அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, December 6, 2011

மாவோயிஸ்ட் போராட்டம் ஜார்கண்டில் 2வது நாளாக தண்டவாளம் தகர்ப்பு!!!



ராஞ்சி : மாவோயிஸ்ட் கமாண்டர் கிஷன்ஜி கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜார்கண்ட்டில், மாவோயிஸ்ட்கள் நேற்று 2வது நாளாக தண்டவாளத்தை தகர்த்தனர். 
கிஷன்ஜி, பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மாவோயிஸ்ட்கள் கடந்த 2 நாட்களாக போராட்டம் அறிவித்தனர். ஜார்கண்ட் மாநிலம் லதேகர் மாவட்டத்தில் ரயில் தண்டவாளம் கடந்த 3ம் தேதி இரவு தகர்க்ப்பட்டது. 

இந்நிலையில் தன்பாத் மாவட்டம் நிஷித்பூர் மற்றும் மடாரி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டாவாளத்தை மாவோயிஸ்ட்கள் நேற்று முன்தினம் இரவு குண்டுவைத்து தகர்த்தனர். தன்பாத்&காரக்பூர் பயணிகள் கடந்து சென்ற சிறிது நேரத்தில் இந்த குண்டு வெடிப்பு நடந்ததால், பயணிகள் தப்பினர். பலாமாவ் மாவட்டத்தில் வட்டா அலுவலகம் ஒன்றும் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. மாவோயிஸ்ட் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் நேற்று 2வது நாளாக பேராட்டம் நடந்ததால் மார்க்கெட் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. லாரிகளும் ஓடவில்லை.

தொண்டையில் வாழைப்பழம் சிக்கியது எல்கேஜி மாணவன் மூச்சுத் திணறி சாவு!!!

சென்னை : தொண்டையில் வாழைப்பழம் சிக்கியதால், எல்.கே.ஜி. மாணவன்  மூச்சுத் திணறி பரிதாபமாக இறந்தான். சென்னை அடுத்த கீழ்க்கட்டளை, அம்பாள் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவர், தனியார் சாப்ட்வேர் கம்பெனி மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரி. இவரது மனைவி பாக்கியலட்சுமி. இவர் களது மகன் ஹரீஸ் சாய்நாதன். மூன்றரை வயது சிறுவன். இவன் பல்லாவரம், தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தான். 

கிருஷ்ணகுமார், தனது மகனை நேற்று காரில் அழைத்து வந்து பள்ளியில் விட்டுச் சென்றார். ஹரீஸ், காலை 10.15 மணிக்கு பள்ளி வராண்டாவில் சக மாணவர்களுடன் வீட்டில் இருந்து கொண்டு வந்த வாழைப்பழத்தை சாப் பிட்டுக் கொண்டிருந்தான். வேகமாக சாப்பிட்டதாக தெரிகிறது. அப்போது, எதிர்பாராதவிதமாக பழம் தொண்டையில் சிக்கியது. இதில் அவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே வகுப்பு ஆசிரியை ஈஸ்வரி, ஆயா கண்மணி, உடற்பயிற்சி ஆசிரியர் சந்துரு ஆகியோர் அவனுக்கு முதலுதவி செய்தனர். இருப்பினும், மூச்சுத் திணறல் நீடித்தது. பின்னர் வலிப்பு ஏற்பட்டது. 

தமிழகம்-கேரளா இடையேயான உறவை சீர்குலைப் பவர்களுக்கு தண்டணை : உம்மன் சாண்டி!!!



திருவனந்தபுரம்: முல்லை பெரியாறு விவகாரத்தை பயன்படுத்தி, தமிழகம் மற்றும் கேரளா இடையேயான உறவை சீர்குலைக்கும் வகையில் கலவரம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, அம்மாநில முதல்வர் உம்மண் சாண்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தைப் பயன்படுத்தி தமிழர்கள் மீதான வன்முறையை கேரளாவில் சிலர் ஏவியுள்ளனர். குறிப்பாக இடுக்கி மாவட்டத்தில் பல பகுதிகளிலும் தமிழக சுற்றுலாப் பயணிகள், ஐயப்ப பக்தர்கள், தொழிலாளர்களைக் குறி வைத்து கடும் தாக்குதல் நடந்துள்ளது. தமிழர்களின் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் தாக்கப்பட்டுளளன.

குஜராத்:இன​ப்படுகொலைக்​கு உதவியதன் மூ​லம் மோடியிடம் ஆதாயம் பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரிகளி​ன் பட்டியல்


imagesCAZYZ0GI
புதுடெல்லி:மோடிக்கு எதிராக குரல் எழுப்பிய மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் சிறையில் வாடும் வேளையில் குஜராத்தில் முஸ்லிம் இனப்படுகொலை நடைபெற்ற வேளையிலும் அதனைத் தொடர்ந்தும் மோடியின் கட்டளைகளை தவறாமல் நிறைவேற்றி ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு உதவிய ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு மோடி அளித்தது பதவி உயர்வும், ஓய்வுப்பெற்ற பிறகும் பதவியில் நீடிப்பதற்கான அனுமதியுமாகும்.
பி.சி.பாண்டே(1970பாட்ச்):- 
இனப்படுகொலை நடைபெற்ற வேளையில் அஹ்மதாபாத் மாநகர போலீஸ் கமிஷனர். ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் கூட்டுப் படுகொலை நிகழ்த்துவதற்கு உதவும் விதமாக போலீஸை செயலற்றதாக்கினார்.
1000 முஸ்லிம்கள் அஹ்மதாபாத்தில் கொல்லப்பட்ட வழக்கில் ஆதாரங்களை அழித்ததும், தொடர்ந்து நடந்த போலி என்கவுண்டர்களில் பங்கு வகித்ததும் நிரூபணமானது.

பாபர் மஸ்ஜித் நிஜங்களும்-போராட்டங்களும் .

கி.பி.1526 - முதல் பாணிபட் போர் டெல்-க்கு அருகே (இன்றைய ஹரியானா மாநிலத்தில்) பாபருக்கும் அப்போது டெல்-யை ஆண்ட இப்ராஹிம் லோடிக்கும் இடையே நடந்தது. லோடி கொல்லப்பட்டு பாபர் வெற்றி பெறுகிறார். இந்தியாவின் வரலாறு மாறுகிறது. பாபர் முகலாயப் பேரரசின் தலைவராக அறியணை ஏறுகிறார்.
 
கி.பி.1528 - பாபரின் தளபதி மீர்பாகி அயோத்திக்கு வருகிறார். அங்கு முழுமை அடையாமல் கிடந்த பள்ளிவாசலை கட்டி முடித்து அதற்கு பாபரின் பெயரை சூட்டுகிறார். 1524ல் இப்ராஹிம் லோடி டெல்-யை ஆண்டபொழுது இப்பள்ளிவாசலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருந்தது.
 
கி.பி.1853 - முதல் முறையாக பாபர் மஸ்ஜித் நிலம் தொடர்பான சர்ச்சை ஆங்கிலேயர்களால் தூண்டிவிடப்படுகிறது.
 

சமூக நீதி மாநாடு!!!



delhi SJC
சமூக நீதியையும்,சம உரிமைகளையும் தேடி இந்தியாவில் ஒடுக்கப்பட்ட சிறுபான்மை சமூகங்கள் நடத்தி வரும் நீண்ட நெடிய போராட்டத்தின் மகத்தான வளர்ச்சிதான் கடந்த 26,27 தினங்களில் டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக நீதி மாநாடு.
இந்தியாவின் நாலா புறங்களிலும் இருந்து வந்த பிரதிநிதிகள் ஒன்றிணைந்த மாநாட்டின் இரண்டாவது நாள், தேசத்தின் தலைநகரையே ஆச்சரியப்படவைக்கும் வகையில் பெரும் சக்தி பிரகடனத்தின் சாட்சியாக மாறியது.

என்றும் நம் நினைவில்…! நீதிக்காக ஏங்கும் பாபரி!


let we forgot
பாபரி மஸ்ஜித் என்றதும் நம் நினைவில் நிழலாடுவது சிதிலமடைந்த மூன்று கும்பங்கள் கொண்ட ஒரு கட்டடமும், பின்னர் அது மணல் மேடாகத் தகர்க்கப்பட்டதும், பயங்கரவாத ஃபாசிச ஹிந்துத்துவ கோர முகங்களும், நாடு முழுவதும் அதனையொட்டி நடந்த முஸ்லிம் இனப் படுகொலைகளும், இழந்த முஸ்லிம்களின் ரத்தமும், சதையும், அதனை மீட்டெடுப்பதற்கான முஸ்லிம்களின் நீண்டகாலப் போராட்டமும்தான்!
ஹிந்துத்துவ கயவர்கள் 1992 டிசம்பர் 6 அன்று பாபரி மஸ்ஜிதைச் சுற்றி குழுமியிருந்த பொழுது எப்படியும் நம்துனை இராணுவம் மஸ்ஜிதைக் காப்பாற்றிவிடும் என்ற நப்பாசை நம் இதயத்தில் ஓடியது. ஒவ்வொரு கற்களாக பாபரி தகர்க்கப்பட்ட பொழுது நம் நப்பாசையும் தகர்ந்து தரைமட்டமானது.