இதையடுத்து கைதாகி பாகிஸ்தான் சிறைகளில் அவதியுற்றுவந்த இந்திய மீனவர்கள் 127 பேரும் தாயகம் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் புகுந்து மீன்பிடித்ததாக இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அந்நாட்டு மீனவர்கள் அமைப்பு அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.
இதை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், கைதாகியுள்ள இந்திய மீனவர்கள் குறித்து விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க தனிக் கமிட்டியை அமைக்குமாறு சிந்து உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவு பிறப்பித்தது.
இதை ஏற்று உயர் நீதிமன்றம் தனிக் கமிட்டி அமைத்தது. அந்தக் கமிட்டி இந்திய மீனவர்கள் 127 பேர் மீது பதிவு செய்யப்பட்ட 13 வழக்குகளை கைவிடுவதற்கான முடிவை எடுத்தது.
அக்கமிட்டி தனது முடிவை உச்ச நீதிமன்றத்தில் இப்போது தெரிவித்துள்ளது.
இந்திய மீனவர்கள் மீதான வழக்குகள் கைவிடப்பட்டது இரு நாட்டு மீனவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தன்னார்வ நிறுவனங்கள் வழக்குத் தொடுத்ததை அடுத்து 442 மீனவர்களை பாகிஸ்தான் அரசு விடுவித்தது
No comments:
Post a Comment