அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, October 2, 2009

தேக்கடியில் படகு கவிழ்ந்து 35 பேர் பலி!



தேக்கடியில் படகில் 85 பேருடன் சுற்றுலா சென்ற போது படகு கவிழ்ந்து விபத்துக்கு ள்ளானது.

இந்த விபத்தில் இதுவரை 35 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. கேரள சுற்றுலாத்துறைக்கு சொந்தமான ஜலகன்னிகா என்ற படகில் 85 பேருடன் படகு சென்றுள்ளது. படகு இல்லத்திலிருந்து சுமார் 2 கி.மீ., தொலைவிலுள்ள மனக்காவல என்ற இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பலியானவர்களில் நான்கு பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இருவர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என்று முதல்கட்டத் தகவல்கள் கூறுகின்றன. பலரது நிலை என்னவென்று தெரியவில்லை.

படகில் பயணம் செய்தவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. விபத்து நடந்த பகுதிக்கு மீட்பு குழுக்கள் விரைந்துள்ளன. இந்த படகில் 75 பேர் வரை தான் சுற்றுலா செல்ல முடியும் என்றும் இந்தப் படகு கடந்த ஒரு மாதத்றிகு முன்பு தான் வாங்கப்பட்டது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.


No comments: