அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, August 23, 2011

ஹஸாரே மீது அருந்ததிராய் கடுமையான விமர்சனம்



26IN_ROY_275742e
ஹைதராபாத்:அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு எதிராக பிரபல மனித உரிமை ஆர்வலரும், எழுத்தாளருமான அருந்ததிராய் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளார். ஹஸாரேவின் வழிகள் காந்திய வழியாக இருக்கலாம். ஆனால் அவரது கோரிக்கைகள் ஒருபோதும் காந்தியக் கொள்கை அல்ல என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
’தி ஹிந்து’ பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் அருந்ததிராய் கடுமையான விமர்சனங்களை ஹசாரே மீது சாட்டியுள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது: ‘நாட்டில் அவசரமாக கவனம் செலுத்தவேண்டிய ஒரு விஷயத்தில் கூட ஹஸாரே குரல் எழுப்பவில்லை. தனது மாநிலமான மஹாராஷ்ட்ராவில் விவசாயிகள் தற்கொலை தொடர்பாக ஹஸாரே வாயை திறக்கவில்லை. ஹஸாரே முன்வைக்கும் லோக்பால் மசோதா காந்தியடிகளின் அதிகார பரவலாக்கல் கொள்கைக்கு எதிரான அடக்கியாளும் சட்டமாகும்.
அரசின் பாரம்பரிய பொறுப்புகள் கார்ப்பரேட்டுகளுக்கும், அரசு சாரா நிறுவனங்களுக்கும் பெருமளவில் பகிர்ந்தளிக்கும் சூழலில் ஹஸாரேவின் லோக்பால் மசோதா கார்ப்பரேட்டுகளையும், அரசு சாரா நிறுவனங்களையும் முற்றிலும் தவிர்த்துள்ளது.
கார்ப்பரேட் ஊடகங்கள் பொதுமக்களின் விருப்பங்களை கட்டுப்படுத்த முயலும் வேளையில் ஊடகங்களையும், கார்ப்பரேட்டுகளையும், அரசு சாரா நிறுவனங்களையும் லோக்பால் மசோதாவின் வரம்பிற்குள் கொண்டுவருவதற்கு பதிலாக ஹஸாரே இவற்றை முற்றிலும் தவிர்த்துள்ளார்.
இடஒதுக்கீட்டுக் கொள்கையை எதிர்ப்பதில் முன்னணியில் உள்ள ’யூத் ஃபார் இக்யுவாலிட்டி’ என்ற அமைப்புடன் ஹஸாரே குழுவினருக்கு தொடர்புள்ளது. இவ்வமைப்பின் கீழ் செயல்படும் அமைப்புகளுக்கு கொக்கோ கோலா, லெமன்ப்ரதர்ஸ் ஆகிய பன்னாட்டு நிறுவனங்களிலிருந்து பெருமளவிலான பணம் கிடைக்கிறது.
ஹஸாரேவின் குழுவைச் சார்ந்த அரவிந்த் கேஜ்ரவாலின் அமைப்பு ஃபோர்ட் ஃபவுண்டேசனிலிருந்து நான்கு லட்சம் அமெரிக்க டாலரை பெற்றுள்ளது. ஹஸாரேவின் போராட்டத்திற்கு தலைமை வகிக்கும் ’இந்தியா எகைன்ஸ்ட் கரப்ஷன்’ என்ற அமைப்பு பெரும் இந்திய நிறுவனங்களிடமிருந்து உதவி பெற்றுவருகிறது. இப்பொழுது ஊழல் வழக்கிலும், இதர குற்றங்களிலும் சிக்கி விசாரணையை எதிர்கொள்பவர்களும் இதில் உட்படுவர்.
ஹஸாரே கைதுச் செய்யப்பட்டவுடன் ஊழலுக்கு எதிரான போராட்டம் எதிர்ப்பு தெரிவிப்பதற்குரிய உரிமைக்கான போராட்டமாக மாறிவிட்டது. ஆனால், இந்த ஆதரவு, போராடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட ஒரிஸ்ஸாவின் போஸ்கோ நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிலத்தை திரும்ப பெறுவதற்காக விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்திற்கு கிடைக்கவில்லை. இவ்வாறு அருந்ததிராய் கூறியுள்ளார்

A WORLD INSIDE BRILLIANT COLORFUL RAINDROPS

மத்தியபிரதேச மாநிலத்தில் சங்க்பரிவார அமைப்புகளின் 3 நாள் கூட்டம்: முக்கிய முடிவுகள்

புதுடெல்லி:அன்னா ஹஸாரேவின் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை வெற்றிப்பெறச் செய்வதற்கான திட்டங்களை வகுக்க சங்க்பரிவார பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்கள் மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜையினில் 3 நாட்கள் ஆலோசனை கூட்டத்தை நடத்தியுள்ளனர்.
இக்கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸின் சர்சங்க்சாலக் மோகன் பாகவத் மற்றும் பா.ஜ.க, ஏ.பி.வி.பி, பி.எம்.எஸ், வி.ஹெச்.பி ஆகிய அமைப்புகளின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு எதிராக டெல்லிக்கு போதுமான அளவு சுயம் சேவகர்களை அனுப்ப தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஹஸாரேவின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்தை அரசு எதிர்ப்பு போராட்டமாக மாற்றி அதிலிருந்து அரசியல் ஆதாயம் பெறுவதற்கான தந்திரங்களைக் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
பா.ஜ.க தலைவர்களான எல்.கே.அத்வானி, நிதின்கட்கரி, அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் ஆகியோரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்புகளில் தங்களின் பங்கு வெட்ட வெளிச்சமான சூழலில் அதனை மூடிமறைப்பதற்கான தந்திரங்களும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. சங்க்பரிவாரத்தின் தீவிரவாத முகத்தை சர்ச்சையாக்க மத்திய அரசு முயலும் வேளையில் அன்னா ஹஸாரேவின் போராட்டம் நாட்டு மக்களின் கவனத்தை திசைத்திருப்பும் என சங்க்பரிவார தலைமை கருதுகிறது.
அன்னா ஹஸாரேவின் போராட்டம் தொடர்பான விஷயங்களைக் குறித்து விவாதித்ததாகவும், போராட்டத்திற்கு தாங்கள் ஏற்கனவே ஆதரவு தெரிவித்துவிட்டதாகவும் மூத்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் கூறுகிறார்.
உ.பி உள்ளிட்ட மாநிலங்களில் வரவிருக்கும் தேர்தல்களை முன்னிறுத்தி ராமர்கோயில் விவகாரத்தை மீண்டும் தீவிரப்படுத்தவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. கூடுதல் டாக்டர்கள், சார்ட்டட் அக்கவுண்டுகள் உள்ளிட்டோரை ஆர்.எஸ்.எஸ்ஸுடன் நெருக்கமாக்கவும், முன்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் முன்னேற்றம் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.
மாநிலங்களில் பா.ஜ.கவின் செயல்பாடுகளை கண்காணித்துவரும் நியமிக்கப்பட்டுள்ள ஆர்.எஸ்.எஸ் காரியவாஹ்களின் செயல்பாடுகளை கூட்டம் மீளாய்வு செய்ததாக உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
-- 

ஹஸாரே மதசார்பற்றவராக இருந்தால் முஸ்லிம்கள் ஏன் அவருடைய குழுவில் இடம்பெறவில்லை – டெல்லி இமாம் கேள்வி


imagesCAAS0WVU
புதுடெல்லி:அன்னா ஹஸாரே மதசார்பற்றவராக இருந்தால் முஸ்லிம்களை ஏன் அவருடைய குழுவில் இடம்பெற செய்யவில்லை என டெல்லி ஜும்ஆ மஸ்ஜித் இமாம் செய்யத் அஹ்மத் புகாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
மதவாதம்தான் ஊழலை விட தேசத்திற்கு அச்சுறுத்தலானது. மதவாதத்தை குறித்து ஹஸாரே வாயை திறப்பதில்லை. ஹஸாரே அவரின் பின்னணியில் செயல்படும் அரசியல் சக்தியிடமிருந்து விடுபடவேண்டும்.
குஜராத்தில் முஸ்லிம்களை கூட்டுப் படுகொலைச் செய்வதற்கு தலைமை வகித்த நரேந்திரமோடிக்கு புகழாரம் சூட்டியவர்தாம் ஹஸாரே.
முஸ்லிம்களின் நம்பிக்கைக்கு வந்தேமாதரம், பாரத் மாதா கீ ஜெய் போன்ற முழக்கங்கள் எதிரானதாகும். இஸ்லாமிய மார்க்கத்தில் தேசத்தை வணங்கச் சொல்லவில்லை. சில முஸ்லிம்கள் ஹஸாரேவின் போராட்டத்தில் பங்கு பெற்றாலும் கூட அவர்கள் நாட்டின் 25 கோடி முஸ்லிம்களின் பிரதிநிதிகள் அல்லர். இவ்வாறு டெல்லி இமாம் கூறியுள்ளார்.

கஷ்மீரில் கல்லறைகள்:பதிலளிக்க தயங்கும் மாநில அரசு..



untitled
ஸ்ரீநகர்:ஜம்மு கஷ்மீர் மாநிலத்தில் மூன்று வடக்கு மாவட்டங்களில் அடையாளப்படுத்தப்படாத 38 கல்லறைகளிலிருந்து 2156 அடையாளம் காணமுடியாத இறந்த உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக மனித உரிமை கமிஷனின் புலனாய்வு குழுவினரின் அறிக்கை தொடர்பாக பதிலளிக்க மாநில அரசு தயாராக இல்லை.
அறிக்கையை பார்க்கவில்லை எனவும், கிடைத்தவுடன் ஆராய்ந்த பிறகு மட்டுமே பதில் அளிப்போம் என கஷ்மீர் மாநில உள்துறை அமைச்சர் நாஸில் அஸ்லம் வாணி தெரிவித்துள்ளார்.
பாரமுல்லா, பந்திபூர், குப்வாரா ஆகிய மாவட்டங்களில் கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இறந்த உடல்களில் பெரும்பாலானவை துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டவர்களுடையாதாகும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கஷ்மீரிலிருந்து காணாமல் போனவர்களின் உடல்கள் இதில் உட்படும் என கமிஷன் அறிக்கை கூறுகிறது. மனித உரிமை கமிஷனனின் புலனாய்வு அதிகாரிகளின் அறிக்கை தங்களது விசாரணை அறிக்கைகளை உறுதிச்செய்கிறது என கஷ்மீரில் மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பான ஜெ.கெ.சி.சி.எஸ் ஒருங்கிணைப்பாளர் குர்ரம் பர்வேஸ் தெரிவித்துள்ளார்.
அடையாளப்படுத்தப்படாத கல்லறைகள் குறித்து தாங்கள் அறிக்கைகளை வெளியிட்டபொழுது ராணுவத்தை அவமதிப்பதாக எங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது என பர்வேஸ் கூறினார்.

Israel PM guards tell women reporters to remove bras


FOREIGN journalists today spoke of their distress after being asked to remove
their bras for a security check before being allowed into the offices of Israel's prime minister.
The three women were told by security personnel to undress and take off their bras for x-ray in two separate incidents at the
Jerusalem offices of Prime Minister Benjamin Netanyahu earlier this week.
All three complied with the request, despite the distress it caused, in an incident denounced by the
Foreign Press Association (FPA) as "unnecessary, humiliating and counterproductive."
Each of the women was taken behind a curtain in the lobby of the entrance hall and patted down before being
told to undress, then their bras were passed out in full view of male and female colleagues and security personnel,
to be put through an x-ray machine.
Their personal effects were also emptied out in public view and put through the machine.
"The Foreign Press Association strongly condemns the continued harassment of journalists attending media events
at the prime minister's office," a statement from the Tel-Aviv based group said.
"This type of treatment is unnecessary, humiliating and counterproductive."
Sara Hussein, who works for Agence France-Presse (AFP), described the incident as utterly humiliating.
"I can only describe the experience as among the most humiliating in my life," she wrote in a complaint to the FPA.
"I have covered meetings of presidents at the White House and not been subjected to anything similar."
Neither of the other two women reporters, both of whom were deeply distressed by the incident, wished to be identified.
All three have filed detailed complaints with the FPA, which is pursuing the matter with the Israeli authorities.
Officials at the prime minister's office refused to comment directly on the two incidents, saying only:
"We are aware of the concerns and we are looking into the matter."
In January this year, Netanyahu's security staff came under fire for ordering a pregnant Arab correspondent for Al-Jazeera
to remove her bra in order to attend a cocktail event for the press at a five-star hotel in Jerusalem.
The FPA said it was considering whether or not to continue sending its members to events where they risked
such treatment at the hands of the premier's security team.
"After repeated appeals and promises by security officials, it appears that the prime minister's office does not
 have the desire to stop this happening," it said.
"The FPA will begin consulting its members over whether the foreign media should no longer cover events at the PM's office
as this is the only occasion where this type of incident occurs."

2.5 கோடி மதிப்புள்ள நிலத்தை திரும்ப ஒப்படைத்தார் வடிவேலு!

நில அபகரிப்பு புகாருக்கு ஆளான நடிகர் வடிவேலு ரூ.2.5 கோடி மதிப்புள்ள நிலத்தை திரும்ப ஒப்படைத்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். நிலத்தை நடிகர் வடிவேலு ஒப்படைத்ததால் வழக்கு முடிவுக்கு வந்ததாக போலீசார் அறிவித்துள்ளனர்.

நடிகர் வடிவேலு மீது ஓய்வு பெற்ற வங்கி உதவி பொதுமேலாளர் பழனியப்பன்  நிலஅபகரிப்பு புகார் கொடுத்திருந்தார். அந்தப் புகாரில்,

2006ஆம் ஆண்டில் தாம்பரம் அருகே உள்ள இரும்புலியூரில் ஒரு தொழில் முதலீட்டு நிறுவனம் சார்பில் 34 சென்ட் நிலம் ஏலத்துக்கு வந்தது. அந்த நிலத்தை எனது மகன் சொக்கலிங்கம் பெயரில் ரூ. 20 லட்சத்துக்கு வாங்கினேன். முன்னதாக, இந்த நிலத்தை அடமானமாக வைத்துத் தொழில் முதலீட்டு நிறுவனத்திடம் மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த டி.கே.ராமச்சந்திரன் கடன் பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. கடனை அவர் திருப்பிச் செலுத்ததால் அந்த நிலம் ஏலத்துக்கு வந்துள்ளது.

எனது மகன் வெளிநாட்டில் இருந்ததால் நான்தான் அந்த நிலத்தை அவ்வப்போது கண்காணித்து வந்தேன். இதற்கிடையே அந்த நிலத்தை நடிகர் சிங்கமுத்துவுக்குப் போலி ஆவணங்கள் மூலம் ராமச்சந்திரனின் மகன் பிரபு விற்றதாக கூறப்படுகிறது. சிங்கமுத்து அந்த நிலத்தை நடிகர் வடிவேலுக்கு விற்றாராம். போலி ஆவணங்கள் அடிப்படையில் அந்த நிலத்தை இப்போது வடிவேலு தனது மகன் பெயரில் வைத்துள்ளார்.

2009ஆம் ஆண்டு அந்த நிலத்தில் நடிகர் வடிவேலுவின் ஆதரவாளர்கள் சுற்றுச்சுவர் கட்ட ஆரம்பித்தனர். அதைத் தடுக்க நான் முயன்ற போது எனக்கு அவர்கள் மிரட்டல் விடுத்தனர்.

அது குறித்து, அப்போதைய சென்னைப் புறநகர் காவல் ஆணையர் எஸ்.ஆர்.ஜாங்கிட்டிடம் புகார் செய்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பழனியப்பன் தனது புகாரில் கூறியிருந்தார்.

இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், குற்றச்சாட்டுக்குள்ளான அந்த நிலத்தை திரும்ப ஒப்படைப்பதாக வடிவேலு கூறியதைத் தொடர்ந்து இந்த வழக்கை முடித்துக் கொள்வதாக காவல்துறை கூறியுள்ளது.

இஸ்லாமிய விரோத வலைத்தளங்களை தாக்கும் சவுதி பெண்மணி...

Woman disables anti-Islam websitesஅமெரிக்காவில் கல்வி கற்கும் சவுதி அரேபிய யுவதி ஒருவர் டென்மார்க் நாட்டில் இருந்து இயங்கும் 23 வலைத்தளங்களை தனது திறமையின் மூலம் தாக்கியுள்ளார், இவ்வளைத்தலங்கள் அனைத்தும் இஸ்லாத்துக்கு எதிராக இயங்குவதை தமது கொள்கையாக கொண்டுள்ளதுடன் இவைகள் அனைத்தும் நபி பெருமானார் (ஸல்) அவர்களை தூற்றுவதை வாடிக்கையாக கொண்ட இணையத் தளங்களாகும் என அல் மதீனா பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த பத்திரிகைக்கு பேட்டியளித்த நூப் ராஷித் என்ற குறித்த பெண்மணி நபிகளாரை பற்றி இட்டுக்கட்டப்பட்ட விடயங்களையும் மற்றும் கார்டூன்களையும் வெளியிடும் தளங்களையே ஹாக்கிங் செயற்பாடு மூலம் செயலிழக்க செய்ததாக குறிப்பிட்ட அவர் தனது பார்வையில் இத்தளங்களின் செயற்பாடுகள் தவறானவை என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு மேலதிகமாக பல ஆபாச வலைத்தளங்களும் நூப் ராஷித் இனால் செயலிழக்க செய்யப்பட்டதோடு ஆபாச படங்களை எடுத்து அதை பயன்படுத்தி இளம் பெண்களை பயமுறுத்திய ஒரு நபரின் கணனியின் செயற்பாட்டை கட்டுப்படுத்தி குறித்த ஆபாச படங்களை அழித்து பயமுறுத்தல்களுக்கு உள்ளான இளம்பெண்களையும் காப்பாற்றியுள்ளார். கணணியை கற்பதற்கான ஆர்வமே தான் இந்த துறையில் நிபுணத்துவம் அடைய காரணமாகும் என்று நூப் தெரிவித்துள்ளார்.
ஒரு இளைஞன் ஒரு யுவதியை அவளது அந்தரங்க புகைப்படங்களை கொண்டு மிரட்டி அவளை திருமணம் செய்ய முற்பட்ட சம்பவம் தான் ஹாக்கிங் துறையில் திறமைகளை வளர்க்க தூண்டுகோலாக அமைந்ததாக குறிப்பிட்ட நூப், இச்சம்பவத்தின் பின்னர் தன்னுடைய நண்பர்கள் மூலமே ஹாக்கிங் கலையை கற்றதாக கூறியுள்ளார். இதன் மூலம் அல்லாஹ்வின் கிருபையால் மேலும் பல பெண்களை இவ்வாறான சூழ்நிலைகளில் இருந்து நூப் மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
குறித்த டென்மார்க் தளங்களை தாக்கிய நூப் அவ்வலைத்தளங்கள் நடாத்துவோருக்கு பெருமானார பற்றியும் இஸ்லாத்தை பற்றியும் பொருத்தமான தகவல்களை அனுப்பியுள்ளார்.
இணையத்தை பாவிக்கும் இளம்பெண்கள் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று நூப் வலியுறுத்தியுள்ளார். கணணி பராமரிப்பு மற்றும் திருத்த வேலைகளுக்கு அதற்கான கடைகள் மற்றும் கொம்பனிகளில் கணணிகளை கொடுக்கும் போது இளம் பெண்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். இவ்வாறான கடைகள் மற்றும் கொம்பனிகளில் கடமை புரியும் சில நபர்கள் இளம் பெண்களின் கணனிகளில் உளவு மென்பொருள்களை (Spyware) உட்புகுத்தும் சாத்தியங்கள் உண்டு எனவும் தெரிவித்தார்.
மேற்குலக ஊடகங்களின் தகவல்களின் படி அண்மையில் 900 க்கு மேற்பட்ட டென்மார்க் வலைத்தளங்கள் ஹாக்கிங் தாக்குதலுக்கு உள்ளாயின.
ஒரு சர்வதேச இணைய கண்காணிப்பாளர் தகவல் தருகையில் ஒரு சிறிய காலப்பகுதிக்குள் இவ்வாறு பெறும் எண்ணிக்கையான வலைத்தளங்கள் தாக்கப்பட்டது இதுவே முதன் முறையாகும் என்று தெரிவித்துள்ளார். அநேகமான ஹாக்கிங் தாக்குதல்களின் போது குறித்த தளங்கள் செயலிளப்புக்கு மாத்திரமே உள்ளாகும் அதேவளை சில சந்தர்ப்பங்களில் டென்மார்க் அரசையும் மக்களையும் எச்சரிக்கும் வாசகங்கள் பதிவேற்றப்படுகின்றன எனவும் தெரிவித்தார். தாக்கப்படும் தளங்கள் பின்னர் மீண்டும் இயங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவைப்போல் சவுதியிலும் ஹாக்கிங் குற்றத்துக்காக கடுமையான தண்டனைகள் அமுலில் உள்ளமை குறிப்பிட தக்கது.

Funny Creative Foody People Art

 
 

 
 
 
 
 
 

 
 
 
 
 
 


சரவணா ஸ்டோர்ஸில் கோடிக் கணக்கில் தங்கக் கட்டிகள், பணம், ஆவணங்கள் பறிமுதல்!

தியாகராய நகர் மற்றும் புரசை வாக்கத்தில் அமைந்துள்ள சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனங்களில்  வியாழக் கிழமைக் காலை முதல் 500 க்கும் மேற்பட்ட வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். 

இந்தச் சோதனையில் கோடிக் கணக்கிலான மதிப்புடைய கணக்கில் வராத தங்கக் கட்டிகள், பணம் மற்றும் ஆவணங்கள் வருமானவரித் துறையினர் கைப் பற்றியுள்ளனர். இருப்பினும் கைப் பற்றப் பட்ட ஆவணங்கள், பணம் மற்றும் தங்கக் கட்டிகளின் மதிப்பை தெரிவிக்க வருமானவரித் துறையினர் மறுத்து விட்டனர்.

சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனங்கள் தாக்கல் செய்த கடந்த 6 வருட வருமானவரி கணக்கை வருமானவரி துறையினர் மீண்டும் ஆய்வுக்கு எடுத்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.  சரவணா ஸ்டோர்ஸில் நடைபெற்ற சோதனை காரணமாக இரு நாட்கள் சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் மூடப் பட்டு வாடிக்கையாளர்கள் யாரும் அனுமதிக்கப் பட வில்லை.

சில வருடங்களுக்கு முன்னர் ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர்ஸின் மேல் தளத்தில் இருந்து ஒருவர் கீழே விழுந்து மரணமடைந்ததும் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத் தக்கது.