அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, April 26, 2011

Former foes Iraq and Iran sign extradition accord



Iran and Iraq have signed an accord to extradite “convicts and criminals” wanted by the two neighbors, Iranian state television’s website and newspapers reported on Monday.

Justice Minister Morteza Bakhtiari and his visiting Iraqi counterpart Hassan al-Shammari signed the agreement late on Sunday, Aftab-e Yazd newspaper said.

According to state television’s website, the agreement will allow the “repatriation of convicts and criminals, including those who have fled their country to stand trial and await implementation of their sentence.”

Soon after the deal was signed, speculation emerged that the agreement could lead to the forced repatriation of an Iranian opposition group based in Iraq.

Baghdad has however denied the deal would be used to repatriate the exiled group.

“They are not detainees or prisoners. This agreement is to trade criminals between the two countries,” Iraqi Deputy Justice Minister Busho Ibrahim said.

“It is a judicial cooperation agreement. The other (Ashraf) is a case of refugees, while this agreement concerns criminals,” Mr. Ibrahim said.

Iran’s state TV said there are 302 Iranians in Iraqi prisons and 184 Iraqi nationals in Iranian prisons.

The accord follows a deadly raid on April 8 by Iraqi security forces on Camp Ashraf, set up in the 1980s and which houses about 3,500 members of Iran’s main armed opposition group, the People’s Mujahedeen of Iran (PMOI), and their families.

The raid inside Iraq near the border with Iran killed 34 members of the group, which fought alongside Iraqi forces against the Islamic republic in the 1980-1988 Iran-Iraq war and figures on the US government’s terrorist list. Tehran also considers the group a terrorist threat, and has urged their expulsion from Iraq.

Former Iraqi president Saddam Hussein gave the PMOI refuge in Iraq in the 1980s and some of its fighters joined him in the 1980-1988 war against Iran. The group surrendered its weapons to US forces after the 2003 invasion that ousted Mr. Hussein.

Iran’s judiciary chief, Ayatollah Sadeq Larijani, who oversaw the signing of the agreement, lauded the Iraqi government’s measures against the Mujahedeen, the television website said.

But Mr. Larijani did not specify if Iran would use the agreement to ask for the extradition of Mujahedeen members.

Quoted by Iran’s official IRNA news agency, Mr. Shammari said Baghdad was determined to expel the group from the camp.

On April 11, Iraq asked the exiled group to leave the country by the end of this year.

Iraq’s population is 31.5 million while Iran’s population is under 73 million.

Camp Ashraf has become a mounting problem for Iraqi authorities amid pressure from Tehran to hand over the members of the militant group.

The left-wing, Islamist group was founded in 1965 to oppose the Shah of Iran but it fell out with the clerical regime in Tehran that took power in the 1979 Islamic revolution.

The camp’s fate has been in question since the US military turned it over to Baghdad in 2009 under a bilateral security agreement. Baghdad has said Ashraf residents would be given until year-end to leave the country.

(Sara Ghasemilee of Al Arabiya can be reached at: sara.ghasemilee@mbc.net.)

வீட்டுக்கு வீடு 4 சி.எப்.எல்.பல்புகள் இலவசம்: மின்சாரம் சேமிக்க ஏற்பாடு!

மின்சாரத்தை சேமிக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மத்திய அரசு திட்டத்தில், நான்கு சி.எப்.எல்.பல்புகள் தமிழகம் முழுவதும், ஒவ்வொரு வீட்டுக்கும், இலவசமாக வழங்கப்படவுள்ளன.

தற்பொழுது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறையை சமாளிக்க, மாநிலம் முழுவதும், 2 முதல், 5 மணி நேரம் வரை, மின்தடை செய்யப்படுகிறது.தமிழகத்தை பொறுத்தவரை,பெரும்பாலான மக்கள், தங்கள் வீடுகளில், குண்டு பல்புகளை பயன்படுத்துகின்றனர். இதில், 60 வாட்ஸ் குண்டு பல்பு, தினமும் ஒரு மணிநேரம் எரிந்தால், 65 கிராம் கரியமிலவாயு வெளியேறுவதுடன், மாதத்தில், 1.8 யூனிட் செலவாகும்.அதேநேரம், 15 வாட் சி.எப்.எல்., பல்பு, தினம் ஒரு மணி நேரம் வீதம், ஒரு மாதம் எரிந்தால், 0.45 யூனிட் மட்டுமேசெலவாவதுடன், 16 கிராம் கரியமில வாயு மட்டுமே வெளியேற்றுகிறது.

தமிழகத்தில் ஒன்றரை கோடி, வீட்டு மின் இணைப்பு உள்ள நிலையில், அனைவரும் சி.எப்.எல். பல்பு பயன்படுத்தினால், 1,000 மெகாவாட் மின்சாரத்துக்கு மேல் மிச்சப்படுத்தலாம். மேலும், குண்டு பல்புகளை விட, சி.எப்.எல். பல்புகளில் கரியமிலவாயு வெளியேற்றம் குறைவாக இருப்பதால், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்.

இதை கருத்தில் கொண்டு, மின்சாரத்தை சேமிக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, சி.எப்.எல். பல்புகள் குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதன் உபயோகத்தை அதிகரித்து, மின் உபயோகத்தை குறைக்க, மத்திய அரசு, நாடு முழுவதும் ஒவ்வொரு வீட்டிற்கும், 4 சி.எப்.எல். பல்புகளை இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில், ஒன்பது மண்டலங்களை, இரண்டாக பிரித்து, முதல்கட்டமாக, விழுப்புரம் மின் மண்டலத்தின் சில பகுதியில், சி.எப்.எல். பல்புகள் வழங்கப்பட்டுள்ளன. விரைவில், மற்றமண்டலங்களிலும், இலவச சி.எப்.எல். பல்புகள் வழங்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

குண்டு பல்பை விட, சி.எப்.எல். பல்புகளின் விலை, பல மடங்கு அதிகம். ஒரு, 60 வாட்ஸ் குண்டு பல்பு, 10 ரூபாய்க்கும், அதே வெளிச்சத்தை தரும், 15 வாட்ஸ் சி.எப்.எல். பல்பு, 110 முதல், 140 ரூபாய் வரை விற்கிறது. விலை குறைவாக இருக்கும் குண்டு பல்புகளை, ஏழை மக்களே அதிகம் பயன்படுத்துவதால், தடை விதிக்க அரசு தயங்குகிறது.ஆனால், சி.எப்.எல். பல்புகள் விலை அதிகமாக இருந்தாலும், மின் கட்டணம் சேமிக்கப்படுகிறது. சி.எப்.எல். பல்புகளை இலவசமாக வழங்குவதன் மூலம், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு, அதை வாங்க துவங்கினால், நாளடைவில் குண்டு பல்புகள் உபயோகம், முற்றிலும் நின்று விட வாய்ப்புள்ளது.

முகமது நபியைக் கேலிச்சித்திரம் வரைந்தவர் மீதான வழக்கு விசாரணை!

முகமது நபியைக் கேலிச்சித்திரம் வரைந்த டானிஷ் நாட்டைச் சேர்ந்த ஓவியர் குர்ட் வெஸ்டர்கார்ட் மீதான வழக்கின் விசாரணையை ஜோர்டான் நீதிமன்றம் தொடங்கியது.

முகமது நபியை இழிவுபடுத்தியதாக வெஸ்டர்கார்ட் மற்றும் அவர் வரைந்த சித்திரத்தை வெளியிட்ட டானிஷ் நாளிதழ் உள்ளிட்டோர் மீதான வழக்கின் விசாரணை அவர்கள் ஆஜராகாத நிலையிலேயே ஜோர்டான் தலைநகர் அம்மானில் உள்ள ஒரு நீதிமன்றத்தில் திங்கள் கிழமையன்று தொடங்கப்பட்டுவிட்டதாக இந்த வழக்கைத் தொடர்ந்துள்ள வழக்கறிஞர்களில் ஒருவரான தாரிக் ஹவாமதா கூறியுள்ளார்.

இந்த வழக்கில் சாட்சிகளை விசாரணை செய்வதற்காக வழக்கை மே 8ஆம் தேதிக்கு நீதிபதி நாதிர் ஷஹாதா ஒத்தி வைத்துள்ளார் என்றும் ஹவாமதா கூறியுள்ளார்.

வெஸ்டர்கார்டு வரைந்த கேலிச்சித்திரங்கள் 2005ஆம் ஆண்டில் டானிஷ் நாளிதழ் ஒன்று வெளியிட்டது. பின்னர் மேலும் 17 டானிஷ் நாளிதழ்களில் இந்தக் கேலித்திரங்கள் வெளியானதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் கேலிச்சித்திரத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

2008ஆம் ஆண்டு ஜோர்டானைச் சேர்ந்த 30 நாளிதழ்கள், இணைய தளங்கள் மற்றும் வானொலி நிலையங்கள் இணைந்து வெஸ்டர்கார்டுக்கு எதிராக ஜோர்டானில் வழக்குத் தொடர்ந்தன. இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகுமாறு வெஸ்டர்கார்டுக்கு ஜோர்டான் நீதிமன்றம் ஏப்ரல் 14ஆம் தேதியன்று சம்மன் அனுப்பியது.

75 வயதாகும் வெஸ்டர்கார்டு இந்த வழக்கு குறித்த தமக்கு எவ்வித சம்மனும் வரவில்லை என்றும் சம்மன் வந்தாலும் தான் ஆஜராகும் நிலையில் இல்லை என்றும் கூறியுள்ளார்.

சி.பி.ஐ சாதனை!!

புதுடெல்லி: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல் தொடர்பாக அமைப்புக்குழு தலைவர் சுரேஷ் கல்மாடியை சி.பி.ஐ கைது செய்துள்ளது.

விசாரணையில் பங்கேற்பதற்காக சி.பி.ஐ தலைமையகத்திற்கு வருகை தந்த கல்மாடியை முறைப்படி சி.பி.ஐ கைது செய்தது.

2009- ஆம் ஆண்டு காமன்வெல்த் ஜோதி ஓட்டம் தொடர்பாக லண்டனில் நடத்திய விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து கல்மாடி கைது செய்யப்பட்டுள்ளார்.

எ.எம்.ஃபிலிம்ஸ்,எ.எம்.கார்,வான் ஹயர் ஆகிய நிறுவனங்களுக்கு பெருந்தொகைக்கு ஒப்பந்தம் அனுமதித்தார் என்பது கல்மாடி மீதான வழக்காகும்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல் வழக்கை படு நிதானமாக விசாரித்துவரும் சி.பி.ஐ காலந்தாழ்ந்து கல்மாடியை கைது செய்துள்ளது.

ஆபாசப்படம் பார்ப்போருக்கு அதிர்ச்சி தகவல்

இணையம் மட்டுமின்றி மொபைல்போன், பத்திரிகைகள், ஐபோட், சிடி, டிவிடி போன்றவற்றில் ஆபாசப்படங்களை மிக எளிதாக பார்க்கும் சூழல் தற்போது நிலவுகிறது. இதனால், பல்வேறு நாடுகளில் ஆபாசப்படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அதிக அளவில் ஆபாசப் படங்களைப் பார்ப்பதால், பிரிட்டன் ஆண்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு, பணியிடங்கள், மற்றும் கணவன்-மனைவி உறவு உள்ளிட்டவற்றில் பிரச்னை ஏற்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

சமீபத்தில் பிரிட்டனில் ஆபாசப்படம் பார்ப்பவர்கள் குறித்து, ஆய்வில் 18 முதல் 24 வயதுக்குட்பட்ட பிரிட்டன் இளைஞர்களில் நான்கில் ஒருவர் ஆபாசப்படம் பார்க்கின்றனர் என்று தெரியவந்துள்ளது. அதிக நேரம் தொடர்ந்து ஆபாசப்படம் பார்ப்பதால், மன அழுத்தம் ஏற்பட்டு வேலையில் கவனமின்மை, உறவுகள், தாம்பத்ய வாழ்க்கை போன்றவற்றில் பிரச்னைகளைச் சந்திப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

மேலும்,ஆபாசப்படம் பார்க்கும் இளைஞர்களில் மூன்றில் ஒருவர்,வாரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக படங்களைப் பார்க்கின்றனர். 4%பேர் வாரத்திற்கு 10 மணிநேரத்திற்கும் அதிகமாக ஆபாசப்படங்களைப் பார்க்கின்றனர். இவர்களே அதிக அளவில் மன அழுத்தத்தால் பாதிப்புக்குள்ளாகின்றனர். ஆண்கள் சராசரியாக வாரத்திற்கு 2 மணி நேரமும், பெண்கள் 15 நிமிடங்களும் ஆபாசப்படங்கள் பார்க்கின்றனர்.

1,057 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 80% பேர் "X" தர சான்றிதழ் வழங்கப்பட்ட ஆபாசப்படங்களை விரும்பிப் பார்ப்பதாக தெரிவித்துள்ளனர். இதில், மூன்றிலொரு பெண் இத்தகைய படங்கள் பார்ப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

கல்லூரியில் கலவரம் - 1 ஆம் தேதி வரை மூடப்பட்டது!

கல்லூரி மாணவனின் தற்கொலையை அடுத்து ஏற்பட்ட போராட்டம் சாலை மறியலில் ஆரம்பித்து கல்லூரியை மூட வேண்டிய நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறது. இது பற்றிய விபரம் வருமாறு:

சென்னை செங்குன்றம் அருகே இருக்கும் பாடியநல்லூரைச் சேர்ந்தவர் தனபால். இவர் கூலித்தொழிலாளியாக இருக்கிறார்.
இவரது மகன் இளையராஜா (வயது 20). இவர் வியாசர் பாடியில் உள்ள அம்பேத்கார் கல்லூரியில் முதலாம் ஆண்டு BBA படித்து வந்தார்.

இளையராஜா கல்லூரிக்கு சரியான செல்லாமல் அதிகமாக விடுமுறை எடுத்த காரணத்தால் பள்ளி நிர்வாகம் இவரை தேர்வு எழுத அனுமதிக்க இயலாது என்று கூறி விட்டது. இதனால் மனம் உடைந்த இளையராஜா தற்கொலை செய்து கொண்டார்.

இத்தகவல் கல்லூரியில் பரவியதும் கல்லூரிக்கு வந்த மாணவ, மாணவிகள் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இவர்களோடு இளையராஜாவின் உறவினர்களும் கலந்து கொண்டனர். சாலை மறியலில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் திடீரென போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதோடு, கல்லூரியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். அத்தோடு அல்லாமல் கல்லூரி அலுவலகத்திலுள்ள மேஜை- நாற்காலிகளும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.


எனவே கல்லூரி முதல்வர் சந்திரசேகரன் காவல்துறையில் புகார் செய்ததைத் தொடர்ந்து, கல்லூரியை சேதப்படுத்தியதாகக் கூறி ராஜேஷ், விஜயகுமார், கிருஷ்ணன், வசந்தகுமார், சக்திவேல், ஜெயராஜ், புருஷோத்தமன், பாபு, முகமது, அன்சாரி, ராஜசேகர், பிரவீன், வெங்டேசன், நாகராஜ் மற்றும் மணிகண்டன் ஆகிய 15 கல்லூரி மாணவர்களை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதே புகாரின் அடிப்படையில் மாணவன் இளையராஜாவின் தந்தை தனபால் மற்றும் உறவினர்கள் அன்பு, காமராஜ், திருநாவுக்கரசு ஆகியோரும் கைது செய்யப்பட்டு, சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்டின் உத்தரவின் பேரில்புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


கல்லூரியில் நடைபெறும் மாணவர்களின் தொடர் போராட்டத்தின் காரணமாக கல்லூரி மே 1-ம் தியதி வரை மூடப்பட்டு அனைத்துத் தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து மாயமாகும் இளம் பெண்கள்! அதிர்ச்சியில் கோவை.

கோவை: அடுத்தடுத்து பல இளம்பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் மாயமானதை தொடர்ந்து கோவை நகரம் அதிச்சியில் ஆழ்ந்துள்ளது.

சமீப காலமாக கோவையில் வீட்ட்டை விட்டு வெளியில் செல்லும் பல இளம் பெண்கள் வீடு திரும்புவதில்லை. கோவை ரத்தினபுரி பாலுசாமி நகரை சேர்ந்தவர் சிபி விஷ்ணுதாஸ் இவரது மனைவி கற்பகம்(22). கடந்த 13ம் தேதி வேலை தேடி செல்வதாகக் கூறி தனது ஒன்றரை வயது கைக்குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறிவர் இதுவரை வீடு திரும்பவில்லை. இதேபோல் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள காமராஜர்புரம் முதல் வீதியை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மகள் திவ்யா (வயது 18), கடந்த 12ம் தேதி கோயிலுக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றவர் மாயமானார்.

இதையடுத்து சிங்காநல்லூரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகள் பிரவீணா (வயது 23). கடந்த 4ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. மேலும் கோவை தொப்பிலியாம் பாளையத்தை சேர்ந்தவர் தன்யா யாழினி (வயது 22). தனியார் கல்லூரி ஊழியர். கடந்த 18ம் தேதி கல்லூரிக்கு சென்றவர் மாயமானார்.

சின்னத்தடாகம் மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்த செல்வராஜ் மகள் உமா மகேஸ்வரி(18). பி.காம் முதல் ஆண்டு படித்து வந்தார். கடந்த 9ம் தேதி கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. ராமநாதபுரம் ஆர்.என்.புரம் நேதாஜி நகர் முதலாவது வீதியை சேர்ந்தவர் சந்திரபோஸ். மகன் நடராஜன்(24). கடந்த 19ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. மேலும் கோவை வடவள்ளி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் இவரது மகள் பத்மப்பிரியா (வயது 19). கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்த இவர் கடந்த 11ம் தேதி அதிகாலை நடைப்பயிற்சிக்கு சென்றவர் திரும்பவில்லை.

மாயமான இளம் பெண்களின் பெற்றோர்கள் அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து மாயமான இளம் பெண்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். அடுத்தடுத்து இளம்பெண்கள் மாயமாவதால் கோவை நகரமே அதிச்சியில் ஆழ்ந்துள்ளது.

சவூதி: மதீனா நகரில் 15 இடங்களில் தங்கம் கண்டுபிடிப்பு

சவூதி அரேபியா: மதீனா நகரின் சுற்றுப்புரங்களில் 15 - க்கும் மேற்பட்ட இடங்களில் தங்கம் உள்ளிட்ட உயர் மதிப்பு உலோகங்கள் செறிவுடன் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளன. மதீனா மாநிலத்தின் அல் ஹினாக்கியா, அல் மஹத் பகுதிகளில் ஆய்வு செய்த சவூதி அகழ்வாராய்ச்சி அமைப்பினர் இத்தகவலை செய்தியாளர்களிடம் அளித்துள்ளனர். சவூதியிலிருந்து வெளிவரும் ஓகாஸ் அரபு நாளிதழ் இச்செய்தியை வெளியிட்டுள்ளது

எனினும் இவ்விடங்களில் சுரங்கத் தொழிலை மேற்கொள்ள அரசு தரப்பு மேலதிக அனுமதியைத் தரவில்லை என்று சொல்லப்படுகிறது.
மேய்ச்சல் நிலங்கள், மக்கள் வாழிடங்கள் என்று இப்பகுதி அமைந்துள்ளதே அதற்குக் காரணம் என்றும் அப்பத்திரிக்கைக் குறிப்பு தெரிவிக்கிறது.

சவூதி அரேபியாவில் தற்சமயம் மூன்று தங்கச் சுரங்கங்கள் செயற்படுகின்றன. அவற்றுள் அல் மஹத் அல் தப்பாப், அல் ஷுகைராத் ஆகியன மதீனாவில் அமைந்தவை என்பதும், அல் அமர் (அல் குவாவியா) என்பது ரியாத் பிராந்தியத்தில் அமைந்துள்ளதும் குறிப்பிடத் தக்கது

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் மூன்றாவது குற்றப்பத்திரிகை?

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சி.பி.ஐ. தனது முதல் குற்றப்பத்திரிகையை கடந்த ஏப்ர்ல் 2ம் தேதி, விசேஷ கோர்ட் நீதிபதி சைனி முன் தாக்கல் செய்தது. அதில், தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராஜா, பல்வா உட்பட ஒன்பது பேர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.

இவ்வழக்கில் துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரண்டாவது (துணை) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.அதில், தி.மு.க.கட்சியின் ராஜ்யசபா எம்.பி. கனிமொழி, கலைஞர் "டிவி”யின் தலைமை நிர்வாக அதிகாரி சரத்குமார் ரெட்டி மற்றும் இதில் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவன அதிகாரிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில், இன்னொரு துணை குற்றப்பத்திரிகையும் சி.பி.ஐ. தரப்பில் மூன்றாவது முறையாக தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது, அடுத்து மாதம் 30ம் தேதியன்று தாக்கல் செய்யப்படும் என சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

சி.பி.ஐ குற்றப்பத்திரிக்கையில் கனிமொழி - திமுக அவசர கூட்டம்.

சிபிஐ குற்றப் பத்திரிகையில் கனிமொழி பெயர் இடம்பெற்றுள்ள பரபரப்பான சூழ்நிலையில், திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் முதல்வர் கருணாநிதி தலைமையில் புதன்கிழமை (ஏப்ரல் 27) சென்னையில் கூடுகிறது. இது குறித்து, தி.மு.க.பொதுச்செயலாளர் அமைச்சர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:


மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா மீது குற்றம்சாட்டப்பட்டுள்ள 2 ஜி அலைக்கற்றை வழக்கில், கலைஞர் தொலைக்காட்சியும் இணைக்கப்பட்டுள்ளது. கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தின் சார்பில் வாங்கப்பட்ட கடன் ரூ. 200 கோடியும், வட்டியுடன் திரும்பச் செலுத்தி, அதற்கான வருமான வரித் துறை சம்பந்தப்பட்ட ஆவணங்கள் உள்பட அனைத்தும் ஆதாரமாகத் தரப்பட்டுள்ளன. இத்தனையும் வெளிப்படையான முறையில் நடைபெற்ற ஒன்றே தவிர, எவ்விதமான ஒளிவு மறைவோ சதியோ இல்லை என்பதைக் காட்டி நிரூபித்தும் இருக்கிறோம்.


வாங்கிய கடன் தொகையைக்கூட நேர்மையான முறையில் திருப்பிச் செலுத்தியுள்ள நிலையில் கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தில் கருணாநிதியின் மகள் கனிமொழி ஒரு பங்குதாரர் என்ற முறையிலும், சரத்குமார் நிர்வாகப் பங்குதாரர் என்ற முறையிலும் விசாரிக்கப்பட்டனர். இதைப்போல கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளும் விசாரிக்கப்பட்டார்.


கனிமொழிக்கும், சரத்குமாருக்கும் குற்றப்பத்திரிகை வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிற நிலையில் திமுக எத்தகைய நடவடிக்கை மேற்கொள்வது என்பது பற்றி விவாதிக்க உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் வரும் 27-ம் தேதி காலை 10 மணிக்கு கூடுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் அன்பழகன் கூறியுள்ளார்.

டீன் ஏஜில் மனப்புழக்கம் - பெற்றோர் காரணம்?


டீன் ஏஜ் பருவத்தில் முடிவுகள் எடுப்பதில் தயக்கம் இருக்கும். பெற்றோர்கள் இந்த நேரங்களில் தங்கள் குழந்தைகளிடம் தங்கள் விருப்பத்தைத் திணிக்கக் கூடாது.

உதாரணத்திற்கு அசோக் எனும் டீனேஜ் மாணவனின் அப்பாவிற்கு தன் மகன் ஐஐடியில் சேர்ந்து படிக்க ஆவலாயிருக்க அசோக்கினால் அதன் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற இயலாமல் போக இதனால் அவன் அப்பா அவன் மீது கோபம் கொண்டு வார்த்தைகளை வீசி விட்டார்.

"அந்த நாளில் எனக்குத் தான் இப்படியெல்லாம் படிக்க வசதி இல்லை யாரும் கைட் செய்யவில்லை நான் உனக்கு ஆறாவதிலிருந்து அடித்துக் கொள்கிறேன் என் லட்சியத்தைப் பூர்த்தி செய்ய முடியவில்லை உன்னால் ஹ்ம்ம்?" அசோக் இதனால் குற்ற உணர்வில் மாய்ந்து போனான்.

ஷ்யாம் என்னும் மாணவனுக்கு மெக்கானிகல் இஞ்சினீயரிங்கில் ஆர்வம் ஆனால் அவன் பெற்றோர் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க வற்புறுத்தினர். அவர்களை ஏமாற்ற வேண்டாமென கம்ப்யூட்டர் சயின்ஸ் எடுத்துக் கொண்டவனுக்கு மனதுக்குள் தன் கனவு கலைந்ததில் ஏற்பட்ட வருத்தம் கலகலப்பான சுபாவத்தை அழிக்கத் தொடங்கி விரக்தியும் வேதனையுமாய் ஆக்கி விட்டது.

வர்ஷாவிற்கு சாப்ட்வேர் சம்பந்தப்பட்ட படிப்பே பிடிக்கவில்லை. அக்கவுண்ட்ஸில் ஆர்வம் இருந்தது.
அவள் அம்மாவிற்கோ பெண் பில்கேட்ஸிற்கு வாரிசாய் இருக்க வேண்டுமென வெறி. தனது காலத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பெல்லாம் இல்லையென்ற ஆதங்கம் தன் ஆசையை மகள் மூலமாய் நிறைவேற்றிக் கொள்ள வர்ஷாவை தன் விருப்பப்படி படிக்க வைத்தாலும் சந்தேகம் படர்ந்தபடியே இருந்தது.

வர்ஷா படிக்கும் அறையினை அவள் அறியாமல் நோட்டமிடுவதும், கம்ப்யூட்டரில் உட்கார்ந்தாலே கண்ட பசங்களுடன் சாட்டிங்செய்வதாய் கற்பனை செய்வதும், போனில் பேசினால் கூடவே வந்து நிற்பதுமாய் பெண்ணை நம்பிக்கையின்றி சுற்றி வந்தாள். இதனால் வர்ஷா மன அழுத்தத்திற்கு ஆளானாள்.

சுமதியின் நிலமை இன்னும் மோசம். படிப்பறிவற்ற அவளது பெற்றோர் தினசரி சண்டை போடுவதும் கூக்குரல் இடுவதுமாய் அவளது மனநிலையை சிதைக்க, படிப்பில் கவனம் சிதறியது சுமதிக்கு.

டீன் ஏஜ் பருவத்தினரை முள் மேல் விழுந்த துணி போல ஜாக்கிரதையாகக் கையாள வேண்டியது பெற்றோரின் பொறுப்பு. தங்களது ஆசை, அபிலாஷைகளை வளரும் பயிர் மீது திணித்தால் சுமை தாங்காமல் பயிரே அழிந்து விடக் கூடும். குழந்தைகளுக்கு ரோல் மாடலாய் பெற்றோர் இருக்க வேண்டும்.

· டீன் ஏஜ் பருவ மகன் அல்லது மகளிடம் தோழமையாய் பழகுங்கள்
· படிக்கும் போதில் அவர்கள் கவனம் சிதறாமலிருக்க ஒத்துழையுங்கள்
· வீட்டுப் பிரச்சினைகள், கவலைகளை அவர்களிடம் சொல்லி புலம்ப வேண்டாம்
· படிக்க, அவர்களுக்குப் பிடித்த நேரத்தை அவர்களே தேர்ந்தெடுக்கட்டும்
· சந்தேகப்படுவதை நிறுத்தி, ஸ்நேகிதமாய் அவர்களிடம் பழகி எச்சரிக்க வேண்டியதை எச்சரியுங்கள்
· படிக்கும் பருவத்தில் பசி அதிகமிருக்கும். அன்போடு சமைத்துப் பரிமாறுங்கள். அவகாசமில்லையென்று அடிக்கடி அவர்களை ஹோட்டலுக்கு சாப்பிட அனுப்பாதீர்கள்
· ஹாஸ்டலில் விட்ட பிள்ளைகளுக்கு, கடிதம் அல்லது போன் மூலமாக அவர்களது நலன் விசாரித்துப் பொறுப்பையும் உணர்த்திச் சொல்லுங்கள்.
· உடன் பழகுபவர்களை அடிக்கடி கவனியுங்கள்.

ஸ்ரீசாந்தால் ஜெயிக்கும் கொச்சி.









உலகின் முக்கிய பிரபலங்களின் முகங்களை எளிதாக தேட வழி.

உலகில் முக்கியமாக பிரபலமானவர்களின் முகங்களை நமக்கு
நொடியில் தேடிக் கொடுக்க ஒரு தளம் உதவுகிறது இத்தளத்தில்
சென்று நமக்கு பிடித்த பிரபலங்களை எளிதாக தேடலாம் இதைப்
பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

நமக்கு தேவையான புகைப்படங்களை கூகிள் Images -ல் சென்று
தேடினால் பெரும்பாலும் குப்பையான படங்கள் தான் முதலிடம்
பிடிக்கிறது இதைத்தவிர்த்து நாம் தேடும் பிரபலங்களின் முகங்களை
கொடுக்க ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.ifacesearch.com

இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி நாம் தேட
விரும்பும் பிரபலத்தின் பெயரை கொடுத்து Let’s Search என்ற
பொத்தானை சொடுக்கினால் போதும் அதே திரையில் நமக்கு நாம்
தேடிய பிரபலங்களின் முகங்களை வரிசையாக அழகாக நேர்த்தியாக
கொடுக்கிறது கீபோர்ட்-ல் இருக்கும் வலது மற்றும் இடது பக்க
அம்புக்குறியை அழுத்தி ஒவ்வொரு படங்களாக பார்க்கலாம்.
பிரபலங்கள் மற்றும் முக்கியத்தலைவர்களின் முகங்களை தேட
உதவும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

5 ஆண்டு உழைப்பில் யூடியுப்-ன் நிகரில்லாத மெகா சாதனை

பழுதான CD / DVD -யில் இருந்து தகவல்களை எளிதாக பாதுகாப்பாக மீட்கலாம்

லேப்டாப் (மடிக்கணினி) மூடாமல் மானிட்டரை மட்டும் ஆப்(close) செய்ய புதிய வழி

ஒரே பொருளுள்ள வார்த்தையை மைக்ரோசாப்ட் வேர்ட்-ல் எளிதாக பார்க்கலாம்.

வின்மணி சிந்தனை நல்லது செய்யும் அனைவருமே உயர்ந்தவர்கள் தான். என்றாவது ஒரு நாள் நாம் செய்த உதவிக்கு பலன் கிடைக்கும்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.முதன் முதலில் குடைவரைக் கோவிலை அமைத்தவர் யார் ? 2.அஜந்தா குகை ஒவியங்கள் யாருடைய காலத்தில்   உருவாக்கப்பட்டது ?  3.வெங்கட் ராமன் இந்தியாவின் எத்தனையாவது ஜனாதிபதி ? 4.வரலாற்று ஆய்வாளர்கள் எந்த நாட்டில் அதிகம் இருந்துள்ளனர்? 5.கலிங்கப்போர் எப்போது நடைபெற்றது ? 6.இந்தியாவில் யாருடைய காலம் பொற்காலம் என   அழைக்கப்பட்டது ? 7.முதல் உலகப்போரில் எத்தனை நாடுகள் கலந்து கொண்டது ? 8.இந்தியத் தலைநகர் கொல்கத்தாவில் இருந்து டெல்லிக்கு   மாற்றப்பட்ட ஆண்டு ? 9.இந்திராகாந்தி இரண்டாவது முறையாக  பிரதமர் பதிவியேற்ற   ஆண்டு ? 10.முதல் வட்டமேஜை மாநாடு லண்டலின் கூட்டப்பட்ட ஆண்டு ? பதில்கள்: 1.அசோகர்,2.குப்தர்கள்,3.8,4.சீனா,5.கி.மு. 261, 6.குப்தர்கள் காலம், 7.61 நாடுகள், 8.1912, 9.1967, 10.1930.
இன்று ஏப்ரல் 24

பெயர் : சச்சின் டெண்டுல்கர் பிறந்த தேதி : ஏப்ரல் 24, 1973 தலைசிறந்த இந்திய கிரிக்கெட் ஆட்டக்காரர். தனது 16ஆவது வயதில் பாக்கிஸ்தான் அணிக்கு எதிராக 1989இல்  முதன்முதலாக அனைத்துலக துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். டெஸ்ட்போட்டிகளிலும் ஒரு நாள் அனைத்துலகப் போட்டிகளிலும் அதிக ஓட்டங்களை எடுத்த வீரர் இவரே, வரையறுக்கப்பட்ட ஓவர் அனைத்துலகப் போட்டிகளில் (LOI) அதிகபட்சமாக இரட்டைச்சதம் (200* ஓட்டங்கள்) எடுத்தவர் என்ற பெருமையும் டெண்டுல்கரைச் சேரும். உங்களால் இந்தியாவுக்கு பெருமை.

போலி சாமியார்களின் முன்மாதிரி - சத்திய சாய் பாபா !


தோற்றம் : அண்மையில் கல்லீரல், மூச்சடைப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு இறந்த பிரேமானந்தம் என்கிற சாமியார் அவதாரத்தின் (?) சாமியார் ஆசைக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர் தான் சத்திய சாய்பாபா. மக்களின் மனதில் உடனடியாகப் பதியவைக்க போதனைகளை விட உருவமே முதன்மையானது என்ற அடிப்படையில் தலைக்கு மேல் அடர்ந்த காட்டை வளர்த்து வைத்திருந்தவர் சத்திய சாய்பாபா. இது சாமி, ஒண்ணும் செய்யாது, கும்பிட்டுக் கொள் என்று சொல்லாவிடில் குழந்தைகள் பார்த்தால் பயந்துவிடும் தோற்றம் தான். ஒரு சாமியாரின் ஆன்மிக வியாபாரத்தில் தோற்றமே விளம்பரத்தின் ப்ளேவர் என்பதை நிருபனம் செய்து காட்டியவர் சத்திய சாய்பாபா. விவேகானந்தர், இராமகிருஷ்ணன் சீரடி சாய்பாபா மற்றும் நம்ம பக்கத்து வள்ளலார் உள்ளிட்டோர் மாறுபட்ட ஒரு தோற்றத்தை மக்கள் மனதில் பதிய வைக்க முயற்சி செய்யவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. அவர்களைப் பற்றி அறிந்து கொண்டதன் மூலம் அவர்களது தோற்றங்களும் மனதில் நிற்கிறது. ஆனால் சத்திய சாய்பாபாவை நினைக்க அவரது அடர்ந்த தலையே போதுமானதாகும். இதே யுத்தியைத்தான் பிரேமானந்தம் பயன்படுத்தினார். அதே போன்று முடி வளர்ந்தாலும் கூந்தல் போல தொங்குவதால், பெண் போல தோற்றம் தருவதால் அதை அப்படியே தலைப்பாகையில் மறைத்துக் கொண்டு சிரித்துக் கொண்டிருக்கிறார் நித்தியானந்தம். ஆக சாமியார் தொழிலுக்கு தலைமுடியோ மூலதனம் என்று செயலில்காட்டி வென்றவர், முன்னோடி சத்திய சாய்பாபாதான். ஆன்மிக அதிசயம் என்கிற பெயரிலும், அற்புதம் என்ற பெயரிலும் படத்தில் இருந்து விபூதி கொட்டுவது, கனவில் ஊடுறுவது, மோதிரம் வரவழைப்பது, லிங்கம் (வாந்தி எடுத்து) வரவழைப்பது உள்ளிட்ட மாய விளையாட்டுகள் (மேஜிக்) இதை பிரேமானந்தம் உள்ளிட்ட பல சாமியார்கள் பின்பற்றினார்கள், கடவுளால் வெறும் கையினால் முழம் போட முடியும் என்கிற நம்பிக்கை உடைய பக்தர்களை இந்த வித்தைகள் உடனடியாகக் கவர்ந்தது, இவர்களும் கடவுள் அல்லது கடவுள் அவதாரம் என்று அவர்களின் பக்தர்கள் நம்புகிறார்கள், படத்திலிருந்து விபூதி கொட்டுவது, படத்தில் இருக்கும் மாலையை வளரச் செய்வது போன்ற வித்தைகளை கொண்ட மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரும் அவரது சக்தி வழிபாட்டு மன்றங்களும் வளர்ந்திருப்பதும் கூட இத்தகைய வித்தைகளினாலே. மாலை வளரும் பின்புலன் என்ன வென்று தெரியாது, ஆனால் முதனாள் மாலை மறுநாள் ஒரு அடியாவது நீளமாக இருக்கும், அதாவது கொஞ்சம் அடர்த்தியாகக் கட்டப்பட்டபட்டு படத்தில் போடப்பட்ட மாலை இழுத்துவிட்டது போல் கொஞ்சம் நீளம் கூடி இருக்கும் பூக்களின் எண்ணிக்கை கூடி இருக்காது, இதை நான் கண்ணால் பார்த்துள்ளேன். நூலை அல்லது மாலை கட்டப்பயன்படுத்தும் நாரை குறிப்பிட்ட இரசாயணத்தில் நினைத்து எடுத்து மாலை கட்டினால் நீளும் தன்மை ஏற்படுமா ? அல்லது குறிப்பிட்ட நீளமுள்ள நாரை இராசயணத்தில் நனைப்பதன் மூலம் சுறுங்கி அதன் பிறகு மாலை கட்ட மறுநாள் முதல் நார் தன் ஒரிஜினல் நீளத்தை நோக்கி தளர்ந்து நீளுமா என்பது தெரியவில்லை, ஆனால் இவற்றில் இருப்பது வெறும் இராசயண மாற்றம் தான். இவை பயபக்தியுடன் கடவுளின் அற்புதமாக நம்பப்படுகிறது. இவர்களில் எந்த சாமியாரும் ஏழை பக்தர்களுக்கு தங்க மோதிரம், தங்கை சங்கிலி வரவழைத்துக் கொடுத்தது இல்லை, அவர்களுக்கு வெறும் கையால் கொட்டப்படும் திருநீறு மட்டுமே கிடைக்கும். கோவிலில் அருச்சனை தட்டில் நூறு ரூபாய் போட்டால் உபரியாகக் கொடுக்கப்படும் பிரசாதம் போல ஆசிரமங்களுக்கு வரும்படி தருபவர்களுக்கும், அரசியல் ரீதியில் அரசு ஆதரவு தருபவர்களுக்கு மட்டுமே தங்க மோதிரம், தங்க செயின் வழங்கப்படும். ஒருகிராம் தங்கத்தை மணலில் இருந்து பிரிக்க எத்தனை டன் மணல் தேவைபடுகிறது என்பது இந்த சாமியார்களுக்கு தெரிந்திருக்க ஞாயமில்லை. செக்ஸ் சர்சை : சத்திய சாய்பாபா சிறுவர்களுடன் செக்ஸ் சில்மிசம் என்கிற சர்சையில் பலகாலம் அடிப்பட்டு வருகிறார், இன்றைய காலத்தைப் போலவே அவர் 50 வயதுவரை இருந்த காலத்தில் உயர் தொழில் நுட்பம் இருந்திருந்தால் நித்தியைப் போல் ஏதேனும் ஒரு விடியோவில் சிக்கி இருக்கக் கூடும், ஆதாரம் இல்லாமல் எதையும் நம்ப முடியாது என்று சொல்லிக் கொள்வோரை விட சாமியார்களும் மனிதர்கள் தானே அவர்களுக்கு உணர்ச்சி இருக்காதா ? விருப்பதுடன் கூடிய பாலியல் தேவை தவறில்லையே என்று தனிமனித உரிமை பேசுவோர்கள் நிறைய உண்டு. ஆனால் பாபாவின் மீது பாலியல் குற்றச்சாட்டுவைத்தவர்கள் பலகாலம் அவருடன் ஆசிரமத்தில் தங்கி இருந்தவர்கள் என்பதால் அவர்களது குற்றச் சாட்டை புறம்தள்ளிவிட முடியாது. மாட்டிக் கொள்ளாதவன், ஆதரம் வைக்காதவன் குற்றவாளியே இல்லை என்கிற நீதிமன்ற தீர்ப்புகள் அடிப்படையில் வேண்டுமானால் பாபாவின் மீதான பாலியல் குற்றச் சாட்டுகளுக்கு ஆதரமில்லை என்று கூறலாம், ஆனால் அவ்வாறு குற்றம் சுமத்துபவர்களை இவர்கள் மானநஷ்ட வழக்கு போட்டு நீதிமன்றத்திற்கு இழுக்காதது, இவர்களின் கள்ள மவுனம் பொருள் பொதிந்தது என்றும் கொள்ள வேண்டி இருக்கிறது. சத்தியசாய் பாபாவைப் போலவே செக்ஸ் சர்சைகளில் அடிபட்டு தண்டனை பெற்றவர் பிரேமானந்தம், தொடர்ந்து அடிபட்டாலும் இன்னும் தண்டனை பெறாதவர்கள் நித்தி மற்றும் கல்கி, காஞ்சி பெரியவா சாமியார்கள். நானே கடவுள் : சத்தியசாய், பிரேமனந்தம், நித்தியானந்தம், கல்கி மற்றும் பங்காரு - இவர்கள் அனைவருமே தானே கடவுள் மற்றும் அவதாரம் என்று கூறிக் கொள்பவர்கள், இவர்களின் மடங்களில், மன்றங்களில் இவர்களது படங்களே முக்கியமாக வணங்கப்படும், ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், இவர்களில் ஒருவர் அவதாரம் என்றால் மற்றவர்களெல்லாம் போலி. ஏனென்றால் இவர்களெல்லாம் சமகாலத்தில் வாழ்ந்தவர்கள், இவர்களுக்குள் பொதுவானக் கொள்கை என்று எதுவுமே கிடையாது. மக்களின் அடைப்படை நம்பிக்கையான பக்தியையும் பயத்தையும் மூலதனமாக்கிக் கொண்டவர்கள் என்பது தவிர்த்து வேறெந்த ஒற்றுமையும் கிடையாது, ஒரு சாய் பக்தரிடம் சென்று பங்காரு அடிகளாரும் அவதாரம் தானே என்று கேளுங்கள், ஒரு பங்காரு அடிகளார் பக்தரிடம் சென்று நிதியானந்தம் கடவுளா என்று கேளுங்கள், எவருமே ஒப்புக்கு கூட ஒப்புக் கொள்ளமாட்டார்கள். இந்த அவதாரங்களின் (அவ)லட்சணம் அவரவர் பக்தர் என்ற அளவில் தான், ஆனாலும் கட்சிக்காரத் தொண்டன் தன் தலைவனை உலகமாகத் தலைவன் என்று உயர்த்திப் பாடுவது போலவே, மதவாதிகள் எங்களது கடவுளும் இறைத்தூதரும் தான் டாப்பு மற்றதெல்லாம் டூப்பு என்று சொல்வது போன்று உலகுக்கான ஒரே ஒளிவிளக்கு எங்கள் சாமி(யார்) தான் என்று கூவுவார்கள். ஒற்றுமை : பணக்காரர்களில் இருவகை தான் உண்டு, ஒன்று பரம்பரை பணக்காரன், மற்றொன்று திடிர் பணக்காரன், இராசாவைப் போன்ற திடிர் பணக்காரர்களில் பெரும்பாலோர் அரசை, மக்களை பல்வேறு வகையில் ஏமாற்றி அந்த நிலையை அடைந்தவர்கள், அவர்களில் பலர் இல்லாத மனசாட்சி உறுத்துவதாக நினைத்தும், மன அமைதிக்காவும் இத்தகைய சாமியார்களை நாட, சாமியார்களுக்கும் பணக்காரர்களுக்கும் நெருக்கம் என்பது அடிப்படை தேவை என்ற அடிப்படையில் இயல்பாகவே ஏற்பட சாமியார்களின் சொத்துக்கள் இமயமலையை ஏளனம் செய்யத் துவங்குகின்றன. இந்த சாமியார்கள் உண்மையிலேயே கடவுளின் அவதாரம் என்றால் முறைகேடாக சம்பாதிப்பவர் எவரும் எங்களுக்கு நன்கொடை அளிக்கத் தேவை இல்லை என்று வெளிப்படையாக அறிவிப்பார்கள், ஆனால் அவ்வாறு எதுவும் நடைபெற்றதே இல்லை, கொள்ளைச் சொத்தில் எனது பங்கு என்பதாகத்தான் அவர்கள் வளர்ந்துள்ளனர். பணக்காரர்களை கொள்ளையடிப்பதில் சாமியார்கள் அனைவருமே முகமூடி இல்லாத திருடர்கள் போல் தான் செயல்படுகின்றனர். இதுவே இவர்களது தொழில் ஒற்றுமை. தாதா : தாதா என்றால் வள்ளல், தற்காலத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்து நாலு பேருக்கு வேலு நாயக்கர் பாணியில் நல்லது செய்தால் அவர்கள் தாதா எனப்படுகின்றனர். பாபா உள்ளிட்ட சாமியார்களும் ஒருவகையில் தாதாக்களே, இவர்களிடமும் ஆள் பலம், பண பலம் எல்லாமும் உண்டு, அதே போன்று பணக்காரர்கள் கொடுக்கும் பங்கு பணத்தில் பல்வேறு உதவிகள் செய்கின்றனர். சென்னைக்கு தண்ணீர் கொடுக்க பாபா 200 கோடி தந்தார் என்று முதல்வர் புகழாரம் சூட்டி இருக்கிறார். 200 கோடியும் எந்த எந்த பாவங்களை குறைக்க வேண்டும் என்ற வேண்டுதலில் இவர்களிடத்தில் வந்ததோ. யார் யாரோ செய்த பாவத்தின் பரிகாரமாக சென்னைக்குத் தண்ணீர். 200 கோடி கொடுக்க மனது வேண்டுமே ? பில்லியன்களில் சொத்து மதிப்பு, 200 கோடி அவர்களுக்கு பெரிதே இல்லை. பாகிஸ்தான் மக்களுக்கு ரூ 500 கோடி சமூக நலன் நிதி என்று தாவூத் இப்ராஹிம் அறிவித்தால், பணம் எங்கிருந்து வந்தது என்ற கேள்வி எழுப்பாமல் பாகிஸ்தான் தாவூத் இப்ராஜிமை கொண்டாடும் என்று தான் நினைக்கிறேன். பொது புத்தி : சாய் பாபா யாராக இருந்தால் என்ன ? மெஜிக் செய்தால் என்ன ? மக்களுக்கு நல்லது செய்கிறார், எனக்கு பிடிச்சிருக்கு.... நாலு பேருக்கு நல்லது செய்தால் எதுவுமே தப்பில்லையாம். ஒருவர் எந்த வழியில் வேண்டுமானாலும், பணம், புகழ் ஈட்டலாம் ஆனால் நாலு பேருக்கு நல்லது செய்ய வேண்டும், அவ்வாறு செய்தால் அவரது பின்புலன் பேசப்படாது, மக்கள் கொண்டாடுவார்கள். இராசபக்சே கூட சிங்களர்களுக்கு ஹிரோதான், மாவீரன் தான். சிங்களருக்கு நல்லது செய்கிறாரே.


ஆபாச ஆடைக்கும் ஆண்மைகுறைவுக்கும் தொடர்பு !!!



பெண்கள் கவர்ச்சிகரமான ஆடைகள் அணிவதாலும், கவர்ச்சிப் பதுமைகளாக வலம் வருவதாலும் ஆண்களின் ஆண்மை பாதிக்கப்படுவதாய் ஒரு புதிய ஆராய்ச்சி தனது முடிவை வெளியிட்டிருக்கிறது. அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் இந்த ஆராய்ச்சி நீண்ட நெடிய முப்பது வருடங்கள் நடத்தப்பட்ட ஆய்வு என்பது குறிப்பிடத் தக்கது.

அறுபது வயதுக்கு மேலான ஆண்களில் 60 விழுக்காடு பேர் புரோஸ்ட்ரேட் புற்று நோயால் தாக்கப்படுவதும், முப்பது வயதுக்கு மேற்பட்ட 35 விழுக்காடு ஆண்களிடம் இந்த புற்றுநோய் அறிகுறி மற்றும் ஆண்மைக்குறைவு இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவின் லீனாய்ட் எனும் மருத்துவர் இது குறித்து கூறுகையில், நவீனப் பெண்களின் இத்தகைய ஆடைக் கலாச்சாரமும், வசீகரிக்கும் வனப்பை வெளிக்காட்டும் மோகமும், ஆண்களின் மனதில் பல்வேறு கிளர்ச்சிகளை ஏற்படுத்துவதாகவும், அவர்களுடைய ஏக்கங்களை அதிகரிப்பதாகவும், தாம்பத்திய வாழ்வின் திருப்தியைத் திருடிக் கொள்வதாகவும் பல்வேறு காரணங்களை அடுக்குகிறார்.
இப்படி பாலியல் ரீதியான கிளர்ச்சிக்கு ஆண்களை இட்டுச்செல்லும் பெண்களின் ஆடைப் பழக்கம் ஆண்களிடம் கனவுகளை வளர்த்தும், நிஜத்தை ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலைக்குத் தள்ளியும் அவர்களை மனம் மற்றும் உடல் சார்ந்த பல்வேறு நோய்களுக்கு இட்டுச் செல்கிறதாம். அரேபிய நாடுகளில் இத்தகைய சிக்கல்கள் மிகவும் குறைவு.
முதலில் இதற்கு கால நிலையும், உணவுப் பழக்கவழக்கங்களே காரணம் என கருதப்பட்டது. ஆனால் அதே காலநிலை, உணவுப் பழக்கத்தில் மேலை நாட்டினரால் அரேபிய ஆண்களைப் போல இருக்க முடியவில்லை. இது ஆராய்ச்சியாளர்களை வெகுவாகக் குழப்பியிருக்கிறது. அந்த குழப்பம் அவர்களுடைய கவனத்தை பிற காரணிகளின் மேல் திரும்பியிருக்கிறது.
உடலை முழுதும் மறைக்கும் ஆடை அணியும் கலாச்சாரத்தைக் கொண்டுள்ள பெண்கள் வாழும் அரேபிய நாடுகளில் இத்தகைய சிக்கல்கள் பெரும்பாலும் இல்லை என்பதனால் இதற்கும் ஆடைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா எனும் யோசனை முளைத்திருக்கிறது.
அதன் பின்பே பெண்களின் ஆடைக்கும் ஆண்களின் ஆரோக்கியத்துக்கும் இடையேயான இந்த தொடர்பு தெரியவந்திருக்கிறது. தெருவிலும், பணித்தளங்களிலும், பொது இடங்களிலும் சந்திக்கும் பெண்களின் வசீகரிக்கும் தோற்றமும், உடைகள் மறைக்காத உடலின் பாகங்கள் தூண்டிவிடும் பாலியல் சிந்தனைகளும், ஆண்களின் மனதில் பதிந்து அவர்களுடைய ஏக்கங்களை விரிவடைய வைத்து ஏமாற்றத்தை அதிகரிப்பதே இந்த ஆண்மைக்குறைவு மற்றும் புரோஸ்ட்ரேட் புற்று நோய் இவற்றின் மூல காரணம் என்று இந்த ஆராய்ச்சி தனது முடிவை ஆதாரங்களுடன் வரையறை செய்திருக்கிறது. முக்கால்வாசி ஆண்மைக்குறைபாடுகளும் இத்தகையதே என்பது இந்த ஆராய்ச்சியின் தீர்க்கமான முடிவாகும்.
பெண்களின் கவர்ச்சிகரமான நடைபாதைகளில் ஆண்களின் ஆரோக்கியத்தைப் புதைக்கும் கல்லறைகள் முளைத்துக் கொண்டே இருக்கின்றன என்பது அதிர்ச்சியூட்டும் செய்தியாக இருக்கும் அதே வேளையில், தேவையற்ற பாலியல் கனவுகளை வளர்க்காமல் நட்புணர்வுடன் அடுத்த பாலினரை நோக்கும் மனநிலையை ஆண்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆராய்ச்சி எச்சரிக்கை செய்கிறது.

அன்பானவர்களே ! வாருங்கள் திருமறையின் பக்கம் ! நம்மை படைத்தவனின் எச்சரிக்கையை செவி தாழ்த்தி கேட்போம் ...

24:31. இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.

ரஜினி,சாய்பாபாவுக்கு அஞ்சலி செலுத்த செல்லாதது,ஏன்..?

சாய்பாபாவுக்கு அஞ்சலி செலுத்த சென்ற சச்சின் டெண்டுல்கர் பற்றி ஊடகங்கள் அனைத்தும் கவர் செய்து செய்தி வெளியிட்டன..,கவாஸ்கர் உட்பட கிரிக்கெட் நட்சத்திரங்கள்,சிரஞ்சீவி உட்பட தெலுங்கு நட்சத்திரங்கள்,சந்திரபாபு உட்பட தெலுங்கு அரசியல்வாதிகள் பிரசாந்தி நிலையத்தில் குவிந்துள்ளனர்...பாடகி பி.சுசீலா அவர்கள் கதறி அழுதது...பக்தர்களை மேலும் துக்கத்தில் ஆழ்த்தியது...நடிகை அஞ்சலி தேவி மயங்கி விழுந்தார்..எத்தனையோ பகதர்கள் நெஞ்சில் வாழும் தெய்வமாக விளங்கிய சாய்பாபா மறைந்துவிட்டார்..என்ற செய்தி...வெறும் இறப்பு செய்தி மடுமல்ல.பலரது ஆறுதல் தூணாக இருந்த சாய்பாபா மறைந்துவிட்டார் என்றல்,இனி தங்களுக்கு ஆறுதல் யார் என்ற விரக்தியே பல பக்தர்கள் முகத்தில் தேங்கியுள்ளது...

தன்னம்பிக்கையும்,தைரியமும் கொடுத்து,ஒருவனை உற்சாகப்படுத்துவதே நல்ல குருவின் கடமையாகும்..அதை சரிவர பல லட்சம் பக்தர்களுக்கு செய்தவர் சாய்பாபா.
ரஜினி,இந்த இறுதி அஞ்சலி நிகழ்ச்சி கூட்டத்தில் கலந்துகொண்டாரா என்பது தெரியவில்லை..கலந்திருந்தால் ஊடகங்கள் இந்நேரம் செய்தியாக்கியிருக்கும்.





ரஜினி சாய்பாபா வின் தீவிர பக்தர்..சென்னைக்கு சாய்பாபா வந்தபோது,ரஜினி அவரை தன் வீட்டுக்கு வருமாறு அழைத்தார்.சாய்பாபா என்ன காரணத்தாலோ மறுத்துவிட்டார்.பின்பு சாய்பாபா கலைஞர் வீட்டுக்கு சென்று,அவரது குடும்பத்தாருக்கு ஆசி வழங்கி விட்டு,அமைச்சர் துரைமுருகனுக்கு காற்றில் இருந்து மோதிரம் ஒன்று வரவழைத்து தந்துவிட்டு,சென்றுவிட்டார்...

ரஜினி இது பற்றி வருத்தப்படவில்லை..தனக்கு பிராப்தம் இல்லையென்று நினைத்துக்கொண்டார்.அழைத்தேன்..மறுபடியும் ஒரு சினிமா விழாவில்,அதாவது கலைஞருக்கு பாரட்டுவிழாவில்,நான் சாய்பாபாவை அழைத்தேன் வரவில்லை...கலைஞர் வீட்டுக்கு கூப்பிடாமலேயே செல்கிறார்..நான் கடவுளை விழுந்து விழுந்து கும்பிடுறேன்...அவர் வரவில்லை..கடவுளெ இல்லையென்று சொல்லும் கலைஞர் வீட்டுக்கு கடவுள் போறார்...கடவுளெ விரும்பக்க்க்கூடியவர் தான் கலைஞர்..என ஐஸ்கட்டியல்ல..ஐஸ்மலையையே கலைஞர் மீது வைத்தார் ரஜினி.

நடிகர் ஜெயஷங்கர் மறைந்தபோது,ரஜினி செல்லவில்லை..காரணம் கேட்டபோது,அவர் புன்னகை எனக்கு ரொம்ப பிடிக்கும்..எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்படும் ஜை சாரை நான் மரண கோலத்தில் பார்க்க விரும்பவில்லை என்றார்....

அதே மனநிலையில் தான் ,ரஜினி சாய்பாபா அஞ்சலிக்கு கூட செல்லவில்லை என நினைக்கிறேன்...

தேர்தலில் கலைஞர் வென்றால் அல்லது தோற்றால்.....


நடந்த சட்டசபை தேர்தலில் ஒருவேளை தி.மு.க-வே மீண்டும் வென்றால்.....கலைஞர் எப்படி அறிக்கை விடுவார் ஒரு கற்பனை....

உடன் பிறப்பே,
தமிழக அரசியல் வரலாற்றில் எந்தக்காலத்திலும் இல்லாத அளவிற்கு ஒரு ஆளுங்கட்சிக்கு பல திக்குகளிலிருந்தும் எதிர்ப்புக்கணைகள் தொடுக்கப்பட்டன.அவையனைத்தும் முனை முறிந்து போகும் வண்ணம் செய்த பெருமை மக்கள் சக்திக்குத்தான் உரியது.
தேர்தல் ஆணையத்தின் இத்தனை கெடுபிடிகளையும் மீறி கழகம் பெற்றிருப்பது சாதாரண வெற்றியல்ல..ஜனநாயகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. ஒரு ரூபாய் அரிசி, இலவச வண்ண தொலைக்காட்சி, கலைஞர் காப்பீட்டு திட்டம், கலைஞர் வீட்டு வசதி திட்டம், 108 ஆம்புலன்ஸ், கேஸ் அடுப்பு என்று கழக அரசின் சாதனைகளை உணர்ந்தவர்களும், சலுகைகளை பெற்றவர்களும் நன்றி உணர்வு மிக்கவர்கள் என்பதையே இந்த தேர்தல் வெற்றி உணர்த்துகிறது.
ஏழை எளிய மக்களின் இதய சிம்மாசனத்தில் எங்களுக்கு கிடைத்திருக்கும் இடத்தை அம்மையாரால் அகற்ற முடியவில்லை....அகற்ற முடியாது என்பதற்கு இதைவிட புகழ்பெற்ற சான்று வேறு இருக்க முடியாது.
கொடநாட்டு அம்மையாருக்கு மரண அடி கொடுத்து மீண்டும் கழக ஆட்சி தொடர வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி...இதற்காக அயராது பாடுபட்ட கூட்டணி கட்சி தலைவர்களுக்கு நன்றி...மேலும் புயலென சுற்றி வந்த வைகைபுயல், கருப்பு நாகேஷ் தம்பி வடிவேலு, திராவிட திருவிளக்கு குஷ்பு ஆகியோருக்கும் நன்றி...இந்த வெற்றி மலர்களை எங்களை ஆளாக்கிய பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார், காஞ்சி தலைவன் அறிஞர் அண்ணா அவர்களின் பாத மலர்களுக்கு காணிக்கை ஆக்குகிறேன்.

**********************************

ஒரு வேளை தி.மு.க-தோற்றால்....

உடன் பிறப்பே,
தோல்வி கண்டு துவண்டு விடாதே, 1962-இல் காஞ்சியில் நமது அண்ணனின் தோல்வியை மனதில் வைத்து ஆறுதலடைந்து கொள்...ஊக்கம் பெறு....

நடந்து முடிந்த ஆரிய திராவிட யுத்தத்தில் நாம் தோற்கடிக்க பட்டிருக்கிறோம்....இல்லை.... இல்லை...வெற்றி வாய்ப்பை தற்காலிகமாக இழந்திருக்கிறோம்.
தேர்தல் ஆணையத்தை கைக்குள் போட்டுக்கொண்டு கொடநாட்டு அம்மையார் வெற்றி பெற்றிருக்கிறார் என்று சொல்லாம்....ஆனால், அரசியல் நாகரீகம் கருதி அப்படி சொல்லவில்லை.
நமக்கான தோல்வி என்பது ஒரு செயற்கையான தோல்வி. தேர்தல் ஆணையமும், ஆரிய பத்திரிகைகளும் திராவிடர்களுக்கான நமது ஆட்சியை ஒழிப்பதில் எவ்வளவு தீவிரம் காட்டினார்கள் என்பதை நான் அறியாதவனல்ல....

தோல்வியை கண்டு துவள்பவன் அல்ல...தோல்வியையும், வெற்றியையும் ஒன்றாக கருதுபவன் தான் இந்த கருணாநிதி என்பதை நீங்கள் அறிவீர்கள். அதுதான் ஈரோட்டு குருகுலத்திலும், காஞ்சி தலைவனிடத்திலும் நான் பயின்ற பால பாடம்.

பதவியில் இருந்துதான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதில்லை. பதவியில் இல்லாவிட்டாலும் திரை படங்களுக்கு வசனம் எழுதுவது, இலக்கியங்கள் படைப்பது என்று என் பணி தொடரும்.

பதவி என்பது தோளில் கிடக்கும் துண்டு போல....மானம் என்பது இடுப்பில் கட்டியிருக்கும் வேட்டி போல...நாம் இப்போது துண்டைத்தான் இழந்திருக்கிறோமே தவிர வேட்டியை அல்ல....

ஜெயித்தால் அண்ணா வழி...தோற்றால் பெரியார் வழி....இதுதான் காலங்காலமாக நான் கடை பிடித்து வரும் கொள்கை. இனி பெரியார் வழியில் என் பயணம் தொடரும்....கலங்காதே....