அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, December 16, 2009

சட்டவிரோதமாக அமெரிக்க எல்லை கடக்க உதவும் சாதனம்


கலிபோர்னியா பல்கலைக்கழக விரிவுரையாளர் ரொட்ரிகோ டொமின்கேஸ், சட்டவிரோதமாக அமெரிக்க எல்லை கடக்க விரும்பும் குடியேறிகளுக்கு வழிகாட்டும் இலத்திரனியல் சாதனம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். கடுமையாக பாதுகாக்கப்படும் அமெரிக்க-மெக்சிகோ எல்லையை கடக்கும் குடியேறிகள் பல ஆபத்துகளை கடந்து வர வேண்டியுள்ளது. மேலும் வழிகாட்டும் நபர்களுக்கு ஆயிரக்கணக்கான டாலர்களை அள்ளிக் கொடுக்க வேண்டிய நிலை. புதிய சாதனம், மொபைல் தொலைபேசிகளை தொடர்பு படுத்தும் GPS வலையமைப்பை பின்பற்றி இயங்கும். எந்தெந்த இடத்தில் தண்ணீரின் அளவு குறைந்துள்ளது, எந்தெந்த இடத்தில் சாதகமான வெப்பநிலை உள்ளது போன்ற தகவல்களை இந்த சாதனம் வழங்கும். சட்டவிரோதமாக குடியேறும் நோக்குடன் வரும் ஒருவர் நவீன சாதனத்தின் உதவியுடன் இலகுவாக எல்லை கடக்க முடியும். அமெரிக்க அரசின் மனிதாபிமானமற்ற குடியேற்றவாத சட்டத்தை எதிர்த்துப் போரிடும் நோக்குடன், இந்த சாதனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க-மெக்சிக்கோ எல்லை கடப்பவர்களை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டாலும், ஐரோப்பாவிலும் இதற்கான தேவை இருக்கின்றது. எல்லை கடக்க வழிகாட்டும் சாதனத்திற்கான மென்பொருளை இணையத்தில் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

டென் மார்க், கோபென்ஹெகன் நகரம் தீப்பிடித்தது


கொபென்ஹெகேன் நகரில் கலவரத்தீ பற்றிக் கொண்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனை எழுதிக் கொண்டிருக்கும் நேரம் வரை, இடதுசாரி இளைஞர்களுக்கும், போலீசுக்கும் இடையிலான போராட்டம் தொடர்ந்து கொண்டிருந்தது.

டென்மார்க் தலைநகர் கொபென்ஹெகனில், ஐ.நா.கூட்டிய பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு கடும் பாதுகாப்புடன் வாரக்கணக்காக நடைபெற்று வருகின்றது. உலகத்தலைவர்கள் கலந்து கொள்ளும் மாநாட்டுக்கு வெளியே, சாமானியரின் மாநாடு வீதிகளில் கூட்டப்படுகின்றது. உலகம் முழுவதிலும் இருந்து வந்த இடதுசாரி ஆர்வலர்கள் கோபென்ஹெகன் நகரில் குழுமியுள்ளனர். பெரு வணிக நிறுவனங்கள் காலநிலை மாற்றத்தையும் லாபம் கொழிக்கும் வியாபாரமாக மாற்ற எத்தனிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வந்திருந்தனர். அனைத்து மக்களுக்குமான கருத்தரங்குகளில் Naomi Klein போன்ற தீவிர முதலாளித்துவ எதிர்ப்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். அனேகமாக ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் யாவும் கோபென்ஹெகன் நகரின் முக்கிய தெருக்களில் இடம்பெற்றுள்ளன.
அரசியல் விழிப்புணர்வுக் கருத்தரங்குகள் "கிறிஸ்டியானா" பகுதியில் இடம்பெற்றுள்ளன. இதனால் கோபென்ஹெகன் நகரின் கிறிஸ்டியானா வட்டாரம், டென் மார்க் போலிசால் முற்றுகை இடப்பட்டது. இடதுசாரிகளின் கோட்டையாக கருதப்படும் கிறிஸ்டியானா இளைஞர்கள் வீதித்தடைகள் போட்டு போலீசுடன் மோதினார்கள். (மோதலைக் காட்டும் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.) கிறிஸ்டியானா பற்றி சில குறிப்புகள். 1970 ம் ஆண்டு, கோபென்ஹெகன் நகரின் மத்தியில் அரசாங்கத்தால் கைவிடப்பட்ட 34 ஹெக்டேயர் பகுதியில், டென் மார்க் இடதுசாரிகள் சென்று குடியேறினார்கள். இவர்களில் அநேகமானோர் ஹிப்பிகள். "கிறிஸ்டியானா" அல்லது "சுதந்திர நகரம்" என்று தமது பகுதிக்கு பெயரிட்டனர்.

வெளி உலகத்தில் இருந்து தம்மை துண்டித்துக் கொண்ட சுமார் 700 "கிறிஸ்டியானா பிரஜைகள்", அங்கே கம்யூன் ஒன்றை ஸ்தாபித்தனர். கூட்டுறவுப் பண்ணைகளை அமைத்தனர். தொழிலகங்கள், பாடசாலைகள், பொழுதுபோக்கு மையங்கள் எல்லாமே அதற்குள் இருந்தன. பணப்புழக்கம் இல்லை. முதலாளி, தொழிலாளி பேதமில்லை. எல்லோரும் ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ வேண்டும். முப்பது வருடங்களுக்கு மேலாக கிறிஸ்டியானா பிரதேசத்திற்குள் போலிஸ் நுழைவதில்லை. ஏனென்றால் அங்குள்ளவர்கள் அரசாங்க சட்ட திட்டங்களை ஏற்றுக் கொள்வதில்லை. இருப்பினும் சில வருடங்களுக்கு முன்னர் கஞ்சா பாவனையை காரணமாக காட்டி, போலிஸ் நடவடிக்கை எடுத்தது. போலிஸ் கிறிஸ்டியானா குடியிருப்புகளை அப்புறப்படுத்த திட்டமிட்டது போல தோன்றியது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இடதுசாரி கலகக்காரர்களின் புகலிடமாக திகழும் கிறிஸ்டீனா, அரச எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தது. முதலாளித்துவம் ஏகாதிபத்தியத்திற்கு எதிரானா போராட்டங்கள் யாவும் அங்கிருந்து தான் வழி நடத்தப்படும்.

தற்போது நடைபெறும் காலநிலை மாநாட்டிற்கு போட்டி மாநாடு நடத்திக் கொண்டிருந்த கிறிஸ்டியானா பொலிசாரின் கெடுபிடிக்கு உள்ளானதில் வியப்பில்லை. டிசம்பர் 15 ம் தேதி, கிறிஸ்டியானா சுற்றுவட்டாரமெங்கும் போலிஸ் குவிக்கப்பட்டது. உள்ளே செல்வோர், வெளியே வருவோர் எல்லோரும் சோதிக்கப்பட்டனர். வீதிப் போக்குவரத்திற்கு தடை விதித்தனர். இதற்கு பதிலடியாக இடதுசாரி இளைஞர்கள் தமது குடியிருப்புகளை சுற்றி காவலரண்கள் அமைத்தனர். அங்கிருந்த படியே போலிஸ் மீது பெட்ரோல் குண்டுகள் வீசினர். வீதிகளில் நின்ற கார்களும் எரிக்கப்பட்டன.






லெபனான் : இன்று ஒத்திகை, நாளை போரிடு!!



லெபனான் : இன்று ஒத்திகை, நாளை போரிடு!!!

மீண்டும் உள்நாட்டுப்போரை நோக்கி நகர்கிறது லெபனான். மீண்டும் இஸ்ரேல், சிரியா, ஈரான், சவூதி அரேபிய, பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய பல அந்நிய சக்திகள் மத்தியகிழக்கின் வாசலான லெபனான் விவகாரங்களில் தலையிடுகின்றன. இருப்பினும் உள்நாட்டில் போராடும் சக்திகளின் அரசியல் சித்தாந்தம் மட்டும் எழுபதுகளில் இருந்தது போன்றில்லாமல் மாறியிருக்கிறது. அப்போது முஸ்லிம்கள்- கிறிஸ்தவர்கள், பாசிஸ்டுகள்-சோசலிஸ்டுகள், என்று பிரிந்து சண்டையிட்ட காலம் அல்ல இது. இஸ்ரேலின் அதி நவீன இராணுவத்துடன் போரிட்டு வென்ற ஹிஸ்புல்லா(கடவுளின் கட்சி) என்ற விடுதலைப்படை, தற்போது லெபனான் அரசாங்கத்திற்கெதிராக தனது துப்பாக்கிகளை திருப்பியுள்ளது.



லெபனான் ஒரு சிறிய தேசமாயினும், பல்வேறு மதப்பிரிவினரை கொண்டுள்ளது. முஸ்லிம்களில் சுன்னி/ஷியா பிரிவினர்கள், தனித்துவமான டுரூசியர்கள், மறோனிய கிறிஸ்தவர்கள் போன்ற பல பிரிவுகள் நீண்ட காலமாக தமக்குள் ஒற்றுமையிலாமல் பிரிந்திருப்பதை, அந்நிய சகதிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்துகின்றன. அதேநேரம் லெபனான் அரசியல்நிர்ணய சட்டம், அனைத்து பிரிவினரும் பங்குபற்றும் ஜனநாயகத்தை கொண்டுள்ளது. இந்த சிக்கல் தற்போது முறுகிவரும் உள்நாட்டு போருக்கு காரணம்.



2006 ம் ஆண்டு இஸ்ரேலிய படையெடுப்பின் போது, கண்மூடித்தனமாக குண்டு வீசியும் ஹிஸ்புல்லா இயக்கத்தை அழிக்க முடியவில்லை. மேலும் அதுவே(ஹிஸ்புல்லாவின் அழிவு) அமெரிக்காவின் நோக்கமாகவும் இருந்தது. சர்வதேச கண்டனம் காரணமாக இஸ்ரேலிய படைகள் பின்வாங்கவே, ஹிஸ்புல்லாவை ஓரங்கட்ட வேறொரு வியூகம் வகுத்தது அமெரிக்கா. பொதுத்தேர்தலில் மேற்குலக சார்பு அரசியல் கட்சிகள் பெரும்பான்மை வெற்றி பெறும் என்று எதிர்பார்த்தது. தனக்கு சார்பான சாட் ஹரீரியின் கட்சி வெற்றி பெற பாடுபட்டது. லெபனானில் பணக்காரர்களும், வசதியான மத்தியதர வர்க்கத்தினரும் அனேகமாக சுன்னி முஸ்லீம் பிரிவை சேர்ந்தவர்கள். அந்த பிரிவை சேர்ந்த கோடீஸ்வரரான முன்னாள் பிரதமர் ஹரீரி குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டதை அடுத்து, அவரது வாரிசு சாட் தலைவரானார். இவருக்கு பக்கபலமாக லெபனான் முதலாளிகள், பணக்காரர்கள் மட்டுமல்ல சவூதி அரேபியா, அமெரிக்காவும் ஆதரவு கொடுத்தனர். அவர்கள் எல்லோரும் "சிரியாவின் ஆதிக்கத்திற்கு" எதிராக அணி திரண்டனர். மறுபக்கத்தில் கீழ் மத்தியதர மற்றும் அடித்தட்டு மக்கள் ஷியா மதப்பிரிவை சேர்ந்தவர்களாக இருப்பதும், அவர்களை ஹிஸ்புல்லா, அமால், ஆகிய கட்சிகள் பிரதிநிதித்துவ படுத்துவதும், அவர்களுக்கு தொடரும் சிரியாவின் ஆதரவும் பலமான எதிர் சக்திகளாக இருந்தன. கடந்த தேர்தலில் யாரும் பெரும்பான்மை வாக்கு பலத்தை பெறவில்லை. இருப்பினும் ஓரளவு பெரும்பான்மையுடன் ஒரு கூட்டரசாங்கம், சாட் ஹரீரி தலைமையில் மேற்குலக சார்பு மந்திரிசபை, ஷியா கட்சிகளின் தயவிலேயே தப்பி பிழைத்தது. இந்த அரசியல் சிக்கல் யாரை ஜனாதிபதியாக்குவது என்ற சர்ச்சையில் கொண்டுவந்து விட்டது. மேற்குலக சார்பு ஜனாதிபதியா, அல்லது சிரியா சார்பு ஜனாதிபதியா? என்ற பிரச்சினைக்கு முடிவு காண முடியாது 17 மாத காலமாக இழுபட்டது.



அமெரிக்காவின் முழு நோக்கமும், லெபனானில் தனக்கு சார்பான ஒரு பலமான அரசாங்கம் உருவாகி, அது ஹிச்புல்லாவை நிராயுதபாணியாக்க வேண்டும். அதாவது இஸ்ரேல் ஆயிரக்கணக்கான குண்டுகளை வீசி சாதிக்க முடியாததை, லெபனானின் நோஞ்சான் அரசாங்கம் செய்து காட்ட வேண்டும் என்று மனப்பால் குடித்தது. அப்படி அரசாங்கம் அதை செய்ய தவறினால், வகுப்புவாத பிரிவினையை தூண்டி விட்டு, உள்நாட்டு போர்(அல்லது கலவரங்கள்?) மூலம் அரசியல் வரைபடத்தை மாற்றுவது தான் தற்போது உள்ள திட்டம். ஒரு பக்கம் ஹிஸ்புல்லா இன்னமும் ஆயுதங்கள் வைத்திருக்கிறது என்று கொக்கரித்துக் கொண்டே, சுன்னி முஸ்லீம் தீவிரவாதிகளுக்கு இரகசியமாக ஆயுதங்கள் வழங்கப்பட்டன. "எமது நண்பர்கள் ஆயுதங்கள் வைத்திருக்க உரிமை உண்டு. எதிரிகளுக்கு அந்த உரிமை கிடையாது." என்பது அமெரிக்கா அடிக்கடி கூறும் நியாயம்.



மே மாதம் ஏழாம் திகதி நடந்த போது வேலை நிறுத்தம், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு எதிராக நடந்தது. அதற்கு ஆதரவளித்த ஹிஸ்புல்லா தலைநகர் பெய்ரூட் செல்லும் சாலைகளை மறித்து தடைகள் போட்டது. அதற்கு ஒரு சில நாட்களிற்கு முன்னர் தான் லெபனான் அரசாங்கம் ஹிஸ்புள்ளாவின் தொலைபேசி இணைப்புகளை செயலிழக்க வைக்க முடிவு செய்திருந்தது. ஹிஸ்புல்லா தனது இயக்கத்தின் தனிப்பட்ட தொடர்புக்கு பிரத்தியேகமான தொலைபேசி இணைப்பை கொண்டிருப்பது புதிதல்ல. ஆனால் அது துண்டிக்கப்பட்டால் அந்த இயக்கத்தின் இரகசிய செயற்பாடுகளை கண்டுபிடிப்பது, மற்றும் தலைவர்களின் மறைவிடங்களை அறிவது இலகுவாகி விடும். இப்படியே போனால் தமது ஆயுதங்களும் விரைவில் களையப்படும் என்பதால் விழித்துக்கொண்ட ஹிஸ்புல்லா, அரசாங்கத்தின் முடிவானது, தம்மீதான போர் பிரகடனம் என்று அறிவித்தது.



"யார் எம்மை கைது செய்ய வருகிறார்களோ, அவர்களை நாம் கைது செய்வோம். யார் எம் மீது சுடுகிறார்களோ அவர்கள் மீது நாம் சுடுவோம்." இவ்வாறு மறைவிடத்தில் இருந்து கொண்டு ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா உரையாற்றிய பின்னர், ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் ஆயுதபாணிகளாக தலைநகரில் நடமாடினர். அவர்கள் ஒரு சில மணிநேரங்களிலேயே பெய்ரூட் நகரத்தை மட்டுமல்லாது, விமான நிலையத்தையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். மேற்குலக சார்பு அரசியல் தலைவர் சாட் ஹரீரியின் வீடு ஆர்.பி.ஜி. ஷெல் வீச்சுக்கு இலக்கானது. அவர் குடும்ப சொத்தான தொலைக்காட்சி நிலையமும், பத்திரிகை அலுவலகமும் தீக்கிரையாக்கப் பட்டன. பிரதமர், மந்திரிகள், அதாவது முழு அரசாங்கம், பலத்த பாதுகாப்புடன் கூடிய மாளிகை ஒன்றில் தம்மை தாமே சிறை வைத்துக் கொண்டனர். தேசிய இராணுவம் பிரச்சினையில் தலையிடாமல் ஒதுங்கிக் கொண்டது. அதற்கு காரணம், இராணுவத்தில் பெரும்பான்மையாக உள்ள ஷியா வீரர்கள் ஹிஸ்புல்லா அனுதாபிகளாக இருப்பதால், எந்தவொரு எதிர் நடவடிக்கையும் தேசிய இராணுவத்தை சீர்குலைப்பதில் போய் முடியும்.



இரண்டு நாட்கள் மட்டுமே தமது பலத்தை காட்டிய ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் வந்த சுவடு தெரியாமல் மறைந்தனர். நடந்த சம்வங்களைவைத்து பார்க்கும் போது, ஹிஸ்புல்லா ஒரு சதிப்புரட்சிக்கு முயன்றதாக தெரியவில்லை. இனி வரப்போகும் போருக்கு ஒத்திகை பார்த்ததாகவே தெரிகின்றது. லெபனான் அரசாங்கம், ஆப்பிளுத்த குரங்கு போல மாட்டிக்கொண்டு முழிக்கிறது. தனது அவமானகரமான தோல்வியை ஒத்துக் கொண்டு, பேசி தீர்ப்போமே என்று இறங்கி வந்துள்ளது. தொலைபேசி இணைப்பை துண்டிக்கும் முடிவை மாற்றி கொள்வதாக கெஞ்சியுள்ளது. அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகளின் முகத்திலும் அசடு வழிந்ததால், ஊடகங்கள் இந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. நிலைமை தாம் எதிர்பார்த்ததுக்கு மாறாக போய் விட்டதால், அவசர அவசரமாக ஐ.நா. பாதுகாப்பு சபையை கூட்டி பிரச்சினைக்கு சுமுகமான முடிவு காணும் படி வற்புறுத்தப்பட்டது.



தற்போது சூடு தணிந்து விட்டாலும், வெகுவிரைவில் உள்நாட்டு போர் உருவாகும் சாத்தியகூறுகள் உள்ளன. ஏற்கனவே ஹிஸ்புல்லா தன்னை போருக்கு தயார்படுத்தி வந்துள்ளது. பல கிராமங்களில் ஆயிரக்கணக்கான இளம் ஆண்கள் மாயமாக மறைகின்றனர். அவர்கள் சிரியா அல்லது ஈரானுக்கு இராணுவ பயிற்சிக்கு அழைத்து செல்லப்படுவதாக ஊர்மக்கள் பேசிக்கொள்கின்றனர்.

Tuesday, December 15, 2009

Deaths as car bombs hit Baghdad



Plumes of smoke rose above the sites of the explosions on Tuesday morning [AFP]

At least four people have been killed and several others injured in a series of car bombs in central Baghdad.

Three explosions went off in separate locations across the city on Tuesday, an Iraqi interior ministry official said.

A police source told Al Jazeera that the explosions were near the Iranian embassy, the foreign ministry and the entrance to the Green Zone.

Ahmed Rushdi, a journalist in Baghdad, told Al Jazeera: "The third [blast] was near a restaurant that is attended by officers from the police and the Iraqi army for breakfast in the early morning.

"It's just outside the Green Zone, which is a big challenge for the security [officials] who are inside the Green Zone and inside the parliament."

The heavily protected Green Zone houses key offices of the Iraqi government as well as the US and British embassies.

Security concerns

The blasts come a week after suicide bombers targeted government buildings in a series of attacks on December 8 that killed 127 people.

Nouri al-Maliki, the Iraqi prime minister, faced questions in parliament last week over those attacks.

He blamed the recent bombings on political discord, saying that disputes between political groups were putting the nation's security at risk.

He also criticised legislators for failing to provide enough money for security. Parliamentarians instead pointed to a lack of co-ordination between ministries.

Tuesday's bombings were the fourth wave of co-ordinated attacks in four months to target official buildings in the Iraqi capital despite the security measures in place.

On October 25, the justice ministry and a provincial office were attacked, with blasts killing 153 people and injuring more than 500.

On August 19, more than 100 people were killed and hundreds injured at the foreign and finance ministries.

கவனித்து திருமணம் செய்க - கிறிஸ்தவர்களுக்கு வேண்டுகோள்

கேரள கிறிஸ்தவர்களிடையே விவாகரத்துகள் அதிகரித்து வருகிறது. இது சம்பந்தமாக கேரள கத்தோலிக்க பாதிரியார்கள் சம்மேளனத்தைச் சேர்ந்த 35 பாதிரியார்கள் கிறிஸ்தவர்களுக்கு திருமணம் செய்யும் முன் கவனித்து திருமணம் முடிக்கும்படி என கொச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த சம்மேளனத்தில் கத்தோலிக்க மதத்தைச் சார்ந்த சைரோ மலபார்,சைரோ மலங்கரா மற்றும் லத்தீன் கதோலிக்க பிரிவினர் உள்ளனர். வெளிநாட்டில் உள்ள பெண்ணையோ அல்லது ஆணையோ திருமணம் செய்பவர்கள் அவர்களைப் பற்றி நன்கு விசாரித்து திருமணம் செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். வெளிநாட்டில் வசிக்கும் ஏற்கனவே திருமணம் ஆனவர்கள் பொய் சொல்லி மீண்டும் திருமணம் செய்வது அதிகரித்து வருவதை சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் தேவாலயங்களில் திருமணத்திற்கு முன் மூன்று ஞாயிற்றுக்கிழமைகளில் தெரியப்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். இதனால் மணமகன் அல்லது மணமகள் பற்றிய விபரங்களை அறிந்து ஏதேனும் மோசடி நடைபெறுவதாக இருந்தால் தவிர்த்துக் கொள்ளலாம் என்றும் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

வயோதிகப் பெண்மணி கைது - இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையின் மற்றுமொரு சாதனை(!?)

நப்லஸ்: கடந்த ஞாயிற்றுக்கிழமை (13.12.2009) அதிகாலையில் நப்லஸ் நகரில் திடீர் தாக்குதலொன்றை மேற்கொண்ட இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை, 65 வயதான உம்மு பாக்கிர் என்ற பெண்மணியின் வீட்டுக்குள் பலவந்தமாகப் புகுந்து அவரைக் கைதுசெய்துள்ளதாக கைதிகள் தொடர்பான கற்கை மற்றும் மனித உரிமைகளுக்கான அஹ்ரார் மையம் தகவல் தெரிவித்துள்ளது. வயோதிகப் பெண்மணியிடம் வீரம்(!?) காட்டும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர்
அஹ்ரார் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உம்மு பாக்கிர் எனும் வயோதிகப் பெண்மணியின் ஐந்து மகன்கள் ஏற்கெனவே இஸ்ரேலிய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு, கடந்த மாதம் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை அவருடைய மருமகள் நில்லி அல் ஸஃபாதியையும் இந்த மாதத் தொடக்கத்தில் அவரது எஞ்சியிருந்த ஒரே மகன் உமர் மற்றும் பேரன் பாக்கிர் பாக்கிர் (வயது 19) ஆகிய இருவரையும் கடத்திச் சென்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அஹ்ரார் மையத்தின் பணிப்பாளர் ஃபுவாட் அல் ஹஃப்ஷ் இதுபற்றித் தகவல் அளிக்கையில், இஸ்ரேலின் பெட்டாஹ் திக்வா தடுப்புக்காவல் நிலையத்தில் தற்போது அடைத்துவைக்கப்பட்டுள்ள உம்மு பாக்கிர் (வயது 65) பலஸ்தீன் கைதிகளிலேயே மிகவும் வயது முதிர்ந்தவர் என்றும், அவருடைய மூத்த மகன் பாக்கிர், மருமகள் நில்லியின் கண்பார்வையற்ற கணவன் ஆகியோரும் இதே தடுப்புக்காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

கொஞ்சம்கூட மனிதாபிமானமின்றி, மகன்களுக்கு உளவியல் ரீதியாக அழுத்தம் கொடுக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் ஏற்கெனவே பல்வேறு நோய்களால் துன்புற்றுக்கொண்டிருக்கும் ஒரு வயது முதிர்ந்த பெண்மணியை இப்படிக் கடத்திச் சென்று தடுப்புக் காவலில் வைத்திருக்கும் மிக இழிவான செயற்பாடானது அதன் மிலேச்சத்தனமான சுயரூபத்தை எடுத்துக்காட்டப் போதுமானதாகும் என்று கடிந்துரைத்த ஃபுவாட் அல் ஹஃப்ஷ், உம்மு பாக்கிரை உடனடியாக விடுவிப்பது தொடர்பில் விரைந்து செயற்படுமாறு சம்பந்தப்பட்டவர்களைக் கோரியுள்ளார்.
திடீர் சோதனை என்ற போர்வையில் தொடர் கைதுகள்
இதே தினத்தில் அல் ஹலீல் நகரத்தில் திடீர் சோதனை என்ற போர்வையில் களமிறங்கிய இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை பலஸ்தீன் இளைஞர் ஒருவரைக் கைதுசெய்து அவரது வீட்டிலிருந்த நகைகளைக் கொள்ளையடித்துள்ளது.

அவ்வாறு கைதுசெய்யப்பட்ட இளைஞரின் பெயர் அக்ரம் அல் ஹத்தாத் என்பதாகவும் அவரது வீட்டிலிருந்த நகைகளே இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் திருடப்பட்டுள்ளன என்றும் உள்ளூர் வட்டாரங்கள் பலஸ்தீன் தகவல் மையத்திடம் தகவல் தெரிவித்துள்ளன.

நன்றி: PIC

சரணடைய வந்த புலிகளைக் கொல்ல கோத்தபய உத்தரவிட்டார்: பொன்சேகா

சர ​ண​டைவதற்காக வந்த விடு​த​லைப் புலி​களின் தலை​வர்​களை சுட்​டுக் கொல்ல பாது​காப்​புச் செய​லர் கோத்​த​பய ராஜ​பக்ஷ உத்த​ர​விட்​டார் என அதி​பர் தேர்த​லில் எதிர்க்​கட்சி வேட்​பா​ள​ரா​கப் போட்​டி​யி​டும் முன்​னாள் ராணு​வத் தள​பதி சரத் பொன்​சேகா குற்​றம்​சாட்​டி​னார்.​

விடுதலைப் புலிகளுடனான சன்டையின்போது ராணு​வப் படை தள​ப​தி​யாக இருந்த சரத் பொன்​சேகா போர் முடிந்த பின்​னர் முப்​ப​டை​க​ளின் தள​ப​தி​யாக பதவி உயர்த்​தப்​பட்​டார்.​ பின்னர் ரா​ஜ​பக்ஷ சகோ​த​ரர்​க​ளு​டன் எழுந்த கருத்து வேறு​பாடு கார​ண​மாக தனது பத​வியை ராஜி​னாமா செய்த பொன்​சேகா,​​ ஜன​வரி 26-ம் தேதி நடை​பெ​றும் அதி​பர் தேர்த​லில் எதிர்க்​கட்​சி​க​ளின் பொது வேட்​பா​ள​ரா​கப் போட்​டி​யி​டு​கி​றார்.​ "சண்டே லீடர்' பத்​தி​ரி​கைக்கு ஞாயிற்​றுக்​கி​ழமை அளித்த பேட்​டி​யில் பொன்​சேகா கூறி​யுள்​ள​தா​வது:​

முல் ​லைத்​ தீவு மாவட்​டம்,​​ நந்​திக்​க​டல் பகு​தி​யில் விடு​த​லைப் புலி​க​ளின் சமா​தா​னக் குழு தலை​வர் சீவ​ரத்​தி​னம் பூலித்​தே​வன்,​​ அர​சி​யல் குழுத் தலைவர் சிங்​கம் நடே​சன்,​​ ராணுவ கமாண்​டர் ரமேஷ் ஆகி​யோர் சர​ண​டை​வ​தற்கு சில மணி நேரம் முன்​னர்,​​ தாங்​கள் முறை​யாக சர​ண​டைய உத​வு​மாறு நார்வே உள்​ளிட்ட சர்​வ​தேச சமூ​கத்​தி​டம் அவர்​கள் மூவ​ரும் வேண்​டு​கோள் விடுத்​த​னர்.​

தொ​லை​பேசி அழைப்​பு​க​ளும்,​​ இ-​மெயி​லும் தொடர்ந்து வெள்​ளம்​போல வந்​த​தை​ய​டுத்து,​​ மூவ​ரும் சர​ண​டைய இலங்கை அரசு ஒப்​புக் கொண்​டது.​ அச்​சு​றுத்​தும் வகை​யில் இல்​லா​மல்,​​ வெள்​ளைத் துணி​யு​டன் 58-வது டிவி​ஷன் படை​க​ளி​டம் சர​ண​டை​யு​மாறு அவர்​கள் கேட்​டுக் கொள்​ளப்​பட்​ட​னர்.​

எ​னி​னும்,​​ மூன்று தலை​வர்​க​ளும்,​​ அவர்​க​ளது குடும்​பத்​தி​ன​ரும் சர​ண​டை​யும்​போது அவர்​களை சுட்​டுக் கொல்ல அதி​பர் மகிந்த ராஜ​பக்ஷவின் சகோ​த​ர​ரும்,​​ பாது​காப்​புச் செய​ல​ரு​மான கோத்​த​பய ராஜ​பக்ஷ உத்​த​ர​விட்​டார்.​ அதன்​ப​டியே அவர்​கள் சுட்​டுக் கொல்​லப்​பட்​ட​னர் என்​று பொன்​சேகா கூறியுள்ளார்.

ரா ​ணு​வத் தள​ப​தி​யாக பொன்​சேகா இருந்​த​ச​ம​யத்​தில்,​​ அவ​ரது சொந்த ஊரான அம்​ப​லன்​கோ​டா​வில் ஒரு நிகழ்ச்​சி​யில் பேசும்​போது,​​ "தனது தலை​மை​யில் விடு​த​லைப் புலி​க​ளுக்கு எதி​ரான போரில் புது​மை​யான,​​ மர​பு​சா​ராத முறை​யில் ராணு​வம் போரிட்​ட​து​டன்,​​ சர​ண​டைய வந்த புலி​க​ளைக் கூட ராணு​வம் சுட்​டுக் கொன்​றது' என்று கூறி​னார்.​

பொன்​சேகா கூறியுள்ள குற்​றச்​சாட்டு குறித்து மனித உரி​மை​கள் துறை அமைச்​சர் மகிந்த சம​ர​சிங்கே கூறி​ய​தா​வது:​
இது ​போன்​ற​தொரு உத்​த​ரவை கோத்​த​பய ராஜ​பக்ஷ பிறப்​பிக்​க​வில்லை.​ பு​லி​க​ளுக்கு எதி​ராக தான் கடு​மை​யான நட​வ​டிக்கை மேற்​கொள்​வ​தில் இருந்து கட்​டுப்​ப​டுத்​தப்​பட்​ட​தாக ஜூலை 10-ல் பொன்​சேகா கூறி​யி​ருந்​தார்.​ தற்​போ​தைய அவ​ரது குற்​றச்​சாட்டு இதற்கு முரண்​பா​டாக உள்​ளது.​

பி​ர​பா​க​ர​னின் பெற்​றோர் தவிர 4 டாக்​டர்​கள்,​​ புலி​கள் தலை​வர்​கள் தயா மாஸ்​டர்,​​ சார்​லஸ் மாஸ்​டர் ஆகி​யோர் வெள்​ளைக் கொடி​யு​டன் சர​ண​டைந்​த​னர்.​ அவர்​கள் இன்​ன​மும் உயி​ரு​டன் உள்​ள​னர்.​ கெளர​வ​மா​க​வும் நடத்​தப்​ப​டு​கின்​ற​னர் என்​றார்.​

மூன்று பேர் சர​ண​டை​வது தொடர்​பாக நார்வே மத்​தி​யஸ்​தர்​கள் தன்னை அணு​க​வில்லை என அதி​ப​ரின் மற்​றொரு சகோதரரும்,​​ அர​சி​யல் ஆலோ​ச​க​ரு​மான பாசில் ராஜ​பக்ஷ கூறியுள்ளார்.

வாக்குறுதியை பேணுதலும் மனித நேயமும்

ஹிரா என்றொரு தேசம். அங்கு நுஃமான் என்ற அரசர் ஆட்சிச் செய்து வந்தார்.ஒரு நாள் நுஃமான் தனது பாதுகாவலர்களுடன் காட்டுக்கு வேட்டைக்கு சென்றார்.வேட்டையின்போது காட்டில் தன்னந்தனியாக வெகு தூரம் சென்றுவிட்டார் நுஃமான். அந்தி சாயும் வேளையில் மேகம் கறுத்து கடும் மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது.

அரசர் நுஃமான் ஒதுங்குவதற்கு ஏதாவது வாய்ப்புகளுண்டா என்று சுற்றும் முற்றும் அலைந்தபொழுது ஒரு ஏழை விவசாயியைக் கண்ணுற்றார். அவர் பெயர் ஹன்ழலா. அவரிடம் தன்னை அரசர் என்பதை காட்டிக்கொள்ளாத நுஃமான் தனக்கு இன்றிரவு தங்கிச்செல்ல ஒரு இடம் வேண்டும் என்று கோரினார். உடனே தனது வீட்டிற்கு அழைத்துச்சென்ற ஹன்ழலா அவருக்கு ஒரு ஆட்டை அறுத்து உணவை தயாரித்துக் கொடுத்ததுடன் சிறந்த முறையில் உபசரித்தார்.

மறுநாள் காலை துயிலெழுந்த நுஃமான் புறப்படத் தயாரான பொழுதுதான் கூறினார் தான் இந்நாட்டின் அரசர் என்றும் ஒரு நாள் தன்னை தனது அரண்மனையில் வந்துக்காணுமாறும் அப்பொழுது உதவிபுரிவதாகவும் ஹன்ழலாவிடம் கூறிவிட்டு சென்றார்.
ஏழை விவசாயியான ஹன்ழலாவுக்கு தனது குடும்பத்தோடு வாழ்க்கையை ஓட்ட போதிய வருமானமின்றி மிகுந்த சிரமத்திற்காளான நேரத்தில் முன்பு அரசர் கூறியதை நினைவுக்கூர்ந்து அரசரை காண அரண்மனைக்கு புறப்பட்டார்.
அரண்மனைக்குள் நுழைந்த ஹன்ழலாவைக் கண்டதும் அடையாளம் கண்டுக்கொண்ட அரசர் நுஃமானுக்கு தூக்கி வாரிப்போட்டது. ஏனெனில் வருடத்தில் ஒருநாள் காலையில் அரசர் யாரைப்பார்க்கிறாரோ அவரை கொலைச்செய்யவேண்டும் என்பது அந்நாட்டின் சட்டமாகவிருந்தது. அந்த நாளில் முதன்முதலில் ஹன்ழலாவைப் பார்த்துவிட்டுத்தான் தனக்கு இக்கட்டான வேளையில் உதவிய இந்த மனிதரையா நாம் கொலைச்செய்யபோகிறோம் என்று திடுக்கிட்டார் அரசர்.
ஹன்ழலாவைப் பார்த்துக்கேட்டார் அரசர், "இந்த நாளிலா நீ இங்கு வரவேண்டும்?" என்று கேட்டவாறு அந்த நாட்டின் நடைமுறையை விளக்கினார். இதனைக்கேட்ட ஹன்ழலா, "எனக்கு இந்த நாளைப்பற்றி தெரியாதே" என்று அப்பாவித்தனமாக பதில் கூறினார்.
வேறு வழியில்லை உன்னை கொன்றுத்தான் ஆகவேண்டும், எனவே உனக்கு சாகுமுன் ஏதாவது ஆசை இருக்கிறதா என்றுக்கேட்டார் நுஃமான். அப்பொழுது ஹன்ழலா, "என்னை நீங்கள் கொலைச்செய்வதற்கு முன் ஒரு ஆண்டு அவகாசம் தாருங்கள்" என்றார். உடனே அரசர், "உனக்கு பிணையாள் யாராவது இருக்கின்றார்களா? எனக்கேட்டார். ஹன்ழலா தனக்கு பிணை யார் தருவார் என்று தேடியபொழுது குராத் என்ற நபர் தான் ஹன்ழலாவுக்கு பிணைதருவதாக வாக்குறுதியளித்தார். இதற்கு சம்மதித்த அரசர் நுஃமான் ஹன்ழாவைச் செல்ல அனுமதியளித்தார். பின்னர் அவருக்கு 500 ஒட்டகங்களை அளித்தார்.
ஒரு வருடம் முடிந்துவிட்டது. ஹன்ழலா திரும்பி வரவேண்டிய நாள். நாட்டின் எல்லையில் அரசர் நுஃமானும் தண்டனையை நிறைவேற்றுபவரும் ஹன்ழலாவுக்காக காத்திருந்தனர். அரசருக்கோ ஹன்ழலா வராமலிருக்க வேண்டுமே என்ற எண்ணத்துடன் கவலையுடன் காணப்பட்டார்.
ஹன்ழலா வருவதற்கான நேரம் முடிவடையும் வேளை தூரத்தில் ஒரு உருவம் தென்பட்டது பக்கத்தில் வந்தவுடன்தான் அரசர் நுஃமானுக்கு தெரிந்தது அது ஹன்ழலா என்று. ஆடிப்போனார் அரசர், தன்னிடம் அவகாசம் கேட்டுவிட்டு தப்பிச்செல்வார் என்று எதிர்பார்த்தால் இவர் இவ்வாறு சரியான நேரத்திற்கு வந்துவிட்டாரே என வருத்தப்பட்டார்.
அருகில் வந்த ஹன்ழலாவிடம் மெல்லக்கேட்டார் அரசர் நுஃமான், "கொலையிலிருந்து தப்பியபிறகு மீண்டும் இங்கு வர உன்னைத்தூண்டியது எது?" என வினவினார். ஹன்ழலா சற்றும் தாமதிக்காமல் பதில் கூறினார், "வாக்குறுதியை பேணவேண்டும் என்பதாலேயே".
நுஃமானின் அடுத்த கேள்வி ஹன்ழலாவுக்கு பிணையளித்த குராதை நோக்கியிருந்தது, "ஹன்ழலா திரும்பி வருவார் என்பது உறுதியில்லாத நிலையில் நீ எதற்கு பிணை வழங்கினாய்?" எனக்கேட்டார். "மனிதநேயம்" என்று பதில் கூறினார் குராத். இந்த பதில்கள் அரசர் நுஃமானின் உள்ளத்தை உலுக்கியது. பின்னர் நுஃமான் அவ்விருவரையும் பார்த்துக்கூறினார், "இவ்விரு குணங்களில் எது சிறந்தது என்று எனக்கு தெரியாது. ஆனால் மூன்றாவது ஒரு நபராக மாற என்னால் இயலாது" என்று கூறி அவ்விருவரையும் விடுதலைச் செய்தார்.
இச்சம்பவத்தைத்தொடர்ந்து அரசர் நுஃமான் தனது பிறரைக் கொலைச்செய்யும் தீய குணத்தை அடியோடு கைவிட்டார்.

Suicide blast rocks Afghan capital


The blast in Kabul came as officials gathered
for an anti-corruption conference [EPA]

At least eight people have been killed and 40 injured in a suicide bomb attack in Kabul, the Afghan capital, the country's interior ministry has said.

The blast occurred on Tuesday outside the Heetal hotel in Wazir Akbar Khan, the diplomatic district of Kabul, said Ahmed Bilal, a national security directorate officer at the scene.

"Eight people have been killed. Four are women. Four others are male and 40 other people have been wounded. It was a suicide bombing," Zamarai Bashary, an Afghan interior ministry spokesman, told AFP news agency.

Steve Chao, Al Jazeera's correspondent in Kabul, said: "This has happened in an area that has a lot of foreign offices - it is near the US embassy.

"We understand that, at the time of the blast, Afghanistan's former vice-president Ahmad Zia Massoud, was also in the area. We understand that he survived the attack."

Former leader 'targeted'

Shah Asmat, an aide to the former vice-president, said he believed that the bomber had intended to attack Massoud's home.

"Of course we were the target," Asmat said.


"Before, the Taliban killed [Ahmad Shah] Massoud. Now, they tried to kill his brother."

Reports say that the blast was heard by government officials, politicians and foreign representatives gathered in another part of the city for an anti-corruption conference hosted by Hamid Karzai, the Afghan president.

The three-day meeting, Karzai's first official act since he was sworn in as president for a second term, is a response to calls from his Western backers to make the country's government more transparent.

"Hamid Karzai stressed at the conference that he is committed to cleaning up government. He said that he will make every Afghan employee accountable, in terms of their earnings and their properties," Chao reported.

"Over the next year, there will be investigations of Afghan employees since 2001, in terms of how much they earn and what property they have."

US and members of the Nato military alliance, which both have thousands of troops in Afghanistan, have welcomed the conference, but have also expressed doubts as to what will be achieved.

"We think the conference is certainly a step in the right direction in that it's important to see the government of Afghanistan addressing corruption issues," John Groch, a US embassy spokesman, said.

"At the same time, however, we're eager to see the government move forward with action."

Crackdown urged

Karzai has come under growing international pressure to take a tough line against government officials suspected of corruption, particularly in the wake of the fraud-tainted presidential poll that took place in August.

Karzai was declared the winner by default when Abdullah Abdullah, his main challenger, pulled out, citing irregularities.

Kai Eide, the senior United Nations representative in Afghanistan, had said earlier in October that there had been "widespread fraud" during the elections.

The calls for the Afghan government to crack down on corruption comes as thousands more US troops prepare to deploy to the country to battle fighters loyal to the Taliban and al-Qaeda.

Barack Obama, the US president, last week ordered 30,000 more soldiers to be sent to the country, following a request by the senior commander of US and Nato forces for more boots on the ground.

Taliban fight

The US's senior military officer said on Monday he was increasingly concerned about the threat posed by Taliban and al-Qaeda fighters sheltering on the Pakistani side of the Afghan border.

Admiral Mike Mullen, chairman of the US joint chiefs of staff, said during a visit to Afghanistan that violence across the country was likely to become more severe in the coming months, with fighters holding the upper hand across about a third of Afghan provinces.

"I remain deeply concerned by the growing level of collusion between the Afghan Taliban and al-Qaeda and other extremist groups taking refuge across the border in Pakistan," Mullen said.

"Getting at this network, which is now more entrenched, will be a far more difficult task than it was just one year ago.

"The insurgency has grown more violent, more pervasive, more sophisticated," he said.

ஆந்திராவில் தெலுங்கானா "நவநிர்மாண் சேனா" துவக்கம்!

ஹைதராபாத்:மண்ணின் மைந்தர்களுக்கு முன்னுரிமைகாகான வாய்ப்பளிக்க வேண்டும் என்று கோரி வரும் ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா போல, தீவிர தெலுங்கானா ஆதரவாளர்கள் சிலர், தெலுங்கானா நவநிர்மாண் சேனாவைத் துவக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.

ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரித்து தெலுங்கானா உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, தெலுங்கானாவுக்கு எதிராகப் போராட்டங்கள் தீவிரமடைய துவங்கியுள்ளன. இந்நிலையில், தெலுங்கானாவைத் தீவிரமாக ஆதரிக்கும் ஆந்திர வழக்கறிஞர்கள் சிலர் ஒன்று சேர்ந்து, தனித் தெலுங்கானாப் போராட்டத்தை இன்னும் கடுமையாக கொண்டு செல்வதற்காக, தெலுங்கானா நவநிர்மாண் சேனாவை உருவாக்க போவதாக அறிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், தெலுங்கானாப் போராட்டத்தை தீவிரமாக்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறோம். ஜெய் தெலுங்கானா என்று சொல்வதற்கு விருப்பமில்லாதவர்கள் மகாராஷ்டிராவில் எம்.என்.எஸ்., கூறிவருவது போல, தெலுங்கானாவை விட்டு வேறு எங்காவது போகட்டும். 50 ஆண்டுகளாக இந்தப் போராட்டம் நடக்கிறது. எங்கள் குறிக்கோளை எட்டாமல் ஓயமாட்டோம்' என்று தெரிவித்தனர்.
ஆனால் ஒன்றுபட்ட ஆந்திராவை வலியுறுத்தும் வழக்கறிஞர்கள், "மத்திய அரசின் முடிவு ஒருதலைப் பட்சமானது. தெலுங்கு மொழி பேசும் மக்கள் அனைவரும் ஒன்று திரள வேண்டும். டி.என்.எஸ்., உருவானால் வன்முறை தலையெடுக்கும்' என்று தெரிவித்தனர்.

தெலுங்கானா கொள்கையைப் பரப்பி வரும் பேராசிரியர் என். கோதண்ட ராமன் டி.என்.எஸ்., பற்றிக் கூறுகையில் எம்.என்.எஸ்., சின் கொள்கைக்கும் தெலுங்கானா போராட்டத்துக்கும் அடிப்படையிலேயே வித்தியாசம் இருக்கிறது. நமது போராட்டம், தெலுங்கானா உருவாவதைத் தடுக்கும் ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டம். தெலுங்கானா பகுதிகளில் வாழ்ந்து வரும் ஆந்திர, ராயலசீமா மக்களுக்கு எதிரான போராட்டமல்ல' என்று தெரிவித்தார்.
source:inneram