக்கப்படும் முன்னரே NDTV கைவசம் சென்று விட்ட லிபரான் கமிஷன் அறிக்கை, "நன்கு திட்டமிடப் பட்ட பாபரி மஸ்ஜித் தகர்ப்பு நடவடிக்கை குறித்து பாஜகவின் முன்னோடித் தலைவர்களுக்கு முழுமையாகத் தெரியும் - What is going to be most damaging for the BJP is that the Liberhan Report indicts its top leadership of being fully aware of 'the tailor- made exercise' that resulted in the demolition of the Babri Masjid" என்று கூறுகிறது.

"விசாரணைக் கமிஷன் என்றாலே மக்களின் வரிப் பணத்தைக் கோடி கோடியாகக் 'கொட்டிக் கொள்வதற்கு' மட்டும் அமைக்கப் படும் அமைப்பு; குற்றவாளிகளுக்கு என்னவகை தண்டனை கொடுக்க வேண்டும் என்று சொல்வதற்குக் கையாலாகாத அமைப்பு" எனும் இழிவுகள் இனியேனும் மாற்றப் படுமா?

பாபரி மஸ்ஜிதைத் தகர்த்த குற்றவாளிகள் தண்டிக்கப் படுவார்களா?

பதினேழு ஆண்டுகளாக இந்திய நீதிபீடங்களின் மீது நம்பிக்கை வைத்து, நாட்டுக்கு இழைக்கப் பட்ட அவமானத்துக்கும் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கும் நீதி தேடி அலையும் முஸ்லிம் சமுதாயத்திற்கு நீதி கிடைக்குமா?

பொறுத்திருந்து பார்ப்போம்!

Blood bank- Pass this information it is very helpfull...

Dear Friends,

There is a site:
www.friends2support.org

where you can search for a Particular blood group, you will get thousand of donor addresses.

Pass this message 2 all you know. It will help many. Plz don't delete it without forwarding ...

You will really help some 1 without your knowledge.







முஸ்லிம் - நிராகரிப்போர் இருவருக்கான அல்லாஹ்வின் அழகிய உதாரணம்!

மரணம் அடைந்த ஒருவனை நாம் உயிர்ப்பித்து எழுப்பினோம் - இன்னும் அவனுக்கு ஓர் ஒளியையும் கொடுத்தோம். அதைக்கொண்டு அவன் மனிதர்களிடையே நடமாடுகிறான். மற்றொருவன் இருள்களில் சிக்கிக்கிடக்கிறான்; அதைவிட்டு அவன் வெளியேறவே முடியாது - இவ்விருவரும் சமமாவாரா? இவ்வாறு காஃபிர்களுக்கு அவர்கள் செய்யக்கூடிய (பாவச்)செயல்கள் அழகாக்கப்பட்டுள்ளன. (அல்குர்ஆன்: 6:122)

மனிதனை மரணத்திற்குப் பின் எழுப்புதல் படைத்தவனுக்கு பாரமான செயலா?

மேலும், அவன்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். அவனுடைய அர்ஷு நீரின் மேல் இருந்தது. உங்களில் யார் அமலில் (செய்கையில்) மேலானவர் என்பதைச் சோதிக்கும் பொருட்டு (இவற்றைப் படைத்தான்; இன்னும் நபியே! அவர்களிடம்) "நிச்சயமாக நீங்கள் மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவீர்கள்" என்று நீர் கூறினால், (அதற்கு அவர்களிலுள்ள நிராகரிப்பவர்கள்) காஃபிர்கள், "இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறில்லை" என்று நிச்சயமாகக் கூறுவார்கள். (அல்குர்ஆன்: 11:7)

இஸ்லாத்திற்கு எதிராக கிறிஸ்தவ அமைப்புகள்




(கிழக்கு மற்றும் மத்திய ஆப்ரிக்க சர்ச் கவுன்சிலின் முன்னாள் பொதுச் செயலாளர் )


பெயர் : அசோக் கோலன் யாங்

நாடு : சூடான்

பதவி : கிழக்கு மற்றும் மத்திய ஆப்ரிக்க சர்ச் கவுன்சிலின் பொதுச் செயலாளர்


இவர் கடந்த 2002 ம் ஆண்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். இவர் மதங்களைப் பற்றிய மதிப்பீடுகள் குறித்து ஒப்பு நோக்கி ஆய்வு செய்த பொழுது, இஸ்லாமே உண்மையான மார்க்கம் என்பதைப் பற்றிய தெளிவுக்கு வந்தார். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.

இவரை குவைத்திலிருந்து வெளிவரும் அல் முஜ்தமா என்ற அரபுப் பத்திரிக்கை பேட்டி கண்டது. அந்தப் பேட்டியின் தமிழாக்கமே இது.

நான் ஏன் முஸ்லிமானேன்..! ஏனென்றால்,

திருமறைக் குர்ஆனை எந்த தனிப்பட்ட மனிதரும் எழுதவில்லை, அதேநேரத்தில் பைபிளுக்கு பல்வேறு நூலாசிரியர்கள் இருக்கின்றார்கள்.

திருமறைக் குர்ஆன் அல்லாஹ்வின் சத்திய வாக்கியங்களாகும்.

இஸ்லாம் அழைக்கின்ற ஓரிறைத் தத்துவத்தின் பாலே அனைத்து நபிமார்களும் மக்களை அழைத்தார்கள்.

இஸ்லாமே இறுதி மார்க்கம் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மிகத் தெளிவாகவே சுட்டிக் காட்டி இருக்கின்றார்கள்.

இவரது முயற்சியின் காரணமாக 1,50,000 பேர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள், இவர்களில் 2500 பேர் தேவாலயங்களின் தலைவர்களாவார்கள்.

கிறிஸ்தவ அமைப்புகள் முஸ்லிம்களிடையே கிறிஸ்துவத்தைப் பரப்புவதற்கு பல்விதமான தந்திரங்களைக் கையாளுகின்றன. இது பற்றி அவர் மேலும் கூறியதாவது :

மனித உதவி மற்றும் தொண்டு நிறுவனங்கள் என்ற போர்வையின் கீழ் செயல்படுகின்றன

உதவிகளை வழங்குவதன் மூலம்

தங்களது அரசாங்கத்தின் வழியாக அரபுக்களின் மீதும், இன்னும் முஸ்லிம்களின் மீதும் பலப்பிரயோகத்தைத் திணித்தல் மூலமாக

இன்னும், தனிநபர்களை இஸ்லாத்தின் பால் அழைப்பதற்கு பல்வேறு முறைகள் கையாளப்படுகின்றன, அவை : பணம், பதவி, பெண் ஆகியவற்றின் மூலமாக.

மேலும், அவர் கூறும் பொழுது, இஸ்லாத்தில் என்னை மிகவும் கவர்ந்த அம்சம் என்னவென்றால், ஏற்றத்தாழ்வுகள், பாகுபாடுகள் கிடையாது, இன்னும் சாதி அமைப்புகளும் கிடையாது, முஸ்லிம்கள் அனைவரும் சமமே. ஆனால், கிறிஸ்துவத்தில் கறுப்பு நிற நீக்ரோ கிறிஸ்தவர்கள் வெள்ளைக்கார கிறிஸ்தவர்களின் சர்சுக்குச் சென்று வழிபாடு நடத்த இயலாது, ஏன்.., (முன்னாள்) அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த காலின் பவலைக் கூட வெள்ளைக்காரர்களின் சர்ச்சிற்குள் நுழைய அனுமதிக்க மாட்டார்கள்.

இஸ்லாத்திற்கு எதிராக எத்தனை கிறிஸ்தவ அமைப்புகள் உலகெங்கும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று கேட்கப்பட்டதற்கு, ஆயிரக்கணக்கான அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும், இவற்றில் சூடானில் மட்டும் 500 அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது என்று கூறினார்.

பரமரகசியக் கூட்டங்கள் :

கடந்த 1981 ல் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் பரம ரகசியமானதொரு கூட்டத்திற்கு நான் அழைக்கப்பட்டேன், அந்தக் கூட்டத்தில் முஸ்லிம்களுக்கு மத்தியில் பிரிவினையை உண்டாக்கி, அதன் மூலம் முஸ்லிம்களிடையே கிறிஸ்தவத்தைப் பிரச்சாரம் செய்வதென்று அதில் கலந்து கொண்டவர்கள் தீர்மானித்தார்கள்.

மேற்கு நாடுகளில் மக்கள் தங்களது வருமானத்தில் 5 சதவீதத்தை கிறிஸ்தவப் பிரச்சாரத்திற்காகச் செலவழிக்கின்றார்கள்.

முஸ்லிம் நாடுகளில் முதலீடு செய்கின்ற மேற்கு நாடுகளின் நிறுவனங்கள், தங்களது முதலீட்டின் மீது வருகின்ற வருமானத்தை கிறிஸ்தவப் பிரச்சாரத்திற்காகச் செலவழிக்கின்றன.

மேலும் அவரிடம், நீங்கள் சொல்வதைப் பார்த்தால் நீங்கள் சொல்வது உங்களது உயிருக்கே ஆபத்தாகவல்லவா முடியும் போலிருக்கின்றது? என்று சொன்ன பொழுது, ஆம்..! நான் சொல்வது என்னுடைய உயிருக்கே ஆபத்தானது என்பதை நான் நன்கறிவேன், எப்பொழுது கிறிஸ்தவ அமைப்புகள் நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை அறிந்து கொண்டனவோ அப்பொழுதே என்னைத் தீர்த்துக் கட்ட முனைந்தன, ஆனால் என்னுடைய இனத்தவர்கள் எனக்கு அளித்திருக்கும் பாதுகாப்பின் காரணமாக அவர்களது முயற்சியில் அவர்கள் தோல்வியையே கண்டார்கள். இன்னும் நான் சாவினைக் கண்டு பயப்படவில்லை, இஸ்லாத்திற்காக என்னுடைய உயிரை அற்பணிக்கவும் நான் தயாராகி விட்டேன், இன்னும் இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் அவர்கள் செய்து கொண்டிருக்கின்ற சதிகளை அம்பலப்படுத்திக் கொண்டு தான் இருக்கின்றேன்.

கிறிஸ்தவ அமைப்புகள் முஸ்லிம்களுக்கு எதிராக எவ்வாறு செயல்படுகின்றன?

இதற்கு அவர் பதிலளிக்கையில், இவர்கள் சரியான ஒருங்கிணைப்பு மற்றும் திட்டமிடுதல்களின் அடிப்படையில் செயல்படுகின்றார்கள். குறிக்கோளின்றி அவர்கள் செயல்படுவதில்லை, ஆனால் அறிவு மற்றும் ஆராய்ச்சிகளின் மூலமாகத் தங்களது செயல்பாடுகளைத் திட்டமிடுகின்றார்கள். உதாரணமாக, தாங்கள் குறி வைத்திருக்கும் நாடு அல்லது பகுதியைப் பற்றிய முழுமையான தகவல்களைத் திரட்டுகின்றார்கள், அதில் அவர்களது மதம், மக்கள் தொகை, அவர்கள் மதத்தைப் பின்பற்றுகின்றவர்களா அல்லது அல்லவா, பால் - ஆண், பெண், மக்களது தேவைகள் அதாவது பணம், உணவு, கல்வி, மருத்துவ சேவை மற்றும் இன்ன பிற தேவைகள் என்று ஒவ்வொன்றாகத் திட்டமிட்டுச் செயல்படுகின்றார்கள்.

எகிப்தில் செயல்பட்டு வரும் இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பிற்கு எதிராகவும், முடியுமானால் அதன் முக்கியத் தலைவர்களைக் கொலை செய்வதற்கும், எனக்கு 1 மில்லியன் 800 ஆயிரம் (18 லட்சம்) சம்பளமாகக் கொடுக்கப்பட்டது,

என்னருமை முஸ்லிம் சகோதரர்களுக்கு :

அல்லாஹ் இஸ்லாம் என்ற அருட்கொடையை உங்களுக்கு பரிசாக வழங்கியுள்ளான், அதனை நீங்கள் மறுக்க முடியாது, ஏனென்றால் அதுவே நம்முடைய உண்மையான சொத்து, அதை நம்மிடம் இருந்து அழித்து விடத்தான் மேற்கத்திய கிறிஸ்தவ நாடுகள் நம்மைக் குறி வைத்து தாக்கிக் கொண்டிருக்கின்றன. உங்களது வாழ்வில் இஸ்லாத்தைக் கடைபிடிப்பீர்கள் என்று சொன்னால், நீங்கள் பலசாலியாவீர்கள், இன்னும் மேற்கத்தியர்கள் உங்களைக் கண்டு அச்சம் கொள்வார்கள். உங்களுக்கு எதிராகக் கிளப்பி விடப்படும் எந்தவிதமான குழப்பங்களையும் எதிர்கொள்வதற்கு அறிவியல் ரீதியான அணுகுமுறைக்கான அடித்தளமான கல்வி நம்மிடம் தேவையாக இருக்கின்றது. முஸ்லிம்கள் தங்களது வாழ்வில் 10 சதவீதமாவது இஸ்லாமிய ஒழுக்க மாண்புகளைத் தங்களது வாழ்வில் கடைபிடிப்பார்களென்றால், மேற்கத்தியர்களை விட வாழ்வில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள், இன்னும் அதுவே நம்முடைய அநேகமான பிரச்னைகளையும் தீர்த்து விடக் கூடியதாக இருக்குமென்று கருதுகின்றேன். இந்த ஒரு முன்னேற்றத்தை வெறும் 10 சதவீத இஸ்லாத்தை நம்முடைய வாழ்வில் அமுல்படுத்தியதன் விளைவாகப் பெற முடியுமென்றால், இஸ்லாமிய வாழ்வை முழுமையாக நாம் கடைபிடிப்போமென்றால், நம்முடைய நிலை எவ்வாறு இருக்கும்? என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை என்று கூறினார்.

புதிதாக உருவாகிறது - நபி(ஸல்) பற்றிய சர்வதேசத் திரைப்படம்!


றைத் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களின் வாழ்க்கையை உரிய ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டும் ஆவணமாக பெரும் பொருட்செலவில் புதியதோர் ஆங்கிலத் திரைப்படம் உருவாகிறது.

"இறுதித் தூதர் நபி(ஸல்) அவர்களின் பிறப்பிற்கு முன்பு துவங்கி, நபியவர்களின் மரணம் வரையிலான முழுமையான தொகுப்பான இத்திரைப்படம், நபியவர்கள் பற்றி தவறாக புரிந்து கொள்ளப்பட்ட எண்ணங்களையும், காழ்ப்புணர்ச்சியுடன் திட்டமிட்டுப் பரப்பப்பட்டு வரும் அனைத்து அவதூறுகளையும் களையும்!" என்கிறார் அஹ்மது அப்துல்லாஹ் அல் முஸ்தஃபா. இவர் கத்தர் நாட்டின் தலைநகரான தோஹாவில் அல் நூர் ஹோல்டிங் நிறுவனத்தின் தலைவராவார்.

வளைகுடா நாட்டின் முக்கிய நாடுகளில் ஒன்றான கத்தரிலுள்ள முன்னணி ஊடக நிறுவனமான அல்நூர் ஹோல்டிங் இந்தத் திரைப்படத்தினைத் தயாரிக்கிறது. சுமார் 150 மில்லியன் அமெரிக்க டாலர் பொருட்செலவில் எதிர்வரும் 2011 ஆம் ஆண்டு துவங்கவிருக்கும் இத்திரைப்படம், 25 முதல் 30 மாதங்களில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இத்திரைப்படம், சர்வதேச அளவில் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் மீது பிற மதத்தவர் மட்டுமின்றி இஸ்லாத்தின் அடிப்படையைச் சரியாக விளங்காத முஸ்லிம்களும் இஸ்லாம் மீது கொண்டுள்ள தவறான எண்ணங்களைக் களையும் முகமாக விளங்கும்!" - அப்துல்லாஹ்.

திரைப்படத் தயாரிப்புக் குழுவிற்கான தேவைக்காக அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் உள்ள திறமையான படத் தயாரிப்புக் நிறுவனங்களைத் தேர்வு செய்து கொண்டு வருகிறது அல் நூர் ஹோல்டிங் நிறுவனம். இப்படத்தைத் தயாரிக்க அமெரிக்கத் தயாரிப்பாளரான பேர்ரி எம். ஆஸ்போர்ன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், உலகமெங்கும் சிறார்கள் மனதையும் பல ஆஸ்கர் பரிசுகளையும் அள்ளிச் சென்ற “The Lord of the Rings: The Return of the King”படத் தயாரிப்பாளராவார். இத்திரைப்படத்திற்காக இவருக்கு Academy Award for Best Picture விருது கிடைத்திருப்பது குறிப்பிடத் தக்கது. மேலும் புகழ் பெற்ற The Matrix படத்தினைத் தயாரித்தவரும் இவரே.

"ஆங்கிலம் பேசும் முஸ்லிம்களை மட்டுமே கொண்டு இத்திரைப்படம் தயாரிக்கப்படும். இத்திரைப்படம், சர்வதேச அளவில் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் மீது பிற மதத்தவர் மட்டுமின்றி இஸ்லாத்தின் அடிப்படையைச் சரியாக விளங்காத முஸ்லிம்களும் இஸ்லாம் மீது கொண்டுள்ள தவறான எண்ணங்களைக் களையும் முகமாக விளங்கும்!" என்கிறார் அப்துல்லாஹ்.

இத்திரைப்படம் பற்றி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ள டாக்டர். யூஸுப் அல் கர்ளாவி, "இத்திரைப்படம் ஒரு இஸ்லாமிய தஃவா (அழைப்பு) ஆகும்" என்று தெரிவித்துள்ளார். இந்தத் திரைப்படத் தயாரிப்பின் டெக்னிக்கல் கன்ஸல்டண்ட் மற்றும் முழு மேற்பார்வையையும் இவரே கவனிக்கிறார்.

இத்திரைப்படத்தின் உரைகள் (ஸ்க்ரிப்ட்), படப்பிடிப்பு மற்றும் தயாரிப்பு ஆகியவற்றின் மேற்பார்வையாளராக டாக்டர் யூஸுப் அல் கர்ளாவியும், அவர் தலைமையில் ஒரு இஸ்லாமியக் குழுவும் அமைக்கப் படவுள்ளது என்கிறார் அப்துல்லாஹ்

இத்திரைப்படம், உலகெங்கும் தவறான புரிதல்களுக்குப் பதிலடியாக பெரும் தாக்கத்தையும் கூடவே மறுமலர்ச்சியையும் ஏற்படுத்தும் என்கிறார் சர்வதேச முஸ்லிம் அறிஞர்களுக்கான ஒன்றியத்திற்குத் தலைவரான டாக்டர். யூஸுப் கர்ளாவி

கடந்த 2005 ஆம் ஆண்டு டென்மார்க்கின் ஜில்லண்ட்ஸ் போஸ்டன் என்ற பத்திரிகை 12 கார்ட்டூன்களை தனது தினசரியில் வெளியிட்டிருந்தது. இறைத்தூதர் நபி(ஸல்) அவர்களின் சொல்லுக்கும் செயலுக்கும் அங்கீகாரத்திற்கும் சற்றும் தொடர்பில்லாத அவதூறுகளைச் சுமத்தி இழிவு படுத்தும் எண்ணத்துடன் அப் பத்திரிகை கார்ட்டூன்கள் வெளியிட்டதைத் தொடர்ந்து உலகமெங்கும் முஸ்லிம்கள் கொந்தளித்தனர்.

பெரும் எண்ணிக்கையிலான பேரணிகள், ஊர்வலங்கள் மற்றும் சர்வதேச மீடியா சாதனங்கள் மூலம் முஸ்லிம்களின் கண்டனங்களும், எதிர்ப்புகளும் பதிவு செய்யப் பட்டன. அது நாள் வரை இஸ்லாத்திற்கு எதிராக திரைமறைவில் இருந்து நடந்து வந்த சூழ்ச்சிகளும், உலகெங்கும் இஸ்லாம் மீது வலிந்து பரப்பப் பட்டு வந்த இஸ்லாமோஃபோபியாவின் ஒட்டுமொத்த உருவமும் வெளியானது. அத்துடன் இஸ்லாத்தின் மீதான பொய்ப்பிரச்சாரத்தை முறியடித்து, இஸ்லாம் பற்றிய அறிவை முழு அளவில் உலக மக்களுக்கு எடுத்துச் சொல்லும் பொறுப்பு ஒவ்வொரு முஸ்லிம்கள் மீது சாட்டப் பட்டிருப்பதை உணர்ந்தனர்.

அதனைத் தொடர்ந்த உலகமெங்கும் "இறைத்தூதரை அறிந்து கொள்" எனும் வகையிலான இஸ்லாமிய பிரச்சாரங்கள் பெருமளவில் முஸ்லிம்களால் நடத்தப்பட்டு வருகிறது. இறைத்தூதர் நபி(ஸல்) அவர்களை இழிவு படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்ட டென்மார்க்கிலேயே 27 பெரும் முஸ்லிம் அமைப்புகள் ஒன்றுகூடி European Committee for Honoring the Prophet என்ற பெயரில் வலுவான ஒன்றியத்தை அமைத்திருக்கிறது.

இஸ்லாத்தின் மீதும் இறைத்தூதர் மீதும் உலகமெங்கும் திட்டமிட்டு பரப்பப்பட்டு வரும் தவறான எண்ணங்களுக்கான ஒரு சரியான மறுமொழியாக இத்திரைப்படம் அமையும் என்று நாமும் எதிர்பார்ப்போம்.

- அபூ ஸாலிஹா

இந்தியா ஃபிரடர்னிடி ஃபோரம் சார்பாக தம்மாமில் நடைபெற்ற பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி


கடந்த காலங்களை போன்று இவ்வருடமும் இந்தியா ஃபிரடர்னிடி ஃபோரம், தம்மாம் தமிழ் பிரிவு சார்பாக பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

DSC04720

டிஸம்பர் மாதம் 11ஆம் தேதி தம்மாமில் அமைந்துள்ள பாரகன் உணவக அரங்கில் வைத்து மாலை நான்கு மணிக்கு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஹாஜா குத்புதீன் அவர்கள் திருக்குர்ஆன் வசனங்களை ஓதி நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார்.

DSC04721

நிகழ்ச்சி தொகுப்பாளர் ரியாஸ் அஹமது அனைவரையும் வரவேற்று பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சியின் நோக்கத்தை கூறினார். இந்தியா ஃபிரடர்னிடி ஃபோரமின் பணிகளை ஆஷிக் அவர்கள் எடுத்துரைத்தார். இந்தியா ஃபிரடர்னிடி ஃபோரம் என்பது மதம், இனம் மற்றும் மொழி வேறுபாடின்றி அனைத்து இந்திய மக்களுக்காகவும் பாடுபட்டு அமைப்பு என்பதை தனது உரையில் தெளிவாக எடுத்துரைத்தார்.

11122009005 (3)

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக திரு.பால சுப்ரமணியன் அவர்கள் கலந்து கொண்டார்கள். தம்மாமிலுள்ள ஸாமில் ஸ்டீல் நிறுவனத்தில் பதினைந்து ஆண்டுகள் பணியாற்றி வருகிறார்.தற்போது அந்நிறுவனத்தில் முதுநிலை பொறியாளராக உள்ளார்.தம்மாம் முத்தமிழ் மன்றத்தின் இசைத்துறை தலைவர், ஸாமில் டோஸ்ட் மாஸ்டர் கிளப்பின் தலைவர், WAMY- தம்மாம் மாணவர் பயிற்சி முகாமின் ஆசிரியர் மற்றும் நீதிபதி உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்து அதன் மூலம் சமுதாய பணிகளில் ஈடுபட்டு வருபவர். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இவர் 'எனது பார்வையில் இஸ்லாம்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகள் குறித்து தான் விளங்கிக் கொண்ட விஷயங்களை அனைவருடனும் பகிர்ந்து கொண்டார்.அரபு நாடுகள் குறித்து நமது நாட்டில் பலர் பல தவறான எண்ணங்களை கொண்டுள்ளதாகவும் அதனை களைவதற்கான ஒரே வழி அவர்கள் நேரடியாக இங்கு வந்து பார்ப்பதுதான் என்பதை தனது உரையில் தெரிவித்தார்.

11122009007

கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தில் பணியாற்றி வருபவரும் முதுபெரும் மார்க்க அறிஞருமான மௌலவி ரஹ்மதுல்லாஹ் இம்தாதி அவர்கள் 'இஸ்லாம் ஓர் அறிமுகம்' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இஸ்லாம் எனறால் என்ன என்று தெளிவாக கூறிய அவர், 1400 ஆண்டுகளுக்கு முன் காட்டுமிராண்டிகளை போல் வாழ்ந்து கொண்டிருந்த அரேபிய மக்களை இஸ்லாம் எவ்வாறு நேர்வழி படுத்தியது என்பதை அழகாக எடுத்துரைத்தார்.இறுதி வேதம் குறித்தும் இறுதி நாள் குறித்தும் தனது உரையில் சுருக்கமாக கூறினார். இஸ்லாமிய மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை என்பதையும் விரும்பியவர் எவரும் இதனை ஏற்றுக்கொள்ளலாம் என்பதையும் தனது உரையில் தெளிவாக்கினார்.

DSC04744

மூத்த பொறியாளரும் மாற்று மத அன்பர்களுக்கான நிகழ்ச்சிகளை நடத்துவதில் அனுபவம் பெற்றவருமான ஜக்கரிய்யா அவர்கள் மாற்று மத நண்பர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.தீவிரவாதம், மக்காவிற்குள் முஸ்லிம் அல்லாதவர்கள் ஏன் அனுமதிக்கப்படுவதில்லை, இஸ்லாமிய வரலாற்றில் போர்கள் ஏன் நடைபெற்றன உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டன. அனைத்து கேள்விகளுக்கும் தெளிவாகவும் விளக்கமாகவும் ஜக்கரிய்யா அவர்கள் பதில் அளித்தார்கள்.

11122009015 (2) DSC04759

DSC04760

சிறப்பு விருந்தினர்களுக்கான நினைவு பரிசுகளை இந்தியா ஃபிரடர்னிடி ஃபோரம்,தம்மாம் தமிழ் பிரிவின் தலைவர் முஹம்மது ஃபைஸல் அவர்கள் வழங்கினார்கள்.

DSC04763 DSC04764

சிறந்த கேள்விகளை கேட்ட ஐந்து நபர்களுக்கும் மற்றும் குழுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து நபர்களுக்குமான பரிசுகளை இந்தியா ஃபிரடர்னிடி ஃபோரம், சவூதி அரேபியாவின் துணைத்தலைவர் சாதிக் மீரான் அவர்கள் வழங்கினார்கள்.

DSC04768 DSC04771

மாற்று மத சகோதரர்களுக்கு இலவச குர்ஆன்களை மௌலவி உவைஸி அவர்கள் வழங்கினார்கள். ஹம்ஸா அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

11122009013DSC04753

கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது. மாற்று மத அன்பர்கள் உள்ளிட்ட 225 பேர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்தியா ஃபிரடர்னிடி ஃபோரம், தம்மாம் பிரிவை சேர்ந்தவர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Wednesday, November 25, 2009

Obama vows to 'finish' Afghan job



Obama is set to reveal if and how many more troops will be added to the 68,000 already deployed [AFP]

The US president has vowed to "finish the job" in the eight-year war in Afghanistan and said he would announce his decision on additional troop deployments and a new strategy "shortly".

Barack Obama said on Tuesday that he plans to end weeks of intense speculation about the way forward in Afghanistan after a three-month strategic review that has drawn fire from opposition critics who accuse him of dithering.

Late on Monday, the president held the ninth and apparently last meeting with his top commanders and national security advisers on the war effort.

Obama faces conflicting pressures amid differences among politicians and the pentagon on an Afghan strategy, as well as waning public support for the war.

A Washington Post-ABC News poll found last week that 46 per cent of Americans support a large influx of troops to battle Taliban fighters and train the Afghan military, while 45 per cent favour a smaller number to focus on training Afghan security forces.

But the US commander-in-chief said he believes the public will support a new strategy once the details are announced.

"After eight years, some of those years in which we did not have, I think, either the resources or the strategy to get the job done, it is my intention to finish the job," Obama said at a news conference with Manmohan Singh, the visiting Indian prime minister, at the White House on Tuesday.

"I will be making an announcement to the American people about how we intend to move forward; I will be doing so shortly."

Al Jazeera's Rosiland Jordan, reporting from Washington, said Obama seemed to indicate some form of additional US troop deployment.

International pressure

But aside from pressures at home, he will have to also overcome growing political pressure in Canada, France and the UK against additional deployment as the Nato allies count the cost of the increasingly deadly war against the Taliban, our correspondent said.

The US leader will have to appeal not just to the Nato leadership but also the populations in member countries to avoid creating an impression that the US is an occupying or colonising power inside Afghanistan.

Obama's decision has also been complicated by concerns about corruption and governance in the administration of Hamid Karzai, the Afghan president.

Karzai was sworn in for a second term last week after an election marred by widespread fraud and farce as his main challenger refused to take part in a second round run-off.

US officials and Western diplomats say they expect Obama's announcement before a Nato meeting on December 7 in Europe in which alliance members could agree to send thousands of additional trainers to Afghanistan.

Obama and his advisers have debated options ranging from sending the tens of thousands more troops requested by General Stanley McChrystal, the top US and Nato commander in Afghanistan, to limiting troop increases and concentrating on attacking al-Qaeda targets.

Reports have suggested that the advisers are rallying around options that would see a deployment of between 30,000 and 40,000 troops and trainers sent to Afghanistan.