அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, October 2, 2009

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!


இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இன்று பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவானதாக அமெரிக்க நிலவியல் அமைப்பு கூறியுள்ளது. தெற்கு சுமத்ராவில் உள்ள படாங் நகரில் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாக இந்தோனேசிய தொலைக்காட்சி கூறியுள்ளது.

நிலநடுக்கம் 7.6 ஆக பதிவானதாகவும் சுமார் 50 கிலோ மீட்டர் பரப்பளவில் உணரப்பட்டதாகவும் இந்தோனேசிய வாணியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.

உயர்வான அலைகள் குறித்து இதுவரை தகவல்கள் இல்லை என்றாலும் இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments: