அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, June 29, 2011

கட்டாயக் கல்விச் சட்டம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

"கட்டாய இலவச கல்வித் திட்ட விதிகளை முடிவு செய்து 6 வாரங்களுக்குள் அறிக்கையாக வெளியிட வேண்டும்" என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.சத்திய சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில் , "6 வயது முதல் 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய இலவச கல்வியை அளிக்க வகை செய்யும் சட்டம் கடந்த 1.4.2010 அன்று அமலுக்கு வந்தது. இந்ச்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகளை ஒவ்வொரு மாநில அரசும் உருவாக்க வேண்டும் என்று அந்தச் சட்டத்தின் 38-வது பிரிவில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதற்கான விதிகள் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

இதனால் தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை அமலுக்குக் கொண்டுவர முடியவில்லை. எனவே அதற்கான விதிகளை உறுதிப்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவைப் பரிசீலித்த நீதிபதிகள், "இந்த விதிகளை முடிவு செய்து 6 வாரங்களுக்குள் தமிழக அரசு அறிக்கையாக வெளியிட வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.

No comments: