தீவிரவாதிகள் கொல்லப்பட்டு வருகின்றனர்
காஸா. உலகின் மக்கள் நெருக்கம் அதிகமுள்ள பகுதிகளில் ஒன்று. உலகின் மிகப்பெரும் சிறைச் சாலையும் அதுதான். சிறையில் அடைத்தது போதாதென்று பத்து நாட்களாய் நரவேட்டையும் நடந்து கொண்டிருக்கிறது. கொல்லப் பட்டவர்களில் 25 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு ஒன்று கூறுகிறது. 500க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனராம். 2000க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளனராம். குண்டு பட்டு மரணிக்காவிட்டாலும் காசநோயை ஏற்படுத்தும் வகையிலான யுரேனியம் கலந்த குண்டுகளைப் பயன்படுத்துகிறதாம். தீவிரவாதிகள் செத்து மடியட்டும்.



No comments:
Post a Comment