அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, October 5, 2011

குரூப்-2 தேர்வு முடிவு 7ம் தேதி வெளியீடு!!!



Tamilnadu civil services group 2 exam resultsகுரூப் 2 தேர்வு முடிவுகள் வரும் 7ம் தேதி வெளியிடப்படுகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) இணைச் செயலாளர் மைக்கேல் ஜெரார்டு நேற்று வெளியிட்ட அறிக்கை: டிஎன்பிஎஸ்சி சார்பில் ஒருங்கிணைந்த சார்நிலை பணி (குருப் 2) எழுத்து தேர்வு உதவி தொழிலாளர் நல அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், தணிக்கை ஆய்வாளர், வருவாய்த் துறையில் உதவியாளர் உட்பட, பல்வேறு துறைகளில் 1,628 குரூப்-2 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு, 2010ம் ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி நடந்தது. அதைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 2 முதல் மார்ச் 28ம் தேதி வரை நேர்முகத் தேர்வு நடந்தது. எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண்கள் பட்டியல் ஏப்ரல் 1ம் தேதி வெளியிடப்பட்டது. இதன் இறுதி தேர்வுப் பட்டியல், 7ம் தேதி வெளியிடப்படும் என, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் செல்லமுத்து அறிவித்துள்ளார்.

No comments: