அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, August 7, 2009

பன்றிக்காய்சசல்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹு (தங்கள் மீது
அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக)


சகோதரர்களே! தங்கள் முன் பன்றிக்காய்சசல் நோயைப் பற்றிய கட்டுரையை இங்கு
சமர்ப்பிக்கின்றேன். இந்த கட்டுரை ஒரு தமிழ் வெப்தளத்தில்
பதியப்பட்டிருந்தது, படித்தேன் இதை ஒவ்வொரு முஸ்லிமும் அறிந்துக்கொள்ள
வேண்டும்! ஏனெனில் முஸ்லிம் என்பவன் எதனையும் அறிந்துக்
கொண்டிருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன் அப்போது தான் நாம் அறிவாளிகளாக
சிறந்த சமுதாயமாக இருக்கமுடியும்.

மேலும் கட்டுரையின் முடிவில் சில ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன அவை மட்டும்
நான் மேலதிகமாக பதிந்துள்ளேன் காரணம் இஸ்லாம் கொல்லை நோய்களைப்பற்றி என்ன
கூறுகிறது என்பதை முஸ்லிம்களாகிய நாம் அறியவேண்டுமல்லவா?. நம்மால்
மருந்து கண்டுபிடிக்கமுடியவில்லை என்றாலும் நாம் நோயை கண்டு கவனமாக
இருக்க வேண்டுமல்லவா?

முடிவுரையில் சகோதரர் ஜாகிர் நாயிக் அவர்கள் பன்றியைப்பற்றி தந்த
விளக்கம் கொடுத்துள்ளேன்! படித்து பயனடையவும்


பன்றிக் காய்ச்சல் –

உலக நாடுகளையே இன்று கலங்கடித்துக் கொண்டிருக்கும் ஓர் கொடிய நோயின்
பெயர் இது.


கடந்த ஆண்டுகளில் பறவைக் காய்ச்சல் (சிக்குன் குன்யா) என்ற நோய் உலகளவில்
பல்லாயிரக் கணக்கான மக்களை வாட்டி வதைத்ததை போல், இந்த ஆண்டில் பன்றிக்
காய்ச்சல் நோய் உலக மக்களை பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறது.


முதன் முதலில் மெக்சிகோ நாட்டில் உருவானதாக கூறப்படும் இந்த கொடிய நோய்,
பின்னர் பல்வேறு நாடுகளுக்கும் பரவி, தற்போது இந்தியாவின் புனே நகரை
சேர்ந்த ரியா ஷேக் என்ற 14 வயது பள்ளி மாணவியின் உயிரை பறிக்கும்
அளவுக்கு பரவியுள்ளது. இதனால், ஒட்டுமொத்த இந்தியாவே அதிர்ச்சியடைந்துள்ள
சூழ்நிலையில், இந்நோய் பற்றிய கூடுதல் விபரங்களை அறிந்துக்கொள்வதும்,
அதிலிருந்து நம்மை நாமே வருமுன் காப்பதும் அவசியமாகிறது.


பன்றிக் காய்ச்சல் என்றால் என்ன?

பன்றிக் காய்ச்சல் (Swine flu) என்று அழைக்கப்படும் இந்த நோய், சளி,
இருமல், காய்ச்சல் ஆகியவற்றை ஏற்படுத்தும் புளூவைரஸின் ஓர் உட்பிரிவான H1
N1 என்ற வைரஸால் ஏற்படுகிறது. இது பன்றிகளின் சுவாச உறுப்பை தாக்கி,
கடுமையான காய்ச்சலை உருவாக்கி, படிப்படியாக உடல் உறுப்புகளை செயல் இழக்க
வைத்து இறுதியில் மரணத்தை ஏற்படுத்துகிறது. இந்த வைரஸ், பன்றிகளை
மட்டுமின்றி பறவைகள், குதிரை மற்றும் மனிதர்களையும் தாக்குகிறது.


கடந்த 1930ம் ஆண்டுகளில் முதன் முறையாக பன்றி இனங்களில் இந்நோய்
கண்டறியப்பட்டது. நோய்க்கான காரணம் குறித்து ஆய்வு செய்தபோது, இந்த வைரஸ்
மிக அரிதான ஓர் மரபு அணு தொகுதியை கொண்டிருந்ததை கண்டு ஆராய்ச்சியாளர்கள்
பெரும் ஆச்சரியமும், கடும் அதிர்ச்சியும் அடைந்தனர். அப்போதே இந்த
பன்றிக் காய்ச்சல் வைரஸ் மிக அபாயகரமானது என உலக சுகாதார நிறுவனம்
எச்சரிக்கை விடுத்தது. பின்னர் கடந்த 1965ல் ஐரோப்பாவிலும், 1976ம்
ஆண்டில் நியூஜெர்ஸியிலும் இந்நோய் கண்டறியப்பட்டது.


பன்றிக் காய்ச்சல் பரவும் முறை:

H1N1 வைரஸ், ஓர் பன்றியில் இருந்து மற்றொரு பன்றிக்கு வேகமாக பரவுகிறது.
நீண்டகால முயற்சிக்கு பின்னர் மனிதரை தாக்குதகிறது. ஆனால்,
மனிதரிடமிருந்து மற்றொரு மனிதருக்கு மிக எளிதில் தொற்றிக் கொள்கிறது.


பன்றிகள் வசிக்கும் இடம் அல்லது பன்றி பண்ணைகளில் பணிபுரிபவர்களுக்கு
இந்நோய் பரவி, அவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு எளிதில் பரவுகிறது.
ஆனால், பன்றி இறைச்சி சாப்பிடுவதன் மூலமாக நோய் பரவ வாய்ப்புகள் இல்லை.
குளிர் மற்றும் பனிக்காலங்களிலுமே மிக அதிகமாக பரவுகிறது. குறிப்பாக இந்த
நோய்த் தொற்றுக்குள்ளாகி 5 முதல் 6 நாட்களில் பிறரையும் தொற்றுகிறது.


பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள்:
உடல் சூடாதல்,
உடல் பலவீனம்,
வலி,
தொண்டைப் புண்,
இருமல்,
பசியின்மை,
வயிற்றுப்போக்கு,
வாந்தி
போன்றவை பன்றிக் காய்ச்சலின் முக்கிய அறிகுறிகளாக கருதப்படுகின்றன.


பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுக்கும் முறைகள்:

மக்கள் வசிக்கும் பகுதியில் பன்றிகள் நடமாடாமல் தடுக்க உரிய நடவடிக்கைகளை
எடுக்க வேண்டும்.


நோய் பாதிப்பு உள்ளவர்களை நேரடியாக தொட்டு பேசக்கூடாது. அவர்களிடமிருந்து
விலகியிருப்பது நல்லது.


பாதிக்கப்பட்டவர் அருகில் இருக்க நேர்ந்தால் வாய், மூக்கை மூடிக்கொள்ள
வேண்டும்.

கை, கால்களை நன்றாக சோப்பு போட்டு கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

பன்றிகளை வளர்ப்பவர்கள், பராமரிப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க
வேண்டும்.

உலகளவில் பன்றிக் காய்ச்சல்:


கடந்த ஜூன் 11ம் தேதி உலக சுகாதார நிறுவனத்தால் கொள்ளை நோயாக
அறிவிக்கப்பட்ட இந்த பன்றிக் காய்ச்சல் நோய், உலகம் முழுவதும் வேகமாக
பரவி வருகிறது. இதனால், இந்நோயை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளின் விமான
நிலையங்களிலும் பன்றிக் காய்ச்சல் நோய் குறித்து மருத்துவப் பரிசோதனைகள்
நடைபெற்று வருகிறது.


பன்றிக் காய்ச்சல் நோய் பற்றிய பாதிப்புகளை உலக சுகாதார நிறுவனம்
அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 1 லட்சத்து 34
ஆயிரத்து 503 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 816 பேர்
பலியாகியுள்ளதாகவும் அந்த மையம் தெரிவித்துள்ளது.


உலகளவில் மெக்சிகோ மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் இந்நோயால் அதிகம்
பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பன்றிக்காய்ச்சல் பாதிப்புள்ள நாடுகளுக்கு
செல்ல வேண்டாம் என பல நாடுகள் தங்களது நாட்டு மக்களை அறிவுறுத்தியுள்ளது.


இந்தியாவில் பன்றிக் காய்ச்சல்:

இந்தியாவில் கடந்த 2004ம் ஆண்டே டெல்லி, மிசோரம், மேற்கு வங்கம் போன்ற
மாநிலங்களில் இந்நோயின் அறிகுறிகள் தென்பட்டன. இதனால், இந்நோயால்
ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்திருந்த மருத்துவத் துறையினர், எச்1 என்1
வைரஸ் மனிதர்களை தாக்கும் முன்பே, பன்றிக் காய்ச்சல் நோயை
கட்டுப்படுத்திவிட்டனர்.


எனினும், இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து வெளிநாட்டுப் பயணிகள் மூலம்
இந்தியாவுக்குள்ளும் பன்றிக் காய்ச்சல் நோய் பரவ ஆரம்பித்தது.


மகாராஷ்டிராவில் அதிகப்பட்சமாக 135 பேரும், டெல்லியில் 109 பேரும்
பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த 3ம்
தேதி நிலவரப்படி 574 ஆக உயர்ந்துள்ளது.


இந்நோய்க்கு புனே மாணவி ரியா ஷேக் பலியானதன் எதிரொலியாக, இந்தியாவில்
பன்றிக் காய்ச்சலை தடுக்க புதிய திட்டம் தீட்டப்பட்டு வருவதாகவும் மத்திய
சுகாதாரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.


புனேவில் பன்றிக் காய்ச்சல்:

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் இந்நோய் பாதிப்பு ஏற்பட்ட போதிலும்,
மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள புனே நகரம் தான் பன்றிக் காய்ச்சல் நோயின்
தலைநகராக விளங்கி வருகிறது.


இங்குள்ள ஓர் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் சமீபத்தில் அமெரிக்க சுற்றுப்
பயணம் சென்று வந்ததாகவும், அவர்கள் மூலமாக பிற பள்ளி மாணவர்களுக்கும்
இந்நோய் தொற்றியதாகவும் கூறப்படுகிறது.


ஒரு கட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் அதிகளவில் பாதிக்கப்பட்ட நிலையில்,
அங்குள்ள பல பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன.


இந்நிலையில், இந்தியாவில் பன்றிக் காய்ச்சலுக்கு முதல் பலியாக புனே நகரை
சேர்ந்த ரியா ஷேக் என்ற 14 வயது நிரம்பிய பள்ளி சநேற்று முன்தினம்
பலியானார். பெற்றோரின் கவனக்குறைவு மற்றும் மருத்துவர்கள் முன்கூட்டியே
நோயை கண்டறிந்து முறையாக சிகிச்சை அளிக்காதது போன்றவையே ரியாவின்
மரணத்துக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.


நோய் தொற்றிய 20 தினங்களில் மாணவி ரியா, பன்றிக் காய்ச்சலுக்கு பலியாகி
இருப்பது மருத்துவ உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல்:

பன்றிக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தமிழகத்திலும்
நாளுக்கு நாள் அதிகரித்து வருவது. இந்நோயால் இதுவரை 35 பேர்
பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.


புனே மாணவி ரியா பலியானதன் எதிரொலியாக, தமிழக அரசும் பன்றிக்காய்ச்சல்
நோய் ஒழிக்க தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு
இதுகுறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது. விமானப் பயணிகள்
மட்டுமின்றி, ரயில் மற்றும் கப்பல் மூலம் தமிழகம் வரும் பயணிகளுக்கும்
மருத்துவப் பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.


இதுதவிர, மும்பை, புனே நகரங்களுக்கு தமிழகத்தில் இருந்து யாரும் செல்ல
வேண்டாம் என்றும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.


தமிழகத்தில் சென்னை கிங்ஸ் இன்ஸ்டிடியூட், வேலூர் கிறிஸ்தவ மருத்துவக்
கல்லூரி ஆகியவற்றில் பன்றிக் காய்ச்சல் பற்றிய மருத்துவப் பரிசோதனை
நடத்தப்பட்டு வருகிறது.


சென்னை நகரில், தண்டையார் பேட்டை தொற்றுநோய் தடுப்பு மருத்துவமனை,
ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம்
அரசு மருத்துவமனை மற்றும் தண்டையார்பேட்டை பெரிபரல் மருத்துவமனை
போன்றவற்றில் பன்றிக் காய்ச்சலுக்கான மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு
வருகிறது.
மேலே கண்ட கட்டுரை முடிகிறது! கீழே உள்ளவை நம் முஸ்லிம்களின் பகுதி

xxxxx (நோய்கள் பற்றி இஸ்லாமிய பார்வை) xxxxx

இனி நாம் இஸ்லாத்தின் பார்வையில் நோய்களும் அதன் விளக்கங்களும் என்ற
தலைப்பை அலசி ஆராய்வோம்!


தொற்று நோய் பற்றி நபிகள் (ஸல்) அவர்களின் கருத்து


இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘தொற்று நோய் கிடையாது.’ ஸஃபர்’ தொற்றுநோயன்று.
ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது” என்று கூறினார்கள். அப்போது
கிராமவாசியொருவர், ‘இறைத்தூதர் அவர்களே! (பாலை) மணலில் மான்களைப் போன்று
(ஆரோக்கியத்துடன் துள்ளித் திரியும்) என் ஒட்டகங்களிடம் சிரங்கு பிடித்த
ஒட்டகம் வந்து அவற்றிற்கிடையே கலந்து அவற்றையும் சிரங்கு பிடித்தவையாக
ஆக்கிவிடுகின்றனவே! அவற்றின் நிலையென்ன (தொற்று நோயில்லையா)?’ என்று
கேட்டார்.அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால் முதல் (முதலில்
சிரங்கு பிடித்த) ஒட்டகத்திற்கு (அந்த நோயைத்) தொற்றச் செய்தது யார்?’
என்று திருப்பிக் கேட்டார்கள். புஹாரி : 5717 அபூஹூரைரா (ரலி).


வியாதி பிடித்த ஒட்டகத்தை ஆரோக்கியமான ஒட்டகத்திடம் கொண்டு
செல்லாதீர்கள். என நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 5774 அபூ
ஹுரைரா (ரலி).


கொள்ளைநோய்கள் பற்றி நபிகள் (ஸல்)

(என் தந்தை) ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) உஸாமா இப்னு ஸைத் (ரலி)
அவர்களிடம், ‘இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து (பிளேக் போன்ற) கொள்ளை
நோயைப் பற்றி நீங்கள் செவியுற்றிருக்கிறீர்களா?’ என்று கேட்டார்கள்.
அதற்கு உஸாமா (ரலி), ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘கொள்ளை நோய் என்பது பனூ
இஸ்ராயீல்களின் ஒரு கூட்டத்தார் மீது, அல்லது உங்களுக்கு
முன்னிருந்தவர்களின் மீது…. (அவர்களின் அட்டூழியங்கள்
அதிகரித்துவிட்டபோது) அனுப்பப்பட்ட ஒரு(வகை) வேதனையாகும். அது ஒரு
பிரதேசத்தில் இருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அங்கே நீங்கள்
செல்லாதீர்கள். நீங்கள் இருக்கிற ஒரு பூமியில் அது பரவிவிட்டால்,
அதிலிருந்து தப்பியோட முனைந்தவர்களாக (அங்கிருந்து) வெளியேறாதீர்கள்”
என்று கூறினார்கள்” என்று பதிலளித்தார்கள். புஹாரி :3473 உஸாமா பின் ஜைது
(ரலி).

உமர் இப்னு கத்தாப் (ரலி) ஷாம் நாட்டை நோக்கி (மக்களின் நிலையை
ஆராய்வதற்காக)ப் புறப்பட்டார்கள். ‘சர்ஃக்’ எனும் இடத்தை அடைந்தபோது
(மாகாண) படைத் தளபதிகளான அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களும்
அவர்களின் நண்பர்களும் உமர் (ரலி) அவர்களைச் சந்தித்து ஷாம் நாட்டில்
கொள்ளைநோய் பரவியுள்ளது என்று தெரிவித்தார்கள். அதற்கு உமர் (ரலி)
‘ஆரம்பக் கால முஹாஜிர்களை என்னிடம் அழைத்து வாருங்கள்” என்று சொல்ல
அவர்களை நான் (உமர் (ரலி) அவர்களிடம்) அழைத்து வந்தேன். அவர்களிடம் ஷாம்
நாட்டில் கொள்ளைநோய் பரவியுள்ளது என்று தெரிவித்து (அங்கு போகலாமா?
மதீனாவுக்கே திரும்பிச் சென்றுவிடலாமா? என்று) ஆலோசனை கேட்டார்கள்.

இது தொடர்பாகமுஹாஜிர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அவர்களில்
சிலர், ‘நாம் ஒரு நோக்கத்திற்காகப் புறப்பட்டு விட்டோம். அதிலிருந்து
பின்வாங்குவதை நாங்கள் பொறுத்தமாகக் கருதவில்லை” என்று கூறினார்கள். வேறு
சிலர், ‘உங்களுடன் மற்ற மக்களும் நபித்தோழர்களும் உள்ளனர்.
அவர்களையெல்லாம் இந்தக் கொள்ளைநோயில் தள்ளி விடுவதை நாங்கள் சரியென்று
கருதவில்லை” என்று கூறினார்கள். அப்போது உமர் (ரலி), ‘நீங்கள் போகலாம்”
என்று சொல்லிவிட்டுப் பிறகு, ‘என்னிடம் (மதீனாவாசிகளான) அன்சாரிகளை
அழைத்து வாருங்கள்” என்று சொல்ல நான் அவர்களை அழைத்து வந்தேன்.
அவர்களிடம் உமர்(ரலி) ஆலோசனை கலந்தார்கள். அவர்களும் முஹாஜிர்களின்
வழியிலேயே சென்று அவர்களைப் போன்றே கருத்து வேறுபட்டார்கள்.அப்போதும் உமர்
(ரலி), ‘நீங்கள் போகலாம்” என்று சொல்லிவிட்டுப் பிறகு மக்கா
வெற்றிகொள்ளப்பட்ட ஆண்டில் (மதீனாவுக்கு) ஹிஜ்ரத் செய்து வந்த குறைஷிப்
பெரியவர்களில் இங்கு உள்ளவர்களை என்னிடம் அழைத்து வாருங்கள்” என்று சொல்ல
நான் அவர்களை அழைத்து வந்தேன்.

அவர்களில் எந்த இருவருக்கிடையேயும் கருத்து வேறுபாடு எழவில்லை. அவர்கள்
(அனைவரும்), ‘மக்களுடன் நீங்கள் திரும்பி விட வேண்டும்; அவர்களை இந்தக்
கொள்ளைநோயில் தள்ளிவிடக் கூடாது எனக் கருதுகிறோம்” என்றனர். எனவே, உமர்
(ரலி) மக்களிடையே ‘நான் காலையில் (என்) வாகனத்தில் (மதீனா)
புறப்படவிருக்கிறேன்; நீங்களும் வாகனத்தில் புறப்படுங்கள்” என்று
அறிவித்தார்கள். அப்போது அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ் (ரலி), ‘அல்லாஹ்வின்
விதியிலிருந்து வெருண்டோடுவதற்காகவா (ஊர் திரும்புகிறீர்கள்)?’ என்று
கேட்க, உமர் (ரலி), ‘அபூ உபைதா! இதை உங்களைத் தவிர வேறேவரேனும்
சொல்லியிருந்தால் நான் ஆச்சரியப்பட்டிருக்க மாட்டேன்.

ஆம் நாம் அல்லாஹ்வின் ஒரு விதியிலிருந்து இன்னொரு விதியின் பக்கமே
வெருண்டோடுகிறோம். உங்களிடம் ஓர் ஒட்டகம் இருந்து, அது ஒரு பக்கம்
செழிப்பானதாகவும் மறுபக்கம் வறண்டதாகவும் உள்ள இரண்டு கரைகள் கொண்ட ஒரு
பள்ளத்தாக்கில் இறங்கிவிட்டால், செழிப்பான கரையில் நீங்கள் அதை
மேய்த்தாலும் அல்லாஹ்வின் விதிப்படி தான் அதை நீங்கள் மேய்க்கிறீர்கள்.
வறண்ட கரையில் அதை நீங்கள் மேய்த்தாலும் அல்லாஹ்வின் விதிப்படிதான்
நீங்கள் மேய்க்கிறீர்கள், அல்லவா?’ என்று கேட்டார்கள்.

அப்போது தம் தேவையொன்றுக்காக வெளியே சென்றிருந்த அப்துர் ரஹ்மான் இப்னு
அவ்ஃப் (ரலி) (அங்கு) வந்தார்கள். அவர்கள், ‘இது தொடர்பாக என்னிடம் ஒரு
விளக்கம் உள்ளது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘ஓர் ஊரில் கொள்ளை நோய்
பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அந்த ஊருக்கு நீங்களாகச்
செல்லாதீர்கள்.

நீங்கள் ஓர் ஊரில் இருக்கும்போது அங்கு கொள்ளைநோய் பரவினால் அதிலிருந்து
வெருண்டோடுவதற்காக (அவ்வூரைவிட்டு) வெளியேறாதீர்கள்’ என்று சொல்ல
கேட்டேன்” என்று கூறினார்கள்.

உடனே உமர் (ரலி), (தம் முடிவு நபி (ஸல்) அவர்களின் வழி
காட்டுதலுக்கேற்பவே அமைந்திடச் செய்ததற்காக) அல்லாஹ்வைப்
புகழ்ந்துவிட்டுத் திரும்பிச் சென்றார்கள். புஹாரி-5729 இப்னு அப்பாஸ்
(ரலி)

முடிவுரை

இஸ்லாம் பன்றி இறைச்சியை உணவாக உட்கொள்ளத் தடை செய்திருப்பது ஏன்?
டாக்டர் ஜாகிர் நாயக் அவர்ளின் இஸ்லாமிய விளக்கங்கள்

இஸ்லாம் பன்றி இறைச்சியை உணவாக உட்கொள்ள தடை செய்திருப்பது அனைவரும்
அறிந்த உண்மை. இந்தத் தடை ஏன்?. என்பது பற்றிய விபரத்தை கீழ்க்காணும்
விளக்கங்கள் மூலம் தெளிவாக அறியலாம்.

பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டுள்ளது பற்றி குர்ஆனின்
தெளிவாக்கம்:

பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டிருப்பது பற்றி அருள்மறை குர்ஆனில்
குறைந்தது நான்கு அத்தியாயங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"தானாகவே செத்ததும் இரத்தமும் பன்றியின் மாமிசமும் அல்லாஹ் அல்லாத பெயர்
சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக
ஆக்கியிருக்கிறான்." (அல்-குர்ஆன் அத்தியாயம் - 02 வசனம் 173)

மேற்படி கருத்துக்களை அருள்மறையின் அத்தியாயம் ஐந்தின் மூன்றாவது
வசனத்திலும் அத்தியாயம் ஆறு - 145வது வசனத்திலும் - அத்தியாயம் பதினாறு -
115வது வசனத்திலும் காணலாம். அருள்மறையின் மேற்படி வசனங்கள் -
இஸ்லாத்தில் பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டிருக்கிறது என்பதற்கு
ஆதாரமாக அமைந்துள்ளன.

பன்றி இறைச்சி உண்ணத் தடை என்று பைபிளும் குறிப்பிடுகின்றது.

கிறஸ்தவர்களின் வேத புத்தகமான பைபிள் குறிப்பிடும் தடைகளைப் பற்றி
கிறிஸ்தவர்களுக்கு எடுத்துச் சொன்னால் அவர்களும் அறிந்து கொள்வார்கள்.
பன்றி இறைச்சி உண்ணத் தடை என்று பைபிளிளும் குறிப்பிடப்பட்டுள்ளது.


பைபிளின் அத்தியாயம் 11 - லெவிட்டிக்கஸ் வசனம் 7 முதல் 8 வரையிலும்
பைபிளின் அத்தியாயம் 14 - டியுட்டர்னோமி வசனம் 8 ம் பன்றி இறைச்சி உண்ணத்
தடை பற்றி அறிவிக்கின்றன.

மேலும் பைபிளின் அத்தியாயம் 65 - புக் ஆஃப் இஷையா 2 முதல் 5 வரையுள்ள
வசனங்களில் பன்றி இறைச்சி உண்ணத் தடை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

பன்றி இறைச்சி உண்பதால் - மனிதனுக்கு ஏராளமான நோய்கள் உண்டாகின்றன.

எந்த விஷயத்தையும் முஸ்லிம் அல்லாதவர்களும் கடவுளே இல்லை என்று
மறுப்பவர்களும் காரணத்துடனும் தர்க்க ரீதியாகவும் அறிவியல் உண.மையுடனும்
சொன்னால்தான் ஏற்றுக் கொள்வார்கள். பன்றி இறைச்சி உண்பதால் மனிதனுக்கு
எழுபது விதமான நோய்கள் உண்டாகிறது. பன்றி இறைச்சி உண்பதால் மனிதனின்
வயிற்றில் வட்டப்புழு, ஊசிப்புழு, கொக்கிப்புழு போன்ற குடற்புழுக்கள்
உண்டாகின்றன. பன்றி இறைச்சி உண்பதால் மனிதனின் வயிற்றில் நாடாப்புழு
உருவாகிறது. இந்த நீளமான நாடாப்புழு மனித குடலின் அடிப்பகுதியில் சென்று
தங்கிவிடுகிறது. ஆது இடும் முட்டை இரத்த நாளங்கள் வழியாக உடலின் எல்லாப்
பாகங்களுக்கும் பரவுகிறது. இந்த முட்டை மனித மூளையச் சென்றடைந்தால்
மனிதன் தன் நினைவாற்றலை இழப்பான். இந்த முட்டை மனித இதயத்தைச்
சென்றடைந்தால் மனிதனுக்கு மாரடைப்பு உண்டாகிறது. இந்த முட்டை மனிதனின்
கண்களைச் சென்றடைந்தால் மனிதன் கண்பார்வையை இழக்கிறான். இந்த முட்டை
மனிதனின் ஈரலைச் சென்றடைந்தால் மனிதனின் ஈரல் பாதிக்கப்படுகிறது. இவ்வாறு
பன்றி இறைச்சி உண்பதால் மனித வயிற்றில் உருவாகும் நாடாப்புழுவின்
முட்டைகள் மனித உருப்புகள் அனைத்தையும் செயலிழக்கச் செய்யும் வல்லமை
உள்ளவை.


பன்றி இறைச்சியில் திரிகூரா திச்சுராஸிஸ் என்ற பெயரையுடைய மற்றொரு
ஆபத்தான குடற்புழு உள்ளது. பன்றி இறைச்சியை நன்றாக வேக வைத்துவிட்டால்
இது போன்ற புழுக்கள் மரணித்து விடுகின்றன என்பது ஒரு பொதுவான அதே சமயம்
தவறான கருத்து மக்களிடையே இருக்கிறது. இது பற்றிய ஆய்வு ஒன்று
அமெரிக்காவில் நடத்தப்பட்டபோது - இருபத்து நான்கு பேர் திரிகூரா
திச்சுராஸிஸ் என்று குடற்புழு நோயால் தாக்கப்பட்டிருந்தார்கள். அவர்களில்
இருபத்தி இரண்டு பேர் பன்றி இறைச்சியை நன்றாக வேகவைத்து சாப்பிட்டவர்கள்
என்று கண்டறியப்பட்டது. சாதாரணமான வெப்பத்தில் சமைக்கப்படும் பன்றி
இறைச்சியில் - குடற்புழு உண்டு என மேற்படி ஆய்விலிருந்து நாம் அறியும்
செய்தி


பன்றி இறைச்சியில் கொழுப்புச் சத்து அதிகம்.

பன்றி இறைச்சியில் மாமிச சத்தைவிட கொழுப்புச் சத்தே அதிகம். பன்றி
இறைச்சி உண்பதால் ஏற்படும் கொழுப்புச் சத்து மனித இரத்த நாளங்களை அடைத்து
விடுவதால் - மனிதனுக்கு இரத்த அழுத்த நோயும் - மாரடைப்பும் உண்டாகின்றது.
எனவே அமெரிக்கர்களில் ஐம்பது சதவீதம் பேர் இரத்த அழுத்தம் உள்ளவர்களாக
இருப்பதில் ஆச்சரியம் இல்லை.



உலகில் உள்ள மிருகங்களில் எல்லாம் கேடுகெட்ட மிருகம் பன்றி.

பூமியல் உள்ள விலங்கினங்களில் எல்லாம் கேடுகெட்ட விலங்கினம் பன்றி. பன்றி
சேற்றிலும் சகதியிலும் மலத்திலும் வாழக்கூடிய விலங்கினம். கடவுளின்
படைப்பில் ஒரு சிறந்த சுத்திகரிக்கும் மிருகம் பன்றி. நவீன கழிப்பறை வசதி
இல்லாத கிராமப்புறங்களில் மனிதர்கள் - காடுகளிலும் - வெட்டவெளியிலும்தான்
மலஜலம் கழிப்பார்கள். இந்த மலத்தை சுத்தம் செய்வது பன்றிதான்.


ஆஸ்திரேலியா போன்ற மேலை நாடுகளில் பன்றிகள் மிக சுத்தமான சூழ்நிலையில்
வளர்க்கப்படுகின்றன என சிலர் வாதிட முற்படலாம். எந்த மாதிரி சுத்தமான
சூழ்நிலையிலும் பன்றிகள் ஒன்றாகத்தான் அடைத்து வைக்கப்படுகின்றன.
எத்தனைதான் சுத்தமான சூழ்நிலையில் நீங்கள் பன்றிகளை வைத்திருந்தாலும் -
பன்றி இயற்கையாகவே கேடு கெட்டவை. தன்னுடைய மலத்தையும் - பிறருடைய
மலத்தையும் சுவைத்துத் தின்னும் மிருகம் பன்றி.


உலகில் உள்ள மிருகங்களில் எல்லாம் வெட்கம் கெட்ட மிருகம் பன்றி.

உலகில் உள்ள மிருகங்களில் எல்லாம் வெட்கம் கெட்ட மிருகம் பன்றிதான். தனது
நண்பர்களை அழைத்து வந்து தனது துணையுடன் நண்பர்களை உடலுறவு கொள்ளச்
செய்யும் மிருகம் பன்றி.

அமெரிக்காவில் பெரும்பான்மையினர் பன்றி இறைச்சி உண்ணக் கூடியவர்களாக
இருக்கிறார்கள். இரவு நேர பார்ட்டிகள் முடிந்த பிறகு தங்களுக்குள்
"மனைவியரை மாற்றிக் கொள்ளும் பண்பாடு" (அதாவது எனது மனைவியுடன் நீ உனது
மனைவியுடன் நான் என) கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

பன்றி இறைச்சி தின்பவன் பன்றியைப் போலத்தான் செயல்படுவான். இந்தியர்களான
நாம் அமெரிக்கர்களை மிகவும் முன்னேறியவர்கள் எனவும் - மிகவும் பண்பாடு
உடையவர்கள் எனவும் தலைக்கு மேல் வைத்து கொண்டாடுகிறோம்.

அவர்கள் என்ன செய்தாலும் அதனை நாமும் அப்படியே பின்பற்றுகிறோம்.
சமீபத்தில் மும்பையிலிருந்து பிரசுரமாகும் "ஐலேண்ட்" என்னும்
மாதப்பத்திரிக்கை வெளியிட்டுள்ள கட்டுரை "மனைவியரை மாற்றிக் கொள்ளும்
பண்பாடு" மும்பை வட்டாரத்தில் சர்வ சாதாரணம் என்று குறிப்பிடுகிறது.

xxxxx(மேலே கண்ட சகோதரர் ஜாகிர் நாயக் அவர்களின் பதில் முடிந்தது )xxxxx

முஸ்லிம்களை சித்திரவதை செய்யும் மேலைநாட்டினர் மேல் அல்லாஹ் பலி தண்டனை
கொடுக்கிறான் போலிருக்கிறது! நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக துவா
செய்வோம்! நமக்கும் நம் சமுதாயத்தவர்க்கும் அல்லாஹ்வின் தண்டனை போன்ற
இந்த கொடிய பன்றிக்காய்சல் வராமலிருக்க அல்லாஹ்விடம் பாதுகாப்பு
தேடுவோம்! ஆமீன்! அல்லாஹ் நம்மை காப்பான்!

அன்புடன்
சிராஜ்

No comments: