வன்புணர்வை நிரூபிக்க விந்தின் தடயம் அவசியமில்லை என்று மும்பை உயர்நீதிமன்றத்தின் ஒளரங்காபாத் கிளை தீர்ப்பளித்துள்ளது. ஆறுவயதேயான சிறுமியை வன்புணர்ந்து கொன்ற குற்றத்திற்காக பிரஷாந்த் கதே என்னும் 25 வயது நபருக்கு மும்பை-ஒஸ்மானாபாத் கீழ்நிலை நீதிமன்றம் மரணதண்டனை, ஆயுள்தண்டனை, மற்றும் 25,000 ரூபாய் அபராதம் ஆகியவற்றை ஒருசேர விதித்திருந்தது.இதை எதிர்த்து அந்நபர் செய்த மேல்முறையீட்டில், அந்தத் தண்டனைகளையும் உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
ஆங்கிலேயர் தற்காப்பு இயக்கம் என்ற பெயரில் மூன்றாண்டுகளாக பிரிட்டனில் இயங்கிவந்த அமைப்பொன்று வலதுசாரி அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்த அமைப்பு முஸ்லிம்களுக்கு எதிரான கட்சியாக விடுதலைக் கட்சி Freedom Party என்ற பெயரில் ஓர் அரசியல் இயக்கமாக உருவெடுத்துள்ளது.