அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, August 7, 2009

ஈரான் விமான விபத்தில் 16 பேர் பலி

"அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு"
(உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும்
என்றென்றும் நிலவட்டுமாக..!)

------------ --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --
தெஹ்ரான்: ஈரானில் அவசரமாகத் தரையிறங்கிய விமானம் ரன் வேயிலிருந்து விலகி ஓடி சுவற்றில் மோதி உடைந்தது. இதில் விமானிகள் உள்பட 16 பேர் பலியாயினர்.

ஈரானில் 10 நாட்களுக்குள் நடந்த இரண்டாவது விமான விபத்து இதுவாகும். கடந்த 15ம் தேதி நடந்த விபத்தில் 168 பேர் பலியான நிலையில் நேற்று இநத விபத்து நடந்துள்ளது.

ஏரியா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த விமானம் தலைநகர் தெஹ்ரானில் இருந்த 153 பயணிகளுடன் கிழக்கு ஈரானில் உள்ள மஷ்ஷத் நகருக்கு சென்றது.

மஷ்ஷத் நகரை அடைந்தபோது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானத்தை அவசரமாக தரையிறக்கினர் விமானிகள்.

விமானம் கட்டுப்பாடில்லாமல் அதிவேகத்தில் தரையிறங்கியதில் ரன்வேயிலிருந்து வெளியே குதித்து தறிகெட்டு ஓடியது. பின்னர் விமான நிலையத்தின் வெளிப்புற சுவரில் மோதி முன் பகுதி நொறுங்கிவிட்டது. அப்போது விமானத்தில் தீயும் பிடித்துக் கொண்டது.

இதில் விமானத்தின் முன் பகுதி முழுவதுமாக சிதைந்துபோனது. இதில் விமானிகள் இருவரும் முன் பகுதியில் அமர்ந்திருந்த 16 பயணிகளும் பலியாகிவிட்டனர்.

ரஷ்ய தயாரிப்பான இந்த விமானம் இல்யுசின்-62 எம் ரக விமானமாகும்.

கடந்த 15ம் தேதி ஈரானின் காஸ்பியன் ஏர்லைன்சுக்கு சொந்தமான ரஷ்ய தயாரிப்பான டுபலோவ் ரக விமானம் தரையில் மோதி வெடித்து சிதறியதில் 168 பேர் பலியானது நினைவுகூறத்தக்கது.


"நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே; ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்."(49:10)

அத்வானி முக்கியக் குற்றவாளி! லிபரான் ஆணைய வழக்குரைஞர் 'அனுபம் குப்தா' பேட்டி!


பாபரி மஸ்ஜித் இடிக்கப்படு வதற்கான சூழ்நிலை குறித்து, ஆய்வு செய்த நீதிபதி லிபரான் ஆணையத்தின் வழக்குரைஞர் அனுபவம் குப்தா. பாபரி மஸ்ஜித் இடிப்பின் முக்கி யக் குற்றவாளி அத்வானி தான் என அழுத்தம் திருத் தமாகக் குறிப்பிட்டுள்ளார்.

'அவுட் லுக்' செய்தி ஏட்டிற்கு அனுபம் குப்தா அளித்த நேர்காணலில், பாபரி மஸ்ஜித் இடிப்பிற்கு அத்வானியும், அவரது இயக்கமும் தான் முழு முதற் காரணம். அவரது தூண்டுதல் இல்லாமல் பாபரி மஸ்ஜித் இடிக்கப் பட்டது என்பதை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது என்று அனுபம் குப்தா கூறியுள்ளார்.

அத்வானியின் ராமஜென்ம பூமி இயக்கத்தையும், அதன் ஓர் அங்கமான குஜராத் மாநிலம் சோம்நாத் ஆலயத்திலிருந்து அவர் தொடங்கிய ரதயாத்திரை யையும், இந்தியாவின் மதச்சார்பின்மை வரலாற்றுக்கு எதிரான இயக்கம் என அனுபம் குப்தா வர்ணித்துள்ளார். 2001ம் ஆண்டு லிபரான் ஆணையம் முன்பு உள்துறை அமைச்சராக அத்வானி சாட்சியமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1992 டிசலி6ல் நடைபெற்ற பாபரி மஸ்ஜித் இடிப்புச் சம்பவம் தேசந் தழுவிய, முஸ்லிம் எதிர்ப்புப் பிரச்சாரத் தின் விளைவாகும். இந்த மதவெறிப் பிரச்சாரத்தை முன்னின்று நடத்தியவர். பாஜகவின் பிரதமர் வேட்பாளர் எல்.கே. அத்வானி என்பது குறிப்பிடத்தக்கது.
லிபரான் ஆணைய அறிக்கையின் விளைவாக பாஜக பழைய நிலையிலிருந்து பல்டி யடித்து உண்மை நிலையை மறைத்து தனது மென்மை (?) நிலையைப் பேசியாக வேண்டும். பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட நாள்தான் என் வாழ்வின் சோகமான நாள் என்கிற ரீதியில் அத்வானி கதை விட்டது போல மேலும் பல கரடி களை அவிழ்த்து விட வேண்டும்.

பாபரி மஸ்ஜித் இடிப்புக் குப் பிறகு 1998 முதல் 2004 வரை 6 ஆண்டுகள் பதவி ருசிகண்ட பாஜக, இந்து, இந்தி, இந்தியா கொள்கை யைக் கைவிட்டு, பன்முகப் பண்பாட்டை நாட்டின் பன் முகத் தன்மையை ஆதரிக்கத் தொடங் கியது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி யில், மதச்சார்பற்ற கட்சி கள் தொடர்ந்து இடம் பெற வேண்டும் என பா.ஜ.க ஆசைப் படுகிறது. லிபரான்ஆணைய அறிக்கை பாஜகவின் மதவெறி சதிகளை அம்ப லப் படுத்துவதால், பெயர ளவு மதச் சார்பற்றக் கட்சி களும் தே.ஜ.கூட்டணில் தொடர் வது கேள்விக் குறியாகிறது.

1999ம் ஆண்டு லிபரான் ஆணையத்தின் வழக்குரைஞராக 2007ம் ஆண்டு வரை எந்த விசாரணை குறித்தும் கலந்தாலோசனை செய்யப்பட வில்லை என்று அவரே தெரிவித்துள்ளார்.

நத்தை முதுகில் சவாரி செய்த லிபரான் ஆணையம் விசாரணை அறிக் கையை தாக்கல் செய்துள்ளது. முக்கியக் குற்றவாளியும், உடன் சிக்கிய பிற குற்றவாளிகளும் தண்டிக்கப் படுவார்களா?


"எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!" (2:286)
__._,_.___

பன்றிக்காய்சசல்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹு (தங்கள் மீது
அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக)


சகோதரர்களே! தங்கள் முன் பன்றிக்காய்சசல் நோயைப் பற்றிய கட்டுரையை இங்கு
சமர்ப்பிக்கின்றேன். இந்த கட்டுரை ஒரு தமிழ் வெப்தளத்தில்
பதியப்பட்டிருந்தது, படித்தேன் இதை ஒவ்வொரு முஸ்லிமும் அறிந்துக்கொள்ள
வேண்டும்! ஏனெனில் முஸ்லிம் என்பவன் எதனையும் அறிந்துக்
கொண்டிருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன் அப்போது தான் நாம் அறிவாளிகளாக
சிறந்த சமுதாயமாக இருக்கமுடியும்.

மேலும் கட்டுரையின் முடிவில் சில ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன அவை மட்டும்
நான் மேலதிகமாக பதிந்துள்ளேன் காரணம் இஸ்லாம் கொல்லை நோய்களைப்பற்றி என்ன
கூறுகிறது என்பதை முஸ்லிம்களாகிய நாம் அறியவேண்டுமல்லவா?. நம்மால்
மருந்து கண்டுபிடிக்கமுடியவில்லை என்றாலும் நாம் நோயை கண்டு கவனமாக
இருக்க வேண்டுமல்லவா?

முடிவுரையில் சகோதரர் ஜாகிர் நாயிக் அவர்கள் பன்றியைப்பற்றி தந்த
விளக்கம் கொடுத்துள்ளேன்! படித்து பயனடையவும்


பன்றிக் காய்ச்சல் –

உலக நாடுகளையே இன்று கலங்கடித்துக் கொண்டிருக்கும் ஓர் கொடிய நோயின்
பெயர் இது.


கடந்த ஆண்டுகளில் பறவைக் காய்ச்சல் (சிக்குன் குன்யா) என்ற நோய் உலகளவில்
பல்லாயிரக் கணக்கான மக்களை வாட்டி வதைத்ததை போல், இந்த ஆண்டில் பன்றிக்
காய்ச்சல் நோய் உலக மக்களை பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறது.


முதன் முதலில் மெக்சிகோ நாட்டில் உருவானதாக கூறப்படும் இந்த கொடிய நோய்,
பின்னர் பல்வேறு நாடுகளுக்கும் பரவி, தற்போது இந்தியாவின் புனே நகரை
சேர்ந்த ரியா ஷேக் என்ற 14 வயது பள்ளி மாணவியின் உயிரை பறிக்கும்
அளவுக்கு பரவியுள்ளது. இதனால், ஒட்டுமொத்த இந்தியாவே அதிர்ச்சியடைந்துள்ள
சூழ்நிலையில், இந்நோய் பற்றிய கூடுதல் விபரங்களை அறிந்துக்கொள்வதும்,
அதிலிருந்து நம்மை நாமே வருமுன் காப்பதும் அவசியமாகிறது.


பன்றிக் காய்ச்சல் என்றால் என்ன?

பன்றிக் காய்ச்சல் (Swine flu) என்று அழைக்கப்படும் இந்த நோய், சளி,
இருமல், காய்ச்சல் ஆகியவற்றை ஏற்படுத்தும் புளூவைரஸின் ஓர் உட்பிரிவான H1
N1 என்ற வைரஸால் ஏற்படுகிறது. இது பன்றிகளின் சுவாச உறுப்பை தாக்கி,
கடுமையான காய்ச்சலை உருவாக்கி, படிப்படியாக உடல் உறுப்புகளை செயல் இழக்க
வைத்து இறுதியில் மரணத்தை ஏற்படுத்துகிறது. இந்த வைரஸ், பன்றிகளை
மட்டுமின்றி பறவைகள், குதிரை மற்றும் மனிதர்களையும் தாக்குகிறது.


கடந்த 1930ம் ஆண்டுகளில் முதன் முறையாக பன்றி இனங்களில் இந்நோய்
கண்டறியப்பட்டது. நோய்க்கான காரணம் குறித்து ஆய்வு செய்தபோது, இந்த வைரஸ்
மிக அரிதான ஓர் மரபு அணு தொகுதியை கொண்டிருந்ததை கண்டு ஆராய்ச்சியாளர்கள்
பெரும் ஆச்சரியமும், கடும் அதிர்ச்சியும் அடைந்தனர். அப்போதே இந்த
பன்றிக் காய்ச்சல் வைரஸ் மிக அபாயகரமானது என உலக சுகாதார நிறுவனம்
எச்சரிக்கை விடுத்தது. பின்னர் கடந்த 1965ல் ஐரோப்பாவிலும், 1976ம்
ஆண்டில் நியூஜெர்ஸியிலும் இந்நோய் கண்டறியப்பட்டது.


பன்றிக் காய்ச்சல் பரவும் முறை:

H1N1 வைரஸ், ஓர் பன்றியில் இருந்து மற்றொரு பன்றிக்கு வேகமாக பரவுகிறது.
நீண்டகால முயற்சிக்கு பின்னர் மனிதரை தாக்குதகிறது. ஆனால்,
மனிதரிடமிருந்து மற்றொரு மனிதருக்கு மிக எளிதில் தொற்றிக் கொள்கிறது.


பன்றிகள் வசிக்கும் இடம் அல்லது பன்றி பண்ணைகளில் பணிபுரிபவர்களுக்கு
இந்நோய் பரவி, அவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு எளிதில் பரவுகிறது.
ஆனால், பன்றி இறைச்சி சாப்பிடுவதன் மூலமாக நோய் பரவ வாய்ப்புகள் இல்லை.
குளிர் மற்றும் பனிக்காலங்களிலுமே மிக அதிகமாக பரவுகிறது. குறிப்பாக இந்த
நோய்த் தொற்றுக்குள்ளாகி 5 முதல் 6 நாட்களில் பிறரையும் தொற்றுகிறது.


பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள்:
உடல் சூடாதல்,
உடல் பலவீனம்,
வலி,
தொண்டைப் புண்,
இருமல்,
பசியின்மை,
வயிற்றுப்போக்கு,
வாந்தி
போன்றவை பன்றிக் காய்ச்சலின் முக்கிய அறிகுறிகளாக கருதப்படுகின்றன.


பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுக்கும் முறைகள்:

மக்கள் வசிக்கும் பகுதியில் பன்றிகள் நடமாடாமல் தடுக்க உரிய நடவடிக்கைகளை
எடுக்க வேண்டும்.


நோய் பாதிப்பு உள்ளவர்களை நேரடியாக தொட்டு பேசக்கூடாது. அவர்களிடமிருந்து
விலகியிருப்பது நல்லது.


பாதிக்கப்பட்டவர் அருகில் இருக்க நேர்ந்தால் வாய், மூக்கை மூடிக்கொள்ள
வேண்டும்.

கை, கால்களை நன்றாக சோப்பு போட்டு கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

பன்றிகளை வளர்ப்பவர்கள், பராமரிப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க
வேண்டும்.

உலகளவில் பன்றிக் காய்ச்சல்:


கடந்த ஜூன் 11ம் தேதி உலக சுகாதார நிறுவனத்தால் கொள்ளை நோயாக
அறிவிக்கப்பட்ட இந்த பன்றிக் காய்ச்சல் நோய், உலகம் முழுவதும் வேகமாக
பரவி வருகிறது. இதனால், இந்நோயை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளின் விமான
நிலையங்களிலும் பன்றிக் காய்ச்சல் நோய் குறித்து மருத்துவப் பரிசோதனைகள்
நடைபெற்று வருகிறது.


பன்றிக் காய்ச்சல் நோய் பற்றிய பாதிப்புகளை உலக சுகாதார நிறுவனம்
அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 1 லட்சத்து 34
ஆயிரத்து 503 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 816 பேர்
பலியாகியுள்ளதாகவும் அந்த மையம் தெரிவித்துள்ளது.


உலகளவில் மெக்சிகோ மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் இந்நோயால் அதிகம்
பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பன்றிக்காய்ச்சல் பாதிப்புள்ள நாடுகளுக்கு
செல்ல வேண்டாம் என பல நாடுகள் தங்களது நாட்டு மக்களை அறிவுறுத்தியுள்ளது.


இந்தியாவில் பன்றிக் காய்ச்சல்:

இந்தியாவில் கடந்த 2004ம் ஆண்டே டெல்லி, மிசோரம், மேற்கு வங்கம் போன்ற
மாநிலங்களில் இந்நோயின் அறிகுறிகள் தென்பட்டன. இதனால், இந்நோயால்
ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்திருந்த மருத்துவத் துறையினர், எச்1 என்1
வைரஸ் மனிதர்களை தாக்கும் முன்பே, பன்றிக் காய்ச்சல் நோயை
கட்டுப்படுத்திவிட்டனர்.


எனினும், இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து வெளிநாட்டுப் பயணிகள் மூலம்
இந்தியாவுக்குள்ளும் பன்றிக் காய்ச்சல் நோய் பரவ ஆரம்பித்தது.


மகாராஷ்டிராவில் அதிகப்பட்சமாக 135 பேரும், டெல்லியில் 109 பேரும்
பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த 3ம்
தேதி நிலவரப்படி 574 ஆக உயர்ந்துள்ளது.


இந்நோய்க்கு புனே மாணவி ரியா ஷேக் பலியானதன் எதிரொலியாக, இந்தியாவில்
பன்றிக் காய்ச்சலை தடுக்க புதிய திட்டம் தீட்டப்பட்டு வருவதாகவும் மத்திய
சுகாதாரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.


புனேவில் பன்றிக் காய்ச்சல்:

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் இந்நோய் பாதிப்பு ஏற்பட்ட போதிலும்,
மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள புனே நகரம் தான் பன்றிக் காய்ச்சல் நோயின்
தலைநகராக விளங்கி வருகிறது.


இங்குள்ள ஓர் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் சமீபத்தில் அமெரிக்க சுற்றுப்
பயணம் சென்று வந்ததாகவும், அவர்கள் மூலமாக பிற பள்ளி மாணவர்களுக்கும்
இந்நோய் தொற்றியதாகவும் கூறப்படுகிறது.


ஒரு கட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் அதிகளவில் பாதிக்கப்பட்ட நிலையில்,
அங்குள்ள பல பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன.


இந்நிலையில், இந்தியாவில் பன்றிக் காய்ச்சலுக்கு முதல் பலியாக புனே நகரை
சேர்ந்த ரியா ஷேக் என்ற 14 வயது நிரம்பிய பள்ளி சநேற்று முன்தினம்
பலியானார். பெற்றோரின் கவனக்குறைவு மற்றும் மருத்துவர்கள் முன்கூட்டியே
நோயை கண்டறிந்து முறையாக சிகிச்சை அளிக்காதது போன்றவையே ரியாவின்
மரணத்துக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.


நோய் தொற்றிய 20 தினங்களில் மாணவி ரியா, பன்றிக் காய்ச்சலுக்கு பலியாகி
இருப்பது மருத்துவ உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல்:

பன்றிக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தமிழகத்திலும்
நாளுக்கு நாள் அதிகரித்து வருவது. இந்நோயால் இதுவரை 35 பேர்
பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.


புனே மாணவி ரியா பலியானதன் எதிரொலியாக, தமிழக அரசும் பன்றிக்காய்ச்சல்
நோய் ஒழிக்க தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு
இதுகுறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது. விமானப் பயணிகள்
மட்டுமின்றி, ரயில் மற்றும் கப்பல் மூலம் தமிழகம் வரும் பயணிகளுக்கும்
மருத்துவப் பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.


இதுதவிர, மும்பை, புனே நகரங்களுக்கு தமிழகத்தில் இருந்து யாரும் செல்ல
வேண்டாம் என்றும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.


தமிழகத்தில் சென்னை கிங்ஸ் இன்ஸ்டிடியூட், வேலூர் கிறிஸ்தவ மருத்துவக்
கல்லூரி ஆகியவற்றில் பன்றிக் காய்ச்சல் பற்றிய மருத்துவப் பரிசோதனை
நடத்தப்பட்டு வருகிறது.


சென்னை நகரில், தண்டையார் பேட்டை தொற்றுநோய் தடுப்பு மருத்துவமனை,
ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம்
அரசு மருத்துவமனை மற்றும் தண்டையார்பேட்டை பெரிபரல் மருத்துவமனை
போன்றவற்றில் பன்றிக் காய்ச்சலுக்கான மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு
வருகிறது.
மேலே கண்ட கட்டுரை முடிகிறது! கீழே உள்ளவை நம் முஸ்லிம்களின் பகுதி

xxxxx (நோய்கள் பற்றி இஸ்லாமிய பார்வை) xxxxx

இனி நாம் இஸ்லாத்தின் பார்வையில் நோய்களும் அதன் விளக்கங்களும் என்ற
தலைப்பை அலசி ஆராய்வோம்!


தொற்று நோய் பற்றி நபிகள் (ஸல்) அவர்களின் கருத்து


இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘தொற்று நோய் கிடையாது.’ ஸஃபர்’ தொற்றுநோயன்று.
ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது” என்று கூறினார்கள். அப்போது
கிராமவாசியொருவர், ‘இறைத்தூதர் அவர்களே! (பாலை) மணலில் மான்களைப் போன்று
(ஆரோக்கியத்துடன் துள்ளித் திரியும்) என் ஒட்டகங்களிடம் சிரங்கு பிடித்த
ஒட்டகம் வந்து அவற்றிற்கிடையே கலந்து அவற்றையும் சிரங்கு பிடித்தவையாக
ஆக்கிவிடுகின்றனவே! அவற்றின் நிலையென்ன (தொற்று நோயில்லையா)?’ என்று
கேட்டார்.அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால் முதல் (முதலில்
சிரங்கு பிடித்த) ஒட்டகத்திற்கு (அந்த நோயைத்) தொற்றச் செய்தது யார்?’
என்று திருப்பிக் கேட்டார்கள். புஹாரி : 5717 அபூஹூரைரா (ரலி).


வியாதி பிடித்த ஒட்டகத்தை ஆரோக்கியமான ஒட்டகத்திடம் கொண்டு
செல்லாதீர்கள். என நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 5774 அபூ
ஹுரைரா (ரலி).


கொள்ளைநோய்கள் பற்றி நபிகள் (ஸல்)

(என் தந்தை) ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) உஸாமா இப்னு ஸைத் (ரலி)
அவர்களிடம், ‘இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து (பிளேக் போன்ற) கொள்ளை
நோயைப் பற்றி நீங்கள் செவியுற்றிருக்கிறீர்களா?’ என்று கேட்டார்கள்.
அதற்கு உஸாமா (ரலி), ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘கொள்ளை நோய் என்பது பனூ
இஸ்ராயீல்களின் ஒரு கூட்டத்தார் மீது, அல்லது உங்களுக்கு
முன்னிருந்தவர்களின் மீது…. (அவர்களின் அட்டூழியங்கள்
அதிகரித்துவிட்டபோது) அனுப்பப்பட்ட ஒரு(வகை) வேதனையாகும். அது ஒரு
பிரதேசத்தில் இருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அங்கே நீங்கள்
செல்லாதீர்கள். நீங்கள் இருக்கிற ஒரு பூமியில் அது பரவிவிட்டால்,
அதிலிருந்து தப்பியோட முனைந்தவர்களாக (அங்கிருந்து) வெளியேறாதீர்கள்”
என்று கூறினார்கள்” என்று பதிலளித்தார்கள். புஹாரி :3473 உஸாமா பின் ஜைது
(ரலி).

உமர் இப்னு கத்தாப் (ரலி) ஷாம் நாட்டை நோக்கி (மக்களின் நிலையை
ஆராய்வதற்காக)ப் புறப்பட்டார்கள். ‘சர்ஃக்’ எனும் இடத்தை அடைந்தபோது
(மாகாண) படைத் தளபதிகளான அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களும்
அவர்களின் நண்பர்களும் உமர் (ரலி) அவர்களைச் சந்தித்து ஷாம் நாட்டில்
கொள்ளைநோய் பரவியுள்ளது என்று தெரிவித்தார்கள். அதற்கு உமர் (ரலி)
‘ஆரம்பக் கால முஹாஜிர்களை என்னிடம் அழைத்து வாருங்கள்” என்று சொல்ல
அவர்களை நான் (உமர் (ரலி) அவர்களிடம்) அழைத்து வந்தேன். அவர்களிடம் ஷாம்
நாட்டில் கொள்ளைநோய் பரவியுள்ளது என்று தெரிவித்து (அங்கு போகலாமா?
மதீனாவுக்கே திரும்பிச் சென்றுவிடலாமா? என்று) ஆலோசனை கேட்டார்கள்.

இது தொடர்பாகமுஹாஜிர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அவர்களில்
சிலர், ‘நாம் ஒரு நோக்கத்திற்காகப் புறப்பட்டு விட்டோம். அதிலிருந்து
பின்வாங்குவதை நாங்கள் பொறுத்தமாகக் கருதவில்லை” என்று கூறினார்கள். வேறு
சிலர், ‘உங்களுடன் மற்ற மக்களும் நபித்தோழர்களும் உள்ளனர்.
அவர்களையெல்லாம் இந்தக் கொள்ளைநோயில் தள்ளி விடுவதை நாங்கள் சரியென்று
கருதவில்லை” என்று கூறினார்கள். அப்போது உமர் (ரலி), ‘நீங்கள் போகலாம்”
என்று சொல்லிவிட்டுப் பிறகு, ‘என்னிடம் (மதீனாவாசிகளான) அன்சாரிகளை
அழைத்து வாருங்கள்” என்று சொல்ல நான் அவர்களை அழைத்து வந்தேன்.
அவர்களிடம் உமர்(ரலி) ஆலோசனை கலந்தார்கள். அவர்களும் முஹாஜிர்களின்
வழியிலேயே சென்று அவர்களைப் போன்றே கருத்து வேறுபட்டார்கள்.அப்போதும் உமர்
(ரலி), ‘நீங்கள் போகலாம்” என்று சொல்லிவிட்டுப் பிறகு மக்கா
வெற்றிகொள்ளப்பட்ட ஆண்டில் (மதீனாவுக்கு) ஹிஜ்ரத் செய்து வந்த குறைஷிப்
பெரியவர்களில் இங்கு உள்ளவர்களை என்னிடம் அழைத்து வாருங்கள்” என்று சொல்ல
நான் அவர்களை அழைத்து வந்தேன்.

அவர்களில் எந்த இருவருக்கிடையேயும் கருத்து வேறுபாடு எழவில்லை. அவர்கள்
(அனைவரும்), ‘மக்களுடன் நீங்கள் திரும்பி விட வேண்டும்; அவர்களை இந்தக்
கொள்ளைநோயில் தள்ளிவிடக் கூடாது எனக் கருதுகிறோம்” என்றனர். எனவே, உமர்
(ரலி) மக்களிடையே ‘நான் காலையில் (என்) வாகனத்தில் (மதீனா)
புறப்படவிருக்கிறேன்; நீங்களும் வாகனத்தில் புறப்படுங்கள்” என்று
அறிவித்தார்கள். அப்போது அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ் (ரலி), ‘அல்லாஹ்வின்
விதியிலிருந்து வெருண்டோடுவதற்காகவா (ஊர் திரும்புகிறீர்கள்)?’ என்று
கேட்க, உமர் (ரலி), ‘அபூ உபைதா! இதை உங்களைத் தவிர வேறேவரேனும்
சொல்லியிருந்தால் நான் ஆச்சரியப்பட்டிருக்க மாட்டேன்.

ஆம் நாம் அல்லாஹ்வின் ஒரு விதியிலிருந்து இன்னொரு விதியின் பக்கமே
வெருண்டோடுகிறோம். உங்களிடம் ஓர் ஒட்டகம் இருந்து, அது ஒரு பக்கம்
செழிப்பானதாகவும் மறுபக்கம் வறண்டதாகவும் உள்ள இரண்டு கரைகள் கொண்ட ஒரு
பள்ளத்தாக்கில் இறங்கிவிட்டால், செழிப்பான கரையில் நீங்கள் அதை
மேய்த்தாலும் அல்லாஹ்வின் விதிப்படி தான் அதை நீங்கள் மேய்க்கிறீர்கள்.
வறண்ட கரையில் அதை நீங்கள் மேய்த்தாலும் அல்லாஹ்வின் விதிப்படிதான்
நீங்கள் மேய்க்கிறீர்கள், அல்லவா?’ என்று கேட்டார்கள்.

அப்போது தம் தேவையொன்றுக்காக வெளியே சென்றிருந்த அப்துர் ரஹ்மான் இப்னு
அவ்ஃப் (ரலி) (அங்கு) வந்தார்கள். அவர்கள், ‘இது தொடர்பாக என்னிடம் ஒரு
விளக்கம் உள்ளது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘ஓர் ஊரில் கொள்ளை நோய்
பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அந்த ஊருக்கு நீங்களாகச்
செல்லாதீர்கள்.

நீங்கள் ஓர் ஊரில் இருக்கும்போது அங்கு கொள்ளைநோய் பரவினால் அதிலிருந்து
வெருண்டோடுவதற்காக (அவ்வூரைவிட்டு) வெளியேறாதீர்கள்’ என்று சொல்ல
கேட்டேன்” என்று கூறினார்கள்.

உடனே உமர் (ரலி), (தம் முடிவு நபி (ஸல்) அவர்களின் வழி
காட்டுதலுக்கேற்பவே அமைந்திடச் செய்ததற்காக) அல்லாஹ்வைப்
புகழ்ந்துவிட்டுத் திரும்பிச் சென்றார்கள். புஹாரி-5729 இப்னு அப்பாஸ்
(ரலி)

முடிவுரை

இஸ்லாம் பன்றி இறைச்சியை உணவாக உட்கொள்ளத் தடை செய்திருப்பது ஏன்?
டாக்டர் ஜாகிர் நாயக் அவர்ளின் இஸ்லாமிய விளக்கங்கள்

இஸ்லாம் பன்றி இறைச்சியை உணவாக உட்கொள்ள தடை செய்திருப்பது அனைவரும்
அறிந்த உண்மை. இந்தத் தடை ஏன்?. என்பது பற்றிய விபரத்தை கீழ்க்காணும்
விளக்கங்கள் மூலம் தெளிவாக அறியலாம்.

பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டுள்ளது பற்றி குர்ஆனின்
தெளிவாக்கம்:

பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டிருப்பது பற்றி அருள்மறை குர்ஆனில்
குறைந்தது நான்கு அத்தியாயங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"தானாகவே செத்ததும் இரத்தமும் பன்றியின் மாமிசமும் அல்லாஹ் அல்லாத பெயர்
சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக
ஆக்கியிருக்கிறான்." (அல்-குர்ஆன் அத்தியாயம் - 02 வசனம் 173)

மேற்படி கருத்துக்களை அருள்மறையின் அத்தியாயம் ஐந்தின் மூன்றாவது
வசனத்திலும் அத்தியாயம் ஆறு - 145வது வசனத்திலும் - அத்தியாயம் பதினாறு -
115வது வசனத்திலும் காணலாம். அருள்மறையின் மேற்படி வசனங்கள் -
இஸ்லாத்தில் பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டிருக்கிறது என்பதற்கு
ஆதாரமாக அமைந்துள்ளன.

பன்றி இறைச்சி உண்ணத் தடை என்று பைபிளும் குறிப்பிடுகின்றது.

கிறஸ்தவர்களின் வேத புத்தகமான பைபிள் குறிப்பிடும் தடைகளைப் பற்றி
கிறிஸ்தவர்களுக்கு எடுத்துச் சொன்னால் அவர்களும் அறிந்து கொள்வார்கள்.
பன்றி இறைச்சி உண்ணத் தடை என்று பைபிளிளும் குறிப்பிடப்பட்டுள்ளது.


பைபிளின் அத்தியாயம் 11 - லெவிட்டிக்கஸ் வசனம் 7 முதல் 8 வரையிலும்
பைபிளின் அத்தியாயம் 14 - டியுட்டர்னோமி வசனம் 8 ம் பன்றி இறைச்சி உண்ணத்
தடை பற்றி அறிவிக்கின்றன.

மேலும் பைபிளின் அத்தியாயம் 65 - புக் ஆஃப் இஷையா 2 முதல் 5 வரையுள்ள
வசனங்களில் பன்றி இறைச்சி உண்ணத் தடை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

பன்றி இறைச்சி உண்பதால் - மனிதனுக்கு ஏராளமான நோய்கள் உண்டாகின்றன.

எந்த விஷயத்தையும் முஸ்லிம் அல்லாதவர்களும் கடவுளே இல்லை என்று
மறுப்பவர்களும் காரணத்துடனும் தர்க்க ரீதியாகவும் அறிவியல் உண.மையுடனும்
சொன்னால்தான் ஏற்றுக் கொள்வார்கள். பன்றி இறைச்சி உண்பதால் மனிதனுக்கு
எழுபது விதமான நோய்கள் உண்டாகிறது. பன்றி இறைச்சி உண்பதால் மனிதனின்
வயிற்றில் வட்டப்புழு, ஊசிப்புழு, கொக்கிப்புழு போன்ற குடற்புழுக்கள்
உண்டாகின்றன. பன்றி இறைச்சி உண்பதால் மனிதனின் வயிற்றில் நாடாப்புழு
உருவாகிறது. இந்த நீளமான நாடாப்புழு மனித குடலின் அடிப்பகுதியில் சென்று
தங்கிவிடுகிறது. ஆது இடும் முட்டை இரத்த நாளங்கள் வழியாக உடலின் எல்லாப்
பாகங்களுக்கும் பரவுகிறது. இந்த முட்டை மனித மூளையச் சென்றடைந்தால்
மனிதன் தன் நினைவாற்றலை இழப்பான். இந்த முட்டை மனித இதயத்தைச்
சென்றடைந்தால் மனிதனுக்கு மாரடைப்பு உண்டாகிறது. இந்த முட்டை மனிதனின்
கண்களைச் சென்றடைந்தால் மனிதன் கண்பார்வையை இழக்கிறான். இந்த முட்டை
மனிதனின் ஈரலைச் சென்றடைந்தால் மனிதனின் ஈரல் பாதிக்கப்படுகிறது. இவ்வாறு
பன்றி இறைச்சி உண்பதால் மனித வயிற்றில் உருவாகும் நாடாப்புழுவின்
முட்டைகள் மனித உருப்புகள் அனைத்தையும் செயலிழக்கச் செய்யும் வல்லமை
உள்ளவை.


பன்றி இறைச்சியில் திரிகூரா திச்சுராஸிஸ் என்ற பெயரையுடைய மற்றொரு
ஆபத்தான குடற்புழு உள்ளது. பன்றி இறைச்சியை நன்றாக வேக வைத்துவிட்டால்
இது போன்ற புழுக்கள் மரணித்து விடுகின்றன என்பது ஒரு பொதுவான அதே சமயம்
தவறான கருத்து மக்களிடையே இருக்கிறது. இது பற்றிய ஆய்வு ஒன்று
அமெரிக்காவில் நடத்தப்பட்டபோது - இருபத்து நான்கு பேர் திரிகூரா
திச்சுராஸிஸ் என்று குடற்புழு நோயால் தாக்கப்பட்டிருந்தார்கள். அவர்களில்
இருபத்தி இரண்டு பேர் பன்றி இறைச்சியை நன்றாக வேகவைத்து சாப்பிட்டவர்கள்
என்று கண்டறியப்பட்டது. சாதாரணமான வெப்பத்தில் சமைக்கப்படும் பன்றி
இறைச்சியில் - குடற்புழு உண்டு என மேற்படி ஆய்விலிருந்து நாம் அறியும்
செய்தி


பன்றி இறைச்சியில் கொழுப்புச் சத்து அதிகம்.

பன்றி இறைச்சியில் மாமிச சத்தைவிட கொழுப்புச் சத்தே அதிகம். பன்றி
இறைச்சி உண்பதால் ஏற்படும் கொழுப்புச் சத்து மனித இரத்த நாளங்களை அடைத்து
விடுவதால் - மனிதனுக்கு இரத்த அழுத்த நோயும் - மாரடைப்பும் உண்டாகின்றது.
எனவே அமெரிக்கர்களில் ஐம்பது சதவீதம் பேர் இரத்த அழுத்தம் உள்ளவர்களாக
இருப்பதில் ஆச்சரியம் இல்லை.



உலகில் உள்ள மிருகங்களில் எல்லாம் கேடுகெட்ட மிருகம் பன்றி.

பூமியல் உள்ள விலங்கினங்களில் எல்லாம் கேடுகெட்ட விலங்கினம் பன்றி. பன்றி
சேற்றிலும் சகதியிலும் மலத்திலும் வாழக்கூடிய விலங்கினம். கடவுளின்
படைப்பில் ஒரு சிறந்த சுத்திகரிக்கும் மிருகம் பன்றி. நவீன கழிப்பறை வசதி
இல்லாத கிராமப்புறங்களில் மனிதர்கள் - காடுகளிலும் - வெட்டவெளியிலும்தான்
மலஜலம் கழிப்பார்கள். இந்த மலத்தை சுத்தம் செய்வது பன்றிதான்.


ஆஸ்திரேலியா போன்ற மேலை நாடுகளில் பன்றிகள் மிக சுத்தமான சூழ்நிலையில்
வளர்க்கப்படுகின்றன என சிலர் வாதிட முற்படலாம். எந்த மாதிரி சுத்தமான
சூழ்நிலையிலும் பன்றிகள் ஒன்றாகத்தான் அடைத்து வைக்கப்படுகின்றன.
எத்தனைதான் சுத்தமான சூழ்நிலையில் நீங்கள் பன்றிகளை வைத்திருந்தாலும் -
பன்றி இயற்கையாகவே கேடு கெட்டவை. தன்னுடைய மலத்தையும் - பிறருடைய
மலத்தையும் சுவைத்துத் தின்னும் மிருகம் பன்றி.


உலகில் உள்ள மிருகங்களில் எல்லாம் வெட்கம் கெட்ட மிருகம் பன்றி.

உலகில் உள்ள மிருகங்களில் எல்லாம் வெட்கம் கெட்ட மிருகம் பன்றிதான். தனது
நண்பர்களை அழைத்து வந்து தனது துணையுடன் நண்பர்களை உடலுறவு கொள்ளச்
செய்யும் மிருகம் பன்றி.

அமெரிக்காவில் பெரும்பான்மையினர் பன்றி இறைச்சி உண்ணக் கூடியவர்களாக
இருக்கிறார்கள். இரவு நேர பார்ட்டிகள் முடிந்த பிறகு தங்களுக்குள்
"மனைவியரை மாற்றிக் கொள்ளும் பண்பாடு" (அதாவது எனது மனைவியுடன் நீ உனது
மனைவியுடன் நான் என) கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

பன்றி இறைச்சி தின்பவன் பன்றியைப் போலத்தான் செயல்படுவான். இந்தியர்களான
நாம் அமெரிக்கர்களை மிகவும் முன்னேறியவர்கள் எனவும் - மிகவும் பண்பாடு
உடையவர்கள் எனவும் தலைக்கு மேல் வைத்து கொண்டாடுகிறோம்.

அவர்கள் என்ன செய்தாலும் அதனை நாமும் அப்படியே பின்பற்றுகிறோம்.
சமீபத்தில் மும்பையிலிருந்து பிரசுரமாகும் "ஐலேண்ட்" என்னும்
மாதப்பத்திரிக்கை வெளியிட்டுள்ள கட்டுரை "மனைவியரை மாற்றிக் கொள்ளும்
பண்பாடு" மும்பை வட்டாரத்தில் சர்வ சாதாரணம் என்று குறிப்பிடுகிறது.

xxxxx(மேலே கண்ட சகோதரர் ஜாகிர் நாயக் அவர்களின் பதில் முடிந்தது )xxxxx

முஸ்லிம்களை சித்திரவதை செய்யும் மேலைநாட்டினர் மேல் அல்லாஹ் பலி தண்டனை
கொடுக்கிறான் போலிருக்கிறது! நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக துவா
செய்வோம்! நமக்கும் நம் சமுதாயத்தவர்க்கும் அல்லாஹ்வின் தண்டனை போன்ற
இந்த கொடிய பன்றிக்காய்சல் வராமலிருக்க அல்லாஹ்விடம் பாதுகாப்பு
தேடுவோம்! ஆமீன்! அல்லாஹ் நம்மை காப்பான்!

அன்புடன்
சிராஜ்

விடுதலைப் போரின் விடிவெள்ளி திப்பு சுல்தான்

'கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்' திப்புவின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இது. 'இந்தியாவில் கும்பினியாட்சி நீடிக்க முடியுமா?' என்ற அச்சத்தை எதிரிகளின் மனதில் உருவாக்கியவர் திப்பு. தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் விடுதலைப் போரின் நாயகர்களான கட்டபொம்மன்இ மருது சகோதரர்கள்இ கோபால் நாயக்கர்இ தீரன் சின்னமலைஇ கேரள வர்மாஇ தூந்தாஜி வாக் போன்ற எண்ணற்ற போராளிகளுக்கு அன்று மிகப்பெரும் உந்து சக்தியாகத் திகழ்ந்தவர் திப்பு.

1782 டிசம்பரில் ஹைதர் இறந்த பின் அரசுரிமையைப் பெறும்போது திப்புவின் வயது 32. மேற்குக் கடற்கரையிலிருந்து ஆங்கிலேயர்களைத் துடைத்தெறிந்து விட வேண்டும் என்ற வேகத்துடன் போரைத் தொடர்ந்தார் திப்பு. திப்புவின் அணியில் போரிட்டுக் கொண்டிருந்தன இந்தியாவில் இருந்த பிரெஞ்சுப் படைகள். ஆனால் அன்று புரட்சியெனும் எரிமலையின் வாயிலில் அமர்ந்திருந்த பிரெஞ்சு மன்னன் 16ம் லூயிஇ பிரிட்டனுடன் சமரசம் செய்து கொண்டதால் திப்புவும் போரை நிறுத்த வேண்டியதாயிற்று.

1784இல் முடிவடைந்த இந்தப் போரில் ஆங்கிலப் படையின் தளபதி உள்ளிட்ட 4000 சிப்பாய்கள் திப்புவிடம் போர்க் கைதிகளாகப் பிடிபட்டுஇ பின்னர் அவரால் விடுவிக்கப்பட்டனர். இந்த அவமானம் தான் கும்பினியுடைய குலைநடுக்கத்தின் தொடக்கம்.

மூன்றாவது மைசூர்ப்போர் என்று அழைக்கப்படும் காலனியாதிக்க எதிர்ப்புப் போர் (1792) ஆங்கிலேயக் கைக்கூலியான திருவிதாங்கூர் மன்னனால் தூண்டிவிடப்பட்டது. தனது நட்பு நாடான திருவிதாங்கூரை ஆதரிப்பது என்ற பெயரில் கவர்னர் ஜெனரல் கார்ன்வாலிஸ்இ திப்புவுக்கு எதிராகக் களமிறங்கினான். திருவிதாங்கூர்இ ஐதராபாத் நிஜாம்இ மைசூர் அரசின் முன்னாள் பாளையக்காரர்கள்இ ஆற்காட்டு நவாப்இ தொண்டைமான் ஆகிய அனைவரும் ஆங்கிலேயன் பின்னால் அணிதிரண்டனர்.

எனவே எதிரிகளைத் தன்னந்தனியாக எதிர்கொண்டார் திப்பு. மைசூருக்கு அருகிலிருக்கும் சீரங்கப்பட்டினம் கோட்டை 30 நாட்களுக்கும் மேலாக எதிரிகளின் முற்றுகைக்கு இலக்கான போதிலும் எதிரிகளால் கோட்டைக்குள் நுழைய முடியவில்லை. '30 நாட்கள் முற்றுகையிட்டும் எங்களால் அந்தத் தீவையும் கோட்டையையும் தூரத்திலிருந்து தரிசிக்க மட்டுமே முடிந்தது' என்று பின்னர் குறிப்பிட்டான் ஆங்கிலேய அதிகாரி மன்றோ.

பல போர் முனைகளில் ஆங்கிலேயரை வெற்றி கொண்டன திப்புவின் படைகள். எனினும் போரின் இறுதிக்கட்டத்தில் மராத்தாக்களின் பெரும் படையும் ஆங்கிலேயருடன் சேர்ந்து கொள்ளவேஇ உடன்படிக்கை செய்து கொள்ளவேண்டிய கட்டாயம் திப்புவுக்கு ஏற்பட்டது.

மைசூர் அரசின் பாதி நிலப்பரப்பை எதிரிகள் பங்கு போட்டுக்கொண்டனர். இழப்பீட்டுத் தொகையாக 3.3 கோடி ரூபாயை ஒரு ஆண்டுக்குள் செலுத்த வேண்டுமென்றும்இ அதுவரை திப்புவின் இரு மகன்களை பணயக் கைதிகளாக ஒப்படைக்க வேண்டுமென்றும் நிபந்தனை விதித்தான் கார்ன்வாலிஸ். பணயத்தொகையை அடைத்து கும்பினிக் கொள்ளையர்களிடமிருந்து தன் மகன்களை மீட்டதுடன் ஆங்கிலேயருக்கு எதிரான அடுத்த போருக்கும் ஆயத்தம் செய்யத் தொடங்கினார் திப்பு. 1792 போரில் ஏற்பட்ட இழப்புகளைச் சரி செய்தது மட்டுமல்லஇ முன்னிலும் வலிமையாகத் தனது பொருளாதாரத்தையும் இராணுவத்தையும் திப்பு கட்டியமைத்துவிட்டார்.

'ஆம். நான் அவனைக் கண்டு அஞ்சுகிறேன். அவன் நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களைப் போன்றவன் அல்ல. மற்ற மன்னர்கள் மத்தியில் இவன் ஏற்படுத்தும் முன்னுதாரணத்தைக் கண்டும் நான் அஞ்சுகிறேன். ஆனால் அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத கோழைகளாக மற்ற மன்னர்கள் இருப்பது நம் அதிருஷ்டம்' என்று 1798இல் கும்பினித் தலைமைக்குக் கடிதம் எழுதுகிறான் அன்றைய கவர்னர் ஜெனரல் மார்க்வெஸ் வெல்லெஸ்லி.

திப்புவைப் போரிட்டு வெல்ல முடியாது என்ற முடிவுக்கு வந்த வெள்ளையர்கள்இ 'பிளாசி'ப் போரில் பயன்படுத்திய லஞ்சம் எனும் ஆயுதத்தையும் ஐந்தாம் படையையும் ஆயத்தப்படுத்தத் தொடங்கினார்கள். அடுத்த ஓராண்டிற்குள் திப்புவின் முதன்மையான அமைச்சர்களும் அதிகாரிகளும் தளபதிகளும் விலைக்கு வாங்கப்பட்டார்கள். இதைக் குறிப்பிட்டுஇ 'இப்போது நாம் 'தைரியமாக' திப்புவின் மீது படையெடுக்கலாம்' என்று 1799இல் கும்பினியின் தலைமைக்குக் கடிதம் எழுதுகிறான் வெல்லெஸ்லி.

இதுதான் திப்புவின் இறுதிப்போர். நாடு தழுவிய அளவில் ஒரு ஆங்கிலேய எதிர்ப்பு முன்னணியை உருவாக்க முயன்று தோற்றுஇ பிரான்சிலிருந்து நெப்போலியனின் உதவியும் கிடைக்காத நிலையிலும்இ தன்னந்தனியாக ஆங்கிலேயரை எதிர்கொண்டார் திப்பு. 3வது போரின்போது ஆங்கிலேயனுக்குத் துணை நின்ற துரோகிகள் அனைவரும் இந்தப்போரிலும் திப்புவுக்கு எதிராக அணிவகுத்தனர். மராத்தியர்களோஇ கண்டுகொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டனர்.

அனைத்துக்கும் மேலாகஇ திப்புவின் அமைச்சர்களான மீர் சதக்கும்இ பூர்ணய்யாவும் செய்த ஐந்தாம்படை வேலை காரணமாக சீரங்கப்பட்டினத்தின் கோட்டைக் கதவுகள் ஆங்கிலேயருக்குத் திறந்து விடப்பட்டன. தன்னுடன் போரிட்டு மடிந்த 11இ000 வீரர்களுடன் தானும் ஒரு வீரனாகப் போர்க்களத்தில் உயிர் துறந்தார் மாவீரன் திப்பு. ஆங்கிலேயப் பேரரசின் காலனியாதிக்கத்துக்குத் தடையாகத் தென்னிந்தியாவிலிருந்து எழுந்து நின்ற அந்த மையம் வீழ்ந்தது.

திப்புவைக் கண்டு ஆங்கிலேயர்கள் அஞ்சி நடுங்கியதற்குக் காரணம் அவருடைய இராணுவ வல்லமையோஇ போர்த்திறனோ மட்டுமல்ல தன்னுடைய சாம்ராச்சியத்தைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டுமென்று மட்டும் சிந்திக்காமல்இ ஆங்கிலேயரை விரட்டவேண்டுமென்பதையே தன் வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டிருந்த ஒரு மன்னனைஇ கனவிலும் நனவிலும் அதே சிந்தனையாக வாழ்ந்த ஒரு மன்னனை அவர்கள் கண்டதில்லை.

ஆம். திப்புவின் 18 ஆண்டுகால ஆட்சி அதற்குச் சான்று கூறுகிறது. ஆங்கிலேயர்க்கெதிரான நாடு தழுவியஇ உலகு தழுவிய முன்னணி ஒன்றை அமைப்பதற்காக திப்பு மேற்கொண்ட முயற்சிகள் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன. டில்லி பாதுஷாஇ நிஜாம்இ ஆற்காட்டு நவாப்இ மராத்தியர்கள் என எல்லோரிடமும் மன்றாடியிருக்கிறார் திப்பு.

துருக்கிஇ ஆப்கான்இ ஈரான் மன்னர்களுக்குத் தூது அனுப்பி வணிகரீதியாகவும்இ இராணுவ ரீதியாகவும் உலகளவிலான எதிர்ப்பு அணியை உருவாக்கவும் திப்பு முயன்றிருக்கிறார். 'திப்புவின் கோரிக்கையை ஏற்று ஜமன் ஷா வட இந்தியாவின் மீது படையெடுத்தால் அந்தக் கணமே தென்னிந்தியா திப்புவின் கைக்குப் பறிபோய் விடும்' என்று 1798இல் பதறியிருக்கிறான் வெல்லெஸ்லி.

பிரான்சுடனான உறவில் ஒரு இளைய பங்காளியாக அவர் எப்போதும் நடந்து கொள்ளவில்லை. படையனுப்பக் கோரி பிரெஞ்சுக் குடியரசுக்கு அவர் எழுதிய கடிதத்தில்இ 'அந்தப் படை தன் தலைமையில் தான் போரிட வேண்டுமென்றும்இ நேச நாடான தன்னைக் கலந்து கொள்ளாமல் இனி ஆங்கிலேயர்களுடன் பிரான்சு எந்த உடன்படிக்கைக்கும் செல்லக் கூடாது' என்றும் கூறுகிறார். இந்தக் கடிதத்தின் அடிப்படையில்தான்இ திப்புவின் இராணுவத்தில் சேருமாறு பிரெஞ்சு மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறார்கள் பிரெஞ்சுப் புரட்சியாளர்களான ஜாகோபின்கள்.

பிரெஞ்சுப் புரட்சிக்கு முன் லூயி மன்னனின் அரசுடன் உறவு வைத்திருந்த காலத்தில் கூடஇ பாண்டிச்சேரியிலிருந்து பிரெஞ்சு அரசால் விரட்டப்பட்ட ஜாகோபின்களுக்கு (மன்னராட்சியை எதிர்த்த பிரெஞ்சுப் புரட்சிக்காரர்கள்) மைசூரில் இடமளிக்க திப்பு தயங்கவில்லை. புரட்சி வெற்றி பெற்ற பின் அதைக் கொண்டாடுமுகமாக முடியாட்சிச் சின்னங்களையெல்லாம் தீயிட்டு எரித்து மைசூரில் ஜாகோபின்கள் நடத்திய விழாவிலும் பங்கேற்றுஇ 'குடிமகன் திப்பு' என்று அவர்கள் அளித்த பட்டத்தையும் மகிழ்ச்சியுடன் ஏற்கிறார். சுதந்திரம்இ சமத்துவம்இ சகோதரத்துவம் என்ற சொற்கள் இந்த நாட்டில் திப்புவின் மண்ணில்தான் முதன் முதலாக ஒலித்தன.
பிரெஞ்சுப் பத்திரிக்கையொன்றில் ஆங்கிலேயக் காலனியாதிக்கத்துக்கு எதிராக அமெரிக்கர்கள் நடத்திய போருக்கு நிதியுதவி கேட்டு பெஞ்சமின் ஃபிராங்க்ளின் வெளியிட்டிருந்த கோரிக்கையைப் படித்துவிட்டு 'மைசூர் அரசின் சார்பாக' உடனே நிதியனுப்பிய திப்புஇ அமெரிக்காவிலும் இந்தியாவிலும் நடக்கும் காலனியாதிக்க எதிர்ப்புப் போர்களின் ஒற்றுமையைக் குறிப்பிட்டு 'உலகின் கடைசி சர்வாதிகாரி இருக்கும் வரையில் நமது போராட்டம் தொடரட்டும்' என்று செய்தியும் அனுப்புகிறார்.

ஒரு மன்னன் இவ்வாறெல்லாம் நடந்து கொண்டிருக்க முடியுமா என்று வாசகர்கள் வியப்படையலாம். வரலாற்றின் போக்கை உணர்ந்து சமூக மாற்றத்துக்கான நடவடிக்கைகளில் முன்கை எடுத்த மன்னர்கள் உலக வரலாற்றில் மிகச் சிலரே. அத்தகைய அறிவொளி பெற்ற மன்னர்களில் திப்பு ஒருவர். பரம்பரை அரச குடும்பம் எதையும் சாராத திப்புவின் சமூகப் பின்னணியும்இ 'பென்சன் ராஜாக்கள்' என்று வெறுப்புடன் அவர் குறிப்பிட்ட ஆங்கிலேய அடிவருடி மன்னர்கள் மீது அவர் கொண்டிருந்த வெறுப்பும்இ பிரெஞ்சுப் புரட்சியின் இலக்கியங்களோடு அவர் கொண்டிருந்த பரிச்சயமும்இ அவருக்குள் அணையாமல் கனன்று கொண்டிருந்த காலனியாதிக்க எதிர்ப்புணர்வும்இ மாறிவரும் உலகைப் புரிந்து கொள்ளும் கண்ணோட்டத்தை அவருக்கு வழங்கியிருக்க வேண்டும்.

தனது அரசின் நிர்வாகம்இ வணிகம்இ விவசாயம்இ சமூகம்இ இராணுவம் போன்ற பல துறைகளில் அவர் அறிமுகப்படுத்த முனைந்த மாற்றங்களைப் பார்க்கும்போதுஇ திப்பு என்ற ஆளுமையின் கம்பீரமும் செயல்துடிப்பும் நம்முன் ஓவியமாய் விரிகிறது.

காலனியாதிக்கத்தை எதிர்க்க வேண்டுமானால் ஒரு தொழில் முறையில் பயிற்றுவிக்கப்பட்டஇ பெரியஇ நவீன இராணுவத்தை உருவாக்கியாக வேண்டும் என்ற புறவயமான நிர்ப்பந்தம் திப்புவை நவீனமயமாக்கத்தை நோக்கி உந்தித் தள்ளுகிறது. ஆனால் அரசுக்கான வருவாயை விவசாயம் தான் வழங்கியாக வேண்டுமென்ற சூழ்நிலையைப் புரிந்து கொண்டு விவசாயிகளின் வளர்ச்சி குறித்து அவர் பெரிதும் அக்கறை காட்டுகிறார்.

'எந்தச் சாதி மதத்தைச் சேர்ந்தவரானாலும் சரிஇ உழுபவர்களுக்குத் தான் நிலம் சொந்தமாக இருக்கவேண்டும்' என்று திப்பு பிரகடனம் செய்கிறார். இந்தப் பிரகடனத்தை நடைமுறையில் அமல் படுத்தியிருப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவே என்றாலும்இ ரயத்வாரி முறையை அமல்படுத்தியதுடன்இ பார்ப்பனர்களின் நிலங்களுக்கு வழங்கப்பட்ட வரிவிலக்கையும் திப்பு ரத்து செய்திருக்கிறார். இராணுவம் மற்றும் துணை இராணுவப் படையினர் 3 லட்சம் பேருக்கு நிலம் வழங்கியிருக்கிறார். சென்னை மாகாணத்தைப் போல அல்லாமல் மைசூர் அரசில் தலித் சாதியினருக்குப் பல இடங்களில் நிலஉடைமை இருந்ததாக எட்கர் தர்ஸ்டன் என்ற ஆய்வாளர் கூறுகிறார்.

'ஏழைகளையும்இ விவசாயிகளையும் சொல்லாலோ செயலாலோ துன்புறுத்த மாட்டோம்' என்று வருவாய்த்துறை ஊழியர்கள் பதவி ஏற்கும் முன் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. அதிகாரிகள் தம் நிலங்களில் விவசாயிகளைக் கூலியின்றி வேலை பார்க்கச் சொல்வது முதல் தம் குதிரைகளுக்கு இலவசமாகப் புல் அறுத்துக் கொள்வது வரை அனைத்தும் சட்டப்படி தண்டனைக்கு உரிய குற்றங்களாக்கப்பட்டிருந்தன. விவசாயிகளைக் கொடுமைப்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டதற்கான சான்றுகளும் இருப்பதாகக் கூறுகிறார்கள் ஆய்வாளர்கள். 1792 போருக்குப்பின் திப்புவிடமிருந்து ஆங்கிலேயர்கள் கைப்பற்றிக் கொண்ட சேலம் மாவட்டம் வேலூர் தாலூக்காவிலிருந்து வரிக்கொடுமை தாளாமல் 4000 விவசாயிகள் திப்புவின் அரசுக்குக் குடி பெயர்ந்ததை 1796லேயே பதிவு செய்திருக்கிறான் ஆங்கிலேய அதிகாரி தாமஸ் மன்றோ.

1792 தோல்விக்குப் பிறகும் கூட ஆங்கிலேயரை தன் எல்லைக்குள் வணிகம் செய்ய திப்பு அனுமதிக்கவில்லை. மாறாகஇ உள்நாட்டு வணிகர்களை ஊக்குவித்திருக்கிறார். பணப்பயிர் உற்பத்திஇ பெங்களூர் லால்பாக் என்ற தாவரவியல் பூங்காஇ பட்டுப் பூச்சி வளர்ப்பு என விவசாயத்தை பிற உற்பத்தித் துறைகளுடன் இணைப்பதிலும்இ பாசன வளத்தைப் பெருக்கி விவசாயத்தை விரிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்தி இருக்கிறார் திப்பு. 1911இல் ஆங்கிலேயப் பொறியாளர்கள் கிருஷ்ணராஜ சாகர் அணையைக் கட்டுவதற்கான பணிகளைத் துவக்கிய போது அதே இடத்தில் அணைக்கட்டு கட்டுவதற்கு 1798இல் திப்பு நாட்டியிருந்த அடிக்கல்லையும்இ இந்த அணைநீரைப் பயன்படுத்தி உருவாக்கப் படும் புதிய விளைநிலங்களுக்கு வரிவிலக்கு அளிப்பது குறித்த திப்புவின் ஆணையையும் கண்டனர்.

'அன்றைய மைசூர் அரசின் மொத்த மக்கட்தொகையில் 17.5மூ பேர் விவசாயம் சாராத பிற உற்பத்தித் துறைகளில் ஈடுபட்டிருந்தனர்; இரும்புஇ தங்கம்இ நெசவு போன்ற தொழில்களின் அடிப்படையிலான நகரங்கள் உருவாகியிருந்தன உற்பத்தியின் அளவிலும் தரத்திலும் அவை ஐரோப்பியப் பொருட்களுக்கு நிகராக இருந்தன முதலாளித்துவத் தொழிலுற்பத்தியின் வாயிலில் இருந்தது திப்புவின் மைசூர்'' என்று ஆங்கிலேய அதிகாரிகளின் ஆவணங்களையே ஆதாரம் காட்டி எழுதுகிறார் வரலாற்றாய்வாளர் தோழர். சாகேத் ராமன். நகரங்களில் வளர்ந்திருந்த பட்டறைத் தொழில்கள் மற்றும் வணிகத்தின் காரணமாக சாதி அமைப்பு இளகத் தொடங்கியிருந்ததையும்இ நெசவுஇ சில்லறை வணிகம் முதலான தொழில்களில் தலித்துகள் ஈடுபட்டிருந்ததையும் தனது ஆய்வில் குறிப்பிடுகிறான் கும்பினி அதிகாரி புக்கானன்.

திப்புவிடம் இருந்த புதுமை நாட்டமும் கற்றுக் கொள்ளும் தாகமும் இந்த முன்னேற்றத்தில் பெரும்பங்காற்றியிருக்கின்றன.

பிரான்சுடனான அவரது உறவில் ஐரோப்பியத் தொழில் புரட்சியை அப்படியே இங்கு பெயர்த்துக் கொண்டு வந்து விடும் ஆர்வம் தெரிகிறது. 1787 இல்இ பல்துறை அறிவையும் வளர்த்துக் கொள்வதற்காக 70 பேரை பிரான்சுக்கு அனுப்பி வைக்கிறார். அது மட்டுமல்லஇ தொழிற்புரட்சியின் உந்துவிசையான நீராவி எந்திரத்தை உடனே அனுப்பி வைக்குமாறு பிரெஞ்சுக் குடியரசிடம் கோருகிறார் திப்பு.

இவையெதுவும் ஒரு புத்தார்வவாதியின் ஆர்வக் கோளாறுகள் அல்ல. காலனியாதிக்க எதிர்ப்புணர்வால் உந்தப்பட்டு தொழிலையும் வணிகத்தையும் வளர்க்க விரும்பிய திப்புஇ 1793இல் கிழக்கிந்தியக் கம்பெனிக்குப் போட்டியாக அரசு வணிகக் கம்பெனியைத் துவக்குகிறார். இந்துஸ்தானம் முழுதும் 14 இடங்களில் வணிக மையங்கள்இ 20 வணிகக் கப்பல்கள்இ 20 போர்க்கப்பல்கள்இ கான்ஸ்டான்டி நோபிளில் மைசூர் அரசின் கப்பல் துறை.. என்று விரிந்து செல்கிறது திப்புவின் திட்டம்.

அன்று கிழக்கிந்தியக் கம்பெனியை விஞ்சுமளவு வணிகம் செய்து கொண்டிருந்த பனியாஇ மார்வாஇ பார்ஸி வணிகர்கள் கும்பினியின் போர்களுக்கு நிதியுதவி செய்து கொண்டிருக்கஇ வணிகத்தையே ஒரு அரசியல் நடவடிக்கையாகஇ மக்களையும் ஈடுபடுத்தும் காலனியாதிக்க எதிர்ப்புப் போராக மாற்ற விழைந்திருக்கிறார் திப்பு.

அரசு கஜானாவுக்கு நிதியைத் திரட்டுவதற்காக மதுவிற்பனையை அனுமதித்த தனது நிதி அமைச்சரைக் கண்டித்துஇ 'மக்களின் ஆரோக்கியத்தையும் ஒழுக்கத்தையும் அவர்களது பொருளாதார நலனையும் காட்டிலும் நம் கஜானாவை நிரப்புவதுதான் முதன்மை யானதா?' என்று கேள்வி எழுப்புகிறார். கஞ்சா உற்பத்தியைத் தடை செய்கிறார். அவரது எதிரியான கும்பினியோஇ கஞ்சா பயிரிடுமாறு வங்காள விவசாயிகளைத் துன்புறுத்தியது; கஞ்சா இறக்குமதியை எதிர்த்த சீனத்தின்மீது போர் தொடுத்தது; கஞ்சா விற்ற காசில் 'சூரியன் அஸ்தமிக்காத சாம்ராச்சியத்தை' உருவாக்கியது.

அநாதைச் சிறுமிகளை கோயிலுக்கு தேவதாசியாக விற்பதையும்இ விபச்சாரத்தையும் தடை செய்தார் திப்பு. அதே காலகட்டத்தில் பூரி ஜகந்நாதர் கோயிலின் தேரில் விழுந்து சாகும் பக்தர்களின் மடமையிலும்இ அவ்வூரின் விபச்சாரத்திலும் காசு பார்த்தார்கள் கும்பினிக்காரர்கள்.

'எகிப்தியப் பிரமிடுகளும்இ சீனப் பெருஞ்சுவரும்இ கிரேக்க ரோமானியக் கட்டிடங்களும் அவற்றைக் கட்டுவதற்கு ஆணையிட்ட மன்னர்களின் புகழுக்குச் சான்று கூறவில்லை. கொடுங்கோல் மன்னர்களின் ஜம்பத்துக்காக ரத்தம் சிந்தி உயிர்நீத்த லட்சோப லட்சம் மக்களின் துயரம்தான் அவை கூறும் செய்தி' என்று எழுதிய திப்பு தனது அரசில் அடிமை விற்பனையைத் தடை செய்தார். 'எந்த அரசாங்க வேலையானாலும் கூலி கொடுக்காமல் வேலை வாங்கக் கூடாது' என்று தன் அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பித்தார்.

கும்பினிக்காரர்களோ திப்புவிடமிருந்து கைப்பற்றிய மலபார் பகுதியில் பின்னாளில் தம் எஸ்டேட்டு வேலைக்காக வாயில் துணி அடைத்துப் பிள்ளை பிடித்தனர்; முதல் விடுதலைப் போரில் தென்னிந்தியா தோற்றபின் தென் ஆப்பிரிக்கா முதல் மலேயா வரை எல்லா நாடுகளுக்கும் கொத்தடிமைகளாக மக்களைக் கப்பலேற்றினர்.

திப்புவின் ஜனநாயகப் பண்பு அவருடைய நிர்வாக ஆணைகள் அனைத்திலும் வெளிப்படுகிறது. 'விவசாயிகள் மீது கசையடி போன்ற தண்டனைகளை நிறுத்திவிட்டுஇ 2 மல்பெரி மரங்களை நட்டு 4 அடி உயரம் வளர்க்க வேண்டும்' என்று தண்டனை முறையையே மாற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார். தவறிழைக்கும் சிப்பாய்கள் மீதும் உடல் ரீதியான தண்டனைகள் திப்புவின் இராணுவத்தில் நிறுத்தப்பட்டிருக்கின்றன.

'தோற்கடிக்கப்பட்ட எதிரி நாட்டின் சொத்துக்களைச் சூறையாடுவதன் மூலம் சிலர் பணக்காரர்கள் ஆகலாம். ஆனால் தேசத்தை அது ஏழ்மையாக்கும்; மொத்த இராணுவத்தின் கவுரவத்தையும் குலைக்கும். போர்களை போர்க் களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது போர் தொடுக்காதீர்கள். பெண்களைக் கவுரவமாக நடத்துங்கள். அவர்களது மத நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள். குழந்தைகளுக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்' என்று தன் இராணுவத்துக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பிக்கிறார் திப்பு. ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதிகளிடமிருந்து ஒரு பேச்சுக்குக் கூட இத்தகைய நாகரிகமான சிந்தனை அன்று வெளிப்பட்டதில்லை.

'ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் சந்திக்கும் முதன்மையான அபாயம் திப்பு தான்' என்று கும்பினி நிர்வாகத்துக்குப் புரியவைப்பதற்காக தாமஸ் மன்றோ லண்டனுக்கு எழுதிய நீண்ட கடிதத்தில் திப்புவின் அரசைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறான்: 'சிவில் நிர்வாகமாக இருக்கட்டும்இ இராணுவமாக இருக்கட்டும்இ உயர்குலத்தில் பிறந்தவர்கள் என்பதற்காக இங்கே சலுகை காட்டப்படுவதில்லை. எல்லா வர்க்கத்தினர் மீதும் பாரபட்சமின்றி நீதி நிலைநாட்டப் படுகிறது.. அநேகமாக எல்லா வேலைவாய்ப்புகளும் பொறுப்புகளும் மிகச் சாதாரண மனிதர்களுக்கு வழங்கப்படுவதால்இ இந்தியாவில் வேறு எங்கும் காணமுடியாத அளவு செயல்துடிப்பை இந்த அரசில் பார்க்க முடிகிறது.'

1799இல் திப்பு வீழ்த்தப்பட்டபின் எழுதப்பட்ட கும்பினி அதிகாரிகளின் குறிப்புகள் கீழ்க்கண்டவாறு கூறுகின்றன: 'இறுதி நேரத்தில் நமது கையாட்களாக மாறிய இந்துக்கள் கூட திப்புவை கனிவான எசமானாகவே கருதுகிறார்கள். தற்போது நாம் ஆட்சிக்கு வந்துவிட்டதால் திப்புவைப் பற்றிப் புகார் கூறினால் நாம் மகிழ்ச்சி அடைவோம் என்பதற்காகக் கூட மக்கள் யாரும் புகார் கூறவில்லை. இவர்கள் நம் ஆட்சியை வேறு வழியின்றிச் சகித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் பழைய எசமானைத்தான் ஆதரிப்பார்கள்.' இவையனைத்தும் திப்புவைப் பற்றி எதிரிகள் வழங்கும் ஆதாரங்கள்.

மக்கள் மீது திப்பு பாராட்டிய நேசம்இ சம்பிரதாயமானதோ நோக்கமற்றதோ அல்ல. எதிரிகள் கண்டு அஞ்சுமளவுக்கு ஒரு பிரம்மாண்டமான இராணுவத்தைக் கட்டி அமைத்திருந்த போதிலும்இ தன்னுடைய நாடே ஒரு மனிதனாக எழுந்து நின்று ஆங்கிலேயரை எதிர்த்துப் போராட வேண்டும் என்று கனவு கண்டிருக்கிறார் திப்பு.

தன் அரண்மனையில் திப்பு பொறித்து வைத்துள்ள வாசகங்கள் இதற்குச் சாட்சி கூறுகின்றன.

'நம்முடைய குடிமக்களுடன் சச்சரவு செய்வதென்பதுஇ நமக்கெதிராக நாமே போர் தொடுத்துக் கொள்வதற்குச் சமமானது. மக்கள்தான் நம் கவசம். நமக்கு அனைத்தையும் வழங்குபவர்கள் மக்கள்தான். நம்முடைய சாம்ராச்சியத்தின் வலிமையனைத்தையும்இ வெறுப்பனைத்தையும் சேமித்து வையுங்கள். அவை அனைத்தும் அந்நிய எதிரிகளின் மீது மட்டும் பாயட்டும்.'

வெறும் சொற்களல்ல. காலனியாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தில் தன் மக்களைக் கவசமாக மட்டுமின்றிஇ வாளாகவும் பயன்படுத்தக் கனவு கண்டார் திப்பு. 'விவசாயிகள் அனைவருக்கும் துப்பாக்கி வழங்கப்பட வேண்டும். அன்றாடம் ஊருக்கு வெளியே துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்கப்பட வேண்டும்' என்று தன் வரி வசூல் அதிகாரிகளுக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பித்திருக்கிறார் திப்பு. இந்த ஆணை செயல் வடிவம் பெற்றிருக்குமா என்ற கேள்வி இருக்கட்டும். தன் குடிமக்கள் மீது எத்தனை நம்பிக்கை வைத்திருந்தால் ஒரு மன்னனே அவர்களுக்கு ஆயுதம் வழங்குமாறு உத்தரவிட்டிருக்க முடியும்?

திப்புவின் நம்பிக்கை வீண் போகவில்லை. சீரங்கப்பட்டினத்தின் கோட்டைக் கதவுகளைத் திறந்துவிட்ட நிதி அமைச்சன் மீர் சதக்கின் தலையை அந்தப் போர்க்களத்திலேயே சீவி எறிந்தான் திப்புவின் ஒரு சிப்பாய். செய்தியறிந்த மக்களோ அங்கேயே அவன் உடலின் மீது காறி உமிழ்ந்தார்கள். புதைக்கப்பட்ட பிறகும் அவன் உடலைத் தோண்டியெடுத்து அதன் மீது ஒரு வார காலம் சேற்றையும் மலத்தையும் வீசினார்கள். 'சதக்' என்ற பாரசீகச் சொல் துரோகத்தைக் குறிக்கும் சொல்லாக கன்னட மொழியில் ஏறியது.

காலனியாதிக்கத்துக்கு எதிராக ஒரு மக்கள் படையைக் கட்டக் கனவு கண்டார் திப்பு. அவர் மறைவுக்குப்பின் ஒன்றரை லட்சம் பேரைத் திரட்டிஇ ஆங்கிலேயருக்கு எதிராகப் போர் நடத்திஇ தன் மன்னனுக்கு அஞ்சலி செலுத்தினான் திப்புவின் குதிரைப் படைத் தளபதி தூந்தாஜி வாக்.

ஒருவேளை திப்பு பிழைத்திருந்தால்? 'உயிர் பிழைத்தல்' என்ற சொற்றொடரே திப்புவின் அகராதியில் இல்லை. 1792 போரில் வெள்ளையரிடம் தோற்றவுடன் 'ஆங்கிலேயரை ஒழிக்கும் வரை இனி நான் பஞ்சணையில் படுக்கமாட்டேன்' என்று அரசவையிலேயே சூளுரைத்தார் திப்பு.

இதோஇ குண்டுக் காயங்களுடன் கோட்டை வாயிலில் சரிந்து கிடக்கிறார் திப்பு. 'மன்னாஇ யாரேனும் ஒரு ஆங்கிலேய அதிகாரியை அழைக்கட்டுமாஇ சரணடைந்து விடலாம்' என்று பதறுகிறான் அவருடைய பணியாள். 'முட்டாள்... வாயை மூடு' என்று உறுமுகிறார் திப்பு. ஆம்! 'ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்' என்று பிரகடனம் செய்த அந்தப் புலிஇ போர்க் களத்திலேயே தன் கண்ணை மூடியது.

திப்பு போர்க்களத்திற்குச் சென்று விட்டார் என்பதை நம்ப மறுத்து அரண்மனையெங்கும் தேடிய ஆங்கிலேய இராணுவம்இ நள்ளிரவில் சிப்பாய்களின் பிணக்குவியலுக்குள்ளே திப்புவின் உடலைக் கண்டெடுக்கிறது. அந்தக் காட்சியை அப்படியே பதிவு செய்திருக்கிறான் ஒரு ஆங்கிலேய அதிகாரி:

'நகரமே சூறையாடப்பட்டுத் தீக்கிரையாக்கப்பட்டுப் புகைந்து கொண்டிருக்கிறது. தமது வீடுகள் கொள்ளையடிக்கப்படுவதைப் பற்றிக் கவலைப்படாமல்இ திப்புவின் உடலை நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்குகிறார்கள் மக்கள். அடக்க முடியாமல் நெஞ்சம் வெடிக்கக் கதறுகிறார்கள்.'

'மானமிழந்தினி வாழ்வோமோ அல்லா எமக்குச் சாவு வராதா துயரும் இழிவும் கண்ணில் தெரியுதே அல்லா எமக்குச் சாவு வராதா'
இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் திப்புவின் உடலைத் தழுவிச் சென்ற அந்த ஓலம்இ இதோ நம் இதயத்தை அறுக்கிறது. திப்பு எனும் அந்தக் காப்பியத் துயரம் நம் கண்ணில் நனைகிறது.

பொறுமை.


நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (2:155)

(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்என்று கூறுவார்கள். (2:156)

அன்றியும், (அல்லாஹ்வின் பாதையில் போரிடும்) உங்களிலிருந்துள்ள முஜாஹிதுகளையும், பொறுமையாளர்களையும் நாம் அறியும் வரை உங்களை நிச்சயமாக நாம் சோதிப்போம்; உங்கள் செய்திகளையும் நாம் சோதிப்போம் (அவற்றின் உண்மையை வெளிப்படுத்துவதற்காக). (47:31)

ஒரு முஃமினுக்கு இன்பம் ஏற்பட்டால் அதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துகிறான், அது அவனுக்கு நன்மையாக ஆகின்றது. அவனுக்கு துன்பம் ஏற்படுமானால் அதை சகித்துக்கொள்கிறான், அதுவும் அவனுக்கு நன்மையாகி விடுகின்றது. ஆக முஃமினுக்கு எது நடந்தாலும் அனைத்துமே நன்மையாக அமைவது ஆச்சிரியமான ஒன்றாகும்.

ஸுஹைப் இப்னு ஸினான்(ரலி) : முஸ்லிம்

(கடந்த கால) நபிமார்களில் ஒரு நபியைப்பற்றி நபி(ஸல்) குறிப்பிடும் போது அவரை அவரது சமுதாயத்தினர் அடித்துக் காயப்படுத்தினார்கள். அவர் தன் முகத்திலிருந்து இரத்தத்தைத் துடைத்துக் கொண்டு இறைவா! என் சமுதாயத்தை மன்னித்துவிடு! அவர்கள் அறியாத மக்களாக உள்ளனர்என்று கூறியதாக நபி(ஸல்) குறிப்பிட்டார்கள்.

இப்னுமஸ்வூது(ரலி) : புகாரி, முஸ்லிம்

ஒரு முஸ்லிமுக்கு எற்படும் சிரமங்கள் நோய்கள், கஷ்டங்கள், கவலைகள், வேதனைகள், அவனது காலில் தைத்து விடும் முள் உட்பட எதுவானாலும் அவற்றை அவனது தவறுகளுக்கு இறைவன் பரிகாரமாக ஆக்கி விடுகின்றான் என்று நபி(ஸல்) கூறினார்கள்.

அபூஹுரைரா(ரலி), அபூஸயீத்(ரலி) : புகாரி, முஸ்லிம்

கன்னத்தில் அடித்துக் கொள்பவனும், சட்டைகளைக் கிழித்துக் கொள்பவனும், முட்டாள் தனமாக புலம்புபவனும் நம்மைச் சேர்ந்தவனல்லன்என்று நபி(ஸல்) கூறினார்கள்.

அப்துல்லாஹ்பின் மஸ்வூது(ரலி) : புகாரி, முஸ்லிம், நஸயீ

யார் சுய மரியாதையுடன் நடக்க விரும்புகின்றாரோ அவரை சுயமரியாதையுடன் இறைவன் வாழச் செய்கிறான். பிறரது உதவியை எதிர்பார்க்காது இருக்க விரும்பக்கூடியவரை, எவரிடமும் தேவையற்றவராக இறைவன் ஆக்குகின்றான். யார் பொறுமையை மேற்கொள்ள முயற்சிக்கிறாரோ அவரைப் பொறுமையாளராக அல்லாஹ் ஆக்குகின்றான், பொறுமையைவிட பரந்த அருட்கொடை எதையும் எவரும் கொடுக்கப் படுவதில்லை

ஸஃது இப்னு ஸினான்(ரலி) : புகாரி, முஸ்லிம்

ஒருவரது கண்களை நான் கைப்பற்றிக் கொண்டபின் அதை எனது அடியார் சகித்துக் கொண்டால் அதற்கு சுவர்க்கத்தைக் தவிர வேறு பரிசு இல்லை என்று அல்லாஹ் கூறுகிறான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்

அபூஹுரைரா(ரலி) : புகாரி

அல்லாஹ் யாருக்கு நன்மையை நாடுகின்றானோ அவரை அல்லாஹ் சோதிப்பான்

அபூஹுரைரா(ரலி) : புகாரி

எனது முஃமினான அடியாரின் குடும்பத்தில் அவருக்கு விருப்பமானவரை நான் கைப்பற்றிக் கொள்ளும்போது அதை அவர் பொறுத்துக் கொண்டால் சுவர்க்கம் தான் அவருக்கான கூலிஎன்று அல்லாஹ் கூறுகிறான் என்று நபி(ஸல்) கூறினார்கள்.

அனஸ்(ரலி) : புகாரி

பாதிக்கப்பட்டவுடன் மேற்கொள்வதே பொறுமையாகும்என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அனஸ்(ரலி) : புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸயீ

மக்களோடு கலந்து வாழ்ந்து அவர்களினால் ஏற்படும் தொல்லைகளை பொறுத்துக் கொள்பவன், மக்களோடு கலந்து வாழாது அவர்களின் தொல்லைகளை பொறுத்துக் கொள்ளாதவனை விட சிறந்தவனாவான்என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இப்னு உமர்(ரலி) : திர்மிதீ

நோன்பின் நோக்கமும், சிறப்பும்


நோன்பின் நோக்கம்

பசி எப்படிப்பட்டது என்பது உணரப்படுகிறது, உடலின் ஆரோக்கியம் பேணப்படுகிறது என்றெல்லாம் காரணங்கள் கூறினாலும் நோன்பினால் இந்தப் பயன்கள் இருக்கலாம். இந்தப் பயன்களைக் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு நோன்பு நோற்க வேண்டுமா? நிச்சயமாக இல்லை. நாம் பக்குவப்படுவதும், இறையச்சமுடையவராக ஆவதும்தான் நோன்பின் பிரதான நோக்கம். திருக்குர்ஆன் 2:183வது வசனம் இதனைத் தெளிவுப்படுத்துகிறது.

"பொய் சொல்வதையும், பொய்யான அடிப்படையில் செயல் படுவதையும் எவர் விடவில்லையோ அவர் தனது உணவையும் பானத்தையும் விட்டிருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையும் இல்லை," என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹூரைரா (ரலி) நூல்கள்- புகாரி, அஹ்மத், திர்மிதி, அபூதாவூத், இப்னுமாஜா.

தவறான நடவடிக்கைகளிலிருந்து விடுபடாமல், பட்டினிக் கிடப்பதோ, தாகித்திருப்பதோ இறைவனுக்குத் தேவையில்லை. என்பதை மேற்கண்ட நபிமொழியிலிருந்து விளங்கலாம்.

நோன்பின் சிறப்பு!

நம்பிக்கையுடன் நன்மையை எதிர்பார்த்து எவர் ரமளானில் நோன்பு வைக்கிறாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்று இறைத்தூதர் (ஸல்) கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹூரைரா (ரலி) நூல்கள்: புகாரி முஸ்லிம் திர்மிதி.

ஒவ்வொரு நன்மையான காரியத்துக்கும் பத்து முதல் எழு நூறு மடங்குவரை கூலி கொடுக்கப்படுகின்றது. "நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன்" என்று அல்லாஹ் கூறுகிறான். நோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும் நோன்பாளியின் வாய் நாற்றம், அல்லாஹ்விடம் கஸ்தூரியின் நறுமணத்தை விட சிறந்ததாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹூரைரா (ரலி) நூல்: திர்மிதி.

சுவர்க்கத்தில் ரய்யான் என்றொரு வாசல் உள்ளது, அவ்வழியாக நோன்பாளிகள் (மட்டுமே) அழைக்கப்படுவார்கள். நோன்பு நோற்றவர்கள் அவ்வழியாக நுழைவார்கள். யார் அதில் நுழைகிறாரோ அவருக்கு ஒரு போதும் தாகம் ஏற்படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், ஸஹ்ல் பின் ஸாஃது (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி.

"நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனை சந்திக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹூரைரா (ரலி) நூல்: திர்மிதி.

இரத்தம் குத்தி எடுத்தல்

ஆரம்பத்தில் ஜாஃபர் பின் அபீ தாலிப் (ரலி) அவர்கள் இரத்தம் கொடுத்துக் கொண்டிருந்த போது அவரைக் கடந்து சென்ற நபி (ஸல்) அவர்கள் இரத்தம் கொடுத்தவரும், எடுத்தவரும் நோன்பை விட்டு விட்டனர் என்றார்கள். பிறகு நோன்பாளி இரத்தம் கொடுப்பதற்கு அனுமதியளித்தார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அனஸ் (ரலி) நூல்: தாரகுத்னீ.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நோன்பாளி இரத்தம் கொடுப்பதை நீங்கள் வெறுப்பவர்களாக இருந்தீர்களா? என்று அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் "பலவீனம் ஏற்படும் என்பதனாலேயே அதனை வெறுத்தோம்." என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர், ஸாபித் அல் புன்னாணி நூல்: புகாரி.

(மருத்துவ சோதனைக்காக நோன்பாளி இரத்தம் கொடுத்தால் நோன்பு முறியாது என்பதை இதிலிருந்து விளங்கிக்கொள்ளலாம்)

கடமையல்லாத - சுன்னத்தான நோன்புகள்.

ஷவ்வால் மாதத்தில் நோன்பு

யார் ரமளான் மாதத்தில் நோன்பிற்கு பிறகு ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகளை வைக்கிறாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போலாவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூ அய்யூப் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி.

ஹஜ் மாதத்தில் அரஃபா நோன்பு (ஹாஜிகள் அல்லாதவருக்கு)

அரஃபா நாளில் நோன்பு நோற்பது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு அவர்கள் "அது கடந்த வருடத்தின் மற்றும் வரக்கூடிய வருடத்தின் பாவத்தை போக்கும் என நான் ஆதரவு வைக்கிறேன் என்று கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூகதாதா (ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதி.

ஹாஜிகள் நோன்பு நோற்கத் தடை

அரஃபா தினத்தன்று, அரஃபா மைதானத்தில் (கூடியிருப்போர்) நோன்பு நோற்பதை நபி(ஸல்) அவர்கள் தடைவிதித்துள்ளார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹுரைரா (ரலி) அபூதாவூத், அஹ்மத், நஸயீ, இப்னுமாஜா.

முஹர்ரம் மாத நோன்பு

நபி(ஸல்) அவர்கள் மதினாவிற்கு வருகை தந்தபோது ஆஷூரா நாளில் யூதர்கள் நோன்பிருப்பதைக் கண்டார்கள். இந்நாளின் சிறப்பென்ன? என்று யூதர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு யூதர்கள் இது மகத்தான நாளாகும். இந்நாளில் தான் மூஸா (அலை) அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். மேலும் ஃபிர்அவுனையும் அவனுடைய சமூகத்தினரையும் (கடலில்) மூழ்கடித்தான். எனவே அல்லாஹ்வுக்கு நன்றி கூறும் விதமாக மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதனால் நாங்கள் நோன்பு நோற்கிறோம் என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் நாங்கள் தான் மூஸா (அலை) அவர்களை பின்பற்றுவதில் உங்களை விடத் தகுதியானவர்கள் என்று கூறினார்கள். அந்நாளில் நோன்பு நோற்றார்கள், மேலும் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத்

நபி(ஸல்) அவர்கள் யூதர்களின் வழிமுறைக்கு மாற்றம் செய்யும் விதமாக ஆஷுரா நாளின் முந்திய (ஒன்பதாம்) நாளும் நோன்பு நோற்குமாறு கூறினார்கள். மேலும் நான் வரக்கூடிய வருடம் இருந்தேனேயானால் ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன் என்று குறிப்பிட்டார்கள். ஆனால் அதே வருடத்தில் மரணமடைந்தார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: முஸ்லிம்.

மாதத்தில் மூன்று நோன்புகள்

மாதந்தோறும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பதும், ரமளானில் நோன்பு நோற்பதும் காலமெல்லாம் நோன்பு நோற்பதாக அமையும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூகதாதா (ரலி) நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத்.

"நீர் மாதத்தில் மூன்று நோன்புகளை நோற்றால் அதை பதிமூன்று, பதினான்கு, பதினைந்து ஆகிய நாட்களில் நோற்குமாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூதர் (ரலி) நூல்கள்: திர்மிதி, நஸயீ, அஹ்மத்.

மாதத்தில் மூன்று நோன்புகள் நோற்கும் மற்றொரு நபிவழி

நபி (ஸல்) அவர்கள் திங்கள், வியாழன் ஆகிய நாட்களைத் தேர்ந்தெடுத்து நோன்பு நோற்று வந்தனர். அறிவிக்கும் அன்னை, ஆயிஷா (ரலி) நூல்கள்: அஹ்மத், நஸயீ, திர்மிதி, இப்னுமாஜா.

ஒவ்வொரு வியாழனும், திங்களும் அமல்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. நான் நோன்பு நோற்றிருக்கும் போது என் அமல்கள் சமர்ப்பிக்கப்படுவதை நான் விரும்புகிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹீரைரா (ரலி) நூல்கள்: அஹ்மத், திர்மிதி, இப்னுமாஜா.

நபி (ஸல்) அவர்கள் மாதத்தில் மூன்று நோன்புகளை மாதத்தின் ஆரம்பவார திங்கட்கிழமை, அடுத்து வரக்கூடிய வாரம் வியாழக்கிழமை, அதற்கு அடுத்து வரக்கூடிய வியாழக்கிழமை என்று நோற்பார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) நூல்: நஸயீ.

வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்கலாமா?

நான் ஜாபிர்(ரலி) அவர்களிடம் வெள்ளிக்கிழமை நோன்பை நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்களா? என்று வினவினேன் அதற்கு "ஆம்" என்றார்கள். அறிவிப்பாளர், முஹம்மது பின் அப்பாத் நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்.

"உங்களில் ஒருவர் வெள்ளிக்கிழமைக்கு முந்திய பிந்திய நாள் நோன்பு நோற்றாலன்றி வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்க வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹுரைரா (ரலி) புகாரி, முஸ்லிம், திர்மிதி, இப்னுமாஜா.

சனிக்கிழமை மட்டும் நோன்பு நோற்கக்கூடாது

உங்கள் மீது கடமையாக்கப்பட்டு இருந்தாலே தவிர சனிக்கிழமை நோன்பு நோற்க வேண்டாம், (சனிக்கிழமைகளில் உண்பதற்கு) திராட்சைத்தொலி அல்லது மரக்குச்சியைத் தவிர வேறு ஏதும் கிடைக்காவிட்டால் அதையாவதுமென்று விடட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ளும்மாயி பின்த் புஸ்ர்(ரலி) திர்மிதி, அபூதாவூத்

இரு பெருநாட்களில் நோன்பு இல்லை

நபி(ஸல்) அவர்கள் இரண்டு நாட்கள் நோன்பு நோற்பதை தடை விதித்துள்ளார்கள் அவை ஃபித்ரு பெருநாள் மற்றும் குர்பானி பெருநாள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஸயீதில் குத்ரி (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்.

அய்யாமுத் தஷ்ரீக் (ஹஜ் பெருநாள் அடுத்த மூன்று) நாட்களும் உண்பதற்கும், பருகுவற்கும் உரிய நாட்களாகும். அந்நாட்களில் நோன்பு ஏதும் இல்லை என்று பிரகடனம் செய்யுமாறு எனக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அறிவிக்கும் நபித்தோழர், ஸஃது பின் அபீ வக்காஸ் (ரலி) நூல்: அஹ்மத்.

தொடர் நோன்பு கூடாது

"நீங்கள் தொடர் நோன்பு நோற்காதீர்கள்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது "நீங்கள் தொடர் நோன்பு நோற்கிறீர்களே? என்று நபித்தோழர்கள் கேட்டனர் அதற்கு நபி (ஸல்) அவர்கள் "நான் (எல்லா விஷயத்திலும்) உங்களைப் போன்றவனல்லன் நிச்சயமாக நான் உண்ணவும், பருகவும் வழங்கப்படுகிறேன் என்றோ உண்ணவும் பருகவும் வழங்கப்பட்டு இரவு பொழுதை கழிக்கிறேன் என்றோ கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அனஸ்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

மாதந்தோறும் மூன்று நோன்பு நோற்பீராக என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறியபோது, இதைவிட எனக்கு அதிக சக்தியுள்ளது என்றேன். முடிவில் நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் நோன்பு நோற்று, ஒரு நாள் விட்டு விடுவீராக அதுதான் நோன்புகளில் சிறந்ததாகும், என் சகோதரர் தாவூத் (அலை) அவர்களின் நோன்பாகும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
காலமெல்லாம் நோன்பு நோற்பவர் நோன்பு நோற்கவே இல்லை. என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்.



"நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே; ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்."(49:10)