அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Sunday, January 9, 2011

ஃபாசிசத்தின் கோரப்பிடியில் - பாதிக்கப்படும் முஸ்லிம் கிராமங்கள்



நமது பகுதிகளில் சங்கபரிவாரங்களின் வெறிச்செயல்களும்,
காட்டுமிராண்டித்தனமான வேலைகளும், அதிகமாக நடந்து கொண்டு இருக்கிறதை
சமீமகாலமாக அதிகமாக நம்மால் காணமுடிகிறது. குஜராத்தில் முஸ்லிம்கள்
படுகொலை செய்யப்பட்டார்கள், கோவையில் முஸ்லிம்களின் சொத்துக்கள்
சூரையாடப்பட்டன, முத்துபேட்டையில் முஸ்லிம்களின் பள்ளிகளின் மீது
கல்வீச்சு மற்றும் முஸ்லிம்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர் என்று
செய்திதாள்களிலும், செய்தி ஊடகங்களிலும் பார்த்து அங்கே அவர்களிடம்
ஒற்றுமையில்லை அதனால் பதிக்கப்படுகின்றனர் என்று கூறிக்கொண்டிருந்த
முஸ்லிம்களே உஷார் !!! இதோ அந்த பிரச்சனைகளும், மிரட்டள்களும் உங்கள்
வீட்டு கதவுகளை தட்ட ஆரம்பித்துவிட்டன. இந்துக்களே ! உஷார் !!
அப்பாவிகளான உங்களை முஸ்லிம்கள் எல்லாம் தீவிரவாதிகள் என்று
கட்டுக்கதைகளை கூறி அண்ணன் தம்பிகளாக வாழ்ந்துவரும் நம்மிடையே பிரச்சனையை
ஏற்படுத்தி அந்த பிரச்சனையினால் விளையும் கலவரத்தில் ஓட்டப்படும்
குருதியில் குளிர்காய நினைக்கிறது சங்கபரிவார ஃபாசிச கூட்டம். இவர்கள்
தங்களது ஃபாசிச கோரமுகங்களை முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதிகளில்
காட்டிவருகின்றனர். சிலமாதங்களுக்கு முன்பு அழகங்குளத்தில் நடந்த ஒரு
பிரச்சனையில் அப்பாவிகளாக அந்த ஊரின் பேருந்து நிலையத்தில்
நின்றுகொண்டிருந்த சில வயதானவர்களை காட்டுமிராண்டித்தனமாக தாக்கி
இருக்கிறார்கள் அத்தோடு முஸ்லிம்களையும், பெண்களையும் தரக்குறைவாக பேசி
கேலிகிண்டல் செய்துவிட்டு சென்றுஇருக்கிறது இந்த கும்பல். அதன்
தொடர்சியாக பனைக்குளத்தில் முஸ்லிம்கள் கொண்டாடும் பெருநாள் தினத்தில்
கடற்கரைக்கு சென்ற பெண்களை தாமரை ஊரணியை சேர்த்த ஒருசில RSS குண்டர்கள்
கேலியும் கிண்டலும் செய்துள்ளனர் இதனை கேட்க சென்ற ஒரு பெரியவரை
இரக்கமில்லாமல் அவரது மண்டையை உடைத்து இருக்கின்றனர். இதன் பிறகு ஒரு சில
இளைஞர்கள் அவர்களை தட்டி கேட்க இருதரப்பினருக்கும் இடையில் சண்டை
நடந்திருக்கிறது. இதன் விளைவாக நடந்த பிரச்சனையினால் நமது பகுதிகளில்
ஓடும் பேருந்துகள் ஒரு நாள் நிறுத்தி வைக்கபட்டிருந்தது. பள்ளிகளுக்கும்
விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் அடுத்த நாள் சென்ற நிஜாம்
பஸ்ஸின் கண்ணாடியை தாமரை ஊரனியில் வைத்து உடைத்திருக்கிரார்கள் RSS
தீவிரவாதிகள். இன்று ஆற்றங்கரையில் ரேஷன் கடையில் சாமான் வாங்கும் பொழுது
ஒரு வயதான ஒரு முஸ்லிம் பெண்மனி வரிசையில் வராமல் பொருள்களை வாங்கியதாக
கூறி அவரை தரக்குறைவாகவும் அவரை மட்டும் அல்லாது முஸ்லிம் பெண்கள்
அனைவரும் இழிவுபடுத்தியும், கேவளமாகவும் பேசியிருக்கிறான்.அதனை தொடர்ந்து
அந்த பெண்னை அரிவாளல் வெட்டி இருக்கிறான் இதனை பார்த்தவர்கள் தடுக்க
சென்ற போது அவர்களையும் பயங்கர ஆயுதங்களால் தாக்கியிருக்கிறான் அவனோடு
சேர்ந்து அவனது நண்பர்களும் சண்டையில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதனால்
பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் என்ன செய்வதென்று தெரியாது திகைத்து நின்ற
வேலையில் வெட்டியகூட்டம் வேலையைமுடித்துவிட்டு வேறுவழியிலும் முஸ்லிம்களை
சிக்கவைக்க வழக்கு தொடுத்துவிட்டார்கள் இதன் விளைவு இரண்டு அப்பாவி
முஸ்லிம் இளைஞர்கள் பிரச்சனைக்கு காரணம் என்று கைதுசெய்யப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஊரிலும் நடக்கும் பிரச்சனையின் பின்னனியில்
நாட்டில் ரத யாத்திரை என்ற பெயரில் இரத்த யாத்திரையை நடத்திய தீவிரவாத
கும்பலை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். அழகங்குளத்தில் நடந்த
பிரச்சனையின் மூலகர்த்தாவாக செயல்பட்டவன் மாதவன் மற்றும் லீலாதரன்.
பனைகுளத்தில் நடத்தபட்ட பிரச்சனையின் முன்னோடியாக தாமரைஊரணியை சேர்ந்த
பாலா, முருகன், மற்றும் கார்த்தி. இன்றைய ஆற்றங்கரையின்
இனவெறிதாக்குதலுக்கு காரணமானவர்கள் பால குரு, நல்ல முத்து, சசி.
இதுபோன்று ஒவ்வொரு ஊரிலும் விரல்விட்டு எண்ணக்கூடிய நபர்கள்
இருந்துகொண்டு இந்து - முஸ்லிம் ஒற்றுமையை குலைத்து வருகின்றனர். இவர்களை
போன்ற சமூக விரோதிகளை இனம் கண்டு சமூகத்தில் இருந்து அப்புறப்படுத்துவது
ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமையாகும்.

No comments: